search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
    X
    புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

    கடலூர் துறைமுகத்தில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

    கடலூர் துறைமுகத்தில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
    கடலூர்:

    வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது அடுத்தடுத்து வலுவடைந்து தீவிர புயலாக மாறி நாளை (புதன்கிழமை) மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. இந்த புயலுக்கு நிவர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

    இதையொட்டி கடலூர் துறைமுகத்தில் நேற்று 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. நிவர் புயல் தற்போது தீவிரம் அடைந்து சென்னையில் இருந்து 450 கி.மீ. தொலைவில் உள்ளது. மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று காலை முதலே பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    இதைத்தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் இன்று காலை 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இத்துறைமுகத்தை நெருங்குகிற அல்லது இதற்கு அருகே கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புயலால் ஏற்படும் கடுமையான வானிலைக்கு துறைமுகம் உட்படும் என்பதற்கு அடையாளமாக இந்த கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    Next Story
    ×