search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருநாவுக்கரசர் எம்பி
    X
    திருநாவுக்கரசர் எம்பி

    மூழ்கும் படகான பாஜகவுடன் சேர்ந்து அதிமுகவும் மூழ்கும்-திருநாவுக்கரசர் எம்பி பேட்டி

    வரும் தேர்தலில் பா.ஜ.க.வோடு சேர்ந்து அ.தி.மு.க.வும் மூழ்கப்போகிறது என்று திருநாவுக்கரசர் எம்.பி. கூறியுள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஊரக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கேட்டதில் பல்வேறு இடங்கள் கிடைக்க வில்லை. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் சிலர், தங்களுக்கு வேண்டியவர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாக்களித்து உள்ளனர். இந்த பிரச்சினைக்கு ப.சிதம்பரத்தையோ, கார்த்தி சிதம்பரத்தையோ, கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரியையோ குற்றம் சாட்டுவது முறையல்ல.

    உள்ளாட்சி தேர்தலில் எழுந்த சிறு சிறு பிரச்சினைகளால் தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த பிரச்சினைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

    வருகிற சட்டப்பேரவை தேர்தலிலும் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி இணைந்து போட்டியிட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் குறித்து விமர்சிக்கும் அமைச்சர் ஜெயக்குமார், அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. ஒட்டிக்கொண்டு உள்ளதா? உடைந்துவிட்டதா? என்பதை முதலில் விளக்க வேண்டும்.

    அமைச்சர் ஜெயக்குமார்.

    பா.ஜ.க. ஒரு மூழ்கும் படகு. அந்த படகில் அ.தி.மு.க. சவாரி செய்து வருகிறது. வரும் தேர்தலில் பா.ஜ. க.வோடு சேர்ந்து அ.தி.மு.க.வும் மூழ்கப்போகிறது. இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கவலைப்படட்டும். எங்கள் கூட்டணி குறித்து விமர்சனம் செய்ய தேவையில்லை.

    தமிழக விவசாயிகளை, விவசாயத்தை பாதிக்கும் வகையிலான ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதை மத்திய அரசு கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×