என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. எப்போது வேண்டுமானாலும் விலகலாம்- அமைச்சர் பாஸ்கரன் பேச்சு
சிவகங்கை:
எம்.ஜி.ஆரின் 103வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வாள் மேல்நடந்த அம்மன் கோவில் அருகே நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு பேசியதாவது:-
சிவகங்கை மாவட்டம் எப்போதும் பின் தங்கிய மாவட்டம், இந்த ஆட்சியில் மாவட்டத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் முதல்வர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
குடிமராமத்து பணிகள் மூலம் இளையான்குடி நகர் ஒன்றிய பகுதிகளில் தண்ணீர் தேவைகளை நிறைவேற்றி தந்துள்ளார்.
இஸ்லாமியர்கள் என்னிடம் குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மனு அளித்தனர். இஸ்லாமிய சமுதாய மக்கள் நடந்து முடிந்த எந்த தேர்தலிலும் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்கவில்லை.
இருந்தாலும் அ.தி.மு.க. அரசு உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், வசதிகளையும் திட்டங்களையும் இன்று வரை செய்து வருகிறது.
பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. எப்போது வேண்டுமானாலும் விலகலாம். அதே நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இணைய வாய்ப்பு உள்ளது. அப்படி இணைந்தால் இஸ்லாமிய மக்களாகிய நீங்கள் தி.மு.க.வுக்கு வாக்களிப்பீர்களா? அல்லது அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பீர்களா? இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு அ.தி.மு.க. என்றும் உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்