search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகன்
    X
    முருகன்

    கந்தன் வழிபாட்டு ஸ்லோகம்

    முருகப்பெருமானுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் படிப்படியாக பறந்தோடும்.
    கந்தனும் வருவான் காட்சியும் தருவான்
    கவலையை நீ விடுவாய் - மனமே
    கனவிலும் நினைவிலும் அவன்திரு நாமத்தை
    மறவாமல் நீ இருப்பாய் - மனமே.

    சிக்கலில் வேல் எடுத்தான் சிங்கார வேலனானான்
    செந்தூரில் போர் புரிந்தான் சூரனையே வதைத்தான்
    சரவணன் அவனே ஷண்முகன் அவனே
    சிவசக்தி வடிவானவன் - முருகன்.

    தணிகையிலே அமர்ந்தான் தத்துவங்கள் சொன்னான்
    தந்தைக்குக் குருவானான் தமிழுக்குத் துணையானான்
    தரணியில் புகழோடு திருமறைகள் போற்ற
    ஸ்வாமிமலையில் நின்றான் - தகப்பன்
    சாமியாக நின்றான்.

    பழமதைக் கேட்டான் பழனியிலே அமர்ந்தான்
    பக்தர்களை அழைத்தான் அருள்ஞானப் பழம்தந்தான்
    பழமுதிர்ச் சோலையில் அழகுடன் அமர்ந்தான்
    பரங்குன்றில் மணமலை சூட்டிக்கொண்டான் - திருப்பரங்குன்றில்.

    கந்தனும் வருவான் காட்சியும் தருவான்
    கவலையை நீ விடுவாய் - மனமே
    கனவிலும் நினைவிலும் அவன்திரு நாமத்தை
    மறவாமல் நீ இருப்பாய் - மனமே.

    முருகா சரணம்.
    Next Story
    ×