என் மலர்
பெண்கள் உலகம்

வயிற்றுப்புண்ணை ஆற்றும் ஆட்டுக்குடல் குழம்பு
வயிற்றில் புண் இருப்பவர்கள் ஆட்டுக்குடலை சமையல் செய்து வாரம் இருமுறை சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சுத்தம் செய்த குடல் - 1
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 4 பல்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தேங்காய்துருவல் - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 200 கிராம்
மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
சோம்பு, சீரக தூள் - 1 தேக்கரண்டி
பட்டை - 2 துண்டு
லவங்கம் - 2
ஏலம் - 1
சோம்பு - சிறிதளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
* வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* குடலை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
* முதலில் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், தேங்காய் இவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
* அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு, லவங்கம், ஏலம் போட்டு தாளித்த பின் அரிந்த பெரிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
* அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.
* தக்காளி நன்கு வதங்கியவுடன் மிளகாய், தனியா, சோம்பு, சீரக பொடி, உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கிய பின்னர் சுத்தம் செய்த குடலையும் அதனுடன் சேர்த்து குக்கரை மூடி 11 விசில் விட்டு இறக்கவும்.
* தண்ணீர் அதிகமாக சேர்க்க கூடாது, ஏனெனில் குடல் தண்ணீர் விட்டு வேகும்.
* விசில் போனவுடன் குக்கரில் மூடியை திறந்து அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* வயிற்று புண் தீர்க்கும் குடல் குழம்பு ரெடி!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சுத்தம் செய்த குடல் - 1
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 4 பல்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தேங்காய்துருவல் - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 200 கிராம்
மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
சோம்பு, சீரக தூள் - 1 தேக்கரண்டி
பட்டை - 2 துண்டு
லவங்கம் - 2
ஏலம் - 1
சோம்பு - சிறிதளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
* வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* குடலை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
* முதலில் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், தேங்காய் இவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
* அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு, லவங்கம், ஏலம் போட்டு தாளித்த பின் அரிந்த பெரிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
* அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.
* தக்காளி நன்கு வதங்கியவுடன் மிளகாய், தனியா, சோம்பு, சீரக பொடி, உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கிய பின்னர் சுத்தம் செய்த குடலையும் அதனுடன் சேர்த்து குக்கரை மூடி 11 விசில் விட்டு இறக்கவும்.
* தண்ணீர் அதிகமாக சேர்க்க கூடாது, ஏனெனில் குடல் தண்ணீர் விட்டு வேகும்.
* விசில் போனவுடன் குக்கரில் மூடியை திறந்து அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* வயிற்று புண் தீர்க்கும் குடல் குழம்பு ரெடி!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story






