என் மலர்
செய்திகள்

பெட்ரோ கெமிக்கல் மண்டல திட்டத்தை முறியடிக்கும் வரை போராடுவோம்: ஜி.கே. மணி
மக்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் பெட்ரோ கெமிக்கல் மண்டல திட்டத்தை முறியடிக்கும் வரை போராடுவோம் என சீர்காழியில் ஜி.கே. மணி கூறினார்.
சீர்காழி:
பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி சீர்காழியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நாகை, கடலூரில் 45 கிராமங்களை கையகப்படுத்தி 57 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு மாநில அரசும் நிலங்களை கையகப்படுத்தி கொடுக்கும் நிலை உள்ளது. பெட்ரோ கெமிக்கல் மண்டலம் தமிழ்நாட்டிற்கு வந்தால் டெல்டா விவசாயம் முற்றிலுமாக சீரழிந்து பாலைவனமாகிவிடும். நிலங்கள் அழிந்து போன பிறகு குடியிருப்புகள் அப்புறப்படுத்தப்படும். இந்த கிராமங்களையொட்டி உள்ள நகரப்புறங்களும் பாதிக்கப்படும்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மேற்குவங்க மாநிலம் நந்தி கிராமத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்க நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட போது மம்தா பானர்ஜி தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடந்தது. அதனால் அந்த திட்டம் மேற்கு வங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டது. அதேபோல் கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் புறக்கணிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பெட்ரோ கெமிக்கல் மண்டலம் தற்போது தமிழ்நாட்டில் கால்பதிக்க முயற்சிக்கிறது.
கடலூரில் சிப்காட் தொழிற்சாலைகளால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு நிலத்தடிநீர் விவசாயம் முற்றிலுமாக அழிந்து விட்டது. அப்பகுதியை சுற்றி வசிக்கும் மக்கள் பலவிதமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிப்காட் அமைந்துள்ள பகுதியில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்றதான சூழல் இல்லை என நீதிமன்றத்தில் வல்லுனர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சிப்காட் தொழிற்சாலையை விட 100 மடங்கு கொடுமையானது பெட்ரோ கெமிக்கல் திட்டம். இதனால் தான் அந்த திட்டம் தமிழகத்திற்கு வரக்கூடாது என்கிறோம். கையகப்படுத்தப்படும் 57ஆயிரம் ஏக்கரில் அந்நிறுவனம் பெட்ரோல் சம்பந்தப்பட்ட ரசாயண தொழிற்சாலைகள், சுத்திகரிப்பு நிலையங்கள் வர உள்ளன.
இவைகள் அமைக்கப்பட்டால் கிராமங்களில் சுற்றுச்சூழல் கெட்டு நச்சுகாற்றுகள் பரவி கிராமங்களை விட்டு வெளியேறி உள்நாட்டிலேயே அகதிகளாகும் நிலை ஏற்படும். இப்படி மக்களை அழித்து, மண்வளத்தினை வீணாக்கி நிலத்தடிநீரை கெடுத்து விவசாயத்தை அழித்து குடியிருப்புகளை அகற்றி எரிவாயுவை தயாரிக்க வேண்டும் என்பது தான் மத்தியஅரசின் நோக்கம்.
இந்த திட்டத்திற்காக மத்திய அரசிற்கு மாநில அரசு நிலத்தை கையகப்படுத்தி கொடுக்ககூடாது. பிற மாநிலங்களில் இத்திட்டம் நுழைய எப்படி அனுமதிக்கப்படவில்லையோ அதே போல் தமிழ்நாட்டிலும் அனுமதிக்ககூடாது. மத்தியஅரசு மக்களின் நலனில் அக்கறைகொண்டு இதுபோன்ற திட்டங்களை கைவிடவேண்டும்
இந்த கெமிக்கல் மண்டலம் அமைய கூடாது என்பதை வலியுறுத்தி அன்புமணிராமதாஸ் எம்.பி. தலைமையில் இன்று(5-ம் தேதி) கடலூர் மாவட்டத்திலும், நாகை மாட்டத்திலும் அறிவிக்கப்பட்டுள்ள கிராமங்கள் தோறும் நேரில் சென்று மக்களை சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். இந்த திட்டம் முறியடிக்கப்படும் வரை பா.ம.க. தொடர்ந்து போராடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி சீர்காழியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நாகை, கடலூரில் 45 கிராமங்களை கையகப்படுத்தி 57 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு மாநில அரசும் நிலங்களை கையகப்படுத்தி கொடுக்கும் நிலை உள்ளது. பெட்ரோ கெமிக்கல் மண்டலம் தமிழ்நாட்டிற்கு வந்தால் டெல்டா விவசாயம் முற்றிலுமாக சீரழிந்து பாலைவனமாகிவிடும். நிலங்கள் அழிந்து போன பிறகு குடியிருப்புகள் அப்புறப்படுத்தப்படும். இந்த கிராமங்களையொட்டி உள்ள நகரப்புறங்களும் பாதிக்கப்படும்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மேற்குவங்க மாநிலம் நந்தி கிராமத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்க நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட போது மம்தா பானர்ஜி தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடந்தது. அதனால் அந்த திட்டம் மேற்கு வங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டது. அதேபோல் கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் புறக்கணிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பெட்ரோ கெமிக்கல் மண்டலம் தற்போது தமிழ்நாட்டில் கால்பதிக்க முயற்சிக்கிறது.
கடலூரில் சிப்காட் தொழிற்சாலைகளால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு நிலத்தடிநீர் விவசாயம் முற்றிலுமாக அழிந்து விட்டது. அப்பகுதியை சுற்றி வசிக்கும் மக்கள் பலவிதமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிப்காட் அமைந்துள்ள பகுதியில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்றதான சூழல் இல்லை என நீதிமன்றத்தில் வல்லுனர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சிப்காட் தொழிற்சாலையை விட 100 மடங்கு கொடுமையானது பெட்ரோ கெமிக்கல் திட்டம். இதனால் தான் அந்த திட்டம் தமிழகத்திற்கு வரக்கூடாது என்கிறோம். கையகப்படுத்தப்படும் 57ஆயிரம் ஏக்கரில் அந்நிறுவனம் பெட்ரோல் சம்பந்தப்பட்ட ரசாயண தொழிற்சாலைகள், சுத்திகரிப்பு நிலையங்கள் வர உள்ளன.
இவைகள் அமைக்கப்பட்டால் கிராமங்களில் சுற்றுச்சூழல் கெட்டு நச்சுகாற்றுகள் பரவி கிராமங்களை விட்டு வெளியேறி உள்நாட்டிலேயே அகதிகளாகும் நிலை ஏற்படும். இப்படி மக்களை அழித்து, மண்வளத்தினை வீணாக்கி நிலத்தடிநீரை கெடுத்து விவசாயத்தை அழித்து குடியிருப்புகளை அகற்றி எரிவாயுவை தயாரிக்க வேண்டும் என்பது தான் மத்தியஅரசின் நோக்கம்.
இந்த திட்டத்திற்காக மத்திய அரசிற்கு மாநில அரசு நிலத்தை கையகப்படுத்தி கொடுக்ககூடாது. பிற மாநிலங்களில் இத்திட்டம் நுழைய எப்படி அனுமதிக்கப்படவில்லையோ அதே போல் தமிழ்நாட்டிலும் அனுமதிக்ககூடாது. மத்தியஅரசு மக்களின் நலனில் அக்கறைகொண்டு இதுபோன்ற திட்டங்களை கைவிடவேண்டும்
இந்த கெமிக்கல் மண்டலம் அமைய கூடாது என்பதை வலியுறுத்தி அன்புமணிராமதாஸ் எம்.பி. தலைமையில் இன்று(5-ம் தேதி) கடலூர் மாவட்டத்திலும், நாகை மாட்டத்திலும் அறிவிக்கப்பட்டுள்ள கிராமங்கள் தோறும் நேரில் சென்று மக்களை சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். இந்த திட்டம் முறியடிக்கப்படும் வரை பா.ம.க. தொடர்ந்து போராடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






