என் மலர்
சமையல்
- நார்த்தங்காயை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்து வர ரத்தம் சுத்தமடையும்.
- மலச்சிக்கல், சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது நார்த்தங்காய்.
தேவையான பொருட்கள் :
நார்த்தங்காய் - 5,
வெல்லம் - 250 கிராம்,
பச்சை மிளகாய் - 4,
தனி மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
கடுகு - கால் டீஸ்பூன்,,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
* நார்த்தங்காயின் தோல், கொட்டைகளை நீக்கி, சுளைகளை எடுத்து பொடியாக நறுக்கவும்.
* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாய், நார்த்தங்காய் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.
* வடிகட்டி வைத்த வெல்லத்தை சேர்க்கவும்.
* எல்லாம் சேர்ந்து நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் அடுப்பிலிருந்து இறக்கவும்.
* அவ்வளவு தான் சூப்பரான நார்த்தங்காய் பச்சடி ரெடி.
* நன்றாக ஆறியதும் காற்று போகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்துடன் பிற சத்துக்களும் கிடைக்கும்.
- கீரை சாம்பார் சாதம், தோசை, சப்பாத்தி, இட்லியுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
தேவையான பொருள்கள்:
துவரம்பருப்பு - 1/4 கப்
முருங்கைக்கீரை - ஒரு கப்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1 சிறியது
பச்சைமிளகாய் - 3
பூண்டுப்பல் - 5
மஞ்சள்தூள் - சிறிது
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய்ப்பூ - 3 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருஞ்சீரகம் - சிறிது
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை
செய்முறை:
தக்காளி, பச்சைமிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் துவரம் பருப்பை போட்டு நன்றாகக் கழுவிவிட்டு, பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு சிறிது மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து குழைய வேக வைக்கவும்.
கீரையை சுத்தம் செய்து நீரில் அலசி நீரை வடிய வைக்கவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை போட்டு தாளித்துவிட்டு வெங்காயம், பூண்டு, ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறி பருப்பைக் கடைந்து ஊற்றவும்.
தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். கொஞ்சம் அதிகமாகவே ஊற்றிக்கொள்ளலாம்.
நன்றாகக் கொதித்த பிறகு கீரையைப் போட்டு(மூடி போட வேண்டாம்)ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பூ சேர்த்து இறக்கவும். முருங்கைக்கீரை அதிகநேரம் கொதித்தால் கசக்க ஆரம்பித்து விடும். எனவே கீரை போட்டு 7 நிமிடம் வேக வைத்தால் போதுமானது.
இப்போது முருங்கைக்கீரை சாம்பார் தயார்.
இதனை சாதத்தில் ரசம் மாதிரி நிறைய சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இட்லி, தோசைக்கு பல்வேறு பொடி வகைகளை தயார் செய்து சாப்பிடலாம்.
- இன்று கொள்ளுவில் இட்லி பொடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கொள்ளு - அரை கப்
உளுந்தம் பருப்பு - கால் கப்
கடலை பருப்பு - ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய் - 5
பூண்டு - 10 பல்
மிளகு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவைக்கு
செய்முறை:
கறிவேப்பிலையை நன்றாக கழுவி தண்ணீர் இல்லாமல் ஆறவைத்து கொள்ளவும்.
வாணலியை சூடாக்கி அதில் கொள்ளு, பெருங்காயத்தூளை கொட்டி வறுக்கவும்.
அடுத்து உளுந்து, கடலைப்பருப்பை போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்.
மிளகாயையும் வாசம் வரும் வரை வறுத்தெடுத்துக்கொள்ளவும்.
மிளகையும் கருகாமல் வறுத்து கொள்ளவும்.
கறிவேப்பிலையை போட்டு வறுத்து கொள்ளவும்.
கடைசியாக சூடான கடாயில் பூண்டை போட்டு வைத்தால் போதும்.
அனைத்தும் நன்றாக ஆறிய பின்னர் மிக்சியில் போட்டு அரைக்கவும்.
இப்போது சுவையாக கொள்ளு இட்லி பொடி ரெடி.
இந்த பொடியை சூடான சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- பன்னீரில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
- குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுத்தனுப்ப சூப்பரான ரெசிபி இது.
தேவையான பொருட்கள் :
சப்பாத்தி - 5,
பன்னீர் துருவல் - கால் கப்,
கேரட் துருவல் - சிறிதளவு,
நறுக்கிய குடைமிளகாய் - சிறிதளவு,
வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்),
தக்காளி சாஸ், சோயா சாஸ் - தலா 2 டீஸ்பூன்,
வெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் சிறிதளவு வெண்ணெய்விட்டு உருகியதும் வெங்காயம், பன்னீர் துருவல், குடைமிளகாய், கேரட் துருவல், உப்பு, தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து வதக்கி இறக்கவும்.
தோசைக்கல்லில் சிறிதளவு வெண்ணெய் விட்டு உருகியதும், சப்பாத்திகளைப் போட்டு இருபுறமும் சூடு செய்து எடுக்கவும்.
சப்பாத்தியின் ஓரத்தில் தயாரித்து வைத்துள்ள பன்னீர் கலவையை வைத்து, சுருட்டி லஞ்ச் பாக்ஸில் வைத்துக் கொடுத்தனுப்பவும்.
சூப்பரான பன்னீர் ஃப்ராங்கி ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும்.
- கொள்ளு அதிக சூடு நிறைந்தது. தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது.
தேவையான பொருட்கள்
கொள்ளு - 1 கப்,
பெரிய வெங்காயம் - 1,
தக்காளி - 1,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி,
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி,
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி,
கரம் மசாலாத்தூள் - 1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - 1 தேக்கரண்டி,
கொத்தமல்லித்தழை - சிறிது.
செய்முறை
* கொள்ளுவை மலர வேகவிடவும்.
* தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.
* தக்காளி குழைய வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
* இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் மஞ்சள் தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்.
* சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும், உப்புப்போடவும்.
* வேக வைத்த கொள்ளுவை ஓரளவு மசித்து சேர்க்கவும்.
* மசாலா திக்கான பதம் வந்து நன்கு வதங்கியதும் கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறலாம்.
* இப்போது சூப்பரான கொள்ளு மசாலா ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- புளியோதரை மிக்ஸ் செய்வது மிகவும் சுலபம்.
- இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கல் நீக்கிய கருப்பு எள்- 50 கிராம்
உளுந்தம்பருப்பு - 50 கிராம்
கடலைப்பருப்பு - 50 கிராம்
வேர்கடலை - 50 கிராம்
மிளகாய்த்தூள் - 4 டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
புளி - 3 எலுமிச்சைபழத்தின் அளவு
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 3 கீற்று
நல்லெண்ணெய் - 3/4 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு வெறும் வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் எள், உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு இவற்றை தனித்தனியாக போட்டு வறுத்து ஆறவைத்து பொடிசெய்து வைக்கவும்.
வேர்கடலையையும் லேசாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
புளியை ஒரு பாத்திரத்தில் இட்டு அதில் 1 கப் சுடுநீர் ஊற்றி ஊற வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் விட்டு அது காய்ந்ததும் கறிவேப்பிலை, கடுகு, வெந்தயம், சீரகம், மிளகு போட்டு தாளித்த பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள் போட்டு கிண்டி, எள், உ.பருப்பு, க.பருப்பு பொடியினை போட்டு கிளறி விடவும்.
அடுத்து வேர்கடலை, பெருங்காய்த்தூள் மற்றும் புளித்தண்ணீர் தேவையான அளவு உப்பு இட்டு, 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
பச்சை வாசம் போய் கலவை கெட்டியாக வரும் போது இறக்கி விடவும்.
கலவை ஆறிய பின் ஒரு பாட்டிலில் எடுத்து ஃபிரிஜ்ஜில் வைத்துக்கொள்ளவும். தேவையான நேரம் சூடான சோற்றில் போட்டு கிளறி சாப்பிடவும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- காலை அல்லது இரவு மீந்து போன இட்லி வைத்து இந்த ரெசிபியை செய்யலாம்.
- 10 நிமிடத்தில் தயிர் இட்லி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
இட்லி - 6,
புளிக்காத புது தயிர் - 3 டீஸ்பூன்,
மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்,
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,
ஓமப்பொடி - 3 டீஸ்பூன்,
மாதுளம் முத்துக்கள் - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு.
உப்பு - தேவையான அளவு,
அரைக்க:
தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 4,
முந்திரிப்பருப்பு - 6.
தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன்,
பெருங்காயம் - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய் - 1 டீஸ்பூன்.
செய்முறை:
தயிரை நன்றாக கடைந்து வைக்கவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்து தயிருடன் கலந்துகொள்ளுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து தயிரில் கலக்கவும்.
பரிமாறும்போது, கிண்ணங்களில் இட்லிகளை வைத்து, கடைந்த தயிரை அதன்மேல் ஊற்றி கொத்தமல்லித்தழை, ஓமப்பொடி, மாதுளம் முத்துக்கள், மிளகாய்தூள், சீரகத்தூள் துவி பரிமாறலாம்.
சூப்பரான தயிர் இட்லி ரெடி.
அல்லது வெறும் கொத்தமல்லித்தழையை மட்டும் தூவியும் பரிமாறலாம்.
இந்த இட்லிக்கு உப்பு காரம் சற்று தூக்கலாக இருந்தால் சுவையாக இருக்கும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- உளுந்து வைத்து பல்வேறு வெரைட்டி வடைகளை செய்யலாம்.
- இன்று அரிசி மாவில் வடை செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி மாவு - 200 கிராம்,
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 4,
சீரகம் - அரை டீஸ்பூன்,
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,
பெருங்காயத்தூள், உப்பு - சிறிதளவு.
செய்முறை:
கொத்தமல்லி, கறிவேப்பிலை, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
2 கப் நீரைக் கொதிக்கவிட்டு… அதில் உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்க்கவும்.
ஒரு நிமிடத்துக்குப் பிறகு கொத்தமல்லி, அரிசி மாவைத் தூவி கட்டியின்றி கிளறி, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து மேலும் கிளறி இறக்கி ஆறவிடவும்.
இந்த மாவில் சிறிதளவு எடுத்து வடைகளாக தட்டி வைக்கவும்.
கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து தட்டி வைத்த வடைகளை சூடான எண்ணெயில் போட்டு பொரித் தெடுக்கவும்.
விரைவில் பொரிந்துவிடும் இந்த வடை.
இப்போது சூப்பரான அரிசி வடை ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.
- இந்த தொக்கு 2 நாட்கள் வரை கெட்டு போகாது.
தேவையான பொருட்கள் :
நாட்டுத் தக்காளி - கால் கிலோ (பொடியாக நறுக்கவும்)
உரித்த மலைப்பூண்டு - 15 பற்கள்,
இளம் இஞ்சி - 25 கிராம்,
மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன்,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
வெந்தயம் - அரை டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 100 கிராம்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம் போட்டு தாளித்த பின்னர் பூண்டு, துருவிய இஞ்சி சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு சற்று வதங்கியதும் நறுக்கிய தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும். அடிக்கடி கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும். இல்லையெனில் அடி பிடித்து விடும்.
தொக்கு திரண்டு, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- மாம்பழத்தில் குழந்தைகளுக்கு பிடித்தமான பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று மாம்பழ ஜாம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
தித்திப்பான பழுத்த மாம்பழம் - 1,
சர்க்கரை - 1 கப்,
மாம்பழ எசன்ஸ் - சில துளிகள்,
இஞ்சி துருவல் - 1 டீஸ்பூன்,
எலுமிச்சை பழம் - 1.
செய்முறை:
மாம்பழத்தை நன்றாக கழுவி தோலை நீக்கி விட்டு சதை பகுதியை மட்டும் எடுத்து நன்றாக அரைத்து கொள்ளவும். (விருப்பப்பட்டால் சிறிய துண்டுகளாகவும் நறுக்கி கொள்ளலாம்.
அடுப்பில் அடி கனமான பாத்திரம் (அ) நான்ஸ்டிக் கடாயை வைத்து மாம்பழத்தை போட்டு 5 நிமிடம் நன்றாக வதக்கவும்.
அடுத்து அதில் எலுமிச்சை சாறு பிழிந்து நன்றாக வதக்கவும்.
அடுத்து அதில் சர்க்கரை சேர்த்து 25 நிமிடங்கள் மிதமான தீயில் கைவிடாமல் கிளறி விடவும்.
மாம்பழ கலவை திக்கான பதம் வரும் போது இஞ்சி துருவல், மாம்பழ எசன்ஸ் சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் கிளறி விடவும்.
இஞ்சி பச்சை வாசனை போனவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
சிறிது ஜாமை ஒரு தட்டில் ஊற்றினால் அது ஓடாமல் நெகிழ இருக்கும் சமயத்தில் அடுப்பை அணைக்கவும் (ஜாம் போன்றவை செய்யும்போது அடுப்பை 'சிம்'மில் வைத்தால் அடிபிடிக்காது).
நன்றாக ஆறியதும் கண்ணாடி டப்பாவில் போட்டு வைக்கவும்.
இப்போது சூப்பரான மாம்பழ ஜாம் ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இந்த சீசனில் கிடைக்கும் மாங்காயில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- இது பூரி, சப்பாத்தி, சமோசாவுக்கு தொட்டுக் கொள்ள சூப்பரா இருக்கும்.
தேவையான பொருட்கள் :
நீண்ட கிளி மூக்கு மாங்காய் - 3,
சர்க்கரை - 100 கிராம்,
தோல் நீக்கி, துருவிய இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - கால் டீஸ்பூன்,
தேன் - 1 டீஸ்பூன்.
செய்முறை:
மாங்காய்களைக் கழுவி தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.
இத்துடன் இஞ்சித் துருவல் உப்பு, சர்க்கரை சேர்த்துக் கிளறி, ஒரு ஜாடியில் போட்டு, வெள்ளைத் துணியால் வாய்க்கட்டு கட்டி, நல்ல வெயிலில் ஒரு வாரம் வைத்து எடுக்கவும்.
மாந்துருவல் பாகு போல் ஆனதும் தேன் சேர்த்துக் கிளறவும்.
இப்போது சூப்பரான மாங்காய் முரப்பா ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- பல வகையான அல்வா சாப்பிட்டு இருப்பீங்க.
- இன்று வாழை இலையை வைத்து அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வாழை இலை - 2
சோள மாவு - கால் கப்
சர்க்கரை - கால் கப்
முந்திரி - தேவையான அளவு
பூசணி விதை - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - கால் டீஸ்பூன்
நெய் - 6 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* இளசாகவோ, முற்றியதாகவோ இல்லாமல் நடுத்தரமான இரண்டு வாழை இலைகளை எடுத்து நன்றாக சுத்தப்படுத்தி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அவற்றை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு ஊற்றி விழுதாக அரைக்கவும்.
* அடுப்பில் வாணலியை வைத்து, சிறிது நெய் ஊற்றி சூடானதும் அதில் முந்திரி மற்றும் பூசணி விதைகளை தனித்தனியாகப் போட்டு, நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
* அதே வாணலியில் மேலும் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், வாழை இலை விழுதைக் கொட்டி அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
* சோள மாவுடன் சிறிது தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைக்கவும்.
* வாழை இலை விழுது வதங்கி கெட்டியானதும், அதனுடன் சோள மாவு கரைசலை ஊற்றி கட்டிகள் இல்லாமல் கிளறவும். பின்னர் ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்றாகக் கிளறவும்.
* இப்போது அதில் சிறிது சிறிதாக நெய்யை ஊற்றிக் கிளறி, கலவை வாணலியில் ஒட்டாமல் வரும் பதத்தில் அடுப்பிலிருந்து இறக்கவும்.
* இந்த அல்வாவை நெய் தடவிய தட்டில் கொட்டி, வறுத்த முந்திரி, பூசணி விதையை மேலே தூவி அலங்கரிக்கவும்.
* இப்போது சூப்பரான வாழை இலை அல்வா ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health






