search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பி.டி. அரசகுமார்
    X
    பி.டி. அரசகுமார்

    மு.க.ஸ்டாலின் விரைவில் அரியணை ஏறுவார்- பா.ஜ.க. மாநில நிர்வாகி பேச்சால் பரபரப்பு

    பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் பி.டி. அரசகுமார், மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்று பேசியிருப்பது பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இன்று தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியண்ணன் அரசு இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. மற்றும் பல்வேறு கட்சியின் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள்க கலந்து கொண்டனர் . இதில் பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் பி.டி.அரசகுமாரும் கலந்து கொண்டார். அப்போது அவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசினார். அவர் பேசியதாவது:-

    உள்ளாட்சியில் நல்லாட்சி புரிந்தவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். என்றைக்கும் நிரந்தர தலைவராக இருப்பவர் மு.க.ஸ்டாலின்தான். எம். ஜி.ஆருக்கு அடுத்தபடியாக நான் ரசிக்கும் தலைவர் மு.க. ஸ்டாலின் மட்டுமே.

    முதல்வர் இருக்கையை தட்டிப்பறிக்க நினைத்திருந்தால் ஸ்டாலின், கூவத்தூர் பிரச்சினையின்போதே முதல்வர் ஆகியிருப்பார். ஜனநாயக முறையில் அவர் முதல்வர் ஆக விரும்புகிறார். காலம் கனியும், காரியங்கள் தானாக நடக்கும். மு.க. ஸ்டாலின் நிச்சயம் அரியணை ஏறுவார். நாம் அதை யெல்லாம் பார்க்க போகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மு.க.ஸ்டாலினை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் எச். ராஜா ஆகியோர் முரசொலி பஞ்சமி நில விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள். மேலும் பா.ஜ.க. தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து அரசியல் செய்து வருகிறது.

    ஸ்டாலின்.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் இணைந்து போட்டியிட்ட நிலையில் உள்ளாட்சி தேர்தலிலும் இணைய முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் பி.டி. அரசகுமார், மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்று பேசியிருப்பது பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×