என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வாலாஜாவில் உதவி கலெக்டர் பிடித்து ஓப்படைத்த மாட்டை மிரட்டல் விடுத்து ஓட்டிசென்றவர் கைது
வாலாஜா:
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை நகரத்தில் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பல்வேறு விபத்துகள் நடந்து வருகிறது.
இதனால் உயிர் சேதங்கள் ஏற்பட்டு வருவதாகவும் கால்நடைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து புகார் கொடுத்தும் நகராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருந்து வருகிறது.
இது குறித்து ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத்திடம் தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் புகார் கொடுத்தனர். அதன்பேரில் உதவி கலெக்டர் களத்தில் இறங்கினார்.
நேற்று முன்தினம் நகராட்சி மற்றும் வருவாய்த்துறை ஊழியர்களின் உதவியுடன் 9 மாடுகளை பிடித்து நகராட்சியில் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதில் காகிதக்காரத் தெருவை சேர்ந்த பால் வியாபாரி பிரகாஷ் (30) என்பவர் நகராட்சி அலுவலகம் வந்து அதிகாரிகளை திட்டியதுடன் கொலை மிரட்டலும் விடுத்து, அங்கிருந்த தனது மாட்டை அவிழ்த்து ஓட்டிச் சென்றார். இந்த சம்பவம் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து வாலாஜா நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் தாவூத் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாசை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்