என் மலர்
செய்திகள்

தாம்பரத்தில் ஆசிரியையிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது
தாம்பரத்தில் நடந்த சென்ற ஆசிரியையிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நகையை பறித்தனர். போலீசார் 2 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
வேளச்சேரி:
கிழக்கு தாம்பரம் முத்து ராமலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் வினிதா. செம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மாலை கிழக்கு தாம்பரம் போரூர் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் வினிதா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு சென்றனர்.
அதிர்ச்சி அடைந்த வினிதா கூச்சல் போட்டார். அப்போது ரோந்து பணியில் இருந்த போலீசார் சத்தம் கேட்டு 2 வாலிபர்களையும் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் வியாசர்பாடி வி.பி. காலனியைச் சேர்ந்த தொப்பை கணேசன், நன் மங்கலத்தைச் சேர்ந்த வித்யாதரன் என்பது தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.
Next Story






