search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    முதியவரை கொன்று பணம் கொள்ளை - வாலிபருக்கு ஆயுள் தண்டனை

    முதியவரை கல்லால் தாக்கி கொன்று பணத்தை கொள்ளையடித்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    வேலூர்:

    பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானத்தை சேர்ந்தவர் காசிநாதன் (64). விவசாயம் மற்றும் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். பள்ளிகொண்டா அம்பேத்கர் நகரை சேர்ந்த நந்தா என்கிற முத்துக்குமார் காசிநாதனிடம் பணம் பறிக்க திட்டமிட்டார்.

    கடந்த ஆண்டு மே மாதம் 28-ந்தேதி பகல் விவசாய நிலத்தில் இருந்த காசிநாதனை முத்துக்குமார் கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு அவரிடம் இருந்த ரூ.1000, ஒரு செல்போன் ஆகியவற்றை திருடி சென்றுவிட்டார்.

    பள்ளிகொண்டா போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு வேலூர் கூடுதல் மாவட்ட விரைவு கோர்ட்டில் நடந்தது.

    நீதிபதி குணசேகரன் இன்று தீர்ப்பு அளித்தார். அதில் நந்தா என்கிற முத்துகுமாருக்கு ஆயுள் தண்டனை ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தார்.
    Next Story
    ×