என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீர்காழி அருகே திருமணம் செய்ய வாலிபர் மிரட்டியதால் பிளஸ்-2 மாணவி தற்கொலை
    X

    சீர்காழி அருகே திருமணம் செய்ய வாலிபர் மிரட்டியதால் பிளஸ்-2 மாணவி தற்கொலை

    வாலிபர் திருமணம் செய்ய மிரட்டியதால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்ய சம்பவம் சீர்காழி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆலங்காடு கிராமம் இளந்தோப்பு தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் மீனாட்சி (வயது 16). இவர் திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீனாட்சி பள்ளிக்கு செல்லும் போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் பின்தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வாலிபர் மீனாட்சியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மிரட்டி வந்ததாத தெரிகிறது.

    இதனால் மாணவி மீனாட்சி மனவேதனை அடைந்தார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மீனாட்சி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    இதுகுறித்து மீனாட்சியின் தந்தை ரமேஷ் புதுப்பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மீனாட்சியின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வாலிபர் திருமணம் செய்ய மிரட்டியதால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்ய சம்பவம் சீர்காழி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×