என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    • உருளைக்கிழங்கை பயன்படுத்தி முகத்தில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்து விடலாம்.
    • உருளைக்கிழங்கு சாறு தோல் தொடர்பான பல பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது.

    உருளைக்கிழங்கு சாறு கரும் புள்ளிகள் மற்றும் தோல் தொடர்பான பல பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது. உருளைக்கிழங்கு சாறு கொண்டு நீங்கள் ஃபேஸ் பேக்கையும் தயார் செய்யலாம். மஞ்சளுடன் உருளைக்கிழங்கு சாற்றை சேர்த்து நீங்கள் முக பொலிவுக்கு பயன்படுத்தலாம்.

    முகப்பரு (Pimples) மற்றும் பருக்கள் காரணமாக, சருமத்தில் அவ்வப்போது கரும் புள்ளிகள் ஏற்படுகின்றன. தோல் தொடர்பான பிரச்சினைகளை நீக்க சமையலறையில் கிடைக்கும் பல விஷயங்கள் நமக்கு கை கொடுக்கும். இவற்றில் உருளைக்கிழங்கும் ஒன்று. உருளைக்கிழங்கு சாறு கரும்புள்ளிகள் மற்றும் தோல் தொடர்பான பல பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது.

    உருளைக்கிழங்கு சாறு மற்றும் எலுமிச்சை சாற்றை சம அளவில் கலந்து கொள்ளவும். இந்த கலவையை பஞ்சால் உங்கள் முகத்தில் தடவவும். சுமார் ஐந்து நிமிடங்கள் அதை அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு முகத்தை சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை முகத்தில் தடவலாம்.

    உருளைக்கிழங்கு சாறு கொண்டு நீங்கள் ஃபேஸ் பேக்கையும் தயார் செய்யலாம். இதை தயாரிக்க உங்களுக்கு முல்தானி மிட்டி தேவைப்படும். முல்தானி மிட்டி மற்றும் உருளைக்கிழங்கு சாறு கொண்டு ஒரு கலவையைத் தயாரிக்கவும். இப்போது இந்த பேக்கை உங்கள் முகத்தில் தடவவும். அது காய்ந்து போகும் வரை அப்படியே விட்டு விடவும். உங்கள் முகத்தில் இந்த கலவை காய்ந்தவுடன் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம்.

    மஞ்சளுடன் (Turmeric) உருளைக்கிழங்கு சாற்றை சேர்த்து நீங்கள் முக பொலிவுக்கு பயன்படுத்தலாம். ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் உருளைக்கிழங்கு சாறை சேர்க்கவும். இதை முகத்தில் தடவி அப்படியே சில நிமிடங்கள் இருக்க விடவும். பின்னர் உங்கள் முகத்தை நன்கு கழுவுங்கள். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இப்படி செய்யலாம். இப்படி செய்வதன் மூலம், முகத்தின் கரும்புள்ளிகள் அகற்றப்பட்டு, உங்கள் முகம் புதுப்பொலிவுடன் இருக்கும்.

    • அடிக்கடியோ குளித்தால் சரும செல்கள் எளிதில் பாதிக்கப்படலாம்.
    • ஒரு நாளைக்கு ஒருமுறை குளிப்பது சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும்.

    தினமும் குளிப்பது நல்ல பழக்கம். அது சருமத்திற்கும் நன்மை பயக்கும். ஆனால் சிலர் ஒரு நாளைக்கு பல முறை குளிப்பார்கள். அப்படி உடல் சுத்தத்தை பராமரிப்பது ஆரோக்கியமான பழக்கம் என்றாலும் அது சருமத்திற்கு பாதுகாப்பானது அல்ல. ஏனெனில் உடலில் சென்சிட்டிவ் எனப்படும் அதிக உணர் திறன் கொண்ட பகுதிகளில் சருமமும் ஒன்றாகும். ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறையோ, அடிக்கடியோ குளித்தால் சரும செல்கள் எளிதில் பாதிக்கப்படலாம். வாரத்திற்கு 7 முறைக்கு மேல் குளிப்பதும் ஒவ்வொரு முறையும் சோப் அல்லது கிளென்சர் பயன்படுத்துவதும் சருமத்தில் படர்ந்திருக்கும் இயற்கை எண்ணெய் தன்மையை அகற்றி பாதுகாப்பு அடுக்கை சேதப்படுத்தும். சரும தொற்றுக்கும் வழிவகுத்துவிடும்.

    பாக்டீரியா, கிருமிகள் மற்றும் வறட்சி போன்றவை தாக்காமல் இருக்க சருமத்தில் இயற்கையாகவே பாதுகாப்பு அடுக்கு உருவாக்கப்பட்டிருக்கும். ஒரு நாளைக்கு ஒருமுறை குளிப்பது சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும். இறந்த செல்களை நீக்குவதற்கு வித்திடும். ஆனால் ஒரு நாளில் அடிக்கடியோ, பலமுறையோ குளிப்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.

    அப்படி குளிக்கும்போது ஒவ்வொரு முறையும் சோப் அல்லது ஷாம்பு பயன்படுத்தினால் ஆபத்து இரண்டு மடங்காக அதிகரிக்கும். அதாவது சருமம் வறட்சி அடைவது, சரும எரிச்சல், சரும தொற்று போன்ற பாதிப்புகள் உண்டாகும். அதிக நேரம் குளிப்பதன் காரணமாக ஒவ்வாமை, நோய்த்தொற்று கூட ஏற்படலாம். அடிக்கடி குளிக்கும் செயல்முறையின்போது உடலை அதிகமாக சுத்தம் செய்தால், சருமத்தை பாதுகாப்பதற்காக ஆன்டிபாடிகளாக செயல்படும் நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் உடலில் இருந்து நீங்கிவிடும். மேலும் பாக்டீரியா எதிர்ப்பு சோப்புகளை அதிகம் பயன்படுத்துவது, சரும நோய்த்தொற்றுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். நல்ல நுண்ணுயிரிகளை உடலில் இருந்து அகற்றிவிடும்.

    • ஆணுக்கும் பெண்ணுக்கும் லட்சணமான முகம் அத்தியாவசியமாகிறது.
    • முகத்தை சீர்படுத்தி அழகாக்கும் முக சீரமைப்பு சிகிச்சை இப்போது நவீன தொழில்நுட்பத்தின் வந்துள்ளது.

    இந்த உலகில் வாழும் ஒவ்வொ ருவரிடமும் அழகுக்கான ஏக்கம் இருக்கிறது. அழகு இருந்தால் தான் மற்றவர்கள் ரசிக்கும் விதத்தில் நல்ல வாழ்க்கை வாழ முடியும். அதாவது தன்னம்பிக்கை தரும் அளவுக்காவது முகத்தின் அமைப்பு அழகாக இருக்க வேண்டும். எந்த வகையிலும் காண் பவரை உறுத்தும் வண்ணம் முக அமைப்பு இருந்து விடக்கூடாது. நேர்முகத் தேர்வுகளுக்கு செல்லும் போதுகூட தோற்றத்திற்கு அங்கே மதிப்பிருக்கிறது. தகுதிகள், திறமைகளுக்கு இணையாக தோற்றமும் இருக்கிறதா என்று எடை போடுகிறார்கள். அதனால்தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் லட்சணமான முகம் அத்தியாவசியமாகிறது. யாருமே அவலட்சணமான முகத்திற்கு ஆசைப்படுவதில்லை.

    ஆனால் பிறவியிலேயே தாடை, பற்கள் மற்றும் உதடு குறைபாடு ஏற்பட்டிருந்தால் முக அமைப்பு திருப்தி இல்லாமல் போய்விடுகிறது. இதெல்லாம் இயற்கை கொடுத்த தண்டனை என்று விரக்தி அடையாமல், முகத்தை சீர்படுத்தி அழகாக்கும் முக சீரமைப்பு சிகிச்சை இப்போது நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஈடன்ஸ் பல் மற்றும் முக சீரமைப்பு மருத்துவமனையில் செய்யப்படுகிறது.

    உதடு பிளவு குறைபாடுடன் கிட்டத்தட்ட 800-க்கு ஒரு குழந்தை பிறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிறவியிலேயே சிலருக்கு குறைவான அல்லது கூடுதல் வளர்ச்சியுடன் தாடை இருக்கும்.

    பற்கள் நேர்வரிசையாக இல்லாமல் ஏறுக்குமாறாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு முகம் ஒருபக்கம் கோணலாக அமைந்திருக்கும். இது போன்ற குறைபாடுகளுக்கு காரணம், முக எலும்புகள் முழுமையாக வளர்ச்சி அடையாததுதான். இதுதவிர, விபத்துகளால் தாடை, பற்கள் சேதமடைந்து முகத்தின் அழகு பாதிக்கப்படலாம். சிலருக்கு முக எலும்புகள் உடைந்து சேதமடையலாம். கதிர்வீச்சு போன்ற காரணிகளாலும் முகத்தில் குறைபாடு தோன்றலாம். சிலர் தங்கள் பழக்க வழக்கத்தாலும் குறைபாடுகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அதாவது ஒரு சில குழந்தைகள் மட்டும் பள்ளிக்குச்செல்லும் வயதைத்தாண்டிய காலகட்டத்திலும் கை சூப்பும் பழக்கத்தை தொடருகிறார்கள்.

    இதனால் முகத்தின் அமைப்பு சற்று மாறிவிடுகிறது. இதுதவிர வாயைத்திறந்து துங்கும் பழக்கம் சிலரிடம் இருக்கிறது. இதுபோன்ற பழக்கங்களாலும் இன்னும் சில கணிக்கமுடியாத காரணங்களாலும் முக அமைப்பில் விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்பட்டுவிடுகின்றன.

    முகத்தில் எலும்புகள், பற்கள், தாடைகளில் தோற்றக்குறைபாடுகள் இருந்தால் அதை சீர்படுத்தி இயல்பான அழகுக்கு கொண்டு வந்து விடஇயலும். உதட்டுப்பிளவு, அண்ணப்பிளவு போன்ற குறைபாடுகளையும் சிகிச்சை மூலம் எவ்வித தழும்புகளும் வெளியேதெரியாதவண்ணம் சீராக்கிவிடலாம்.

    இவ்வாறு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    டாக்டர் N.தினக்ஸ்குமார்

    டாக்டர்.ஸ்டெலின் தினக்ஸ்

    • சிலர் எண்ணெய் வழிந்த முகத்துடன் காட்சி அளிப்பார்கள்.
    • எண்ணெய் சருமத்திற்கு தயிரும் சிறந்த தீர்வாக அமையும்.

    சருமத்தில் எண்ணெய் சுரப்பிகளின் செயல்பாடுகள் சீரற்ற நிலையில் இருக்கும்போது எண்ணெய் அதிகமாக சுரக்கும். அதனால் முகத்தில் எப்போதும் எண்ணெய் தன்மை பிரதிபலித்துக்கொண்டிருக்கும். எண்ணெய் வழிந்த முகத்துடன் காட்சி அளிப்பார்கள்.

    அத்தகைய எண்ணெய் தன்மையை போக்குவதற்கு கடலை மாவு மற்றும் பச்சை பயறு மாவுவை பயன்படுத்தலாம். இவை இரண்டும் எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்றது. கடலை மாவு, பச்சை பயறு மாவுடன் பன்னீர் கலந்து குழைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்யலாம். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடலாம். வாரம் இருமுறை பயன்படுத்தி வந்தால் எண்ணெய் சருமம் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கிவிடும்.

    பன்னீர், சந்தனத்தூள் மற்றும் முல்தானிமெட்டி ஆகியவற்றை சம அளவு பசை போல் குழைத்து முகத்தில் தடவவும். பன்னீர் முகத்தை சுத்தமாக்கும். சந்தனம் சருமத்தை குளிர்ச்சி அடைய செய்யும். முல்தானி மெட்டி முகத்தில் உள்ள அழுக்கை போக்குவதோடு அதிகப்படியான எண்ணெய் தன்மையை அகற்றிவிடும். வாரம் இருமுறை இந்த பேஸ் பேக்கை பயன் படுத்தி வரலாம்.

    எண்ணெய் சருமத்திற்கு தயிரும் சிறந்த தீர்வாக அமையும். தயிரை முகத்தில் தடவிவிட்டு 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடலாம். எண்ணெய்ப்பசை தன்மை நீங்குவதுடன் சோர்வையும் போக்கி புத்துணர்ச்சியை தரும்.

    • பால் பொருட்களும் முகப்பருக்களை உண்டாக்குகின்றன.
    • முகப்பருக்களை கிள்ள கூடாது.

    பருவ வயதில் பருக்கள் என்பது எல்லோருக்கும் ஏற்படக்கூடியதுதான். அதற்காக கண்ணாடி முன் நின்று கொண்டு கவலைப்பட்டுக்கொண்டு இருக்காதீர்கள். பருக்கள் வருவதற்கு எண்ணெய் பதார்த்தங்களும் ஒரு காரணம் என்பதால் அவற்றை பருவ வயதினர் தவிர்த்தல் நல்லது. பால் பொருட்களும் முகப்பருக்களை உண்டாக்குகின்றன. பால், ஐஸ் கிரீம் என எதுவானாலும் அவை இன்சுலின் போன்ற IGF-1 என்ற ஹார்மோனை சுரக்கச் செய்கின்றன. இது முகப்பருக்கள் வருவதைத் தூண்டி அதிகரிக்கச் செய்கிறது.

    அதேபோல், ஜங் ஃபுட்ஸ், எண்ணெய்யில் வறுக்கப்பட்ட உணவுகள், கொழுப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவையும் பருக்களுக்கு காரணமாக இருக்கின்றன. எனவே இதுபோன்ற உணவுகளை தினசரி உணவுப் பழக்கத்திலிருந்து குறைத்துக் கொண்டாலே முகப்பருக்கள் வருவதை தவிர்க்க தீர்வாக இருக்கும்.

    பருக்கள் வராமல் தடுக்க வேப்பிலை, துளசி, புதினா ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அரைத்து முகத்தில் பூசி, உலரவிட்டு பின்னர் முகத்தை கழுவி வரலாம். பருக்கள் வராமல் தடுக்க இன்னொரு முறையும் உள்ளது.

    மருந்து கடைகளில் கிடைக்கும் ரத்த சந்தனம் என்ற பொருளை வாங்கி மணத்தக்காளி சாற்றை சேர்த்து துளசி இலை, வேப்பிலைக் கொழுந்து ஆகியவற்றை அரைத்து கலந்து முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழிந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிட வேண்டும்.

    பருக்களை கிள்ள கூடாது. தேவைக்கு அதிகமாக முகத்தில் கிரீம் போடக்கூடாது. அதிக இனிப்பு, கொழுப்பு உள்ள தின்பண்டங்களை தவிர்க்க வேண்டும். அடிக்கடி முகம் கழுவ கூடாது.

    தரமான சோப் கொண்டு இரண்டு முறை முகம் கழுவலாம். சிகிச்சை முறைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மாற்றவோ, நிறுத்தவோ கூடாது.

    • தோல் அழகாகவும், மாசு மருவின்றி சுத்தமாகவும் இருக்க வேண்டும்.
    • சில தோல் மற்றும் முடி பிரச்சினைகளையும், அதற்கான தீர்வுகளையும் பார்க்கலாம்.

    உடலின் தோல் பகுதி, உடலின் உள்ளுறுப்புகளை பாதுகாக்கும் கவசமாக இருப்பதுடன், உடலின் அழகை காட்டும் ஆடையாகவும் உள்ளது. சுத்தமாக சலவை செய்யப்பட்ட ஆடை போல் தோல் அழகாகவும், மாசு மருவின்றி சுத்தமாகவும் இருக்க வேண்டும். ஆனால் சில காரணங்களால் தோலில் பரு, தழும்பு, புழுவெட்டு, பொடுகு என்று பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இன்றைக்கு தோலில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நவீன சிகிச்சைகள் இருப்பதால், அவற்றை எளிதில் குணப்படுத்திக் கொள்ள முடியும். பரவலாக காணப்படும் சில தோல் மற்றும் முடி பிரச்சினைகளையும், அதற்கான தீர்வுகளையும் பார்க்கலாம்.

    முகப்பரு

    பள்ளி, கல்லூரி மாணவிகள் பலரின் முக்கிய பிரச்சினையாக இருப்பது முகப்பரு. இந்த பருக்கள் முகத்தின் அழகை கெடுத்து அவர்களுக்கு கவலையை உருவாக்கி விடுகிறது. கடந்த காலங்களில் முகப்பரு பாதிப்பை போக்க சரியான மருந்து, மாத்திரைகள் இல்லை. சரியில்லாத மருத்துவ சிகிச்சையால் தழும்புகளும் ஏற்பட்டு விடும். கண்ட ஆலோசனைகளை எல்லாம் கேட்டு முகத்தில் கண்ட களிம்புகளையும் பூசி கடைசியில் முகத்தில் குழி, தழும்புகளை உண்டாக்கி முக அழகை நிரந்தரமாக கெடுத்துக் கொண்டு மன உளைச்சலால் அவதிப்படுவோர் நிறையவே உண்டு. இப்போது, முகப்பருக்களை நிரந்தரமாக போக்கும் ஐசோட்ரெடினாயின் மாத்திரை, மருந்துகள் வந்து விட்டன. இவை முகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் முகப்பருக்களை போக்கும். இவற்றை தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்த வேண்டும். 20 வார தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்டால் முகப்பருக்களை முற்றிலும் கட்டுப்படுத்த இயலும்.

    பருத்தழும்பு

    பருக்கள் ஏற்பட்டு சரியான சிகிச்சை பெறாத போது பருத்தழும்புகள் முகத்தில் தங்கி விடும். பருத்தழும்புகளால் சீர் கெட்டு போன முகத்தை லேசர் மற்றும் இதர நவீன சிகிச்சை மூலம் மீண்டும் பொலிவுள்ள அழகான முகமாக மாற்ற முடியும்.

    முடி கொட்டுதல்

    அன்றாடம் கொத்து கொத்தாக முடி கொட்டுதல் பெண்களுக்கு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தும். இன்றைக்கு நீண்ட கூந்தல் இருப்பது அரிது. தற்கால உணவு, மன அழுத்தம், மருத்துவரின் ஆலோசனையின்றி கண்ட எண்ணெய்கள், குளியல் பூச்சுகளை பயன்படுத்துவது ஒரு காரணம். அம்மை, மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்கள் ஏற்பட்டால் அதற்கு 3 மாதங்கள் கழித்து மிக அதிக அளவில் முடி கொட்டும். பொதுவாக, முடி தொடர்பாக எந்த பிரச்சினை இருந்தாலும் அதற்கான அனைத்து தீர்வுகளையும் ஒரு தோல் மருத்துவரால் மட்டுமே தீர்வு காண முடியும். தற்போது, அனைத்து வகையான முடி கொட்டுதல் பிரச்சினைக்கும் உலகத்தரம் வாய்ந்த யூ.எஸ்.எப்.டி.ஏ. அங்கீகரித்த மருந்துகள் வந்துள்ளன. தற்போது புதியதாக அறிமுகமாகியுள்ள மருந்துகளால் 35 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஏற்படும் வழுக்கையும் சரி செய்ய முடியும். இவற்றை தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்த வேண்டும். முடி சிகிச்சைக்கு என தனியாகப் படிப்போ, டாக்டரோ கிடையாது.

    வெண்படை நோய்

    புதியதாக அறிமுகமாகியுள்ள மருந்துகளால் நாள்பட்ட வெண்படை நோய்க்கும் விரைவாகத் தீர்பு கான முடியும்.

    இளநரை

    முடியின் வேரில் இருந்து முடி வளர தொடங்கும்போது, அதில் உள்ள நிற அணுக்களில் இருந்து மெலானின் என்ற நிறத்தை உருவாக்கும் பொருள் கலக்கப்படும். இதனால், முடி கருமையடைகிறது. இந்த மெலானின் சுரப்பி உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் போது இளநரை ஏற்படுகிறது. இளநரை ஏற்பட பல்வேறு காரணங்கள் உண்டு. எந்த காரணத்தால் இளநரை தோன்றுகிறது என்பதை சரியாக கண்டறிந்து தகுந்த மாத்திரை, மருந்துகளை எடுத்துக்கொள்வதால் இளநரையை நீக்கி முடியை கருமையடைய செய்யலாம்.

    பரம்பரை வழுக்கை

    பரம்பரை வழுக்கைக்கு தீர்வு இல்லை என்பது பழைய நம்பிக்கை. இப்போது பக்க விளைவுகள் இல்லாத மிகச்சிறந்த மருந்து மாத்திரைகள் அமெரிக்க மருத்துவ கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவை தற்போது இந்தியாவிலும் சுலபமாக கிடைக்கின்றன. இவற்றை தோல் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்தி பரம்பரை வழுக்கையை, பாதிப்பு ஏற்படும் முன் தடுத்து கொள்ளலாம். மேலும் இழந்த முடியையும் திரும்ப வளர வைக்கலாம். தற்போது இந்த மருந்துகளின் வருகையால் தலையில் வழுக்கையை மறைக்கும் முடி மாற்று அறுவை சிகிச்சைக்கான தேவை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    பொடுகு தொல்லை

    பொடுகு என்பது, பல வகை தோல் வியாதிகளால் ஏற்படும் செதில் உதிர்தலை குறிக்கும். சாதாரண பொடுகு, சொரியாசிஸ், தலை தோல் அலர்ஜி, தலை தோல் வறட்சி போன்ற காரணங்களால் பொடுகு உருவாகலாம். ஒருவருக்கு பொடுகு தொல்லை இருந்தால் அதற்கான காரணத்தை துல்லியமாக கண்டறிந்து அதற்கு தகுந்த மருந்துகளை தர வேண்டும். அதை விடுத்து, கண்ட எண்ணெய்களை தேய்ப்பது, கை வைத்தியம் பார்ப்பது சரிவராது. தலையில் பொடுகு பிரச்சினையை அசட்டையாக விட்டு விட்டால் முடியின் ஆரோக்கியம் கெட்டு முடி கொட்டுவதையும் நிறுத்த முடியாது.

    புழு வெட்டு

    தலையில் ஆங்காங்கே செதுக்கியது போல் சொட்டை விழுவது புழுவெட்டு. தலையில் திடீரென்று வட்ட வடிவில் முடி உதிர்ந்து முடி இல்லாமல் போகும் பாதிப்பை புழுவெட்டு என்கிறோம். இது தலையில் மட்டும் அல்லாமல் புருவம், தாடி, மீசை போன்ற இடங்களிலும் வரலாம். சிலருக்கு சில இடங்களிலும், சிலருக்கு ஒட்டுமொத்தமாக தலைப்பகுதி முழுவதும் கூட பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இதற்கு புழுவோ, பூச்சியோ காரணம் இல்லை. நமது உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்களின் தவறான செயல்பாடே காரணம். வெங்காயம் தேய்ப்பது, கண்ட எண்ணெய்களை தேய்ப்பதால் புழுவெட்டு நீங்காது. தோல் மருத்துவர் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும். இதற்கு சமீபத்தில் மிகச் சிறந்த புது மருந்துகள் வந்துள்ளன.

    சொரியாசிஸ்

    சொரியாசிஸ் நோய்க்கும் தற்போது மிக சிறப்பான மருந்துகள் வந்துவிட்டன. இவற்றால் மிகக்குறுகிய காலத்தில் சிறந்த பலன் கிடைக்கும்.

    படர்தாமரை

    நவீன மருந்து மாத்திரைகள் மூலம் நாள்பட்ட படர்தாமரையும் நிரந்தரமாக சரிசெய்ய முடியும்.

    ஆண் முகத்தில் முடி இல்லாமை

    ஆண்களுக்கு முகத்தில் நல்ல ரோம வளர்ச்சி இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. தற்போது, தாடி வளர்த்து விதவிதமாக ட்ரிம் செய்வது பேஷனாகவும் இருக்கிறது. பொதுவாக, ஆண்கள் முகத்தில் முடி வளர்ச்சி குறைவாக இருப்பதற்கு பரம்பரைத் தன்மை மற்றும் ஹார்மோன் குறைபாடு காரணமாகும். இதற்கு முறைப்படி காரணத்தை கண்டறிந்து, சிகிச்சை மேற்கொண்டால் முகத்தில் நன்கு முடி வளரச் செய்யலாம்.

    பெண்களுக்கு தேவையற்ற முடி வளர்ச்சி

    சில பெண்களுக்கு முகத் தாடை, உதட்டின் மேல் பகுதி போன்ற இடங்களில் தேவையற்ற முடி வளர்ச்சி இருக்கும். இந்த முடிகளை வேக்சிங் அல்லது திரெடிங் முறையில் அகற்றினால் அது இன்னும் அதிகமாக வளரும். தற்போது, இந்த தேவையற்ற முடிகளை அகற்ற உலகத்தரம் வாய்ந்த டையோடு லேசர், லாங் பல்ஸ் என்டியாக் லேசர் மற்றும் ட்ரிபிள் வேவ்லென்த் லேசர் கருவிகள் இங்கு இருக்கின்றன. இவற்றின் மூலம் மிக எளிதாக நிரந்தரமாக முகத்தில் உள்ள தேவையற்ற முடி வளர்ச்சியை நீக்க முடியும். இந்த லேசர் கருவிகளை முறையாக தெரிந்த தோல் நோய் மருத்துவர் மட்டுமே பயன்படுத்த முடியும். திருநங்கைகளுக்கு இந்த சிகிச்சை மிகப்பெரிய வரப்பிரசாதம். எங்கள் மருத்துவமனையில் இந்த கருவிகள் மூலம் நிறைய பேர் பயன்பெற்று மகிழ்வுடன் செல்கின்றனர்.

    பச்சை அகற்றுதல்

    சிறுவயதில் பேஷன் என்ற பெயரில் உடம்பில் பச்சை குத்துவது அதிகரித்து வருகிறது. உடம்பில் பச்சை குத்திக் கொண்டவர்கள் ராணுவம், காவல் துறை உள்ளிட்ட அரசு சீருடை பணிகளில் சேர முடியாது. தொடர்பில்லாத பெயர்களை பச்சை குத்தி வைத்திருக்கும் சிலருக்கு இது திருமண வாழ்க்கையில் பிளவைக் கூட ஏற்படுத்தி விடுகிறது. தற்போது, எங்கள் மருத்துவமனையில் உள்ள பைகோ செகண்ட் க்யூ ஸ்விட்ச்டு லேசர் மூலம் இந்த பச்சை அடையாளங்களை துல்லியமாக தோலுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நீக்கி விடுகிறோம்.

    இதர பாதிப்புகள்

    மேற்சொன்ன தோல் பிரச்சினைகள் மட்டுமின்றி தோல் அலர்ஜி, வெண்படை, குஷ்டம் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் அதிநவீன சிகிச்சைகள் உள்ளன. எந்த தோல் வியாதியையும் எளிதாக இவற்றால் சரி செய்ய முடியும். எனவே, உடலின் அழகை வெளிக்காட்டும் தோல் பகுதியை பொலிவாக வைத்து தன்னம்பிக்கையுடன் வாழ வழி செய்வோம்.

    குறிப்பு: பெண்களுக்கு பெண்களாலேயே பரிசோதனை செய்யப்படும்.

    தொடர்புக்கு, ஆதித்தன் தோல் முடி லேசர் மருத்துவமனை, ஆண்டாள்புரம், மதுரை.

    செல்போன்-81110 00000,

    73731 41111, 73731 42222

    • ரத்தின கல் நகைகள் அப்போதும் பிரபலமாக இருந்தன.
    • இந்தியா உலகின் மிகச்சிறந்த ரத்தினக் கற்கள் பதித்த நகைகளை உற்பத்தி செய்கிறது.

    மனிதர்களின் தரத்தை உயர்த்துவது தங்க நகைகள் மற்றும் அதில் பதிக்கப்பட்ட விலை உயர்ந்த ரத்தினக் கற்கள் என்றால் மிகையாகாது. பழங்காலத்திலிருந்தே நகைகளை அழகுபடுத்த அவை பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் நிறம், பளபளப்பு, பட்டை தீட்டப்படும் பாணி மற்றும் கிடைப்பதற்கு அரிது போன்றவை மற்ற கனிம கற்களிலிருந்து அவற்றை வேறுபடுத்துவதோடு அவற்றின் மதிப்பை வரையறுக்கிறது. மேலும், அவற்றின் நோய் குணப்படுத்தும் ஆற்றலும் உலகம் அறிந்தது .

    இந்தியாவில் ரத்தின நகைகளின் வரலாறு.

    பிரமிக்க வைக்கும் வகையில் கையால் செதுக்கப்பட்டு செய்யப்பட்ட ரத்தின கல் நகைகளின் பல துண்டுகள் பண்டைய நாகரிகங்களின் எச்சங்களாக புதைபொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ரத்தின கல் நகைகள் அப்போதும் பிரபலமாக இருந்தன என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. மேலும், மகாபாரதம் மற்றும் ராமாயணம் போன்ற பல இந்திய நூல்கள், ரத்தினக் கற்களின் குணப்படுத்தும் ஆற்றலையும் , தங்களின் ஆற்றல் திறனை அதிகரிக்க ராஜாக்கள் மற்றும் ராணிகளால் எவ்வாறு அலங்கரிக்கப்பட்டன என்பதையும் ஆவணப்படுத்துகின்றன.

    மேலும், முகலாயர்களை இந்தியாவில் தங்கள் சாம்ராஜ்யத்தை அமைப்பதற்கு பெரிதும் கவர்ந்தது இந்தியாவின் செழுமையான ரத்தினக் கருவூலம் தான் என்று கூறப்படுகிறது. முகலாயர் காலத்தில், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் உயர் ரக கற்கள் செய்யும் கைவினைத் தொழில்கள் செழித்தன. அரச குடும்பத்தின் அன்றாட உடைகளைப் அலங்கரிக்க, பல புதிய வடிவிலான ரத்தினங்கள் மற்றும் மாற்று ரத்தினங்கள் பதித்த சிறப்பான நகைகள் உருவாக்கப்பட்டன. ஆனாலும் விக்டோரியா பேரரசின் ஆதரவின் போதுதான் இந்தியா விலைமதிப்பற்ற ரத்தினங்கள் மற்றும் மாற்று ரத்தினங்கள் வர்த்தக மையமாக உருவானது; குறையற்ற அற்புதமான கற்கள் பதிக்கப்பட்ட-நகைகள் உருவாக்கப்பட்டன. இன்றும் இந்தியா உலகின் மிகச்சிறந்த ரத்தினக் கற்கள் பதித்த நகைகளை உற்பத்தி செய்கிறது.

    இந்தியாவில் இரத்தின நகைகளின் வெவ்வேறு வடிவங்கள்.

    இந்திய நகை வடிவமைப்பாளர்கள் மற்றும் கைவினைஞர்களால் ரத்தினங்கள் பல்வேறு வகைகளில் நகைகளில் பாதிக்கப்பட்டது. இந்த கலையில் சில, 5000 ஆண்டுகள் பழமையானவை;

    1. குந்தன் நகைகள்:

    இந்திய ரத்தின நகைகளில் இந்த குந்தன் நகை வடிவம் முகலாயர்களின் அரச ஆதரவின் கீழ் செழித்து வளர்ந்தது; இன்னமும் இது பாரம்பரிய திருமணங்களில் ஒரு அங்கமாக உள்ளது. இந்த கலை வடிவத்தில், ஒரு ரத்தினத்துக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொடுப்பதற்காகவும், பக்கத்தில் உள்ள ரத்தினங்களிலிருந்து தனிமைப்படுத்துவதற்காகவும் தூய தங்கப் படலத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரம், குந்தன் நகைகளுக்கு மிகவும் பிரபலமானது.

    நவீன தழுவல்: தெளிவான வண்ணங்களைக் கொண்ட கனிம பூச்சுகள் குந்தன் கலையில் பல மாறுபாடுகளைக் கொண்டு வந்துள்ளன. மேலும், வெள்ளியால் செய்யப்பட்ட குந்தன் நகைகள் ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் பீகார் மாநிலங்களில் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளன.

    2. ஜடாவ் நகைகள்:

    ஜடாவ் நகைகள் "பொறிக்கப்பட்ட நகைகள்" என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் இது திருமணம் அல்லது பண்டிகைகள் போன்ற மங்களகரமான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த தனித்துவமான கலைப்படைப்பு பல ரத்தினம், மாற்று ரத்தினம், விலையுயர்ந்த கற்கள், படிகங்கள் மற்றும் மணிகள் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது, அவை திடமான தங்கத் தகட்டில் பதிக்கப்பட்டுள்ளன. இந்திய கைவினைஞர்களின் உள்நாட்டுத் திறன்கள் மேற்கிலும் இந்த வடிவத்தை மிகவும் பிரபலமாக்கியுள்ளன.

    நவீன தழுவல்: இப்போதெல்லாம், ஜடாவ் கலை முலாம் பூசுவதையும் இணைக்கப்பட்டு ஆபரணத்திற்கு தனித்துவமான வண்ணத்தை வழங்குகிறது. மேலும், அழகியல் மதிப்பை மேலும் கூட்ட பட்டை தீட்டப்படாத வைரம் ஒரு மையக் கல்லாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

    3. லாக் நகைகள்:

    லாக் நகைகளின் (Lacquer) பல்வகை அழகு அதை உலகம் முழுவதும் பிரபலமாக்கியுள்ளது. இந்த கலை முன்பு ராஜஸ்தானி பழங்குடியினருக்கு மட்டுமே இருந்தது, ஆனால் இன்று இதன் சந்தை மிகப்பெரியது. டிமானியன், பாஜுபந்த் மற்றும் வளையல்கள் போன்ற லாக் ஆபரணங்கள் பல வடிவமைப்பாளர்களின் சேகரிப்பில் தவிர்க்க முடியாததாகும்.

    நவீன தழுவல்: பழங்காலத்தில், லாக் ஆபரணங்களை அழகுபடுத்த கண்ணாடிகள் மற்றும் கண்ணாடி மணிகள் பழங்குடியினரால் பயன்படுத்தப்பட்டன, ஆனால் இப்போது ரத்தினங்கள் பதிக்கப்படுகின்றன. மேலும், இந்த வகையான நகைகள் ஒப்பீட்டளவில் மலிவு விலையில் இருப்பதால், இது இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது.

    4. நவரத்தின நகைகள்:

    அணிபவரின் நலனை உறுதிப்படுத்த, நவரத்தின நகைகளில், ஒன்பது மங்களகரமான கற்கள் ஒரே ஆபரணத்தில் பதிக்கப் படுகின்றன. இந்த ஒன்பது ரத்தினங்கள் மாணிக்கம், முத்து, வைரம், மரகதம், பவளம், பூனைகண், நீலம் , புஷ்பராகம் மற்றும் கார்னெட் ஆகும்; ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக உள்ளது. உதாரணமாக, ரூபி தீய ஆவிகளை விரட்டுவதற்கு இணைக்கப்பட்டது; பவளம் நோய்களைக் குணப்படுத்துவதற்கும், கூர்மையான நினைவாற்றலுக்கும்; முத்து அமைதியைப் பேணுவதற்கும், புஷ்பராகம் அணிபவரின் நீண்ட ஆயுளுக்கும், மரகதம் ஏமாற்றுவதைத் தவிர்ப்பதற்கும் ஆகும்.

    நவீன தழுவல்: பாரம்பரியமாக, நவரத்ன கற்கள் பெரும்பாலும் மோதிரங்கள் மற்றும் பதக்கங்களில் பயன்படுத்தப்பட்டது, ஆனால் இப்போது அவை காதணிகள், வளையல்கள், கவசங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல ஆபரணங்களை அழகுபடுத்தப் பயன்படுத்தப்படுகின்றன. இது பல்வேறு வண்ணங்களைக் கொண்டிருப்பதால் பல்வேறு இந்திய உடைகளுக்கு நன்றாக பொருந்தும்.

    5. பச்சிகம் நகைகள்

    இந்த பச்சிகம் நகை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் உருவானது, இன்றும் சமகால பேஷன் நகைகளின் இன்றியமையாத அங்கமாக உள்ளது. இது குந்தன் வேலையுடன் ஒரு குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் கொண்டுள்ளது, ஆனால் ஒரு தெளிவற்ற மற்றும் உடையக்கூடிய தோற்றத்தைக் கொண்டுள்ளது. பொதுவாக பட்டை தீட்டப்படாத ரத்தின கற்கள் மற்றும் கண்ணாடி வேலைப்பாடுகள் பயன்படுத்தி பச்சிகம் நகைகள் செய்யப்படுகின்றன. பச்சிகம் நகையின் அழகு மற்றும் அதன் வசீகரம் யாரையும் அதன்பால் விழ வைக்க போதுமானது.

    நவீன தழுவல்: முன்பு தங்கம் மற்றும் பிளாட்டினம் ஆகியவை பச்சிகம் கலைப்படைப்புக்கு அடித்தளமாக பயன்படுத்தப்பட்டிருந்தாலும், இப்போது வெள்ளி பயன்படுத்துவதால் குறைந்த விலையில் கிடைக்க வழி செய்கிறது.

    6. மணிகளால் ஆன நகைகள்

    மணிகளால் ஆன நகைகள், ஒரு காலத்தில் ராஜஸ்தான், ஹரியானா மற்றும் பஞ்சாப் பகுதிகளில் மட்டுமே இருந்தது, ஆனால் இப்போது உலகின் அனைத்து பகுதிகளிலும் நன்கு அறியப்படுகிறது. பழைய நாட்களில், கல் பதித்த மணிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு, பெரும்பாலும் தலை அணிகலன்கள், கணுக்கால்கள் மற்றும் கவசங்களாகப் பயன்படுத்தப்பட்டன. மேலும், கடினமான கனிம மணிகள் பயன்படுத்தப் பட்டு கழுத்தில் அணியும் நகைகள் மற்றும் பிற ஆபரணங்களை அழகுபடுத்த பயன்படுகிறது.

    நவீன தழுவல்: மணி மற்றும் கல் ஆபரணங்களின் தனித்துவமான நகைகள் இப்போது எளிதாகக் கிடைக்கிறது. இந்த நகைகளில், கற்கள் மையப் பகுதியில் பதிக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் ஆபரணத்தை அசாதாரணமாக்க மணிகள் சுற்றி அமைக்கப் பட்டுள்ளன.

    7. சமகால கற்கள் பதித்த நகைகள்:

    இந்த வகையான நகைகள் பல வகை கலைகளை கலந்து ஒரு நவநாகரீக ஆபரணத்தை உருவாக்குவதாகும் . பொதுவாக, ரத்தினங்கள் மற்றும் மாற்று ரத்தினங்களை(ராசி கற்கள் அலாதவைகளை) வழக்கத்திற்கு மாறாக கலந்து ஒரு புதுப்பித்த நகையை உருவாதாக்கும். இன்று கற்களை அமைப்பதற்கான தளமாக ஸ்டெர்லிங் வெள்ளி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. விலை குறைவாக கிடைக்கச் செய்ய, அரிதாக, செம்பு மற்றும் பித்தளை கூட ஆபரணங்கள் செய்ய அடித்தள உலோகமாக பயன்படுத்தப்படுகிறது.

    • வயது வரம்பின்றி அனைவரும் முக அழகை விரும்புவார்கள்.
    • கையில் பச்சை குத்தியது, கால் ஆணிகள் சிறந்த லேசர் முறையில் அகற்றப்படும்.

    அழகுக்கு மயங்காதவர் எவரும் இல்லை. எனவே ஆண், பெண் என்ற பாகுபாடின்றி, வயது வரம்பின்றி அனைவரும் முக அழகை விரும்புவார்கள். நாம் அன்றாடம் சாதாரணமாக உபயோகப்படுத்தும் சோப் மற்றும் கிரீம் போன்ற அழகு படுத்தும் சாதனங்கள் முதல் இயற்கை வைத்தியங்கள் வரை பயன்படுத்தாதவர்கள் நம்மில் எவருமில்லை. இத்தனை பராமரிப்பிற்கு பிறகும் முகத்தில் பொலிவு இல்லை என்று கவலைப்படுபவர்கள் தான் நம்மில் பலர் உள்ளனர்.

    முக அழகை கெடுக்கும் பிரச்சினைகளான கரும்புள்ளிகள், கருவளையங்கள், முகப்பருக்கள், கருந்திட்டுகள், முகப்பரு தழும்புகள், முகச்சொரசொரப்புகள், வயதின் காரணமாக ஏற்படும் சுருக்கங்கள், வெயிலின் பாதிப்பால் ஏற்படும் கருமை, தோல் முடிச்சுகள் போன்றவற்றிற்கு சரியான தீர்வை தேடி கொண்டு இருக்கிறோம்.

    மேற்கூரிய பிரச்சினைகளால் அவதிப்பட்டு கொண்டிருக்கும் மக்களுக்காக நமது மாவட்டத்தில் எங்களது எஸ்.ஜே. மருத்துவமனையில் முக அழகு சிகிச்சைக்கென தனிப்பிரிவு தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    கருந்திட்டுகள் அகற்றும் சிகிச்சை

    உடலில் ஏற்படும் பருவ மாற்றங்கள், உடலில் மாறுபடும் ஹார்மோன் பிரச்சினைகள், சூரிய ஒளியின் பாதிப்பு, சுற்றுப்புற சூழல் மாசு, சரியான முகபராமரிப்பு இல்லாதது, தவறான அழகு சாதனங்கள் பயன்படுத்துதல், வயது முதிர்வின் காரணமாக, சர்க்கரை நோய் போன்ற மருத்துவ காரணங்களாலும் முகக்கருமை தோன்றுகிறது.

    எங்கள் மருத்துவமனையில் முக கருமை, மேற்கூரிய காரணங்களில் எவற்றால் ஏற்படுகிறது என்று கண்டறிய, அதற்குரிய நவீன பரிசோதனைகளான ரத்த பரிசோதனை, ஹார்மோன் அனாலிஸிஸ் மற்றும் டெர்மாஸ்கேனர் என்ற நவீன கருவி கொண்டு தோலின் தன்மை, கருமையின் ஆழம், தழும்புகளின் ஆழம், தோலின் வறட்டு தன்மை, வயதின் காரணமாக ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவை பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இவற்றுக்கு சிறந்த சிகிச்சையான Deep cleaning, Fruit peels, Vampire facial, Laserfacial, Oxy facial, Skin polishing ஆகிய முறைகள் கொண்டு கருமை தன்மை அகற்றப்படுகிறது. எங்கள் மருத்துவமனையின் சிறப்பு அம்சம் திருமணத்துக்கு தயாராகி கொண்டு இருக்கும், மணப்பெண்களில் கருமை நிற தோல் உடையவர்களை வெண்மையாக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    முகப்பரு சிகிச்சை

    முகப்பருக்கள் எதனால் ஏற்படுகிறது என்ற காரணத்தை கண்டறிந்து, அதற்குரிய சிகிச்சை மருந்துகள், Special Deep Cleaning, Fruit Peel ஆகிய சிகிச்சைகளை கொண்டு சரி செய்யப்படுகிறது.

    முகத்தை இளமையாக்கும் சிகிச்சைகள்

    முதுமையினால் குறிப்பாக 40 வயதுக்கு மேல் முகத்தில் பல காரணங்களால் தோல் வறட்சி, சுருக்கங்கள், கோடுகள், கரும்புள்ளிகள், கருந்திட்டுகள், கருவளையங்கள், முகச்சதை தொங்குதல் போன்றவை ஏற்படுகிறது. இவற்றை சரி செய்ய Galvanic Treatment, Botox Treatment. Dermafiller ஆகிய சிகிச்சை முறைகளில் சரி செய்யப்படுகிறது.

    முடி உதிர்தல்-ஆண், பெண்-Hair Scan PRP சிகிச்சை மூலம் முடி வளர செய்யலாம்.

    முகத்தில் உள்ள தோல் முடிச்சுகள், பால் உண்ணிகள், தழும்புகள், பிறப்பின் போது உள்ள தேவையற்ற மச்சங்கள் இவையனைத்தும் நவீன லேசர் சிகிச்சை முறையில் அகற்றப்படும். கையில் பச்சை குத்தியது, கால் ஆணிகள் மற்றும் கொழுப்பு கட்டிகள் சிறந்த லேசர் முறையில் அகற்றப்படும். மேற்கூரிய பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு காண டாக்டரை அணுகி சிகிச்சை பெற்று கொள்ளலாம்.

    இவ்வாறு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    டாக்டர் ரூத்

    • புடவை தவிர்த்து மேலும் இந்திய பெண்களுக்கு பல ஆடைகள் உள்ளன.
    • லெகங்கா சோலியின் இன்னொரு வடிவம் தான் லஞ்சா.

    இந்திய பெண்கள் ஆடைகள் என்றாலே நினைவுக்கு வருவது புடவை மட்டும் தான். ஆனால் புடவையும் தவிர்த்து மேலும் இந்திய பெண்களுக்கு பல ஆடைகள் உள்ளன. அவற்றில் சில வகைகளையும் தற்காலத்திற்கு ஏற்றார் போல் அவை அடைந்த மாற்றத்தையும் காண்போம்.

    புடவை- இந்திய பாரம்பரிய உடை என்றால் நினைவுக்கு வருவது புடவை. ஆனால் அந்த புடவை வகையில் 80 வகைகள் உள்ளது என்பது தெரியுமா? பெங்காளி, ஓடி, குடகு, மலையாளி, என 80 வகையாக புடவை கட்டும் விதங்கள் உள்ளன. புடவை என்பது ஒரு ரவிக்கை மற்றும் உள்ளாடையை கொண்டது. ரவிக்கை மற்றும் உள்ளாடை மீது புடவையை சுற்றி கட்டுவது பாரம்பரிய முறையாகும். தற்காலங்களில் புடவை தைக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு வசதி என்னவென்றால் நீங்கள் அதை கவுன் போலவே மாட்டிக் கொள்ளலாம். தற்காலத்திற்கு ஏற்றார் போல் புடவை பல மாற்றங்களை அடைந்துள்ளது. புடவையில் பிரில் வைப்பது ரவிக்கைகளில் பப்ஸ் வைப்பது, ஒன்-ஷோல்டர், ஆப் - ஷோல்டர் போன்ற பல வகையான மாற்றங்களை அவை அடைந்துள்ளன. இன்றளவும் இந்திய பெண்களால் பெரிதும் விரும்பப்படும் ஆடையாகும்.

    காக்ரா சோலி- காக்ரா சோலியை லெகங்கா ஜோலி என்றும் அழைக்கப்படும். இது ஒரு துப்பட்டா ஒரு ரவிக்கை மற்றும் இடுப்பில் இருந்து முழங்கால் வரை நீண்ட ஆடை உள்ளடக்கியது. இது முகலாயர் காலத்தில் அறிமுகமானது. புடவைக்கு அடுத்து பெண்களால் பெரிதும் விரும்பப்படும் ஆடையாகும். இதன் வடிவமைப்பில் தற்போதைய காலத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் வந்துள்ளன. துப்பட்டாவிற்கு பதிலாக பௌ வைப்பது, பொத்தான் வைத்த ஷர்ட்களோடு அணிவது, நீண்ட மற்றும் குறுகிய சோலியோடு அணிவது மேலும் இடுப்பில் அணியப்படும் ஆடையின் அளவுகளில் பல வேறுபாடுகள் உள்ளன. இது எல்லாவிதமான விழாக்களிலும் அணியக்கூடியது.

    லஞ்சா - லெகங்கா சோலியின் இன்னொரு வடிவம் தான் லஞ்சா. வேறுபாடு என்னவென்றால் ரவிக்கையின் அமைப்பும், இடுப்பில் அணியும் ஆடையின் அமைப்பும். இடுப்பில் இருந்து அணியும் ஆடையின் நீளம் காக்ரா சோலியை விட அதிகமாக இருக்கும். அதே போல் ரவிக்கை நீளம் இடுப்பை தாண்டி நீளும். இது மிகவும் பாரம்பரியமான ஒரு ஆடை வகையாகும். திருமணங்கள் விழா காலங்கள் போன்றவற்றில் முகலாய அரச வம்சத்தில் இன்றளவும் அணியப்படும் பாரம்பரிய உடையாகும். தற்காலத்திற்கு ஏற்றார் போல் லஞ்சாவில் ரவிக்கைக்கு பதிலாக ஜாக்கெட்டும் இடுப்பில் இருந்து அணியப்படும் ஆடையில் நிறைய பிரில்கள் வைத்து நவீனமாக்கப்பட்டுள்ளது. இதை பெண்கள் பெரும்பாலும் விரும்புகின்றனர். திருமணங்களில் மணப்பெண் ஆடையாகவும் இது உள்ளது.

    தோத்தி குரதா- தோத்தி என்பது இந்திய ஆண்களின் பாரம்பரிய உடையாகும். ஒரு நீளமான துணி இடுப்பில் சுற்றிக் கொள்வது தோத்தி எனப்படும். பெரும்பாலும் இந்திய ஆண்கள் பகலிலும் இரவிலும் இதை பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போது பெண்களும் நிறைய பயன்படுத்துகிறார்கள். பருத்தி மற்றும் மஸ்லின் துணிகளை கொண்டு ஆண்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் பெண்கள் சில்க் மற்றும் சாட்டின் துணிகளை கொண்டு தோத்தி குருதா தைத்து கொள்கிறார்கள். இது ரெடிமேடாகவும் கிடைக்கும். அப்படியே வாங்கி அணிந்து கொள்ளும் வகையிலும் விற்கப்படுகிறது. தற்காலத்துக்கு ஏற்றார் போல் இது மாற்றம் அடைந்திருக்கிறது. புடவை கட்டுவது போல இதை வடிவமைத்திருக்கின்றார்கள். இடுப்பில் பெல்ட்டும் அணிந்து கொள்ளலாம்.

    சல்வார் சூட்- புடவை அல்லது காக்ரா ஜோலிக்கு அடுத்ததாக விரும்பப்படும் இந்திய பாரம்பரிய உடைகளில் ஒன்று சல்வார் கமீஸ். இது மிகவும் வசதியான ஒரு ஆடை. இது சல்வார் கமீஸ் மற்றும் துப்பட்டாவும் ஒருங்கிணைப்பாகும். சல்வார் என்பது ஒரு தளர்வான பைஜாமா ஆகும். இடுப்பு பகுதியில் மட்டும் அது இறுக்கமாக இருக்கும் மற்றும் கணுக்கால் பகுதியில் இறுக்கமாக இருக்கும். இடையில் காற்றில் பறப்பது போல் தளர்வாக இருக்கும். கம்மீஸ் என்பது மேலாடை ஆகும். இது சல்வாருக்கு மேல் அணியப்படுவது. முழங்கால் அளவு நீண்டிருக்கும். காலத்துக்கு ஏற்றார் போல் இதில் பல மாற்றங்கள் அடைந்து கொண்டே இருக்கின்றன. தற்காலத்தில் மிகவும் குறுகிய அளவு கொண்டு அரை ட்ரவுசர் போலவும் இருக்கின்றன. சில சமயங்களில் மேலே போடப்படும் துப்பட்டா பல வகைகளில் வடிவமைக்கப் படுகின்றன. இடுப்பில் அணியப்படும் சல்வார் பல ப்ளீட்ஸ் கொண்டதாகவும் வடிவமைப்பில் சில மாற்றங்களோடும் வந்து கொண்டிருக்கின்றன.

    அனார்கலி சூட்- அனார்கலி சூட் என்பது நீண்ட குர்தாமற்றும் இறுக்கமான சுடிதார் பேண்டிகளின் தொகுப்பாகும். குர்தா இடுப்பு வரை இறுக்கமாக இருந்து பின்பு முட்டிக்கு கீழ் வரை தளர்வாக இருக்கும். இது ஒரு அரசு பாரம்பரிய உடையாகும். வசதியான உடையும் ஆகும். தற்போது அனார்கலி சூட்சில் பல நவீனமான அலங்கார வகைகள் வந்துள்ளன. ஜாக்கட் ஸ்டைல், கேப் ஸ்டைல், ஃப்ளோர் லென்த் கவுன் போன்றவை ஆகும். சமீப காலங்களில் இது பெரிதும் விரும்பப் படும் ஆடையாக உள்ளது.

    குர்தா மற்றும் சுடிதார்- இது குர்தி மற்றும் சுடிதார் ஒருங்கிணைக்கப்பட்டதாகும். சுடிதார் கால்களின் அளவைவிட மிக நீண்டு இருக்கும். இதனால் கணுக்கால் பகுதியில் சுருட்டி வைப்பார்கள். இது வளையல் போல் தோற்றம் அளிப்பதால், இதற்கு சுரிதார் என்று பெயர் வந்தது. சூரி என்றால் வளையல் என்று பொருள். இதுவும் முகலாயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. பாகிஸ்தான் பஞ்சாபி பெண்களால் பெரிதும் விரும்பி அணியப்படும் வகையாகும். ஆனால் தற்போது இந்தியாவிலும் பெண்கள் அணிந்து கொள்கின்றார்கள். தற்காலத்தில் குர்தி தரையை தொடும் அளவு நீண்டதாக மேற்கத்திய நாடுகளைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. குர்தியின் நீளமும் குறைக்கப்பட்டு கணுக்கால அளவு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பல வகைகளில் விருப்பத்திற்கு ஏற்றார் போல் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

    பெண்களின் ஷர்வாணி- ஷர்வாணி என்பது ஆண்களுக்கான உடையாகும். இது முகலாயர் காலத்தில் அணியப்பட்டு வந்த உடையாகும். அரசாங்க மற்றும் உயர்ந்த மனிதர்கள் அணியக்கூடிய ஆடையாகும். ஆனால் தற்போது ஷர்வாணி உடையாகிப்போனது. இது காட்டன், காட்டன் சில்க், ஷிபான், பட்டு போன்ற பல வகை துணி வகைகளால் செய்யப்படுவது. இதன் மேலாடை எம்ராய்டரி மற்றும் கலைநயத்தால் வடிவமைக்கப்பட்டு இருக்கும். இது பெண்களுக்கு புது வகையான ஆடை வகையாகும். திருமணம் பண்டிகைகள் மற்றும் பல விழாக்களில் இதை அணிந்து கொள்ளலாம். தற்காலத்தில் ஷர்வாணி மேலாடையில் காலர் வைத்தும் காலர் இல்லாமலும் கட் வைத்தும் பல வடிவங்களில் நவீனமாக வடிவமைக்கப்படுகிறது.

    இண்டோ- வெஸ்டர்ன் சுட்ஸ்- குர்த்தியோடு இணைக்கப்பட்ட தளர்வான டவுசர்களின் தொகுப்பாகும். பல்லாசு சூட் தற்காலத்தில் இது மிகவும் விரும்பப்பட்டு அணியப்படும் ஆடை வகையாகும். இதில் பல வகைகளும் உண்டு. நீண்ட, குறுகிய, ஏ-லைன் போன்ற பல வடிவமைப்புகள் இதில் வருகின்றது. மேற்கத்திய ஆடை வகைகளின் தாக்கம் இதில் இருக்கும். பொதுவாக இது துப்பட்டா இல்லாமல் அணியப்படும். பூட்-பாண்ட், கிராப்டு-பாண்ட், சிகரட்-பாண்ட் போன்றவற்றோடு குர்தி பொருந்தி வரும். பொதுவாக இந்த வகையில் துப்பட்டா அணியப்படுவதில்லை. பல வகையான பாண்டு வகைகளோட இது பொருந்தி வருகிறது.

    இந்திய கவுன்- இந்திய கவுன்கள் பெரும்பாலும் துப்பட்டா சேர்ந்தே வருகின்றது. இது ஒரு மேல் நாட்டு கலாச்சார வகை ஆடையாகும். இதில் பலவகைகள் உண்டு. ஒன்-சோல்டர், பெல்-ஸ்லீவ்டு கவுன்ஸ், சாரி-ஸ்டைல் கவுன் போன்று பல வகைகள் இருக்கின்றன. இதன் மேலாடையில் இந்திய கலாச்சாரப்படி பல அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. எம்பிராய்டிங், மணி வைத்து தைப்பது போன்று பல வகைகளில் அலங்காரம் செய்யப்படுகின்றன. தற்போது இது புடவையைப் போன்ற வடிவமைப்பில் கிடைக்கின்றது. பெரும்பாலான பெண்கள் இதை விரும்பி அடைகின்றனர்.

    சறாரா மற்றும் கறாரா சூட்- சறாரா மற்றும் கறாரா சூட் குர்தி, துப்பட்டா மற்றும் சறாரா/ கறாரா இவற்றின் தொகுப்பாகும். குர்தி நீண்டும் இருக்கும் குறைவாகவும் இருக்கும் நடுத்தர அளவிலும் இருக்கும். இது முட்டிவரை இறுக்கமாக இருந்து அதன் பின் தளர்வாக இருக்கும். இவை தங்க நிற இழை மற்றும் பைப்பிங் போன்றவற்றால் அலங்காரப்படுத்தப்படும். இது முகலாய காலத்தில் அறிமுகப்படுத்தப் பட்டதாகும். இன்றளவும் லக்னோவில் பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் இதை அணிந்து கொள்கிறார்கள். பாகிஸ்தானில் மணப்பெண்கள் இதை திருமண ஆடையாகவே அணிந்து கொள்கின்றார்கள். தற்காலத்தில் உயர்ந்த இடுப்பு சறாரா மற்றும் கறாரா சூட்டும் கிடைக்கின்றன.

    மேலே சொன்ன வகைளில் உங்களின் விருப்பமான ஆடையைகளை வாங்கி மகிழுங்கள்.

    • ஆட்டுப்பாலை நேரடியாக சருமத்தில் பூசும்போது இறந்த செல்கள் நீங்கும்.
    • சருமத்தின் இளமையை பாதுகாக்கும்.

    சருமத்தின் அழகையும், மிருதுவான தன்மையையும், பொலிவையும் பராமரிப்பதற்கு உதவும் இயற்கையான பொருள் ஆட்டுப்பால். சருமத்தின் ஆரோக்கியத்தை காக்கும் ஆட்டுப்பாலை முகத்தில் பூசி வந்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

    சத்துக்கள்: ஆட்டுப்பாலில் புரதம், கால்சியம், பொட்டாசியம், ஒமேகா-6, வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ, மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

    சருமத்தை மிருதுவாக்கும்: சென்சிடிவ் மற்றும் வறட்சியான சருமம் கொண்டவர்களின் முகம் எளிதாக பொலிவை இழக்கும். இவர்களுக்கு ஆட்டுப்பால் சிறந்த தீர்வாக அமையும். இது தோல் அழற்சி, அரிப்பு ஆகியவற்றை குணப்படுத்தும். இதில் இருக்கும், லாக்டிக் அமிலம் சருமத்துக்குள் எளிதாக ஊடுருவி தோலை மிருதுவாகவும், மென்மையாகவும் மாற்றும். வறண்ட மற்றும் சேதமடைந்த சருமத்தை சீராக்கும். சருமத்தின் அடுக்குகள் கொழுப்பு மற்றும் செலினியம் மூலக்கூறுகளைக் கொண்டவை. இவற்றில் குறைபாடு ஏற்பட்டால், சருமம் விரைவில் வறட்சி அடையும். ஆட்டுப்பாலில் இருக்கும் கொழுப்பு மற்றும் செலினியம் சத்துக்கள் இந்தப் பிரச்சினையை தீர்க்கின்றன.

    ஆழமாகப் பரவும்: சருமத்துக்கு அவசியமான கொழுப்பு அமிலங்கள் ஆட்டுப் பாலில் உள்ளன. இதனை ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும், சருமத்தில் ஆழமாக ஊடுருவி செயல்படும். ஆட்டுப் பாலில் உள்ள புரோட்டீன், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது முகப்பருவை உருவாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தைத் தருகிறது. மேலும் இதில் இருக்கும் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் ஆன்டிஆக்சிடன்டுகள் சருமத்திற்கு ஊட்டம் அளித்து சருமத்தின் இளமையை பாதுகாக்கின்றன.

    ஆட்டுப் பாலில் இருக்கும் ஆல்பா ஹைடிராக்சில் அமில மூலக்கூறுகள், தோலில் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்கி அமில-கார சமநிலையை சீராக்குகிறது. அதிகமான எண்ணெய்ச் சுரப்பை கட்டுப்படுத்துகிறது. ஆட்டுப்பாலை நேரடியாக சருமத்தில் பூசும்போது இறந்த செல்கள் நீங்கும். தளர்ந்த சருமம் இறுக்கமாகும். ஆட்டுப்பாலை பயன்படுத்துவதற்கு முன்பு, சிறிது சருமத்தில் தடவி எவ்வித பாதிப்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.

    • குதிகால் வெடிப்பை நாம் சில இயற்கை முறைப்படி சரி செய்ய முடியும்.
    • பெண்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சினை குதிகால் வெடிப்பு தான்.

    நம் பாதங்களில் இருக்கும் பகுதிகளில் குதிகால் பகுதி தான் அதிக அழுத்தத்தை தாங்குகிறது. இதனால் தான் அதிகமாக நடப்பது, நின்று கொண்டே இருப்பது போன்ற விஷயங்களால் நிறைய பேர் பாத வெடிப்பை சந்திக்கின்றனர். இந்த குதிகால் வெடிப்பு எந்த காரணத்தினால் உண்டாகிறது. மேலும் அதற்கு எப்படியெல்லாம் சிகிச்சை செய்யலாம் என அறிந்து கொள்வோம்.

    இதனால் பாதங்களில் பிளவுகள் உண்டாகி வலி ஏற்படுகிறது. இந்த குதிகால் வெடிப்பை நாம் சில இயற்கை முறைப்படி சரி செய்ய முடியும். இயற்கையாகவே பாதங்களில் ஈரப்பதத்தை தக்க வைக்கும் போது குதிகால் வெடிப்பு மறைகிறது. பெண்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சினை குதிகால் வெடிப்பு தான். குதிகால் வெடிப்பு காலின் அழகைக் கெடுப்பதோடு பல சமயங்களில் நமக்கு வலியையும் ஏற்படுத்துகிறது. இது அப்படியே வளர்ச்சி அடைந்து செல்லுலாய்டிஸை உண்டாக்குகிறது. குதிகாலில் உள்ள சருமம் வறண்டு போகும் போது அதில் வெடிப்புகள் உருவாகின்றன.

    அதே மாதிரி நாம் நடக்கும் போது குதிகால் பகுதி அதிக அழுத்தத்தை சந்திக்கிறது. இதனால் அதிக அழுத்தம் உண்டாகி அந்த சருமம் தடினமாகி குதிகால் வெடிப்பை ஏற்படுத்துகிறது. இந்த பிளவுகள் ஆழமாக போகும் போது தான் நமக்கு வலியை ஏற்படுத்துகிறது குதிகால் வெடிப்பை கால்சஸ் என்ற பெயரில் அழைக்கின்றனர். குதிகால் பகுதியை சுற்றியுள்ள சருமம் கடினமாகி வறண்டு போய் வெடிப்பானது உண்டாகிறது.

    நீங்கள் தொடர்ச்சியாக நடந்து குதிகாலுக்கு அழுத்தத்தை கொடுக்கும் போது நிலைமை இன்னும் மோசமாகலாம்.நீண்ட நேரம் நிற்பது. வெறுங்காலில் நீண்ட தூரம் நடப்பது. சூடான நீரில் குளிப்பது. காலநிலை மாற்றம். கடினமான சோப்புகளால் தோல் வறண்டு போதல். குளிர்ச்சியான காலநிலையால் வறண்ட சருமம் தோன்றுதல். இவற்றால் பாத வெடிப்புகள் உருவாக காரணமாக கூறப்படுகிறது.

    • முகத்தை சுத்தமான துணியால் துடைக்க வேண்டும்.
    • முகத்தை சுத்தமான துணியால் துடைக்க வேண்டும்.

    முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள என்ன செய்யணும்... என்ன செய்யக்கூடாது என்று தெரியுங்களா? இன்றைய காலத்தில் முகப்பரு, கரும்புள்ளிகள், கருவளையங்கள் போன்றவை இல்லாமல் சுத்தமாக இருக்கும் முகத்தை காண்பது என்பது அரிதானது.

    அவற்றை நீக்குவதற்கு என்னதான் அழகு நிலையங்களுக்குச் சென்று செய்தாலும், சருமத்தில் இருந்து அவை முழுவதும் நீங்கிவிடுவதில்லை. மேலும் எவ்வளவு தான் விலை உயர்ந்த அழகுப் பொருட்களை பயன்படுத்தினாலும், இதற்கான ஒரு நல்ல முடிவு கிடைக்க பல நாட்கள் ஆகின்றன.

    எனவே அழகான முகத்தை இரண்டே நாட்களில் பெறுவதற்கு சில அழகான டிப்ஸ் இருக்கிறது. முகத்தை அடிக்கடி குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கிவிடும். மேலும் வெளியே செல்வதற்கு முன்பும், வீட்டிற்கு வந்த பின்பும் முகத்தை ஃபேஸ் வாஷ் வைத்து கழுவிட வேண்டும்.

    இவற்றால் சரும துளைகளில் உள்ள இறந்த செல்கள் வெளியேறிவிடும். அதிலும் பாடி ஜெல் மற்றும் சோப்புகளை பயன்படுத்தினால், சருமத்துளைகளில் அடைப்பு ஏற்பட்டு, முகப்பருக்கள் வந்துவிடும். ஆகவே குளிக்கும் போது தவிர, மற்ற நேரங்களில் சோப்புகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

    முகத்தை சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். அதிலும் அந்த துணியை சூடான நீரில் நனைத்து பிழிந்து, பின் துடைக்க வேண்டும். மேலும் அவ்வாறு செய்யும் போது, அந்த துணியை நீரில் நனைத்து பிழிந்ததும் முகத்தில் வைத்து, ஒரு நிமிடம் வைக்க வேண்டும். இதனால் முகத்திற்கு ஒரு சிறிய ஸ்டீம் செய்தது போல் இருக்கும்.

    இதனை தொடர்ந்து செய்து வந்தால், 2 நாட்களில் சருமம் நன்கு பொலிவோடு காணப்படும். முக்கியமாக முகத்தை கழுவும் போது குளிர்ந்த நீர் தான் சிறந்தது, அப்போது சூடான நீரை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால், அழுக்குகள் சருமத்திலேயே தங்கிவிடும்.

    கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் கைகளை கழுவாமல் எப்போதும் முகத்தை தொடக்கூடாது. ஏனெனில் கைகளில் எப்போதும் கிருமிகள், பாக்டீரியாக்கள் இருக்கும். ஆகவே சுத்தம் மிகவும் முக்கியம்.

    சருமம் சுத்தமாகவும், அழகாகவும் இருக்க, வாரத்திற்கு ஒரு முறையாவது சருமத்திற்கு ஸ்கரப் செய்ய வேண்டும். அதிலும் சர்க்கரை ஸ்கரப் மிகவும் சிறந்தது. அதற்கு ஒரு டீஸ்பூன் சர்க்கரையுடன் சிறிது நீரை ஊற்றி நன்கு கலந்து, முகத்திற்கு ஸ்கரப் செய்ய வேண்டும். பின் அதனை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமம் நன்கு சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

    ×