என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கடம்பூர் அரசு பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டத்தில் பங்கேற்க விழிப்புணர்வு
Byமாலை மலர்30 April 2022 8:37 AM GMT (Updated: 30 April 2022 8:37 AM GMT)
கடம்பூர் அரசு பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டத்தில் பங்கேற்க விழிப்புணர்வு நடந்தது.
ஆத்தூர்:
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடத்தப்பட்டு புதிய மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு இக்கூட்டம் நடைபெற்றது.
அடுத்த கட்டமாக தொடக்கப்பள்ளிகளில் 50சதவீதம் இன்றும் , மீதமுள்ள பள்ளிகளுக்கு அடுத்தவாரமும் நடைபெற உள்ளது. இதன்படி கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற உள்ள பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டத்தில் பெற்றோர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் பள்ளி தலைமையாசிரியர் என்.டி.செல்வம், கடம்பூர் இல்லம் தேடிக்கல்வி திட்ட தன்னார்வலர்கள் 13 பேர், பள்ளி மேலாண்மைக் குழுவைச் சேர்ந்த மீனாம்பிகா மற்றும் கங்காதேவி ஆகியோர் கைகளில் விளக்கேந்தி பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் பெற்றோர்கள் அனைவரும் பங்கேற்க நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மேலும் நேற்று சர்வதேச நடன தினம் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விசயமாகும். பெற்றோர்களை நேரில் சந்தித்தும் மாணவர்கள் மூலமும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X