என் மலர்
செய்திகள்

தஞ்சை அருகே தலையில் காயத்துடன் பிணமாக கிடந்த வாலிபர்- போலீசார் விசாரணை
தஞ்சை அருகே சாலையோரத்தில் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சாவூர்:
தஞ்சை, குருங்குளம் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவர் நேற்று நாகப்புடையான் பட்டி பகுதியில் சாலையோரத்தில் தலையில் காயத்துடன் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே ஒரு மோட்டார் சைக்கிள் கிடந்தது.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் குருங்குளம் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் வல்லம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து வழக்குபதிவு செய்து அவர் விபத்தில் இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






