என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி போராட்டத்தை ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி திசை திருப்பி விடக்கூடாது- ஈஸ்வரன்
    X

    காவிரி போராட்டத்தை ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி திசை திருப்பி விடக்கூடாது- ஈஸ்வரன்

    காவிரி மேலாண்மை வாரிய போராட்டத்தை ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி திசை திருப்பி விடக்கூடாது என்று ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:-

    காவிரி பிரச்சனைக்காக இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களும் இளைஞர்களும் மாணவர்களும் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் இந்த தொடர் போராட்டங்கள் நிற்காது.

    தமிழக அரசே உண்ணாவிரதம் போன்ற அறவழி போராட்டங்களை முன்னெடுக்கும் நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.

    இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த உள்ளார்கள். வரும் 10-ந்தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த விடக்கூடாது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் ஒரு கொண்டாட்டம். இதை கொண்டாடுகின்ற மனநிலையில் இப்போது தமிழர்கள் இல்லை. இதற்கு உடனடியாக தமிழக அரசு அனுமதி மறுத்து உத்தரவிட வேண்டும். தமிழகம் முழுவதும் நடக்கிற காவிரி உரிமை போராட்டத்தை ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி திசை திருப்பி விடக்கூடாது. இதில் ஒவ்வொருவரும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு ஈஸ்வரன் கூறி உள்ளார். #tamilnews
    Next Story
    ×