என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சமையல்
X
இரும்புச் சத்து, நார்ச்சத்து நிறைந்த தேங்காய் பால் ரசம்
Byமாலை மலர்11 Dec 2021 4:24 AM GMT (Updated: 11 Dec 2021 4:24 AM GMT)
உடலில் நீர்ச்சத்து வற்றாமல் இருக்க தேங்காய் பால் மிகவும் உதவுகிறது. ஒரு டம்ளர் தேங்காய் பால் நாள் முழுவதும் உடலை நீர்ச்சத்து வற்றாமல் வைத்துக் கொள்ள உதவுகிறது.
தேவையான பொருட்கள்
கெட்டி தேங்காய் பால் - 1 கப்
தண்ணீர் கலந்த தேங்காய் பால் - 2 கப்
காய்ந்த மிளகாய் - 4
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 7 பற்கள்
கடுகு - அரை ஸ்பூன்
எண்ணெய் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
மஞ்சள் - கால் ஸ்பூன்
செய்முறை :
பூண்டை ஒன்றும் பாதியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை தண்ணீர் கலந்த தேங்காய் பாலில் ஊற வைத்து கரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
பின் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் இடித்த பூண்டுப் பற்களை போட்டு வதக்குங்கள்.
பின் மஞ்சள் தூளும் சேர்த்துக்கொண்டு வதக்குங்கள்.
தற்போது கரைத்து வைத்துள்ள புளிக் கரைசலை ஊற்றி கொதிக்க வையுங்கள்.
நன்கு கொதித்து பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைத்துவிட்டு கொதிநிலை அடங்கியதும் கெட்டி தேங்காய் பாலை ஊற்றுங்கள்.
கொதிக்கும் போதே ஊற்றாதீர்கள். இல்லையெனில் தேங்காய் திரிந்து வரும்.
கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்குங்கள்.
அவ்வளவுதான் சுவையான தேங்காய் பால் ரசம் ரெடி.
கெட்டி தேங்காய் பால் - 1 கப்
தண்ணீர் கலந்த தேங்காய் பால் - 2 கப்
காய்ந்த மிளகாய் - 4
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 7 பற்கள்
கடுகு - அரை ஸ்பூன்
எண்ணெய் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
மஞ்சள் - கால் ஸ்பூன்
செய்முறை :
பூண்டை ஒன்றும் பாதியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை தண்ணீர் கலந்த தேங்காய் பாலில் ஊற வைத்து கரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
பின் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் இடித்த பூண்டுப் பற்களை போட்டு வதக்குங்கள்.
பின் மஞ்சள் தூளும் சேர்த்துக்கொண்டு வதக்குங்கள்.
தற்போது கரைத்து வைத்துள்ள புளிக் கரைசலை ஊற்றி கொதிக்க வையுங்கள்.
நன்கு கொதித்து பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைத்துவிட்டு கொதிநிலை அடங்கியதும் கெட்டி தேங்காய் பாலை ஊற்றுங்கள்.
கொதிக்கும் போதே ஊற்றாதீர்கள். இல்லையெனில் தேங்காய் திரிந்து வரும்.
கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்குங்கள்.
அவ்வளவுதான் சுவையான தேங்காய் பால் ரசம் ரெடி.
இதை சூப் போன்றும் குடிக்கலாம்.
இதையும் படிக்கலாம்...தித்திக்கும் கோவா ஜாமூன்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X