என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
கலோரிகளை எரித்து உடல் எடையை சீராக பராமரிக்கும் பால்
Byமாலை மலர்11 May 2018 3:02 AM GMT (Updated: 11 May 2018 3:02 AM GMT)
பாலில் வைட்டமின்களும், கால்சியமும் உள்ளடங்கி இருக்கின்றன. அதிகபடியான கலோரிகளை எரித்து உடல் எடையை சீராக பராமரிப்பதற்கு பால் உதவுகிறது.
பாலில் வைட்டமின்களும், கால்சியமும் உள்ளடங்கி இருக்கின்றன. அதிகபடியான கலோரிகளை எரித்து உடல் எடையை சீராக பராமரிப்பதற்கு பால் உதவுகிறது. பசுவின் பால், எருமை பால் ஆகிய இரண்டு விதமான பால் வகைகள்தான் அதிகமாக புழக்கத்தில் இருக்கின்றன. இந்த இரண்டு வகையான பால்களிலும் சில வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
முக்கியமாக கொழுப்பு மற்றும் புரத சத்தில் வேறுபாடு காணப்படுகிறது. எருமை பாலை விட பசும் பாலில் கொழுப்பு குறைவாக இருக்கிறது. மேலும் எருமைபாலை விட பசும் பால் இலகுவான தன்மை கொண்டது. பச்சிளம் குழந்தைகளுக்கு பசுவின் பால் உகந்ததாக இருக்கிறது. பன்னீர், குல்பி, தயிர், நெய் ஆகியவை தயாரிப்பில் எருமை பால் முக்கிய பங்கு வகிக்கிறது.
பாலின் தன்மை அடர்த்தியாக இருப்பதும் அதற்கு காரணமாக இருக்கிறது. பசுவின் பாலை விட எருமை பாலில் ஆக்சிடேசன் செயல்பாடு அதிகமாக இருக்கிறது. அதனால் பசுவின் பாலைவிட அதனை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியும். பொதுவாக எந்த பாலாக இருந்தாலும் அது அதன் கன்றுகளுக்கானது. மனிதர்களுக்கானது அல்ல. இன்னொருபுறம் இயற்கையாகவே பால் பலருக்கு சரியாக செரிமானம் ஆவதில்லை. அதனால் நேரடியாக பாலை பருகுகிறவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
முக்கியமாக கொழுப்பு மற்றும் புரத சத்தில் வேறுபாடு காணப்படுகிறது. எருமை பாலை விட பசும் பாலில் கொழுப்பு குறைவாக இருக்கிறது. மேலும் எருமைபாலை விட பசும் பால் இலகுவான தன்மை கொண்டது. பச்சிளம் குழந்தைகளுக்கு பசுவின் பால் உகந்ததாக இருக்கிறது. பன்னீர், குல்பி, தயிர், நெய் ஆகியவை தயாரிப்பில் எருமை பால் முக்கிய பங்கு வகிக்கிறது.
பாலின் தன்மை அடர்த்தியாக இருப்பதும் அதற்கு காரணமாக இருக்கிறது. பசுவின் பாலை விட எருமை பாலில் ஆக்சிடேசன் செயல்பாடு அதிகமாக இருக்கிறது. அதனால் பசுவின் பாலைவிட அதனை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியும். பொதுவாக எந்த பாலாக இருந்தாலும் அது அதன் கன்றுகளுக்கானது. மனிதர்களுக்கானது அல்ல. இன்னொருபுறம் இயற்கையாகவே பால் பலருக்கு சரியாக செரிமானம் ஆவதில்லை. அதனால் நேரடியாக பாலை பருகுகிறவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X