என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் காபி குடிக்கலாமா?
Byமாலை மலர்24 July 2019 3:04 AM GMT (Updated: 24 July 2019 3:04 AM GMT)
அம்மாக்கள் சாப்பிடும் அனைத்து உணவுகளுமே பாலூட்டுவதால் குழந்தைகளின் ஆரோக்கியத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் காபி அதிகமாக குடிப்பது பொதுவாக ஆரோக்கியத்திற்கு கெடுதல் என்று கூறுவார்கள்.
குழந்தை பிறந்து அவர்களுக்கு பாலூட்டும் காலம் முடியும்வரை அம்மாக்கள் அவர்களின் உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். ஏனெனில் அம்மாக்கள் சாப்பிடும் அனைத்து உணவுகளுமே பாலூட்டுவதால் குழந்தைகளின் ஆரோக்கியத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் காபி அதிகமாக குடிப்பது பொதுவாக ஆரோக்கியத்திற்கு கெடுதல் என்று கூறுவார்கள்.
காஃபினுடைய பக்கவிளைவுகளால் பாலூட்டும் போது காபி குடிக்கலாமா? வேண்டாமா? என்று பெண்கள் பயப்பட தேவையில்லை. ஏனெனில் பாலூட்டும் காலத்தில் காபி குடிப்பது அம்மாக்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பானதுதான். மிதமான அளவில் நீங்கள் குடிக்கும் காபியில் இருக்கும் காஃபைன் தாய்ப்பால் வழியாக குழந்தைக்கு செல்லும்போது அது அவர்கள் மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
மகப்பேறு மருத்துவர்களின் கருத்துப்படி பாலூட்டும் தாய்மார்கள் ஒரு நாளைக்கு 300 மிகி அளவிற்கு காஃபைன் எடுத்துக்கொள்ளலாம். அதாவது ஒரு நாளைக்கு இரண்டு கப் காபி எடுத்துக்கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு மேலும் குடிக்க வேண்டுமென்று ஆசை இருந்தால் காஃபைன் குறைவாக இருக்கும் வேறு பானங்களை குடிப்பது நல்லது.
கர்ப்ப காலத்தில் காபி குடிப்பதை குறைக்கவோ அல்லது முற்றிலுமாக நிறுத்தி விடவோ பெண்கள் அறிவுறுத்தப்படுவார்கள். ஏனெனில் காபியில் இருக்கும் காஃபைன் தொப்புள்கொடியை கடந்து கருவில் இருக்கும் குழந்தை மீது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்தான். அதனால் பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் காபி பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது.
காஃபினுடைய பக்கவிளைவுகளால் பாலூட்டும் போது காபி குடிக்கலாமா? வேண்டாமா? என்று பெண்கள் பயப்பட தேவையில்லை. ஏனெனில் பாலூட்டும் காலத்தில் காபி குடிப்பது அம்மாக்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பானதுதான். மிதமான அளவில் நீங்கள் குடிக்கும் காபியில் இருக்கும் காஃபைன் தாய்ப்பால் வழியாக குழந்தைக்கு செல்லும்போது அது அவர்கள் மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
மகப்பேறு மருத்துவர்களின் கருத்துப்படி பாலூட்டும் தாய்மார்கள் ஒரு நாளைக்கு 300 மிகி அளவிற்கு காஃபைன் எடுத்துக்கொள்ளலாம். அதாவது ஒரு நாளைக்கு இரண்டு கப் காபி எடுத்துக்கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு மேலும் குடிக்க வேண்டுமென்று ஆசை இருந்தால் காஃபைன் குறைவாக இருக்கும் வேறு பானங்களை குடிப்பது நல்லது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X