என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புதுவை அருகே முதியவர் தூக்குபோட்டு தற்கொலை
புதுச்சேரி:
புதுவை ஆம்பூர் சாலையை சேர்ந்தவர் முகமதுயாகூப் (வயது66) இவருக்கு நுர்ஜகான் (55) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.
மகளுக்கு திருமணமாகி அவரது கணவர் வெளி நாட்டில் வேலை செய்து வருவதால் முகமதுயாகூப் வீட்டிலேயே அவரது மகள் வசித்து வருகிறார்.
இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளாக சிறுநீர் பிரச்சினையால் முகமதுயாகூப் அவதி அடைந்து வந்தார். இதற்காக மருந்து மாத்திரையும் சாப்பிட்டு வந்தார்.
சம்பவத்தன்று அதிகாலை முகமதுயாகூப்புக்கு சிறுநீர் கழிக்கும் போது அதிக வலி ஏற்பட்டதால் அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார்.
பின்னர் வீட்டுக்கு வந்த அவர் திடீரென தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டின் மாடியில் கட்டில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தொங்கினார். இதனை கண்ட அவரது மனைவி நுர்ஜகான் சத்தம் போட்டு அலறினார். உடனே அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து முகமதுயாகூப்பை தூக்கில் இருந்து மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை முகமதுயாகூப் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்