என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
உடலுக்கு சக்தி தரும் கறிவேப்பிலை ரசம்
Byமாலை மலர்17 Jun 2021 5:27 AM GMT (Updated: 17 Jun 2021 5:27 AM GMT)
கறிவேப்பிலையை தினமும் உடலில் சேர்த்து கொள்வது உடலுக்கு மட்டுமல்ல, கூந்தல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. இந்த ரசத்தை சூப் போன்றும் குடிக்கலாம்.
தேவையான பொருட்கள்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கையளவு
பூண்டு - 6 பல்
தக்காளி - 1
கடுகு - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
புளி - சிறிய எலுமிச்சை பழ அளவு
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
எண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை
மிக்ஸியில் மிளகு, சீரகம், பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து எடுத்து கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம் போட்டு தாளித்த பின்னர் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.
பிறகு அரைத்த பேஸ்ட் ஊற்றி நன்கு வதக்கி விடவும்.
இதில் கரைத்து வைத்து உள்ள புளியை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொத்தமல்லி தூவி ரசம் லேசாக நுரை தட்டி வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.
சூப்பரான கறிவேப்பிலை ரசம் தயார்.
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கையளவு
பூண்டு - 6 பல்
தக்காளி - 1
கடுகு - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
புளி - சிறிய எலுமிச்சை பழ அளவு
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
எண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை
மிக்ஸியில் மிளகு, சீரகம், பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து எடுத்து கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம் போட்டு தாளித்த பின்னர் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.
பிறகு அரைத்த பேஸ்ட் ஊற்றி நன்கு வதக்கி விடவும்.
இதில் கரைத்து வைத்து உள்ள புளியை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொத்தமல்லி தூவி ரசம் லேசாக நுரை தட்டி வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.
சூப்பரான கறிவேப்பிலை ரசம் தயார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X