என் மலர்
செய்திகள்

ஆலங்குடி அருகே விபத்து: மோட்டார்சைக்கிள் மரத்தில் மோதி 2 வாலிபர்கள் பலி
ஆலங்குடி அருகே மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதிய கோர விபத்தில் 2 பேர் பலியானார்கள். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த அடப்பன்வயல் கிராமம் 2-வது தெருவை சேர்ந்தவர் சார்லஸ் மகன் எபினேசர் (வயது 22). இவரது நண்பர்கள் காந்தி நகரை சேர்ந்த தமிழ்செல்வன் மகன் தினேஷ் (23) மற்றும் அடப்பன்வயல் 7-வது தெருவைச்சேர்ந்த முகமது கனிமகன் அஷரப் இப்ராகிம் (23).
இவர்கள் 3 பேரும் இன்று காலை பட்டுக்கோட்டை- புதுக்கோட்டை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். வடகாடு அருகே உள்ள கோவில்பட்டி வளையில் அவர்கள் திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலை யோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது.
இந்த கோர விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் எபினேசர் சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயம் அடைந்து பலியானார். விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் ஆலங் குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் செல்லும் வழியிலேயே தினேஷ் பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த அஷரப் இப்ராகிம் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிசிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த அடப்பன்வயல் கிராமம் 2-வது தெருவை சேர்ந்தவர் சார்லஸ் மகன் எபினேசர் (வயது 22). இவரது நண்பர்கள் காந்தி நகரை சேர்ந்த தமிழ்செல்வன் மகன் தினேஷ் (23) மற்றும் அடப்பன்வயல் 7-வது தெருவைச்சேர்ந்த முகமது கனிமகன் அஷரப் இப்ராகிம் (23).
இவர்கள் 3 பேரும் இன்று காலை பட்டுக்கோட்டை- புதுக்கோட்டை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். வடகாடு அருகே உள்ள கோவில்பட்டி வளையில் அவர்கள் திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலை யோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது.
இந்த கோர விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் எபினேசர் சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயம் அடைந்து பலியானார். விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் ஆலங் குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் செல்லும் வழியிலேயே தினேஷ் பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த அஷரப் இப்ராகிம் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிசிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






