search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    மாத்திரை சாப்பிட்ட பெண் சிகிச்சை பலனின்றி சாவு

    சேலம் வீராணம் அருகே உள்ள மன்னார்பாளையம் மாத்திரை சாப்பிட்ட பெண் சிகிச்சை பலனின்றி சாவு.
    சேலம்:

    சேலம் வீராணம் அருகே உள்ள மன்னார்பாளையம் அடுத்த டீ.பள்ளப்பட்டி புது காலனி பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மனைவி செல்வி (வயது 55). இவர் வாய்க்கால்பட்டறை     பகுதியில் உள்ள அரசு பள்ளியில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். 

    இவர் கடந்த 15 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.

     இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த அவர் கடந்த 30 -ம் தேதி அளவுக்கதிகமாக நீரழிவு நோய் கட்டுப்படுத்த மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார்.

     இதனால் உடல்நிலை மோசமடைந்து இவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  
    Next Story
    ×