search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருமலையில் பக்தர்களை கவரும் வகையில் மலர்கள்-புகைப்பட கண்காட்சி
    X

    திருமலையில் பக்தர்களை கவரும் வகையில் மலர்கள்-புகைப்பட கண்காட்சி

    • நவதானியங்களில் அனுமன் மற்றும் ராமர் உருவங்களை வடிவமைத்துள்ளனர்.
    • நான்கு மாடவீதிகளில் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    திருமலை:

    நவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி திருமலையில் பக்தர்களை கவரும் வகையில் மலர்கள்-புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் வருடாந்திர பிரம்மோற்சவம் மற்றும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறைக்கும் நவராத்திரி பிரம்மோற்சவம் நடக்கும் நாட்களில் பக்தர்களை கவரும் வகையில் திருமலையில் கவர்ச்சியான, கருத்துகளுடன் மலர்-புகைப்படக் கண்காட்சி நடப்பது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி திருப்பதி தேவஸ்தான தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு கலை வடிவங்களை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதில் துரியோதணன் சபையில் திரவுபதி துகிலுரிக்கப்பட்ட காட்சி, புகழ்பெற்ற மாயா பஜார், மகாபாரதத்தில் இருந்து

    பிருஹன்னலா-உத்தர குமார அத்தியாயங்கள் உள்பட இதிகாசங்களில் இருந்து எடுக்கப்பட்ட தனித்துவமான கருத்துகளுடன் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    விஜயவாடாவை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணர் என்பவர், கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக மலர் கண்காட்சியில் காய்கறிகள், ஐஸ், தானியங்கள், பழங்கள் போன்றவற்றைக் கொண்டு தெய்வ உருவங்களை செதுக்கி வருகிறார். நவதானியங்களில் அனுமன் மற்றும் ராமர் உருவங்களை வடிவமைத்துள்ளார்.

    ராவணன் ஜடாயுவை கொன்றது, ராமரின் மகன்களான லவ-குசா, ராம ஜனனம், மோகினி-பஸ்மாசூரன், பீமசேனன்-பாகாசூரன், அனந்தாழ்வார் அத்தியாயங்கள் தவிர திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசாமி போன்ற கலை வடிவங்கள் பக்தர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதனுடன் திருமலையில் பல்வேறு புகைப்படங்களும் பக்தர்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    அலிபிரியில் உள்ள கருடன் சிலை, திருமலை கோவில் உள்பட பல்வேறு சிற்பங்களை தேவஸ்தானத்தின் பாரம்பரிய சிற்பக்கழகம் வடிவமைத்து வைத்துள்ளது. அதில் கல், சிமெண்டு, இரும்பு, மரம் மற்றும் வண்ணப்பூச்சு வேலைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆயுர்வேதப் பொருட்கள், மதம் மற்றும் ஆன்மிக புத்தகங்கள் வைத்திருப்பது தேவஸ்தானத்தின் பெருமையை உயர்த்தியது.

    இதுதவிர நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் வளாகம், நான்கு மாடவீதிகள், ஸ்ரீவாரி புஷ்கரணி உள்பட பல்வேறு இடங்களில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பெருமாள், சங்கு, சக்கரம் உருவங்களில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. நான்கு மாடவீதிகளில் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கோவிலின் தங்க கொடிமரம், பலிபீடம் பிரத்யேக மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மின் விளக்கு அலங்காரத்தைப் பார்க்க கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் வளாகம், நான்கு மாடவீதிகள் உள்பட பல்வேறு இடங்களில் பலத்தபோலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×