என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தொகுதிகளை பெறுவதில் அதிமுகவுடன் சமரசம் செய்து கொண்டது ஏன்?- எல்.முருகன் பேட்டி
பழனி:
தாராபுரம் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் இன்று பழனி மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணி வெற்றி கூட்டணியாக உள்ளது. 234 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.
தேர்தல் கூட்டணியின் போது திருவண்ணாமலை மற்றும் அறுபடை வீடுகள் அமைந்துள்ள தொகுதிகளை அ.தி.மு.க. தலைமையிடம் கேட்டோம். ஆனால் அதில் ஒரு சில தொகுதிகளை மட்டுமே எங்களுக்கு அ.தி.மு.க. ஒதுக்கியது. கூட்டணி தர்மத்துக்காக சில விஷயங்களை சமரசம் செய்து கொள்ள வேண்டும். அதன்படிதான் நாங்கள் கிடைத்த தொகுதிகளில் வெற்றிக்காக பாடுபடுவோம்.
அ.தி.மு.க. மற்றும் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி வேட்பாளர்களுக்கும் பா.ஜ.க. நிர்வாகிகள் தொடர்ந்து உழைத்து வருகின்றனர்.
தாராபுரத்தில் தி.மு.க. மற்றும் ம.தி.மு.க. நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இதற்கும் பா.ஜ.க.வுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. வருமான வரித்துறை சோதனை நடப்பது குறித்த தகவல் கூட எனக்கு தெரியாது. நான் எனது தொகுதியில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்