என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அறந்தாங்கியில் சாலை விபத்தில் 3 பேர் படுகாயம் - பொது மக்கள் சாலை மறியல்
அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே ராஜேந்திரபுரத்தில் வசித்து வரும் சந்திரகுமார் (வயது 50) என்பவர் கீரமங்கலம் அரசு பள்ளியில் படிக்கும் தன் மகள் மெளலி(18) என்பவரை பள்ளிக்கு அனுப்பி வைப்பதற்காக ராஜேந்திர புரம் பஸ் ஸ்டாண்ட் நோக்கி வந்து கொண்டிந்தார், அருகில் வனிதா (35) என்பவரும் வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த தனியார் பள்ளி வாகனம் ஒன்று மோதியது. இதில் மூவரும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டையில் அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தனியார் பள்ளி வாகனம் வேகமாக வந்ததால் விபத்துக்கு ஏற்பட காரணம். எனவே அந்த பள்ளி நிர்வாகத்தை கண்டித்து.ராஜேந்திரபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அறந்தாங்கி காவல் ஆய்வாளர் ரவீந்திரன் பேச்சுவார்த்தை நடத்தி பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்