என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
திருப்பதி அனந்த பத்மநாபசாமி விரதம்: சுதர்சன சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி
- திருமலையில் அனந்த பத்மநாபசாமி விரதம் கடைப்பிடிக்கப்பட்டது.
- புஷ்கரணியில் சுதர்சன சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி.
திருப்பதி:
திருமலையில் அனந்த பத்மநாபசாமி விரதம் கடைப்பிடிக்கப்பட்டது. அதையொட்டி ஸ்ரீவாரி புஷ்கரணியில் சுதர்சன சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
திருமலையில் ஆண்டுதோறும் 'சுக்ல சதுர்தசி' அன்று அனந்த பத்மநாபசாமி விரதம் கடைப்பிடிப்பது வழக்கம். இந்த நாளில் நாடு முழுவதும் உள்ள 108 திவ்ய தேச கோவில்களில் ஆண்டு தோறும் அனந்த பத்மநாபசாமி விரதம் நடக்கும். 108 திவ்ய தேச கோவில்களில் முதன்மையானவர் 'திருமால்' என்பதால், அனந்த பத்மநாபசாமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன்படி நேற்று திருமலையில் அனந்த பத்மநாபசாமி விரதம் அனுசரிக்கப்பட்டது. காலை 6 மணிக்கு சுதர்சன சக்கரத்தாழ்வாரை கோவிலில் இருந்து பூவராகசாமி கோவில் அருகில் உள்ள ஸ்ரீவாரி புஷ்கரணியின் கரைக்கு கொண்டு சென்றனர். அங்கு, சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை செய்த பின், ஸ்ரீவாரி புஷ்கரணியில் சாஸ்திர ரீதியாக 'சக்கர ஸ்நானம்' எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
இந்தச் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் கடைசிநாள், வைகுண்ட துவாதசி, ரத சப்தமி, அனந்த பத்மநாபசாமி விரதம் ஆகிய முக்கிய நாட்களில் மட்டுமே நடப்பது சிறப்பம்சமாகும்.
சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி முடிந்ததும் ஸ்ரீவாரி புஷ்கரணியில் இருந்து ஏழுமலையான் கோவிலுக்குள் சுதர்சன சக்கரத்தாழ்வாரை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
பெண்களின் நலனுக்காக வரலட்சுமி விரதம் கடைப்பிடிப்பதுபோல், ஆண்களின் நலன் மற்றும் செல்வ செழிப்புக்காக அனந்த பத்மநாபசாமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
சமுத்திரத்தில் சேஷ சயனத்தில் வீற்றிருக்கும் திவ்ய மங்கல வடிவமே அனந்த பத்மநாபன். இந்த விரதத்தில் பூமியின் பாரத்தை சுமக்கும் அனந்தனும், ஆதிசேஷனை படுக்கையாகக் கொண்டு வழிபடப்படும் மகா விஷ்ணுவை பக்தர்கள் வழிபடுகின்றனர்.
ஆதிசேஷன் மீது சயன கோலத்தில் அருள்பாலிக்கும் அனந்த பத்மநாபசாமி வீற்றிருக்கும் மகா விஷ்ணுவை வேண்டி, இந்த விரதத்தை கடைப்பிடிப்பவர்கள் செல்வ செழிப்போடு வாழ்வர் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்