என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக அரசைக் கண்டித்து பா.ஜ.க சார்பில் பிச்சை அளிக்கும் போராட்டம்
    X

    தமிழக அரசைக் கண்டித்து பா.ஜ.க சார்பில் பிச்சை அளிக்கும் போராட்டம்

    • போராட்டத்தை மாவட்ட தலைவர் அஸ்வின் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
    • சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளரும், பெருங்கோட்ட பொறுப்பாளரான வினோஜ் பி.செல்வா பங்கேற்று பேசினார்.

    திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே பா.ஜ.க பட்டியல் அணி சார்பில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே திமுக அரசுக்கு பிச்சை அளிக்கும் போராட்டம் நடைபெற்றது

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பட்டியல் அணி மாவட்ட பொதுச் செயலாளர் லட்சுமி காந்த் ஆதி தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் கருணாகரன், ஆர்யா சீனிவாசன், லயன்சீனிவாசன், ஜெய்கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், மாவட்ட தலைவர் அஸ்வின் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளரும், பெருங்கோட்ட பொறுப்பாளரான வினோஜ் பி.செல்வா பங்கேற்று பேசினார்.

    அப்போது, பட்டியலின மக்களுக்கான கல்வி உதவி தொகை மற்றும் நலத்திட்டங்களுக்கு இதுவரையில் ரூ.10 ஆயிரம் கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கியது. இதை மாநில அரசு வேறு திட்டங்களுக்கு செலவு செய்வது அல்லது மாநில அரசு திருப்பியும் அனுப்பி விடுகிறது.

    இதை கண்டித்து, "திறனற்ற திமுக அரசுக்கு பிச்சை அளிக்கும் போராட்டத்தில்" மாநில அளவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருகிறது.

    நிதியை பள்ளி, கல்லூரி மற்றும் விடுதியில் தங்கிப்பயிலும் பட்டியலின மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகையாக வழங்காமல் பாதிக்கும் நிலையுள்ளது. அதேபோல் ஏழை எளிய மக்களும் பாதிக்கும் சூழ்நிலை உள்ளன. இதற்கு முறையாக வெள்ளை அறிக்கை தமிழக அரசு அளிக்க வேண்டும்.

    இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை அளிப்போம் என கூறியதற்கு வடமாநிலங்களில் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    அதனால் சனாதனம் என்னவென்றே தெரியாமல் யாரும் பேசக்கூடாது. அதை யாரும் அழிக்கவும் முடியாது. இந்த மாவட்டத்தில் கூட திமுகவில் நிர்வாகிகள் பெண்களுக்கு தொல்லை கொடுப்பதாக புகார் உள்ளது.

    ஏற்கெனவே திமுகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை எல்லோரும் அறிந்ததுதான். அதேபோல் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேவலமான நிலையில் உள்ளன. பட்டியலின மாணவரை வீடு புகுந்து, மற்ற பிரிவு மாணவர்களால் அரிவாளால் தாக்குதலில் ஈடுபட்டது.

    அதேபோல் குடிநீர் தொட்டியில் மனித கழிவை கலந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை இதுவரையில் கண்டுபிடிக்க முடியவில்லை போன்ற ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த பகுதிகளில் ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரச்னைகளை கண்டித்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில ஓபிசி அணி செயலாளர் ராஜ்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் பாலாஜி, மாவட்ட துணைத்தலைவர் முல்லை ஞானம், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் சிவரஞ்சனி, மாவட்ட செயலாளர்கள் ரமேஷ், பாலாஜி, பன்னீர்செல்வம், நகர் தலைவர் சதீஷ், மண்டல பொறுப்பாளர்கள் சுரேஷ், பழனி, ரவிக்குமார், ஆடிட்டர் ராஜேந்திரன், பட்டியல் அணி மாவட்ட செயலாளர் தேவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×