search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கனமழை
    X
    கனமழை

    கடலூரை தொட்டது அதிதீவிர புயலான நிவரின் வெளிச்சுற்றுப் பகுதி: பலத்த காற்றுடன் கனமழை

    அதிதீவிர புயலாக வலுப்பெற்ற நிவர் புயலின் வெளிச்சுற்று கடலூரை தொட்டதால் பலத்த காற்றடன் கனமழை கொட்டி வருகிறது.
    தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது. தற்போது அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது என வானிமை மையம் தெரிவித்துள்ளது.

    நகர்ந்து வரும் வேகம் 11 கி.மீட்டரில் இருந்து 16 கி.மீட்டர் வேகமாக அதிகரித்துள்ளது. தற்போது அதிதீவிர புயலாக நிவர், கடலூரில் இருந்து 90 கி.மீட்டர் தொலைவிலும், புதுவையில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 570 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

    இந்த நிலையில் நிவர் புயலின் வெளிச்சுற்றுப் பகுதி, அதாவது புயல் மையத்தை சுற்றியுள்ள காற்றுப்பகுதி கடலூரைத் தொட்டுள்ளது. இதனால் பலத்த காற்றுடன், கனமழை கொட்டி வருகிறது. கடல் சீற்றமாக காணப்படுகிறது. நிவர் புயலின் மையம் கரையைத் தொட்ட இன்னும் ஐந்து மணி நேரம் ஆகலாம்.
    Next Story
    ×