என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    ஆயிரங்காலத்துப் பயிர் என்றும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிற காரியம் என்றும் போற்றப்படுகிற திருமண வரம் தரக்கூடிய அற்புதமான ஸ்லோகம் இது!
    வாழ்க்கையை தி.மு. என்றும் தி.பி. என்றும் பிரித்துப் பார்க்கிறவர்கள் நாம். அதாவது திருமணத்துக்கு முன்; திருமணத்துக்குப் பின்! திருமணம் என்பது ஆணுக்குப் பெண் துணை என்றும், பெண்ணுக்கு ஆண் பாதுகாப்பு என்றும் கட்டமைப்பு கொண்டதாக அமைந்துள்ளது.

    அதேபோல், திருமணம் என்பது வாழையடி வாழையாக சந்ததி வளர்க்கும் விஷயமாகவும் சாஸ்திரங் கள் தெரிவிக்கின்றன. இங்கே... 'நம்ம பொண்ணுக்கு இன்னும் கல்யாண வரன் தகையலையே...’, 'கை நிறைய சம்பளம் வாங்கி என்ன புண்ணியம். என் புள்ளைக்கு கல்யாண ராசி இன்னும் வரலை’ என்று வருத்தப்படுகிற பெற்றோர்கள் நம் உலகில் உண்டு. ஒரு பெற்றோரின் மிகப்பெரிய கவலையும் துக்கமும் தங்கள் வாரிசுக்குத் திருமணம் நடக்கவில்லையே என்பதாகத்தான் இருக்கும்.

    ஆயிரங்காலத்துப் பயிர் என்றும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிற காரியம் என்றும் போற்றப்படுகிற திருமண வரம் தரக்கூடிய அற்புதமான ஸ்லோகம் இது!

    காமேஸ் வராய காமாய காம பாலாய காமினே நம:
    காம விஹாராய காம ரூபதராய ச
    மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே
    மங்களார்த்தம் மங்களேசிமாங்கல்யம் தேஹிமே சதா:
    வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்!
    தேவியைப் போற்றிச் சொல்கிற இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் சொல்லுங்கள். சகல சௌபாக்கியங்களும் பெற்று, இனிதே வாழலாம்!
    தேவியைப் போற்றிச் சொல்கிற இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்கள். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் சொல்லுங்கள். சகல சௌபாக்கியங்களும் பெற்று, இனிதே வாழலாம்!

    சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த ஸாதி கே
    சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே
    குழந்தைச் செல்வம் இல்லாத வீட்டில், வேறு எத்தனைச் செல்வங்கள் இருந்தாலும் பயனில்லாது போகும் என்பார்கள். குழந்தைகளின் பாலாரிஷ்ட நோய் நீங்க இந்த ஸ்லோகம் உதவும்.
    உலகின் மிகப்பெரிய செல்வம், பிள்ளைகள்தான்! குழந்தைச் செல்வம் இல்லாத வீட்டில், வேறு எத்தனைச் செல்வங்கள் இருந்தாலும் பயனில்லாது போகும் என்பார்கள். 'எவ்வளவு சொத்துகள் இருந்து என்ன... அள்ளியெடுத்துக் கொஞ்சி விளையாடக் குழந்தை இல்லை’ என்பதே பலரின் ஏக்கம்.

    அதைவிட, அந்தக் குழந்தைக்கு சின்னச் சின்ன நோய்கள் வந்து சரியாகச் சாப்பிடாமல் இருந்தாலோ, சாப்பிட்டதையெல்லாம் வாந்தி எடுத்தாலோ, சரிவரத் தூங்காமல் எப்போதும் எதற்காகவோ அழுதுகொண்டே இருந்தாலோ... அதைவிட பெரிய வலியும் வேதனையும் வேறில்லை.

    இதனை பாலாரிஷ்ட நோய் என்பார்கள். இதில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்கவும் குழந்தைகள் சத்தாக வளரவும் இந்த ஸ்லோகம் உதவும்.

    பால க்ரஹ விநாச்ச தர்மநேதா கிருபாகர:
    உக்ரக்ருத்யோக்ரா வேகச்ச உக்ர நேத்ர: சதக்ரது:
    பூக்களைக் கொண்டு ஸ்வாமிக்கு பூஜை செய்கிற போது மறக்காமல் நிறைவில் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள். மலர்களைப் போல, நம் வாழ்க்கையும் மலரும்!
    எப்போது பூஜை செய்தாலும் என்ன பூஜைகள் செய்தாலும் அந்த பூஜையில் முக்கிய அங்கம் வகிப்பவை, பூக்கள்தான்! ஒவ்வொரு பூவுக்கும் எப்படி விதம்விதமான நறுமணங்கள் இருக்கிறதோ... அதேபோல் ஒவ்வொரு பூவைக் கொண்டும் செய்கிற பூஜைகளுக்கும், ஒவ்வொரு பலன் உண்டு.

    அந்தப் பூக்களைக் கொண்டு ஸ்வாமிக்கு பூஜை செய்கிற போது மறக்காமல் நிறைவில் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள். மலர்களைப் போல, நம் வாழ்க்கையும் மலரும்!    

    அந்த புஷ்பாஞ்சலி ஸ்லோகம் இதுதான்!

    யோபாம் புஷ்பம் வேத புஷ்பவான்
    பிரஜாவான் பசுமான் பவதி   சந்த்ரமாவா
    அபாம் புஷ்பம் புஷ்பவான் பிரஜாவான் பசுமான் பவதி
    இந்த ஸ்லோகத்தைச் சொல்லச் சொல்ல, படிப்பின் மீதும், படித்து மனனம் செய்த விஷயங்கள் மீதும் அசைக்கமுடியாத நம்பிக்கை பிறக்கும்.
    தேர்வு பயம் என்பது யாருக்குத்தான் இல்லை? நன்றாகப் படித்த மாணவர்கள்கூட, தேர்வு நெருங்கும் வேளையில் கொஞ்சம் படபடப்பாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். இந்தப் படபடப்பு தேவையற்றது. பாடத்தை உருவேற்றி, மனதுக்குள் மனனப்படுத்திக் கொண்டு, எந்த பயமும் பதற்றமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ளப் பழகுங்கள். குறிப்பாக, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். இதை தினமும் கூட சொல்லலாம்.

    பாஷ்யாதி ஸர்வஸாஸ்த்ரானி ஏசான்யே நியமாஹா: ததா
    அட்சரானயச ஸர்வானி துவந்து தேவி நமோஸ்துதே.

    இந்த ஸ்லோகத்தைச் சொல்லச் சொல்ல, படிப்பின் மீதும், படித்து மனனம் செய்த விஷயங்கள் மீதும் அசைக்கமுடியாத நம்பிக்கை பிறக்கும். பீரோ லாக்கரில் இருந்து சாவி போட்டு எடுக்கிற பொருள் போல, படித்து உள்வாங்கிய விஷயங்களை, சட்டென்று எடுத்து தேர்வுத்தாளில் இறக்குவதற்கான சாவிதான் இந்த ஸ்லோகம்! ஆத்மார்த்தமாகச் சொல்லுங்கள்; தேர்வில் வெற்றி நிச்சயம்!
    இசை என்பது இசைப்பவர்களுக்கும் அந்த இசையைக் கேட்பவர்களுக்கும் துன்பம் போக்கும் மாமருந்து. ஏனெனில், இசைக்கு மயங்குபவர்கள் மனிதர்கள் மட்டும் அல்ல. இசையைக் கேட்டால், அந்தக் கடவுளே இசைந்து வருவான் என்பார்கள்.
    இசையின் மீது விருப்பம் கொள்ளாதவர்கள் எவருமே இல்லை. நம்மில் பலருக்கு இசையை ரசித்துக் கேட்கப் பிடிக்கும். ஒரு சிலருக்கு, அந்த இசையைக் கற்றறிய வேண்டும்; அதில் விற்பன்னராக வேண்டும் என்கிற ஆவல் இருக்கும். இசை என்பது மிகப்பெரிய கலை. ஓவியம் போல, எழுத்து போல, இசை என்பதும் கடவுள் வழங்குகிற வரப்பிரசாதம்!

    இசை என்பது இசைப்பவர்களுக்கும் அந்த இசையைக் கேட்பவர்களுக்கும் துன்பம் போக்கும் மாமருந்து. ஏனெனில், இசைக்கு மயங்குபவர்கள் மனிதர்கள் மட்டும் அல்ல. இசையைக் கேட்டால், அந்தக் கடவுளே இசைந்து வருவான் என்பார்கள்.

    இசைஞானம் பெற... இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். இசையில் வல்லுநர் ஆவீர்கள்!

    ஐம்ஸ்ரீ வீணாயை மம ஸங்கீத
    வித்யாசம்ப்ரச்ச ப்ரயச்ச ஸ்வாஹா.
    ஸ்ரீமன் நாராயணனின் பல்வேறு திருநாமத்தைத் தினசரி சொல்லுங்கள். தினமும் சொல்ல முடியாதவர்கள் சனிக்கிழமைகளில் சொல்லி வந்தால் நற்பயன்களை பெறலாம்.
    ஸ்ரீமன் நாராயணனின் பல்வேறு திருநாமத்தைத் தினசரி சொல்லுங்கள்.

    ஓம் ஹரி, ஸ்ரீஹரி, முரஹரி, நரஹரி, க்ருஷ்ணாஹரி, அம்புஜாக்ஷா, அச்சுதா, உச்சிதா, பஞ்சாயுதா, பாண்டவ தூதா, லக்ஷ்மீ ஸமேதா, லீலாவிநோதா, கமலபாதா, ஆதீ மத்யாந்த ரஹிதா, அநாதரக்ஷகா, அகிலாண்டகோடி ப்ரஹ்மாண்டநாயகா, பரமானந்த முகுந்தா, வைகுந்தா, கோவிந்தா.

    பச்சைவண்ணா, கார்வண்ணா, பன்னகசயனா, கமலக்கண்ணா, ஜனார்தனா, கருடவாஹனா, ராக்ஷஸமர்த்தனா, காளிங்கநர்த்தனா, சேஷசயனா, நாராயணா, பிரம்மபாராயணா, வாமணா, நந்த நந்தனா, மதுஸூதனா, பரிபூரணா, சர்வகாரணா, வெங்கடரமணா, சங்கடஹரணா, ஸ்ரீதரா, துளஸீதரா, தாமோதரா, பீதாம்பரா, சீதா மனோஹரா, மச்சகச்ச வராஹாவதாரா, பலபத்ரா, சங்கு சக்ரா, பரமேஸ்வரா, ஸர்வேஸ்வரா, கருணாகரா, ராதா மநோஹரா, ஸ்ரீரங்கா, ஹரிரங்கா, பாண்டுரங்கா, லோகநாயகா, பத்மநாபா, திவ்ய ஸ்வரூபா.

    புண்ய புருஷா, புருஷோத்தமா, ஸ்ரீராமா, ஹரிராமா, பரந்தாமா, ந்ரஸிம்ஹா, த்ரிவிக்ரமா, பரசுராமா, ஸஹஸ்ர நாமா, பக்த வத்சலா, பரமதயாளா, தேவானுகூலா, ஆதிமூலா, ஸ்ரீலோகா, வேணுகோபாலா, மாதவா, மாதவா, ராகவா, கேசவா, வாஸுதேவா, தேவதேவா, ஆதிதேவா, ஆபத்பாந்தவா, மஹானுபாவா, வஸுதேவதனயா, தசரத தனயா, மாயாவிலாசா, வைகுண்டவாசா, சுயம் ப்ரகாசா, ஸ்ரீவெங்கடேசா, மாயா, ஆயா, வெண்ணெயுண்ட சேயா, அண்டாகளேத்தும் தூயா, உலகமுண்டவாயா, நானா உபாயா, பக்தர்கள் சகாயா  சதுர்புஜா, கருடத்வஜா, கோதண்டஹஸ்தா, புண்டரீகவரதா,

    ஓம் விஷ்ணோ, ஓம் பரந்தாமா,  ஓம் பரமதயாளா, ஓம் நமோ நாராயணா, ஸ்ரீமத் நாராயண ஸரணம் ப்ரபத்யே, ஸ்ரீமதே நாராயணாய நம: ஸ்ரீமதே ஆதிநாராயணாய நம: ஸ்ரீமதே லக்ஷ்மீ நாராயணாய நம: ஸ்ரீமதே ஸுர்ய நாராயணாய நம: ஸ்ரீமதே சங்கர நாராயணாய நம. ஓம் கோவிந்த கோவிந்த, ஓம் கோபால கோபால கோபாலா.
    லலிதாம்பிகையை மனதார வழிபட்டால், இதுவரை வீட்டில் தடைப்பட்டிருந்த மங்கல காரியங்களையெல்லாம் நடத்தித் தந்தருள்வாள். கணவன் மனைவி இடையே ஒற்றுமையையும் அன்பையும் பலப்படுத்தி அருள்வாள் லலிதாம்பிகை.
    லலிதாம்பிகையை எவரொருவர் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, அவளின் திருவடிகளைச் சரணடைந்து, வணங்கி வருகிறார்களோ, அவர்களின் அனைத்து குறைகளையும் களைந்தெடுத்து அருளுவாள். சகல செளபாக்கியங்களையும் வழங்கிக் காப்பாள்.

    ‘ஓம் லலிதாம்பிகாய நமஹ’

    இந்த ஒற்றை வரி மந்திரத்தை தினமும் சொல்லி வாருங்கள். வெள்ளிக்கிழமைகளில் காலையும் மாலையும் சொல்லி வழிபடுங்கள். அதேபோல், வீட்டில் விளக்கேற்றுங்கள். கோவிலில் அம்பாள் சந்நிதியில் விளக்கேற்றுங்கள். விளக்கேற்றி, இந்த மந்திரத்தை 108 முறை ஜபித்து வேண்டிக் கொள்ளுங்கள். சகல செளபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். குறிப்பாக, பெண்கள் இந்த மந்திரத்தைச் சொல்லச் சொல்ல, பிரிந்த கணவன் விரைவில் மனம் மாறி வந்து சேருவார். குடும்பத்தில் இதுவரை இருந்த அழுகையும் கவலையும் துடைக்கப்படும் .இல்லத்தில் இருந்த தரித்திர நிலையை மாற்றி அருளுவாள் லலிதாம்பிகை..
    வைணவ சமயத்தில் மந்திரங்கள் மூன்று வகையாக உள்ளன. அவை, அஷ்டாச்சரம் (எட்டெழுத்து), துவய மந்திரம் (சரணாகதி), சரமஸ்லோகம் என்பன. இவற்றில் ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற எட்டெழுத்து மந்திரம் மிகவும் முக்கியத்துவம்
    விஷ்ணு என்பதற்கு எங்கும் நிறைந்திருப்பவன் என்று பொருள். விஷ்ணுவுக்கு நாராயணன் என்ற பெயரும் உண்டு. ‘நாரம்’ என்றால் ‘வெண்ணிற நீர்’, ‘அயனம்’ என்றால் ‘இடம்’ என்று அர்த்தம். வெண்மை நிற பாற்கடலை இருப்பிடமாகக் கொண்டவன் என்பதால் ‘நாராயணன்’ என்று அழைக்கப்படுகிறார். வைணவ சமயத்தில் மந்திரங்கள் மூன்று வகையாக உள்ளன. அவை, அஷ்டாச்சரம் (எட்டெழுத்து), துவய மந்திரம் (சரணாகதி), சரமஸ்லோகம் என்பன. இவற்றில் ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற எட்டெழுத்து மந்திரம் மிகவும் முக்கியத்துவம்

    விஷ்ணு காயத்ரி மந்திரம் : ஓம் நாராயணாய வித்மஹே, வாசுதேவாய தீமஹி, தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத் – பரம்பொருளான நாராயணனை அறிவோம். வாசுதேவன் மீது தியானம் செய்வோம். விஷ்ணுவாகிய அவன் நம்மை காத்து அருள் செய்வான் என்பது இதன் பொருளாகும். விஷ்ணுவை வழிபடும் போது, தினமும் 108 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து வரலாம். இந்த மந்திரத்தைச் சொல்வதால், ஆபத்துகளில் இருந்து விடுபடலாம். உலக இன்பங்களை அனுபவிக்கலாம். மறுபிறவி நல்லவிதமாக அமையும். பாவங்கள் அகலும். நல்ல குணமும், அழகும் கொண்ட சந்ததிகள் உருவாகுவார்கள்.

    விஷ்ணு காயத்ரி மந்திரம்: ஓம் நிரஞ்சனாய வித்மஹே, நிராபாஸாய தீமஹி, தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத். – விஷ்ணு பகவானுக்குரிய இந்த காயத்ரி மந்திரத்தை ஜெபிப்பதால் நாம் செய்யும் தொழில் விருத்தி அடையும்; லாபம் பெருகும், வீட்டில் பணப் பற்றாக்குறை நீங்கும். அதோடு வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம்
    இந்த கூர்ம காயத்ரி மந்திரத்தை, தினமும் சொல்லி வருவதன் மூலமாக, திருமாலின் அருள் பரிபூரணமாக கிடைத்து, வாழ்க்கை செல்வச் செழிப்புடன் சுபிட்சமாக அமையும்.

    “ஓம் தராதராய வித்மஹ

    பாச ஹஸ்தாய தீமஹி

    தன்னோ கூர்ம ப்ரசோதயாத்”

    இந்த கூர்ம காயத்ரி மந்திரத்தை, தினமும் சொல்லி வருவதன் மூலமாக, திருமாலின் அருள் பரிபூரணமாக கிடைத்து, வாழ்க்கை செல்வச் செழிப்புடன் சுபிட்சமாக அமையும்.
    இந்த சந்திரனுக்குரிய மந்திரத்தை தினமும் 11 முறை ஜெபித்து வந்தால் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேறும். சந்திரனுக்குரிய தோஷங்கள் விலகி ஓடும்.
    ‘பத்ம த்வாஜய வித்மஹே
    ஹேம ரூபாய தீமஹி
    ஸ்ரீ வேங்கடலாசலபதி தந்நஸ் ஸோம ப்ரசோதயாத்’

    இந்த சந்திரனுக்குரிய மந்திரத்தை, ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலை நேரத்தில் தீபம் ஏற்றும் வேளையில் உச்சரிக்க வேண்டும். மந்திரத்தை உச்சரிக்கும் முன்பாக அகல் விளக்கில் தீபம் ஏற்றி, அந்த தீபத்தை நெல் பரப்பி அதன்மீது வைக்க வேண்டும். பின்னர் வெண் பொங்கல் நைவேத்தியம் படைத்து, 108 எண்ணிக்கையில் மல்லிகை பூவைக் கொண்டு வடமேற்கு திசை நோக்கி அமர்ந்து, சந்திரனுக்குரிய காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபாடு செய்ய வேண்டும். இதனால் அற்புதமான பலன்கள் கிடைக்கும். இந்த மந்திரத்தை தினமும் 11 முறை ஜெபித்து வந்தாலும் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேறும். சந்திரனுக்குரிய தோஷங்கள் விலகி ஓடும்.

    ஜாதகத்தில் தாய் ஸ்தானத்திற்குரியவர் சந்திரன். எனவே தாயின் சாபம் பெற்றவர்கள், தாயை நல்ல முறையில் பேணி பாதுகாக்காதவர்கள், அவசியம் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் விரதம் இருந்து சந்திரனை வழிபடுவது நல்ல பலன்களை அள்ளித்தரும்.
    முருகப்பெருமானுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் படிப்படியாக பறந்தோடும்.
    கந்தனும் வருவான் காட்சியும் தருவான்
    கவலையை நீ விடுவாய் - மனமே
    கனவிலும் நினைவிலும் அவன்திரு நாமத்தை
    மறவாமல் நீ இருப்பாய் - மனமே.

    சிக்கலில் வேல் எடுத்தான் சிங்கார வேலனானான்
    செந்தூரில் போர் புரிந்தான் சூரனையே வதைத்தான்
    சரவணன் அவனே ஷண்முகன் அவனே
    சிவசக்தி வடிவானவன் - முருகன்.

    தணிகையிலே அமர்ந்தான் தத்துவங்கள் சொன்னான்
    தந்தைக்குக் குருவானான் தமிழுக்குத் துணையானான்
    தரணியில் புகழோடு திருமறைகள் போற்ற
    ஸ்வாமிமலையில் நின்றான் - தகப்பன்
    சாமியாக நின்றான்.

    பழமதைக் கேட்டான் பழனியிலே அமர்ந்தான்
    பக்தர்களை அழைத்தான் அருள்ஞானப் பழம்தந்தான்
    பழமுதிர்ச் சோலையில் அழகுடன் அமர்ந்தான்
    பரங்குன்றில் மணமலை சூட்டிக்கொண்டான் - திருப்பரங்குன்றில்.

    கந்தனும் வருவான் காட்சியும் தருவான்
    கவலையை நீ விடுவாய் - மனமே
    கனவிலும் நினைவிலும் அவன்திரு நாமத்தை
    மறவாமல் நீ இருப்பாய் - மனமே.

    முருகா சரணம்.
    ×