என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காருக்காக அரசியல் நடத்துபவர் நாஞ்சில் சம்பத்: தமிழிசை கடும் தாக்கு
பல்லடம்:
பல்லடத்தில் பா.ஜனதா பிரமுகர் இல்ல திருமண விழாவில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்டார்.
பின்னர் பா.ஜன தா நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்தார். அதைதொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் பணிகள் நடைபெறவில்லை.
இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அ.தி.மு.க. வினர் தங்களது உள்கட்சி பிரச்சினைகளை முடித்து கொண்டு மக்கள் பிரச்சினைகளை கவனிக்க வேண்டும்.
நாஞ்சில் சம்பத் தொடர்ந்து பா.ஜனதாவை பற்றி அவதூறாக பேசி வருகிறார். அவர் கொள்கைக்காக அரசியல் நடத்தும் அரசியல்வாதி அல்ல. காருக்காக அரசியல் நடத்துபவர். மேலும் அவரை பற்றி கருத்து கூற விரும்பவில்லை.
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் மக்களுக்காக எந்த பணியும் செய்யாமல் வெறும் சினிமா மாயையுடன் நடிகர் கமல் அரசியலுக்கு வருவதை தான் விமர்சிக்கிறோம்.
தமிழகத்தில் பா.ஜனதா வளர்ந்து வருகிறது. அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் பா.ஜனதாவில் சேர்ந்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்