என் மலர்
கிச்சன் கில்லாடிகள்
மாலை நேரத்தில் சூடாக சாப்பிட சூப்பரான பயத்தம் பருப்பு தயிர் போண்டாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள் :
பயத்தம் பருப்பு - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - ஒரு சிறு துண்டு
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு
தயிர் - 3 கப் அல்லது தேவைக்கேற்றவாறு
வெங்காயம் - 2
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை :
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பயத்தம் பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் 2 மணி நேரம் ஊற வைத்து நன்றாக கழுவி தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு, அத்துடன் பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, நன்றாக அரைத்தெடுக்கவும்.
*அரைத்த மாவில் பொடியாக நறுக்கி வெங்காயத்தை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
* ஒரு அகன்ற பாத்திரத்தில் 5 அல்லது 6 கப் தண்ணீரை விட்டு, கொதிக்க வைத்து, இறக்கி வைக்கவும்.
* ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு, எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து எண்ணெயில் போடவும்.
* எண்ணெய் கொள்ளுமளவிற்கு 4 அல்லது 5 போண்டாவைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து, கொதிக்க வைத்துள்ள வென்னீரில் போடவும். போண்டா வென்னீரில் ஊறி சற்று மிருதுவானவுடன், ஒரு கரண்டியால் எடுத்து, இலேசாக பிழிந்து விட்டு, ஒரு தட்டில் பரவலாக அடுக்கி வைக்கவும்.
* தயிரை நன்றாகக் கடைந்து விட்டு, சிறிது உப்பைச் சேர்த்துக் கலக்கி, போண்டாவின் மேல் ஊற்றவும். அதன் மேல் மிளகாய்த்தூளைத் தூவி பரிமாறவும்.
* சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் பயத்தம் பருப்பு தயிர் போண்டா ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மிளகு தூள் போட்டு செய்யப்படும் இந்த ஆட்டுக்கால் பாயா சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஆட்டுக்கால் - 2
தக்காளி - 4
வெங்காயம் - 2
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
தனியாத்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
மிளகுத்தூள் - 4 ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 4 ஸ்பூன்
தேங்காய்ப்பால் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* ஆட்டுக்காலை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* குக்கரில் வெங்காயம் போட்டு வதக்கிய பின்னர், தக்காளி, மிளகாய் ஆகியவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் அடுத்து அதில் ஆட்டுக்காலை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், தனியாதூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 10 விசில் போட்டு இறக்கவும்.
* விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து கால் வெந்ததா என்று பார்த்தப் பிறகு தேங்காய்ப்பாலை ஊற்றி 10 நிமிடன் கொதிக்கவிட்டு இறக்கவும்.
* பாயாவை இறக்கும் முன் மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.
* இதோ சுவையான பெப்பர் பாயா ரெடி!!!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கேரளாவில் மிகவும் பிரபலமான பண்டிகை ஓணம். ஓணம் தினமான இன்று ஸ்பெஷல் சமையல் செய்முறைகளை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசி - 1/2 டம்ளர்
தேங்காய்ப்பால் - 4 டம்ளர்
வெல்லம் - 2 டம்ளர்
ஏலக்காய் தூள் - சுவைக்கு
பால் - 1 டம்ளர்
நெய் - தேவைக்கு
தேங்காய் துண்டுகள் - கைப்பிடியளவு
முந்திரி - தேவையான அளவு
உலர்திராட்சை - 2 ஸ்பூன்
செய்முறை:
* வெல்லத்தை தண்ணீர் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
* அரிசியை ஊற வைத்து நைசாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை, வாழை இலையில் நெய் தடவி, மெலிதாக பரப்பி, மெதுவாக மடித்து, நூலால் கட்டி, இட்லி தட்டில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
* வெந்த மாவு ஆறியதும் இலையிலிருந்து உரித்து எடுத்து, மிகவும் சிறு துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.
* ஒர் வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை, தேங்காய் துண்டுகளை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
* அதனுடன் அரிசி அடை துண்டுகளை பிரட்டி, பாலை சேர்க்கவும்.
* அடுத்து அதில் வடிகட்டி வைத்துள்ள வெல்லத்தை சேர்க்கவும்.
* நன்கு வெந்ததும் தேங்காய் பாலை சேர்த்து, ஏலக்காய் பொடி செய்து போட்டு இறக்கவும்.
* தித்திப்பான அடை பிரதமன் தயார்
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கேரளாவில் மிகவும் பிரபலமான பண்டிகை ஓணம். ஓணம் தினமான இன்று ஸ்பெஷல் சமையல் செய்முறைகளை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பூசணி கீற்று - 2
காராமணி - 1 கப்
பச்சைமிளகாய் - 4
தேங்காய் பால் - 1 கப்
சேப்பங்கிழங்கு - 3
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை :
* பூசணி கீற்றுகளை தோலை எடுத்து விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
* சேப்பங்கிழங்கை தனியாக வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
* காராமணியை வாசனை வரும் வரை வெறும் கடாயில் வறுத்து ஒரு கப் தண்ணீரில் வேகவைக்கவும்
* பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும்.
* அடுப்பில் ஒரு அகண்ட பாத்திரத்தை வைத்து அதில் நறுக்கிய பூசணித்துண்டுகள், சேப்பங்கிழங்கு, வேகவைத்த காராமணி, பச்சை மிளகாய், ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
* பூசணித்துண்டுகள் நன்றாக வெந்ததும் தேவையான உப்பு சேர்க்கவும்.
* பின்னர் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிடவும்.
* கடைசியில் தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டவும்.
* ஓலனை சாதத்தோடு பிசைந்தும் சாப்பிடலாம்.
* சுவையான ஓணம் ஸ்பெஷல் ஓலன் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கேரளாவில் மிகவும் பிரபலமான பண்டிகை ஓணம். ஓணம் தினமான இன்று ஸ்பெஷல் சமையல் செய்முறைகளை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு - 200 கிராம்
அச்சு வெல்லம் - 150 கிராம்
பால் - 200 மிலி
முந்திரி - 10
உலர் திராட்சை - 10
ஏலக்காய் - 2
தேங்காய் துருவல் - 1 கப்
நெய் - 4 ஸ்பூன்
செய்முறை :
* வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி பாசிப்பருப்பை பொன்நிறமாக வறுத்த பின் குக்கரில் போட்டு குழைய வேக விடவும்.
* வெல்லத்தை தூள் செய்து, ஒரு கப் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, வேகவைத்த பாசிப்பருப்புடன் சேர்க்கவும்.
* அதனுடன் பால் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
* நெய்யில் முந்திரி, உலர் திராட்சை எல்லாவற்றையும் வறுத்து நெய்யோடு சேர்த்து, கொதிக்கும் பாயசத்தில் கொட்டவும்.
* ஏலக்காயை தூளாக்கி அதனோடு சேர்க்கவும்.
* கடைசியில் தேங்காய் பூவை லேசாக நெய்யில் வறுத்து சேர்த்த பின்னர் பாயசத்தை இறக்கவும்.
* சுவையான சத்தான பாசிப்பருப்பு பாயாசம் தயார்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கேரளாவில் மிகவும் பிரபலமான பண்டிகை ஓணம். ஓணம் தினமான இன்று ஸ்பெஷல் சமையல் செய்முறைகளை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
வாழைப்பழம் - 1
வெல்லம் - 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை
தேங்காய் துண்டுகள் - சிறிது
நெய் - தேவையான அளவு
செய்முறை :
* வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி வைத்து கொள்ளவும்.
* தேங்காயை மெல்லிய துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.
* பச்சரிசியை நன்கு சுத்தம் செய்து, அதை நன்கு மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அந்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் வடிகட்டி வைத்துள்ள வெல்லத்தை ஊற்றி பிசைய வேண்டும்.
* பின்பு அதில் ஏலக்காய் தூள், பிசைந்த வாழைப்பழம் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* மெல்லியதாக நறுக்கிய தேங்காய் துண்டுகளையும் அத்துடன் சேர்த்து, ஓரளவு கொட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான நெய் ஊற்றி, காய்ந்ததும், மாவை அப்பங்களை போட்டு எடுக்க வேண்டும்.
* இப்போது சுவையான கேரள ஸ்டைல் உண்ணியப்பம் ரெடி!!!
குறிப்பு: வேண்டுமெனில் பணியாரக் கல்லிலும் நெய் விட்டு, மாவை ஊற்றி, பணியாரம் போன்றும் செய்து சாப்பிடலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த போண்டாவை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மைதா மாவு - 1 கப்,
சற்று புளித்த தயிர் - அரை கப்,
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை,
பெருங்காயம் - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - ருசிக்கேற்ப,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
* ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதில் தயிர், உப்பு, ஆப்ப சோடா, பெருங்காயம், கறிவேப்பிலை சேருங்கள்.
* தேவையான தண்ணீர் சேர்த்து சற்று கெட்டியாக கரையுங்கள் (இட்லிமாவு பதம்).
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறு சிறு போண்டாக்களாக கிள்ளி போடுங்கள்.
* சிவக்க வேக விட்டெடுத்து, சூடாகப் பரிமாறுங்கள்.
* சுவையான மாலைநேர ஸ்நாக்ஸ் மங்களூர் போண்டா ரெடி
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஐஸ் வகைகளில் ஒன்றான குல்ஃபியை பலருக்கும் செய்யத் தெரியாது. குல்ஃபியில் ஒன்றான சாக்லேட் குல்ஃபியை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பால் - 2 கப்
பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
சாக்லேட் - 1 கப் (துருவியது)
சர்க்கரை - 1/2 கப்
பிஸ்தா, பாதாம் - சிறிது (நறுக்கியது)
செய்முறை :
* முதலில் ஒரு பௌலில் பாலை ஊற்றி, அதில் பால் பவுடர் சேர்த்து கட்டி சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு அகன்ற அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாலை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
* அப்படி கொதிக்கும் போது அவ்வப்போது கிளறி விட வேண்டும். இல்லையெனில் அடிபிடித்து விடும். பாலானது சுண்டி சற்று கெட்டியானதும், அதில் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
* சர்க்கரை கரைந்ததும், அதனை இறக்கி, அதில் பாதாம், பிஸ்தா மற்றும் சாக்லேட்டை போட்டு, சாக்லேட் நன்கு கரையும் வரை கிளறி சிறிது நேரம் குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் அதனை ஒரு பேனில் ஊற்றி, 1 மணிநேரம் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்க வேண்டும்.
* 1 மணிநேரம் ஆன பின்னர், அதனை வெளியே எடுத்து மிக்சியில் போட்டு ஒருமுறை நன்கு அடித்து, பின் அதனை குல்ஃபி மோல்ட்டில் ஊற்றி, அதன் நடுவே குச்சியை வைத்து, ப்ரீசரில் 6 மணிநேரம் வைத்து எடுத்தால், சாக்லேட் குல்ஃபி ரெடி!!!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பால் - 2 கப்
பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
சாக்லேட் - 1 கப் (துருவியது)
சர்க்கரை - 1/2 கப்
பிஸ்தா, பாதாம் - சிறிது (நறுக்கியது)
செய்முறை :
* முதலில் ஒரு பௌலில் பாலை ஊற்றி, அதில் பால் பவுடர் சேர்த்து கட்டி சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு அகன்ற அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாலை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
* அப்படி கொதிக்கும் போது அவ்வப்போது கிளறி விட வேண்டும். இல்லையெனில் அடிபிடித்து விடும். பாலானது சுண்டி சற்று கெட்டியானதும், அதில் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
* சர்க்கரை கரைந்ததும், அதனை இறக்கி, அதில் பாதாம், பிஸ்தா மற்றும் சாக்லேட்டை போட்டு, சாக்லேட் நன்கு கரையும் வரை கிளறி சிறிது நேரம் குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் அதனை ஒரு பேனில் ஊற்றி, 1 மணிநேரம் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்க வேண்டும்.
* 1 மணிநேரம் ஆன பின்னர், அதனை வெளியே எடுத்து மிக்சியில் போட்டு ஒருமுறை நன்கு அடித்து, பின் அதனை குல்ஃபி மோல்ட்டில் ஊற்றி, அதன் நடுவே குச்சியை வைத்து, ப்ரீசரில் 6 மணிநேரம் வைத்து எடுத்தால், சாக்லேட் குல்ஃபி ரெடி!!!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை மிகவும் சுவையாகவும், அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மட்டன் கைமா - 750 கிராம்
பெரிய வெங்காயம் - 1
துருவிய தேங்காய் - 3/4 கப்
முட்டை - 1
பச்சை மிளகாய் - 7
பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
கசகசா - 2 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 1 இன்ச்
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 10 பற்கள்
மஞ்சள் தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மிக்ஸியில் தேங்காய், பொட்டுக்கடலை மற்றும் கசகசா சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, சோம்பு சேர்த்து தாளித்த பின் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 15 நிமிடம் நன்கு வதக்கி, பின் இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* மிக்ஸியில் வதக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் மட்டன் கைமா, முட்டை, தேங்காய் பேஸ்ட் மற்றும் அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட் சேர்த்து நன்கு பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
* பிசைந்து வைத்த மசாலாவை உருண்டைகளாக பிடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
* சுவையான செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை ரெடி!!!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மட்டன் கைமா - 750 கிராம்
பெரிய வெங்காயம் - 1
துருவிய தேங்காய் - 3/4 கப்
முட்டை - 1
பச்சை மிளகாய் - 7
பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
கசகசா - 2 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 1 இன்ச்
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 10 பற்கள்
மஞ்சள் தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மிக்ஸியில் தேங்காய், பொட்டுக்கடலை மற்றும் கசகசா சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, சோம்பு சேர்த்து தாளித்த பின் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 15 நிமிடம் நன்கு வதக்கி, பின் இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* மிக்ஸியில் வதக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் மட்டன் கைமா, முட்டை, தேங்காய் பேஸ்ட் மற்றும் அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட் சேர்த்து நன்கு பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
* பிசைந்து வைத்த மசாலாவை உருண்டைகளாக பிடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
* சுவையான செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை ரெடி!!!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அதிக சளி தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த நண்டு சூப்பை வாரம் இருமுறை குடித்தால் நிவாரணம் பெறலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நண்டு - 2 பெரியது
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
மிளகு - 1 ஸ்பூன்
தக்காளி - 2
பெருங்காயத்தூள் - 1/4 டிஸ்பூன்
சோளமாவு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சோள மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து வைக்கவும்.
* நண்டின் கால்களை ஒடித்து அதன் மேல் பகுதியில் ஒரு தட்டுத் தட்டி மஞ்சள்தூள் போட்டுக் கழுவிக் கொள்ளுங்கள்.
* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு, தக்காளியை போட்டு வதக்கி ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.
* ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டுத் தாளித்த பின் தக்காளி வெங்காயக் கலவையைப் போட்டு வதக்குங்கள்.
* நன்றாக வதக்கியதும் அதில் நண்டைப் போட்டுத் தேவையான நீர் விட்டு வேக வையுங்கள்.
* வெந்ததும் நண்டைத் தனியே எடுத்து உள்ளே இருக்கும் சதை பகுதியை மட்டும் தனியே எடுத்து வைக்கவும்.
* கரைத்து வைத்துள்ள சோள மாவை கொதிக்கும் கலவையில் ஊற்றுங்கள்.
* கலவை ஒரு கொதி வந்ததும் நண்டின் சதை பகுதியை போட்டு இறக்கி சூடாகப் பரிமாறுங்கள்.
* சுவையான நண்டு சூப் ரெடி. இந்த சூப் சளி தொல்லை இருப்பவர்கள் குடிக்க மிகவும் உகந்தது.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நண்டு - 2 பெரியது
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
மிளகு - 1 ஸ்பூன்
தக்காளி - 2
பெருங்காயத்தூள் - 1/4 டிஸ்பூன்
சோளமாவு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சோள மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து வைக்கவும்.
* நண்டின் கால்களை ஒடித்து அதன் மேல் பகுதியில் ஒரு தட்டுத் தட்டி மஞ்சள்தூள் போட்டுக் கழுவிக் கொள்ளுங்கள்.
* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு, தக்காளியை போட்டு வதக்கி ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.
* ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டுத் தாளித்த பின் தக்காளி வெங்காயக் கலவையைப் போட்டு வதக்குங்கள்.
* நன்றாக வதக்கியதும் அதில் நண்டைப் போட்டுத் தேவையான நீர் விட்டு வேக வையுங்கள்.
* வெந்ததும் நண்டைத் தனியே எடுத்து உள்ளே இருக்கும் சதை பகுதியை மட்டும் தனியே எடுத்து வைக்கவும்.
* கரைத்து வைத்துள்ள சோள மாவை கொதிக்கும் கலவையில் ஊற்றுங்கள்.
* கலவை ஒரு கொதி வந்ததும் நண்டின் சதை பகுதியை போட்டு இறக்கி சூடாகப் பரிமாறுங்கள்.
* சுவையான நண்டு சூப் ரெடி. இந்த சூப் சளி தொல்லை இருப்பவர்கள் குடிக்க மிகவும் உகந்தது.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சன்டே சிக்கம், மட்டன் சாப்பிட்டு சலித்து போனவர்கள் விரால் மீன் குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
விரால் மீன் - 500 கிராம்
சின்ன வெங்காயம் - 250 கிராம்
தக்காளி - 250 கிராம்
தேங்காய்ப்பால் - 2 கப்
பூண்டு - 1
கடுகு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
வெந்தயம் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - அளவுக்கு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
* மீனை நன்கு கழுவி துண்டுகளாக வெட்டக் கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, காய்ந்தமிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை, பூண்டு போட்டு தாளித்த பின் வெங்காயம் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
* அடுத்து பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
* அடுத்து அதில் தேங்காய்ப் பாலை விட்டு நன்கு கொதிக்கும் போது மீன் துண்டுகளைப் போட்டு ஒரு கொதி வந்த பின் அடுப்பை மிதமான தீயில் 7 நிமிடம் வைத்து கொத்தமல்லிதழை தூவி இறக்கவும்.
* சுவையான விரால் மீன் குழம்பு ரெடி.
குறிப்பு: எப்போதுமே விறால் மீன் வாங்கும்போது முக்கால் கிலோ அல்லது அதுக்கு மேல எடை இருக்கிற மாதிரி பார்த்து வாங்க வேண்டும். அதுக்கு கீழே எடை இருந்தா ருசியாகவே இருக்காது.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
விரால் மீன் - 500 கிராம்
சின்ன வெங்காயம் - 250 கிராம்
தக்காளி - 250 கிராம்
தேங்காய்ப்பால் - 2 கப்
பூண்டு - 1
கடுகு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
வெந்தயம் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - அளவுக்கு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
* மீனை நன்கு கழுவி துண்டுகளாக வெட்டக் கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, காய்ந்தமிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை, பூண்டு போட்டு தாளித்த பின் வெங்காயம் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
* அடுத்து பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
* அடுத்து அதில் தேங்காய்ப் பாலை விட்டு நன்கு கொதிக்கும் போது மீன் துண்டுகளைப் போட்டு ஒரு கொதி வந்த பின் அடுப்பை மிதமான தீயில் 7 நிமிடம் வைத்து கொத்தமல்லிதழை தூவி இறக்கவும்.
* சுவையான விரால் மீன் குழம்பு ரெடி.
குறிப்பு: எப்போதுமே விறால் மீன் வாங்கும்போது முக்கால் கிலோ அல்லது அதுக்கு மேல எடை இருக்கிற மாதிரி பார்த்து வாங்க வேண்டும். அதுக்கு கீழே எடை இருந்தா ருசியாகவே இருக்காது.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வயிற்றில் புண் இருப்பவர்கள் ஆட்டுக்குடலை சமையல் செய்து வாரம் இருமுறை சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சுத்தம் செய்த குடல் - 1
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 4 பல்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தேங்காய்துருவல் - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 200 கிராம்
மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
சோம்பு, சீரக தூள் - 1 தேக்கரண்டி
பட்டை - 2 துண்டு
லவங்கம் - 2
ஏலம் - 1
சோம்பு - சிறிதளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
* வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* குடலை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
* முதலில் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், தேங்காய் இவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
* அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு, லவங்கம், ஏலம் போட்டு தாளித்த பின் அரிந்த பெரிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
* அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.
* தக்காளி நன்கு வதங்கியவுடன் மிளகாய், தனியா, சோம்பு, சீரக பொடி, உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கிய பின்னர் சுத்தம் செய்த குடலையும் அதனுடன் சேர்த்து குக்கரை மூடி 11 விசில் விட்டு இறக்கவும்.
* தண்ணீர் அதிகமாக சேர்க்க கூடாது, ஏனெனில் குடல் தண்ணீர் விட்டு வேகும்.
* விசில் போனவுடன் குக்கரில் மூடியை திறந்து அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* வயிற்று புண் தீர்க்கும் குடல் குழம்பு ரெடி!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சுத்தம் செய்த குடல் - 1
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 4 பல்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தேங்காய்துருவல் - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 200 கிராம்
மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
சோம்பு, சீரக தூள் - 1 தேக்கரண்டி
பட்டை - 2 துண்டு
லவங்கம் - 2
ஏலம் - 1
சோம்பு - சிறிதளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
* வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* குடலை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
* முதலில் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், தேங்காய் இவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
* அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு, லவங்கம், ஏலம் போட்டு தாளித்த பின் அரிந்த பெரிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
* அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.
* தக்காளி நன்கு வதங்கியவுடன் மிளகாய், தனியா, சோம்பு, சீரக பொடி, உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கிய பின்னர் சுத்தம் செய்த குடலையும் அதனுடன் சேர்த்து குக்கரை மூடி 11 விசில் விட்டு இறக்கவும்.
* தண்ணீர் அதிகமாக சேர்க்க கூடாது, ஏனெனில் குடல் தண்ணீர் விட்டு வேகும்.
* விசில் போனவுடன் குக்கரில் மூடியை திறந்து அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* வயிற்று புண் தீர்க்கும் குடல் குழம்பு ரெடி!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






