என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிச்சன் கில்லாடிகள்
X
பொங்கல் ஸ்பெஷல்: சாக்லேட் பொங்கல்
Byமாலை மலர்13 Jan 2022 9:33 AM GMT (Updated: 13 Jan 2022 9:33 AM GMT)
நாளை பொங்கல் பண்டிகைக்கு குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் பொங்கல் செய்து அசத்துங்கள். இன்று இந்த பொங்கல் செய்முறையை அறிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
வரகு அரிசி - 1 கப்
சிறுபருப்பு - கால் கப்
தண்ணீர் - 2 கப்
கோகோ பவுடர் - கால் கப்
நாட்டு சர்க்கரை - 2 கப்
பால் - 1 கப்+அரை கப்
ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்
நெய் - கால் கப்
முந்திரி, திராட்சை - தேவையான அளவு
செய்முறை
குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஊற்றி சிறுபருப்பை போட்டு சிவக்க வறுக்கவும்.
அடுத்து அதில் வரகு அரிசியை போட்டு சிவக்க வறுக்கவும்.
அடுத்து அதில் 1 கப் பால், 2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து குக்கரை மூடி 3 விசில், 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து குக்கரை அணைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, திராட்சையை போட்டு வறுத்து தனியாக வைக்கவும்.
பின்னர் அதே கடாயில் வேக வைத்த அரிசியை போட்டு பால் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கோகோ பவுடர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
அடுத்து அதில் நாட்டு சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து திக்கான பதம் வரும் வரை கிளறி விடவும். இடையிடையே நெய்யை சேர்த்து கொண்டே வரவும்.
கடைசியான வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும்.
சூப்பரான சாக்லேட் பொங்கல் ரெடி.
வரகு அரிசி - 1 கப்
சிறுபருப்பு - கால் கப்
தண்ணீர் - 2 கப்
கோகோ பவுடர் - கால் கப்
நாட்டு சர்க்கரை - 2 கப்
பால் - 1 கப்+அரை கப்
ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்
நெய் - கால் கப்
முந்திரி, திராட்சை - தேவையான அளவு
செய்முறை
குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஊற்றி சிறுபருப்பை போட்டு சிவக்க வறுக்கவும்.
அடுத்து அதில் வரகு அரிசியை போட்டு சிவக்க வறுக்கவும்.
அடுத்து அதில் 1 கப் பால், 2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து குக்கரை மூடி 3 விசில், 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து குக்கரை அணைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, திராட்சையை போட்டு வறுத்து தனியாக வைக்கவும்.
பின்னர் அதே கடாயில் வேக வைத்த அரிசியை போட்டு பால் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கோகோ பவுடர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
அடுத்து அதில் நாட்டு சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து திக்கான பதம் வரும் வரை கிளறி விடவும். இடையிடையே நெய்யை சேர்த்து கொண்டே வரவும்.
கடைசியான வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும்.
சூப்பரான சாக்லேட் பொங்கல் ரெடி.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X