என் மலர்
செய்திகள்

சந்திரபாபு நாயுடு உணர்வு எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை- மு.க.ஸ்டாலின்
மாநில உரிமை பிரச்சனையில் சந்திரபாபு நாயுடுவுக்கு உள்ள உணர்வு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் வரவில்லை என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த சரள பகுதியில் கோவை நெடுஞ்சாலையோரம் தி.மு.க. மண்டல மாநாடு வரும் 24 மற்றும் 25-ந்தேதி நடக்கிறது.
இதற்காக பிரம்மாண்ட மாநாட்டு மேடையும் பந்தலும் அமைக்கப்பட்டு வருகிறது. மாநாட்டு பந்தலில் சுமார் 2 லட்சம் பேர் அமர இருக்கைகளும் போடப்பட்டு வருகிறது.
இன்று மாநாட்டு பணிகளை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த தி.மு.க. வரலாற்று புகைப்பட கண்காட்சியை மு.க.ஸ்டாலின் ரசித்து பார்த்தார். பின்னர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கேள்வி:- பா.ஜனதா கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் கட்சி விலகி இருக்கிறதே?
பதில்:- சந்திரபாபு நாயுடு ஏற்கனவே பிரதமர் மோடி தந்த எந்த உறுதி மொழிகளையும், வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார். இந்த சூழ்நிலையில் பா.ஜனதா கூட்டணியில் இருப்பது முறையல்ல என்பதை சந்திரபாபு நாயுடு உணர்ந்த காரணத்தினால்தான் அவரது கட்சியின் சார்பில் பதவி வகித்த மத்திய அமைச்சர்கள் விலகி இருக்கிறார் கள்.
விலகியது மட்டுமல்ல அந்த கூட்டணிக்கு இனி ஆதரவே தரமாட்டோம். பா.ஜனதா கட்சிக்கு ஆதரவு தருவதை இத்தோடு நிறுத்திக் கொள்கிறோம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்த உணர்வு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் வரவில்லையே என்பதுதான் வேதனையாக இருக்கிறது.
காவிரி பிரச்சனையில் மத்திய அரசு தமிழக விவசாயிகளை, தமிழக மக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. நீட் பிரச்சனையில் எவ்வளவு வேகமாக மத்திய அரசு நடந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் இப்போது ஆட்சி நடத்திக் கொண்டிருப்பவர்கள் சந்திரபாபு நாயுடுவை பார்த்தாவது உணருவார்களா என்பதை எனது கேள்வியாக வைக்கிறேன்.
கே:- ராமர் பாலத்தை நிறைவேற்றுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதே?
ப:- ராமர் பாலத்தை அகற்றாமல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதையும் வரவேற்கிறோம். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது தான் அண்ணாவின் லட்சியம். கலைஞரின் லட்சியம். தி.மு.க.வின் உணர்வு. எனவே அதை நிறைவேற்றினால்தான் தென் பகுதியில் இருக்கக் கூடிய மக்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே பெருமை சேர்க்கக்கூடிய திட்டமாக அமைந்திட முடியும்.
எனவே அப்படிப்பட்ட நிலை வரவேண்டும் என்று தான் நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியதை மக்களின் வரவேற்பு கருதி சொல்லவில்லை. மக்களின் கண்ணீரை துடைக்க வேண்டும். அப்போதாவது மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் அதை சொல்லி இருக்கிறேன்.
அதை ஏற்றுக் கொண்டு இன்றைக்கு ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.க. முன்வரும் என்று சொன்னால், தி.மு.க.வும் அதை பின்பற்ற காத்திருக்கிறது. தயாராக இருக்கிறது.
அவினாசி-அத்திக்கடவு திட்டம் தொடர்பாக ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே உறுதி மொழி தரப்பட்டிருக்கிறது. 110-வது விதியை பயன்படுத்தி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எனவே இது ஏமாற்றுகிற நாடகம். உள்ளபடியே நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் எப்போதோ நிறைவேற்றி இருக்க முடியும்.
இப்போது சொல்லி இருப்பதையாவது நிறைவேற்றுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
தென் மாநிலங்கள் ஒன்றாக சேர்ந்து திராவிட நாடு என்ற கோரிக்கைகள் வலுவடைந்து வருவதை வரவேற்கிறேன். வரும் என்ற நம்பிக்கையில்தான் நானும் இருக்கிறேன்.
தமிழகத்தில் ஒவ்வொரு துறையாக நான் அலசி ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது. ஒட்டு மொத்தமாக இரு கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் ஆகிய மூன்றும் சேர்ந்து நடைபெறக்கூடிய ஆட்சிதான் இந்த ஆட்சி.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த சரள பகுதியில் கோவை நெடுஞ்சாலையோரம் தி.மு.க. மண்டல மாநாடு வரும் 24 மற்றும் 25-ந்தேதி நடக்கிறது.
இதற்காக பிரம்மாண்ட மாநாட்டு மேடையும் பந்தலும் அமைக்கப்பட்டு வருகிறது. மாநாட்டு பந்தலில் சுமார் 2 லட்சம் பேர் அமர இருக்கைகளும் போடப்பட்டு வருகிறது.
இன்று மாநாட்டு பணிகளை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த தி.மு.க. வரலாற்று புகைப்பட கண்காட்சியை மு.க.ஸ்டாலின் ரசித்து பார்த்தார். பின்னர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கேள்வி:- பா.ஜனதா கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் கட்சி விலகி இருக்கிறதே?
பதில்:- சந்திரபாபு நாயுடு ஏற்கனவே பிரதமர் மோடி தந்த எந்த உறுதி மொழிகளையும், வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார். இந்த சூழ்நிலையில் பா.ஜனதா கூட்டணியில் இருப்பது முறையல்ல என்பதை சந்திரபாபு நாயுடு உணர்ந்த காரணத்தினால்தான் அவரது கட்சியின் சார்பில் பதவி வகித்த மத்திய அமைச்சர்கள் விலகி இருக்கிறார் கள்.
விலகியது மட்டுமல்ல அந்த கூட்டணிக்கு இனி ஆதரவே தரமாட்டோம். பா.ஜனதா கட்சிக்கு ஆதரவு தருவதை இத்தோடு நிறுத்திக் கொள்கிறோம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்த உணர்வு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் வரவில்லையே என்பதுதான் வேதனையாக இருக்கிறது.
காவிரி பிரச்சனையில் மத்திய அரசு தமிழக விவசாயிகளை, தமிழக மக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. நீட் பிரச்சனையில் எவ்வளவு வேகமாக மத்திய அரசு நடந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் இப்போது ஆட்சி நடத்திக் கொண்டிருப்பவர்கள் சந்திரபாபு நாயுடுவை பார்த்தாவது உணருவார்களா என்பதை எனது கேள்வியாக வைக்கிறேன்.
கே:- ராமர் பாலத்தை நிறைவேற்றுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதே?
ப:- ராமர் பாலத்தை அகற்றாமல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதையும் வரவேற்கிறோம். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது தான் அண்ணாவின் லட்சியம். கலைஞரின் லட்சியம். தி.மு.க.வின் உணர்வு. எனவே அதை நிறைவேற்றினால்தான் தென் பகுதியில் இருக்கக் கூடிய மக்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே பெருமை சேர்க்கக்கூடிய திட்டமாக அமைந்திட முடியும்.
எனவே அப்படிப்பட்ட நிலை வரவேண்டும் என்று தான் நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியதை மக்களின் வரவேற்பு கருதி சொல்லவில்லை. மக்களின் கண்ணீரை துடைக்க வேண்டும். அப்போதாவது மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் அதை சொல்லி இருக்கிறேன்.
அதை ஏற்றுக் கொண்டு இன்றைக்கு ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.க. முன்வரும் என்று சொன்னால், தி.மு.க.வும் அதை பின்பற்ற காத்திருக்கிறது. தயாராக இருக்கிறது.
அவினாசி-அத்திக்கடவு திட்டம் தொடர்பாக ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே உறுதி மொழி தரப்பட்டிருக்கிறது. 110-வது விதியை பயன்படுத்தி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எனவே இது ஏமாற்றுகிற நாடகம். உள்ளபடியே நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் எப்போதோ நிறைவேற்றி இருக்க முடியும்.
இப்போது சொல்லி இருப்பதையாவது நிறைவேற்றுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
தென் மாநிலங்கள் ஒன்றாக சேர்ந்து திராவிட நாடு என்ற கோரிக்கைகள் வலுவடைந்து வருவதை வரவேற்கிறேன். வரும் என்ற நம்பிக்கையில்தான் நானும் இருக்கிறேன்.
தமிழகத்தில் ஒவ்வொரு துறையாக நான் அலசி ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது. ஒட்டு மொத்தமாக இரு கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் ஆகிய மூன்றும் சேர்ந்து நடைபெறக்கூடிய ஆட்சிதான் இந்த ஆட்சி.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
Next Story






