என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    துன்பம், கஷ்டம் வரும் போது வாராகிமாலையில் எந்த பாடலை பாடி வாராகி அம்மனை வழிபாடு செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
    உலகமாரணம் 15:-

    “வரும்துணை யென்று வாராகி என்அன்னையை வாழ்த்தி நிதம்
    பொருந்தும் தகைமையைப் பூணாதவர் புலால் உடலை
    பருந்துங்கழுகும் வெம்பூதமும் வெய்ய பிசாசுகளும்
    விருந்துண்ணப் பட்டுகிடப்பர் கண்டீர் உடல் வேறுபட்டே”

    விளக்கம்:- வாராகி அன்னையை மட்டும் மனதார துதித்து வாழ்த்து பவர்களுக்கு அன்னை என்றும் துணை நிற்பாள் என்றும், அவ்வாறு துதிக்கும் பக்தனுக்கு யாரேனும் இடர்கள் செய்வாராயின் அவர் உடலை வெட்டி வாராகி அன்னை பூதங்களுக்கும், பிசாசுகளுக்கும், பறவைகளுக்கும் விருந்து படைப்பாள். பக்தனை காப்பதில் அவ்வளவு ஆவேசம் அன்னைக்கு.

    பயன்பாடு:- தேவையில்லாமல் நம்மோடு ஒருவர் வீண்வாதிடும் போது இப்பாடலை மனம் ஒன்றி துதித்து வெற்றி பெறலாம்.

    சத்ரு மாரணம் 16:-

    வேறாக்கும் நெஞ்சும் வினையும் வெவ்வேறு வெகுண்டுடலும்
    கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறமான குருதிபொங்கச்
    சேறாக்கும் குங்குமம் கொங்கையிற் பூசம் திலகமிடும்
    மாறாக்கு நேமிபடையாள் வணங்காத வற்கே...

    விளக்கம்:- வாராகியை வணங்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அவளை தூற்றி  பேசகூடாது.அப்படி பேசினால் அவர் குருதியை உறிந்தெடுத்து தன் நெற்றியிலும், நெஞ்சினிலும் பூசி கொள்பவளாம். அதர்வண காளியில் பாரபட்சம் பார்க்காமல் தண்டனை கொடுப்பவள் இவளே. மிகவும் ஆக்ரோஷமிக்கவள் கோபத்தில் .

    பயன்பாடு:- வாராகியை அழைக்கும் போது இப்பாடலை பாடலாம்.

    மிருககுண மாரணம் 17:-

    “பாடகச் சீரடிப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
    ஓடவிட்டே கை உலக்கை கொண்டு உதிரமெல்லாம்
    கோடகதிட்டு வடித்தெடுத்து ஊற்றி குடிக்கும் எங்கள்
    ஆடகக் கும்ப இணைக்கொங்கையாள் என் அம்பிகையே...”

    விளக்கம்:- வாராகி என்னும் பஞ்சமியை தொழுத அன்பர்கள் பகைவரை ஓடவிட்டு தன் கையில் இருக்கும் உலக்கை கொண்டு அடித்து உதிரத்தை குடித்தும் தன் நெஞ்சில் பூசியும் தன் ஆவேசத்தை தீர்த்து கொள்பவள் இந்த வாராகி.

    பயன்பாடு:-
    பகைவர் வேண்டும் என்றே துன்புறுத்தும் போது அன்னையை இப்பாடலை பாடி வணங்கலாம்.

    பாவம் மாரணம் 18:-

    “தாமக் குடிலும் குழையும் பொன் னோலையுந் தாமரைப்பூஞ்
    சேமகழலும் துதிக்கவந்தோற்குச் செகமதனில்
    வாமகரள களத்தமை ஆதி வாராகி வந்து
    தீமை பாவத்தைக் கெடுதாண்டு கொள்வாள் சிவசக்தியே”

    விளக்கம்:- கள்ளமில்லா மனதோடு வாராகியை துதிப்பவரை, அன்னை குழந்தையாக தூக்கி கொஞ்சி மகிழ்பவளாம், மனிதனை எத்துணை பாவம் செய்யினும் அதனை மன்னித்து, தன் பக்தனாய் ஏற்று அந்த பாவத்தை ஒரு நொடியில் தீர்த்து நலமுற செய்பவளாம் அன்னை.

    பயன்பாடு:- நாம் தவறு செய்தோம் என நமக்கே தெரிந்தபின் அன்னையை பணிந்து பாவத்தை போக்கி கொள்ளலாம்.

    ஏவல் சத்ரு மாரணம் 19:-

    ஆராகிலும் நமக்கே வினை செய்யின் அவர் உடல்
    கூராகும் வாளுக்கு இரையிடுவாள் கொன்றை வேணியரன்
    சீரார் மகுடத் தடியினை சேர்க்கும் திரிபுரையாள்
    வாராகி வந்து குடியிருந்தாள் என்னை வாழ்விக்கவே...

    விளக்கம்:- வாராகி அடிபணியும் பக்தனுக்கு, யாரேனும் ஏவல், பில்லி, சூனியம் செய்யின் அன்னை கட்டுகடங்கா கோபத்திற்கு ஆளாக்கப்படுவாள். ஆக்ரோஷமாய் எழுந்து வந்து தன் பக் தனுக்கு தீங்கு செய்தவர் உடலை தன் வீரவாளுக்கு அவள் இரையாக்கி விடுவாள் என்பது இப்பாடலின் கூற்று. இவள் அவ தரித்ததே உலக மக்களை காக்க வேண்டும் என்ற நோக்கத் திற்காக மட்டுமே.

    பயன்பாடு:- நமக்கு யாராவது ஏவல் செய்திருப்பின் இப்பாடலை பாராயணம் செய்து நன்மை பெறலாம்.

    பிசாசு மாரணம் 20:-

    தரிப்பாள் கலப்பையென் அம்மை வாராகி என் சத்ருவைப்
    பொரிப்பாள் பொறியெழச் செந்தீயில் இட்டப் பொரிந்ததலை
    நெரிப்பாள் மண்டைதலை மூளை தின்றுபின் நெட்டுடலை
    உரிப்பாள் படுக்க விரிப்பாள் சுக்காக உலர்த்துபவளே...

    விளக்கம்:- வாராகி அன்னை கலப்பை ஏந்துகின்ற மகாசக்தி உடையவள் இந்த கலப்பை தன் பக்தனின் சத் ருவை அழிப்பதற்கே. அதை எப்படி செய்வாள் என்றால் அவளை தீயில் இட்டு அவள் மூளையை எடுத்து நெருப்பினில் வேகவிடுபவளாம். சண்டியை அழைத்து சத்ரு உடலை கூறிட்டு தூளாக்க செய்பவளாம் இந்த வாராகி.

    பயன்பாடு:- வாகன விபத்து காணும் போது இதைபடிக்கலாம்.

    வெற்றி வடிவம்:-21

    “உளராகிலும் உடன் நாடகிலும் அவர் குற்றவரோடு
    யாராகிலும் நமக்கு ஆற்றுவரோ அடல் ஆழியுண்டு
    காரார் கனத்த உலக்கை உண்டு கலப்பை உண்டு
    வாராகி யென்னும் சண்டப் பிரசண்ட வடிவிஉண்டே”

    விளக்கம்:- இந்த உலகத்தில் வாராகி பக்தன் எதிலும் தோல்வி பெறுவது கடினம், அவளுடைய உலக்கை, கலப்பை யானது  பக்தனை எதிரி தாக்கும் அந்த நொடியில் அவளது கரம் கழுத்தை பிடித்து வேறு அண்டத்திற்கு அவன் உடலை தூக்கி எறிந்து  நம் பக்தனை காப்பவள் இந்த வாராகி.

    பயன்பாடு:- அன்னை அருள் உடனே கிடைக்க இப்பாடலை பாடலாம்.

    பக்தனுக்கு ஆசி வழங்குதல்:-22

    “உலக்கை கலப்பை யளிவிடு வாள்கூட ஆழிசங்கம்.
    வலக்கை இடக்கையில் வைத்த வாராகி ஏன் மாற்றவர்கள்
    இறக்கம் இல்லாத எழில் பெறும் சேனை எதிர்வரிலும்
    விலக்க வல்லால் ஒரு மெல்லி தன் பாதம் விரும்புகவே”...

    விளக்கம்:- ஒளி பொருந்திய உடலினாள் உலக்கை, கலப்பை, வாள் ஏந் திய உருவத்தினாள், தன் பக்தனை எதிர்த்து 1000 சேனை ஏறும் எதிரிகள் வந்தாலும் தன்னை பணிந்த பக்தனுக்காக அத்தனை நபர்களையும் வெட்டி வீழ்த்துவாள். தன் முன்னே எதிரியை மண்டியிட செய்பவள் இவள்.

    பயன்பாடு:- எதிரிகளை தவிடு பொடியாக்க இதை படிக்கலாம்.

    பில்லி சூனியம் நீக்குதல்:-23

    தஞ்சம் உண்பாதம் சரணாகதி என்று சார்ந்தவர் மேல்
    வஞ்சனை பில்லி சூனியம் வைத்தவரை
    நெஞ்சம் பிளந்து நிணகுடல் வாங்கி நெறுபிரனில்
    அஞ்சங் கரங்கொண்டு அறுப்பாள் திரிபுரை ஆனந்தியே.

    விளக்கம்:-

    வாராகி படைப்பு காரணமே,உலகில் ஏவல், பில்லி சூனியம் இருக்க கூடாது என்பதற்காக மட்டுமே, இந்த உலகம் அவளிடம் தஞ்சம் புகுகின்றதாம், அந்த  உலக  அழுகைக்கு காரணமான ஏவல், பில்லி, சூனியம் செய்தவரை, குடல் பிடுங்கி, நெறுப்பில் வேகவிட்டு 8 கரங்கள் மேலோங்க அறுத்து கூறிடுபவளாம்  இந்த வாராகி.

    பயன்பாடு:- உலகம் இயற்கையால் பாதிப்புக்குள்ளாகும் போது இதை பாடினால் நன்மை பெறலாம்.

    பக்தனை காட்டும் நிலை:-24

    “அலைபட்டு  நெஞ்சம் அலைந்து உயிர்சேர
    கொலைபட்டு உடலம் அலைக்யால் கழுகுகள் சூழ குருதி பொங்க
    தலை கெட்ட வயம் வேறாய்ப் பதைபற்று சாவர் காண்பீர்
    நிலை பெற்ற நேமிப் படையாள் நினையாதவரே

    விளக்கம்:- இந்த உலகில் வாழ்வை வெறுத்தவர்களுக்கு அற்புத கனி இந்த வாராகி, தன்னை இந்த உலகத்தில் தூற்றியவர்கள் எல்லாம் ஆச்சரியமாய் பார்க்கும் அளவிற்கு தன் பக்தனை மாற்றுவாள். தன் பக்தனை அவதூறாக பேசுபவரை வாயடைக்க செய் பவள் இந்த வாராகி தாய்.

    பயன்பாடு:- வாழ்வை வெறுக்கும் நிலை ஏற்பட்டால் அன்னை இப்பாடலின் மூலம் துணை புரிவாள்.
    பெருமாள் கோவிலில் வீற்றிருக்கும் கருட பகவானை வணங்கும் போது பின்வரும் கருட துதியைக் கூறி வணங்கினால் கருட பகவான் அருள்கிட்டும்.
    பெருமாள் கோவிலில் வீற்றிருக்கும் கருட பகவானை வணங்கும் போது பின்வரும் கருட துதியைக் கூறி வணங்கினால் கருட பகவான் அருள்கிட்டும்.

    கருடாய நமஸ்துப்யம் ஸர்வ
    சர்பேந்நர சத்ரவே
    வாஹனாய மஹாவிஷ்ணோ
    தார்ஷ்யாய அமித தேஜயே
    கர்ப்பரட்சாம்பிகைக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை படிப்பதால் சகல வித சௌபாக்கியங்களும், கர்ப்பபையிலுள்ள வியாதிகள் விலகி புத்ரபாக்கியம் பெறுவார்கள்.
    கர்ப்பிணிகளுக்கும் கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கும் எவ்விதமான கெடுதலும் ஏற்படாமல் காத்து, ஸுகப்ரஸவத்தின் மூலம் சத்புத்திரன் பிறக்க அருள் புரிந்து வரும் ஸ்ரீ கர்ப்ப ரக்ஷாம்பிகையை இந்த ஸ்லோகத்தின் மூலம் நாடும் பெண்களுக்கு கர்ப்ப ஸ்ராவம் (அபார்ஷன்) ஏற்படுவதில்லை இந்த கலியிலும் கூட.

    இந்த ஸ்லோகத்தை படிப்பதால் சகல வித சௌபாக்கியங்களும், கர்ப்பபையிலுள்ள வியாதிகள் விலகி புத்ரபாக்கியம் பெறுவார்கள்.

    ஸ்ரீ மாதவீகானனஸ்தே ரக்ஷாம்பிகே
    பாஹி மாம் பக்தம் ஸ்துவந்தம் /
    வாபீதடே வாமபாகே வாம
    தேவஸ்யதேவ்ஸ்ய தேவீஸ்திதாத்வம் /
    மாந்யா வரேண்யாவதான்யா-பாஹி
    கர்ப்பஸ்த்த ததா பக்த லோகான் ( ஸ்ரீ)

    ஸ்ரீகர்ப்பரக்ஷாபுரயோ திவ்ய
    சௌந்தர்ய யுக்தா ஸுமாங்கல்ய காத்ரி
    தாத்ரீ ஜனத்ரீ ஜனானாம் திவ்ய
    ரூபாம் தயார்த்ராம் மனோக்ஞாம் பஜேதாம் ( ஸ்ரீ)

    ஆஷாடமாஸே ஸுபுண்யே -சுக்ர
    வாரே ஸுகந்தேன கந்தேன லிப்தா
    திவ்யாம்பராகல்ப வேஷா வாஜ
    பேயாதி யாகஸ்த பக்தைஸ்ஸுத்ருஷ்டா (ஸ்ரீ)

    கல்யாண தாத்ரீம் நம்ஸ்யே - வேதி
    காட்யஸ்த்ரியாகர்ப்பரக்ஷாகரீம் த்வாம்
    பா லைஸ்ஸதாஸேவிதாங்க்ரிம் - கர்ப்ப
    ரக்ஷார்த்தமாராதுபேதைருபேதாம் ( ஸ்ரீ)

    ப்ரம்ஹோத்ஸவே விப்ரவித்யாம் - வாத்ய
    கோஷேண துஷ்டாம் ரதே ஸந்நிவிஷ்டாம்
    ஸர்வார்த்த தாத்ரீம் பஜேஹம் - தேவ
    ப்ருந்தைரபீட்யாம் ஜகன்மாதரம்- த்வாம் (ஸ்ரீ)

    ஏதத்க்ருதம் ஸ்தோத்ரரத்னம் - தீக்ஷி
    தானந்தராமேண தேவ்யாஸ்ஸுதுஷ்ட்யை
    நித்யம் படேத்யஸ்து பக்த்யா - புத்ர
    பௌத்ராதி பாக்யம் பவேத்தஸ்ய நித்யம் ( ஸ்ரீ)
    வாராகி வழிபாடு மிகவும் கட்டுபாட்டுக்கு உரியது. அனைத்தும் புரிந்து தான் நெருங்க வேண்டும். வாராகி மாலையின் பொருளையும் படிப்பதால் கிடைக்கும் பயனையும் அறிந்து கொள்ளலாம்.
    வாராகி வழிபாடு மிகவும் கட்டுபாட்டுக்கு உரியது. அனைத்தும் புரிந்து தான் நெருங்க வேண்டும்.

    பகைமுடித்தல்:-

    வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல் முன் வானவர்க்காச்
    சிரித்துப் புரம் எரித்தோன் வாம பாகத்துத் தேவிஎங்கள்
    கருத்திற் பயிலும் வாராகி என் பஞ்சமி கண்சிவந்தாற்
    பருத்தி பொதிக்கிட்ட தீப்பொறிகாணும் பகைத்தவர்கே...

    பொருள்:-

    வாராகியின் வல்லமை புரியாமல், அவள் வணங்கும் பக்தனை பகைத்து கொண்டால் இவள் பொருத்திருக்கமாட்டாள். ருத்திரனின் இயக்கம் இருக்கும் இந்த வாராகியாகப்பட்டவள், தன் பக்தனுக்கு தீங்கு இழைத்தவர்களை கண்டு கண்சிவந்து வெட்டி வீழ்த்துவாள் பொருத்திருக்கமாட்டாள் பக்தனை காப்பதில் அவ்வளவு  ஆவேசம்.

    பயன்:-

    வேண்டுமென்றே ஒருவர் நமக்கு தீங்கு செய்தால் அதை விலக்க இதை படிக்கலாம்.

    வாக்கு வெற்றி:-

    “பாப்பட்டசெந்தமிழ் பாவாணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
    பூசப்பட்டதும் பொறிபட்டதோ? நின்னையே புகழ்ந்து
    கூப்பிட்டது உன்செவி கேட்கலையோ? அண்ட கோளமட்டும்
    தீப்பட்டதோ? பட்டதோ நிந்தை யானர்தெரு எங்குமே

    விளக்கம்:-

    பொதுவாக நம் தாய் தந்தை என்று தான் நாம் விரும்பி வணங்கும் தெய்வத்தை அழைக்கின்றோம். இது நமக்கும் நாம் வணங்கும் தெய்வத்திற்கும் உள்ள

    நெறுக்கத்தை காட்டுகின்றது. மேலும் செந்தமிழ் பாக்களால் உன்னை அர்ச்சித்ததெல்லாம் தீயில் எரிந்ததா புகழ்ந்து கூப்பிட்டது உன்  கமல செவிகளில்

    விழவில்லையோ? வானமுகடு வரை நெருப்பால் இந்த உலகம் அழிந்ததா என மனம் உருகி வேண்டுகின்ற வடிவத்தை சொல்லுகின்றது.

    பயன்பாடு:-

    மிக பெரிய ஆபத்தில் சிக்கி இருக்கும்போது இப்பாடலை பாடி தற்காத்து கொள்ளலாம்.

    தேவி வருகை:-

    எங்கும் எரியக் கிரிகள் பொடிபட, எம்பகைஞர்
    அங்கம் பிளந்திட விண்மீன் கிழிந்திட ஆர்தெழுந்து
    பொங்கும் கடல்கள் சுவறிட சூலத்தை போகவிட்டு
    சிங்கத்தின் மீது வருவாள் வாராகி சிவசக்தியே

    விளக்கம்:-

    வாராகியின் கோபம் எப்படிபட்டது தெரியுமா? அன்னை வருகிறாள், மிகபெரிய உக்ர ரூபிணியாய் சிம்ம வாகனத்தில் ஏறி நின்றே வருகின்றாள். அவள்

    வருவதற்கு முன்பே அவள் சூலம் பாய்ந்து வருகின்றது. இந்த நிகழ்வு நடக்கின்றபோது, நெருப்பு பறக்கின்றதாம், மலைவெடித்து சிதறுகின்றதாம், பகைவர்கள்

    உடல் பிளந்து விழுகின்றார்கள். விண்ணும் மண்ணும் பிளக்கின்றது, கடல் வற்றிபோகின்றது. அவள் சக்திக்கு இது ஒரு விளக்கம்.

    பயன்:-

    உடல்நிலை பெரிதும் பாதிக்கின்றபோது இப்பாடலை படித்து பயன்பெறலாம்.

    ஆன்ம பூஜை:-

    ‘‘சக்தி கவுரி மகாமாயி ஆயிஎன் சத்துருவைக்
    குத்தி இரணக் குடலைப் பிடுங்கிக் குலாவிநின்றே
    இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
    நித்தம் நடித்து வருவாள் வாராஹி என் நெஞ்சகத்தே.

    விளக்கம்:-

    வாராகி தேவி சக்தி, கவுரி, மகாமாயி என்ற மூன்று தெய்வங்களின் வவானவள். அவள் தன் பக்தனுடைய சத்ருக்களை எப்படி சூரையாயிடுவாள் என

    மேற்கண்ட பாடல் விளக்குகின்றது. வாராகி தன் பக்தனை சோதித்த எதிரியை தன் கூரிய நகங்களால் குத்தி அவள் வயிற்றை கிழித்து பிடுங்கி வீசுகின்றாள். எட்டு திசைகளிலும் மலைகள் வெடித்து சிதறுகின்றது. அப்போது நளின நடையோடு வந்து அவள் குருதி கொண்டு தன் பக்தன் நெற்றியில் வெற்றி திலகமிடுவாள்.

    அமைதியை நோக்கி நாம் செயல்பட நினைத்தால் இப்பாடலை பிராயணம் செய்யலாம்.

    தேவி தாபணம்:-

    ‘‘நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்றவன் நிர்க்குணத்தி
    நஞ்சணி கண்டத்தி நாராயணி தனை நம்புதற்கு
    வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை  உண்ணக்
    கொஞ்சி நடந்து வருவாள் வாராகி குலதெய்வமே....

    விளக்கம்:-

    தேவி கொஞ்சி அடிமேல் அடி எடுத்து வைத்து நட்ந்து வருகிறாள். எதற்கு, தன்னை வேண்டி நின்ற பக்தரை வருத்துபவரை வதம் செய்ய, அதற்கு ஏன் கொஞ்சி

    நடக்க வேண்டும், தன்னை வணங்கும் பக்தர்களை காக்க போகிறோம் என்ற மகிழ்ச்சியில்தான் அவள் நஞ்சுடைய கண்டம் உடையவள் என்பது பொருள்.

    பயன்:-

    அன்பாக அன்னையை அழைக்கும் போது இதை பாடலாம்.

    அடக்குதல்:-

    ‘‘மதுமாமிசம் தனைத் தின்பாள் இவாளன்று மாமறையோர்
    அதுவே உதாசினம் செய்தி டுவார் அந்த அற்பர்கள் தம்
    கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடிதடித்து
    விதிர்வானில் வெட்டி எறிவாள் வாராகி என் மெய்தெய்வமே..

    விளக்கம்:-

    வாராகி அன்னை ஆவேசமிக்க தெய்வம், அவளது தன்மை புரியாமல் அவளை அலட்சியம்  ஏளனம் செய்தாலோ அவர்கள் வாயடைத்து ஊமையாய் மாறுவர். மேலும் இரண்டு கூறுகளாக அவர்களை வெட்டி எரிந்து விடுவாள் என்பது பொருள்.

    பயன்:-

    எதிர்ப்புகளை எளிதில் வெல்லலாம்.

    அம்பிகை காட்சி:-

    ‘‘ஐயும் கிலியும் என்று தொண்டர் போற்ற அரியபச்சை
    மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியும் மலர்க்
    கையும், பிரம்பும் கபாலமும் சூலமும் கண் எதிரே
    வையம் துதிக்க வருவாள் வாராகி மலர்கொடியே...’’

    விளக்கம்:-

    மனதை மகிழ்விக்கும் பச்சை நிறதிருமேனி, கருணை பெருகும் விழிகள், பிரம்பு, கபாலம், சூலம், ஏந்திய திருகரங்கள், இப்படி வெளிப்படுத்துகிறாள். அதுவும் ஐம்

    கலௌம் என்ற பீஜ மந்திரங்களாக மனம் மொன்றித் துதிக்கின்ற அன்பர் முன்காட்சி கொடுக்கின்றாள்.

    பயன்:-

    அம்பிகையை அழைக்க இப்பதிகத்தை பாடலாம்.

    காக்கும் வடிவம்:-

    தாளும் மனமும் தலையும் குலையத் தரியவர்கள்
    மாளும் படிக்க வரம் தருவாய் உன்னை வாழ்த்தும் அன்பர்
    கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும்
    வாளும் கட்கமும் சூலமும் ஏந்திவரும் துணையே

    விளக்கம்:-

    வாராகியை மனமொன்றி துதிக்கும் பக்தன் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் வெற்றி சங்கு ஒலிக்க வாளும், சூலமும் தாங்கியவர்களாக துணைக்கு

    வருகிறாள் வாராகி அவளைப் போற்றி பணியும் அன்பர்களுக்கு நவக்கிரகங்களாலோ  பகைவராலோ பயமில்லை, ஏனெனில், வாராகியின் அருள்

    பெருங்கவசமாய் காத்து நிற்கும்.

    பயன்-:--

    தன்னைதற்காத்து கொல்ல இந்த பதிகம் பாடலாம்.

    அன்னையின் அருள்:-

    வரும்துணை என்று வாராகி என்றன் அன்னையை  வாழ்த்தி நிதிம் பொருந்தும் தகைமையம் பூணாதவர்  புலால் உடலை பருந்தும் கழுகும் வெம்பூதமும் வெய்ய பிசாசுகளும் விருந்துண்ண பட்டுகிடப்பர் கண்டீர், உடற் வேறுபட்டே

    விளக்கம்:-

    உயிர்துணையாக விளங்கும் அருந் தில் நாயகி வாராகியை பாடிப்பரவுதலே பிறவிபயன். அதை செய்யாதவர்கள் அனைவரும் வெறும் தோல் போர்த்திய உடன் கூடுகள், அந்த  உடற்கூடுகள் பருந்து, கழுகு, பேய் மற்றும் பூதங்களின் விருந்தாகும்.

    பயன்:-

    இதை பாடினால் அன்னை அருள் எளிமையாக கிடைக்கும்.
    நரசிம்மருக்கு உகந்த ருணமோசனம் என்ற இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எவ்வளவு பெரிய கடனும் விரைவில் நீங்கிவிடும்.
    1. தேவதா கார்ய ஸித்யர்த்தம்
    ஸபாஸ்தம்ப ஸ்முத்பவம்!
     ஸ்ரீ நரசிம்ஹம், மஹாவீரம்,
     நமாமி ருண முக்தயே!!
    2. லஷ்மியாலிங்கித வாமாங்கம்
     பக்தானாம், வரதாயகம்!
     ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
     நமாமி ருண முக்தயே!!
    3. ஆந்த்ர மாலாதரம் சங்க,
     சக்ராப்ஜாயுததாரினம்!
     ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
     நமாமி ருண முக்தயே!!
    4. ஸ்மரணாத் ஸர்வபாபக்னம்
     கத்ரூஜ விஷ நாசனம்!
     ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
     நமாமி ருண முக்தயே!!
    5. ஸிம்ஹ நாதேன மஹதா
     திக்தந்தி பய நாஸனம்!
     ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
     நமாமி ருண முக்தயே!!
    6. ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீஸம்
    தைத்யேஸ்வர விதாரணம்!
     ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
     நமாமி ருண முக்தயே!!
    7. க்ரூரக்ரஹை பீடிதானாம்!
     பக்தானாமப்யப்ரதம்!
     ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
    நமாமி ருண முக்தயே!!
    8. வேத வேதாந்த யக்ஞேஸம்
     ப்ரஸ்மருத்ராதி வந்திதம்!
     ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
     நமாமி ருண முக்தயே!!
    9. யஇதம் படதே நித்யம்
     ருணமோசன ஸம்சஞிதம்!
     அந்ருணீஜாயதே ஸத்ய :
     தனம் ஸீக்ரமவாப்னூயாத்!!

    இந்த ஸ்தோத்திரத்தை தினமும் மனமுருகி படிப்பவருக்கு எவ்வளவு பெரிய கடனும் விரைவில் நீங்கிவிடும். அதோடு நியாயமான முறையில் சகல செல்வங்களும் வந்து சேரும்.
    வீட்டில் நரசிம்மரின் படத்தை வைத்து நெய்தீபம் ஏற்றி பூஜை செய்து மந்திர துதியை 18 முறை உச்சரித்து வர வேண்டும். அசைவ உணவை முற்றிலும் தவிர்ப்பது சிறந்த பலனை கொடுக்கும்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த லட்சுமி நரசிம்மர் மந்திரத்தை தினமும் தொடர்ந்து சொல்லி வழிபாடு செய்து வந்தால் தீராத கஷ்டங்கள் தீரும்.

    ஓம் நமோ நாரஸிம்ஹாய
    வஜ்ர தம்ஷ்ராய வஜ்ரிணே
    வஜ்ர தேஹாய நகாய ச

    முதலில் ஒரு லட்சுமி நரசிம்ம சுவாமியின் சன்னதியில் மாலை வேளையில் இம்மந்திரத்தை 18 தடவைகள் உச்சாடனம் செய்து ஆரம்பிக்க வேண்டும்.
    ஒரு சுவாதி நட்சத்திரத்தன்று மாலையில் பழங்கள், புஷ்பங்கள், தேங்காய், பழம், பசும்நெய், வஸ்திரம் ஆகியவற்றை சமர்ப்பித்து அர்ச்சனை ஆராதனைகளால் வழிபாட்டை தொடங்கி நமது குற்றங்குறைகளை தீர்த்து நல்வழிகாட்டும்படி மனமுருகி வழிபட்டு விட்டு பிறகு வழிபாட்டை வீட்டில் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் தீராத கஷ்டங்கள் தீரும்.

    வராத நல்வாய்ப்புகள் வந்து நம் வாசலில் வணங்கி நிற்கும். வீட்டில் நரசிம்மரின் படத்தை வைத்து நெய்தீபம் ஏற்றி பூஜை செய்து மந்திர துதியை 18 முறை உச்சரித்து வர வேண்டும். அசைவ உணவை முற்றிலும் தவிர்ப்பது சிறந்த பலனை கொடுக்கும். 
    அங்காளபரமேஸ்வரிக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் அல்லது வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் மங்களம் உண்டாகும்.
    1. ஓம் அங்காள அம்மையே     போற்றி
    2. ஓம் அருளின் உருவே     போற்றி
    3. ஓம் அம்பிகை தாயே     போற்றி
    4. ஓம் அன்பின் வடிவே     போற்றி
    5. ஓம் அனாத ரட்சகியே     போற்றி
    6. ஓம் அருட்பெருந்ஜோதியே     போற்றி
    7. ஓம் அன்னப்பூரணியே     போற்றி
    8. ஓம் அமுதச் சுவையே     போற்றி
    9. ஓம் அருவுரு ஆனவளே     போற்றி
    10. ஓம் ஆதி சக்தியே     போற்றி
    11. ஓம் ஆதிப்பரம் பொருளே      போற்றி
    12. ஓம் ஆதிபராசக்தியே     போற்றி
    13. ஓம் ஆனந்த வல்லியே     போற்றி
    14. ஓம் ஆன்ம சொரூபினியே     போற்றி
    15. ஓம் ஆங்காரி அங்காளியே     போற்றி
    16. ஓம் ஆறுமுகன் அன்னையே     போற்றி
    17. ஓம் ஆதியின் முதலே     போற்றி
    18. ஓம் ஆக்கு சக்தியே     போற்றி
    19. ஓம் இன்னல் களைபவளே     போற்றி
    20. ஓம் இடர்நீக்குபவளே     போற்றி
    21. ஓம் இமயத்து அரசியே     போற்றி
    22. ஓம் இச்சா சக்தியே     போற்றி
    23. ஓம் இணையிலா தெய்வமே     போற்றி
    24. ஓம் இரவு பகலாகி இருப்பவளே     போற்றி
    25. ஓம் இயக்க முதல்வியே     போற்றி
    26. ஓம் இறைவனின் இறைவியே     போற்றி
    27. ஓம் இகம்பர சுகமே     போற்றி
    28. ஓம் ஈசனின் தாயே     போற்றி
    29. ஓம் ஈஸ்வரி தாயே     போற்றி
    30. ஓம் ஈகைப் பயனே     போற்றி
    31. ஓம் ஈடில்லா தெய்வமே     போற்றி
    32. ஓம் ஈசனின் பாதியே     போற்றி
    33. ஓம் ஈஸ்வரி அங்காளியே     போற்றி
    34. ஓம் ஈசனின் இயக்கமே     போற்றி
    35. ஓம் ஈஸ்வரி ஆனவளே     போற்றி
    36. ஓம் ஈகை குணவதியே     போற்றி
    37. ஓம் உண்மை பொருளே     போற்றி
    38. ஓம் உலகை ஈன்றாய்     போற்றி
    39. ஓம் உலகில் நிறைந்தாய்     போற்றி
    40. ஓம் உருவம் ஆனாய்     போற்றி
    41. ஓம் உமை அம்மையே     போற்றி
    42. ஓம் உயிரே வாழ்வே     போற்றி
    43. ஓம் உயிராய் இருப்பாய்     போற்றி
    44. ஓம் உடலாய் அமைந்தாய்     போற்றி
    45. ஓம் உமாமகேஸ்வரியே     போற்றி
    46. ஓம் ஊனுயிர் ஆனாய்     போற்றி
    47. ஓம் ஊக்கம் அருள்வாய்     போற்றி
    48. ஓம் ஊழ்வினை அறுப்பாய்     போற்றி
    49. ஓம் ஊரைக்காப்பாய்     போற்றி
    50. ஓம் ஊழலை ஒழிப்பாய்     போற்றி
    51. ஓம் ஊக்கமாய் நிறைவாய்     போற்றி
    52. ஓம் ஊடல் நாயகியே     போற்றி
    53. ஓம் ஊழ்வினை களைவாய்     போற்றி
    54. ஓம் ஊற்றும் கருணை மழையே     போற்றி
    55. ஓம் எங்கும் நிறைந்தாய்     போற்றி
    56. ஓம் எங்களை காப்பாய்     போற்றி
    57. ஓம் எண்குண வல்லி     போற்றி
    58. ஓம் எழில்மிகு தேவி     போற்றி
    59. ஓம் ஏழிசைப் பயனே     போற்றி
    60. ஓம் ஏகம்பன் துணைவியே     போற்றி
    61. ஓம் ஏகாந்த ரூபிணியே     போற்றி
    62. ஓம் ஏழையை காப்பாய்     போற்றி
    63. ஓம் ஐங்கரன் தாயே     போற்றி
    64. ஓம் ஐயனின் பாகமே     போற்றி
    65. ஓம் ஐயம் தெளிந்தாய்     போற்றி
    66. ஓம் ஐம்பொறி செயலே     போற்றி
    67. ஓம் ஐம்புலன் சக்தியே     போற்றி
    68. ஓம் ஒருமாரி உருமாரி     போற்றி
    69. ஓம் ஒன்பான் சுவையே     போற்றி
    70. ஓம் ஒலி ஒளி ஆனாய்     போற்றி
    71. ஓம் ஒப்பில்லா சக்தியே     போற்றி
    72. ஓம் ஒழுக்கம் அருள்வாய்     போற்றி
    73. ஓம் ஒங்காரி ஆனாய்     போற்றி
    74. ஓம் ஒங்காரி அங்காளி     போற்றி
    75. ஓம் ஓம்சக்தி தாயே     போற்றி
    76. ஓம் ஒருவாய் நின்றாய்     போற்றி
    77. ஓம் ஒங்கார சக்தியே     போற்றி
    78. ஓம் கல்விக் கடலே     போற்றி
    79. ஓம் கற்பூர வல்லியே     போற்றி
    80. ஓம் கந்தன் தாயே     போற்றி
    81. ஓம் கனகாம்பிகையே      போற்றி
    82. ஓம் கார்மேகன் தங்கையே     போற்றி
    83. ஓம் காளி சூலியே     போற்றி
    84. ஓம் காக்கும் அங்காளியே     போற்றி
    85. ஓம் சங்கரி சாம்பவியே     போற்றி
    86. ஓம் சக்தியாய் நின்றாய்     போற்றி
    87. ஓம் சாந்தவதியே     போற்றி
    88. ஓம் சிவகாம சுந்தரியே     போற்றி
    89. ஓம் சினம் தணிப்பாய்     போற்றி
    90. ஓம் சிங்க வாகனியே     போற்றி
    91. ஓம் சீற்றம் கொண்டாய்     போற்றி
    92. ஓம் சுந்தரவல்லி     போற்றி
    93. ஓம் சூரசம்காரி     போற்றி
    94. ஓம் தாண்டவ ஈஸ்வரி     போற்றி
    95. ஓம் தாட்சாயணிதேவி     போற்றி
    96. ஓம் திரிபுரசுந்தரி     போற்றி
    97. ஓம் தீபச் சுடரொளியே     போற்றி
    98. ஓம் நடன நாயகி     போற்றி
    99. ஓம் நான்மறைப் பொருளே     போற்றி
    100. ஓம் நீலாம்பிகையே     போற்றி
    101. ஓம் நீதிக்கு அரசி     போற்றி
    102. ஓம் பஞ்சாட்சரியே     போற்றி
    103. ஓம் பம்பை நாயகியே     போற்றி
    104. ஓம் பார்வதி தேவி     போற்றி
    105. ஓம் பாம்பின் உருவே     போற்றி
    106. ஓம் பார்புகழும் தேவியே     போற்றி
    107. ஓம் பிணிக்கு மருந்தே     போற்றி
    108. ஓம் பிறவி அறுப்பாய்     போற்றி
    இத்துதியை சனிக்கிழமைகளில் சொல்லி செய்து வந்தால் சனி தோஷங்கள் விலகும். உறவினர்கள், நண்பர்கள், அலுவலக மேலதிகாரிகள் போன்றோரால் ஏற்படும் மனவருத்தங்கள் விலகும்.
    நம: க்ருஷ்ணாய நீலாய ஸிதிகண்டநிபாய ச
    நமோ நீலமயூகாய நீலோத்பல நிபாய ச
    நமோ நிர்மாம்ஸ தேஹாய தீர்கஸ்ருதி ஜடாய ச
    நமோ விஸாலநேத்ராய ஸூஷ்கோதர பயானக

    பொதுப்பொருள்: கருப்பு நிறமுடையவரும், சில நேரங்களில் நீல நிறமாய் ஒளிர்பவரும், மயில் கழுத்தின் நிறத்தைக் கொண்டவருமான சனிபகவானே நமஸ்காரம். கறுத்த காந்தியுள்ளவரே, நீலோத்பல புஷ்பம் போன்றவரே, நமஸ்காரம். மெல்லிய தேகமுடையவரே, நீண்ட காது, ஜடை கொண்டவரே,  நமஸ்காரம். குறுகிய வயிறுள்ளவரும் பயங்கரமான வடிவுள்ளவரும் நீண்ட கண்களையுடைய சனிபகவானே  நமஸ்காரம்.
    சிங்கிரிக்குடி ஸ்ரீ நரசிம்மருக்கு உகந்த இந்த போற்றியை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் மறைந்து விருப்பங்களை அனைத்தும் நிறைவேறும்.
    சிங்கிரிகுடி யமர்ந்த ஸ்ரீ நரசிம்மரே போற்றி
    லட்சுமியை மார்பேந்திய ஸ்ரீ நரசிம்மரே போற்றி
    பதினாறு கரமுடன் இரண்யனை வதைத்தவரே போற்றி
    பிரகலாதன் பக்திக்கு மெச்சி காட்சி தந்தவரே போற்றி
    கனகதாரா ஆண்டாளுடன் அருள் தரும் சிங்கமுகரே போற்றி
    மணவாள மாமுனிகள் போற்றிய மாவீரரே போற்றி
    சுக்கிரன் பார்வைபெற துதித்திட்ட சுதர்சனரே போற்றி
    வசிஷ்டர் வணங்கிய சிங்கமுகப் பெருமானே போற்றி
    கஷ்டம் கடன் கவலை தீர்ப்பவரே போற்றி
    சத்ருக்கள் சம்ஹார மூர்த்தியே நரசிம்மரே போற்றி
    யோக நரசிம்மா பாலநரசிம்மருடன்
     அருள்கின்ற அருளாரே போற்றி
    கருடாழ்வார் துதிக்கின்ற கருணாமூர்த்தியே போற்றி
    ஆஞ்சநேயர் வழிபட்ட அவதாரப் புருஷரே போற்றி
    வேதசொரூபமான சிவனார் போற்றிய சிம்ம ரூபியே போற்றி
    சொல்லரிய பலம் கொண்டசங்கு சக்கர தாரியே போற்றி
    தசாவதார புருஷனே தர்ம தயாளனே போற்றி
    தூணிலும் துரும்பிலும் காட்சி தரும் துளசிமார்பனே போற்றி
    நாமணக்க நாராயணா என்பவருக்கு நலமருள்பவரே போற்றி
    பூமணக்க புகழ்மணக்க அருள்கின்ற நரசிம்மரே போற்றி
    நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் தருபவரே போற்றி
    மலர்மங்கை மார்பனே, மாயவனே, தூயவனே போற்றி
    மண்ணுயிரைக் காக்கவந்த மதுசூதனே மாதவனே போற்றி
    புன்னகையோடு பூவுலகாளும் பேரருளாளனே போற்றி
    தேவர்குலம்வாழ, அசுரர்குலம்வீழ, தேவர் பக்கம்  நின்ற திருமாலே போற்றி
    சிங்கிரி கோவிலமர்ந்த ஸ்ரீ நரசிம்மரே போற்றி போற்றி

    வாராகி அன்னைக்கு லட்சோப அதர்வன சித்திமந்திரம் இருந்தாலும், அவள் கூப்பிட்ட உடன் அகம் மகிழ்ந்து ஓடிவந்து நிற்பது ‘வாராகிமாலை’ எனும் அற்புத பாமாலைதான்.
    எந்த ஒரு வழிபாடு செய்யும்போதும் அந்த தெய்வங்களுக்கு உரிய மிகவும் பிடித்த மந்திரப்பாடல்களை நம் நாவினால் பாடுகின்றபோது நாம் கேட்கும் பலன் தடையின்றி விரைவில் நமக்கு கிடைக்கின்றது. ஒவ்வொரு இறைவனுக்கும் ஒவ்வொரு பாடல் பாடியே அவர்களை மகிழ்வித்தே நம் முன்னோர்கள் சித்தர்கள் கண்கொள்ளா காட்சி கண்டு முக்தி பெற்றனர்.

    அதேபோலதான், நீங்கள் அன்னையின் வரலாறுகளை அவள் மகிமைகளை தெரிந்து கொண்ட பிறகு அவள் அருளை பெற உங்கள் மனம் துடிக்கின்றது என நான் அறிவேன். வாராகி அன்னைக்கு லட்சோப அதர்வன சித்திமந்திரம் இருந்தாலும், அவள் கூப்பிட்ட உடன் அகம் மகிழ்ந்து ஓடிவந்து நிற்பது ‘வாராகிமாலை’ எனும் அற்புத பாமாலைதான். இது பகை அல்லல் அகற்றும் பாமாலை, இந்த வாராகி மாலை-யை மாலை நேரத்தில் யார் பாடி அன்னையை வழிபடுகிறார்களோ அவர் நிச்சயம் வெற்றியாளீ ஞானியே, இந்த வாராகி மாலையில் 32 பாடல்கள் அடங்கி உள்ளது.

    இந்த 32 பாடல்களும் ஒவ்வொரு நிலையிலும், நமக்கு மிகப்பெரிய சிறப்புகளையும், நல்ல வாழ்வையும் அளிக்கவல்லது. வாராகி அருள்பெற இந்த வாராகி மாலை ஒன்றே போதுமானது. உலகம் நலம்பெற, என் மக்கள் வாழ்வு வளம்பெற அன்னை அருள் ஆட்சி செய்யட்டும் என்றுதான் இந்த மாபெரும் பொக்கிஷத்தை உங்களுக்கு விளக்கத்தோடு வழங்குகிறேன்.
    அனைவரும் இதனை படித்து சகலபாக்கியங்களையும் பெற்று நிம்மதியாக வாழ வேண்டும். அதுவே என் அன்னை வாராகியின் இலக்கு.

    வாராகி மாலை

    1. அன்னை வடிவம்

    இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும்
    குருமணி நீலம் கை கோமேதகம் நகர் கூர்வயிரம்
    திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி
    மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே...

    பொருள்: நவரத்தினம் அனைத்தும் அன்னைக்கு அவள் உடலுக்கு ஒப்பிட்டு கூறப்படுகிறது. செவிகள் -குழை, திருவடிகள் புஷ்பராகம்,  இரண்டு கண்கள் நீலகல், கரங்கள் -கோமேதகம், நகம் -வைரம், சிரிப்பு -முத்து பவளம் போன்ற இதழ். திருமேனி உடலோ மரகதம், பச்சை மாணிக்கம் போல் ஒளிரும் மேனியுடையதாகும்.

    பயன்படுத்தும் முறை : அன்னையை வழிபடும்போது அவளை நம்மோடு இணைய விண்ணப்பம் செய்யும் முதல் பாடல்.

    2. அருள்காட்சி வடிவம்

    தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்குவட்டது
    ஈராறிதழ் இட்டு, ரீங்காரம் உள்ளிட்டது நடுவே
    ஆராதனை செய்து அர்ச்சி பூஜித்து அடிபணிந்தால்
    வாராது இராள் அல்லவே வாலை ஞான வாராகியுமே

    பொருள்: வாராகி யந்திர வடிவம் இது. முக்கோணம், அறுகோணம், வட்டம், சுற்றிலும் தாமரைத்தளம், மத்தியில் பீஜம், இதை முறையாக எழுதி வாராகியை வழிபட வாராகி ‘வாலை’ திரிபுர சுந்தரியாக எழுந்து நமக்கு ‘அட்டமா சித்திகளை’ வழங்குவாள் என்று பொருள்.

    பயன்பாடு : ஒரு குறிப்பிட்ட வழிபாட்டிற்காக அன்னையை நம் முன் அமரவைக்க இப்பாடலை பாட வேண்டும்.

    3. பக்தியின் உச்சம் :

    மெய்சிறந்தார் பணியார் மனம்காயம் மிக வெகுண்டு
    கை சிரத்து ஏந்திப் ப-லால் நீணம் நாறக் கடித்து உதறி
    வச்சிரத் தந்த முகபணியால் குத்தி வாய் கடித்து
    பச்சிரத்தம் குடிப்பாளே வாராகி பகைஞரையே.

    பொருள்: தீமையை பொறுக்காத சினம் கொண்டவள் ஸ்ரீவாராகி. அதுவும் தூயவர்களை -அவளிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவர்களை தீயவர்கள் துன்புறுத்தினால் அன்னை கோபம் கொள்கிறாள். அந்த பகைவர் கடுமையாக தண்டிக்கப்படுகிறார். அவர்கள் மட்டுமல்ல, உண்மையான பக்தியின்றி பணிபவர்களும் இந்த தண்டனையை ஏற்க வேண்டியதுதான். பகைவர் உடலை தன் கூரிய நகங்களால் கிழித்து கூரிய கொம்புகளாக குத்தி குருதி குடிப்பாள். எனவே வாராகி வழிபாடு மிகவும் கட்டுப்பாடு உரியது. விளையாட்டல்ல என எச்சரிக்கப்படுகிறது.

    பயன்பாடு: எதிரிகள் தொல்லை நீங்க பாடுவது நன்மை தரும்.

    4. சக்தியின் வெளிப்பாடு

    படிக்கும் பெரும்புகழ் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
    அடிக்கும் இரும்பு தடிகொண்டு பேய்கள் அவர்குருதி
    குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலையிட்டு குலாவிமன்றில்
    நடிக்கும் வாராகி பதினாலு உலகம் நடுங்கிடவே...

    பொருள்: தவறிழைக்காத வாராகி பக்தர்கள், இன்னலுக்கு உட்பட்டால் அதற்கு காரணமானவர் பெறும்  தண்டனை கடுமையானது. தேவியின் தண்டம் (தடி) அவர்களை அடித்து தும்சம் செய்யும். பக்தரை காக்கும் பேரரணாக தேவி வெளிப்படுவாள் என்று உணர வேண்டும்.

    பயன்பாடு: வீண்பழி நாம் பெறும்போது இப்பாடலை பாடி, நன்மை பெறலாம்.

    5 வெற்றி பெற செய்யும் விதம்:-

    “நடுங்காவகை அன்பர் நெஞ்சினில் புக்கவர் நண்ணவளரக் கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித்திடும் பாரக் காங்கையின் மீதே ரத்த திலகமிடும் தொடும் கார் மனோன்மணி, வாராகி நீலி தொழிலிதுவே...

    பொருள்:

    ஸ்ரீ வாராகி, தாந்த்ரீக பூஜையில் இடம் பெறுபவர்களுக்காக ஸ்ரீ மனோன் மணியையும், காளியையும் அனுப்பி, தன் பக்தனின் மனதில் ஏற்படும் பயத்தை விலக்கி, பகைவர்களை வீழ்த்தி ரத்தத் திலகம் இடுமாறு செய்கிறாள். “வாராகி” நீலி என்றால் பகை முடிப்பது என்று பொருள்.

    பயன்பாடு:

    மனதில் பயம் ஏற்படும் போது இப்பாடலை பாடி நன்மை பெறலாம்.

    6. பயம் போக்க:

    “நாசபாடுவர் நடுங்கப்படுவவர் நமன்கயிற்றால்
    வீசபடுவர் விளையும்படுவர் இம்மேதினியோர்
    ஏசப்படுவர் இழுக்கும் படுவர் என் ஏழை நெஞ்சே
    வாசப் புதுமலர்த் தேனாள் வாராகியை வாழ்த்திலரே.

    பொருள்:

    இழப்பு, பயம், துன்பம், கவலை, அவமானம் என்று அடுத்தடுத்து பலரும் துன்பப்பட்டு நடுங்குகிறார்கள், என்ன காரணம்? புது மலரில் பெருகிய தேனைப் போல இனிமையான வாராகி தேவியை மனதில் இருத்தி, வாழ்த்தி வழிபாடு செய்யாததால் இப்படிப்பட்ட துன்பங்கள் ஏற்படுகின்றது.

    பயன்பாடு: துன்பம் படும் நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும்.

    7. வாராகியை வழிபடுவோர் யார்?

    “வாலை புவனை திரபுரை மூன்றும் இவ்வகையத்தில்
    காலையும் மாலையும்  ச்சியும் ஆக எக்காலத்துமே
    ஆலயம் எய்தி வாராகி தன் பாதத்தை அன்பில் உள்ளி
    மாயைன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே...

    அணிமா, மகிமா, லகிமா உள்ளிட்ட எட்டு சித்தகளையும் அளிப்பவள், வாலை எனப்படும் பாலா, சகல சவுபாக்கியங்களையும் தருபவள் ஸ்ரீ வாராகி : பகைவர்களை அழித்து வெற்றி அருள்பவள் திரிவுர பைரவி, இந்த மூலவராகவும் காலை, மாலை உச்சிப் பொழுதுகளில் திகழ்கிநாள் ஸ்ரீ வாராகி, அதனால் திருத்தாள்களை திருமால், பிரமன் உள்ளிட்ட தேவர்களும் பாடி துதிக்கின்றார்கள்.

    பயன்:-

    இதை பாடினால் மும்மூர்த்தி அருள் கிடைக்கும்.

    (1) இப்பாடல்களை தினசரி பாடி வழிபடுவோர்களுக்கு எல்லா வகையான பலன்களும் அளவற்ற செல்வமும் திரண்டு கிடக்கும். அதுவரை என் அன்னை வாராகி உங்களை காக்கட்டும். ஓம் வாராகியே போற்றி....! போற்றி....!
    திதி நித்யா தேவிகளில் பதினைந்தாம் நித்யா தேவியான சித்ரா தேவிக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் திடீர் அதிர்ஷ்டமும், பெரும் செல்வமும் சேரும்.
    திதி நித்யா தேவிகளில் பதினைந்தாம் நித்யா தேவியான சித்ரா, பளபளவென மின்னும் கிரகணங்களை வீசிடும் திருமேனியவள். பல்வேறு ரத்தினங்கள் பதித்த மகுடத்தில் பிறைமதி சூடியவள்.

    வெண்பட்டாடை உடுத்தி, பலவகையான ஆபரணங்களை மேனி முழுவதும் அணிந்து அழகே வடிவாய்த் திகழ்கின்றாள். பாசம், அங்குசம், அபயம், வரதம் தரித்த நான்கு திருக்கரங்கள் கொண்ட இவள், பக்தர்களின் பயத்தை நாசம் செய்பவள். சர்வானந்தமயி. என்றும் நிலையானவள்.

    மந்திரம்:

    ஓம் விசித்ராயை வித்மஹே
    மஹா நித்யாயை தீமஹி
    தன்னோ தேவிப்ரசோதயாத்.

    வழிபட வேண்டிய திதிகள்: பவுர்ணமி, கிருஷ்ண பட்ச பிரதமை.

    பலன்கள்: திடீர் அதிர்ஷ்டமும், பெரும் செல்வமும் சேரும். 
    ஜ்வாலா மாலினிக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எந்த வகையான துன்பமும் தீயிலிட்ட பஞ்சுபோல் ஆகும். பகைவர்கள் அழிவர்.
    இந்த நித்யா தேவி நெருப்பு ஜுவாலை ரூபமாய் இருப்பவள். பண்டாசுரனுடன் லலிதாதேவி நடத்திய யுத்தத்தில் நூறு யோஜனை நீளமும், முப்பது யோஜனை அகலமும் முப்பது யோஜனை உயரமும், கொண்ட நெருப்புக் கோட்டையைப் படைத்தவள். அக்னியையே மாலையாகக் கொண்டவள். இந்த அம்பிகையின் வித்யை அறுபது அட்சரங்களைக் கொண்டது.

    வைடூரிய மகுடம் அணிந்து அக்னி ஜுவாலையைப் போல் சிவந்து காட்சியளிக்கும் இத்தேவிக்கு ஆறுமுகமும் பன்னிருகரங்களும் உள்ளன. கரங்களில் அங்குசம், கத்தி, வில், நெருப்பு, கதை, பாசம், கேடயம், தாமரை, சூலம், அம்பு, அபயம், வரதம் தாங்கியுள்ளாள்.

    மந்திரம்:

    ஓம் ஜ்வாலாமாலின்யை வித்மஹே
    மஹாஜ்வாலாயை தீமஹி
    தன்னோ தேவி ப்ரசோதயாத்.

    வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பட்ச சதுர்த்தசி, கிருஷ்ண பட்ச துவிதியை

    பலன்கள்: எந்தத் துன்பமும் தீயிலிட்ட பஞ்சுபோல் ஆகும். பகைவர்கள் அழிவர்.
    ×