என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கந்தன் வழிபாட்டு ஸ்லோகம்
Byமாலை மலர்10 July 2021 1:21 AM GMT (Updated: 10 July 2021 1:21 AM GMT)
முருகப்பெருமானுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் படிப்படியாக பறந்தோடும்.
கந்தனும் வருவான் காட்சியும் தருவான்
கவலையை நீ விடுவாய் - மனமே
கனவிலும் நினைவிலும் அவன்திரு நாமத்தை
மறவாமல் நீ இருப்பாய் - மனமே.
சிக்கலில் வேல் எடுத்தான் சிங்கார வேலனானான்
செந்தூரில் போர் புரிந்தான் சூரனையே வதைத்தான்
சரவணன் அவனே ஷண்முகன் அவனே
சிவசக்தி வடிவானவன் - முருகன்.
தணிகையிலே அமர்ந்தான் தத்துவங்கள் சொன்னான்
தந்தைக்குக் குருவானான் தமிழுக்குத் துணையானான்
தரணியில் புகழோடு திருமறைகள் போற்ற
ஸ்வாமிமலையில் நின்றான் - தகப்பன்
சாமியாக நின்றான்.
பழமதைக் கேட்டான் பழனியிலே அமர்ந்தான்
பக்தர்களை அழைத்தான் அருள்ஞானப் பழம்தந்தான்
பழமுதிர்ச் சோலையில் அழகுடன் அமர்ந்தான்
பரங்குன்றில் மணமலை சூட்டிக்கொண்டான் - திருப்பரங்குன்றில்.
கந்தனும் வருவான் காட்சியும் தருவான்
கவலையை நீ விடுவாய் - மனமே
கனவிலும் நினைவிலும் அவன்திரு நாமத்தை
மறவாமல் நீ இருப்பாய் - மனமே.
முருகா சரணம்.
கவலையை நீ விடுவாய் - மனமே
கனவிலும் நினைவிலும் அவன்திரு நாமத்தை
மறவாமல் நீ இருப்பாய் - மனமே.
சிக்கலில் வேல் எடுத்தான் சிங்கார வேலனானான்
செந்தூரில் போர் புரிந்தான் சூரனையே வதைத்தான்
சரவணன் அவனே ஷண்முகன் அவனே
சிவசக்தி வடிவானவன் - முருகன்.
தணிகையிலே அமர்ந்தான் தத்துவங்கள் சொன்னான்
தந்தைக்குக் குருவானான் தமிழுக்குத் துணையானான்
தரணியில் புகழோடு திருமறைகள் போற்ற
ஸ்வாமிமலையில் நின்றான் - தகப்பன்
சாமியாக நின்றான்.
பழமதைக் கேட்டான் பழனியிலே அமர்ந்தான்
பக்தர்களை அழைத்தான் அருள்ஞானப் பழம்தந்தான்
பழமுதிர்ச் சோலையில் அழகுடன் அமர்ந்தான்
பரங்குன்றில் மணமலை சூட்டிக்கொண்டான் - திருப்பரங்குன்றில்.
கந்தனும் வருவான் காட்சியும் தருவான்
கவலையை நீ விடுவாய் - மனமே
கனவிலும் நினைவிலும் அவன்திரு நாமத்தை
மறவாமல் நீ இருப்பாய் - மனமே.
முருகா சரணம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X