என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கடன் தொல்லையால் விஷம் குடித்த தம்பதியினர்: ஈரோடு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
பவானி:
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி வாகராம் பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (55). இவரது மனைவி பாரதி (50). விசைத்தறித் தொழிலாளர்கள்.
இவர்கள் கருமத்தம் பட்டியில் உள்ளவிசைத்தறிப் பட்டறையில் முன்பணமாக ரூ.80ஆயிரம் பெற்றுக் கொண்டுவேலைசெய்து வந்தனர். இந்நிலையில் போதிய வேலை இல்லாததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் வாங்கிய பணத்தைத்திரும்பச் செலுத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும் இவர்கள் நாமக்கல் மாவட்டம்,பள்ளி பாளையத்தை அடுத்தஆலம் பாளையத்தில்உள்ள பட்டறையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேலைக்கு வந்துள்ளனர்.
இவர்களுக்கு கடன் கொடுத்தவர்கள் தற்போது பணத்தை உடனடியாக திருப்பித் தருமாறு கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், என்ன செய்வது என்றறியாமல் தவித்த கணவன், மனைவி இருவரும் பவானி கூடுதுறை பகுதிக்கு நேற்று மாலை வந்தனர். அங்கு ஏற்கெனவே தயாராக வைத்திருந்த எலிமருந்தைத் தின்று தற்கொலை செய்ய கொள்ள முயன்றனர். இதைக் கண்ட பொதுமக்கள் அவர்கள் இருவரையும் மீட்டு பவானி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதலுதவி சிகிச்சைக்குப்பின்னர் இருவரும் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். கடன் தொல்லையால் கணவன், மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பவானி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்