என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
குழந்தை பராமரிப்பு
X
குழந்தைகளின் வாசிப்பு திறன் கொரோனாவால் பாதிப்பு
Byமாலை மலர்17 Feb 2022 6:17 AM GMT (Updated: 17 Feb 2022 6:17 AM GMT)
கொரோனா தொற்று நோயால் குழந்தைகளின் வாசிப்பு திறனும், எண்ணும் திறனும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு கருத்துக்கணிப்பு முடிவு கூறுகிறது.
மேற்கு வங்காளத்தில் பிரதம் கல்வி அறக்கட்டளை மற்றும் கல்லீரல் அறக்கட்டளையும் இணைந்து ஒரு கருத்துக்கணிப்பை மேற்கு வங்காளத்தில் நடத்தி உள்ளன.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், மேற்கு வங்காளத்தின் 17 மாவட்டங்களில் 11 ஆயிரத்து 189 குழந்தைகள் இந்த கருத்துக்கணிப்பில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதன் முடிவில் பல முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அவை வருமாறு:-
* 3-ம் வகுப்பில் 2-ம் வகுப்பு பாடங்களை 2014-ல் 32.9 சதவீதத்தினரும், 2018-ல் 36.6 சதவீதத்தினரும் வாசிக்க முடிந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று காலத்தில் இது 27.7 சதவீதமாக குறைந்துள்ளது.
* 5-ம் வகுப்பில் உள்ள மாணவர்களில் 2-ம் வகுப்பு பாடங்களை 2014-ல் 51.8 சதவீதத்தினரும், 2018-ல் 50.5 சதவீதத்தினரும் வாசிக்க முடிந்தது. தற்போது இது 48 சதவீதமாக குறைந்துள்ளது.
* 2-ம் வகுப்பில் குறைந்தபட்சம் வார்த்தைகளை வாசிக்கிற திறன் 2014-ல் 54.8 சதவீதமாகவும், 2018-ல் 66.2 சதவீதமாகவும் இருந்தது. தற்போது 53 சதவீதமாக குறைந்துள்ளது.
இந்த முடிவுகளை நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அபிஜித் விநாயக் பானர்ஜி, இணையவெளியில் வெளியிட்டார்.
மாணவர்களின் வாசிப்பு திறன், எண்ணுகிற திறன் குறைந்திருப்பது குறித்து இவர் கருத்து தெரிவிக்கையில், “ஊரடங்கு பொதுமுடக்கம், மாணவர்களின் அடிப்படை கல்வி கற்றலுக்கு இடையூறாக உள்ளது. தற்போது கொரோனா நிலைமை மேம்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் கூடிய விரைவில் திறக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், மேற்கு வங்காளத்தின் 17 மாவட்டங்களில் 11 ஆயிரத்து 189 குழந்தைகள் இந்த கருத்துக்கணிப்பில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதன் முடிவில் பல முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அவை வருமாறு:-
* 3-ம் வகுப்பில் 2-ம் வகுப்பு பாடங்களை 2014-ல் 32.9 சதவீதத்தினரும், 2018-ல் 36.6 சதவீதத்தினரும் வாசிக்க முடிந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று காலத்தில் இது 27.7 சதவீதமாக குறைந்துள்ளது.
* 5-ம் வகுப்பில் உள்ள மாணவர்களில் 2-ம் வகுப்பு பாடங்களை 2014-ல் 51.8 சதவீதத்தினரும், 2018-ல் 50.5 சதவீதத்தினரும் வாசிக்க முடிந்தது. தற்போது இது 48 சதவீதமாக குறைந்துள்ளது.
* 2-ம் வகுப்பில் குறைந்தபட்சம் வார்த்தைகளை வாசிக்கிற திறன் 2014-ல் 54.8 சதவீதமாகவும், 2018-ல் 66.2 சதவீதமாகவும் இருந்தது. தற்போது 53 சதவீதமாக குறைந்துள்ளது.
இந்த முடிவுகளை நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அபிஜித் விநாயக் பானர்ஜி, இணையவெளியில் வெளியிட்டார்.
மாணவர்களின் வாசிப்பு திறன், எண்ணுகிற திறன் குறைந்திருப்பது குறித்து இவர் கருத்து தெரிவிக்கையில், “ஊரடங்கு பொதுமுடக்கம், மாணவர்களின் அடிப்படை கல்வி கற்றலுக்கு இடையூறாக உள்ளது. தற்போது கொரோனா நிலைமை மேம்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் கூடிய விரைவில் திறக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X