என் மலர்
பெண்கள் மருத்துவம்
பெண்களின் இதயம் கர்ப்ப காலத்தில் முக்கிய மாற்றங்களுக்கு உள்ளாவதாக கண்டறியப்பட்டுள்ளது. அம்மாற்றங்கள் என்னென்ன என்று அறிந்து கொள்ளலாம்.
கர்ப்ப காலத்தில், பெண்களின் உடல் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகிறது. இம்மாற்றங்களால் பெண்களின் உடல் பலவித மாற்றங்களை, வடிவங்களை அடைகிறது; பெண்களின் மனமோ வார்த்தைகளால் விவரிக்க முடியாத மாற்றத்தை எட்டுகிறது. இந்நிலையில் பெண்களின் இதயம் கர்ப்ப காலத்தில் முக்கிய மாற்றங்களுக்கு உள்ளாவதாக கண்டறியப்பட்டுள்ளது. அம்மாற்றங்கள் என்னென்ன என்று அறிந்து கொள்ளலாம்.
பெண்களே! உங்கள் இதயம் சாதாரண அளவை விட 12% பெரிதாவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் உங்கள் உடல் அதிக வேலையை செய்ய ஏற்படும்; உங்களுக்காக, உங்கள் குழந்தைக்காக..! இருதயத்தின் அதிகப்படியான மாற்றங்கள் 9-வது மாதத்தில் நிகழும்..
உங்கள் இதயம் சாதாரண நிலையை விட இருமடங்கு இரத்தத்தை பம்ப் செய்து, உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்புகிறது. இது உங்கள் உடல் வளர்ச்சி மற்றும் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
இதயத் துடிப்புகளும், இயக்கங்களும் கூட அதிகரிக்கின்றன; சாதாரண நிலையை விட. ஆரோக்கியான நிலையை கர்ப்பகாலத்தில் மேற்கொள்ள இந்த அதிகரிப்புகள் அவசியமே!
இந்த கருத்துக்களை உங்களால் நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால், இவை உண்மையே! ஆகையால், கர்ப்பகாலத்தில் இதயத்திற்கு பலம் தரும் உணவுகளில் கவனம் காட்டி, உண்டு ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும்.
பெண்களே! உங்கள் இதயம் சாதாரண அளவை விட 12% பெரிதாவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் உங்கள் உடல் அதிக வேலையை செய்ய ஏற்படும்; உங்களுக்காக, உங்கள் குழந்தைக்காக..! இருதயத்தின் அதிகப்படியான மாற்றங்கள் 9-வது மாதத்தில் நிகழும்..
உங்கள் இதயம் சாதாரண நிலையை விட இருமடங்கு இரத்தத்தை பம்ப் செய்து, உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்புகிறது. இது உங்கள் உடல் வளர்ச்சி மற்றும் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
இதயத் துடிப்புகளும், இயக்கங்களும் கூட அதிகரிக்கின்றன; சாதாரண நிலையை விட. ஆரோக்கியான நிலையை கர்ப்பகாலத்தில் மேற்கொள்ள இந்த அதிகரிப்புகள் அவசியமே!
இந்த கருத்துக்களை உங்களால் நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால், இவை உண்மையே! ஆகையால், கர்ப்பகாலத்தில் இதயத்திற்கு பலம் தரும் உணவுகளில் கவனம் காட்டி, உண்டு ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும்.
தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்குக் கிடைக்கும் கூடுதல் மருத்துவப் பயனை, கொஞ்சம் உற்றுப் பார்த்தால், உச்சிமுடியும்கூடச் சிலிர்க்கும்.
'தாய்ப்பாலுக்கு நிகர் ஏதும் இல்லை’ என்பது நாம் அறிந்ததே. அதே தாய்ப்பாலை மார்பகத்தில் இருந்து நேரில் பெறாமல், பிடித்துவைத்து, புட்டியில் குடிக்கும் நகர்ப்புறக் குழந்தைகள் இப்போது அதிகம். வழியே இல்லாதபோது இது சிறந்த மாற்றாகக் கருதப்பட்டாலும், தாயின் மார்போடு அணைந்து, நேராகப் பால் அருந்துவதற்கு இது இணை ஆகாது.
நேராக தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்குக் கிடைக்கும் கூடுதல் மருத்துவப் பயனை, கொஞ்சம் உற்றுப் பார்த்தால், உச்சிமுடியும்கூடச் சிலிர்க்கும். பச்சிளம் குழந்தையின் வாயில், உமிழ் நீரில் இருக்கும் கிருமித்தொற்றை, அந்தக் குழந்தை பால் அருந்தும்போது, தாயின் உடல் உணர்ந்துகொண்டு, உடனடியாக அந்தக் கிருமிக்கு எதிரான antibodies-ஐ ஒரு சில மணித்துளிகளில் தன் உடம்பில் தயாரித்து, அடுத்த வேளை பால் ஊட்டும்போது, தாய்ப்பாலுடன் கலந்து தந்துவிடுமாம். இவ்வளவு விரைவாக தாய், தன் நோய் எதிர்ப்பு ஆற்றலை குழந்தைக்கு அளிப்பதை ஆய்வில் பதிந்து, வியந்து சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இந்த antibodies supply காலையில் அலுவலகத்துக்குச் செல்லும் முன் புட்டியில் பிடித்துவைத்த தாய்ப்பாலில் குழந்தைக்குக் கிடைப்பது இல்லை. கூடவே, தாய்ப்பால் சுரப்பு, தாயின் மார்புக் காம்பை உறிஞ்சும்போது மட்டுமே குழந்தை வாய்க்கு வரும். ஆனால், புட்டிப்பால் அருந்தும்போது குழந்தை பாலை உறிஞ்சாமல் இருந்தாலும், அது வழிந்து வாயில் நிரம்பி, சில நேரம் மூச்சுக்குழலுக்குள் செல்லவும்கூட வாய்ப்பு உண்டு.
இன்னொரு விஷயம், தாய்ப்பால் புகட்டும்போது, குழந்தையின் நிறைவும் மகிழ்வும்தான் தாயின் கண்ணுக்குத் தெரியும். எந்த அளவு குழந்தை பால் குடித்திருக்கிறது என தாய் கணக்கிட முடியாது. ஆனால், பராமரிப்பவர் புட்டியில் பிடித்துவைத்த தாய்ப்பாலை அப்படிக் கொடுக்க இயலாது. 'தாய்ப்பாலை வீணாக்கக் கூடாது’ எனப் பெரும்பாலும் புட்டி காலியாகும் வரை கொடுப்பர். இது சில நேரங்களில் கூடுதலாகப் போய், பின்னாளில் குழந்தை தேவைக்கு அதிகம் உண்ணும் பழக்கம் உடையவர்களாக மாறிவிடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதோடு, தாய்ப்பாலை புட்டியில் பீச்சும் தாய்க்கு மீண்டும் பால்சுரப்பு ஏற்படுவது, இயல்பாக குழந்தை பால் அருந்தும்போது சுரப்பதுபோல சீராக நடைபெறாது.
நேராக தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்குக் கிடைக்கும் கூடுதல் மருத்துவப் பயனை, கொஞ்சம் உற்றுப் பார்த்தால், உச்சிமுடியும்கூடச் சிலிர்க்கும். பச்சிளம் குழந்தையின் வாயில், உமிழ் நீரில் இருக்கும் கிருமித்தொற்றை, அந்தக் குழந்தை பால் அருந்தும்போது, தாயின் உடல் உணர்ந்துகொண்டு, உடனடியாக அந்தக் கிருமிக்கு எதிரான antibodies-ஐ ஒரு சில மணித்துளிகளில் தன் உடம்பில் தயாரித்து, அடுத்த வேளை பால் ஊட்டும்போது, தாய்ப்பாலுடன் கலந்து தந்துவிடுமாம். இவ்வளவு விரைவாக தாய், தன் நோய் எதிர்ப்பு ஆற்றலை குழந்தைக்கு அளிப்பதை ஆய்வில் பதிந்து, வியந்து சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இந்த antibodies supply காலையில் அலுவலகத்துக்குச் செல்லும் முன் புட்டியில் பிடித்துவைத்த தாய்ப்பாலில் குழந்தைக்குக் கிடைப்பது இல்லை. கூடவே, தாய்ப்பால் சுரப்பு, தாயின் மார்புக் காம்பை உறிஞ்சும்போது மட்டுமே குழந்தை வாய்க்கு வரும். ஆனால், புட்டிப்பால் அருந்தும்போது குழந்தை பாலை உறிஞ்சாமல் இருந்தாலும், அது வழிந்து வாயில் நிரம்பி, சில நேரம் மூச்சுக்குழலுக்குள் செல்லவும்கூட வாய்ப்பு உண்டு.
இன்னொரு விஷயம், தாய்ப்பால் புகட்டும்போது, குழந்தையின் நிறைவும் மகிழ்வும்தான் தாயின் கண்ணுக்குத் தெரியும். எந்த அளவு குழந்தை பால் குடித்திருக்கிறது என தாய் கணக்கிட முடியாது. ஆனால், பராமரிப்பவர் புட்டியில் பிடித்துவைத்த தாய்ப்பாலை அப்படிக் கொடுக்க இயலாது. 'தாய்ப்பாலை வீணாக்கக் கூடாது’ எனப் பெரும்பாலும் புட்டி காலியாகும் வரை கொடுப்பர். இது சில நேரங்களில் கூடுதலாகப் போய், பின்னாளில் குழந்தை தேவைக்கு அதிகம் உண்ணும் பழக்கம் உடையவர்களாக மாறிவிடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதோடு, தாய்ப்பாலை புட்டியில் பீச்சும் தாய்க்கு மீண்டும் பால்சுரப்பு ஏற்படுவது, இயல்பாக குழந்தை பால் அருந்தும்போது சுரப்பதுபோல சீராக நடைபெறாது.
எண்டோமெட்ரியாசிஸ் (Endometriosis) பிரச்சனையை கருப்பை அகப்படலம் நோய் என அழகுத் தமிழில் அழைக்கிறார்கள். இந்த நோயின் அறிகுறிகளை அறிந்து கொள்ளலாம்.
எண்டோமெட்ரியாசிஸ் (Endometriosis) பிரச்சனையை கருப்பை அகப்படலம் நோய் என அழகுத் தமிழில் அழைக்கிறார்கள். பெண்களின் கருத்தரிப்பு உறுப்புகளில் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனை இது.
கர்ப்பம் தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் கருப்பை அகப்படலம் நோய் (எண்டோமெட்ரியாசிஸ்) (Endometriosis) 3 -ல் ஒரு பெண்ணுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. உலகெங்கும் 8.9 கோடி இளம்பெண்களைப் பாதிக்கக்கூடிய பிரச்சினையாக எண்டோமெட்ரியாசிஸ் உள்ளது. இதன் காரணமாக பல பெண்களுக்கு கர்ப்ப காலம் என்பது வெறும் கனவாகி விடுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கருப்பையின் உட்சுவர்களில் பொதுவாகவும் சில பேருக்கு சினைப்பைகள், கருக்குழாய், குடல், மலக்குடல் பகுதிகள் மற்றும் சிறுநீர்ப்பையிலும் தோன்றக்கூடிய அதிகப்படியான தேவையற்ற திசுக்களின் வளர்ச்சியே இப்பிரச்சினைக்கு காரணம் ஆகும். ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படக்கூடிய இப்பிரச்சினையினால் மாதவிடாயின்போது இந்த அதிகப்படியான திசுக்களும் உதிரப்போக்குடன் சேர்ந்து வெளியாகும்.
சில நேரங்களில் இந்த திசுப்படலங்களில் ஏற்படும் ரத்தக்கசிவு கட்டியாகவும் மற்ற உறுப்புகளுடன் ஒட்டிக் கொள்ளக் கூடியதாகவும் ஆகி விடுகிறது. இதனால் மாதவிடாயின் போது அதிகப்படியான வலி ஏற்படுவதுடன், 25 முதல் 40 வயதில் உள்ள மூன்றில் ஒரு பங்கு பெண்கள் கருத்தரிக்க முடியாமைக்குக் காரணமாகவும் இருக்கிறது. திருமணமான பெண்கள் பல வருடங்களாகியும் கருத்தரிக்காமல், அதற்கான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் போதும், வேறு பிரச்சினைகளுக்காக சிகிச்சை எடுக்கும்போது இப்பிரச்சினை தெரிய வருகிறது.

கருப்பை அகப்படலமாக இருக்கும் பெண்களுக்கு பொதுவாக மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப் போக்கும் வலியும் இருக்கும். இத்திசுப்படலம், கருப்பை வாய், கருப்பையின் மேற்புறம் அல்லது பின்புறத்தில் இருந்தால் தாம்பத்திய உறவின்போது வலி இருக்கலாம். இந்தப் படலம் சினைப்பையிலோ, கருக்குழாயிலோ இருந்தால் கருத்தரிக்க முடியாமல் பாதிப்பை ஏற்படுத்தும். இதுவே குடல் பகுதியில் இருந்தால் சாப்பிட்டவுடன் வயிற்றுவலி, மலம் கழிக்கும்போது வலி மற்றும் குடல் அடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
வயது வந்த பெண் முதல் மெனோபாஸ் வயதுப் பெண் வரை யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் இந்தப் பிரச்சினை வரலாம். அம்மாவுக்கோ, உடன்பிறந்த சகோதரிகளுக்கோ இப்பிரச்சினை இருந்தால், சம்பந்தப்பட்ட பெண்களுக்கு கருப்பை அகப்படலம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
குழந்தைப் பெற்றுக் கொள்வதில் தாமதம், அதிகமான உதிரப்போக்கு இருப்பது, 11 வயதிற்கு முன்பு பூப்பெய்வது, மாதந்தோறும் சீக்கிரமாக (27 நாட்களுக்கு குறைவான நாட்களில்) மாதவிடாய் வருவது, சிறு வயதிலேயே குழந்தை பெற்றுக்கொள்வது. உடல் எடை மிகக் குறைவாக இருப்பது, மதுப்பழக்கம் போன்றவையும் இப்பிரச்சினைக்கு காரணங்கள்.
ஹார்மோன் சிகிச்சை மற்றும் அறுவைசிகிச்சை மூலமாக இப்பிரச்னையைக் கட்டுப்படுத்தலாம். ஹார்மோன்கள், மாத்திரையாகவும், ஸ்பிரே மூலமாகவும் ஊசியாகவும் கொடுக்கப்படுகிறது. ஹார்மோன் சிகிச்சையை குழந்தை பெற்றுக் கொள்ளும் அவசியம் இல்லாதவர்களே எடுத்துக் கொள்ள முடியும். குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்து விட்டால் ஹார்மோன் சிகிச்சையை நிறுத்திவிட வேண்டும்.
கர்ப்பம் தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் கருப்பை அகப்படலம் நோய் (எண்டோமெட்ரியாசிஸ்) (Endometriosis) 3 -ல் ஒரு பெண்ணுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. உலகெங்கும் 8.9 கோடி இளம்பெண்களைப் பாதிக்கக்கூடிய பிரச்சினையாக எண்டோமெட்ரியாசிஸ் உள்ளது. இதன் காரணமாக பல பெண்களுக்கு கர்ப்ப காலம் என்பது வெறும் கனவாகி விடுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கருப்பையின் உட்சுவர்களில் பொதுவாகவும் சில பேருக்கு சினைப்பைகள், கருக்குழாய், குடல், மலக்குடல் பகுதிகள் மற்றும் சிறுநீர்ப்பையிலும் தோன்றக்கூடிய அதிகப்படியான தேவையற்ற திசுக்களின் வளர்ச்சியே இப்பிரச்சினைக்கு காரணம் ஆகும். ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படக்கூடிய இப்பிரச்சினையினால் மாதவிடாயின்போது இந்த அதிகப்படியான திசுக்களும் உதிரப்போக்குடன் சேர்ந்து வெளியாகும்.
சில நேரங்களில் இந்த திசுப்படலங்களில் ஏற்படும் ரத்தக்கசிவு கட்டியாகவும் மற்ற உறுப்புகளுடன் ஒட்டிக் கொள்ளக் கூடியதாகவும் ஆகி விடுகிறது. இதனால் மாதவிடாயின் போது அதிகப்படியான வலி ஏற்படுவதுடன், 25 முதல் 40 வயதில் உள்ள மூன்றில் ஒரு பங்கு பெண்கள் கருத்தரிக்க முடியாமைக்குக் காரணமாகவும் இருக்கிறது. திருமணமான பெண்கள் பல வருடங்களாகியும் கருத்தரிக்காமல், அதற்கான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் போதும், வேறு பிரச்சினைகளுக்காக சிகிச்சை எடுக்கும்போது இப்பிரச்சினை தெரிய வருகிறது.

கருப்பை அகப்படலமாக இருக்கும் பெண்களுக்கு பொதுவாக மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப் போக்கும் வலியும் இருக்கும். இத்திசுப்படலம், கருப்பை வாய், கருப்பையின் மேற்புறம் அல்லது பின்புறத்தில் இருந்தால் தாம்பத்திய உறவின்போது வலி இருக்கலாம். இந்தப் படலம் சினைப்பையிலோ, கருக்குழாயிலோ இருந்தால் கருத்தரிக்க முடியாமல் பாதிப்பை ஏற்படுத்தும். இதுவே குடல் பகுதியில் இருந்தால் சாப்பிட்டவுடன் வயிற்றுவலி, மலம் கழிக்கும்போது வலி மற்றும் குடல் அடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
வயது வந்த பெண் முதல் மெனோபாஸ் வயதுப் பெண் வரை யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் இந்தப் பிரச்சினை வரலாம். அம்மாவுக்கோ, உடன்பிறந்த சகோதரிகளுக்கோ இப்பிரச்சினை இருந்தால், சம்பந்தப்பட்ட பெண்களுக்கு கருப்பை அகப்படலம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
குழந்தைப் பெற்றுக் கொள்வதில் தாமதம், அதிகமான உதிரப்போக்கு இருப்பது, 11 வயதிற்கு முன்பு பூப்பெய்வது, மாதந்தோறும் சீக்கிரமாக (27 நாட்களுக்கு குறைவான நாட்களில்) மாதவிடாய் வருவது, சிறு வயதிலேயே குழந்தை பெற்றுக்கொள்வது. உடல் எடை மிகக் குறைவாக இருப்பது, மதுப்பழக்கம் போன்றவையும் இப்பிரச்சினைக்கு காரணங்கள்.
ஹார்மோன் சிகிச்சை மற்றும் அறுவைசிகிச்சை மூலமாக இப்பிரச்னையைக் கட்டுப்படுத்தலாம். ஹார்மோன்கள், மாத்திரையாகவும், ஸ்பிரே மூலமாகவும் ஊசியாகவும் கொடுக்கப்படுகிறது. ஹார்மோன் சிகிச்சையை குழந்தை பெற்றுக் கொள்ளும் அவசியம் இல்லாதவர்களே எடுத்துக் கொள்ள முடியும். குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்து விட்டால் ஹார்மோன் சிகிச்சையை நிறுத்திவிட வேண்டும்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகமாக காபி பருகுவது வயிற்றில் வளரும் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகமாக காபி பருகுவது வயிற்றில் வளரும் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
காபியில் கலந்திருக்கும் காபினை அதிகமாக நுகரும்போது குழந்தையின் கல்லீரல் வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகும். அத்துடன் குழந்தை வளர்ந்து ஆளாகும்போது இளமை பருவத்தில் கல்லீரல் நோய் பாதிப்புக்குள்ளாகும் அபாயமும் இருப்பதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. கர்ப்பிணிகள் தினமும் காபி பருகும்போது மன அழுத்தத்தையும், வளர்ச்சிக்கான ஹார்மோன் அளவில் மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதுபற்றி ஆய்வை மேற்கொண்ட சீனாவின் வுஹான் பல்கலைக்கழக இணை ஆசிரியர் இன்க்சியன் கூறுகையில், ‘‘எங்கள் ஆய்வின் முடிவின்படி கர்ப்பிணிகள் அதிக காபின் உட்கொள்ளும்பட்சத்தில் மன அழுத்த ஹார்மோனின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படுகிறது. அது கருவில் இருக்கும் குழந்தையின் கல்லீரல் வளர்ச்சியை தடுக்கிறது. தாய் மூலம் காபினை நுகர்வது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நல்லதல்ல. இதுபற்றி தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவேண்டி இருக்கிறது. எனினும் கர்ப்ப காலத்தில் பெண்கள் காபினை சேர்த்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்’’ என்கிறார்.
இந்த ஆய்வுக்கு சினை அடைந்த எலிகளை பயன்படுத்தி இருக்கிறார்கள். அவற்றுக்கு குறைந்தபட்சமாக 2-3 கப் காபிக்கு சமமான காபினையும், அதிகபட்சமாக 6-9 கப் காபிக்கு சமமான காபினையும் கொடுத்து பரிசோதித்திருக்கிறார்கள்.
இந்த ஆய்வு பற்றி டெல்லியை சேர்ந்த கருத்தரிப்பு மைய இயக்குனரான டாக்டர் சுவேதா குப்தா, ‘‘கர்ப்ப காலத்தில் பெண்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படும். ஒருவித ஏக்கம் தோன்றும். இதுபோன்ற சூழ்நிலையில் மனதை இதமாக்குவதற்காக சிலர் காபியை தேர்ந்தெடுக்கிறார்கள். அதில் இருக்கும் அதிக அளவு காபின் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும்’’ என்கிறார்.
புனேவை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் ஹர்ஷல் ராஜேக்கர், ‘‘கர்ப்பிணி பெண்ணுக்கோ, அவருடைய வயிற்றில் வளரும் குழந்தையின் கல்லீரலுக்கோ காபின் தீங்கு விளைவிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதேவேளையில் அதிகபடியான காபினை உட்கொண்டால் தூக்கம் தடைபடும். அது கர்ப்பிணிக்கும், குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்’’ என்கிறார்.
காபியில் கலந்திருக்கும் காபினை அதிகமாக நுகரும்போது குழந்தையின் கல்லீரல் வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகும். அத்துடன் குழந்தை வளர்ந்து ஆளாகும்போது இளமை பருவத்தில் கல்லீரல் நோய் பாதிப்புக்குள்ளாகும் அபாயமும் இருப்பதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. கர்ப்பிணிகள் தினமும் காபி பருகும்போது மன அழுத்தத்தையும், வளர்ச்சிக்கான ஹார்மோன் அளவில் மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதுபற்றி ஆய்வை மேற்கொண்ட சீனாவின் வுஹான் பல்கலைக்கழக இணை ஆசிரியர் இன்க்சியன் கூறுகையில், ‘‘எங்கள் ஆய்வின் முடிவின்படி கர்ப்பிணிகள் அதிக காபின் உட்கொள்ளும்பட்சத்தில் மன அழுத்த ஹார்மோனின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படுகிறது. அது கருவில் இருக்கும் குழந்தையின் கல்லீரல் வளர்ச்சியை தடுக்கிறது. தாய் மூலம் காபினை நுகர்வது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நல்லதல்ல. இதுபற்றி தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவேண்டி இருக்கிறது. எனினும் கர்ப்ப காலத்தில் பெண்கள் காபினை சேர்த்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்’’ என்கிறார்.
இந்த ஆய்வுக்கு சினை அடைந்த எலிகளை பயன்படுத்தி இருக்கிறார்கள். அவற்றுக்கு குறைந்தபட்சமாக 2-3 கப் காபிக்கு சமமான காபினையும், அதிகபட்சமாக 6-9 கப் காபிக்கு சமமான காபினையும் கொடுத்து பரிசோதித்திருக்கிறார்கள்.
இந்த ஆய்வு பற்றி டெல்லியை சேர்ந்த கருத்தரிப்பு மைய இயக்குனரான டாக்டர் சுவேதா குப்தா, ‘‘கர்ப்ப காலத்தில் பெண்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படும். ஒருவித ஏக்கம் தோன்றும். இதுபோன்ற சூழ்நிலையில் மனதை இதமாக்குவதற்காக சிலர் காபியை தேர்ந்தெடுக்கிறார்கள். அதில் இருக்கும் அதிக அளவு காபின் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும்’’ என்கிறார்.
புனேவை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் ஹர்ஷல் ராஜேக்கர், ‘‘கர்ப்பிணி பெண்ணுக்கோ, அவருடைய வயிற்றில் வளரும் குழந்தையின் கல்லீரலுக்கோ காபின் தீங்கு விளைவிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதேவேளையில் அதிகபடியான காபினை உட்கொண்டால் தூக்கம் தடைபடும். அது கர்ப்பிணிக்கும், குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்’’ என்கிறார்.
வயதாகும் பட்சத்தில் பெண்களுக்கு உறவில் ஈடுபாடு குறைவதாக தெரிவிக்கின்றது சமீபத்திய ஆய்வு ஓன்று. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
தாம்பத்திய உறவு என்பது இறைவன் மனிதர்களுக்கு கொடுத்த வரம். தாம்பத்திய உறவில் ஈடுபடுவதால் மனிதன் உடல் அளவிலும், மனதளவிலும் புத்துணர்ச்சி பெறுவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றது. மேலும், ஆணும் பெண்ணும் சம அளவில் உறவில் ஈடுபட்டால் மட்டுமே இந்த பலன்களை பெற முடியும்.
ஆனால், வயதாகும் பட்சத்தில் பெண்களுக்கு உறவில் ஈடுபாடு குறைவதாக தெரிவிக்கின்றது சமீபத்திய ஆய்வு ஓன்று. மாதவிடாய் என்பது பெண்களுக்கு மாதம் மாதம் வரக்கூடிய பிரச்சனைகளில் ஓன்று. பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும்போது உடளவிலும், மனதளவிலும் பெண்கள் பெரும் துயரத்தை அனுபவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வில் மாதவிலக்கு அடைந்த 4,500 பெண்களுடன் உரையாடல் நடத்தியபோது இறுதியாக நீங்கள் எப்போது உறவில் ஈடுபட்டிர்கள் என்ற கேள்விக்கு பலரும் ஞபாகமே இல்லை என பதில் கூறியுள்ளனர். ஏன் என்ற கேள்விக்கு அவர்கள் கூறிய பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாதவிலக்கு நின்ற பிறகு உறவில் திருப்தியுடன் ஈடுபட முடியவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். அப்படி ஈடுபட்டாலும் பெண்களின் வெஜினா வறண்டுபோவதால் அதிக வலியை ஏற்படுத்துகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.
இறுதியாக இப்படி பல்வேறு காரணங்கள், பிரச்னைகளால்தான் மாதவிடாய் விலக்கிற்குப் பின் பெண்களால் உறவில் திருப்தியாகவோ அல்லது முற்றிலுமாகவோ ஈடுபட முடியாமல் போகிறது என்று விவரிக்கிறது இந்த ஆய்வு.
ஆனால், வயதாகும் பட்சத்தில் பெண்களுக்கு உறவில் ஈடுபாடு குறைவதாக தெரிவிக்கின்றது சமீபத்திய ஆய்வு ஓன்று. மாதவிடாய் என்பது பெண்களுக்கு மாதம் மாதம் வரக்கூடிய பிரச்சனைகளில் ஓன்று. பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும்போது உடளவிலும், மனதளவிலும் பெண்கள் பெரும் துயரத்தை அனுபவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வில் மாதவிலக்கு அடைந்த 4,500 பெண்களுடன் உரையாடல் நடத்தியபோது இறுதியாக நீங்கள் எப்போது உறவில் ஈடுபட்டிர்கள் என்ற கேள்விக்கு பலரும் ஞபாகமே இல்லை என பதில் கூறியுள்ளனர். ஏன் என்ற கேள்விக்கு அவர்கள் கூறிய பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாதவிலக்கு நின்ற பிறகு உறவில் திருப்தியுடன் ஈடுபட முடியவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். அப்படி ஈடுபட்டாலும் பெண்களின் வெஜினா வறண்டுபோவதால் அதிக வலியை ஏற்படுத்துகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.
இறுதியாக இப்படி பல்வேறு காரணங்கள், பிரச்னைகளால்தான் மாதவிடாய் விலக்கிற்குப் பின் பெண்களால் உறவில் திருப்தியாகவோ அல்லது முற்றிலுமாகவோ ஈடுபட முடியாமல் போகிறது என்று விவரிக்கிறது இந்த ஆய்வு.
பெண்களுக்கு கருப்பையில் கரு தங்கி வளர ஆரம்பித்ததுமே மசக்கை தொடங்கிவிடும். இதற்கான காரணத்தையும், அறிகுறிகளையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
கர்ப்பமாக இருக்கிறோம் எனும் உணர்வு பெண்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்க கூடிய ஒன்று. ஆனால், அவர்கள் உடலில் பல மாற்றங்களும் ஏற்பட துவங்கும். புத்தம் புதிதாக ஒரு உயிர் உருவாகும் போது, இதுபோன்ற அறிகுறிகள் இல்லாவிட்டால் சுவாரஸ்யம் இருக்காது. இந்தக் காலகட்டத்தில் சில ஹார்மோன்கள் சுரக்கும் மற்றும் இந்த ஹார்மோன்கள் சமநிலையில் இருக்காது. இந்தப் புது மாற்றங்களுக்கு உடல் பழக்கப்படும் வரை வாந்தி மயக்கம் போன்றவை ஏற்படும். இதை தான் பெரியவர்கள் மசக்கை என்பார்கள். இங்கு மசக்கை ஏற்படுவதற்கான காரணத்தை பார்க்கலாம்.
கருப்பையில் கரு தங்கி வளர ஆரம்பித்ததுமே மசக்கை தொடங்கிவிடும். பெரும்பாலும் முதல் மூன்று மாதங்களில் தான் இது அதிகமாக இருக்கும். எதையும் சாப்பிடப் பிடிக்காது. காபி, டீ, ரசம் போன்றவை சுவையற்றதாக தோன்றும். அதுவரை சுவைத்த விருப்ப உணவுகளும், பல வாசனைகளும் இந்த சமயத்தில் வயிற்றைப் புரட்ட வைக்கும். ஏதாவது வாசனை வந்தால் கூட, வாந்தி ஏற்படும்.
அதற்காக எதையும் சாப்பிடாமல் தவிர்க்க கூடாது. அடிக்கடி பழச்சாறுகளை குடிக்க வேண்டும். எந்த வகை உணவுகளை சாப்பிட பிடிக்கிறதோ, அவற்றை கொஞ்சம் கொஞ்சமாகவாவது அடிக்கடி சாப்பிடவேண்டும்.
இந்தச் சமயத்தில் புளிப்புச் சுவையுள்ளவற்றை சாப்பிட நாக்கு ஏங்கும். அதனால்தான் மசக்கை காலங்களில் மாங்காய், புளியங்காய் போன்றவற்றைக் கூசாமல் சாப்பிடுகின்றனர். அதில் தவறில்லை. புளிப்புச் சுவை குமட்டலை தடுக்கும் என்பதால் ஒரு வகையில் அது மருந்தாகவும் பயன்படுகிறது. ஆனால், புளிப்பு சுவையுடைய உணவை சாப்பிடுவது அனைத்து கர்ப்பிணிகளுக்கும் பொருந்தாது. அது ஒருவருக்கு மற்றொருவர் வேறுபாடும்.
மருத்துவர்களின் ஆலோசனையோடு, வாந்தியைக் கட்டுப்படுத்த உள்ள மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளலாம். என்ன செய்தாலும், ஒரு துளி உணவு உள்ளே போனதும் உடனே வாந்தியாக வெளியே வந்தால், மருத்துவமனையில் சேர்த்து ட்ரிப்ஸ் ஏற்றுவதைத் தவிர வேறு வழியே இல்லை.
இந்த காலகட்டத்தில் அதிக காய்ச்சல், சிறுநீர்த் தொற்று போன்ற தொந்தரவு, இரத்தப்போக்கு இருந்தால் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். சாதாரண மயக்கம் மற்றும் வாந்தி தான் மசக்கை எனப்படுகிறது. அடிக்கடி தலைசுற்றல், எழுந்துகொள்ள முடியாத அளவுக்கு மயக்கம் போன்றவை ஏற்பட்டால், அலட்சியம் செய்யக் கூடாது. கருப்பைக்கு பதில், கருக்குழாயில் கரு வளர்ந்தால் இது போல ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் நேர்மாறாக, மசக்கைக்கான எந்த அறிகுறியும் இல்லாத கர்ப்பிணிகளும் நிறைய பேர் உள்ளனர்.
கருவில் குழந்தையின் முடி அதிகமாக இருந்தால் வாந்தி ஏற்படும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். கர்ப்ப காலம் பற்றி சொல்லப்படும் எத்தனையோ பொய்களில் இதுவும் ஒன்று. வாந்தி பற்றி நினைக்காமல், குழந்தையின் முடி அழகு குறித்த கற்பனையில் தாயின் கவனம் திசைதிரும்பும் என்பதற்காக சொல்லப் பட்டதே. ஆனால், குழந்தையின் முடிக்கும் தாயின் வாந்திக்கும் எந்த தொடர்பும் இல்லை. வாந்தி, மயக்கம், தலை சுற்றல் வழக்கமானது தான் என்றாலும், அதிகபட்ச வாந்தி என்றால் கருவில் இருப்பது இரட்டைக் குழந்தைகளாகவும் இருக்கலாம்.
கருப்பையில் கரு தங்கி வளர ஆரம்பித்ததுமே மசக்கை தொடங்கிவிடும். பெரும்பாலும் முதல் மூன்று மாதங்களில் தான் இது அதிகமாக இருக்கும். எதையும் சாப்பிடப் பிடிக்காது. காபி, டீ, ரசம் போன்றவை சுவையற்றதாக தோன்றும். அதுவரை சுவைத்த விருப்ப உணவுகளும், பல வாசனைகளும் இந்த சமயத்தில் வயிற்றைப் புரட்ட வைக்கும். ஏதாவது வாசனை வந்தால் கூட, வாந்தி ஏற்படும்.
அதற்காக எதையும் சாப்பிடாமல் தவிர்க்க கூடாது. அடிக்கடி பழச்சாறுகளை குடிக்க வேண்டும். எந்த வகை உணவுகளை சாப்பிட பிடிக்கிறதோ, அவற்றை கொஞ்சம் கொஞ்சமாகவாவது அடிக்கடி சாப்பிடவேண்டும்.
இந்தச் சமயத்தில் புளிப்புச் சுவையுள்ளவற்றை சாப்பிட நாக்கு ஏங்கும். அதனால்தான் மசக்கை காலங்களில் மாங்காய், புளியங்காய் போன்றவற்றைக் கூசாமல் சாப்பிடுகின்றனர். அதில் தவறில்லை. புளிப்புச் சுவை குமட்டலை தடுக்கும் என்பதால் ஒரு வகையில் அது மருந்தாகவும் பயன்படுகிறது. ஆனால், புளிப்பு சுவையுடைய உணவை சாப்பிடுவது அனைத்து கர்ப்பிணிகளுக்கும் பொருந்தாது. அது ஒருவருக்கு மற்றொருவர் வேறுபாடும்.
மருத்துவர்களின் ஆலோசனையோடு, வாந்தியைக் கட்டுப்படுத்த உள்ள மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளலாம். என்ன செய்தாலும், ஒரு துளி உணவு உள்ளே போனதும் உடனே வாந்தியாக வெளியே வந்தால், மருத்துவமனையில் சேர்த்து ட்ரிப்ஸ் ஏற்றுவதைத் தவிர வேறு வழியே இல்லை.
இந்த காலகட்டத்தில் அதிக காய்ச்சல், சிறுநீர்த் தொற்று போன்ற தொந்தரவு, இரத்தப்போக்கு இருந்தால் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். சாதாரண மயக்கம் மற்றும் வாந்தி தான் மசக்கை எனப்படுகிறது. அடிக்கடி தலைசுற்றல், எழுந்துகொள்ள முடியாத அளவுக்கு மயக்கம் போன்றவை ஏற்பட்டால், அலட்சியம் செய்யக் கூடாது. கருப்பைக்கு பதில், கருக்குழாயில் கரு வளர்ந்தால் இது போல ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் நேர்மாறாக, மசக்கைக்கான எந்த அறிகுறியும் இல்லாத கர்ப்பிணிகளும் நிறைய பேர் உள்ளனர்.
கருவில் குழந்தையின் முடி அதிகமாக இருந்தால் வாந்தி ஏற்படும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். கர்ப்ப காலம் பற்றி சொல்லப்படும் எத்தனையோ பொய்களில் இதுவும் ஒன்று. வாந்தி பற்றி நினைக்காமல், குழந்தையின் முடி அழகு குறித்த கற்பனையில் தாயின் கவனம் திசைதிரும்பும் என்பதற்காக சொல்லப் பட்டதே. ஆனால், குழந்தையின் முடிக்கும் தாயின் வாந்திக்கும் எந்த தொடர்பும் இல்லை. வாந்தி, மயக்கம், தலை சுற்றல் வழக்கமானது தான் என்றாலும், அதிகபட்ச வாந்தி என்றால் கருவில் இருப்பது இரட்டைக் குழந்தைகளாகவும் இருக்கலாம்.
புகை பிடிக்காத பெண்களை விட புகை பிடிக்கும் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு 3 மடங்கு வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது.
சர்க்கரை நோய் அல்லது ரத்த அழுத்தமுள்ள பெண்கள் புகை பிடித்தால், அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு ஆண்களைவிட அதிகம் உள்ளதாக இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. ஆண்களுக்கு அளிக்கப்படும் அதே சிகிச்சையும், புகைப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான ஆதரவும் பெண்களுக்கு வழக்கப்பட வேண்டுமென்று அந்த ஆராய்ச்சி முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் இங்கிலாந்தை சேர்ந்த 5 லட்சம் பேரின் ‘பயோ பேங்க்’ தரவுகள் பயன்படுத்தப்பட்டன. ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 7 வருட காலத்தில் 5,081 பேருக்கு முதல் முறையாக மாரடைப்பு ஏற்பட்டது. அதில் மூன்றில் ஒருவர் பெண்ணாக இருந்தார். அனைத்து வயது ஆண்களுக்கும் ஏற்படுவதைவிட பெண்களுக்கு குறைந்தளவே மாரடைப்பு ஏற்பட்டாலும், சில ஆபத்து காரணிகள் பெண்களில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்துவது தெரியவந்துள்ளது.
புகை பிடிக்காத பெண்களை விட புகை பிடிக்கும் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு 3 மடங்கு வாய்ப்பிருப்பதாக இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால், ஆண்களில் 2 மடங்கு மட்டுமே ஆபத்தை கூட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் ரத்த அழுத்தம் கொண்ட பெண்களுக்கு ஆண்களை விட 83 சதவீதம் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

மேலும், முதல், இரண்டாம் வகை சர்க்கரை நோயுடைய ஆண்களை விட பெண்களுக்கே அதிக அளவு பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் இந்த ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. பாலினம் சார்ந்து இந்த பாதிப்புகள் எப்படி மாறுபடுகின்றன என்பது குறித்து தங்களுக்கு இதுவரை தெரியவில்லை என்றும், ஆனால் உயிரியல் காரணிகள் முக்கிய காரணமாக இருப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
உதாரணமாக, மோசமான உணவு முறை, வாழ்க்கைப்போக்கின் காரணமாக ஏற்படும் 2-ம் வகை சர்க்கரை நோய் கொண்ட பெண்களுக்கு ஆண்களை விட இதயம் சம்பந்தமான பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. தங்களுக்கு இதயம் சம்பந்தமான பிரச்சினை ஏற்பட்டுள்ளதை பெரும்பாலான பெண்கள் உணருவதில்லை என்றும், அறிந்தவர்கள் சரியான மருத்துவ சிகிச்சையை பெறுவதில்லை எனவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
பெண்களை விட ஆண்களுக்கே அதிக அளவு மாரடைப்பு ஏற்பட்டாலும், இங்கிலாந்தில் பெண்கள் அதிக அளவு உயிரிழப்பதற்கு இதய நோயே காரணமாக உள்ளதென்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்காக பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டாலும், பெரும்பாலான பெண்களுக்கு ஆபத்தின் வீரியம் புரியவில்லை என்றும் ஆராய்ச்சி குழுவினர் கூறுகிறார்கள்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் இங்கிலாந்தை சேர்ந்த 5 லட்சம் பேரின் ‘பயோ பேங்க்’ தரவுகள் பயன்படுத்தப்பட்டன. ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 7 வருட காலத்தில் 5,081 பேருக்கு முதல் முறையாக மாரடைப்பு ஏற்பட்டது. அதில் மூன்றில் ஒருவர் பெண்ணாக இருந்தார். அனைத்து வயது ஆண்களுக்கும் ஏற்படுவதைவிட பெண்களுக்கு குறைந்தளவே மாரடைப்பு ஏற்பட்டாலும், சில ஆபத்து காரணிகள் பெண்களில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்துவது தெரியவந்துள்ளது.
புகை பிடிக்காத பெண்களை விட புகை பிடிக்கும் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு 3 மடங்கு வாய்ப்பிருப்பதாக இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால், ஆண்களில் 2 மடங்கு மட்டுமே ஆபத்தை கூட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் ரத்த அழுத்தம் கொண்ட பெண்களுக்கு ஆண்களை விட 83 சதவீதம் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

மேலும், முதல், இரண்டாம் வகை சர்க்கரை நோயுடைய ஆண்களை விட பெண்களுக்கே அதிக அளவு பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் இந்த ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. பாலினம் சார்ந்து இந்த பாதிப்புகள் எப்படி மாறுபடுகின்றன என்பது குறித்து தங்களுக்கு இதுவரை தெரியவில்லை என்றும், ஆனால் உயிரியல் காரணிகள் முக்கிய காரணமாக இருப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
உதாரணமாக, மோசமான உணவு முறை, வாழ்க்கைப்போக்கின் காரணமாக ஏற்படும் 2-ம் வகை சர்க்கரை நோய் கொண்ட பெண்களுக்கு ஆண்களை விட இதயம் சம்பந்தமான பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. தங்களுக்கு இதயம் சம்பந்தமான பிரச்சினை ஏற்பட்டுள்ளதை பெரும்பாலான பெண்கள் உணருவதில்லை என்றும், அறிந்தவர்கள் சரியான மருத்துவ சிகிச்சையை பெறுவதில்லை எனவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
பெண்களை விட ஆண்களுக்கே அதிக அளவு மாரடைப்பு ஏற்பட்டாலும், இங்கிலாந்தில் பெண்கள் அதிக அளவு உயிரிழப்பதற்கு இதய நோயே காரணமாக உள்ளதென்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்காக பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டாலும், பெரும்பாலான பெண்களுக்கு ஆபத்தின் வீரியம் புரியவில்லை என்றும் ஆராய்ச்சி குழுவினர் கூறுகிறார்கள்.
கர்ப்ப கால கட்டமான 9 மாதங்களிலும் ஒவ்வொரு நாளும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் ஏற்படும். அவை குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் கிட்டதட்ட 9 மாதங்களுக்கு மாற்றும் வல்லமை கொண்டது பெண்களின் கர்ப்ப காலம். தலைமுதல் கால்வரை உடலின் ஒட்டுமொத்த இயக்கமும் மொத்தமாக புரட்டிப் போடப்படும் பருவம் இது. எனினும், ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அற்புதமான நாட்கள் இவை என்பது முக்கியமானது.
கர்ப்ப காலத்தில் வெள்ளைப்படுதல் பிரச்சினை சாதாரணமானது. எனினும், வெள்ளைப்படுதல் பிரச்சினையால் புண், அரிப்பு போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது.
கர்ப்ப காலத்தின் தொடக்கமான முதல் மாதத்திலிருந்து பிரசவத்திற்கு பிறகு கிட்டதட்ட 6 மாதங்கள் வரையிலோ, அல்லது அதற்கு மேலோ கூட சில பெண்களுக்கு முதுகுவலி ஏற்படலாம். கர்ப்பமடையும்போது முதுகுத் தண்டுக்கு ஆதாரமாகவுள்ள தசைநார்கள் மிகவும் மிருதுவாக மாறுகின்றன. மேலும், கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரிப்பதும், கர்ப்பிணிகளின் ஈர்ப்பு விசையும் இடம் மாறுகின்றன. நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பது, நின்றுகொண்டே இருப்பது முதுகுவலியை மேலும் மோசமடையவைக்கும். எனவே கர்ப்பமடைந்த சிறிது நாட்களுக்கும், பிரசவத்திற்கு பிறகும் இந்த நிலைகளைத் தவிர்ப்பது நல்லது.
கர்ப்ப காலத்தில் அடிக்கடி மூச்சுத்திணறலும், சரியாக மூச்சு விட முடியாமலும் அதிக பெண்கள் உணர்வார்கள். எனினும், இது இயல்பான ஒன்றுதான். கர்ப்பையில் இருக்கும் குழந்தை கார்பன் டை ஆக்சைடை வெளியிட்டு பனிக்குடம் வழியாக அதை ரத்த ஓட்டம் வழியாக வெளியே கடத்துவதால்தான் இந்த மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.
குழந்தையால் ரத்தத்தில் கலக்கும் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்ற கர்ப்பமாக இருக்கும் பெண்களின் உடல் சிரமப்படுகிறது. மேலும், கர்ப்ப காலத்தின் நிறைவு பகுதியில் கருப்பையானது உதர விதானத்தை நுரையீரல் வரை மேல்நோக்கி தள்ளுவதால், நுரையீரல் விரிவடைவதற்கு போதுமான இடமின்றி போய்விடுகிறது. இதனால், குறிப்பிட்ட அளவு காற்றை கர்ப்பிணிகளால் சுவாசிக்க இயலாமல் போய் சுவாசத்தடை ஏற்படுகிறது. இக்காலகட்டத்தில் இருமல், சளி, மூச்சுத்திணறல், ஆஸ்துமா ஆகியவை இருந்தால் சரியான மருத்துவம் செய்து கொள்வது நல்லது.
பதினாறாவது வாரத்திலிருந்து கருப்பையின் அளவு அதிகரிப்பதால் வயிற்றின் சுற்றளவும் அதிகரிக்கும். குழந்தையின் வளர்ச்சிக்காக கருப்பை பெரிதாவதன் காரணமாக வயிற்றை அழுத்தும். அதனால், இரைப்பையில் உள்ள அமிலம் தொண்டைக்குழாயை நோக்கி வெளியில் தள்ளப்படும். இதனால், அஜீரணம், நெஞ்செரிச்சல், நெஞ்சு கரித்தல் போன்ற உணர்வுகள் அதிகளவில் தோன்றும். எனினும், இந்த அறிகுறிகள் அதிகமாகத் தோன்றினால் மஞ்சள் காமலைக்கான அறிகுறியா என்பதையும் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். ஒரே அடியாகச் சாப்பிடாமல் கொஞ்ச கொஞ்சமாக உணவைப் பிரித்து சாப்பிடுவது இந்த காலகட்டத்தில் நல்லது. சூடான பால் நெஞ்செரிச்சலுக்கு இதமளிக்கும்.
கர்ப்ப காலகட்டத்தில் தலைவலி ஏற்படுவது சகஜமான ஒன்று. காரணம், உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள். இதைத் தவிர்க்க காற்றோட்டமுள்ள சூழலில் இருக்க வேண்டியது அவசியம். நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கும் தலைவலி அதிகம் ஏற்படும். மருத்துவரின் ஆலோசனை மிகவும் அவசியம்.
கர்ப்ப காலத்தில் பல் ஈறுகள் மென்மையடையும். அதனால், கடினமான உணவுப்பொருட்களை உண்பது, பற்களை அழுத்தித் தேய்த்தல் போன்ற செயல்கள் பற்களைப் பாதித்து நோய்த்தொற்றினை உண்டாக்கலாம். அதனால், கர்ப்ப காலத்தில் பற்கள் பராமரிப்பு மிகவும் அவசியம். தினசரி இரண்டு முறை பல் துலக்க வேண்டும். பற்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு எக்ஸ்ரே, சிகிச்சை ஆகியவற்றை கர்பப் காலத்தில் மருத்துவர் ஆலோசனையின்றி மேற்கொள்ள வேண்டாம்.
கர்ப்ப காலத்தில் சிலருக்கு மூக்கிலிருந்து ரத்த கசிவு ஏற்படும். இது சாதாரணமான ஒன்றுதான். ஆனால், நீண்ட நேரத்திற்கு ரத்த கசிவு நீடித்தால் மருத்துவ பரிசோதனை அவசியம். மருத்துவரின் ஆலோசனையோடு காது, மூக்கு, தொண்டை நிபுணரை பார்ப்பது நல்லது.
கர்ப்ப காலத்தில் வெள்ளைப்படுதல் பிரச்சினை சாதாரணமானது. எனினும், வெள்ளைப்படுதல் பிரச்சினையால் புண், அரிப்பு போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது.
கர்ப்ப காலத்தின் தொடக்கமான முதல் மாதத்திலிருந்து பிரசவத்திற்கு பிறகு கிட்டதட்ட 6 மாதங்கள் வரையிலோ, அல்லது அதற்கு மேலோ கூட சில பெண்களுக்கு முதுகுவலி ஏற்படலாம். கர்ப்பமடையும்போது முதுகுத் தண்டுக்கு ஆதாரமாகவுள்ள தசைநார்கள் மிகவும் மிருதுவாக மாறுகின்றன. மேலும், கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரிப்பதும், கர்ப்பிணிகளின் ஈர்ப்பு விசையும் இடம் மாறுகின்றன. நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பது, நின்றுகொண்டே இருப்பது முதுகுவலியை மேலும் மோசமடையவைக்கும். எனவே கர்ப்பமடைந்த சிறிது நாட்களுக்கும், பிரசவத்திற்கு பிறகும் இந்த நிலைகளைத் தவிர்ப்பது நல்லது.
கர்ப்ப காலத்தில் அடிக்கடி மூச்சுத்திணறலும், சரியாக மூச்சு விட முடியாமலும் அதிக பெண்கள் உணர்வார்கள். எனினும், இது இயல்பான ஒன்றுதான். கர்ப்பையில் இருக்கும் குழந்தை கார்பன் டை ஆக்சைடை வெளியிட்டு பனிக்குடம் வழியாக அதை ரத்த ஓட்டம் வழியாக வெளியே கடத்துவதால்தான் இந்த மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.
குழந்தையால் ரத்தத்தில் கலக்கும் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்ற கர்ப்பமாக இருக்கும் பெண்களின் உடல் சிரமப்படுகிறது. மேலும், கர்ப்ப காலத்தின் நிறைவு பகுதியில் கருப்பையானது உதர விதானத்தை நுரையீரல் வரை மேல்நோக்கி தள்ளுவதால், நுரையீரல் விரிவடைவதற்கு போதுமான இடமின்றி போய்விடுகிறது. இதனால், குறிப்பிட்ட அளவு காற்றை கர்ப்பிணிகளால் சுவாசிக்க இயலாமல் போய் சுவாசத்தடை ஏற்படுகிறது. இக்காலகட்டத்தில் இருமல், சளி, மூச்சுத்திணறல், ஆஸ்துமா ஆகியவை இருந்தால் சரியான மருத்துவம் செய்து கொள்வது நல்லது.
பதினாறாவது வாரத்திலிருந்து கருப்பையின் அளவு அதிகரிப்பதால் வயிற்றின் சுற்றளவும் அதிகரிக்கும். குழந்தையின் வளர்ச்சிக்காக கருப்பை பெரிதாவதன் காரணமாக வயிற்றை அழுத்தும். அதனால், இரைப்பையில் உள்ள அமிலம் தொண்டைக்குழாயை நோக்கி வெளியில் தள்ளப்படும். இதனால், அஜீரணம், நெஞ்செரிச்சல், நெஞ்சு கரித்தல் போன்ற உணர்வுகள் அதிகளவில் தோன்றும். எனினும், இந்த அறிகுறிகள் அதிகமாகத் தோன்றினால் மஞ்சள் காமலைக்கான அறிகுறியா என்பதையும் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். ஒரே அடியாகச் சாப்பிடாமல் கொஞ்ச கொஞ்சமாக உணவைப் பிரித்து சாப்பிடுவது இந்த காலகட்டத்தில் நல்லது. சூடான பால் நெஞ்செரிச்சலுக்கு இதமளிக்கும்.
கர்ப்ப காலகட்டத்தில் தலைவலி ஏற்படுவது சகஜமான ஒன்று. காரணம், உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள். இதைத் தவிர்க்க காற்றோட்டமுள்ள சூழலில் இருக்க வேண்டியது அவசியம். நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கும் தலைவலி அதிகம் ஏற்படும். மருத்துவரின் ஆலோசனை மிகவும் அவசியம்.
கர்ப்ப காலத்தில் பல் ஈறுகள் மென்மையடையும். அதனால், கடினமான உணவுப்பொருட்களை உண்பது, பற்களை அழுத்தித் தேய்த்தல் போன்ற செயல்கள் பற்களைப் பாதித்து நோய்த்தொற்றினை உண்டாக்கலாம். அதனால், கர்ப்ப காலத்தில் பற்கள் பராமரிப்பு மிகவும் அவசியம். தினசரி இரண்டு முறை பல் துலக்க வேண்டும். பற்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு எக்ஸ்ரே, சிகிச்சை ஆகியவற்றை கர்பப் காலத்தில் மருத்துவர் ஆலோசனையின்றி மேற்கொள்ள வேண்டாம்.
கர்ப்ப காலத்தில் சிலருக்கு மூக்கிலிருந்து ரத்த கசிவு ஏற்படும். இது சாதாரணமான ஒன்றுதான். ஆனால், நீண்ட நேரத்திற்கு ரத்த கசிவு நீடித்தால் மருத்துவ பரிசோதனை அவசியம். மருத்துவரின் ஆலோசனையோடு காது, மூக்கு, தொண்டை நிபுணரை பார்ப்பது நல்லது.
சமூக சூழலும் பெண்கள் உடற்பயிற்சிகளை செய்வது மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதற்கு தடையாக இருக்கிறது.
கிராமங்களில் வசிக்கும் பெண்களைவிட நகர்ப்புற பெண்களுக்கு பணிச்சுமை சற்று குறைவாக இருப்பதற்கான சாத்தியங்களே அதிகம். நகரில் வசிக்கும் பெண்கள், வேலை அதிகமாக இருந்தால் பணியாளர்களை வைத்துக் கொள்கிறார்கள். நகரப் பெண்கள் செய்யும் வேலையில் முழு உடலும் இயங்குவதில்லை.
முழு உடலும் இயங்கி, இதய துடிப்பு அதிகரிக்காதபோது, அதை முழுமையான இயக்கமாக, சுறுசுறுப்பான செயலாக கருதமுடியாது. இது தொடர்பான உலக சுகாதார அமைப்பின் அண்மை ஆய்வறிக்கையிலும் மக்களின் சுறுசுறுப்பு, மந்தத்தன்மை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், ஆண்களைவிட பெண்களின் செயல்பாடு மந்தமாகவே இருக்கிறது. செல்வ வளம் கொண்ட நாடுகளைவிட, நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் வசிப்பவர்கள் அதிக செயல்திறன் கொண்டுள்ளதாகவும், சுறுசுறுப்பாக இருப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது. அதிகம் செயல்படாதவர்களுக்கு இதய சம்பந்தமான நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது.
நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது என்பதோடு, சில நேரங்களில் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியங்களும் அதிகமாவதாக இந்த அறிக்கை கூறுகிறது. அதுமட்டுமல்ல, குறைந்த அளவே செயல்படுபவர்களின் மூளையின் ஸ்திரத்தன்மையும் பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவில் 43 சதவீத பெண்களும், 23 சதவீத ஆண்களும் செயல்படுவது குறைவாக இருப்பதாக கூறும் அந்த அறிக்கை, உலகில் மந்தமாக செயல்படுபவர்கள் குவைத் நாட்டு மக்கள் என்றும், அதிக சுறுசுறுப்பாக செயல்படுபவர்கள் உகாண்டா நாட்டு மக்கள் என்றும் கூறுகிறது. உடல் செயல்பாடு என்பது உடலால் செய்யப்படும் அனைத்து செயலுமே என்று சொன்னாலும், சுறுசுறுப்பான செயல் என்பது, முழு உடலையும் இயக்குவதாக இருக்க வேண்டும். உதாரணமாக, வேகமான நடைபயிற்சி, ஏரோபிக்ஸ், சைக்கிள் ஓட்டுவது டென்னிஸ் விளையாடுவது, நீச்சல் போன்றவற்றில் முழு உடலும் செயல்படுகிறது என்று கூறலாம்.
வயதுவந்த ஒருவர், வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்தால், உடல் சரியாக செயல்பாட்டில் இருக்கிறது என்று சொல்லலாம். ஏரோபிக்ஸ் பயிற்சிகள் செய்வதால் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது, சுவாசம் வேகமாகிறது, உடல் சூடாகிறது, உடல் சுறுசுறுப்பாக இயங்கும்போது, இவை மூன்றும் நடைபெறும். ஷாப்பிங் செல்வது, சமையல் செய்வது அல்லது மேலே கூறிய மூன்றும் ஒன்றிணையாத வேலைகளை எத்தனை மணி நேரம் செய்தாலும் அது உடல் செயல்பாட்டிற்கான பலன்களை கொடுத்துவிடாது. முழு உடலும் செயல்படும்போதுதான், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, ஆண்களைவிட பெண்கள் சற்று மந்தமாகவே செயல்படுகிறார்கள். இதற்கு பல காரணங்கள் இருப்பதாக ஆய்விற்கு உட்படுத்தப்பட்டவர்கள் கருதுகிறார்கள். உதாரணமாக, பொதுவாக வீடுகளில் குழந்தைகளை கவனித்துக்கொள்வது தாயின் பொறுப்பு. இவற்றுக்கான வேலைகளில் உடலின் இயக்கம் குறைவு. வெளி வேலைகளை செய்வது ஆணின் பொறுப்பாக கருதப்படுகிறது, இதில் உடல் இயக்கம் அதிகமாக தேவைப்படுகிறது. இதைத்தவிர, சமூக சூழலும் பெண்கள் உடற்பயிற்சிகளை செய்வது மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதற்கு தடையாக இருக்கிறது. எனவே ஆண்களை விட பெண்கள் சற்று மந்தமாகவே இருக்கிறார்கள்.
முழு உடலும் இயங்கி, இதய துடிப்பு அதிகரிக்காதபோது, அதை முழுமையான இயக்கமாக, சுறுசுறுப்பான செயலாக கருதமுடியாது. இது தொடர்பான உலக சுகாதார அமைப்பின் அண்மை ஆய்வறிக்கையிலும் மக்களின் சுறுசுறுப்பு, மந்தத்தன்மை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், ஆண்களைவிட பெண்களின் செயல்பாடு மந்தமாகவே இருக்கிறது. செல்வ வளம் கொண்ட நாடுகளைவிட, நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் வசிப்பவர்கள் அதிக செயல்திறன் கொண்டுள்ளதாகவும், சுறுசுறுப்பாக இருப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது. அதிகம் செயல்படாதவர்களுக்கு இதய சம்பந்தமான நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது.
நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது என்பதோடு, சில நேரங்களில் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியங்களும் அதிகமாவதாக இந்த அறிக்கை கூறுகிறது. அதுமட்டுமல்ல, குறைந்த அளவே செயல்படுபவர்களின் மூளையின் ஸ்திரத்தன்மையும் பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவில் 43 சதவீத பெண்களும், 23 சதவீத ஆண்களும் செயல்படுவது குறைவாக இருப்பதாக கூறும் அந்த அறிக்கை, உலகில் மந்தமாக செயல்படுபவர்கள் குவைத் நாட்டு மக்கள் என்றும், அதிக சுறுசுறுப்பாக செயல்படுபவர்கள் உகாண்டா நாட்டு மக்கள் என்றும் கூறுகிறது. உடல் செயல்பாடு என்பது உடலால் செய்யப்படும் அனைத்து செயலுமே என்று சொன்னாலும், சுறுசுறுப்பான செயல் என்பது, முழு உடலையும் இயக்குவதாக இருக்க வேண்டும். உதாரணமாக, வேகமான நடைபயிற்சி, ஏரோபிக்ஸ், சைக்கிள் ஓட்டுவது டென்னிஸ் விளையாடுவது, நீச்சல் போன்றவற்றில் முழு உடலும் செயல்படுகிறது என்று கூறலாம்.
வயதுவந்த ஒருவர், வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்தால், உடல் சரியாக செயல்பாட்டில் இருக்கிறது என்று சொல்லலாம். ஏரோபிக்ஸ் பயிற்சிகள் செய்வதால் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது, சுவாசம் வேகமாகிறது, உடல் சூடாகிறது, உடல் சுறுசுறுப்பாக இயங்கும்போது, இவை மூன்றும் நடைபெறும். ஷாப்பிங் செல்வது, சமையல் செய்வது அல்லது மேலே கூறிய மூன்றும் ஒன்றிணையாத வேலைகளை எத்தனை மணி நேரம் செய்தாலும் அது உடல் செயல்பாட்டிற்கான பலன்களை கொடுத்துவிடாது. முழு உடலும் செயல்படும்போதுதான், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, ஆண்களைவிட பெண்கள் சற்று மந்தமாகவே செயல்படுகிறார்கள். இதற்கு பல காரணங்கள் இருப்பதாக ஆய்விற்கு உட்படுத்தப்பட்டவர்கள் கருதுகிறார்கள். உதாரணமாக, பொதுவாக வீடுகளில் குழந்தைகளை கவனித்துக்கொள்வது தாயின் பொறுப்பு. இவற்றுக்கான வேலைகளில் உடலின் இயக்கம் குறைவு. வெளி வேலைகளை செய்வது ஆணின் பொறுப்பாக கருதப்படுகிறது, இதில் உடல் இயக்கம் அதிகமாக தேவைப்படுகிறது. இதைத்தவிர, சமூக சூழலும் பெண்கள் உடற்பயிற்சிகளை செய்வது மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதற்கு தடையாக இருக்கிறது. எனவே ஆண்களை விட பெண்கள் சற்று மந்தமாகவே இருக்கிறார்கள்.
கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு போதிய ஊட்டச்சத்தும், போதிய ஓய்வும் அவசியம். கர்ப்பிணிகள் தூங்க செல்லும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு போதிய ஊட்டச்சத்தும், போதிய ஓய்வும் அவசியம். கர்ப்பகாலத்தில் பெண்கள் குறைந்தது 8 மணி நேரமாவது உறங்க வேண்டும். இது கருவிலிருக்கும் குழந்தைக்கு அவசியமானது. சாதாரணமாக ஒருவர் உறங்கும் போது, இடது புறமாக படுத்து உறங்குவது சிறந்தது என்பார்கள். கர்ப்பகாலத்தில் உறங்கும் நிலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இங்கு கர்ப்பிணிகள் தூங்க செல்லும் போது செய்ய வேண்டியவற்றை பார்க்கலாம்.
புரண்டு படுத்தால் குழந்தை கொடி சுற்றிப் பிறக்கும் எனக் கூறப்படுவது உண்மையல்ல. இருப்பினும் எழுந்து உட்கார்ந்து பிறகு மெதுவாக படுக்க வேண்டும். எதாவது ஒரு கை புறமாக படுப்பதே நல்ல படுக்கை முறை. அதிலும் இடது கைப்புறமாக படுப்பது மிகவும் சிறந்தது. மல்லாந்து படுக்கும் போது கருப்பை இரத்தக் குழாய்களை அழுத்துவதால் மூச்சுத்திணறல், இரத்த ஓட்டக்குறை போன்றவை உண்டாகலாம். கர்ப்பிணிகள் எக்காரணத்தை கொண்டும் குப்புற படுக்க கூடாது. இரவு நேரத்தில் எளிதில் உறக்கம் வராது எனவே சிறிது தூரம் மெதுவாக நடந்துவிட்டு வந்து உறங்கலாம். அசதியில் உறக்கம் வரும்.
இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பாக வெது வெதுப்பான நீரில் குளித்து விட்டு உறங்கச் செல்வது நன்மை தரும். எந்த காரணம் கொண்டும் குப்புற படுத்து உறங்கக் கூடாது. ஏனெனில் அது கருப்பையை அழுத்துவதோடு குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். உறங்கும் முன் தலைக்கு அருகில் செல்போன் வைத்துக்கொண்டு உறங்குவதை தவிர்க்கவேண்டும். அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
தலையணையை வசதியான வகையில் வைத்து உறங்குவது நல்லது. கால்களுக்கும் வைத்து உறங்குவதன் மூலம் கால் வீக்கம் வலி ஏற்படுவதை தவிர்க்கலாம். கடைகளில் கிடைக்கும் சிறிய அளவிலான கர்ப்பகால தலையணைகளை வாங்கி உபயோகிக்கலாம். இரவு நேரங்களில் அதிக இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கவேண்டும். ஏனெனில் மார்ப்பக வளர்ச்சி, இடுப்பு பகுதிகள் விரிவடையும். அப்பொழுது ஏற்படும் சிரமத்தை தவிர்க்க இறுக்கமான ஆடைகளை தவிர்க்க வேண்டும்.
பெரும்பாலான கர்ப்பிணிகள் நெஞ்செரிச்சல், செரிமான கோளாறுகளினால் சிரமப்படுவார்கள். இவர்கள் உண்ட உடன் உறங்கச் செல்லக்கூடாது. இதுவே நெஞ்செரிச்சல் ஏற்பட காரணமாகிறது. எனவே எளிதில் ஜீரணமாகும் உணவுகளை மட்டுமே உண்ணவேண்டும். படுக்கும் முன் வெது வெதுப்பாக பால் குடித்தால் உறக்கம் வரும். அதே சமயம் குளிர்பானங்கள், காபி போன்றவைகளை இரவு நேரங்களில் குடிப்பதை தவிர்க்கவேண்டும். கர்ப்பிணிகள் குறிப்பாக மன அழுத்தத்தினால் பாதிக்கப்படாமல் இருக்க யோகா, மனதிற்கு இதம் தரும் பாடல்கள் போன்றவற்றை கேட்கலாம். அப்பொழுதுதான் ஆழ்ந்த உறக்கம் வரும் கரு வளர்ச்சியும் சீராக இருக்கும்.
புரண்டு படுத்தால் குழந்தை கொடி சுற்றிப் பிறக்கும் எனக் கூறப்படுவது உண்மையல்ல. இருப்பினும் எழுந்து உட்கார்ந்து பிறகு மெதுவாக படுக்க வேண்டும். எதாவது ஒரு கை புறமாக படுப்பதே நல்ல படுக்கை முறை. அதிலும் இடது கைப்புறமாக படுப்பது மிகவும் சிறந்தது. மல்லாந்து படுக்கும் போது கருப்பை இரத்தக் குழாய்களை அழுத்துவதால் மூச்சுத்திணறல், இரத்த ஓட்டக்குறை போன்றவை உண்டாகலாம். கர்ப்பிணிகள் எக்காரணத்தை கொண்டும் குப்புற படுக்க கூடாது. இரவு நேரத்தில் எளிதில் உறக்கம் வராது எனவே சிறிது தூரம் மெதுவாக நடந்துவிட்டு வந்து உறங்கலாம். அசதியில் உறக்கம் வரும்.
இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பாக வெது வெதுப்பான நீரில் குளித்து விட்டு உறங்கச் செல்வது நன்மை தரும். எந்த காரணம் கொண்டும் குப்புற படுத்து உறங்கக் கூடாது. ஏனெனில் அது கருப்பையை அழுத்துவதோடு குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். உறங்கும் முன் தலைக்கு அருகில் செல்போன் வைத்துக்கொண்டு உறங்குவதை தவிர்க்கவேண்டும். அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
தலையணையை வசதியான வகையில் வைத்து உறங்குவது நல்லது. கால்களுக்கும் வைத்து உறங்குவதன் மூலம் கால் வீக்கம் வலி ஏற்படுவதை தவிர்க்கலாம். கடைகளில் கிடைக்கும் சிறிய அளவிலான கர்ப்பகால தலையணைகளை வாங்கி உபயோகிக்கலாம். இரவு நேரங்களில் அதிக இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கவேண்டும். ஏனெனில் மார்ப்பக வளர்ச்சி, இடுப்பு பகுதிகள் விரிவடையும். அப்பொழுது ஏற்படும் சிரமத்தை தவிர்க்க இறுக்கமான ஆடைகளை தவிர்க்க வேண்டும்.
பெரும்பாலான கர்ப்பிணிகள் நெஞ்செரிச்சல், செரிமான கோளாறுகளினால் சிரமப்படுவார்கள். இவர்கள் உண்ட உடன் உறங்கச் செல்லக்கூடாது. இதுவே நெஞ்செரிச்சல் ஏற்பட காரணமாகிறது. எனவே எளிதில் ஜீரணமாகும் உணவுகளை மட்டுமே உண்ணவேண்டும். படுக்கும் முன் வெது வெதுப்பாக பால் குடித்தால் உறக்கம் வரும். அதே சமயம் குளிர்பானங்கள், காபி போன்றவைகளை இரவு நேரங்களில் குடிப்பதை தவிர்க்கவேண்டும். கர்ப்பிணிகள் குறிப்பாக மன அழுத்தத்தினால் பாதிக்கப்படாமல் இருக்க யோகா, மனதிற்கு இதம் தரும் பாடல்கள் போன்றவற்றை கேட்கலாம். அப்பொழுதுதான் ஆழ்ந்த உறக்கம் வரும் கரு வளர்ச்சியும் சீராக இருக்கும்.
அம்மாக்கள் சாப்பிடும் அனைத்து உணவுகளுமே பாலூட்டுவதால் குழந்தைகளின் ஆரோக்கியத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் காபி அதிகமாக குடிப்பது பொதுவாக ஆரோக்கியத்திற்கு கெடுதல் என்று கூறுவார்கள்.
குழந்தை பிறந்து அவர்களுக்கு பாலூட்டும் காலம் முடியும்வரை அம்மாக்கள் அவர்களின் உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். ஏனெனில் அம்மாக்கள் சாப்பிடும் அனைத்து உணவுகளுமே பாலூட்டுவதால் குழந்தைகளின் ஆரோக்கியத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் காபி அதிகமாக குடிப்பது பொதுவாக ஆரோக்கியத்திற்கு கெடுதல் என்று கூறுவார்கள்.

காஃபினுடைய பக்கவிளைவுகளால் பாலூட்டும் போது காபி குடிக்கலாமா? வேண்டாமா? என்று பெண்கள் பயப்பட தேவையில்லை. ஏனெனில் பாலூட்டும் காலத்தில் காபி குடிப்பது அம்மாக்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பானதுதான். மிதமான அளவில் நீங்கள் குடிக்கும் காபியில் இருக்கும் காஃபைன் தாய்ப்பால் வழியாக குழந்தைக்கு செல்லும்போது அது அவர்கள் மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
மகப்பேறு மருத்துவர்களின் கருத்துப்படி பாலூட்டும் தாய்மார்கள் ஒரு நாளைக்கு 300 மிகி அளவிற்கு காஃபைன் எடுத்துக்கொள்ளலாம். அதாவது ஒரு நாளைக்கு இரண்டு கப் காபி எடுத்துக்கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு மேலும் குடிக்க வேண்டுமென்று ஆசை இருந்தால் காஃபைன் குறைவாக இருக்கும் வேறு பானங்களை குடிப்பது நல்லது.
கர்ப்ப காலத்தில் காபி குடிப்பதை குறைக்கவோ அல்லது முற்றிலுமாக நிறுத்தி விடவோ பெண்கள் அறிவுறுத்தப்படுவார்கள். ஏனெனில் காபியில் இருக்கும் காஃபைன் தொப்புள்கொடியை கடந்து கருவில் இருக்கும் குழந்தை மீது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்தான். அதனால் பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் காபி பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது.

காஃபினுடைய பக்கவிளைவுகளால் பாலூட்டும் போது காபி குடிக்கலாமா? வேண்டாமா? என்று பெண்கள் பயப்பட தேவையில்லை. ஏனெனில் பாலூட்டும் காலத்தில் காபி குடிப்பது அம்மாக்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பானதுதான். மிதமான அளவில் நீங்கள் குடிக்கும் காபியில் இருக்கும் காஃபைன் தாய்ப்பால் வழியாக குழந்தைக்கு செல்லும்போது அது அவர்கள் மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
மகப்பேறு மருத்துவர்களின் கருத்துப்படி பாலூட்டும் தாய்மார்கள் ஒரு நாளைக்கு 300 மிகி அளவிற்கு காஃபைன் எடுத்துக்கொள்ளலாம். அதாவது ஒரு நாளைக்கு இரண்டு கப் காபி எடுத்துக்கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு மேலும் குடிக்க வேண்டுமென்று ஆசை இருந்தால் காஃபைன் குறைவாக இருக்கும் வேறு பானங்களை குடிப்பது நல்லது.
மெனோபாஸ் வயது என்பது 50 தான். அந்த வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வருகிறது என்பதால், சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலில் இன்னும் ஹார்மோன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
மெனோபாஸ் வயது என்பது 50 தான். அந்த வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வருகிறது என்பதால், சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலில் இன்னும் ஹார்மோன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அதனால், இதை நினைத்துப் பயந்துவிட வேண்டாம். அதேநேரம், உடனடியாக ஒரு மகப்பேறு மருத்துவரை கன்சல்ட் செய்துவிடுவது நல்லது."
50-களிலும் மாதவிடாய் இருந்தால் கண்டிப்பாக கருப்பை ஸ்கேன், மெமோகிராம், பாப்ஸ்மியர் ஆகிய பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும். 50 வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வந்தால் அதை நிறுத்த வேண்டும் என்கிற விதிகள் எதுவும் கிடையாது. அதனால், கை வைத்தியம் போன்ற வேறு ஏதேனும் முயற்சிகளை செய்யாமலிப்பது நல்லது.
மாதவிடாய் நேரத்தில் உடலில் நிகழ்கிற ஹார்மோன் மாற்றங்களால் தலைவலி, மயக்கம் போன்ற தொல்லைகள் வருவது இயல்பானதுதான். இது மாதவிடாய்க்கு முந்தைய நிலைமையான பெரி மெனோபாஸ் நேரத்திலும் வரும்.
ஒரு சிலருக்கு மாதவிடாய் நேரத்துத் தலைவலி வரும். அவர்கள் தாராளமாக மாத்திரை எடுக்கலாம், தப்பில்லை. ஆனால், ஒவ்வொரு மாதமும் இப்படி தலைவலி வந்து, மாத்திரை சாப்பிட்டும், தலைவலி சரியாகவில்லை என்றால் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற வேறு ஏதேனும் பிரச்னைகள் இருக்கின்றனவா என்று பரிசோதித்துப் பார்த்துக்கொள்ளுங்கள்.
பத்துப் பெண்களில் 2 அல்லது 3 பெண்களுக்கு இப்படி 50 வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வரலாம். முக்கால்வாசிப் பெண்களுக்கு 50-க்கு முன்னாடியே நின்றுவிடுகிறது. இது சம்பந்தப்பட்ட பெண்களின் உடல்வாகைப் பொறுத்தது.
அம்மாவுக்கு சீக்கிரம் மெனோபாஸ் வந்தால், மகளுக்கும் அதுபோலவே வரும் என்று சிலர் சொல்வார்கள். அப்படி கிடையவே கிடையாது. நிறைய பேர் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். 'அம்மாவுக்கு மெனோபாஸ் சீக்கிரம் வந்தால், நமக்கும் சீக்கிரம் வந்துவிடும் என்பதெல்லாம் மருத்துவரீதியாக உண்மை கிடையாது. இதெல்லாம் சம்பந்தப்பட்ட பெண்களின் உடல்நிலையைப் பொறுத்ததுதானே தவிர, மரபியல் சார்ந்தது கிடையாது.
இந்தக் காலத்தில் காலதாமதமான திருமணம் காரணமாக, நாற்பதுகளில் மட்டுமல்ல, ஐம்பதுகளிலும் பெண்கள் இளமையாகவே உணர்கிறார்கள். அது அவர்களுடைய நடை, உடை, பாவனை என அத்தனை விஷயங்களிலும் பிரதிபலிப்பதை நாமெல்லாரும் பார்த்தும் வருகிறோம். இது வெளிப்படையாகத் தெரிகிற விஷயம். இதில் மறைமுகமானது இளமையான மனநிலை. இதன் காரணமாக, சில பெண்களுடைய மெனோபாஸ் வயது தள்ளிப்போக ஆரம்பித்திருக்கிறது.
50-களிலும் மாதவிடாய் இருந்தால் கண்டிப்பாக கருப்பை ஸ்கேன், மெமோகிராம், பாப்ஸ்மியர் ஆகிய பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும். 50 வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வந்தால் அதை நிறுத்த வேண்டும் என்கிற விதிகள் எதுவும் கிடையாது. அதனால், கை வைத்தியம் போன்ற வேறு ஏதேனும் முயற்சிகளை செய்யாமலிப்பது நல்லது.
மாதவிடாய் நேரத்தில் உடலில் நிகழ்கிற ஹார்மோன் மாற்றங்களால் தலைவலி, மயக்கம் போன்ற தொல்லைகள் வருவது இயல்பானதுதான். இது மாதவிடாய்க்கு முந்தைய நிலைமையான பெரி மெனோபாஸ் நேரத்திலும் வரும்.
ஒரு சிலருக்கு மாதவிடாய் நேரத்துத் தலைவலி வரும். அவர்கள் தாராளமாக மாத்திரை எடுக்கலாம், தப்பில்லை. ஆனால், ஒவ்வொரு மாதமும் இப்படி தலைவலி வந்து, மாத்திரை சாப்பிட்டும், தலைவலி சரியாகவில்லை என்றால் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற வேறு ஏதேனும் பிரச்னைகள் இருக்கின்றனவா என்று பரிசோதித்துப் பார்த்துக்கொள்ளுங்கள்.
பத்துப் பெண்களில் 2 அல்லது 3 பெண்களுக்கு இப்படி 50 வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வரலாம். முக்கால்வாசிப் பெண்களுக்கு 50-க்கு முன்னாடியே நின்றுவிடுகிறது. இது சம்பந்தப்பட்ட பெண்களின் உடல்வாகைப் பொறுத்தது.
அம்மாவுக்கு சீக்கிரம் மெனோபாஸ் வந்தால், மகளுக்கும் அதுபோலவே வரும் என்று சிலர் சொல்வார்கள். அப்படி கிடையவே கிடையாது. நிறைய பேர் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். 'அம்மாவுக்கு மெனோபாஸ் சீக்கிரம் வந்தால், நமக்கும் சீக்கிரம் வந்துவிடும் என்பதெல்லாம் மருத்துவரீதியாக உண்மை கிடையாது. இதெல்லாம் சம்பந்தப்பட்ட பெண்களின் உடல்நிலையைப் பொறுத்ததுதானே தவிர, மரபியல் சார்ந்தது கிடையாது.
இந்தக் காலத்தில் காலதாமதமான திருமணம் காரணமாக, நாற்பதுகளில் மட்டுமல்ல, ஐம்பதுகளிலும் பெண்கள் இளமையாகவே உணர்கிறார்கள். அது அவர்களுடைய நடை, உடை, பாவனை என அத்தனை விஷயங்களிலும் பிரதிபலிப்பதை நாமெல்லாரும் பார்த்தும் வருகிறோம். இது வெளிப்படையாகத் தெரிகிற விஷயம். இதில் மறைமுகமானது இளமையான மனநிலை. இதன் காரணமாக, சில பெண்களுடைய மெனோபாஸ் வயது தள்ளிப்போக ஆரம்பித்திருக்கிறது.






