என் மலர்
உடற்பயிற்சி
உடலிலுள்ள நீர் வியர்வை வழியாக வெளியேறி, உடலில் நீரின் அளவு குறைந்துபோவதால் நீர்க்கடுப்பு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இந்த பிரச்சனைகளுக்கு இந்த முத்திரையை செய்யலாம்.
செய்முறை : விரிப்பில் அமர்ந்து பெருவிரலை வளைத்து, ஐந்தாவது விரலின் (சிறுவிரல்) நுனிப் பகுதியோடு இணையுங்கள். சுட்டு விரல், நடுவிரல், மோதிர விரல் மூன்று விரல்களும் வளைவின்றி நேராக இருக்கட்டும்.
அமரும் முறை: பத்மாசனம் அல்லது அர்த்த பத்மாசனம். ஆசனம் பற்றி தெரியாதவர்கள் சாதாரணமாக சம்மணமிட்டு அமர்ந்தும் (சுகாசனம்) செய்யலாம். கால்களை மடக்கி தரையில் அமரமுடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து செய்யலாம். எந்த நிலையில் அமர்ந்து செய்தாலும், கழுத்தும் முதுகும் வளைவின்றி நேராக இருக்க வேண்டும். கவனம் முழுவதும் செய்யும் முத்திரையின்மீது பதிந்திருக்கட்டும்.
எவ்வளவு நேரம் : குறைந்தபட்சம் 24 நிமிடங்கள். காலையில் 12 நிமிடங்கள், மாலையில் 12 நிமிடங்கள் என பிரித்தும் செய்யலாம். உடற்சூடு மிக அதிகமாக உள்ளவர்கள் அதிகபட்சமாக 48 நிமிடங்கள் வரையிலும் (ஒரு நாளில்) செய்யலாம். ஒரே நேரத்தில் 48 நிமிடங்கள் செய்வது கடினமாக இருக்கும். காலையில் 16 நிமிடங்கள், மதியம் 16 நிமிடங்கள், மாலை அல்லது இரவில் 16 நிமிடங்கள் என மூன்று வேளையும் சேர்த்து 48 நிமிடங்கள் செய்யுங்கள்.
பலன்கள் :
1. உடற்சூடு தணியும்
2. உடலில் நீர் எனும் பூதம் சமநிலையை அடையும்.
3. வியர்வையால் உடலில் ஏற்படும் நீர் இழப்பு சரிசெய்யப்படும்.
4.சூட்டுக் கட்டிகள் வராமல் தடுக்கப்படும். கட்டிகள் இருந்தால் அவை விரைவில் மறையும்.
5. தோல் வறட்சி நீங்கி, தோல் மினுமினுப்பாகும்.
6. தோலிலுள்ள சுருக்கங்கள் மறையும்.
7. இளமையான தோற்றம் உருவாகும்.
8. தாகம் தணியும்.
9. உடலில் ரத்த ஓட்டம் சீரடையும்.
அமரும் முறை: பத்மாசனம் அல்லது அர்த்த பத்மாசனம். ஆசனம் பற்றி தெரியாதவர்கள் சாதாரணமாக சம்மணமிட்டு அமர்ந்தும் (சுகாசனம்) செய்யலாம். கால்களை மடக்கி தரையில் அமரமுடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து செய்யலாம். எந்த நிலையில் அமர்ந்து செய்தாலும், கழுத்தும் முதுகும் வளைவின்றி நேராக இருக்க வேண்டும். கவனம் முழுவதும் செய்யும் முத்திரையின்மீது பதிந்திருக்கட்டும்.
எவ்வளவு நேரம் : குறைந்தபட்சம் 24 நிமிடங்கள். காலையில் 12 நிமிடங்கள், மாலையில் 12 நிமிடங்கள் என பிரித்தும் செய்யலாம். உடற்சூடு மிக அதிகமாக உள்ளவர்கள் அதிகபட்சமாக 48 நிமிடங்கள் வரையிலும் (ஒரு நாளில்) செய்யலாம். ஒரே நேரத்தில் 48 நிமிடங்கள் செய்வது கடினமாக இருக்கும். காலையில் 16 நிமிடங்கள், மதியம் 16 நிமிடங்கள், மாலை அல்லது இரவில் 16 நிமிடங்கள் என மூன்று வேளையும் சேர்த்து 48 நிமிடங்கள் செய்யுங்கள்.
பலன்கள் :
1. உடற்சூடு தணியும்
2. உடலில் நீர் எனும் பூதம் சமநிலையை அடையும்.
3. வியர்வையால் உடலில் ஏற்படும் நீர் இழப்பு சரிசெய்யப்படும்.
4.சூட்டுக் கட்டிகள் வராமல் தடுக்கப்படும். கட்டிகள் இருந்தால் அவை விரைவில் மறையும்.
5. தோல் வறட்சி நீங்கி, தோல் மினுமினுப்பாகும்.
6. தோலிலுள்ள சுருக்கங்கள் மறையும்.
7. இளமையான தோற்றம் உருவாகும்.
8. தாகம் தணியும்.
9. உடலில் ரத்த ஓட்டம் சீரடையும்.
அலுவலகத்தில் ஒரு மாடி கூட ஏறி இறங்காமல் லிப்ட் உபயோகிப்பவர்கள் இனியாவது இந்த சிறு சிறு உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடலின் ரத்த ஓட்டத்தினை சீராக வைத்துக் கொள்ள வேண்டும்.
அலுவலகத்தில் ஒரு மாடி கூட ஏறி இறங்காமல் லிப்ட் உபயோகிப்பவர்கள் இனியாவது இந்த சிறு சிறு உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடலின் ரத்த ஓட்டத்தினை சீராக வைத்துக் கொள்ள வேண்டும். உடலின் சக்தியினை கூட்டிக் கொள்ள வேண்டும். இது வைரஸ், மற்றும் கிருமிகளிடம் இருந்து நம்மை பாதுகாக்கும்.
கீழ்கண்ட அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு உடற்பயிற்சியே இல்லை என்று பொருள்.
* நல்ல தூக்கம், நல்ல உணவு, நோய் எதுவுமின்றி எப்பொழுதும் சோர்வாக இருக்கின்றீர்களா? கண்டிப்பாக உங்கள் அன்றாட வாழ்க்கையினை சுறுசுறுப்பாக ஆக்கி விடுங்கள். அன்றாடம் 30 நிமிடம் நடை பயிற்சியும் செய்யுங்கள்.
* தூங்கி எழும் பொழுதே கீழ் முதுகு வலி, முட்டி வலி, தோள் பட்டை வலி என இருக்கும். இவர்களுக்கு முறையான உடற்பயிற்சியே தீர்வாக அமையும். ஜலதோஷமும் பிடிக்காது.
* ஸ்ட்ரெஸ் அதிகம் இருக்கின்றதா. நீச்சல், சைக்கிள், நடை என ஏதாவது உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். அதிக ஸ்ட்ரெஸ் உடல் பாதிப்பினை ஏற்படுத்தும்.
* ஜீரண சக்தியினை கூட்டவும், உடற்பயிற்சி அவசியம்.
* முறையான தூக்கம் இல்லையா? நீங்கள் தேவையான உடற்பயிற்சி செய்கின்றீர்களா? என்று கவனித்து சரி செய்து கொள்ளுங்கள்.
* மிக அதிகமாக உடற்பயிற்சி செய்வதனைத் தவிருங்கள்.
* யோகா பழகுங்கள்.
* மூச்சுப் பயிற்சி செய்யுங்கள்.
கீழ்கண்ட அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு உடற்பயிற்சியே இல்லை என்று பொருள்.
* நல்ல தூக்கம், நல்ல உணவு, நோய் எதுவுமின்றி எப்பொழுதும் சோர்வாக இருக்கின்றீர்களா? கண்டிப்பாக உங்கள் அன்றாட வாழ்க்கையினை சுறுசுறுப்பாக ஆக்கி விடுங்கள். அன்றாடம் 30 நிமிடம் நடை பயிற்சியும் செய்யுங்கள்.
* தூங்கி எழும் பொழுதே கீழ் முதுகு வலி, முட்டி வலி, தோள் பட்டை வலி என இருக்கும். இவர்களுக்கு முறையான உடற்பயிற்சியே தீர்வாக அமையும். ஜலதோஷமும் பிடிக்காது.
* ஸ்ட்ரெஸ் அதிகம் இருக்கின்றதா. நீச்சல், சைக்கிள், நடை என ஏதாவது உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். அதிக ஸ்ட்ரெஸ் உடல் பாதிப்பினை ஏற்படுத்தும்.
* ஜீரண சக்தியினை கூட்டவும், உடற்பயிற்சி அவசியம்.
* முறையான தூக்கம் இல்லையா? நீங்கள் தேவையான உடற்பயிற்சி செய்கின்றீர்களா? என்று கவனித்து சரி செய்து கொள்ளுங்கள்.
* மிக அதிகமாக உடற்பயிற்சி செய்வதனைத் தவிருங்கள்.
* யோகா பழகுங்கள்.
* மூச்சுப் பயிற்சி செய்யுங்கள்.
இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் பார்வைக் கோளாறுகள் நிவர்த்தியாகி, பார்வை கருடனைப் போல் கூர்மையாகும். இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
யோக சாஸ்த்திரத்தில் பயன்படுத்தப்படும் முத்திரைகளில் கருட முத்திரையும் ஒன்று. இதுவும் கருடாசனத்தைப்போலவே செய்வதற்கு மிகவும் எளிமையான ஒன்று. ஆனால் பலனோ மிகவும் அதிகம். அவற்றை எவ்வாறு செய்வது என்பதையும், அதன் பலன்களையும் கீழே காண்போம்.
செய்முறை :
1. முதலில் இடது கையின் மேல் வலது கையை வைக்கவும்.
2. பிறகு வலது கையின் பெருவிரலை படத்தில் காட்டியபடி இடது கையின் பெருவிரலோடு மடக்கிப் பிடிக்கவும்.
3. இனிமற்ற விரல்கள் அனைத்தையும் நேராக இறக்கையைப் போல் விரிக்கவும். இதுவே கருட முத்திரையாகும்.
கடைசியாக இறக்கையை விரித்தாற்போல் உள்ள மற்ற விரல்களை இங்கு உள்ளது போல் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். இதுவும் கருட முத்திரையில் ஒரு வகையாகும்.
இரண்டு கட்டை விரல்களைத்தவிர உள்ள மற்ற விரல்களை இங்கு உள்ளது போல் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். இதுவும் கருட முத்திரையில் ஒரு வகையாகும்.
குறிப்பு
இந்த கருட முத்திரையை வெறும் வயிற்றில் செய்வது கூடுதல் பலனை அளிக்கும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
பலன்கள்
1. உடல் அசதி, சோர்வு நீங்கும்.
2. உடலில் புத்துணர்ச்சி பெருகும்.
3. நினைவாற்றலை அதிகரிக்கும்.
4. பார்வைக் கோளாறுகள் நிவர்த்தியாகி, பார்வை கருடனைப் போல் கூர்மையாகும்.
செய்முறை :
1. முதலில் இடது கையின் மேல் வலது கையை வைக்கவும்.
2. பிறகு வலது கையின் பெருவிரலை படத்தில் காட்டியபடி இடது கையின் பெருவிரலோடு மடக்கிப் பிடிக்கவும்.
3. இனிமற்ற விரல்கள் அனைத்தையும் நேராக இறக்கையைப் போல் விரிக்கவும். இதுவே கருட முத்திரையாகும்.
கடைசியாக இறக்கையை விரித்தாற்போல் உள்ள மற்ற விரல்களை இங்கு உள்ளது போல் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். இதுவும் கருட முத்திரையில் ஒரு வகையாகும்.
இரண்டு கட்டை விரல்களைத்தவிர உள்ள மற்ற விரல்களை இங்கு உள்ளது போல் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். இதுவும் கருட முத்திரையில் ஒரு வகையாகும்.
குறிப்பு
இந்த கருட முத்திரையை வெறும் வயிற்றில் செய்வது கூடுதல் பலனை அளிக்கும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
பலன்கள்
1. உடல் அசதி, சோர்வு நீங்கும்.
2. உடலில் புத்துணர்ச்சி பெருகும்.
3. நினைவாற்றலை அதிகரிக்கும்.
4. பார்வைக் கோளாறுகள் நிவர்த்தியாகி, பார்வை கருடனைப் போல் கூர்மையாகும்.
இந்த பிராணாயாமம், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோயாளிகளுக்கு பயனுள்ளது. மூச்சின் வேகமும், இருதயத்தின் வேகமும் குறைந்து சீராக இயங்கும். நுரையீரலும், இருதயமும் நல்ல ஆரோக்கியத்தை அடையும்.
பெயர் விளக்கம்: உஜ் என்றால் உத்தமமான, மேலான என்றும் ஜய என்றால் வெற்றி என்றும் பொருள்படுகிறது. மனதை அமைதிப்படுத்துவதற்கு, உத்தமமான வெற்றியை இப்பிராணாயாமம் அளிப்பதால் இப்பெயர் அமைந்துள்ளது.
செய்முறை: அனுகூலமான ஏதாவது ஒரு தியான ஆசனத்தில் அமரவும். இரு கைகளையும் நீட்டி முழங்கால்களின் மேல் கை விரல்களால் சின் முத்திரை செய்யவும். கண்களை மூடவும். உடல் முழுவதையும் தளர்த்திக் கொள்ளவும். நிதானமாகவும், ஆழமாகவும், மூச்சை உள்ளுக்கு இழுக்கவும். மூச்சை உள்ளே இழுக்கும்போது தொண்டை பாகத்தில் க்ளாட்டிஸ் என்ற பகுதியில் லேசான அழுத்தம் கொடுத்து சிறிதளவு அடைத்து தொண்டையிலிருந்து ஸ்.....ஸ் என்ற ஒலியை உண்டு பண்ணவும்.
பிறகு மூச்சுக்காற்றை மெதுவாகவும், ஆழமாகவும் தொடர்ந்து வெளியே விடவும். மூச்சுக் காற்றை வெளியே விடும்போது தொண்டையிலிருந்து உஷ்....உஷ்... என்ற ஒலியை உண்டு பண்ணவும். இது ஒரு சுற்று பயிற்சியாகும். ஆரம்பத்தில் 10 முதல் 15 சுற்று பயிற்சி செய்யவும். தொடர்ந்து பயிற்சியில் 20 முதல் 40 சுற்று வரை பயிற்சி செய்யலாம். மூச்சை உள்ளே இழுக்கும்போது மார்பையும், வயிற்றையும் நன்கு விரிக்கவும். மூச்சை வெளியே விடும்போது மார்பை சம நிலைக்கும், அடிவயிறை ஓரளவு உள்ளுக்கும் சுருக்கவும்.
கவனம் செலுத்த வேண்டிய இடம்: உள்மூச்சின் போதும், வெளிமூச்சின் போதும் உண்டு பண்ணப்படும் ஒலியின்மீதும் ஆக்ஞா சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.
பயிற்சிக் குறிப்பு: இந்த பிராணாயாமத்தை முதுகை நேராக வைத்துக் கொண்டு நின்ற, உட்கார்ந்த, படுத்த, நடக்கும் நிலையிலும் பயிற்சி செய்யலாம்.
பயன்கள்: மனம் அமைதி பெறும். நினைவாற்றல் அதிகரிக்கும். நரம்பு மண்டலம் வலுபெறும். உறக்கமின்மை நீங்கும். உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோயாளிகளுக்கு பயனுள்ளது. மூச்சின் வேகமும், இருதயத்தின் வேகமும் குறைந்து சீராக இயங்கும். நுரையீரலும், இருதயமும் நல்ல ஆரோக்கியத்தை அடையும்.
செய்முறை: அனுகூலமான ஏதாவது ஒரு தியான ஆசனத்தில் அமரவும். இரு கைகளையும் நீட்டி முழங்கால்களின் மேல் கை விரல்களால் சின் முத்திரை செய்யவும். கண்களை மூடவும். உடல் முழுவதையும் தளர்த்திக் கொள்ளவும். நிதானமாகவும், ஆழமாகவும், மூச்சை உள்ளுக்கு இழுக்கவும். மூச்சை உள்ளே இழுக்கும்போது தொண்டை பாகத்தில் க்ளாட்டிஸ் என்ற பகுதியில் லேசான அழுத்தம் கொடுத்து சிறிதளவு அடைத்து தொண்டையிலிருந்து ஸ்.....ஸ் என்ற ஒலியை உண்டு பண்ணவும்.
பிறகு மூச்சுக்காற்றை மெதுவாகவும், ஆழமாகவும் தொடர்ந்து வெளியே விடவும். மூச்சுக் காற்றை வெளியே விடும்போது தொண்டையிலிருந்து உஷ்....உஷ்... என்ற ஒலியை உண்டு பண்ணவும். இது ஒரு சுற்று பயிற்சியாகும். ஆரம்பத்தில் 10 முதல் 15 சுற்று பயிற்சி செய்யவும். தொடர்ந்து பயிற்சியில் 20 முதல் 40 சுற்று வரை பயிற்சி செய்யலாம். மூச்சை உள்ளே இழுக்கும்போது மார்பையும், வயிற்றையும் நன்கு விரிக்கவும். மூச்சை வெளியே விடும்போது மார்பை சம நிலைக்கும், அடிவயிறை ஓரளவு உள்ளுக்கும் சுருக்கவும்.
கவனம் செலுத்த வேண்டிய இடம்: உள்மூச்சின் போதும், வெளிமூச்சின் போதும் உண்டு பண்ணப்படும் ஒலியின்மீதும் ஆக்ஞா சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.
பயிற்சிக் குறிப்பு: இந்த பிராணாயாமத்தை முதுகை நேராக வைத்துக் கொண்டு நின்ற, உட்கார்ந்த, படுத்த, நடக்கும் நிலையிலும் பயிற்சி செய்யலாம்.
பயன்கள்: மனம் அமைதி பெறும். நினைவாற்றல் அதிகரிக்கும். நரம்பு மண்டலம் வலுபெறும். உறக்கமின்மை நீங்கும். உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோயாளிகளுக்கு பயனுள்ளது. மூச்சின் வேகமும், இருதயத்தின் வேகமும் குறைந்து சீராக இயங்கும். நுரையீரலும், இருதயமும் நல்ல ஆரோக்கியத்தை அடையும்.
உடல்நிலையில் பிரச்சனை உருவாவதைத் தடுக்கவும், பிரச்சனை வந்தால் குணமடையவும் யோக முத்திரை பயிற்சிகளைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் பலன் பெற முடியும்.
உடலின் இந்த ஐந்து நிலைகளும் சமச்சீராக இருந்தால் ஒருவர் ஆரோக்கியமானவராக இருப்பார். அவற்றில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் உடலில் நோய்த்தாக்கம் உண்டாகும். அப்படி உடல்நிலையில் பிரச்சனை உருவாவதைத் தடுக்கவும், பிரச்சனை வந்தால் குணமடையவும் யோகப் பயிற்சிகளைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் முடியும் என்று பரிந்துரைக்கின்றன சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவங்கள்.
குறிப்பாக, முத்திரை பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் உறுப்புக்கான செயல்கள் தூண்டப்படுகின்றன என்கிறார்கள் யோகக் கலை நிபுணர்கள்.
முத்திரை பயிற்சி செய்யும் முன்...
முத்திரை பயிற்சிகள் நமது கைகளில் உள்ள ஐந்து விரல்களை வைத்தே செய்யப்படுகிறது. இந்த ஐவிரல்களும் ஐம்பூதங்களை குறிப்பவை என்கின்றன யோக சாஸ்திரம். கட்டைவிரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிரவிரல்
நிலத்தையும், சுண்டுவிரல் நீரையும் குறிக்கிறது.
* வலது பக்க உறுப்புகளுக்கு இடது கையால் செய்வதும், இடப்பக்க உறுப்புகளுக்கு வலது கையால் செய்வதும் பலனைக் கொடுக்கும்.
குறிப்பாக, முத்திரை பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் உறுப்புக்கான செயல்கள் தூண்டப்படுகின்றன என்கிறார்கள் யோகக் கலை நிபுணர்கள்.
முத்திரை பயிற்சி செய்யும் முன்...
முத்திரை பயிற்சிகள் நமது கைகளில் உள்ள ஐந்து விரல்களை வைத்தே செய்யப்படுகிறது. இந்த ஐவிரல்களும் ஐம்பூதங்களை குறிப்பவை என்கின்றன யோக சாஸ்திரம். கட்டைவிரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிரவிரல்
நிலத்தையும், சுண்டுவிரல் நீரையும் குறிக்கிறது.
* பத்மாசனத்தில் அமர்ந்து யோக முத்திரைகளை செய்வது நல்லது.
* நேரம் கிடைக்காதவர்கள் டி.வி பார்க்கும்போது, நிற்கும்போது, பயணம் செய்யும்போதுகூட செய்யலாம்.
* முத்திரைகளை விரலோடு விரல் அழுத்தி செய்ய வேண்டும் என்பதில்லை. மெதுவாகத் தொட்டாலே போதும்.
* எல்லா முத்திரையும் நெருப்பைக் குறிக்கும். அதனால், கட்டைவிரலை இணைத்துத்தான் செய்ய வேண்டும்.
* ஆரம்பத்தில் 10- 15 நிமிடம் செய்யத் தொடங்கி, போகப்போக நேரத்தை கூட்டிக்கொண்டே போகலாம். 45 நிமிடங்கள் வரை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மாதங்கி முத்திரையைத் தொடர்ந்து செய்து வர, நினைத்தவுடன் கவிபாடும் திறன், பேச்சுத் திறன், வாக்கு வல்லமை, நுட்பமான கலைகள் கற்கும் திறன், ஞாபக சக்தி, படிக்கும் திறன் ஆகியவற்றைப் பெறலாம்.
செய்முறை :
விரிப்பில் அமர்ந்து கொண்டு இரண்டு கை விரல்களையும் கோர்த்து, உள்ளங்கை பகுதிகள் நன்றாக ஒட்டி இருக்க வேண்டும். இரண்டு கைகளில், நடுவிரலை மட்டும் மேல்நோக்கி நீட்ட வேண்டும். கைகளை தாடைக்கு அடியில் வைத்துக் கொள்ளவும். எனினும் விரல் நுனி தாடையை தொடக்கூடாது. இதனை, ஒரு நாளைக்கு இரண்டு முறை என 20 நிமிடங்கள் வரை செய்யலாம்.
பலன்கள்
மாதங்கி முத்திரையைத் தொடர்ந்து செய்து வர, நினைத்தவுடன் கவிபாடும் திறன், பேச்சுத் திறன், வாக்கு வல்லமை, நுட்பமான கலைகள் கற்கும் திறன், ஞாபக சக்தி, படிக்கும் திறன், இன்னிசைகளை கற்கும் திறன் ஆகியவற்றைப் பெறலாம்.
பிறரை தன்வசமாக்கிக் கொள்ளும் தன்மையும், பயமற்ற பதற்றமற்ற நிலையும், எந்த ஒரு செயலையும் நன்கு ஆராய்ந்து முடிவெடுத்து செய்து முடிக்கும் திறனும் ஏற்படும்.
புத்தியானது நேர்வழியில் சென்று, ஆத்மஞானம் மேம்படும்.
தாடைகளில் ஏற்படும் இறுக்கம், மனஅழுத்தம் குறையும்.
குறிப்பிட்ட வயது தாண்டியும் பூப்பெய்தாத பெண்கள் இதைச் செய்து வர பூப்பெய்துவார்கள்.
விரிப்பில் அமர்ந்து கொண்டு இரண்டு கை விரல்களையும் கோர்த்து, உள்ளங்கை பகுதிகள் நன்றாக ஒட்டி இருக்க வேண்டும். இரண்டு கைகளில், நடுவிரலை மட்டும் மேல்நோக்கி நீட்ட வேண்டும். கைகளை தாடைக்கு அடியில் வைத்துக் கொள்ளவும். எனினும் விரல் நுனி தாடையை தொடக்கூடாது. இதனை, ஒரு நாளைக்கு இரண்டு முறை என 20 நிமிடங்கள் வரை செய்யலாம்.
பலன்கள்
மாதங்கி முத்திரையைத் தொடர்ந்து செய்து வர, நினைத்தவுடன் கவிபாடும் திறன், பேச்சுத் திறன், வாக்கு வல்லமை, நுட்பமான கலைகள் கற்கும் திறன், ஞாபக சக்தி, படிக்கும் திறன், இன்னிசைகளை கற்கும் திறன் ஆகியவற்றைப் பெறலாம்.
பிறரை தன்வசமாக்கிக் கொள்ளும் தன்மையும், பயமற்ற பதற்றமற்ற நிலையும், எந்த ஒரு செயலையும் நன்கு ஆராய்ந்து முடிவெடுத்து செய்து முடிக்கும் திறனும் ஏற்படும்.
புத்தியானது நேர்வழியில் சென்று, ஆத்மஞானம் மேம்படும்.
தாடைகளில் ஏற்படும் இறுக்கம், மனஅழுத்தம் குறையும்.
குறிப்பிட்ட வயது தாண்டியும் பூப்பெய்தாத பெண்கள் இதைச் செய்து வர பூப்பெய்துவார்கள்.
தற்காலத்தில் குழந்தைகளுக்கு பல்வேறு உடற்பயிற்சிகள் மிகவும் அவசியம். சரி எந்த வயதில் உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
பிள்ளைகளின் உடல் பருமன் என்பது உடனே கவனிக்கப்பட வேண்டிய வாழ்வின் முக்கியமான அம்சமாகும். சரி எந்த வயதில் உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அளவுக்கு மீறி குண்டாக இருந்தாலே, (உடல் பரிசோதனையுடன்) இது போல் நடக்க வைப்பது, பந்து கொடுத்து விளையாட வைப்பது, நீச்சல் பழகக் கற்றுக்கொடுப்பது, மூன்று சக்கர சைக்கிள் ஓட்டச் சொல்வது போன்ற பயிற்சிகளில் ஈடுபடுத்தினாலே, அவர்கள் உடல் ஆரோக்கியமாக, வலுவாக வளர ஆரம்பிக்கும்.

இவர்களுக்குத் தினமும் ஒரு மணி நேரப் பயிற்சி தேவை. வாரத்துக்கு இப்படி 3-4 தடவை உடற்பயிற்சியில் ஈடுபட்டால் போதுமானது. இவர்கள், தொலைக்காட்சி, செல்பேசி, கணினி, வீடியோ விளையாட்டுக்கள் ஆகியவற்றில் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் விளையாடுவதற்கான நேரம் கிடைக்கும்.
வீட்டு வளர்ப்புப் பிராணிகளோடு நடத்தல், வேகமாக நடத்தல், ஓடுதல், குதித்தல், இசைக்கு ஏற்ப ஆடுதல், பூப்பந்து, கால்பந்து, டென்னிஸ், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றைத் தன் நண்பர்களுடன் சேர்ந்து விருப்பத்துடனும் மகிழ்ச்சியுடனும் செய்தாலே போதும்.
எல்லாக் குழந்தைகளையும் ஒரே மாதிரி உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கக் கூடாது. ஒவ்வொரு வருக்கும் அவர்களது உடல் நிலை, உடல் தகுதி, அவர்களுக்கு இருக்கும் நோய்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கான உடற்பயிற்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அளவுக்கு மீறி குண்டாக இருந்தாலே, (உடல் பரிசோதனையுடன்) இது போல் நடக்க வைப்பது, பந்து கொடுத்து விளையாட வைப்பது, நீச்சல் பழகக் கற்றுக்கொடுப்பது, மூன்று சக்கர சைக்கிள் ஓட்டச் சொல்வது போன்ற பயிற்சிகளில் ஈடுபடுத்தினாலே, அவர்கள் உடல் ஆரோக்கியமாக, வலுவாக வளர ஆரம்பிக்கும்.
5-17 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு பள்ளியிலும் வீட்டிலும் பல்வேறு உடற்பயிற்சிகள் மிகவும் அவசியம். பள்ளியில் உடற்பயிற்சி நேரத்தில் இவர்கள், தங்களை அங்குள்ள விளையாட்டுக்களில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். வீட்டுக்கு வந்த பிறகும்கூட, ஏதாவது உடற்பயிற்சி அல்லது விளையாட்டுக்களில் ஈடுபடலாம். இப்படி இரண்டிலும் 30 நிமிடங்கள் செலவிட்டாலே போதுமானது.

இவர்களுக்குத் தினமும் ஒரு மணி நேரப் பயிற்சி தேவை. வாரத்துக்கு இப்படி 3-4 தடவை உடற்பயிற்சியில் ஈடுபட்டால் போதுமானது. இவர்கள், தொலைக்காட்சி, செல்பேசி, கணினி, வீடியோ விளையாட்டுக்கள் ஆகியவற்றில் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் விளையாடுவதற்கான நேரம் கிடைக்கும்.
வீட்டு வளர்ப்புப் பிராணிகளோடு நடத்தல், வேகமாக நடத்தல், ஓடுதல், குதித்தல், இசைக்கு ஏற்ப ஆடுதல், பூப்பந்து, கால்பந்து, டென்னிஸ், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றைத் தன் நண்பர்களுடன் சேர்ந்து விருப்பத்துடனும் மகிழ்ச்சியுடனும் செய்தாலே போதும்.
எல்லாக் குழந்தைகளையும் ஒரே மாதிரி உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கக் கூடாது. ஒவ்வொரு வருக்கும் அவர்களது உடல் நிலை, உடல் தகுதி, அவர்களுக்கு இருக்கும் நோய்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கான உடற்பயிற்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
குண்டான உடல்வாகு கொண்ட பெண்கள் தீவிர உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். குண்டான பெண்கள் எந்த மாதிரியான உடற்பயிற்சியையும், டயட்டையும் கடைபிடிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
குண்டான உடல்வாகு கொண்ட பெண்கள் தோள்பட்டையைவிட அகலமான இடுப்பை பெற்றிருப்பார்கள். கீழ்வயிறு, இடுப்பு, தொடைப் பகுதியில் கொழுப்பு சேரும். அவர்கள் சில குறிப்பிட்ட உடற்பயிற்சிகளையும், உணவுகட்டுப்பாட்டையும் கடைபிடித்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
குண்டான உடல்வாகு கொண்ட பெண்கள் தீவிர உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். கொழுப்பை எரித்து செலவிடும் வகையில் உடல் இயக்க செயல்பாட்டை மாற்ற கடும் உடற்பயிற்சி தேவை. எல்லாம் கலந்த உடற்பயிற்சி முறை ஏற்றது.
தனுராசனம், நவ்காசனம், புஜங்காசனம் ஆகியவை ஏற்றது. பயிற்சி முடிக்கும் போது சர்வாசனம், பிராணாயாமம் செய்யலாம். பெரிய உடல்வாகு கொண்ட பெண்கள் காயமடையும் வாய்ப்பு கொண்டவர்களாக இருப்பதால் இந்த பயிற்சியை முறைவான வழிக்காட்டுதலின் கீழ் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
கார்டியோ: மற்ற உடல்வாகு கொண்டவர்களை விட எடை குறைப்புக்கு அதிக கார்டியோ செய்ய வேண்டும். சுறுசுறுப்பான நடை, தோள் பட்டை, கைகள், கழுத்து, முதுகு, இடுப்பு, தொடை உள்ளிட்ட பகுதிகளை வலுவாக்கும் வகையில் சில நிமிட ஸ்டிரெச்சிங் மற்றும் வலுவாக்கும் பயிற்சியை கார்டியோ உள்ளடக்கியிருக்க வேண்டும். ஸ்பாட் ஜாகிங், கழுத்து சுழற்சி, தோள்பட்டை பயிற்சி, பாதங்களை தொடுவது, பக்கவாட்டில் குனிவது ஆகியவை காயமடைதல், சுளுக்கு பாதிப்பை குறைத்து மூட்டு, தசைகளின் இயக்கத்தை சீராக்கும். வாரத்திற்கு ஐந்து முதல் ஆறு முறை 45 நிமிட தீவிர ஏரோபிக் பயிற்சியும் பரிந்துரைக்கப்படுகிறது.
குண்டான உடல் வாகு கொண்டவர்கள் பருமனாகும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் ஒவ்வொரு முறை சாப்பிடும் போதும் ஊட்டச்சத்தை அதிகமாக்கி, கொழுப்பைக் குறைக்க வேண்டும். அதிக கலோரி உணவும் சர்க்கரையும் கொண்ட கொழுப்பை உண்டாக்கும் உணவுப்பொருட்களை தவிர்க்கவும். இந்த வகையினர் எடை குறைப்பது கடினமானது என்பதால் சரியான உணவு என்பது 30 சதவித கலவையான மாவுச்சத்து, 45 சதவீத நல்ல புரதம், 25 சதவீத ஆரோக்கியமான கொழுப்பு கொண்டிருக்க வேண்டும்.
எல்லா வகையான சர்க்கரைப் பொருட்களையும் (வாழைப் பழம், மாம்பழம், திராட்சையில் இருப்பவை சேர்த்து) வெள்ளை மாவு பொருட்கள், அரிசி, பாஸ்தா, உருளை ஆகியவற்றை தவிர்க்கவும். இவை இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும். இதனால், இன்சுலின், கொழுப்பை சேமிக்கும் ஹார்மோன் அதிகம் சுரக்கும். உங்கள் உடல் இயக்க அளவை அதிகமாக வைத்திருக்க உணவு அளவை சிறு பகுதிகளாக்கி உட்கொள்ளவும். பசியோடு இல்லாமல் ஒவ்வொரு 2-&-3 மணி நேரத்திற்கும் ஏதாவது சாப்பிடவும்.
குண்டான உடல்வாகு கொண்ட பெண்கள் தீவிர உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். கொழுப்பை எரித்து செலவிடும் வகையில் உடல் இயக்க செயல்பாட்டை மாற்ற கடும் உடற்பயிற்சி தேவை. எல்லாம் கலந்த உடற்பயிற்சி முறை ஏற்றது.
தனுராசனம், நவ்காசனம், புஜங்காசனம் ஆகியவை ஏற்றது. பயிற்சி முடிக்கும் போது சர்வாசனம், பிராணாயாமம் செய்யலாம். பெரிய உடல்வாகு கொண்ட பெண்கள் காயமடையும் வாய்ப்பு கொண்டவர்களாக இருப்பதால் இந்த பயிற்சியை முறைவான வழிக்காட்டுதலின் கீழ் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
கார்டியோ: மற்ற உடல்வாகு கொண்டவர்களை விட எடை குறைப்புக்கு அதிக கார்டியோ செய்ய வேண்டும். சுறுசுறுப்பான நடை, தோள் பட்டை, கைகள், கழுத்து, முதுகு, இடுப்பு, தொடை உள்ளிட்ட பகுதிகளை வலுவாக்கும் வகையில் சில நிமிட ஸ்டிரெச்சிங் மற்றும் வலுவாக்கும் பயிற்சியை கார்டியோ உள்ளடக்கியிருக்க வேண்டும். ஸ்பாட் ஜாகிங், கழுத்து சுழற்சி, தோள்பட்டை பயிற்சி, பாதங்களை தொடுவது, பக்கவாட்டில் குனிவது ஆகியவை காயமடைதல், சுளுக்கு பாதிப்பை குறைத்து மூட்டு, தசைகளின் இயக்கத்தை சீராக்கும். வாரத்திற்கு ஐந்து முதல் ஆறு முறை 45 நிமிட தீவிர ஏரோபிக் பயிற்சியும் பரிந்துரைக்கப்படுகிறது.
குண்டான உடல் வாகு கொண்டவர்கள் பருமனாகும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் ஒவ்வொரு முறை சாப்பிடும் போதும் ஊட்டச்சத்தை அதிகமாக்கி, கொழுப்பைக் குறைக்க வேண்டும். அதிக கலோரி உணவும் சர்க்கரையும் கொண்ட கொழுப்பை உண்டாக்கும் உணவுப்பொருட்களை தவிர்க்கவும். இந்த வகையினர் எடை குறைப்பது கடினமானது என்பதால் சரியான உணவு என்பது 30 சதவித கலவையான மாவுச்சத்து, 45 சதவீத நல்ல புரதம், 25 சதவீத ஆரோக்கியமான கொழுப்பு கொண்டிருக்க வேண்டும்.
எல்லா வகையான சர்க்கரைப் பொருட்களையும் (வாழைப் பழம், மாம்பழம், திராட்சையில் இருப்பவை சேர்த்து) வெள்ளை மாவு பொருட்கள், அரிசி, பாஸ்தா, உருளை ஆகியவற்றை தவிர்க்கவும். இவை இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும். இதனால், இன்சுலின், கொழுப்பை சேமிக்கும் ஹார்மோன் அதிகம் சுரக்கும். உங்கள் உடல் இயக்க அளவை அதிகமாக வைத்திருக்க உணவு அளவை சிறு பகுதிகளாக்கி உட்கொள்ளவும். பசியோடு இல்லாமல் ஒவ்வொரு 2-&-3 மணி நேரத்திற்கும் ஏதாவது சாப்பிடவும்.
உடற்பயிற்சியால் வயிற்று தொப்பை குறைவது மட்டுமல்ல, பிற இடங்களில் உள்ள கொழுப்பும் கரைந்துவிடுகின்றன. எந்த உடற்பயிற்சிகள் தொப்பையை விரைவில் குறைக்க உதவும் என்று அறிந்து கொள்ளலாம்.
கொழுப்பைக் கரைக்க ஓடுதல் அல்லது நடத்தல் சிறந்த உடற்பயிற்சியாகும். உடற்பயிற்சியால் வயிற்று தொப்பை குறைவது மட்டுமல்ல, பிற இடங்களில் உள்ள கொழுப்பும் கரைந்துவிடுகின்றன.
உடற்பயிற்சி செய்யும் போது, கலோரிகள் எரிந்து, கொழுப்பு சதவிகிதம் குறைந்துவிடுகின்றன. உடற்பயிற்சியால் வயிற்று தொப்பை குறைவது மட்டுமல்ல, பிற இடங்களில் உள்ள கொழுப்பும் கரைந்துவிடுகின்றன. கொழுப்பைக் கரைக்க ஓடுதல் அல்லது நடத்தல் சிறந்த உடற்பயிற்சியாகும்.
நாம் இளம் வயதில் வைத்திருந்தது போல வலுவான மூட்டுகள் தற்போது இருப்பதில்லை. இதனை மீட்டுக் கொண்டு வர ஜாக்கிங் அல்லது வாக்கிங் சரியாக இருக்காது. அதற்கு சரியான தீர்வு எலிப்டிகல் டிரைனர் மட்டுமே.
சைக்கிள் பயிற்சி இல்லாமல் தொப்பை குறைப்பு சாத்தியமில்லை. கார்டியோ உடற்பயிற்சிகளால் தொப்பையை குறைப்பது முழுமையடையாது. நமது வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகளை வலுவடையச் செய்ய வேண்டும். சைக்கிள் பயிற்சி செய்வதன் மூலம், அடிவயிறு சீரடைதல், உடல் சுழற்சி, தசைகள் செயல்பாடு அதிகமாதல் ஏற்படும்.
சீராக தொப்பையை குறைக்க, சைக்கிள் பயணம் மிகவும் உதவி செய்கிறது. மேலும் சைக்கிளில் பயணிப்பதன் மூலம் பல்வேறு இடங்களையும் பார்வையிட முடிகிறது. சைக்கிளின் வேகம், பயிற்சியின் தீவிரம் ஆகியவற்றைப் பொறுத்து, 30 நிமிடத்தில் 250 முதல் 500 கலோரிகள் கரைக்கலாம்.
பின்புறமாக உடலை சாய்த்து, முன்னால் கொண்டு வருவதன் மூலம் பெண்களுக்கு தொப்பை குறைப்பு சாத்தியமாகிறது. தரையில் நேராக படுத்துக் கொண்டு, கால்களை 90 டிகிரிக்கு உயர்த்தியும், உடலை 90 டிகிரிக்கு உயர்த்தியும் பயிற்சி செய்யலாம். 3 செட்களில் 12 முதல் 16 வரை எடுக்கலாம்.
தொப்பையை குறைக்க மிகச்சிறந்த பயிற்சி. தரையில் படுத்துக் கொண்டு, கால்களை 90 டிகிரிக்கு நேராக உயர்த்த வேண்டும். அப்போது தலையும் சிறிது உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். பயிற்சியின் தீவிரத்தைப் பொறுத்து அதிக கலோரிகளை எரிக்கலாம்.
ஒரு பெரிய ரப்பர் பந்தில், உடலை கிடத்தி கைகளை மார்பின் குறுக்காகவோ அல்லது தலைக்கு பின்புறமாகவோ வைக்கவும். உடலை பக்கவாட்டிலும், முன்னும், பின்னும் நகர்த்தி பயிற்சி செய்யலாம்.
உடற்பயிற்சி செய்யும் போது, கலோரிகள் எரிந்து, கொழுப்பு சதவிகிதம் குறைந்துவிடுகின்றன. உடற்பயிற்சியால் வயிற்று தொப்பை குறைவது மட்டுமல்ல, பிற இடங்களில் உள்ள கொழுப்பும் கரைந்துவிடுகின்றன. கொழுப்பைக் கரைக்க ஓடுதல் அல்லது நடத்தல் சிறந்த உடற்பயிற்சியாகும்.
நாம் இளம் வயதில் வைத்திருந்தது போல வலுவான மூட்டுகள் தற்போது இருப்பதில்லை. இதனை மீட்டுக் கொண்டு வர ஜாக்கிங் அல்லது வாக்கிங் சரியாக இருக்காது. அதற்கு சரியான தீர்வு எலிப்டிகல் டிரைனர் மட்டுமே.
சைக்கிள் பயிற்சி இல்லாமல் தொப்பை குறைப்பு சாத்தியமில்லை. கார்டியோ உடற்பயிற்சிகளால் தொப்பையை குறைப்பது முழுமையடையாது. நமது வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகளை வலுவடையச் செய்ய வேண்டும். சைக்கிள் பயிற்சி செய்வதன் மூலம், அடிவயிறு சீரடைதல், உடல் சுழற்சி, தசைகள் செயல்பாடு அதிகமாதல் ஏற்படும்.
சீராக தொப்பையை குறைக்க, சைக்கிள் பயணம் மிகவும் உதவி செய்கிறது. மேலும் சைக்கிளில் பயணிப்பதன் மூலம் பல்வேறு இடங்களையும் பார்வையிட முடிகிறது. சைக்கிளின் வேகம், பயிற்சியின் தீவிரம் ஆகியவற்றைப் பொறுத்து, 30 நிமிடத்தில் 250 முதல் 500 கலோரிகள் கரைக்கலாம்.
பின்புறமாக உடலை சாய்த்து, முன்னால் கொண்டு வருவதன் மூலம் பெண்களுக்கு தொப்பை குறைப்பு சாத்தியமாகிறது. தரையில் நேராக படுத்துக் கொண்டு, கால்களை 90 டிகிரிக்கு உயர்த்தியும், உடலை 90 டிகிரிக்கு உயர்த்தியும் பயிற்சி செய்யலாம். 3 செட்களில் 12 முதல் 16 வரை எடுக்கலாம்.
தொப்பையை குறைக்க மிகச்சிறந்த பயிற்சி. தரையில் படுத்துக் கொண்டு, கால்களை 90 டிகிரிக்கு நேராக உயர்த்த வேண்டும். அப்போது தலையும் சிறிது உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். பயிற்சியின் தீவிரத்தைப் பொறுத்து அதிக கலோரிகளை எரிக்கலாம்.
ஒரு பெரிய ரப்பர் பந்தில், உடலை கிடத்தி கைகளை மார்பின் குறுக்காகவோ அல்லது தலைக்கு பின்புறமாகவோ வைக்கவும். உடலை பக்கவாட்டிலும், முன்னும், பின்னும் நகர்த்தி பயிற்சி செய்யலாம்.
மனஅழுத்தம், டென்ஷன், வேலைப்பளுவால் ஏற்படும் மனஉளைச்சல், மனக்குழப்பம் ஆகியவற்றால் உண்டாகும் தலைவலிக்கு இந்த முத்திரை சிறந்த பலனளிக்கும்.
செய்முறை : விரிப்பில் அமர்ந்து கொண்டு சுண்டுவிரல், மோதிர விரல், நடுவிரல் ஆகியவற்றை மடக்கி உள்ளங்கையில் பதியும்படி வைக்கவும். ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலின் நுனிகள் தொட்டிருக்க வேண்டும். இரு கைகளிலும் இந்த முத்திரையைப் பிடிப்பது அவசியம்.
பலன்கள்: இந்த முத்திரையை தலைவலி தீரும் வரை செய்யலாம். மனஅழுத்தம், டென்ஷன், வேலைப்பளுவால் ஏற்படும் மனஉளைச்சல், மனக்குழப்பம் ஆகியவற்றால் உண்டாகும் தலைவலிக்கு இந்த முத்திரை சிறந்த பலனளிக்கும்.
அர்த்தசின் முத்திரை
பலன்கள்: 10 - 40 நிமிடங்கள் செய்யலாம். அதிக சிந்தனை, மனக்குழப்பம், மூளை சோர்வடைதல், தலைவலி தீர அர்த்தசின் முத்திரை உதவும்.
பலன்கள்: இந்த முத்திரையை தலைவலி தீரும் வரை செய்யலாம். மனஅழுத்தம், டென்ஷன், வேலைப்பளுவால் ஏற்படும் மனஉளைச்சல், மனக்குழப்பம் ஆகியவற்றால் உண்டாகும் தலைவலிக்கு இந்த முத்திரை சிறந்த பலனளிக்கும்.
அர்த்தசின் முத்திரை
ஆட்காட்டி விரல் கட்டை விரலின் முதல் ரேகையில் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்க வேண்டும்.
இந்த முத்திரை செய்வதால் தீய எண்ணங்கள், அவநம்பிக்கை போன்ற எதிர்மறை எண்ணங்கள் அழிந்து, தன்னம்பிக்கையும், மனோ தைரியமும் உண்டாகிறது.
சிவலிங்க வடிவம் தனக்குள் அனைத்து வடிவங்களையும் அடக்கியுள்ளதோடு, ஆராய்ச்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட மாபெரும் சக்தியையும், பல்வேறு ரகசியங்களையும் பொதிந்து வைத்துள்ளது. இந்த சிவலிங்க வடிவில் காணப்படும் சிவலிங்க முத்திரை அனைத்து நல்ல பலன்களையும் அளிக்கவல்லது.
எப்படிச் செய்வது?
ஆசனத்தில் அமர்ந்து, இடது கையை கிண்ணம் போல் லேசாகக் குழித்து, உள்ளங்கை மேல்நோக்கி இருக்குமாறு, தொப்புள் பகுதிக்கு நேரே வைக்கவும். அதன்மேல், மற்றொரு கையை நான்கு விரல்களையும் மூடிய நிலையிலும் கட்டை விரல் நேராக இருக்கும்படியும் வைக்க வேண்டும் கண்களை மூடி அமர்ந்து கொள்ளவும். ஒருநாளைக்கு இருமுறை என 5 நிமிடங்கள் இதைச் செய்யலாம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்யலாம்.
பலன்கள்
சிவலிங்க முத்திரை செய்யும்போது, நமது உடலில் பஞ்ச பூதங்களும் அதனதன் அளவீடுகளில் நிலைத்து, ஆக்க சக்தியை வெளியிடுகின்றன. உயிரோட்டத்தின் மொத்த வடிவமாக நமது உடல் மாறுவதால் தீய எண்ணங்கள், அவநம்பிக்கை போன்ற எதிர்மறை எண்ணங்கள் அழிந்து, தன்னம்பிக்கையும், மனோ தைரியமும் உண்டாகிறது.
உடலில் உள்ள உஷ்ணம் நீங்கினால், மரணம். அதாவது, சிவம் உடலிலிருந்து அகன்றுவிட்டால் சவம்! உடலில் உள்ள குளிர்ச்சி என்னும் கபத்தை வெளியேற்றி, உஷ்ணத்தைத் தக்க வைக்க சிவலிங்க முத்திரை உதவும். எந்தவித நோயாக இருந்தாலும், விரைவில் விடுபட வேண்டுமென்றால் சிவலிங்க முத்திரையை உட்கார்ந்த நிலையிலோ, நின்ற நிலையிலோ செய்யலாம். குளிர், நடுக்கம், அவநம்பிக்கை, சோர்வு ஆகியவை பறந்தோடும்.
எப்படிச் செய்வது?
ஆசனத்தில் அமர்ந்து, இடது கையை கிண்ணம் போல் லேசாகக் குழித்து, உள்ளங்கை மேல்நோக்கி இருக்குமாறு, தொப்புள் பகுதிக்கு நேரே வைக்கவும். அதன்மேல், மற்றொரு கையை நான்கு விரல்களையும் மூடிய நிலையிலும் கட்டை விரல் நேராக இருக்கும்படியும் வைக்க வேண்டும் கண்களை மூடி அமர்ந்து கொள்ளவும். ஒருநாளைக்கு இருமுறை என 5 நிமிடங்கள் இதைச் செய்யலாம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்யலாம்.
பலன்கள்
சிவலிங்க முத்திரை செய்யும்போது, நமது உடலில் பஞ்ச பூதங்களும் அதனதன் அளவீடுகளில் நிலைத்து, ஆக்க சக்தியை வெளியிடுகின்றன. உயிரோட்டத்தின் மொத்த வடிவமாக நமது உடல் மாறுவதால் தீய எண்ணங்கள், அவநம்பிக்கை போன்ற எதிர்மறை எண்ணங்கள் அழிந்து, தன்னம்பிக்கையும், மனோ தைரியமும் உண்டாகிறது.
உடலில் உள்ள உஷ்ணம் நீங்கினால், மரணம். அதாவது, சிவம் உடலிலிருந்து அகன்றுவிட்டால் சவம்! உடலில் உள்ள குளிர்ச்சி என்னும் கபத்தை வெளியேற்றி, உஷ்ணத்தைத் தக்க வைக்க சிவலிங்க முத்திரை உதவும். எந்தவித நோயாக இருந்தாலும், விரைவில் விடுபட வேண்டுமென்றால் சிவலிங்க முத்திரையை உட்கார்ந்த நிலையிலோ, நின்ற நிலையிலோ செய்யலாம். குளிர், நடுக்கம், அவநம்பிக்கை, சோர்வு ஆகியவை பறந்தோடும்.
தைராய்டு அதிகம் சுரப்பது தைராய்டு குறைவாக சுரப்பது போன்ற இரு நோய்களிலிருந்தும் இந்த முத்திரை நிவாரணம் தருகிறது. இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
இந்த முத்திரை உதான சக்தியை அதிகம் கொடுக்கிறது. அதாவது யோக சாஸ்திரத்தில் 5 வகையான சக்தி உள்ளது. அவைகள் பிராண சக்தி, அபான சக்தி, உதான சக்தி, சமான சக்தி, வியான சக்தி என்று 5 சக்திகள் உள்ளன. இதில் உதான சக்தி தலைக்கும் தொண்டைக்கும் இடையே உள்ள நடுப்பகுதியில் உள்ளது. இது தொண்டைப்பகுதியை பாதுகாக்கிறது.
செய்முறை:
நமது கை விரல்களை குவித்து அதாவது பெருவிரல், நடுவிரல், ஆள்காட்டி விரல், மோதிரவிரல் ஆகிய 4 விரல்களின் நுனியும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு சிறு விரலை நேராக நீட்டிக்கொள்ளவேண்டும். இதுதான் உதான் முத்திரை
நன்மைகள்
இந்த முத்திரை பயிற்சியால் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கிறது. தோல் சம்பந்தமான வியாதிகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
இந்த முத்திரை பயிற்சியால் நெஞ்சு பகுதியிலிருந்து வயிற்றுப்பகுதி வரை சக்தியுடன் பாதுக்காக்கிறது. இருமல் நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
தைராய்டு அதிகம் சுரப்பது தைராய்டு குறைவாக சுரப்பது போன்ற இரு நோய்களிலிருந்தும் நிவாரணம் கிடைக்கிறது. இந்த முத்திரை பயிற்சியால் திக்கி திக்கி பேசுவதிலிருந்தும், பேச்சு சரிவராமல் இருப்பதிலிருந்தும் நிவாரணம் கிடைத்து நன்றாக பேசும் சக்தியும் குரல் வளமும் நன்றாக செயல்படுகிறது.
சிறுநீரகத்தில் ஏற்படும் குறைபாடுகள் நீங்குகிறது. சுவாச மண்டலத்தின் சக்தி அதிகரித்து சுவாச கோளாறுகள் நீங்குகிறது. கை கால்களுக்கு அதிக வலு கிடைக்கிறது.
இந்த முத்திரை பயிற்சியை எந்த நேரத்திலும் செய்யலாம். எத்தனை தடவை வேண்டுமானாலும் செய்யலாம். எவ்வளவு அதிக நேரம் செய்கிறோமோ அந்த அளவுக்கு அதற்குரிய நோயிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கிறது.
செய்முறை:
நமது கை விரல்களை குவித்து அதாவது பெருவிரல், நடுவிரல், ஆள்காட்டி விரல், மோதிரவிரல் ஆகிய 4 விரல்களின் நுனியும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு சிறு விரலை நேராக நீட்டிக்கொள்ளவேண்டும். இதுதான் உதான் முத்திரை
நன்மைகள்
இந்த முத்திரை பயிற்சியால் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கிறது. தோல் சம்பந்தமான வியாதிகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
இந்த முத்திரை பயிற்சியால் நெஞ்சு பகுதியிலிருந்து வயிற்றுப்பகுதி வரை சக்தியுடன் பாதுக்காக்கிறது. இருமல் நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
தைராய்டு அதிகம் சுரப்பது தைராய்டு குறைவாக சுரப்பது போன்ற இரு நோய்களிலிருந்தும் நிவாரணம் கிடைக்கிறது. இந்த முத்திரை பயிற்சியால் திக்கி திக்கி பேசுவதிலிருந்தும், பேச்சு சரிவராமல் இருப்பதிலிருந்தும் நிவாரணம் கிடைத்து நன்றாக பேசும் சக்தியும் குரல் வளமும் நன்றாக செயல்படுகிறது.
சிறுநீரகத்தில் ஏற்படும் குறைபாடுகள் நீங்குகிறது. சுவாச மண்டலத்தின் சக்தி அதிகரித்து சுவாச கோளாறுகள் நீங்குகிறது. கை கால்களுக்கு அதிக வலு கிடைக்கிறது.
இந்த முத்திரை பயிற்சியை எந்த நேரத்திலும் செய்யலாம். எத்தனை தடவை வேண்டுமானாலும் செய்யலாம். எவ்வளவு அதிக நேரம் செய்கிறோமோ அந்த அளவுக்கு அதற்குரிய நோயிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கிறது.






