என் மலர்
இஸ்லாம்
பொதுவாக எல்லாப் பிரச்சினைகளுக்கும் எது காரணமாக இருக்கும் என்று சற்று யோசித்துப் பார்க்கையில் அங்கு முன்னிலை வகிப்பது, நமது கெட்ட குணங்களே என்றால் அது மிகையல்ல.
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகள் கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகும். ‘ஹஜ்’ என்ற அரபுச் சொல்லிற்கு ‘சந்தித்தல்’ என்று பொருள். சவுதி அரேபியாவில் இறையில்லமாக இலங்கும் கஅபாவை சில பாரம்பரியமான முறைகளின் படி வலம் வந்து, சில இடங்களில் தங்கி, இறைவனை வழிபட்டு வருவதற்கு ‘ஹஜ்’ என்று பெயர்.
ஹஜ் என்பது சுற்றுலாப்பயணமல்ல. தினமும் நடைபெறும் ஐங்காலத் தொழுகைகளைப் போல அதுவும் ஒரு புனிதமான வணக்கம் தான். நமது வணக்கங்களின் வடிவங்கள் தான் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றனவே தவிர அனைத்து வணக்கங்களின் அடிப்படை நோக்கமும் இறையச்சம் ஒன்று தான்.
“ஒருவர் ஹஜ் செய்து விட்டு ஊர் திரும்பும் போது அன்று பிறந்த பாலகனைப் போல் திரும்புகிறார்” என்றார்கள் நபிகள் நாயகம் அவர்கள். அப்படியானால், அந்த ஹஜ் அவரது அனைத்து பாவக்கறைகளையும் போக்கிவிடுகிறது என்று தானே அர்த்தம்.
ஹஜ் குறித்து கூறும் திருக்குர்ஆன் வசனங்கள் சில...
“அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால் எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறை ஏற்படப்போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தார் எவரின் தேவையும் அற்றவனாக இருக்கின்றான்”. (திருக்குர்ஆன் 3:97)
“ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது (நன்மையானது), தக்வா (என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே, எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்”. (திருக்குர்ஆன் 2:197)
“ஆகவே, உங்களுடைய ஹஜ்ஜின் காரியங்களை முடித்ததும், நீங்கள் (இதற்கு முன்னர்) உங்கள் தந்தையரை நினைவு கூர்ந்து சிறப்பித்ததைப்போல்- இன்னும் அழுத்தமாக, அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்ந்து திக்ரு செய்யுங்கள்”. (திருக்குர்ஆன் 2:200)
நமது புனித ஹஜ்ஜுப் பயணம் எப்படி அமைந் திருக்க வேண்டும் என்று மேற்கண்ட வசனங்கள் தௌிவுபடுத்துகின்றன.
அவசரமான இன்றைய காலச்சூழலில் ஹஜ் ஒரு இன்றியமையாத ஒரு வாய்ப்பாகும். மன நிம்மதியைத் தேடி மனிதன் அங்குமிங்கும் ஓடியாடி அலைகின்றான். அவனுக்கான முழு நிம்மதி இந்த ஹஜ்ஜில் இருக்கின்றது என்றால் அது மிகையல்ல.
செல்வங்களை நாம் சேர்த்து வைத்து என்ன செய்யப்போகிறோம்.? புனிதப் பயணங்களுக்கும், நற்காரியங்களுக்கும் அவற்றை நாம் பயன்படுத்தினால் தான் நாம் நமது வாழ்வில் நல்ஈடேற்றம் பெறமுடியும்.
இது குறித்துப்பேசும் இறைமறை வசனங்கள் இதோ:
“அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை (நன்மை செய்வோரை) நேசிக்கின்றான்”. (திருக்குர்ஆன் 2:195)
நம்பிக்கை கொண்டோரே, பேரங்களும், நட் புறவுகளும், பரிந்துரைகளும் இல்லாத அந்த (இறுதித்தீர்ப்பு) நாள் வருவதற்கு முன்னர், நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழிகளில்) செலவு செய்யுங்கள்”. (திருக்குர்ஆன் 2:254)
“(நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல; ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்; இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மைபயப்பதாகும்; அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள்; நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்”. (திருக்குர்ஆன் 2:272)
ஹஜ் என்பது வெறும் பயணமல்ல, படிப்பினைகள் பல நிறைந்த பயிற்சியும், பாடமும் ஆகும். அனைவரையும் அனுசரித்துச் செல்வது, சுய விருப்பு, வெறுப்புகளை விட்டு விடுவது, இருப்பதை வைத்து வாழப்பழகுவது, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பது, தவறுகளை மன்னிப்பது, நட்புறவை பலப்படுத்துவது, நல்லதையே நாடுவது, நல்லதைச் செய்வது, இறைஞாபகத்திலும், தியானத்திலும், வணக்க வழிபாடுகளிலும் எப்போதும் ஈடுபடுவது, கொஞ்ச நாள் ஊரையும், உறவையும் பிரிந்திருப்பது, அயல்தேசத்தவர் களின் பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்வது, பொறுமையாகயிருப்பது, தூய்மையாகயிருப்பது, பொறாமைப்படாமல் இருப்பது, ஒருவருக்கொருவர் உதவி செய்வது, என எண்ணற்ற நல்லபல நற்குணங்களை ஹஜ் பயணம் கற்றுக்கொடுக்கிறது.
காரணம், “நற்குணங்களால் நல்லழகு பெற்றவர்கள் தான் இறைநம்பிக்கையில் நிறைவு பெற்றவர்கள்” என நபிகளார் கூறியிருப்பதேயாகும்.
புனித ஹஜ்ஜின் மையக்கருத்தும் நற்குணத்துடன் வாழ்வோம், வாழ்விப்போம் என்பது தான். பொதுவாக எல்லாப் பிரச்சினைகளுக்கும் எது காரணமாக இருக்கும் என்று சற்று யோசித்துப் பார்க்கையில் அங்கு முன்னிலை வகிப்பது, நமது கெட்ட குணங்களே என்றால் அது மிகையல்ல.
இவற்றை எல்லாம் மீட்டெடுக்கும் ஒரு அற்புதமான களம் தான் புனித ஹஜ்.
வாருங்கள் தூய புனிதர்களைப் போற்றுவோம், தீய மனிதர்களை மாற்றுவோம்.
மவுலவி எஸ்.என்.ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
ஹஜ் என்பது சுற்றுலாப்பயணமல்ல. தினமும் நடைபெறும் ஐங்காலத் தொழுகைகளைப் போல அதுவும் ஒரு புனிதமான வணக்கம் தான். நமது வணக்கங்களின் வடிவங்கள் தான் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றனவே தவிர அனைத்து வணக்கங்களின் அடிப்படை நோக்கமும் இறையச்சம் ஒன்று தான்.
“ஒருவர் ஹஜ் செய்து விட்டு ஊர் திரும்பும் போது அன்று பிறந்த பாலகனைப் போல் திரும்புகிறார்” என்றார்கள் நபிகள் நாயகம் அவர்கள். அப்படியானால், அந்த ஹஜ் அவரது அனைத்து பாவக்கறைகளையும் போக்கிவிடுகிறது என்று தானே அர்த்தம்.
ஹஜ் குறித்து கூறும் திருக்குர்ஆன் வசனங்கள் சில...
“அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால் எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறை ஏற்படப்போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தார் எவரின் தேவையும் அற்றவனாக இருக்கின்றான்”. (திருக்குர்ஆன் 3:97)
“ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது (நன்மையானது), தக்வா (என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே, எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்”. (திருக்குர்ஆன் 2:197)
“ஆகவே, உங்களுடைய ஹஜ்ஜின் காரியங்களை முடித்ததும், நீங்கள் (இதற்கு முன்னர்) உங்கள் தந்தையரை நினைவு கூர்ந்து சிறப்பித்ததைப்போல்- இன்னும் அழுத்தமாக, அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்ந்து திக்ரு செய்யுங்கள்”. (திருக்குர்ஆன் 2:200)
நமது புனித ஹஜ்ஜுப் பயணம் எப்படி அமைந் திருக்க வேண்டும் என்று மேற்கண்ட வசனங்கள் தௌிவுபடுத்துகின்றன.
அவசரமான இன்றைய காலச்சூழலில் ஹஜ் ஒரு இன்றியமையாத ஒரு வாய்ப்பாகும். மன நிம்மதியைத் தேடி மனிதன் அங்குமிங்கும் ஓடியாடி அலைகின்றான். அவனுக்கான முழு நிம்மதி இந்த ஹஜ்ஜில் இருக்கின்றது என்றால் அது மிகையல்ல.
செல்வங்களை நாம் சேர்த்து வைத்து என்ன செய்யப்போகிறோம்.? புனிதப் பயணங்களுக்கும், நற்காரியங்களுக்கும் அவற்றை நாம் பயன்படுத்தினால் தான் நாம் நமது வாழ்வில் நல்ஈடேற்றம் பெறமுடியும்.
இது குறித்துப்பேசும் இறைமறை வசனங்கள் இதோ:
“அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை (நன்மை செய்வோரை) நேசிக்கின்றான்”. (திருக்குர்ஆன் 2:195)
நம்பிக்கை கொண்டோரே, பேரங்களும், நட் புறவுகளும், பரிந்துரைகளும் இல்லாத அந்த (இறுதித்தீர்ப்பு) நாள் வருவதற்கு முன்னர், நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழிகளில்) செலவு செய்யுங்கள்”. (திருக்குர்ஆன் 2:254)
“(நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல; ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்; இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மைபயப்பதாகும்; அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள்; நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்”. (திருக்குர்ஆன் 2:272)
ஹஜ் என்பது வெறும் பயணமல்ல, படிப்பினைகள் பல நிறைந்த பயிற்சியும், பாடமும் ஆகும். அனைவரையும் அனுசரித்துச் செல்வது, சுய விருப்பு, வெறுப்புகளை விட்டு விடுவது, இருப்பதை வைத்து வாழப்பழகுவது, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பது, தவறுகளை மன்னிப்பது, நட்புறவை பலப்படுத்துவது, நல்லதையே நாடுவது, நல்லதைச் செய்வது, இறைஞாபகத்திலும், தியானத்திலும், வணக்க வழிபாடுகளிலும் எப்போதும் ஈடுபடுவது, கொஞ்ச நாள் ஊரையும், உறவையும் பிரிந்திருப்பது, அயல்தேசத்தவர் களின் பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்வது, பொறுமையாகயிருப்பது, தூய்மையாகயிருப்பது, பொறாமைப்படாமல் இருப்பது, ஒருவருக்கொருவர் உதவி செய்வது, என எண்ணற்ற நல்லபல நற்குணங்களை ஹஜ் பயணம் கற்றுக்கொடுக்கிறது.
காரணம், “நற்குணங்களால் நல்லழகு பெற்றவர்கள் தான் இறைநம்பிக்கையில் நிறைவு பெற்றவர்கள்” என நபிகளார் கூறியிருப்பதேயாகும்.
புனித ஹஜ்ஜின் மையக்கருத்தும் நற்குணத்துடன் வாழ்வோம், வாழ்விப்போம் என்பது தான். பொதுவாக எல்லாப் பிரச்சினைகளுக்கும் எது காரணமாக இருக்கும் என்று சற்று யோசித்துப் பார்க்கையில் அங்கு முன்னிலை வகிப்பது, நமது கெட்ட குணங்களே என்றால் அது மிகையல்ல.
இவற்றை எல்லாம் மீட்டெடுக்கும் ஒரு அற்புதமான களம் தான் புனித ஹஜ்.
வாருங்கள் தூய புனிதர்களைப் போற்றுவோம், தீய மனிதர்களை மாற்றுவோம்.
மவுலவி எஸ்.என்.ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி குத்புல் அக்தாப் செய்யது இபுராகிம் பாதுஷா நாயகத்தின் 845-வது ஆண்டு சந்தனக் கூடு திருவிழாவின் நிறைவு விழா கொடியிறக்கம் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி குத்புல் அக்தாப் செய்யது இபுராகிம் பாதுஷா நாயகத்தின் 845-வது ஆண்டு சந்தனக் கூடு திருவிழா ஜூலை 4-ந்தேதி தொடங்கியது.
இதன் நிறைவு விழா நிகழ்ச்சியாக நேற்று 2-ந்தேதி மாலை தர்கா வளாகத்தில் கொடியிறக்கம் நடந்தது. இந்த விழாவில் தென் மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொடியிறக்கத்தை முன்னிட்டு நேற்று காலை 8 மணிக்கு ஏர்வாடி குடியிருப்பில் உள்ள பழைய குத்பா பள்ளிவாசலில் மவ்லீது (புகழ்மாலை) ஓதப்பட்டு, அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு நெய் சாதம் பிரசாதமாக வழங்கப் பட்டது.
மாலையில் தர்கா மண்டபத்தில் பாதுஷா நாயகத்தின் புகழ்மாலை ஓதப்பட்டு உலக மக்களின் நல்லிணக்கத்திற்காக மாவட்ட அரசு காஜி சலாஹூதீன் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
தக்பீர் முழக்கத்துடன் ஹக்தார்கள் கொடியிறக்கினர். இறக்கப்பட்ட கொடியை ஹக்தார்கள் மகான் அடக்க ஸ்தலத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு சிறப்பு துவா (பிரார்த்தனை) ஓதப்பட்டது.
இதை தொடர்ந்து கொடிமரத்தில் உள்ள காவட்டம் கழற்றப்பட்டு பாதுஷா நாயகம் சன்னதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து சமுதாய மக்களும் இணைந்து கொடிமரத்தை இறக்கினர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பாதுஷா நாயகத்தின் பிரசாதம் பெற்றுச் சென்றனர். கொடியிறக்கத்தை முன்னிட்டு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதால் பக்தர்கள் சிரமமின்றி சொந்த ஊர்க்க திரும்பிச் சென்றனர்.
ராமநாதபுரம் எஸ்.பி. ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின் பேரில் கீழக்கரை டி.எஸ்.பி. முருகேசன் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.
கலெக்டர் வீரராகவராவ் உத்தரவின்பேரில், ஊராட்சி உதவி இயக்குநர் கேசவ நாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மேகலா, அன்புக்கண்ணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜமால் முகம்மது ஆலோசனையின் பேரில் ஊராட்சி செயலர் அஜ்மல் கான் மேற்பார்வையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், குடிநீர் வசதிகள் செய்யப் பட்டிருந்தது.
விழா ஏற்பாடுகளை தர்கா ஹக்தர் பொது மகா சபையினர் செய்திருந்தனர்.
இதன் நிறைவு விழா நிகழ்ச்சியாக நேற்று 2-ந்தேதி மாலை தர்கா வளாகத்தில் கொடியிறக்கம் நடந்தது. இந்த விழாவில் தென் மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொடியிறக்கத்தை முன்னிட்டு நேற்று காலை 8 மணிக்கு ஏர்வாடி குடியிருப்பில் உள்ள பழைய குத்பா பள்ளிவாசலில் மவ்லீது (புகழ்மாலை) ஓதப்பட்டு, அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு நெய் சாதம் பிரசாதமாக வழங்கப் பட்டது.
மாலையில் தர்கா மண்டபத்தில் பாதுஷா நாயகத்தின் புகழ்மாலை ஓதப்பட்டு உலக மக்களின் நல்லிணக்கத்திற்காக மாவட்ட அரசு காஜி சலாஹூதீன் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
தக்பீர் முழக்கத்துடன் ஹக்தார்கள் கொடியிறக்கினர். இறக்கப்பட்ட கொடியை ஹக்தார்கள் மகான் அடக்க ஸ்தலத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு சிறப்பு துவா (பிரார்த்தனை) ஓதப்பட்டது.
இதை தொடர்ந்து கொடிமரத்தில் உள்ள காவட்டம் கழற்றப்பட்டு பாதுஷா நாயகம் சன்னதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து சமுதாய மக்களும் இணைந்து கொடிமரத்தை இறக்கினர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பாதுஷா நாயகத்தின் பிரசாதம் பெற்றுச் சென்றனர். கொடியிறக்கத்தை முன்னிட்டு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதால் பக்தர்கள் சிரமமின்றி சொந்த ஊர்க்க திரும்பிச் சென்றனர்.
ராமநாதபுரம் எஸ்.பி. ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின் பேரில் கீழக்கரை டி.எஸ்.பி. முருகேசன் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.
கலெக்டர் வீரராகவராவ் உத்தரவின்பேரில், ஊராட்சி உதவி இயக்குநர் கேசவ நாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மேகலா, அன்புக்கண்ணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜமால் முகம்மது ஆலோசனையின் பேரில் ஊராட்சி செயலர் அஜ்மல் கான் மேற்பார்வையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், குடிநீர் வசதிகள் செய்யப் பட்டிருந்தது.
விழா ஏற்பாடுகளை தர்கா ஹக்தர் பொது மகா சபையினர் செய்திருந்தனர்.
காரணம் மக்கள் அனைவருமே தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதே. எத்தனை விசாலமான மனசு. அந்த அன்பே அவர்களின் வெற்றிக்கு காரணம்.
இந்த உலகையும், உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் படைத்த அல்லாஹ், ஒட்டுமொத்த மனிதர்கள் அனைவர் மீதும் கருணையைப் பொழிகின்ற குணம் நிறைந்த மனிதராக கண்மணி நாயகம் முகம்மது நபி (ஸல்) அவர்களைப் படைத்து உலகிற்கு அனுப்பினான். அதற்கு ஏற்ப, எல்லோர் மீதும் அன்பை பொழிகின்ற, யார் மீதும் எந்த நிலையிலும் வெறுப்பைக் காட்டாத அழகிய நற்குணத்தைக் கொண்டவர் களாக நபிகளார் தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டினார்கள்.
திருக்குர்ஆனில் நபிகளார் குறித்து இறைவன் குறிப்பிடும்போது, “நபியே, நீங்கள் நற்குணங்கள் நிறைந்தவர்களாக இருக்கின்றீர்கள்” என்று குறிப்பிடுகின்றான்.
இஸ்லாத்தின் சிறப்புகளை மக்கா நகர மக்களிடம் எடுத்துச்சொல்ல எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும் நபிகளாருக்கு அதில் வெற்றி கிடைக்கவில்லை. எனவே அண்ணல் எம்பெருமானார் (ஸல்) மக்கா அருகில் உள்ள தாயிப் நகருக்கு சென்று ஏகத்துவ கொள்கையை எடுத்துச்சொல்ல முயன்றார்கள். அந்த நகர மக்கள் இதை ஏற்க மறுத்தது மட்டுமல்லாமல் நபிகள் நாதரை கல்லால் எறிந்து காயப் படுத்தினார்கள்.
ரத்தம் சொட்ட சொட்ட ஊரின் கடைக்கோடியில் வந்து ஒரு பாறையில் அமர்ந்தவர்களாக. “இறைவா, நான் பலவீனப்பட்டு போனேன். இந்த அறியாத மக்களுக்கு ஏகத்துவத்தை எப்படி எடுத்துச் சொல்வது என்பது எனக்கு சரிவரத்தெரியவில்லை. என்னுடைய பலவீனத்தைப் போக்கி என் கரங்களை உறுதிப்படுத்து ரஹ்மானே” என்று இருகரம் ஏந்தி பிரார்த்தித்தார்கள்.
அப்போது, வானவர் தலைவர் ஜிப்ரீல் தோன்றி, “நபியே, அநியாயம் செய்த இந்த ஊர் மக்களை இந்த இரண்டு மலைகளைக் கொண்டு இறுக்கி அழித்து விடட்டுமா?. எனக்கு உத்தரவு இடுங்கள் நபியே” என்று வேண்டி நின்றார்கள்.
“வேண்டாம் வானவத் தூதுவரே, என் ஒருவன் பொருட்டால் இத்தனை மக்களை அழிக்க வேண்டுமா?, இவர்கள் அறியாமல் செய்கிறார்கள். இவர்கள் சந்ததிகள் ஏக இறைவன் அல்லாஹ் என்று ஏற்றுக்கொள்வார்கள். அவர்களை விட்டு விடுங்கள்” என்றார்கள் கருணையே உருவான நபி பெருமானார் (ஸல்) அவர்கள்.
இதற்கு பலனும் கிடைத்தது. ஒரு சில ஆண்டுகளிலே தாயிப் நகரம் முழுவதும் இஸ்லாமிய பேரொளி வீசியது.
உக்கிரமான உஹது போர் வெற்றியை சுவைத்த போர் வீரர்கள், அண்ணலாரின் கட்டளையை மறந்து விட்ட ஒரு சோதனையான நிலையில், போரின் முடிவு மாற்றமாக அமைந்து விட்டது. அண்ணலாருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதிலெல்லாம் பேரிழப்பாக ஹம்ஸா (ரலி) அவர்கள் கொல்லப்பட்டார்கள்.
சில ஆண்டுகள் கழித்து மக்கா நகரம் வெற்றிகொள்ளப்பட்டது. வெற்றி முழக்கத்துடன் நபிகளாரின் படை வீரர்கள் மக்கா நகருக்குள் நுழைந்தனர். நபிகளாருக்கு எதிராக செயல்பட்ட குரைஷியர்கள் அனைவரும் தங்களுக்கு மரண தண்டனை நிச்சயம் என்று பயந்திருந்தனர்.
ஆனால் நடந்தது என்ன?.
“இன்று முதல் மக்காவில் வாழும் அத்தனை குரைஷியர்களும் சுதந்திரமானவர்கள். யாரும் யாருக்காகவும் பழிக்குப்பழி வாங்கப்பட மாட்டார்கள். அத்தனை பேரையும் அவர்கள் செய்த குற்றங்களையும் மன்னித்து விட்டேன்” என்றார் நபிகள் நாயகம்.
இதற்கு காரணம், தங்கள் மன்னிப்பின் பொருட்டால் அத்தனைப் பேரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு மறுமையில் சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதே அவர்கள் பிரதான நோக்கமாய் இருந்தது.
“இத்தனை கொடுமைகள் செய்தும் நமக்கு மன்னிப்பா? என்று ஆச்சரியம் அடைந்த கொடியவர்கள் தங்கள் மறைவிடத்தில் இருந்து வெளியில் வந்தனர். அண்ணல் நபியின் கரங்கள் பிடித்து தங்களை இஸ்லாத்தில் இணைத்துக்கொண்டனர். இந்த மாற்றத்தைத் தான் மாநபி (ஸல்) அவர்கள் விரும்பினார்கள்.
மக்காவை விட்டு மதீனாவிற்கு ‘ஹிஜ்ரத்’ செல்லுமாறு நபிகளாருக்கு இறைவன் கட்டளையிட்டான். இதையடுத்து கஆபா சென்று தொழுதுவிட்டு செல்ல நபிகளார் விரும்பினார்கள். இதற்காக அதன் சாவியை வைத்திருந்த, உஸ்மான் இப்னு தல்ஹாவிடம் தனது விருப்பத்தை தெரிவித்தார்கள். ஆனால் தல்ஹா மறுத்துவிட்டார்.
அப்போது, நபிகள் நாயகம் (ஸல்), “ஒருநாள் வரும் நான் உன்னிடத்தில் இருப்பேன். நீ என்னிடத்தில் இருப்பாய். அந்த நாளைப் பயந்து கொள்” என்றார்கள்.
மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பின்னர் கஆபாவின் சாவி எம்பெருமானார் (ஸல்) அவர்களின் கரங்களுக்கு வருகிறது. அப்பாஸ், (ரலி), அலி (ரலி) போன்ற பெரும் பெரும் சஹாபாக்கள், ‘நாயகம் அவர்கள் தங்கள் கையில் கஆபாவின் சாவியைத் தருவார்கள்’ என்று எதிர்பார்த்தார்கள்.
ஆனால் அருமை நபியவர்கள், ‘எங்கே உஸ்மான் இப்னு தல்ஹா?’ என்று கேட்டார்கள். பழைய சம்பவத்தை நினைத்து பயந்தவராக உஸ்மான் இப்னு தல்ஹா வந்தார். அவரது கையில் சாவியை கொடுத்த நபியவர்கள், ‘இன்று முதல் இந்த சாவி உன்னிடமே இருக்கட்டும். கியாமத் நாள் முடியும் வரை இது உன் சந்ததிகளிடமே இருக்கும்’ என்றார்கள்.
தனக்கு எதிராக செயல்பட்டவருக்கும் நன்மைகள் செய்த விசால மனம் கொண்டவர்களாக நபிகள் நாயகம் இருந்தார்கள் என்பதை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.
தனக்கு விஷம் வைத்து கொல்ல நினைத்த யூதப்பெண்ணை மன்னித்தார்கள், தலையில் குப்பைகளைக்கொட்டிய மூதாட்டி நோயுற்ற போது சென்று நலம் விசாரித்தார்கள், பத்ர் போரில் எதிரிகளை மன்னித்தார்கள்.
இப்படி நபிகளாரின் வாழ்நாட்களில் ஒவ்வொரு சோதனையான காலகட்டங்களில் எல்லாம் தன் அன்பினால் அவர்களை அரவணைத்தார்கள். அழகிய முன்மாதிரியாகவும் திகழ்ந்தார்கள்.
காரணம் மக்கள் அனைவருமே தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதே. எத்தனை விசாலமான மனசு. அந்த அன்பே அவர்களின் வெற்றிக்கு காரணம்.
நபிகளாரின் துஆவை நாமும் பெற்று நாளை மறுமையில் ஈடேற்றம் பெறுவோம்.
மு. முகமது யூசுப் உடன்குடி.
திருக்குர்ஆனில் நபிகளார் குறித்து இறைவன் குறிப்பிடும்போது, “நபியே, நீங்கள் நற்குணங்கள் நிறைந்தவர்களாக இருக்கின்றீர்கள்” என்று குறிப்பிடுகின்றான்.
இஸ்லாத்தின் சிறப்புகளை மக்கா நகர மக்களிடம் எடுத்துச்சொல்ல எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும் நபிகளாருக்கு அதில் வெற்றி கிடைக்கவில்லை. எனவே அண்ணல் எம்பெருமானார் (ஸல்) மக்கா அருகில் உள்ள தாயிப் நகருக்கு சென்று ஏகத்துவ கொள்கையை எடுத்துச்சொல்ல முயன்றார்கள். அந்த நகர மக்கள் இதை ஏற்க மறுத்தது மட்டுமல்லாமல் நபிகள் நாதரை கல்லால் எறிந்து காயப் படுத்தினார்கள்.
ரத்தம் சொட்ட சொட்ட ஊரின் கடைக்கோடியில் வந்து ஒரு பாறையில் அமர்ந்தவர்களாக. “இறைவா, நான் பலவீனப்பட்டு போனேன். இந்த அறியாத மக்களுக்கு ஏகத்துவத்தை எப்படி எடுத்துச் சொல்வது என்பது எனக்கு சரிவரத்தெரியவில்லை. என்னுடைய பலவீனத்தைப் போக்கி என் கரங்களை உறுதிப்படுத்து ரஹ்மானே” என்று இருகரம் ஏந்தி பிரார்த்தித்தார்கள்.
அப்போது, வானவர் தலைவர் ஜிப்ரீல் தோன்றி, “நபியே, அநியாயம் செய்த இந்த ஊர் மக்களை இந்த இரண்டு மலைகளைக் கொண்டு இறுக்கி அழித்து விடட்டுமா?. எனக்கு உத்தரவு இடுங்கள் நபியே” என்று வேண்டி நின்றார்கள்.
“வேண்டாம் வானவத் தூதுவரே, என் ஒருவன் பொருட்டால் இத்தனை மக்களை அழிக்க வேண்டுமா?, இவர்கள் அறியாமல் செய்கிறார்கள். இவர்கள் சந்ததிகள் ஏக இறைவன் அல்லாஹ் என்று ஏற்றுக்கொள்வார்கள். அவர்களை விட்டு விடுங்கள்” என்றார்கள் கருணையே உருவான நபி பெருமானார் (ஸல்) அவர்கள்.
இதற்கு பலனும் கிடைத்தது. ஒரு சில ஆண்டுகளிலே தாயிப் நகரம் முழுவதும் இஸ்லாமிய பேரொளி வீசியது.
உக்கிரமான உஹது போர் வெற்றியை சுவைத்த போர் வீரர்கள், அண்ணலாரின் கட்டளையை மறந்து விட்ட ஒரு சோதனையான நிலையில், போரின் முடிவு மாற்றமாக அமைந்து விட்டது. அண்ணலாருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதிலெல்லாம் பேரிழப்பாக ஹம்ஸா (ரலி) அவர்கள் கொல்லப்பட்டார்கள்.
சில ஆண்டுகள் கழித்து மக்கா நகரம் வெற்றிகொள்ளப்பட்டது. வெற்றி முழக்கத்துடன் நபிகளாரின் படை வீரர்கள் மக்கா நகருக்குள் நுழைந்தனர். நபிகளாருக்கு எதிராக செயல்பட்ட குரைஷியர்கள் அனைவரும் தங்களுக்கு மரண தண்டனை நிச்சயம் என்று பயந்திருந்தனர்.
ஆனால் நடந்தது என்ன?.
“இன்று முதல் மக்காவில் வாழும் அத்தனை குரைஷியர்களும் சுதந்திரமானவர்கள். யாரும் யாருக்காகவும் பழிக்குப்பழி வாங்கப்பட மாட்டார்கள். அத்தனை பேரையும் அவர்கள் செய்த குற்றங்களையும் மன்னித்து விட்டேன்” என்றார் நபிகள் நாயகம்.
இதற்கு காரணம், தங்கள் மன்னிப்பின் பொருட்டால் அத்தனைப் பேரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு மறுமையில் சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதே அவர்கள் பிரதான நோக்கமாய் இருந்தது.
“இத்தனை கொடுமைகள் செய்தும் நமக்கு மன்னிப்பா? என்று ஆச்சரியம் அடைந்த கொடியவர்கள் தங்கள் மறைவிடத்தில் இருந்து வெளியில் வந்தனர். அண்ணல் நபியின் கரங்கள் பிடித்து தங்களை இஸ்லாத்தில் இணைத்துக்கொண்டனர். இந்த மாற்றத்தைத் தான் மாநபி (ஸல்) அவர்கள் விரும்பினார்கள்.
மக்காவை விட்டு மதீனாவிற்கு ‘ஹிஜ்ரத்’ செல்லுமாறு நபிகளாருக்கு இறைவன் கட்டளையிட்டான். இதையடுத்து கஆபா சென்று தொழுதுவிட்டு செல்ல நபிகளார் விரும்பினார்கள். இதற்காக அதன் சாவியை வைத்திருந்த, உஸ்மான் இப்னு தல்ஹாவிடம் தனது விருப்பத்தை தெரிவித்தார்கள். ஆனால் தல்ஹா மறுத்துவிட்டார்.
அப்போது, நபிகள் நாயகம் (ஸல்), “ஒருநாள் வரும் நான் உன்னிடத்தில் இருப்பேன். நீ என்னிடத்தில் இருப்பாய். அந்த நாளைப் பயந்து கொள்” என்றார்கள்.
மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பின்னர் கஆபாவின் சாவி எம்பெருமானார் (ஸல்) அவர்களின் கரங்களுக்கு வருகிறது. அப்பாஸ், (ரலி), அலி (ரலி) போன்ற பெரும் பெரும் சஹாபாக்கள், ‘நாயகம் அவர்கள் தங்கள் கையில் கஆபாவின் சாவியைத் தருவார்கள்’ என்று எதிர்பார்த்தார்கள்.
ஆனால் அருமை நபியவர்கள், ‘எங்கே உஸ்மான் இப்னு தல்ஹா?’ என்று கேட்டார்கள். பழைய சம்பவத்தை நினைத்து பயந்தவராக உஸ்மான் இப்னு தல்ஹா வந்தார். அவரது கையில் சாவியை கொடுத்த நபியவர்கள், ‘இன்று முதல் இந்த சாவி உன்னிடமே இருக்கட்டும். கியாமத் நாள் முடியும் வரை இது உன் சந்ததிகளிடமே இருக்கும்’ என்றார்கள்.
தனக்கு எதிராக செயல்பட்டவருக்கும் நன்மைகள் செய்த விசால மனம் கொண்டவர்களாக நபிகள் நாயகம் இருந்தார்கள் என்பதை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.
தனக்கு விஷம் வைத்து கொல்ல நினைத்த யூதப்பெண்ணை மன்னித்தார்கள், தலையில் குப்பைகளைக்கொட்டிய மூதாட்டி நோயுற்ற போது சென்று நலம் விசாரித்தார்கள், பத்ர் போரில் எதிரிகளை மன்னித்தார்கள்.
இப்படி நபிகளாரின் வாழ்நாட்களில் ஒவ்வொரு சோதனையான காலகட்டங்களில் எல்லாம் தன் அன்பினால் அவர்களை அரவணைத்தார்கள். அழகிய முன்மாதிரியாகவும் திகழ்ந்தார்கள்.
காரணம் மக்கள் அனைவருமே தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதே. எத்தனை விசாலமான மனசு. அந்த அன்பே அவர்களின் வெற்றிக்கு காரணம்.
நபிகளாரின் துஆவை நாமும் பெற்று நாளை மறுமையில் ஈடேற்றம் பெறுவோம்.
மு. முகமது யூசுப் உடன்குடி.
வீணான கேளிக்கைகளில் மனிதர்கள் மூழ்கிக் கிடப்பது ஆபத்தானது. அது அவர்களை நரகத்தில் கொண்டு போய் தள்ளும். அவற்றிலிருந்து நம்மை நாம் பாதுகாப்போம்.
இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான வீண் பேச்சுக்களை தவிர்ப்பது, வீண் கேளிக்கைகளில் இருந்து விலகியிருப்பது ஆகியவை குறித்த தகவல்களை காண்போம்.
வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நாவு சார்ந்த இறைநம்பிக்கை என்றால், வீண் கேளிக்கைகளில் இருந்து விலகியிருப்பது உடல் சார்ந்த இறைநம்பிக்கையின் ஒரு அங்கமாக கருதப்படுகிறது.
வீண் விரயம் கூடாது என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. பொருளாதாரம், நீர், உணவு தானியங்களில் மட்டுமல்ல, எதிலும் வீண் விரயம் கூடவே கூடாது என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது.
‘உண்ணுங்கள், பருகுங்கள், வீண் விரயம் செய்யாதீர்கள். வீண் விரயம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்’ என்று திருக்குர்ஆன் (7:31) கட்டளையிடுகிறது.
பேச்சிலும் கூட உண்மையை, நேர்மையை, அழகை, கனிவை, அன்பை, நியாயத்தை, தர்மத்தை, சத்தியத்தை பேசும்படி இஸ்லாம் ஆதரிக்கிறது. அதே வேளையில் வீண் பேச்சுக்களான பொய், புறம், அவதூறு, ஆபாசமாக பேசுவது, சபிப்பது, அரட்டை அடிப்பது போன்றவற்றை இஸ்லாம் எதிர்க்கிறது.
நல்லவற்றை பேசி இறைநம்பிக்கையை வளமாக்க வேண்டும். வீணானவற்றை பேசி இறைநம்பிக்கையை பாழாக்கி விடக்கூடாது. இதனால் தான் பேசினால் உண்மையை பேசுங்கள், நேர்மையாகப் பேசுங்கள் என்று திருக்குர்ஆன் இவ்வாறு வலியுறுத்துகிறது, மேலும் அவ்வாறு உண்மையுடன் நடந்து கொண்டால் என்ன பயன் கிடைக்கும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது:
‘இது உண்மை பேசுவோருக்கு அவர்களது உண்மை பயன்தரும் நாள். அவர்களுக்குச் சொர்க்கச்சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை இறைவன் பொருந்திக்கொண்டான். அவர்களும் இறைவனை பொருத்திக்கொண்டனர். இதுவே மகத்தான வெற்றியாகும் என்று இறைவன் கூறுவான்’. (திருக்குர்ஆன் 5:119)
‘நம்பிக்கை கொண்டோரே, இறைவனை அஞ்சுங்கள், நேர்மையான சொல்லையே கூறுங்கள்’ (திருக்குர்ஆன் 33:70)
‘உறவினராக இருந்தாலும் பேசும்போது நீதியை பேசுங்கள்’. (திருக்குர்ஆன் 6:152)
‘இன்சொல்லும் தர்மம் ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), புகாரி)
அழகிய முறையில் பேசுவது சொர்க்கம் செல்லும் வழியை எளிதாக்கி வைத்து விடுகிறது.
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் சொர்க்கம் செல்லும் வழியை கேட்டபோது அவருக்கு நபியவர்கள் அழகிய முறையில் பேசும்படி கட்டளையிட்டார்கள்.
இறைநம்பிக்கையின் ஒரு பகுதி வீண் பேச்சுக்களை தவிர்ந்திருப்பதாக உள்ளதால் இறைநம்பிக்கையாளர்கள் ஒன்று பேசினால் நல்லதை பேசட்டும். இல்லையென்றால் வாய்மூடி இருந்து கொள்ளட்டும். கண்டதை பேசி வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்பது நபிமொழியாகும்.
‘இறைவனையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), புகாரி)
வீணானவற்றை பேசுவதிலிருந்து தவிர்ந்திருப்பது இறைநம்பிக்கைக்கு பாதுகாப்பு அரணாக அமையும்.
‘கெட்டவார்த்தையும், அதிகமான பேச்சும் நயவஞ்சகத்தின் ஒரு பகுதியாக உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஉமாமா (ரலி) நூல்: திர்மிதி)
கேலி செய்யாதே, குறை கூறாதே, பட்டப்பெயர்களால் குத்திக் காட்டாதே, துருவித்துருவி ஆராயாதே, புறம் பேசாதே. இவை யாவும் வீண் பேச்சுக்களே. இவற்றை தவிர்ந்திடுவீர் என்று திருக்குர்ஆன் இவ்வாறு சுட்டிக்காட்டுகிறது:
‘நம்பிக்கை கொண்டோரே, ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக்கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக்கூடும். உங்களுக்குள் நீங்கள் குறைகூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக்காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள்’.
‘நம்பிக்கை கொண்டோரே, ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக்கொள்ளுங்கள். சில ஊகங்கள் பாவமாகும். துருவித்துருவி ஆராயாதீர்கள். உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள். உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா?, அதை வெறுப்பீர்கள். இறைவனை அஞ்சுங்கள். இறைவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்’. (திருக்குர்ஆன் 49:11,12)
‘நம்பிக்கை கொண்ட வெகுளிகளான, ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு’. (திருக்குர்ஆன் 24:23)
‘நிச்சயமாக இறைவன் மூன்று செயல்களை வெறுக்கிறான். 1) இவ்வாறு சொல்லப்பட்டது; அவர் சொன்னார் என ஆதாரமின்றிப் பேசுவது, 2) பொருள்களை வீணாக்குவது, 3) அதிகமாக (பிறரிடம்) யாசிப்பது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: முகீரா (ரலி) புகாரி)
‘விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். நாவும் கூட விபசாரம் செய்கிறது. அது செய்யும் விபசாரம் பாலுணர்வைத் தூண்டும் பேச்சாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல் புகாரி)
‘தம் இரண்டு தாடைகளுக்கு இடையே உள்ள நாவிற்கும், தம் இரண்டு கால்களுக்கு இடையே உள்ள பாலின உறுப்பிற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிப்பவருக்கு நான் சொர்க்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), புகாரி)
‘கோள் சொல்கிறவன் சொர்க்கம் செல்லமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஹூதைபா (ரலி), புகாரி)
மேற்கூறப்பட்டவைகளில் நல்லவற்றை பேசுவதும், வீணானவற்றை தவிர்ந்து நடப்பதும் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளதால் பேண வேண்டியதை பேணி, வீணானவற்றை விட்டு விலகி நடக்க வேண்டும். பின் விளைவுகள் பற்றி யோசிக்காமல் எதையும் பேசக்கூடாது.
இத்துடன் நாவு சார்ந்த இறைநம்பிக்கையின் அம்சங்கள் நிறைவு பெற்றுவிட்டது. இனி உடல் சார்ந்த இறைநம்பிக்கையின் அம்சங்கள் தொடர்கின்றன.
அவற்றில் முதலாவதாக நாம் பார்க்கப் போவது ‘வீண் கேளிக்கைகளில் இருந்து விலகியிருப்பது’ குறித்து பார்ப்போம். மேற்கூறப்பட்ட வீணான பேச்சுகள், வீணானவை நடைபெறும் இடங்களிலிருந்து விலகியிருப்பதுதான் உடல் சார்ந்த இறைநம்பிக்கை ஆகும்.
நாம் நேரத்தை நல்ல வழியில், பயனுள்ள முறையில் செலவளிக்க வேண்டும். இரவு விடுதி, மதுபான விடுதி, உல்லாச விடுதி, சூதாட்ட விடுதி, ஆபாச விடுதி போன்றவற்றில் கலந்து கொண்டு, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், காமகளியாட்டம், நக்கல், நையாண்டி, கேலி கிண்டல் போன்ற வீண் கேளிக்கைகளிலிருந்து விலகியிருக்க வேண்டும். இப்படிப்பட்ட கேளிக்கைகள் இறைநம்பிக்கையை முற்றிலும் பாழாக்கிவிடும்.
கேளிக்கை பிரியர்கள் நம்மை அழைத்தாலோ, அல்லது அவர்களை நாம் கடந்து சென்றாலோ ஒன்று நாம் அவர்களை திருத்த முயலவேண்டும். அல்லது நாம் அந்த இடங்களை புறக்கணித்து சென்றுவிட வேண்டும். இவ்வாறு நாம் செய்வது தான் இறைநம்பிக்கையை பாதுகாக்கும் சிறந்த வழியாக அமையும். இது குறித்து இறைவன் கூறுவதை கேட்போம்.
“வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். ‘எங்கள் செயல்கள் எங்களுக்கு; உங்கள் செயல்கள் உங்களுக்கு. உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்’ எனவும் கூறுகின்றனர்”. (திருக்குர்ஆன் 28:55)
‘(இறையடியார்கள்) வீணானவற்றைக் கடக்கும் போது கண்ணியமாகக் கடந்து விடுவார்கள்’. (திருக்குர்ஆன் 25:72)
‘இறைவனை நினைவுபடுத்தாத யாவும் வீண் விளையாட்டே. பின்வரும் நான்கு செயல்களைத் தவிர. அவை: 1) கணவன் மனைவியிடம் அன்பாக விளையாடுவது, 2) ஒருவர் குதிரைக்கு பயிற்சி அளிப்பது, 3) இரண்டு இலக்குகளுக்கிடையே ஒருவர் மற்றவரிடம் போட்டி போட்டு நடப்பது, 4) ஒருவர் நீந்த கற்றுக் கொடுப்பது என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அதாஉபின் அபிரபாஹ் (ரலி), நூல்: அஹ்மது)
“குற்றவாளிகளைக் குறித்து, சுவர்க்கச் சோலைகளில் இருப்பவர்கள் விசாரித்தும் கொள்வார்கள். ‘உங்களை நரகத்தில் நுழைய வைத்தது எது?’ (என்று கேட்பார்கள்). ‘நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை (வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன் நாங்களும் மூழ்கிக்கிடந்தோம்’ என நரகவாசிகள் கூறுவார்கள்”. (திருக்குர்ஆன் 74:40-45).
வீணான கேளிக்கைகளில் மனிதர்கள் மூழ்கிக் கிடப்பது ஆபத்தானது. அது அவர்களை நரகத்தில் கொண்டு போய் தள்ளும். அவற்றிலிருந்து நம்மை நாம் பாதுகாப்போம்.
மவுலவி அ.செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நாவு சார்ந்த இறைநம்பிக்கை என்றால், வீண் கேளிக்கைகளில் இருந்து விலகியிருப்பது உடல் சார்ந்த இறைநம்பிக்கையின் ஒரு அங்கமாக கருதப்படுகிறது.
வீண் விரயம் கூடாது என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. பொருளாதாரம், நீர், உணவு தானியங்களில் மட்டுமல்ல, எதிலும் வீண் விரயம் கூடவே கூடாது என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது.
‘உண்ணுங்கள், பருகுங்கள், வீண் விரயம் செய்யாதீர்கள். வீண் விரயம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்’ என்று திருக்குர்ஆன் (7:31) கட்டளையிடுகிறது.
பேச்சிலும் கூட உண்மையை, நேர்மையை, அழகை, கனிவை, அன்பை, நியாயத்தை, தர்மத்தை, சத்தியத்தை பேசும்படி இஸ்லாம் ஆதரிக்கிறது. அதே வேளையில் வீண் பேச்சுக்களான பொய், புறம், அவதூறு, ஆபாசமாக பேசுவது, சபிப்பது, அரட்டை அடிப்பது போன்றவற்றை இஸ்லாம் எதிர்க்கிறது.
நல்லவற்றை பேசி இறைநம்பிக்கையை வளமாக்க வேண்டும். வீணானவற்றை பேசி இறைநம்பிக்கையை பாழாக்கி விடக்கூடாது. இதனால் தான் பேசினால் உண்மையை பேசுங்கள், நேர்மையாகப் பேசுங்கள் என்று திருக்குர்ஆன் இவ்வாறு வலியுறுத்துகிறது, மேலும் அவ்வாறு உண்மையுடன் நடந்து கொண்டால் என்ன பயன் கிடைக்கும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது:
‘இது உண்மை பேசுவோருக்கு அவர்களது உண்மை பயன்தரும் நாள். அவர்களுக்குச் சொர்க்கச்சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை இறைவன் பொருந்திக்கொண்டான். அவர்களும் இறைவனை பொருத்திக்கொண்டனர். இதுவே மகத்தான வெற்றியாகும் என்று இறைவன் கூறுவான்’. (திருக்குர்ஆன் 5:119)
‘நம்பிக்கை கொண்டோரே, இறைவனை அஞ்சுங்கள், நேர்மையான சொல்லையே கூறுங்கள்’ (திருக்குர்ஆன் 33:70)
‘உறவினராக இருந்தாலும் பேசும்போது நீதியை பேசுங்கள்’. (திருக்குர்ஆன் 6:152)
‘இன்சொல்லும் தர்மம் ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), புகாரி)
அழகிய முறையில் பேசுவது சொர்க்கம் செல்லும் வழியை எளிதாக்கி வைத்து விடுகிறது.
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் சொர்க்கம் செல்லும் வழியை கேட்டபோது அவருக்கு நபியவர்கள் அழகிய முறையில் பேசும்படி கட்டளையிட்டார்கள்.
இறைநம்பிக்கையின் ஒரு பகுதி வீண் பேச்சுக்களை தவிர்ந்திருப்பதாக உள்ளதால் இறைநம்பிக்கையாளர்கள் ஒன்று பேசினால் நல்லதை பேசட்டும். இல்லையென்றால் வாய்மூடி இருந்து கொள்ளட்டும். கண்டதை பேசி வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்பது நபிமொழியாகும்.
‘இறைவனையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), புகாரி)
வீணானவற்றை பேசுவதிலிருந்து தவிர்ந்திருப்பது இறைநம்பிக்கைக்கு பாதுகாப்பு அரணாக அமையும்.
‘கெட்டவார்த்தையும், அதிகமான பேச்சும் நயவஞ்சகத்தின் ஒரு பகுதியாக உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஉமாமா (ரலி) நூல்: திர்மிதி)
கேலி செய்யாதே, குறை கூறாதே, பட்டப்பெயர்களால் குத்திக் காட்டாதே, துருவித்துருவி ஆராயாதே, புறம் பேசாதே. இவை யாவும் வீண் பேச்சுக்களே. இவற்றை தவிர்ந்திடுவீர் என்று திருக்குர்ஆன் இவ்வாறு சுட்டிக்காட்டுகிறது:
‘நம்பிக்கை கொண்டோரே, ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக்கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக்கூடும். உங்களுக்குள் நீங்கள் குறைகூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக்காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள்’.
‘நம்பிக்கை கொண்டோரே, ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக்கொள்ளுங்கள். சில ஊகங்கள் பாவமாகும். துருவித்துருவி ஆராயாதீர்கள். உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள். உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா?, அதை வெறுப்பீர்கள். இறைவனை அஞ்சுங்கள். இறைவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்’. (திருக்குர்ஆன் 49:11,12)
‘நம்பிக்கை கொண்ட வெகுளிகளான, ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு’. (திருக்குர்ஆன் 24:23)
‘நிச்சயமாக இறைவன் மூன்று செயல்களை வெறுக்கிறான். 1) இவ்வாறு சொல்லப்பட்டது; அவர் சொன்னார் என ஆதாரமின்றிப் பேசுவது, 2) பொருள்களை வீணாக்குவது, 3) அதிகமாக (பிறரிடம்) யாசிப்பது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: முகீரா (ரலி) புகாரி)
‘விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். நாவும் கூட விபசாரம் செய்கிறது. அது செய்யும் விபசாரம் பாலுணர்வைத் தூண்டும் பேச்சாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல் புகாரி)
‘தம் இரண்டு தாடைகளுக்கு இடையே உள்ள நாவிற்கும், தம் இரண்டு கால்களுக்கு இடையே உள்ள பாலின உறுப்பிற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிப்பவருக்கு நான் சொர்க்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), புகாரி)
‘கோள் சொல்கிறவன் சொர்க்கம் செல்லமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஹூதைபா (ரலி), புகாரி)
மேற்கூறப்பட்டவைகளில் நல்லவற்றை பேசுவதும், வீணானவற்றை தவிர்ந்து நடப்பதும் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளதால் பேண வேண்டியதை பேணி, வீணானவற்றை விட்டு விலகி நடக்க வேண்டும். பின் விளைவுகள் பற்றி யோசிக்காமல் எதையும் பேசக்கூடாது.
இத்துடன் நாவு சார்ந்த இறைநம்பிக்கையின் அம்சங்கள் நிறைவு பெற்றுவிட்டது. இனி உடல் சார்ந்த இறைநம்பிக்கையின் அம்சங்கள் தொடர்கின்றன.
அவற்றில் முதலாவதாக நாம் பார்க்கப் போவது ‘வீண் கேளிக்கைகளில் இருந்து விலகியிருப்பது’ குறித்து பார்ப்போம். மேற்கூறப்பட்ட வீணான பேச்சுகள், வீணானவை நடைபெறும் இடங்களிலிருந்து விலகியிருப்பதுதான் உடல் சார்ந்த இறைநம்பிக்கை ஆகும்.
நாம் நேரத்தை நல்ல வழியில், பயனுள்ள முறையில் செலவளிக்க வேண்டும். இரவு விடுதி, மதுபான விடுதி, உல்லாச விடுதி, சூதாட்ட விடுதி, ஆபாச விடுதி போன்றவற்றில் கலந்து கொண்டு, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், காமகளியாட்டம், நக்கல், நையாண்டி, கேலி கிண்டல் போன்ற வீண் கேளிக்கைகளிலிருந்து விலகியிருக்க வேண்டும். இப்படிப்பட்ட கேளிக்கைகள் இறைநம்பிக்கையை முற்றிலும் பாழாக்கிவிடும்.
கேளிக்கை பிரியர்கள் நம்மை அழைத்தாலோ, அல்லது அவர்களை நாம் கடந்து சென்றாலோ ஒன்று நாம் அவர்களை திருத்த முயலவேண்டும். அல்லது நாம் அந்த இடங்களை புறக்கணித்து சென்றுவிட வேண்டும். இவ்வாறு நாம் செய்வது தான் இறைநம்பிக்கையை பாதுகாக்கும் சிறந்த வழியாக அமையும். இது குறித்து இறைவன் கூறுவதை கேட்போம்.
“வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். ‘எங்கள் செயல்கள் எங்களுக்கு; உங்கள் செயல்கள் உங்களுக்கு. உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்’ எனவும் கூறுகின்றனர்”. (திருக்குர்ஆன் 28:55)
‘(இறையடியார்கள்) வீணானவற்றைக் கடக்கும் போது கண்ணியமாகக் கடந்து விடுவார்கள்’. (திருக்குர்ஆன் 25:72)
‘இறைவனை நினைவுபடுத்தாத யாவும் வீண் விளையாட்டே. பின்வரும் நான்கு செயல்களைத் தவிர. அவை: 1) கணவன் மனைவியிடம் அன்பாக விளையாடுவது, 2) ஒருவர் குதிரைக்கு பயிற்சி அளிப்பது, 3) இரண்டு இலக்குகளுக்கிடையே ஒருவர் மற்றவரிடம் போட்டி போட்டு நடப்பது, 4) ஒருவர் நீந்த கற்றுக் கொடுப்பது என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அதாஉபின் அபிரபாஹ் (ரலி), நூல்: அஹ்மது)
“குற்றவாளிகளைக் குறித்து, சுவர்க்கச் சோலைகளில் இருப்பவர்கள் விசாரித்தும் கொள்வார்கள். ‘உங்களை நரகத்தில் நுழைய வைத்தது எது?’ (என்று கேட்பார்கள்). ‘நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை (வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன் நாங்களும் மூழ்கிக்கிடந்தோம்’ என நரகவாசிகள் கூறுவார்கள்”. (திருக்குர்ஆன் 74:40-45).
வீணான கேளிக்கைகளில் மனிதர்கள் மூழ்கிக் கிடப்பது ஆபத்தானது. அது அவர்களை நரகத்தில் கொண்டு போய் தள்ளும். அவற்றிலிருந்து நம்மை நாம் பாதுகாப்போம்.
மவுலவி அ.செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
யாருக்கும் எவ்வித தீங்கும் இழைக்காமல் எல்லோரிடத்திலும் நீதமாக நடந்து கொள்ள வேண்டும். நீதியாக, நியாய உணர்வுடன் யார் நடக்கிறார்களோ அவர்களைத்தான் இறைவனும் நேசிக்கிறான்.
‘நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ! உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராகவும், அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுபவராகவும் ஆகிவிடுங்கள். (வாதியோ, பிரதிவாதியோ) செல்வந்தராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். நீதி வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள். நீங்கள் (சாட்சியத்தைப்) புரட்டினாலோ, புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்’ என்று திருக்குர்ஆன் (4:135) குறிப்பிடுகிறது.
மனிதர்களில் அனைவரும் சமம், அனைவருக்கும் சமநீதி என்பதே இஸ்லாம் வழங்கும் நீதிமுறையாகும். பணக்காரன்- ஏழை, உயர்ந்தவன்-தாழ்ந்தவன், வெள்ளையன்-கருப்பன் என்ற எந்தவித பாகுபாட்டையும் இஸ்லாம் கடுமையாக எதிர்க்கிறது. அதன் காரணமாக நிகழும் அநீதியையும் கண்டிக்கிறது. நீதியை அனைவருக்கும் சமமானதாக வழங்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் கட்டளை.
‘நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகிவிடுங்கள். ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களை தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்’ என்று திருக்குர்ஆன் (5:8) குறிப்பிடுகிறது.
ஒரு சமூகத்தின் மீது பகையே இருந்தாலும் அந்த சமூகத்திற்கு எதிராக அநீதியாக நடந்து கொள்ளாமல் நீதியோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதையே மேற்கண்ட இறைவசனம் சொல்கிறது.
இன்றைய காலத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். எங்கும், எதிலும் அநீதிதான். தனி மனிதனிடம், சமூகத்திடம், அரசாங்கத்திடம் என எல்லா இடங்களிலும் ஒருதலைபட்சமான பாகுபாடுகள் நிறைந்திருக்கின்றன. அவர் களின் செயல்பாடுகளே அதை தெளிவாக உணர்த்திவிடுகின்றன.
உதாரணமாக ஒன்றை பார்ப்போம். அருகருகே வசிக்கும் இரு வீட்டாருக்கும் இடையே ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. இரு குடும்பத்தாரும் அமர்ந்து பேசுகிறார்கள். ஆனால் தீர்வு எட்டப்படவில்லை. பிறகு ஊர் பெரியவர்களின் முன்னிலையில் பஞ்சாயத்து செய்கிறார்கள். அங்கு எப்படி முடிவு எடுக் கிறார்கள் என்பது யாவரும் அறியாதது அல்ல. பெரும்பாலும் பணக்காரர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் சாதகமாகவே அந்த முடிவு இருக்கிறது. இதுபோன்ற செயல்களை எல்லாம் இஸ்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, வன்மையாக கண்டிக்கிறது.
இன்று அனைத்து மக்களிடத்திலும் தெரிந்தோ தெரியாமலோ பாரபட்சமாக நடக்கும் குணம் குடிகொண்டிருக்கிறது. மற்றவர்கள் மூலம் தனது குழந்தைக்கு பிரச்சினை என்றால் அதற்கு ஒரு நிலைபாடும், தனது குழந்தையின் மூலம் பிறருக்கு பிரச்சினை என்றால் வேறு நிலைபாடும் எடுக்கிறார்கள். இது அநீதியானது; ஏற்றுக்கொள்ள முடியாதது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு நடந்து கொள்ள சொல்லவில்லை. மாறாக இதுபோன்ற செயல் வழிகெட்ட முன்னோர்களின் செயல் என்று கண்டிக்கிறார்கள்.
‘உங்களுக்கு முன் சென்றவர்கள், தங்களில் உயர்ந்தவர் திருடினால் அவரை விட்டுவிடுவார்கள். பலவீனர் திருடினால் அவருக்கு தண்டனை நிறைவேற்றுவார்கள். அதனால் அவர்கள் நாசமாயினர். அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். இந்த முஹம்மதின் மகள் பாத்திமா திருடினாலும் அவரது கையை நான் வெட்டுவேன்’ என நீதி எப்படி வழங்கப்பட வேண்டும் என்பதை நபியவர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.
ஆள் பார்த்து நீதி வழங்குவதை அவர்கள் கண்டிக்கிறார்கள். மற்றவர்கள் விஷயத்தில் மட்டுமல்ல உங்கள் குழந்தைகள் விஷயத்திலும் நீதமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதே நபிகளாரின் வலியுறுத்தலாகும்.
‘உங்கள் குழந்தைகள் விஷயத்தில் நீதமாக நடக்க வேண்டும். யாருக்கும் எவ்விதத்திலும் அநீதம் இழைத்துவிடக் கூடாது’ என்பது நபியவர்கள் அறிவுரையாகும்.
இன்று எதார்த்தத்தில் ஆண் குழந்தைகளிடம் அதிக பாசமும், பெண் குழந்தைகளிடம் குறைந்த பாசமும் காட்டி வளர்க்கிறோம். அழகான குழந்தை, அழகில்லாத குழந்தை என்ற பாகுபாடும் இருந்து வருகிறது. இது களையப்பட வேண்டிய மோசமான குணமாகும்.
இன்று பல பிரச்சினைகள் இருந்து வருகின்றன. அதில் முதன்மையாக இருப்பது நிலப்பிரச்சினைதான். தனக்கு எவ்வளவு சொத்துக்கள் இருந்தாலும் அடுத்தவர்களுடைய நிலங்களை ஆக்கிரமிப்பது அதிகரித்து வருகிறது. இந்த விஷயத்தில் அநீதியாக நடந்து கொள்பவர்கள் அல்லாஹ்விடம் அஞ்சிக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு இறைவன் கடுமையான வேதனையை வழங்குகின்றான்.
‘ஓர் அங்குல அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவனின் கழுத்தில் ஏழு நிலங்களாக மாலையாக (மறுமையில்) கட்டித் தொங்க விடப்படும்’ என்று எச்சரிக்கையை நபியவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
‘அநீதி இழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு அஞ்சுங்கள். ஏனெனில் அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையுமில்லை’ என்பதும் நபியவர்களின் எச்சரிக்கை செய்திதான்.
பாதிக்கப்பட்டவர்கள் இறைவனிடம் வேண்டுவது உடனே அங்கீகரிக்கப்படும் என்பதே அதன் பொருளாகும். எனவே யாருக்கும் எவ்வித தீங்கும் இழைக்காமல் எல்லோரிடத்திலும் நீதமாக நடந்து கொள்ள வேண்டும். நீதியாக, நியாய உணர்வுடன் யார் நடக்கிறார்களோ அவர்களைத்தான் இறைவனும் நேசிக்கிறான்.
மனிதர்களில் அனைவரும் சமம், அனைவருக்கும் சமநீதி என்பதே இஸ்லாம் வழங்கும் நீதிமுறையாகும். பணக்காரன்- ஏழை, உயர்ந்தவன்-தாழ்ந்தவன், வெள்ளையன்-கருப்பன் என்ற எந்தவித பாகுபாட்டையும் இஸ்லாம் கடுமையாக எதிர்க்கிறது. அதன் காரணமாக நிகழும் அநீதியையும் கண்டிக்கிறது. நீதியை அனைவருக்கும் சமமானதாக வழங்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் கட்டளை.
‘நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகிவிடுங்கள். ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களை தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்’ என்று திருக்குர்ஆன் (5:8) குறிப்பிடுகிறது.
ஒரு சமூகத்தின் மீது பகையே இருந்தாலும் அந்த சமூகத்திற்கு எதிராக அநீதியாக நடந்து கொள்ளாமல் நீதியோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதையே மேற்கண்ட இறைவசனம் சொல்கிறது.
இன்றைய காலத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். எங்கும், எதிலும் அநீதிதான். தனி மனிதனிடம், சமூகத்திடம், அரசாங்கத்திடம் என எல்லா இடங்களிலும் ஒருதலைபட்சமான பாகுபாடுகள் நிறைந்திருக்கின்றன. அவர் களின் செயல்பாடுகளே அதை தெளிவாக உணர்த்திவிடுகின்றன.
உதாரணமாக ஒன்றை பார்ப்போம். அருகருகே வசிக்கும் இரு வீட்டாருக்கும் இடையே ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. இரு குடும்பத்தாரும் அமர்ந்து பேசுகிறார்கள். ஆனால் தீர்வு எட்டப்படவில்லை. பிறகு ஊர் பெரியவர்களின் முன்னிலையில் பஞ்சாயத்து செய்கிறார்கள். அங்கு எப்படி முடிவு எடுக் கிறார்கள் என்பது யாவரும் அறியாதது அல்ல. பெரும்பாலும் பணக்காரர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் சாதகமாகவே அந்த முடிவு இருக்கிறது. இதுபோன்ற செயல்களை எல்லாம் இஸ்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, வன்மையாக கண்டிக்கிறது.
இன்று அனைத்து மக்களிடத்திலும் தெரிந்தோ தெரியாமலோ பாரபட்சமாக நடக்கும் குணம் குடிகொண்டிருக்கிறது. மற்றவர்கள் மூலம் தனது குழந்தைக்கு பிரச்சினை என்றால் அதற்கு ஒரு நிலைபாடும், தனது குழந்தையின் மூலம் பிறருக்கு பிரச்சினை என்றால் வேறு நிலைபாடும் எடுக்கிறார்கள். இது அநீதியானது; ஏற்றுக்கொள்ள முடியாதது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு நடந்து கொள்ள சொல்லவில்லை. மாறாக இதுபோன்ற செயல் வழிகெட்ட முன்னோர்களின் செயல் என்று கண்டிக்கிறார்கள்.
‘உங்களுக்கு முன் சென்றவர்கள், தங்களில் உயர்ந்தவர் திருடினால் அவரை விட்டுவிடுவார்கள். பலவீனர் திருடினால் அவருக்கு தண்டனை நிறைவேற்றுவார்கள். அதனால் அவர்கள் நாசமாயினர். அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். இந்த முஹம்மதின் மகள் பாத்திமா திருடினாலும் அவரது கையை நான் வெட்டுவேன்’ என நீதி எப்படி வழங்கப்பட வேண்டும் என்பதை நபியவர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.
ஆள் பார்த்து நீதி வழங்குவதை அவர்கள் கண்டிக்கிறார்கள். மற்றவர்கள் விஷயத்தில் மட்டுமல்ல உங்கள் குழந்தைகள் விஷயத்திலும் நீதமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதே நபிகளாரின் வலியுறுத்தலாகும்.
‘உங்கள் குழந்தைகள் விஷயத்தில் நீதமாக நடக்க வேண்டும். யாருக்கும் எவ்விதத்திலும் அநீதம் இழைத்துவிடக் கூடாது’ என்பது நபியவர்கள் அறிவுரையாகும்.
இன்று எதார்த்தத்தில் ஆண் குழந்தைகளிடம் அதிக பாசமும், பெண் குழந்தைகளிடம் குறைந்த பாசமும் காட்டி வளர்க்கிறோம். அழகான குழந்தை, அழகில்லாத குழந்தை என்ற பாகுபாடும் இருந்து வருகிறது. இது களையப்பட வேண்டிய மோசமான குணமாகும்.
இன்று பல பிரச்சினைகள் இருந்து வருகின்றன. அதில் முதன்மையாக இருப்பது நிலப்பிரச்சினைதான். தனக்கு எவ்வளவு சொத்துக்கள் இருந்தாலும் அடுத்தவர்களுடைய நிலங்களை ஆக்கிரமிப்பது அதிகரித்து வருகிறது. இந்த விஷயத்தில் அநீதியாக நடந்து கொள்பவர்கள் அல்லாஹ்விடம் அஞ்சிக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு இறைவன் கடுமையான வேதனையை வழங்குகின்றான்.
‘ஓர் அங்குல அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவனின் கழுத்தில் ஏழு நிலங்களாக மாலையாக (மறுமையில்) கட்டித் தொங்க விடப்படும்’ என்று எச்சரிக்கையை நபியவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
‘அநீதி இழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு அஞ்சுங்கள். ஏனெனில் அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையுமில்லை’ என்பதும் நபியவர்களின் எச்சரிக்கை செய்திதான்.
பாதிக்கப்பட்டவர்கள் இறைவனிடம் வேண்டுவது உடனே அங்கீகரிக்கப்படும் என்பதே அதன் பொருளாகும். எனவே யாருக்கும் எவ்வித தீங்கும் இழைக்காமல் எல்லோரிடத்திலும் நீதமாக நடந்து கொள்ள வேண்டும். நீதியாக, நியாய உணர்வுடன் யார் நடக்கிறார்களோ அவர்களைத்தான் இறைவனும் நேசிக்கிறான்.
‘கற்பதும், கற்பிப்பதும் இறை நம்பிக்கையே’ எனும் மகுடத்தை சூட்டிய மார்க்கம் இஸ்லாம். கற்பதும், கற்பிப்பதும் மற்ற அனைத்தையும் விட முதன்மையானது எனும் பெருமையை இஸ்லாம் வழங்கியுள்ளது.
இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான கல்வி கற்பது, கல்வியை கற்றுக்கொடுப்பது குறித்த தகவல்களை காண்போம்.
கல்வி கற்பதும், கற்ற கல்வியை பிறருக்கு கற்றுக் கொடுப்பதும் இஸ்லாத்தில் சிறந்த பணியாக தேர்வு செய்யப்படுகிறது. இந்தப் பணியை இஸ்லாம் மிக உயர்வாக நினைத்து, இவ்விரண்டுமே ‘நாவு சார்ந்த இறைநம்பிக்கை’ என்ற அந்தஸ்தை வழங்கி கவுரவிக்கிறது.
‘கற்பதும், கற்பிப்பதும் இறை நம்பிக்கையே’ எனும் மகுடத்தை சூட்டிய மார்க்கம் இஸ்லாம். கற்பதும், கற்பிப்பதும் மற்ற அனைத்தையும் விட முதன்மையானது எனும் பெருமையை இஸ்லாம் வழங்கியுள்ளது.
தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் போன்ற இஸ்லாமிய இறை வணக்கங்கள் வரிசையில் சிறப்பான இடத்தைப் பெறுவது கல்வியே.
ஆதலால்தான் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பார்த்து இறைவன் முதன்முதலாக கூறிய வார்த்தையே ‘ஓதுவீராக’ எனும் கல்வி கற்பது குறித்துதான். கல்வி கற்றால்தான் இறைவனை அறிந்து, அவனை நம்பமுடியும். இறைவணக்கமும் முறையாக நிறைவேற்ற முடியும். கல்வி இல்லாமல் இறை நம்பிக்கையும், இறைவணக்கமும் செயல்வடிவம் பெற சாத்தியமாகாது.
‘தான தர்மங்களில் சிறந்தது ஒரு முஸ்லிம் தானும் கல்வி கற்று, பிறகு அதை தமது சகோதர முஸ்லிமுக்கு கற்றுக் கொடுப்பதே ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (நூல்: இப்னுமாஜா)
கல்வி கற்பது, கற்பிப்பது, சிந்திப்பது, சிந்திக்கத் தூண்டுவது, அறிவைத் தேடுவது, அதை மற்றவருக்கு வழங்குவது, ஆராய்ச்சி செய்வது ஆகிய அனைத்தும் இஸ்லாத்தின் பார்வையில் வணக்கமாகும்.
கல்வி கற்பது ‘இறையச்சம்’ (தக்வா), கல்வியைத் தேடுவது வணக்கம் (இபாதத்), கல்வி ஞானம் பற்றி பேசுவது இறை துதி (தஸ்பீஹ்), கல்வி ஞானம் பற்றி உரையாற்றுவது அறப்போர் (ஜிஹாத்), கல்வியை கற்பிப்பது தர்மம் (ஸதகா) ஆகும்.
திருக்குர்ஆன் வசனங்களில் ஆராய்தல், சிந்தித்தல், யோசித்தல், உணர்தல், அறிதல், படிப்பினை பெறுதல், பாடம் பெறுதல், அறிவுரை பெறுதல், உற்று கவனித்தல் போன்ற கல்வி சம்பந்தமான, அறிவியல் சம்பந்தமான வார்த்தை களைக் கொண்ட வசனங்கள் மட்டும் பத்து சதவீதம் உள்ளன. கல்வியைத் தேடி பயணிக்குமாறு தூண்டும்படியான ஐம்பதுக்கும் மேற்பட்ட திருவசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பிடித்துள்ளன.
வணக்க வழிபாடுகளில் இருக்கும் மோகத்தை விட கல்வி கற்பதிலும், அதை கற்பிப்பதிலும் தான் அதிகம் இருக்க வேண்டும் என்று இந்த நபிமொழி இவ்வாறு வலியுறுத்துகிறது:
“நபி (ஸல்) அவர்கள் தமது மஸ்ஜித் நபவியில் இரண்டு சபையினரை கடந்து சென்றார்கள். அப்போது, ‘அவர்கள் இரு சாராருமே நன்மையான காரியத்தில்தான் உள்ளனர் (என்றார்கள்), எனினும் அவ்விருசாராரில் ஒரு சாரார் மிகவும் சிறப்பு வாய்ந்தவர், என்றார்கள். இதோ ஒரு சாரார் இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். மேலும் அவனிடம் அருளை எதிர்பார்க்கின்றனர். இறைவனை நாடினால் அவன் அவர்களுக்கு கொடுப்பான்; அல்லது கொடுக்காமலும் இருப்பான். மற்றொரு சாராரோ அவர்கள் கல்வி ஞானத்தை தானும் கற்று, அதை அறியாத மக்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள். எனவே இவர்கள் தாம் மிகச் சிறந்தவர்கள். நானும் கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியராகத்தான் இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளேன்’ என்று கூறிவிட்டு, அந்த சபையினரிலேயே அமர்ந்து விட்டார்கள்”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: தாரமீ)
‘பனூ இஸ்ரவேலரைச் சார்ந்த இருவர். அவர்களில் ஒருவர் கல்வியாளர். அவர் கடமையான தொழுகையை நிறைவேற்றி விட்டு, மக்களிடம் அமர்ந்து அவர்களுக்கு நல்லதை கற்றுக்கொடுக்கிறார். மற்றொருவர் பகல் முழுவதும் நோன்பு நோற்று, இரவு முழுவதும் நின்று வணங்குகிறார். அவ்விருவரில் சிறந்தவர் யார்?’ என்று நபிகளாரிடம் கேட்கப்பட்டது.
அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘வணக்கசாலியை விட மக்களுக்கு நல்லதை கற்றுக் கொடுக்கும் கல்வியாளரே சிறந்தவர். நான் எப்படி உங்களை விட சிறந்தவனாக இருக்கிறேனோ அது போன்று’ என பதிலுரைத்தார்கள். (நூல்: தாரமீ, திர்மிதி)
நபி (ஸல்) அவர்கள் கல்வியில் பலவிதமான புரட்சிகளை பத்ர் போரின் முடிவில் ஏற்படுத்தினார்கள். பத்ர் போரில் இறை மறுப்பாளர்களில் 70 பேர் சிறைபிடிக்கப்பட்டார்கள். அப்போதைய வழக்கப்படி, சிறை பிடிக்கப்பட்டவர்களில் வசதி வாய்ப்புள்ளவர்கள் பிணைத்தொகை கொடுத்து விடுதலை பெற்றனர். அப்போது, கைதிகளில் வசதியில்லாத ஒருவர் 10 முஸ்லிம் சிறுவர்களுக்கு எழுத, வாசிக்க கற்றுக் கொடுத்தால் அவர்களை விடுதலை செய்யலாம் என்று நபிகளார் உத்தரவிட்டார்கள்.
அதுபோல, சிறுவர்களுக்கு இலவச கல்வி சேவையை முதன்முதலாக உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களே. இந்த இலவச கல்வி சேவையில் கல்வி கற்றவர்களில் ஒருவர் தான் ஸைத்பின் ஸாபித் (ரலி). மதீனாவில் இருக்கும் போது, நபியவர்களுக்கு இறை செய்தி வரும்போது, அதை எழுதும் எழுத்தாளராக ஸைத்பின் ஸாபித் (ரலி) திகழ்ந்தார். இவர் தனது கல்வியை, பத்ர் யுத்த கைதிகளிடமிருந்து கற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நபி (ஸல்) அவர்கள், மஸ்ஜித் நபவி பள்ளிவாசல் திண்ணையில் வைத்து பரம ஏழைகளான எழுபதுக்கும் அதிகமான தோழர்களுக்கு இலவச கல்வியை இலவச உணவுடன் கற்றுக்கொடுத்தார்கள். இவர்கள் ‘திண்ணைத் தோழர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். கல்வி கற்பவர்களுக்கு இலவச உணவையும், இலவச விடுதியையும் முதன்முதலாக வழங்கியவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களே. இவ்வாறு திண்ணையில் இலவச கல்வி கற்றவர்களில் ஒருவர் தான் அபூஹூரைரா (ரலி) அவர்கள். இவர் நபிகளாரிடமிருந்து 5374 நபிமொழிகளை அறிவித்திருக்கிறார். அதிகமான நபிமொழிகளை அறிவித்தவர்களில் இவரே முதல் இடத்தை பெறுகிறார்.
மேலும், நபி (ஸல்) அவர்கள் பெண் கல்விக்காகவும், அடிமைப் பெண்களின் கல்விக்காகவும் பாடுபட்டார்கள். அண்ணலாரின் அன்பு மனைவியான அன்னை ஆயிஷா (ரலி) கல்வியின் பல துறைகளில் விற்பன்னராக சிறந்து விளங்கினார்கள். இவர்கள் 1) குர்ஆன் வழிக்கல்வி, 2) வாரிசுரிமைக் கல்வி, 3) கவிதை ஞானம், 4) வரலாற்று அறிவு, 5) மருத்துவம் ஆகிய ஐந்து துறைகளில் சிறந்து விளங்கினார்கள். மேலும் நபிகளாரிடமிருந்து 2210 நபிமொழிகளையும் அறிவித்திருக்கிறார்கள்.
மேலும், நபியவர்கள் இளைஞர், முதியோர், குடும்பத் தலைவர் ஆகியோரின் கல்வி திட்டத்தையும் உலகில் முதன் முதலாக தொடங்கி வைத்தார்கள்.
‘மூவருக்கு (இறைவனிடம்) இரண்டு கூலிகள் உண்டு. அவர்களில் ஒருவர் தம்மிடமுள்ள ஓர் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சி அளித்து, அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து, அவளுக்கு மார்க்கச் சட்டங்களை கற்பித்து, கற்பிப்பதையும் அழகுறச் செய்து, பின்னர் அவளை அடிமைத் தளையிலிருந்து விடுவித்து, அவளை மணந்தவர் ஆவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி), நூல்: புகாரி)
உமர் (ரலி) கூறுவதாவது:
‘நானும், எனது அண்டை வீட்டுக்காரரும் உமய்யா பின் ஜைது என்பவரின் சந்ததிகள் வசித்து வந்த இடத்தில் வாழ்ந்து வந்தோம். நபியின் அவைக்கு கல்வி கற்க நாங்கள் முறை வைத்துச் சென்று வந்தோம். ஒருநாள் அவர் செல்வார்; ஒருநாள் நான் செல்வேன். நான் சென்று நபியிடமிருந்து அறிவிக்கப்பட்ட செய்தி மற்றும் ஏனைய செய்திகள் முழுவதையும் அவருக்காக கொண்டு வந்து அறிவித்து விடுவேன். அது போன்று அவரும் செய்வார்’. (நூல்: புகாரி)
இருவரும் குடும்பத் தலைவராக இருந்ததினால் ஒருவர் மாற்றி ஒருவர் வேலைக்கும் சென்று, கல்வி கற்கவும் சென்று, தான் கற்ற கல்வியை மற்றவருக்கு தெரிவிப்பார்கள். இதுதான் இளைஞர், முதியவர், குடும்பத்தலைவர் ஆகியோரின் கல்வித் திட்டம்.
‘கல்வி என்பது ஒரு ஞானம் நிறைந்தவனின் விழுபொருள். அது எங்கு கிடைத்தாலும் அதை பெற்றுக்கொள்வது ஏற்றமானது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), திர்மிதி).
இஸ்லாம் கல்வியை இறை நம்பிக்கையின் ஒரு அங்கம் என்று வெகுவாக பாராட்டி, ஆர்வமூட்டி மக்களுக்கு பயன்தரும் பல கல்வியாளர்களை, சிந்தனையாளர்களை, ஆராய்ச்சியாளர்களை உருவாக்கித் தந்துள்ளது.
கல்வி கற்பதும், கற்ற கல்வியை பிறருக்கு கற்றுக் கொடுப்பதும் இஸ்லாத்தில் சிறந்த பணியாக தேர்வு செய்யப்படுகிறது. இந்தப் பணியை இஸ்லாம் மிக உயர்வாக நினைத்து, இவ்விரண்டுமே ‘நாவு சார்ந்த இறைநம்பிக்கை’ என்ற அந்தஸ்தை வழங்கி கவுரவிக்கிறது.
‘கற்பதும், கற்பிப்பதும் இறை நம்பிக்கையே’ எனும் மகுடத்தை சூட்டிய மார்க்கம் இஸ்லாம். கற்பதும், கற்பிப்பதும் மற்ற அனைத்தையும் விட முதன்மையானது எனும் பெருமையை இஸ்லாம் வழங்கியுள்ளது.
தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் போன்ற இஸ்லாமிய இறை வணக்கங்கள் வரிசையில் சிறப்பான இடத்தைப் பெறுவது கல்வியே.
ஆதலால்தான் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பார்த்து இறைவன் முதன்முதலாக கூறிய வார்த்தையே ‘ஓதுவீராக’ எனும் கல்வி கற்பது குறித்துதான். கல்வி கற்றால்தான் இறைவனை அறிந்து, அவனை நம்பமுடியும். இறைவணக்கமும் முறையாக நிறைவேற்ற முடியும். கல்வி இல்லாமல் இறை நம்பிக்கையும், இறைவணக்கமும் செயல்வடிவம் பெற சாத்தியமாகாது.
‘தான தர்மங்களில் சிறந்தது ஒரு முஸ்லிம் தானும் கல்வி கற்று, பிறகு அதை தமது சகோதர முஸ்லிமுக்கு கற்றுக் கொடுப்பதே ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (நூல்: இப்னுமாஜா)
கல்வி கற்பது, கற்பிப்பது, சிந்திப்பது, சிந்திக்கத் தூண்டுவது, அறிவைத் தேடுவது, அதை மற்றவருக்கு வழங்குவது, ஆராய்ச்சி செய்வது ஆகிய அனைத்தும் இஸ்லாத்தின் பார்வையில் வணக்கமாகும்.
கல்வி கற்பது ‘இறையச்சம்’ (தக்வா), கல்வியைத் தேடுவது வணக்கம் (இபாதத்), கல்வி ஞானம் பற்றி பேசுவது இறை துதி (தஸ்பீஹ்), கல்வி ஞானம் பற்றி உரையாற்றுவது அறப்போர் (ஜிஹாத்), கல்வியை கற்பிப்பது தர்மம் (ஸதகா) ஆகும்.
திருக்குர்ஆன் வசனங்களில் ஆராய்தல், சிந்தித்தல், யோசித்தல், உணர்தல், அறிதல், படிப்பினை பெறுதல், பாடம் பெறுதல், அறிவுரை பெறுதல், உற்று கவனித்தல் போன்ற கல்வி சம்பந்தமான, அறிவியல் சம்பந்தமான வார்த்தை களைக் கொண்ட வசனங்கள் மட்டும் பத்து சதவீதம் உள்ளன. கல்வியைத் தேடி பயணிக்குமாறு தூண்டும்படியான ஐம்பதுக்கும் மேற்பட்ட திருவசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பிடித்துள்ளன.
வணக்க வழிபாடுகளில் இருக்கும் மோகத்தை விட கல்வி கற்பதிலும், அதை கற்பிப்பதிலும் தான் அதிகம் இருக்க வேண்டும் என்று இந்த நபிமொழி இவ்வாறு வலியுறுத்துகிறது:
“நபி (ஸல்) அவர்கள் தமது மஸ்ஜித் நபவியில் இரண்டு சபையினரை கடந்து சென்றார்கள். அப்போது, ‘அவர்கள் இரு சாராருமே நன்மையான காரியத்தில்தான் உள்ளனர் (என்றார்கள்), எனினும் அவ்விருசாராரில் ஒரு சாரார் மிகவும் சிறப்பு வாய்ந்தவர், என்றார்கள். இதோ ஒரு சாரார் இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். மேலும் அவனிடம் அருளை எதிர்பார்க்கின்றனர். இறைவனை நாடினால் அவன் அவர்களுக்கு கொடுப்பான்; அல்லது கொடுக்காமலும் இருப்பான். மற்றொரு சாராரோ அவர்கள் கல்வி ஞானத்தை தானும் கற்று, அதை அறியாத மக்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள். எனவே இவர்கள் தாம் மிகச் சிறந்தவர்கள். நானும் கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியராகத்தான் இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளேன்’ என்று கூறிவிட்டு, அந்த சபையினரிலேயே அமர்ந்து விட்டார்கள்”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: தாரமீ)
‘பனூ இஸ்ரவேலரைச் சார்ந்த இருவர். அவர்களில் ஒருவர் கல்வியாளர். அவர் கடமையான தொழுகையை நிறைவேற்றி விட்டு, மக்களிடம் அமர்ந்து அவர்களுக்கு நல்லதை கற்றுக்கொடுக்கிறார். மற்றொருவர் பகல் முழுவதும் நோன்பு நோற்று, இரவு முழுவதும் நின்று வணங்குகிறார். அவ்விருவரில் சிறந்தவர் யார்?’ என்று நபிகளாரிடம் கேட்கப்பட்டது.
அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘வணக்கசாலியை விட மக்களுக்கு நல்லதை கற்றுக் கொடுக்கும் கல்வியாளரே சிறந்தவர். நான் எப்படி உங்களை விட சிறந்தவனாக இருக்கிறேனோ அது போன்று’ என பதிலுரைத்தார்கள். (நூல்: தாரமீ, திர்மிதி)
நபி (ஸல்) அவர்கள் கல்வியில் பலவிதமான புரட்சிகளை பத்ர் போரின் முடிவில் ஏற்படுத்தினார்கள். பத்ர் போரில் இறை மறுப்பாளர்களில் 70 பேர் சிறைபிடிக்கப்பட்டார்கள். அப்போதைய வழக்கப்படி, சிறை பிடிக்கப்பட்டவர்களில் வசதி வாய்ப்புள்ளவர்கள் பிணைத்தொகை கொடுத்து விடுதலை பெற்றனர். அப்போது, கைதிகளில் வசதியில்லாத ஒருவர் 10 முஸ்லிம் சிறுவர்களுக்கு எழுத, வாசிக்க கற்றுக் கொடுத்தால் அவர்களை விடுதலை செய்யலாம் என்று நபிகளார் உத்தரவிட்டார்கள்.
அதுபோல, சிறுவர்களுக்கு இலவச கல்வி சேவையை முதன்முதலாக உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களே. இந்த இலவச கல்வி சேவையில் கல்வி கற்றவர்களில் ஒருவர் தான் ஸைத்பின் ஸாபித் (ரலி). மதீனாவில் இருக்கும் போது, நபியவர்களுக்கு இறை செய்தி வரும்போது, அதை எழுதும் எழுத்தாளராக ஸைத்பின் ஸாபித் (ரலி) திகழ்ந்தார். இவர் தனது கல்வியை, பத்ர் யுத்த கைதிகளிடமிருந்து கற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நபி (ஸல்) அவர்கள், மஸ்ஜித் நபவி பள்ளிவாசல் திண்ணையில் வைத்து பரம ஏழைகளான எழுபதுக்கும் அதிகமான தோழர்களுக்கு இலவச கல்வியை இலவச உணவுடன் கற்றுக்கொடுத்தார்கள். இவர்கள் ‘திண்ணைத் தோழர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். கல்வி கற்பவர்களுக்கு இலவச உணவையும், இலவச விடுதியையும் முதன்முதலாக வழங்கியவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களே. இவ்வாறு திண்ணையில் இலவச கல்வி கற்றவர்களில் ஒருவர் தான் அபூஹூரைரா (ரலி) அவர்கள். இவர் நபிகளாரிடமிருந்து 5374 நபிமொழிகளை அறிவித்திருக்கிறார். அதிகமான நபிமொழிகளை அறிவித்தவர்களில் இவரே முதல் இடத்தை பெறுகிறார்.
மேலும், நபி (ஸல்) அவர்கள் பெண் கல்விக்காகவும், அடிமைப் பெண்களின் கல்விக்காகவும் பாடுபட்டார்கள். அண்ணலாரின் அன்பு மனைவியான அன்னை ஆயிஷா (ரலி) கல்வியின் பல துறைகளில் விற்பன்னராக சிறந்து விளங்கினார்கள். இவர்கள் 1) குர்ஆன் வழிக்கல்வி, 2) வாரிசுரிமைக் கல்வி, 3) கவிதை ஞானம், 4) வரலாற்று அறிவு, 5) மருத்துவம் ஆகிய ஐந்து துறைகளில் சிறந்து விளங்கினார்கள். மேலும் நபிகளாரிடமிருந்து 2210 நபிமொழிகளையும் அறிவித்திருக்கிறார்கள்.
மேலும், நபியவர்கள் இளைஞர், முதியோர், குடும்பத் தலைவர் ஆகியோரின் கல்வி திட்டத்தையும் உலகில் முதன் முதலாக தொடங்கி வைத்தார்கள்.
‘மூவருக்கு (இறைவனிடம்) இரண்டு கூலிகள் உண்டு. அவர்களில் ஒருவர் தம்மிடமுள்ள ஓர் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சி அளித்து, அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து, அவளுக்கு மார்க்கச் சட்டங்களை கற்பித்து, கற்பிப்பதையும் அழகுறச் செய்து, பின்னர் அவளை அடிமைத் தளையிலிருந்து விடுவித்து, அவளை மணந்தவர் ஆவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி), நூல்: புகாரி)
உமர் (ரலி) கூறுவதாவது:
‘நானும், எனது அண்டை வீட்டுக்காரரும் உமய்யா பின் ஜைது என்பவரின் சந்ததிகள் வசித்து வந்த இடத்தில் வாழ்ந்து வந்தோம். நபியின் அவைக்கு கல்வி கற்க நாங்கள் முறை வைத்துச் சென்று வந்தோம். ஒருநாள் அவர் செல்வார்; ஒருநாள் நான் செல்வேன். நான் சென்று நபியிடமிருந்து அறிவிக்கப்பட்ட செய்தி மற்றும் ஏனைய செய்திகள் முழுவதையும் அவருக்காக கொண்டு வந்து அறிவித்து விடுவேன். அது போன்று அவரும் செய்வார்’. (நூல்: புகாரி)
இருவரும் குடும்பத் தலைவராக இருந்ததினால் ஒருவர் மாற்றி ஒருவர் வேலைக்கும் சென்று, கல்வி கற்கவும் சென்று, தான் கற்ற கல்வியை மற்றவருக்கு தெரிவிப்பார்கள். இதுதான் இளைஞர், முதியவர், குடும்பத்தலைவர் ஆகியோரின் கல்வித் திட்டம்.
‘கல்வி என்பது ஒரு ஞானம் நிறைந்தவனின் விழுபொருள். அது எங்கு கிடைத்தாலும் அதை பெற்றுக்கொள்வது ஏற்றமானது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), திர்மிதி).
இஸ்லாம் கல்வியை இறை நம்பிக்கையின் ஒரு அங்கம் என்று வெகுவாக பாராட்டி, ஆர்வமூட்டி மக்களுக்கு பயன்தரும் பல கல்வியாளர்களை, சிந்தனையாளர்களை, ஆராய்ச்சியாளர்களை உருவாக்கித் தந்துள்ளது.
“ஒருவர் குற்றம் செய்தால் அவரே அக்குற்றத்திற்காக தண்டிக்கப்பட வேண்டியவர் ஆவார். மகனுடைய குற்றத்திற்கு தந்தையோ, தந்தையின் குற்றத்திற்கு மகனோ, தண்டிக்கப்பட (கூடாது) மாட்டார்கள்”.
மனித உரிமைகளை மதித்து நடக்கப்பட வேண்டும் என்று, 1400 ஆண்டுகளுக்கு முன்னர் நபிகளார் காட்டிய அக்கறை என்பது மனிதகுல மேன்மைக்கு என்றும் உறுதுணையாகவே விளங்குகின்றது.
அன்றைய சமுதாய மக்கள் மத்தியில் ஒழுக்கத்தோடும், உண்மையோடும், நற்குணத்தோடும் வாழ்ந்து காட்டிய நபிகளார், அம்மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராகவே விளங்கினார்கள்.
தனது 40-ம் வயதில் நபிகளார், தன்னை நபி (இறைவனின் தூதர்) எனக்கூறிய போதும், ‘இறைவன் ஒருவனே அவனுக்கு இணைக் கற்பிக்க கூடாது’ என நபிகளார் பேசிய போதும், அம்மக்கள் நபிகளாருக்கு பலத்த எதிர்ப்பை காட்டத் தொடங்கினார்கள்.
அதனை எல்லாம் மிக நேர்த்தியாக எதிர்கொண்ட நபிகளார் பல்வேறு சிரமங்களை தாங்கிக் கொண்டு, தனது 23 ஆண்டு கால ஏகத்துவ பணியில் மாபெரும் வெற்றியை தனது வாழ்நாளிலேயே கண்டு மகிழ்ந்தார்கள்.
நபிகளார் தனது 62-ம் வயதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தனது தோழர்களுடன் ஹஜ் யாத்திரை செய்தார்கள்.
அப்போது, ‘கஸ்வா’ என்ற ஒட்டகத்தின் மீது அமர்ந்தவர்களாக நபிகளார் ஆற்றிய சொற்பொழிவு என்பது உலக வரலாற்றில் என்றும் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டவையாகும்.
உரையின் தொடக்கமாக இறைவனை புகழ்ந்து பேசிய நபிகளார், வரும் அடுத்த ஆண்டில் தனது உலக பயணம் (உலக வாழ்வு) நிறைவு பெற்று விடும் என்பதை இவ்வாறு சூசகமாக அறிவித்தார்கள்:
“மக்களே எனது பேச்சை கவனமாக கேளுங்கள், இந்த ஆண்டிற்கு பிறகு மீண்டும் இதே இடத்தில் நான் உங்களை சந்திப்பேனா? என்பது எனக்கு தெரியாது”, என்ற நபிகளார், பிறப்பால் மனிதர்கள் மத்தியில் ஏற்ற தாழ்வு கற்பிக்கப்பட கூடாது. அதுவே மனித உரிமை மீறலின் அடிப்படையாக உள்ளது என்பதை அழகுற இவ்வாறு கூறினார்கள்.
“மக்களே, உங்களது இறைவன் ஒருவனே. ஓர் அரபி மற்றைய அரபி அல்லாதவரை விடவோ, அரபி அல்லாதவர்கள் மற்றைய அரபியரை விடவோ, எந்த மேன்மையும் சிறப்பும் பெற்றவர்களாக இல்லை”.
“இன்னும் வெள்ளை நிறத்தவர்கள் கருப்பு நிறத்தவர்களை விடவோ, கருப்பர் வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் (நிறத்தால்) பெற்றவராக இல்லை”.
“(நீங்கள்எவராயினும்) உங்களது இறையச்சம் ஒன்றே உங்களது மேன்மையையும் உங்களது சிறப்பையும் நிர்ணயிக்கும். உங்களில் அதிகம் இறையச்சம் உடையவரே, இறைவனிடத்திலே சிறந்தவராக இருக்கின்றார்”.
“மக்களே, இந்த ஹஜ்ஜுடைய மாதமும் இந்த (மக்கா) நகரமும் எவ்வளவு புனிதமானதோ, அவ்வளவு புனிதமானது- உங்களது உயிர், உடைமைகள், உங்களது மானமும் மரியாதையும் (என்பதை நினைவில் வையுங்கள்)”.
“உங்களது அடிமைகள் விஷயத்தில் பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள். நீங்கள் உண்பதையே அவர்களுக்கு உண்ணக்கொடுங்கள். நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கு உடுத்தக்கொடுங்கள்”.
“பெண்கள் விஷயத்தில் இறைவனை அஞ்சுங்கள். அவர்களுக்கு நன்மையே நாடுங்கள். எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமை உள்ளதோ அதேபோல உங்கள் மீதும் உங்களது மனைவியருக்கு உரிமைகள் உள்ளது”.
“அறியாமை காலத்தின் அனைத்து பாதகச் செயல்களும் என் பாதங்களுக்கு கீழே (போட்டு) புதைக்கப்பட்டு விட்டது. கொலைக்கு கொலை, பழிக்கு பழி என்று உயிர்பலி வாங்குவதை நான் ரத்து செய்கின்றேன்.”
“ஒருவர் குற்றம் செய்தால் அவரே அக்குற்றத்திற்காக தண்டிக்கப்பட வேண்டியவர் ஆவார். மகனுடைய குற்றத்திற்கு தந்தையோ, தந்தையின் குற்றத்திற்கு மகனோ, தண்டிக்கப்பட (கூடாது) மாட்டார்கள்”.
இவ்வாறு அன்றே மனித உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும் என பேசியவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே.
அத்தகைய மகத்தான மனித சேவையாற்றிய நபிகளார் தனது செயல்பாடு குறித்து மக்களிடம் இவ்வாறு வினவினார்கள்:
“ஓ மக்களே, மறுமை நாளில் என்னை பற்றி இறைவன் உங்களிடம் விசாரித்தால் என்ன பதில் கூறுவீர்கள்?” என்று கேட்டார்கள்.
அதற்கு அம்மக்கள் ஒருமித்து கூறினார்கள்: “நீங்கள் இறைவனின் தூதை எங்களிடம் தெளிவாக தெரிவித்து விட்டீர்கள். உங்களது (கடமையை) நிறைவேற்றிவிட்டீர்கள். (மனித சமுதாயத்திற்கு) நீங்கள் நன்மையையே நாடினீர்கள் என நாங்கள் இறைவனிடம் சாட்சி கூறுவோம்” என்றார்கள்.
அதற்கு நபிகளார் தனது ஆள்காட்டி விரலை வானத்தின் பக்கம் உயர்த்தியவர்களாக, “இறைவா, இதற்கு நீயே சாட்சியாக இருக்கின்றாய்” என 3 முறை கூறிய பின் தனது சிறப்பு வாய்ந்த இறுதிச்சொற்பொழிவை நிறைவு செய்தார்கள்.
அன்றே மனித உரிமைகள் குறித்து பேசிய நபிகளார் அதனை நடைமுறைப்படுத்தியும் காட்டினார்கள். மனித குலத்தின் மணிமகுடமாக அவர்கள் என்றும் திகழ்வதற்கு அதுவே அடிப்படையாகும்.
மு.முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.
அன்றைய சமுதாய மக்கள் மத்தியில் ஒழுக்கத்தோடும், உண்மையோடும், நற்குணத்தோடும் வாழ்ந்து காட்டிய நபிகளார், அம்மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராகவே விளங்கினார்கள்.
தனது 40-ம் வயதில் நபிகளார், தன்னை நபி (இறைவனின் தூதர்) எனக்கூறிய போதும், ‘இறைவன் ஒருவனே அவனுக்கு இணைக் கற்பிக்க கூடாது’ என நபிகளார் பேசிய போதும், அம்மக்கள் நபிகளாருக்கு பலத்த எதிர்ப்பை காட்டத் தொடங்கினார்கள்.
அதனை எல்லாம் மிக நேர்த்தியாக எதிர்கொண்ட நபிகளார் பல்வேறு சிரமங்களை தாங்கிக் கொண்டு, தனது 23 ஆண்டு கால ஏகத்துவ பணியில் மாபெரும் வெற்றியை தனது வாழ்நாளிலேயே கண்டு மகிழ்ந்தார்கள்.
நபிகளார் தனது 62-ம் வயதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தனது தோழர்களுடன் ஹஜ் யாத்திரை செய்தார்கள்.
அப்போது, ‘கஸ்வா’ என்ற ஒட்டகத்தின் மீது அமர்ந்தவர்களாக நபிகளார் ஆற்றிய சொற்பொழிவு என்பது உலக வரலாற்றில் என்றும் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டவையாகும்.
உரையின் தொடக்கமாக இறைவனை புகழ்ந்து பேசிய நபிகளார், வரும் அடுத்த ஆண்டில் தனது உலக பயணம் (உலக வாழ்வு) நிறைவு பெற்று விடும் என்பதை இவ்வாறு சூசகமாக அறிவித்தார்கள்:
“மக்களே எனது பேச்சை கவனமாக கேளுங்கள், இந்த ஆண்டிற்கு பிறகு மீண்டும் இதே இடத்தில் நான் உங்களை சந்திப்பேனா? என்பது எனக்கு தெரியாது”, என்ற நபிகளார், பிறப்பால் மனிதர்கள் மத்தியில் ஏற்ற தாழ்வு கற்பிக்கப்பட கூடாது. அதுவே மனித உரிமை மீறலின் அடிப்படையாக உள்ளது என்பதை அழகுற இவ்வாறு கூறினார்கள்.
“மக்களே, உங்களது இறைவன் ஒருவனே. ஓர் அரபி மற்றைய அரபி அல்லாதவரை விடவோ, அரபி அல்லாதவர்கள் மற்றைய அரபியரை விடவோ, எந்த மேன்மையும் சிறப்பும் பெற்றவர்களாக இல்லை”.
“இன்னும் வெள்ளை நிறத்தவர்கள் கருப்பு நிறத்தவர்களை விடவோ, கருப்பர் வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் (நிறத்தால்) பெற்றவராக இல்லை”.
“(நீங்கள்எவராயினும்) உங்களது இறையச்சம் ஒன்றே உங்களது மேன்மையையும் உங்களது சிறப்பையும் நிர்ணயிக்கும். உங்களில் அதிகம் இறையச்சம் உடையவரே, இறைவனிடத்திலே சிறந்தவராக இருக்கின்றார்”.
“மக்களே, இந்த ஹஜ்ஜுடைய மாதமும் இந்த (மக்கா) நகரமும் எவ்வளவு புனிதமானதோ, அவ்வளவு புனிதமானது- உங்களது உயிர், உடைமைகள், உங்களது மானமும் மரியாதையும் (என்பதை நினைவில் வையுங்கள்)”.
“உங்களது அடிமைகள் விஷயத்தில் பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள். நீங்கள் உண்பதையே அவர்களுக்கு உண்ணக்கொடுங்கள். நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கு உடுத்தக்கொடுங்கள்”.
“பெண்கள் விஷயத்தில் இறைவனை அஞ்சுங்கள். அவர்களுக்கு நன்மையே நாடுங்கள். எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமை உள்ளதோ அதேபோல உங்கள் மீதும் உங்களது மனைவியருக்கு உரிமைகள் உள்ளது”.
“அறியாமை காலத்தின் அனைத்து பாதகச் செயல்களும் என் பாதங்களுக்கு கீழே (போட்டு) புதைக்கப்பட்டு விட்டது. கொலைக்கு கொலை, பழிக்கு பழி என்று உயிர்பலி வாங்குவதை நான் ரத்து செய்கின்றேன்.”
“ஒருவர் குற்றம் செய்தால் அவரே அக்குற்றத்திற்காக தண்டிக்கப்பட வேண்டியவர் ஆவார். மகனுடைய குற்றத்திற்கு தந்தையோ, தந்தையின் குற்றத்திற்கு மகனோ, தண்டிக்கப்பட (கூடாது) மாட்டார்கள்”.
இவ்வாறு அன்றே மனித உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும் என பேசியவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே.
அத்தகைய மகத்தான மனித சேவையாற்றிய நபிகளார் தனது செயல்பாடு குறித்து மக்களிடம் இவ்வாறு வினவினார்கள்:
“ஓ மக்களே, மறுமை நாளில் என்னை பற்றி இறைவன் உங்களிடம் விசாரித்தால் என்ன பதில் கூறுவீர்கள்?” என்று கேட்டார்கள்.
அதற்கு அம்மக்கள் ஒருமித்து கூறினார்கள்: “நீங்கள் இறைவனின் தூதை எங்களிடம் தெளிவாக தெரிவித்து விட்டீர்கள். உங்களது (கடமையை) நிறைவேற்றிவிட்டீர்கள். (மனித சமுதாயத்திற்கு) நீங்கள் நன்மையையே நாடினீர்கள் என நாங்கள் இறைவனிடம் சாட்சி கூறுவோம்” என்றார்கள்.
அதற்கு நபிகளார் தனது ஆள்காட்டி விரலை வானத்தின் பக்கம் உயர்த்தியவர்களாக, “இறைவா, இதற்கு நீயே சாட்சியாக இருக்கின்றாய்” என 3 முறை கூறிய பின் தனது சிறப்பு வாய்ந்த இறுதிச்சொற்பொழிவை நிறைவு செய்தார்கள்.
அன்றே மனித உரிமைகள் குறித்து பேசிய நபிகளார் அதனை நடைமுறைப்படுத்தியும் காட்டினார்கள். மனித குலத்தின் மணிமகுடமாக அவர்கள் என்றும் திகழ்வதற்கு அதுவே அடிப்படையாகும்.
மு.முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.
திருக்குர்ஆன் வாசிப்பது, ஒருவர் வாசிக்கும் போது மற்றவர் கேட்பது, தொழுகையில் வாசிக்கப்படும் போது செவி தாழ்த்தி கேட்பது யாவும் இறைநம்பிக்கையை பலப்படுத்தும்.
இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘திருக்குர்ஆன் வாசிப்பது’ குறித்த தகவல்களை காண்போம்.
திருக்குர்ஆன் வாசிப்பது நாவு சார்ந்த இறைநம்பிக்கை. திருக்குர்ஆன் வாசிப்பது, ஒருவர் வாசிக்கும் போது மற்றவர் கேட்பது, தொழுகையில் வாசிக்கப்படும் போது செவி தாழ்த்தி கேட்பது யாவும் இறைநம்பிக்கையை பலப்படுத்தும்.
மேலும் வாசிப்பவருக்கும், கேட்பவருக்கும் நன்மை கிடைக்கும். திருக்குர்ஆனை பொருள் விளங்கி ஓதினாலும் நன்மை உண்டு. பொருள் விளங்காமல் ஓதினாலும் நன்மை உண்டு. சரளமாக ஓதினாலும், திக்கித்திணறி ஓதினாலும் நன்மை உண்டு.
‘எவர் ஒருவர் இந்த இறைவேதத்திலிருந்து ஒரு எழுத்தை வாசிக்கிறாரோ அவருக்கு அதனால் ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மைக்கு அதுபோன்று பத்து மடங்கு நன்மை கிடைக்கும். அலிப், லாம், மீம் ஒரு எழுத்து என்று கூறமாட்டேன். இதில் அலிப் ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து, மீம் ஒரு எழுத்து ஆகும். (இதை வாசிக்கும் போது முப்பது நன்மைகள் கிடைக்கும்) இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: திர்மிதி)
‘குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள், வாய் மூடுங்கள், நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்’. (திருக்குர்ஆன் 7:204)
‘எவர் இறைவேதமாகிய திருக்குர் ஆனிலிருந்து ஒரு வசனத்தை செவி மடுக்கிறாரோ அவருக்கு பன்மடங்கு நன்மை எழுதப்படுகிறது. எவர் திருக்குர்ஆனை வாசிக்கிறாரோ அது அவருக்கு மறுமையில் ஒளிமயமாக ஆகிவிடுகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: அஹ்மது)
ஒருவர் குர்ஆனை வாசித்தாலோ, அல்லது ஒருவர் வாசிப்பதை பிறர் செவிமடுத்தாலோ அத்தகைய இரு வருக்கும் இறைநம்பிக்கை மென்மேலும் அதிகரிக்கும்.
நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் ஆரம்பத்தில் இஸ்லாமிய கொள்கையை போதிக்கும் போது ஆரம்பமாக இறைவேதமான திருக்குர்ஆனைத்தான் வாசித்துக் காட்டுவார்கள். அதன் ஒலி வடிவம் கேட்டு, அதன் அழகிய, ஆழமான, கவர்ச்சியான கருத்துருவாக்கத்தால் ஈர்க்கப்பட்டு, இசைந்து இதயப்பூர்வமாக பலர் இஸ்லாத்தில் இணைந்தனர். இறைநம்பிக்கையை ஏற்றனர். மற்றும் சிலர் அதன் ஒலி வடிவத்தை கேட்டு, இஸ்லாத்தில் இணைந்து விடக் கூடாது என்பதற்காக தமது காதுகளில் பஞ்சை அடைத்து திரிந்தனர். அதையும் தாண்டி அதன் ஒலி அவர்களின் உள்ளத்தில் ஊடுருவி அவர்களை இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்தது.
இஸ்லாத்தின் இரண்டாம் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களை இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்து, அதில் இணைய வைத்ததே பின்வரும் திருக்குர்ஆனின் அழகிய திருவசனங்களை செவிதாழ்த்தி கேட்டதுதான்.
‘நான்தான் அல்லாஹ் (இறைவன்). என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. எனவே என்னை வணங்குவீராக, என்னை நினைப்பதற்காக தொழுகையை நிலை நாட்டுவீராக’. (திருக்குர்ஆன் 20:14)
‘நம்பிக்கை கொண்டோர் யாரெனில் இறைவனைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்கு வாசித்துக் காட்டப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறை வனையே சார்ந்திருப்பார்கள்’. (திருக்குர்ஆன் 8:2)
இஸ்லாம் வாசிப்புக்கு அதிமுக்கியத்துவம் வழங்கியுள்ளது. இறைவேதமான திருக்குர்ஆன் வாசிப்பதை இறைநம்பிக்கை சார்ந்த விஷயமாக அது பாவிக்கிறது. நபிமொழிகளை வாசிப்பதும் இறைநம்பிக்கை என்று சொல்ல முடியும். இதன் தொடர்ச்சியாக இறைநம்பிக்கையூட்டும் மார்க்க சம்பந்தப்பட்ட, இஸ்லாமிய ஆன்மிக சம்பந்தப்பட்ட அனைத்து நூல்களையும் வாசிப்பது நாவு சார்ந்த இறைநம்பிக்கை ஆகும்.
வாசிப்பு விஷயத்தில் நாம் தேர்ந்தெடுக்கும் அணுகுமுறை வைத்துதான் அது இறை நம்பிக்கை சார்ந்ததா? இல்லையா? என்பதை தீர்மானிக்க முடியும். மார்க்கத்திற்கு முரணான, ஆபாசமான, பாவகரமான, பயங்கரமான வாசிப்புகள் யாவும் ஒருவரை இறைநிராகரிப்பில் தள்ளிவிடும். இத்தகைய வாசிப்புகளைத் தவிர்த்து மற்ற வாசிப்புகள் யாவும் இஸ்லாத்தின் பார்வையில் வரவேற்கப்பட வேண்டியவைகள்தான்.
இறைவேதமான திருக்குர்ஆனில் முதன்முதலில் இடம்பெற்ற திருவசனம் வாசிப்பு குறித்துதான் என்பது கவனிக்கத்தக்கது.
‘(முஹம்மதே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக. அவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான். ஓதுவீராக, உமது இறைவன் கண்ணியமானவன்’. (திருக்குர்ஆன் 96:1,2,3)
வாசிப்பு என்பது கல்வியின் வாசலாக உள்ளது. வாசிப்பு ஒருவரின் சிந்தனைத் திறனை அதிகரிக்கச் செய்கிறது. வாசிப்பு ஒருவனை அறிஞனாக, கவிஞனாக, ஆசானாக, விஞ்ஞானியாக, ஆன்மிகவாதியாக, பண்பட்ட மனிதனாக மாற்றிவிடுகிறது. அதிலும், குறிப்பாக குர்ஆனை வாசிப்பவர் இறைநேசராக மாறிவிடுகிறார். அவர் இறைவனின் அருளில் நிழல் பெறுகிறார்.
இறை நம்பிக்கையாளர்களில் திருக்குர்ஆனை வாசிப்பவர் எத்தனை பேர்? எத்தனையோ இஸ்லாமியர்களின் இல்லங்களில் அலமாரியில் அழகு சாதன பொருட்களின் வரிசையில் திருக்குர்ஆன் திறக்கப் படாத, வாசிக்கப்படாத அழகு சாதனமாக காட்சிப் படுத்தப்படுகிறது.
இன்னும் சில இறைநம்பிக்கையாளருக்கு வாசிக்கவே தெரியாது. சிலருக்கு வாசிக்கத் தெரிந்தாலும் வாசிப்பதும் கிடையாது. திருக்குர்ஆனை தினம் தினம் ஒரு வசனமாவது வாசிக்க வேண்டும். அதன் கருத்தை உணர்ந்து வாசிக்க வேண்டும். அது கூறும் கூற்றுப்படி வாழ்வை அமைத்திட வேண்டும்.
‘திருக்குர்ஆனை வாசித்து, அதன்படி செயல்படக்கூடிய இறை நம்பிக்கையாளர் எலுமிச்சை போன்றவர்; அதன் சுவையும் நன்று; வாசனையும் நன்று. திருக்குர்ஆனை ஓதாமல் அதன்படி செயலாற்றி மட்டும் வருபவர், பேரீச்சம்பழம் போன்றவர். அதன் சுவை நன்று; ஆனால், அதற்கு மணமில்லை. திருக்குர்ஆனை ஓதுகிற நயவஞ்சகனின் நிலை துளசிச் செடியின் நிலைக்கு ஒத்துள்ளது. அதன் வாசனை நன்று; அதன் சுவை கசப்பானது. திருக்குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலை குமட்டிக்காய் போன்றது. அதன் சுவையும் கசப்பு; அதன் வாடையும் வெறுப்பானது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூமூஸா (ரலி), நூல்: புகாரி)
‘ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ‘குர்ஆனை எனக்கு வாசித்துக் காட்டுங்கள்’ என்று கூறினார்கள். நான், ‘தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் வாசித்துக்காட்டுவதா?’ என்று கேட்டேன். ‘பிறரிடமிருந்து அதை நான் செவியேற்க விரும்புகிறேன்’ என்று கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: இப்னுமஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி)
‘குர்ஆனைத் திருத்தமாக ஓதுவீராக’. (திருக்குர்ஆன் 73:4)
திருக்குர்ஆனை தினமும் ஓதவேண்டும். திருத்தமாக ஓதவேண்டும். அதிகமாகவும் ஓதவேண்டும்.
பாத்திமா (ரலி) அவர்கள் கூறியதாவது: “எனது தந்தை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ‘ரகசியமாக, வானவர் ஜிப்ரீல் (அலை) என்னை ஒவ்வொரு ஆண்டும் ஒருமுறை குர்ஆனை ஓதச் செய்து வந்தார்கள். இந்த ஆண்டு மட்டும் அவர்கள் என்னை இரு முறை அதை ஓதச் செய்தார்கள். என் வாழ்நாள் முடிவடையும் நேரம் வந்துவிட்டதைக் குறிப்பதாகவே அதை நான் கருதுகிறேன்’ என்று தெரிவித்தார்கள்”. (நூல்: புகாரி)
‘திருக்குர்ஆனை ஓதுங்கள். ஏனெனில் அது நாளை மறுமைநாளில் அதனுடையவர்களுக்கு சிபாரிசு செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஉமாமா (ரலி), நூல்: முஸ்லிம்)
திருக்குர்ஆனை ஓதும்போது சில ஒழுக்கங்களை பேணி ஓத வேண்டும். அவை:
1) சுத்தமாக இருந்து, தொழும் திசையை நோக்கி அமர்ந்து மரியாதையுடன் ஓத வேண்டும், 2) ஓதும் முறையை பேணி, நிதானமாக, இனிமையாக ஓத வேண்டும், 3) முகஸ்துதி, பிறருக்கு இடையூறு ஏற்படும் என்ற சந்தேகம் வருமாயின் மெதுவாக ஓத வேண்டும், இல்லையென்றால் சப்தமாக ஓதலாம், 4) இந்த வேதத்தின் மகத்துவத்தை மனதால் புரிந்து ஓத வேண்டும், 5) வேதத்தை வழங்கிய இறைவனின் பெருமை, தூய்மை, உயர்வு ஆகியவற்றை மனதில் நிலைநிறுத்தி ஓத வேண்டும்,
6) ஊசலாட்டங்கள், சந்தேகங்கள் ஆகியவற்றிலிருந்து மனதை தூய்மையாக்கி ஓத வேண்டும், 7) கருத்துகளை உணர்ந்து ஓத வேண்டும், 8) வசனங்களின் கருத்துகளுக்கு தக்கபடி அருள் கூறும் வசனம் ஓதும்போது மனமகிழ்ச்சியும், தண்டனைகள், எச்சரிக்கைகள் குறித்து வரும் போது மனம் நடுங்கவும் வேண்டும், 9) இறைவனுடன் பேசுகிறோம் என்ற முறையில் கவனமாக ஓத வேண்டும், 10) சிரசை தாழ்த்துமாறு வசனம் வரும் போது சிரசை தாழ்த்த வேண்டும். இவ்வாறு ஓதும்போது இறைநம்பிக்கை அதிகமாகும், 11) திருக்குர்ஆனை ஓதும்போது ‘அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்’ என்று கூறி தொடங்க வேண்டும்.
திருக்குர்ஆன் வாசிப்பது நாவு சார்ந்த இறைநம்பிக்கை. திருக்குர்ஆன் வாசிப்பது, ஒருவர் வாசிக்கும் போது மற்றவர் கேட்பது, தொழுகையில் வாசிக்கப்படும் போது செவி தாழ்த்தி கேட்பது யாவும் இறைநம்பிக்கையை பலப்படுத்தும்.
மேலும் வாசிப்பவருக்கும், கேட்பவருக்கும் நன்மை கிடைக்கும். திருக்குர்ஆனை பொருள் விளங்கி ஓதினாலும் நன்மை உண்டு. பொருள் விளங்காமல் ஓதினாலும் நன்மை உண்டு. சரளமாக ஓதினாலும், திக்கித்திணறி ஓதினாலும் நன்மை உண்டு.
‘எவர் ஒருவர் இந்த இறைவேதத்திலிருந்து ஒரு எழுத்தை வாசிக்கிறாரோ அவருக்கு அதனால் ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மைக்கு அதுபோன்று பத்து மடங்கு நன்மை கிடைக்கும். அலிப், லாம், மீம் ஒரு எழுத்து என்று கூறமாட்டேன். இதில் அலிப் ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து, மீம் ஒரு எழுத்து ஆகும். (இதை வாசிக்கும் போது முப்பது நன்மைகள் கிடைக்கும்) இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: திர்மிதி)
‘குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள், வாய் மூடுங்கள், நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்’. (திருக்குர்ஆன் 7:204)
‘எவர் இறைவேதமாகிய திருக்குர் ஆனிலிருந்து ஒரு வசனத்தை செவி மடுக்கிறாரோ அவருக்கு பன்மடங்கு நன்மை எழுதப்படுகிறது. எவர் திருக்குர்ஆனை வாசிக்கிறாரோ அது அவருக்கு மறுமையில் ஒளிமயமாக ஆகிவிடுகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: அஹ்மது)
ஒருவர் குர்ஆனை வாசித்தாலோ, அல்லது ஒருவர் வாசிப்பதை பிறர் செவிமடுத்தாலோ அத்தகைய இரு வருக்கும் இறைநம்பிக்கை மென்மேலும் அதிகரிக்கும்.
நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் ஆரம்பத்தில் இஸ்லாமிய கொள்கையை போதிக்கும் போது ஆரம்பமாக இறைவேதமான திருக்குர்ஆனைத்தான் வாசித்துக் காட்டுவார்கள். அதன் ஒலி வடிவம் கேட்டு, அதன் அழகிய, ஆழமான, கவர்ச்சியான கருத்துருவாக்கத்தால் ஈர்க்கப்பட்டு, இசைந்து இதயப்பூர்வமாக பலர் இஸ்லாத்தில் இணைந்தனர். இறைநம்பிக்கையை ஏற்றனர். மற்றும் சிலர் அதன் ஒலி வடிவத்தை கேட்டு, இஸ்லாத்தில் இணைந்து விடக் கூடாது என்பதற்காக தமது காதுகளில் பஞ்சை அடைத்து திரிந்தனர். அதையும் தாண்டி அதன் ஒலி அவர்களின் உள்ளத்தில் ஊடுருவி அவர்களை இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்தது.
இஸ்லாத்தின் இரண்டாம் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களை இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்து, அதில் இணைய வைத்ததே பின்வரும் திருக்குர்ஆனின் அழகிய திருவசனங்களை செவிதாழ்த்தி கேட்டதுதான்.
‘நான்தான் அல்லாஹ் (இறைவன்). என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. எனவே என்னை வணங்குவீராக, என்னை நினைப்பதற்காக தொழுகையை நிலை நாட்டுவீராக’. (திருக்குர்ஆன் 20:14)
‘நம்பிக்கை கொண்டோர் யாரெனில் இறைவனைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்கு வாசித்துக் காட்டப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறை வனையே சார்ந்திருப்பார்கள்’. (திருக்குர்ஆன் 8:2)
இஸ்லாம் வாசிப்புக்கு அதிமுக்கியத்துவம் வழங்கியுள்ளது. இறைவேதமான திருக்குர்ஆன் வாசிப்பதை இறைநம்பிக்கை சார்ந்த விஷயமாக அது பாவிக்கிறது. நபிமொழிகளை வாசிப்பதும் இறைநம்பிக்கை என்று சொல்ல முடியும். இதன் தொடர்ச்சியாக இறைநம்பிக்கையூட்டும் மார்க்க சம்பந்தப்பட்ட, இஸ்லாமிய ஆன்மிக சம்பந்தப்பட்ட அனைத்து நூல்களையும் வாசிப்பது நாவு சார்ந்த இறைநம்பிக்கை ஆகும்.
வாசிப்பு விஷயத்தில் நாம் தேர்ந்தெடுக்கும் அணுகுமுறை வைத்துதான் அது இறை நம்பிக்கை சார்ந்ததா? இல்லையா? என்பதை தீர்மானிக்க முடியும். மார்க்கத்திற்கு முரணான, ஆபாசமான, பாவகரமான, பயங்கரமான வாசிப்புகள் யாவும் ஒருவரை இறைநிராகரிப்பில் தள்ளிவிடும். இத்தகைய வாசிப்புகளைத் தவிர்த்து மற்ற வாசிப்புகள் யாவும் இஸ்லாத்தின் பார்வையில் வரவேற்கப்பட வேண்டியவைகள்தான்.
இறைவேதமான திருக்குர்ஆனில் முதன்முதலில் இடம்பெற்ற திருவசனம் வாசிப்பு குறித்துதான் என்பது கவனிக்கத்தக்கது.
‘(முஹம்மதே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக. அவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான். ஓதுவீராக, உமது இறைவன் கண்ணியமானவன்’. (திருக்குர்ஆன் 96:1,2,3)
வாசிப்பு என்பது கல்வியின் வாசலாக உள்ளது. வாசிப்பு ஒருவரின் சிந்தனைத் திறனை அதிகரிக்கச் செய்கிறது. வாசிப்பு ஒருவனை அறிஞனாக, கவிஞனாக, ஆசானாக, விஞ்ஞானியாக, ஆன்மிகவாதியாக, பண்பட்ட மனிதனாக மாற்றிவிடுகிறது. அதிலும், குறிப்பாக குர்ஆனை வாசிப்பவர் இறைநேசராக மாறிவிடுகிறார். அவர் இறைவனின் அருளில் நிழல் பெறுகிறார்.
இறை நம்பிக்கையாளர்களில் திருக்குர்ஆனை வாசிப்பவர் எத்தனை பேர்? எத்தனையோ இஸ்லாமியர்களின் இல்லங்களில் அலமாரியில் அழகு சாதன பொருட்களின் வரிசையில் திருக்குர்ஆன் திறக்கப் படாத, வாசிக்கப்படாத அழகு சாதனமாக காட்சிப் படுத்தப்படுகிறது.
இன்னும் சில இறைநம்பிக்கையாளருக்கு வாசிக்கவே தெரியாது. சிலருக்கு வாசிக்கத் தெரிந்தாலும் வாசிப்பதும் கிடையாது. திருக்குர்ஆனை தினம் தினம் ஒரு வசனமாவது வாசிக்க வேண்டும். அதன் கருத்தை உணர்ந்து வாசிக்க வேண்டும். அது கூறும் கூற்றுப்படி வாழ்வை அமைத்திட வேண்டும்.
‘திருக்குர்ஆனை வாசித்து, அதன்படி செயல்படக்கூடிய இறை நம்பிக்கையாளர் எலுமிச்சை போன்றவர்; அதன் சுவையும் நன்று; வாசனையும் நன்று. திருக்குர்ஆனை ஓதாமல் அதன்படி செயலாற்றி மட்டும் வருபவர், பேரீச்சம்பழம் போன்றவர். அதன் சுவை நன்று; ஆனால், அதற்கு மணமில்லை. திருக்குர்ஆனை ஓதுகிற நயவஞ்சகனின் நிலை துளசிச் செடியின் நிலைக்கு ஒத்துள்ளது. அதன் வாசனை நன்று; அதன் சுவை கசப்பானது. திருக்குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலை குமட்டிக்காய் போன்றது. அதன் சுவையும் கசப்பு; அதன் வாடையும் வெறுப்பானது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூமூஸா (ரலி), நூல்: புகாரி)
‘ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ‘குர்ஆனை எனக்கு வாசித்துக் காட்டுங்கள்’ என்று கூறினார்கள். நான், ‘தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் வாசித்துக்காட்டுவதா?’ என்று கேட்டேன். ‘பிறரிடமிருந்து அதை நான் செவியேற்க விரும்புகிறேன்’ என்று கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: இப்னுமஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி)
‘குர்ஆனைத் திருத்தமாக ஓதுவீராக’. (திருக்குர்ஆன் 73:4)
திருக்குர்ஆனை தினமும் ஓதவேண்டும். திருத்தமாக ஓதவேண்டும். அதிகமாகவும் ஓதவேண்டும்.
பாத்திமா (ரலி) அவர்கள் கூறியதாவது: “எனது தந்தை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ‘ரகசியமாக, வானவர் ஜிப்ரீல் (அலை) என்னை ஒவ்வொரு ஆண்டும் ஒருமுறை குர்ஆனை ஓதச் செய்து வந்தார்கள். இந்த ஆண்டு மட்டும் அவர்கள் என்னை இரு முறை அதை ஓதச் செய்தார்கள். என் வாழ்நாள் முடிவடையும் நேரம் வந்துவிட்டதைக் குறிப்பதாகவே அதை நான் கருதுகிறேன்’ என்று தெரிவித்தார்கள்”. (நூல்: புகாரி)
‘திருக்குர்ஆனை ஓதுங்கள். ஏனெனில் அது நாளை மறுமைநாளில் அதனுடையவர்களுக்கு சிபாரிசு செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஉமாமா (ரலி), நூல்: முஸ்லிம்)
திருக்குர்ஆனை ஓதும்போது சில ஒழுக்கங்களை பேணி ஓத வேண்டும். அவை:
1) சுத்தமாக இருந்து, தொழும் திசையை நோக்கி அமர்ந்து மரியாதையுடன் ஓத வேண்டும், 2) ஓதும் முறையை பேணி, நிதானமாக, இனிமையாக ஓத வேண்டும், 3) முகஸ்துதி, பிறருக்கு இடையூறு ஏற்படும் என்ற சந்தேகம் வருமாயின் மெதுவாக ஓத வேண்டும், இல்லையென்றால் சப்தமாக ஓதலாம், 4) இந்த வேதத்தின் மகத்துவத்தை மனதால் புரிந்து ஓத வேண்டும், 5) வேதத்தை வழங்கிய இறைவனின் பெருமை, தூய்மை, உயர்வு ஆகியவற்றை மனதில் நிலைநிறுத்தி ஓத வேண்டும்,
6) ஊசலாட்டங்கள், சந்தேகங்கள் ஆகியவற்றிலிருந்து மனதை தூய்மையாக்கி ஓத வேண்டும், 7) கருத்துகளை உணர்ந்து ஓத வேண்டும், 8) வசனங்களின் கருத்துகளுக்கு தக்கபடி அருள் கூறும் வசனம் ஓதும்போது மனமகிழ்ச்சியும், தண்டனைகள், எச்சரிக்கைகள் குறித்து வரும் போது மனம் நடுங்கவும் வேண்டும், 9) இறைவனுடன் பேசுகிறோம் என்ற முறையில் கவனமாக ஓத வேண்டும், 10) சிரசை தாழ்த்துமாறு வசனம் வரும் போது சிரசை தாழ்த்த வேண்டும். இவ்வாறு ஓதும்போது இறைநம்பிக்கை அதிகமாகும், 11) திருக்குர்ஆனை ஓதும்போது ‘அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்’ என்று கூறி தொடங்க வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் வந்து கலந்து கொள்வார்கள்..
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்காவில் ஆண்டு தோறும் சந்தனக்கூடு திருவிழா மதநல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவாக ஏர்வாடி தர்கா பொது மகாசபை உறுப்பினர்கள் (ஹக்தார்) நடத்தி வருகின்றனர்.
இந்த விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்து கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று மவுலீது டன் (புகழ்மாலை) தொடங்கியது. ஏராளமான தர்கா ஹக்தார்கள் மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த தர்கா மண்டபத்தில் அமர்ந்து மவுலீது ஓதினர்.
மாவட்ட அரசு காஜி சலாஹூதீன் ஆலிம் உலக மக்களின் அமைதிக்காகவும், ஒற்றுமைக்காகவும், மழை வேண்டியும் சிறப்பு துஆ (பிராத்தனை) செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து நேர்ச்சி வழங்கப்பட்டது. நேற்று (ஜூலை,14-ந்தேதி) மாலை ஏர்வாடி குடியிருப்பில் உள்ள முஜாபிர் நல்ல இபுரா கிம் லெப்வை மாகாலில் இருந்து மாலை 3 மணிக்கு கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக தர்கா வந்தடைந்து மாலை 6.30 மணியளவில் பக்தர்களின் நாரே தக்பீர் முழக்கத்துடன் கொடி ஏற்றப்பட்டது.
விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக ஜூலை 26-ந் தேதி மாலை சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு ஜூலை 27-ந்தேதி அதிகாலை தர்காவிற்கு சந்தனக்கூடு வந்தடைந்தயும். பின்னர் பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும்.
ஆகஸ்டு 2-ந்தேதி கொடியிறக்கத்துடன், பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தர்கா பொது மகாசபை ஹக் தார்கள் செய்து வருகின்றனர்.
இந்த விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்து கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று மவுலீது டன் (புகழ்மாலை) தொடங்கியது. ஏராளமான தர்கா ஹக்தார்கள் மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த தர்கா மண்டபத்தில் அமர்ந்து மவுலீது ஓதினர்.
மாவட்ட அரசு காஜி சலாஹூதீன் ஆலிம் உலக மக்களின் அமைதிக்காகவும், ஒற்றுமைக்காகவும், மழை வேண்டியும் சிறப்பு துஆ (பிராத்தனை) செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து நேர்ச்சி வழங்கப்பட்டது. நேற்று (ஜூலை,14-ந்தேதி) மாலை ஏர்வாடி குடியிருப்பில் உள்ள முஜாபிர் நல்ல இபுரா கிம் லெப்வை மாகாலில் இருந்து மாலை 3 மணிக்கு கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக தர்கா வந்தடைந்து மாலை 6.30 மணியளவில் பக்தர்களின் நாரே தக்பீர் முழக்கத்துடன் கொடி ஏற்றப்பட்டது.
விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக ஜூலை 26-ந் தேதி மாலை சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு ஜூலை 27-ந்தேதி அதிகாலை தர்காவிற்கு சந்தனக்கூடு வந்தடைந்தயும். பின்னர் பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும்.
ஆகஸ்டு 2-ந்தேதி கொடியிறக்கத்துடன், பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தர்கா பொது மகாசபை ஹக் தார்கள் செய்து வருகின்றனர்.
‘உங்களைப்பற்றி நல்லுபதேசங்கள் உள்ள வேதத்தையே நிச்சயமாக உங்களுக்கு அருளியிருக்கின்றோம். இதைக்கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?’ (திருக்குர்ஆன் 21:10)
ஏக இறைவனால் அருளப்பட்ட வேதம் திருக்குர்ஆன். அரபுமொழியில் எழுதப்பட்ட இந்த புனித நூல், கடந்த 1400 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேசமெங்கும் பதிப்பிக்கப்படுகிறது. ஆனால் இன்று வரை அதன் எழுத்துக்களில் ஒன்று கூட மாற்றப்படவில்லை என்பது தான் பேரதிசயம். காரணம், அது இறைவனால் அருளப்பட்டது.
திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் அருளப்பட்ட வேதம் அல்ல. உலக மக்கள் அனைவருக்குமான பொதுமறை ஆகும். இதுகுறித்து திருக்குர் ஆன் கூறும்போது: “இது உலக மக்கள் யாவருக்கும் ஒரு நல்லுபதேசமே அன்றி வேறில்லை” என்று பல்வேறு இடங்களில் குறிப்பிடுகிறது. (திருக்குர்ஆன் 12:104, 68:52, 81:27)
மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வழிகாட்டுதல்களும் குர்ஆனில் நிறைந்திருக்கின்றன. அற்புதமான இந்த நூலை தினசரி வாசித்தால் நமக்கு நல்வழி பிறக்கும். குர்ஆனில் அருளப்பட்ட முதல் வசனமே ‘இக்ர’ (நீ ஓது) என்பது தான்.
நபிகளார் நவின்றார்கள்: ‘எவர் தானும் குர் ஆனைக் கற்று, அதையே மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்கிறாரோ அவரே உங்களில் சிறந்தவர்’ (நூல்: புகாரி).
குர்ஆனை கற்றல், கற்றுக்கொடுத்தல் என்ற இந்த இரண்டு பண்பும் இன்று நம்மிடம் அவசியம் இருக்கவேண்டிய பண்பாகும். முதலில் நாம் குர்ஆனை ஓதிப்பழக வேண்டும், பிறகு அதற்கான அர்த்தங்களைப் படிக்கவேண்டும். பின் அதில் உள்ள சட்டதிட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். பின்னர் அதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். இதுதான் குர்ஆனுக்கு ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கட்டாயக் கடமையாகும்.
குர்ஆன் சாதாரணமான புத்தகம் அல்ல. விண்ணிலிருந்து மண்ணுக்கு இறையருளை கொண்டு வரும் ஒரு அற்புத புத்தகம். அதை நாம் அனுதினமும் அயராது ஓதிவரவேண்டும். அர்த்தம் தெரியாமல் சும்மா குர்ஆனைப்பார்த்து ஓதுவதற்கும் கூட நிறைய நன்மைகள் இருக்கின்றன. சொல்லப் போனால், குர்ஆனின் அரபு எழுத்துக்களை நம் கண்கொண்டு பார்ப்பதற்கும் கூட ஏராளமான நன்மைகள் இருக்கின்றன என்பது நபிகளாாின் நல்வாக்காகும்.
நபிகளார் நவின்றார்கள்: “மூன்று விஷயங்கள், அதை பார்ப்பதற்கும்கூட நன்மைகள் உண்டு. மக்காவிலுள்ள புனித கஅபாவைப் பார்ப்பது, தமது பெற்றோரின் முகத்தைப் பார்ப்பது, புனித குர்ஆனைப் பார்ப்பது”. (நூல்: மிஷ்காத்)
இம்மையில் நீங்கள் குர்ஆனை ஓதினால், அது மறுமை நாளில் சிபாரிசு செய்யும் என்றார்கள் நபிகள் நாயகம்.
குர்ஆன் கடினமான ஒரு மொழியை, நடையைக் கொண்ட ஒரு வேதமல்ல. ஓதி உணர்ந்துகொள்ளும் வகையில் அது எளிதானது என்று திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது.
‘இந்தக் குர்ஆனை நிச்சயமாக நாம் மிக எளிதாக்கி வைத்தோம். நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா?’ (திருக்குர்ஆன் 54:22).
ஒருவர் திக்கித்திக்கி, தடுமாறி ஓதினால் கூட அவருக்கு இரட்டைக்கூலி உண்டு என்றார்கள் நபியவர்கள். காரணம், திக்கித்திணறி, தடுமாறியாவது அவன் திருக்குர்ஆனை ஓத முயற்சிக்கிறானே அதற்காகத்தான் அவனுக்கு இருகூலி வழங்கப்படுகிறது.
குர்ஆனை ஓதுவது என்பது கல்வி மட்டுமல்ல, அதுவொரு கலை. அதை “தஜ்வீத் (ஓதும்) கலை” என்பார்கள். இருபத்தெட்டு அரபு எழுத்துக்களை மட்டும் நாம் கற்றுக் கொண்டால் போதாது. அவற்றை நாம் எப்படி, எந்த முறையில் உச்சரிக்க வேண்டும், எந்த இடத்தில் நிறுத்தி ஓதவேண்டும், எந்த இடத்தில் நிறுத்தாமல் ஓதவேண்டும், எந்த இடத்தில் வார்த்தைகளை சேர்த்து ஓதவேண்டும் என்றெல்லாம் பல்வேறு சட்ட திட்டங்களுண்டு. அவைகளை சரியாக பேணி கவனித்து ஓதுவதற்குத்தான் “ஓதும் கலை” என்று பெயர்.
தொடக்கத்தில் திக்கித்திணறி ஓதினாலும், பின்னர் அதை நன்றாகக்கற்றுக்கொண்டு உரிய முறையோடு ஓதுவது தான் சிறப்பு. இல்லை யெனில், நாம் ஓதியதற்கு எந்தப்புண்ணியமும் இல்லை.
அதனால் தான் அண்ணலார் இப்படியும் சொன்னார்கள்: ‘எத்தனையோ பேர் திருக்குர்ஆனை ஓதுகிறார்கள். ஆனால் அது அவர்களை சபித்துக் கொண்டிருக்கிறது’.
காரணம் இதுதான்: குர்ஆனை ஓதவேண்டிய முறைப்படி ஒருவர் ஓதாமல், தனக்கு தெரிந்தபடி மட்டும் ஓதினால் அவர் சில உச்சரிப்புகளை சரிவர உச்சரிக்காத போது அதன் அர்த்தங்களில் பொருட்பிறழ்வு ஏற்பட்டு விடுகிறது. அதனாலேயே அவன் பெரும்பாதிப்புக்கு ஆளாகிவிடு கிறான்.
எனவே, மற்ற நூல்களை படிப்பது போல் சர்வ சாதாரணமாக இந்த நூலை நாம் எடைபோட்டு விடக்கூடாது. நமது நிகழ்காலமும், எதிர்காலமும் இந்தக்குர்ஆனிற்குள் தான் மறைந்திருக்கிறது. நாம் தான் அவற்றை சரியாக அடையாளம் கண்டு மீட்டெடுக்க வேண்டும்.
திருக்குர்ஆனில் இப்படி ஒரு வசனம் இடித்துக்காட்டுகிறது:
‘உங்களைப்பற்றி நல்லுபதேசங்கள் உள்ள வேதத்தையே நிச்சயமாக உங்களுக்கு அருளியிருக்கின்றோம். இதைக்கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?’ (திருக்குர்ஆன் 21:10)
மனிதன் நிம்மதியைத்தேடி தினமும் அங்கும் இங்கும் ஓடியாடி அலைகின்றான். ஆனாலும் அவனுக்கு அது அவ்வளவு சீக்கிரம் கிடைத்து விடுவதில்லை. அதைப்பெறுவதற்கான ஒரேவழி இறை மறையான திருமறையை ஓதுவதில் தான் இருக்கிறது. இதை அறிந்து அவன் ஓதிவந்தால் அவன் தேடும் நிம்மதியும், மனஅமைதியும் அவனது உள்ளத்தையும், இல்லத்தையும் வந்தடையும்.
இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘மெய்யாகவே நம்பிக்கை கொண்டி ருப்பவர்கள் அவர்கள் தாம்; (அவர்கள் முன்) அல்லாஹ்வின் திருப்பெயர் துதி செய்யப்பட்டால், அவர்களுடைய உள்ளங்கள் நிம்மதியடைந்து விடுகின்றன. (ஏனென்றால்,) அல்லாஹ்வின் திருப்பெயரை துதி செய்வதனால் (உண்மை நம்பிக்கையாளர்களின்) உள்ளங்கள் நிச்சயமாக நிம்மதி அடையும் என்பதை (நபியே! நீங்கள்) அறிந்து கொள்ளுங்கள்’. (திருக்குர்ஆன் 13:28)
திருக்குர்ஆனை தினமும் ஓதுங்கள், மன நிம்மதியும், வாழ்வில் வெற்றியும் பெறுங்கள்.
மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் அருளப்பட்ட வேதம் அல்ல. உலக மக்கள் அனைவருக்குமான பொதுமறை ஆகும். இதுகுறித்து திருக்குர் ஆன் கூறும்போது: “இது உலக மக்கள் யாவருக்கும் ஒரு நல்லுபதேசமே அன்றி வேறில்லை” என்று பல்வேறு இடங்களில் குறிப்பிடுகிறது. (திருக்குர்ஆன் 12:104, 68:52, 81:27)
மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வழிகாட்டுதல்களும் குர்ஆனில் நிறைந்திருக்கின்றன. அற்புதமான இந்த நூலை தினசரி வாசித்தால் நமக்கு நல்வழி பிறக்கும். குர்ஆனில் அருளப்பட்ட முதல் வசனமே ‘இக்ர’ (நீ ஓது) என்பது தான்.
நபிகளார் நவின்றார்கள்: ‘எவர் தானும் குர் ஆனைக் கற்று, அதையே மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்கிறாரோ அவரே உங்களில் சிறந்தவர்’ (நூல்: புகாரி).
குர்ஆனை கற்றல், கற்றுக்கொடுத்தல் என்ற இந்த இரண்டு பண்பும் இன்று நம்மிடம் அவசியம் இருக்கவேண்டிய பண்பாகும். முதலில் நாம் குர்ஆனை ஓதிப்பழக வேண்டும், பிறகு அதற்கான அர்த்தங்களைப் படிக்கவேண்டும். பின் அதில் உள்ள சட்டதிட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். பின்னர் அதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். இதுதான் குர்ஆனுக்கு ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கட்டாயக் கடமையாகும்.
குர்ஆன் சாதாரணமான புத்தகம் அல்ல. விண்ணிலிருந்து மண்ணுக்கு இறையருளை கொண்டு வரும் ஒரு அற்புத புத்தகம். அதை நாம் அனுதினமும் அயராது ஓதிவரவேண்டும். அர்த்தம் தெரியாமல் சும்மா குர்ஆனைப்பார்த்து ஓதுவதற்கும் கூட நிறைய நன்மைகள் இருக்கின்றன. சொல்லப் போனால், குர்ஆனின் அரபு எழுத்துக்களை நம் கண்கொண்டு பார்ப்பதற்கும் கூட ஏராளமான நன்மைகள் இருக்கின்றன என்பது நபிகளாாின் நல்வாக்காகும்.
நபிகளார் நவின்றார்கள்: “மூன்று விஷயங்கள், அதை பார்ப்பதற்கும்கூட நன்மைகள் உண்டு. மக்காவிலுள்ள புனித கஅபாவைப் பார்ப்பது, தமது பெற்றோரின் முகத்தைப் பார்ப்பது, புனித குர்ஆனைப் பார்ப்பது”. (நூல்: மிஷ்காத்)
இம்மையில் நீங்கள் குர்ஆனை ஓதினால், அது மறுமை நாளில் சிபாரிசு செய்யும் என்றார்கள் நபிகள் நாயகம்.
குர்ஆன் கடினமான ஒரு மொழியை, நடையைக் கொண்ட ஒரு வேதமல்ல. ஓதி உணர்ந்துகொள்ளும் வகையில் அது எளிதானது என்று திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது.
‘இந்தக் குர்ஆனை நிச்சயமாக நாம் மிக எளிதாக்கி வைத்தோம். நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா?’ (திருக்குர்ஆன் 54:22).
ஒருவர் திக்கித்திக்கி, தடுமாறி ஓதினால் கூட அவருக்கு இரட்டைக்கூலி உண்டு என்றார்கள் நபியவர்கள். காரணம், திக்கித்திணறி, தடுமாறியாவது அவன் திருக்குர்ஆனை ஓத முயற்சிக்கிறானே அதற்காகத்தான் அவனுக்கு இருகூலி வழங்கப்படுகிறது.
குர்ஆனை ஓதுவது என்பது கல்வி மட்டுமல்ல, அதுவொரு கலை. அதை “தஜ்வீத் (ஓதும்) கலை” என்பார்கள். இருபத்தெட்டு அரபு எழுத்துக்களை மட்டும் நாம் கற்றுக் கொண்டால் போதாது. அவற்றை நாம் எப்படி, எந்த முறையில் உச்சரிக்க வேண்டும், எந்த இடத்தில் நிறுத்தி ஓதவேண்டும், எந்த இடத்தில் நிறுத்தாமல் ஓதவேண்டும், எந்த இடத்தில் வார்த்தைகளை சேர்த்து ஓதவேண்டும் என்றெல்லாம் பல்வேறு சட்ட திட்டங்களுண்டு. அவைகளை சரியாக பேணி கவனித்து ஓதுவதற்குத்தான் “ஓதும் கலை” என்று பெயர்.
தொடக்கத்தில் திக்கித்திணறி ஓதினாலும், பின்னர் அதை நன்றாகக்கற்றுக்கொண்டு உரிய முறையோடு ஓதுவது தான் சிறப்பு. இல்லை யெனில், நாம் ஓதியதற்கு எந்தப்புண்ணியமும் இல்லை.
அதனால் தான் அண்ணலார் இப்படியும் சொன்னார்கள்: ‘எத்தனையோ பேர் திருக்குர்ஆனை ஓதுகிறார்கள். ஆனால் அது அவர்களை சபித்துக் கொண்டிருக்கிறது’.
காரணம் இதுதான்: குர்ஆனை ஓதவேண்டிய முறைப்படி ஒருவர் ஓதாமல், தனக்கு தெரிந்தபடி மட்டும் ஓதினால் அவர் சில உச்சரிப்புகளை சரிவர உச்சரிக்காத போது அதன் அர்த்தங்களில் பொருட்பிறழ்வு ஏற்பட்டு விடுகிறது. அதனாலேயே அவன் பெரும்பாதிப்புக்கு ஆளாகிவிடு கிறான்.
எனவே, மற்ற நூல்களை படிப்பது போல் சர்வ சாதாரணமாக இந்த நூலை நாம் எடைபோட்டு விடக்கூடாது. நமது நிகழ்காலமும், எதிர்காலமும் இந்தக்குர்ஆனிற்குள் தான் மறைந்திருக்கிறது. நாம் தான் அவற்றை சரியாக அடையாளம் கண்டு மீட்டெடுக்க வேண்டும்.
திருக்குர்ஆனில் இப்படி ஒரு வசனம் இடித்துக்காட்டுகிறது:
‘உங்களைப்பற்றி நல்லுபதேசங்கள் உள்ள வேதத்தையே நிச்சயமாக உங்களுக்கு அருளியிருக்கின்றோம். இதைக்கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?’ (திருக்குர்ஆன் 21:10)
மனிதன் நிம்மதியைத்தேடி தினமும் அங்கும் இங்கும் ஓடியாடி அலைகின்றான். ஆனாலும் அவனுக்கு அது அவ்வளவு சீக்கிரம் கிடைத்து விடுவதில்லை. அதைப்பெறுவதற்கான ஒரேவழி இறை மறையான திருமறையை ஓதுவதில் தான் இருக்கிறது. இதை அறிந்து அவன் ஓதிவந்தால் அவன் தேடும் நிம்மதியும், மனஅமைதியும் அவனது உள்ளத்தையும், இல்லத்தையும் வந்தடையும்.
இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘மெய்யாகவே நம்பிக்கை கொண்டி ருப்பவர்கள் அவர்கள் தாம்; (அவர்கள் முன்) அல்லாஹ்வின் திருப்பெயர் துதி செய்யப்பட்டால், அவர்களுடைய உள்ளங்கள் நிம்மதியடைந்து விடுகின்றன. (ஏனென்றால்,) அல்லாஹ்வின் திருப்பெயரை துதி செய்வதனால் (உண்மை நம்பிக்கையாளர்களின்) உள்ளங்கள் நிச்சயமாக நிம்மதி அடையும் என்பதை (நபியே! நீங்கள்) அறிந்து கொள்ளுங்கள்’. (திருக்குர்ஆன் 13:28)
திருக்குர்ஆனை தினமும் ஓதுங்கள், மன நிம்மதியும், வாழ்வில் வெற்றியும் பெறுங்கள்.
மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
இறைவனை தியானிப்பது என்பது இறைவனை புகழ்வது, அவனை மேன்மைப்படுத்துவது, அவனை பரிசுத்தப்படுவது ஆகிய அனைத்தும் அடங்கும்.
இறைவனை தியானிப்பது இறைநம்பிக்கையின் ஒரு பகுதி. இறைவனை தியானிப்பது என்பது இறைவனை புகழ்வது, அவனை மேன்மைப்படுத்துவது, அவனை பரிசுத்தப்படுவது ஆகிய அனைத்தும் அடங்கும்.
இறைவனை தியானிக்கும் முறையில் பல்வேறு நிலைகள் அடங்கியுள்ளன. அவை: தொழுகையில் இறைவனை தியானிப்பது. உண்ணாமல், பருகாமல், இச்சைகளை அடக்கி நோன்பிருந்து இறைவனை தியானிப்பது. சாதாரண நிலையில் அன்றாடம் இறைவனை தியானிப்பது.
இறைதியானம் அனைத்திலும் வியாபித்துள்ளது. அன்றாட செயல்பாடுகளில் அது இரண்டறக் கலந்துள்ளது. இறை வழிபாடே வாழ்க்கை என்றிருக்குமானால் உலகமே முடங்கிவிடும். யாருமே வேலைக்குச் செல்லாமல் பள்ளிவாசல்களிலேயே ‘அல்லாஹ்... அல்லாஹ்’ என்று கூறி தஞ்சமடைய வேண்டியதாகிவிடும். இல்லறத்தை துறக்க நேரிடும். செய்யும் வேலையை இழக்க நேரிடும். பிறருக்கு உதவமுடியாமல் போய்விடும். குடும்பத்தை கவனிக்க வழி இல்லாமல் ஆகிவிடும்.
இத்தகைய நிலைகளை இஸ்லாம் எவ்வாறு மாற்றி அமைக்கிறது? என்பதை பார்ப்போம்.
எப்போதும் இறைவழிபாடு என்பது வாழ்க்கை அல்ல. வாழ்க்கையே ஒரு இறைவழிபாடு தான். அந்த வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் இறை சிந்தனை, இறைவனின் நினைவு வந்தால் போதும். எந்த ஒரு செயலையும் இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கும் போது அந்த செயல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டு, அது நன்மை வழங்கப்படும் வணக்கமாக ஆகிவிடுகிறது.
படிக்கும்போது, எழுதும்போது, ஓதும்போது, உண்ணும்போது, பருகும்போது, உடை மாற்றும்போது, ஆடை அணிகலன்கள் அணியும்போது, தலைவாரும்போது இறைவனின் திருப்பெயரால் தொடங்கினால் போதும். இவை அனைத்தும் இறை தியானமாக அங்கீகாரம் செய்யப்படுகிறது.
தூங்கும் போது, ‘இறைவனின் திருப்பெயரால் நான் தூங்குகிறேன் என்றும்; தூக்கத்திலிருந்து விழிக்கும் போது, ‘தூக்கம் எனும் சிறு மரணத்திற்கு பிறகு வாழ்வளித்த இறைவனுக்கே புகழனைத்தும்’ என்றும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
பிராணியை அறுக்கும்போது, வீட்டிலிருந்து வெளியேறும் போது, வீட்டினுள் நுழையும்போது ‘பிஸ்மில்லாஹ்’ என்று கூற வேண்டும்.
ஒவ்வொரு நற்செயலை தொடங்கும்போதும் ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரகீம்’ (அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய இறைவனின் திருப்பெயரால் தொடங்குகிறேன்) என்று கூறுவது நாவு சார்ந்த இறைநம்பிக்கை ஆகும்.
‘அல்லாஹ்’ என்பது அரபுச்சொல். இதற்கு ஒருமையோ, பன்மையோ கிடையாது. இது ஆண்பாலும் அல்ல, பெண்பாலும் அல்ல. அனைத்து ஆற்றல்களும், உயர் பண்புகளும் கொண்ட எல்லாம் வல்ல இறைவனைக் குறிக்கும் பெயர்ச்சொல் ஆகும்.
இஸ்லாத்தை ஏற்கும்முன்பு வாழ்ந்த அரபிகள் ‘அல்லாஹ்’ என்பது ஈடு இணையில்லாத இறைவனுக்குரிய பெயர் என்று கருதினர். அதனால்தான் அறியாமைக்காலத்தில் கூட தாங்கள் வழிபட்டு வந்த எந்த சிலைகளுக்கும் ‘அல்லாஹ்’ எனும் பெயரைச் சூட்டவில்லை.
அரபு மக்களிடையே ஒரு வழக்கம் இருந்தது. ஏதேனும் ஒரு செயலை ஆரம்பிக்கும் போது அவரவர் வழிபடும் சிலைகளின் பெயர்களைக்கூறி ஆரம்பம் செய்தனர். இவ்வாறு தொடங்கும் பணி வெற்றிபெறும் என்பது அவர்களின் மூடநம்பிக்கை. இதை ஒழிக்கும் முகமாகத்தான் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்ற திருக்குர்ஆனின் முதல் வசனமே ‘இறைவனின் பெயரால் ஓதுவீராக’ எனத்தொடங்கியது.
‘முஹம்மதே, படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக’. (திருக்குர்ஆன் 96:1)
திருக்குர்ஆனின் முதல் அத்தியாயத்தில் இடம்பெற்ற முதல் வசனமும் ‘பிஸ்மில்லா ஹிர் ரஹ்மானிர் ரகீம்’ என்பதும் இதன் தனிச்சிறப்பம்சம் ஆகும்.
நபி நூஹ் (அலை) அவர்கள் தமது கப்பலை கடலில் செலுத்தும் முன்பு கூட ‘பிஸ்மில்லாஹ்’ (இறைவனின் திருப்பெயரால் செலுத்துகின்றேன்) என்று கூறியதாக திருக்குர்ஆன் கூறுகிறது.
‘இதில் (கப்பலில்) ஏறிக்கொள்ளுங்கள். இறைவனின் பெயராலேயே இது ஓடுவதும், நிற்பதும் உள்ளது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’ என்று (நூஹ்) அவர் கூறினார். (திருக்குர்ஆன் 11:41)
நபி சுலைமான் (அலை) அவர்களும், ஸபா நாட்டு ராணிக்கு கடிதம் எழுதும் போது கூட ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரகீம்’ என்று தொடங்கிதான் கடிதம் எழுதினார்கள் என்பதும் திருக்குர்ஆனின் கூற்று.
‘அது (கடிதம்) சுலைமானிடமிருந்து வந்துள்ளது. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால். என்னை மிகைக்க நினைக்காதீர்கள். கட்டுப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள் (என்று அதில் உள்ளது)’. (திருக்குர்ஆன் 27:31)
‘பிஸ்மில்லாஹ்‘ என்ற சொல் எல்லா சமுதாயத்திற்கும் வழங்கப்பட்ட ஒரு அருட்கொடை. அது மட்டுமல்ல அதில் இடம் பெற்றுள்ள ‘அல்லாஹ்’ என்பது ‘இஸ்முல் ஆலம்’ (மகத்தான திருநாமம்) என்பதாகும். இதைக்கொண்டு இறைவனிடம் பிரார்த்தித்தால் அந்த பிரார்த்தனை ஏற்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நபி (ஸல்) அவர்களும், ரோம் நாட்டு மன்னன் ஹிர்கலுக்கு கடிதம் எழுதி அனுப்பும் போது, அந்த கடிதத்தை ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரகீம்’ என்பதைக் கொண்டுதான் ஆரம்பித்தார்கள்.
‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரகீம் என்பதைக் கொண்டு தொடங்கப்படாத ஒவ்வொரு காரியமும், அபிவிருத்தி இல்லாமல் இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: தாரகுத்னீ)
பிஸ்மில்லாஹ்வை கூறவேண்டிய இடத்தில் கூறவேண்டும், எழுத வேண்டிய இடத்தில் எழுதவேண்டும். எந்த இடமாக இருந்தாலும் அதை வைத்துத்தான் ஒவ்வொரு நற்செயலையும் தொடங்கிட வேண்டும்.
எழுதும்போது இந்த வாசகத்தை எழுதுவதற்கு பதிலாக சிலர், இந்த வாசகங்களின் அடையாள மதிப்பீட்டுத் தொகையான ‘786’ என்ற எண் குறியீடுகளை பயன்படுத்துகின்றனர். இதற்கு ‘பிஸ்மில்லாஹ்’ என்று கூறிய நன்மை கிடைக்காது. இதற்கு மார்க்க ரீதியிலும், தர்க்க ரீதியிலும் அடிப்படையான ஆதாரம் இல்லை.
மலம், சிறுநீர் கழிக்கச் செல்லும் முன்பு, காலைக் கடன்களை முடித்துவிட்டு திரும்பும்போது, இறைவனை நினைத்து, அவனுக்கு நன்றி செலுத்துவது, தும்மினால் ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று கூறுவது, கொட்டாவி வந்தால் ‘அஊது பில்லாஹி மினஷ் சைத்தான்’ என்று கூறுவது, ஆச்சரியமான செய்தியை கேள்விப்படும் போது ‘சுப்ஹானல்லாஹ்’ (இறைவன் பரிசுத்தமானவன்) என்று கூறுவது, மகிழ்ச்சியான செய்தியை கேட்கும் போது ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் இறைவனுக்கே) என்று கூறுவது, துக்கமான செய்தியை செவிமடுக்கும் போது ‘இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்’ (நாங்கள் இறைவனுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்) என்று கூறுவது போன்ற அனைத்துமே இறை தியானம் தான். இவ்வாறு இறைவனை தியானிப்பது மற்ற செயல்களை விடவும் சிறந்ததாக அமைகிறது.
‘நம்பிக்கை கொண்டோரே, இறைவனை அதிகமதிகம் நினையுங்கள். அவனைக் காலையிலும், மாலையிலும் துதியுங்கள்’. (திருக்குர்ஆன் 33:41,42)
இறைவனை நினைவு கூர்வதற்கு ஒளு (முகம், கை, கால்களை சுத்தம் செய்வது) தேவையில்லை. தொழும் திசையை நோக்க வேண்டியதில்லை. தொழுகையைப் போன்று குறிப்பிட்ட நேரம் இல்லை. நோன்பைப் போன்று குறிப்பிட்ட மாதம் இல்லை. ஹஜ்ஜைப் போன்று குறிப்பிட்ட வருடம் இல்லை. நின்றவாறு, அமர்ந்தவாறு, படுத்தவாறு இறைவனை தியானிக்கலாம்.
‘உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக, கவனமற்றவராக ஆகிவிடாதீர்’. (திருக்குர்ஆன் 7:205)
‘நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் இறைவனின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க, இறைவனின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன’. (திருக்குர்ஆன் 13:28)
‘லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவன் இறைவனைத் தவிர வேறு எவருமில்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்)’ என்று கூறுவது இறைநம்பிக்கையின் முதன்மையான அஸ்திவாரம் ஆகும். இந்த வார்த்தையை உள்ளத்தால் உளப்பூர்வமாக ஏற்று, நாவினால் மொழிய வேண்டும். இதை ஏற்காமல் மொழியாதவரை எவரும் இறை நம்பிக்கையாளராக முடியாது என்பதை இஸ்லாம் திட்டவட்டமாக கூறுகிறது.
‘இறை நம்பிக்கை என்பது எழுபதுக்கும் அதிகமான கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது லாயிலாஹா இல்லல்லாஹ் (முஹம்மதுர் ரசூலுல்லாஹ்) என்று கூறுவதாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
‘தியானத்தில் சிறந்தது ‘லாயிலாஹா இல்லல்லாஹ்’ என்று கூறுவது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: திர்மிதி)
‘ஒரு மனிதர் நபிகளாரிடம் வந்து ‘இறைவனின் தூதரே, இஸ்லாமிய ஷரீஅத் சட்டதிட்டங்கள் என் மீது அதிகமாகி விட்டது. எனவே நான் நிரந்தரமான தொடர்பில் இருக்கும்படியான ஒரு விஷயத்தை எனக்கு நீங்கள் அறிவியுங்கள்’ என வேண்டினார். அதற்கு நபியவர்கள் ‘உமது நாவு இறைதியானத்திலேயே தொடர்ந்து நிலைத்திருக்கட்டுமாக’ என பதில் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ்பின் புஸர் (ரலி), திர்மிதி)
இறைவனை, ‘சுப்ஹானல்லாஹ்’ (இறைவன் பரிசுத்தமானவன்), ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப்புகழும் இறைவனுக்கே), ‘அல்லாஹூ அக்பர்’ (இறைவன் மிகப்பெரியவன்), ‘லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்று நினைவு கூர்ந்து, அதிகம் அதிகம் உச்சரிக்க வேண்டும். இவ்வாறு கூறுவதின் வழியாக இறைநம்பிக்கையையும், சொர்க்கத்தின் இருப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
‘சொர்க்கத்தின் திறவுகோல் லாயிலாஹா இல்லல்லாஹ் (முஹம்மதுர் ரசூலுல்லாஹ்) என்று கூறுவது என நபி (ஸல்) அவர்கள் எனக்கு கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: முஆத்பின் ஜபல் (ரலி), நூல்: அஹ்மது).
இறைவனை தியானிக்கும் முறையில் பல்வேறு நிலைகள் அடங்கியுள்ளன. அவை: தொழுகையில் இறைவனை தியானிப்பது. உண்ணாமல், பருகாமல், இச்சைகளை அடக்கி நோன்பிருந்து இறைவனை தியானிப்பது. சாதாரண நிலையில் அன்றாடம் இறைவனை தியானிப்பது.
இறைதியானம் அனைத்திலும் வியாபித்துள்ளது. அன்றாட செயல்பாடுகளில் அது இரண்டறக் கலந்துள்ளது. இறை வழிபாடே வாழ்க்கை என்றிருக்குமானால் உலகமே முடங்கிவிடும். யாருமே வேலைக்குச் செல்லாமல் பள்ளிவாசல்களிலேயே ‘அல்லாஹ்... அல்லாஹ்’ என்று கூறி தஞ்சமடைய வேண்டியதாகிவிடும். இல்லறத்தை துறக்க நேரிடும். செய்யும் வேலையை இழக்க நேரிடும். பிறருக்கு உதவமுடியாமல் போய்விடும். குடும்பத்தை கவனிக்க வழி இல்லாமல் ஆகிவிடும்.
இத்தகைய நிலைகளை இஸ்லாம் எவ்வாறு மாற்றி அமைக்கிறது? என்பதை பார்ப்போம்.
எப்போதும் இறைவழிபாடு என்பது வாழ்க்கை அல்ல. வாழ்க்கையே ஒரு இறைவழிபாடு தான். அந்த வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் இறை சிந்தனை, இறைவனின் நினைவு வந்தால் போதும். எந்த ஒரு செயலையும் இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கும் போது அந்த செயல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டு, அது நன்மை வழங்கப்படும் வணக்கமாக ஆகிவிடுகிறது.
படிக்கும்போது, எழுதும்போது, ஓதும்போது, உண்ணும்போது, பருகும்போது, உடை மாற்றும்போது, ஆடை அணிகலன்கள் அணியும்போது, தலைவாரும்போது இறைவனின் திருப்பெயரால் தொடங்கினால் போதும். இவை அனைத்தும் இறை தியானமாக அங்கீகாரம் செய்யப்படுகிறது.
தூங்கும் போது, ‘இறைவனின் திருப்பெயரால் நான் தூங்குகிறேன் என்றும்; தூக்கத்திலிருந்து விழிக்கும் போது, ‘தூக்கம் எனும் சிறு மரணத்திற்கு பிறகு வாழ்வளித்த இறைவனுக்கே புகழனைத்தும்’ என்றும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
பிராணியை அறுக்கும்போது, வீட்டிலிருந்து வெளியேறும் போது, வீட்டினுள் நுழையும்போது ‘பிஸ்மில்லாஹ்’ என்று கூற வேண்டும்.
ஒவ்வொரு நற்செயலை தொடங்கும்போதும் ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரகீம்’ (அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய இறைவனின் திருப்பெயரால் தொடங்குகிறேன்) என்று கூறுவது நாவு சார்ந்த இறைநம்பிக்கை ஆகும்.
‘அல்லாஹ்’ என்பது அரபுச்சொல். இதற்கு ஒருமையோ, பன்மையோ கிடையாது. இது ஆண்பாலும் அல்ல, பெண்பாலும் அல்ல. அனைத்து ஆற்றல்களும், உயர் பண்புகளும் கொண்ட எல்லாம் வல்ல இறைவனைக் குறிக்கும் பெயர்ச்சொல் ஆகும்.
இஸ்லாத்தை ஏற்கும்முன்பு வாழ்ந்த அரபிகள் ‘அல்லாஹ்’ என்பது ஈடு இணையில்லாத இறைவனுக்குரிய பெயர் என்று கருதினர். அதனால்தான் அறியாமைக்காலத்தில் கூட தாங்கள் வழிபட்டு வந்த எந்த சிலைகளுக்கும் ‘அல்லாஹ்’ எனும் பெயரைச் சூட்டவில்லை.
அரபு மக்களிடையே ஒரு வழக்கம் இருந்தது. ஏதேனும் ஒரு செயலை ஆரம்பிக்கும் போது அவரவர் வழிபடும் சிலைகளின் பெயர்களைக்கூறி ஆரம்பம் செய்தனர். இவ்வாறு தொடங்கும் பணி வெற்றிபெறும் என்பது அவர்களின் மூடநம்பிக்கை. இதை ஒழிக்கும் முகமாகத்தான் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்ற திருக்குர்ஆனின் முதல் வசனமே ‘இறைவனின் பெயரால் ஓதுவீராக’ எனத்தொடங்கியது.
‘முஹம்மதே, படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக’. (திருக்குர்ஆன் 96:1)
திருக்குர்ஆனின் முதல் அத்தியாயத்தில் இடம்பெற்ற முதல் வசனமும் ‘பிஸ்மில்லா ஹிர் ரஹ்மானிர் ரகீம்’ என்பதும் இதன் தனிச்சிறப்பம்சம் ஆகும்.
நபி நூஹ் (அலை) அவர்கள் தமது கப்பலை கடலில் செலுத்தும் முன்பு கூட ‘பிஸ்மில்லாஹ்’ (இறைவனின் திருப்பெயரால் செலுத்துகின்றேன்) என்று கூறியதாக திருக்குர்ஆன் கூறுகிறது.
‘இதில் (கப்பலில்) ஏறிக்கொள்ளுங்கள். இறைவனின் பெயராலேயே இது ஓடுவதும், நிற்பதும் உள்ளது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’ என்று (நூஹ்) அவர் கூறினார். (திருக்குர்ஆன் 11:41)
நபி சுலைமான் (அலை) அவர்களும், ஸபா நாட்டு ராணிக்கு கடிதம் எழுதும் போது கூட ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரகீம்’ என்று தொடங்கிதான் கடிதம் எழுதினார்கள் என்பதும் திருக்குர்ஆனின் கூற்று.
‘அது (கடிதம்) சுலைமானிடமிருந்து வந்துள்ளது. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால். என்னை மிகைக்க நினைக்காதீர்கள். கட்டுப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள் (என்று அதில் உள்ளது)’. (திருக்குர்ஆன் 27:31)
‘பிஸ்மில்லாஹ்‘ என்ற சொல் எல்லா சமுதாயத்திற்கும் வழங்கப்பட்ட ஒரு அருட்கொடை. அது மட்டுமல்ல அதில் இடம் பெற்றுள்ள ‘அல்லாஹ்’ என்பது ‘இஸ்முல் ஆலம்’ (மகத்தான திருநாமம்) என்பதாகும். இதைக்கொண்டு இறைவனிடம் பிரார்த்தித்தால் அந்த பிரார்த்தனை ஏற்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நபி (ஸல்) அவர்களும், ரோம் நாட்டு மன்னன் ஹிர்கலுக்கு கடிதம் எழுதி அனுப்பும் போது, அந்த கடிதத்தை ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரகீம்’ என்பதைக் கொண்டுதான் ஆரம்பித்தார்கள்.
‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரகீம் என்பதைக் கொண்டு தொடங்கப்படாத ஒவ்வொரு காரியமும், அபிவிருத்தி இல்லாமல் இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: தாரகுத்னீ)
பிஸ்மில்லாஹ்வை கூறவேண்டிய இடத்தில் கூறவேண்டும், எழுத வேண்டிய இடத்தில் எழுதவேண்டும். எந்த இடமாக இருந்தாலும் அதை வைத்துத்தான் ஒவ்வொரு நற்செயலையும் தொடங்கிட வேண்டும்.
எழுதும்போது இந்த வாசகத்தை எழுதுவதற்கு பதிலாக சிலர், இந்த வாசகங்களின் அடையாள மதிப்பீட்டுத் தொகையான ‘786’ என்ற எண் குறியீடுகளை பயன்படுத்துகின்றனர். இதற்கு ‘பிஸ்மில்லாஹ்’ என்று கூறிய நன்மை கிடைக்காது. இதற்கு மார்க்க ரீதியிலும், தர்க்க ரீதியிலும் அடிப்படையான ஆதாரம் இல்லை.
மலம், சிறுநீர் கழிக்கச் செல்லும் முன்பு, காலைக் கடன்களை முடித்துவிட்டு திரும்பும்போது, இறைவனை நினைத்து, அவனுக்கு நன்றி செலுத்துவது, தும்மினால் ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று கூறுவது, கொட்டாவி வந்தால் ‘அஊது பில்லாஹி மினஷ் சைத்தான்’ என்று கூறுவது, ஆச்சரியமான செய்தியை கேள்விப்படும் போது ‘சுப்ஹானல்லாஹ்’ (இறைவன் பரிசுத்தமானவன்) என்று கூறுவது, மகிழ்ச்சியான செய்தியை கேட்கும் போது ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் இறைவனுக்கே) என்று கூறுவது, துக்கமான செய்தியை செவிமடுக்கும் போது ‘இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்’ (நாங்கள் இறைவனுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்) என்று கூறுவது போன்ற அனைத்துமே இறை தியானம் தான். இவ்வாறு இறைவனை தியானிப்பது மற்ற செயல்களை விடவும் சிறந்ததாக அமைகிறது.
‘நம்பிக்கை கொண்டோரே, இறைவனை அதிகமதிகம் நினையுங்கள். அவனைக் காலையிலும், மாலையிலும் துதியுங்கள்’. (திருக்குர்ஆன் 33:41,42)
இறைவனை நினைவு கூர்வதற்கு ஒளு (முகம், கை, கால்களை சுத்தம் செய்வது) தேவையில்லை. தொழும் திசையை நோக்க வேண்டியதில்லை. தொழுகையைப் போன்று குறிப்பிட்ட நேரம் இல்லை. நோன்பைப் போன்று குறிப்பிட்ட மாதம் இல்லை. ஹஜ்ஜைப் போன்று குறிப்பிட்ட வருடம் இல்லை. நின்றவாறு, அமர்ந்தவாறு, படுத்தவாறு இறைவனை தியானிக்கலாம்.
‘உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக, கவனமற்றவராக ஆகிவிடாதீர்’. (திருக்குர்ஆன் 7:205)
‘நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் இறைவனின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க, இறைவனின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன’. (திருக்குர்ஆன் 13:28)
‘லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவன் இறைவனைத் தவிர வேறு எவருமில்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்)’ என்று கூறுவது இறைநம்பிக்கையின் முதன்மையான அஸ்திவாரம் ஆகும். இந்த வார்த்தையை உள்ளத்தால் உளப்பூர்வமாக ஏற்று, நாவினால் மொழிய வேண்டும். இதை ஏற்காமல் மொழியாதவரை எவரும் இறை நம்பிக்கையாளராக முடியாது என்பதை இஸ்லாம் திட்டவட்டமாக கூறுகிறது.
‘இறை நம்பிக்கை என்பது எழுபதுக்கும் அதிகமான கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது லாயிலாஹா இல்லல்லாஹ் (முஹம்மதுர் ரசூலுல்லாஹ்) என்று கூறுவதாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
‘தியானத்தில் சிறந்தது ‘லாயிலாஹா இல்லல்லாஹ்’ என்று கூறுவது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: திர்மிதி)
‘ஒரு மனிதர் நபிகளாரிடம் வந்து ‘இறைவனின் தூதரே, இஸ்லாமிய ஷரீஅத் சட்டதிட்டங்கள் என் மீது அதிகமாகி விட்டது. எனவே நான் நிரந்தரமான தொடர்பில் இருக்கும்படியான ஒரு விஷயத்தை எனக்கு நீங்கள் அறிவியுங்கள்’ என வேண்டினார். அதற்கு நபியவர்கள் ‘உமது நாவு இறைதியானத்திலேயே தொடர்ந்து நிலைத்திருக்கட்டுமாக’ என பதில் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ்பின் புஸர் (ரலி), திர்மிதி)
இறைவனை, ‘சுப்ஹானல்லாஹ்’ (இறைவன் பரிசுத்தமானவன்), ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப்புகழும் இறைவனுக்கே), ‘அல்லாஹூ அக்பர்’ (இறைவன் மிகப்பெரியவன்), ‘லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்று நினைவு கூர்ந்து, அதிகம் அதிகம் உச்சரிக்க வேண்டும். இவ்வாறு கூறுவதின் வழியாக இறைநம்பிக்கையையும், சொர்க்கத்தின் இருப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
‘சொர்க்கத்தின் திறவுகோல் லாயிலாஹா இல்லல்லாஹ் (முஹம்மதுர் ரசூலுல்லாஹ்) என்று கூறுவது என நபி (ஸல்) அவர்கள் எனக்கு கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: முஆத்பின் ஜபல் (ரலி), நூல்: அஹ்மது).
ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா தொடங்கியது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக ஜூலை 26-ந் தேதி மாலை சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு ஜூலை 27-ந்தேதி அதிகாலை தர்காவிற்கு சந்தனக்கூடு வந்தடைந்தயும்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவில் 845-ம் ஆண்டு உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா நேற்று மவுலீது (புகழ்மாலை) ஓதப்பட்டு தொடங்கியது
ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்காவில் ஆண்டு தோறும் சந்தனக்கூடு திருவிழா மதநல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவாக ஏர்வாடி தர்கா பொது மகாசபை உறுப்பினர்கள் (ஹக்தார்) நடத்தி வருகின்றனர்.
இந்த விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்து கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று மவுலீது டன் (புகழ்மாலை) தொடங்கியது. ஏராளமான தர்கா ஹக்தார்கள் மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த தர்கா மண்டபத்தில் அமர்ந்து மவுலீது ஓதினர்.
மாவட்ட அரசு காஜி சலாஹூதீன் ஆலிம் உலக மக்களின் அமைதிக்காகவும், ஒற்றுமைக்காகவும், மழை வேண்டியும் சிறப்பு துஆ (பிராத்தனை) செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து நேர்ச்சி வழங் கப்பட்டது. ஜூலை,14-ந்தேதி மாலை ஏர்வாடி குடியிருப்பில் உள்ள முஜாபிர் நல்ல இபுரா கிம் லெப்வை மாகா லில் இருந்து மாலை 3 மணிக்கு கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிக ளின் வழியாக தர்கா வந்தடைந்து மாலை 6.30 மணியளவில் பக்தர்களின் நாரே தக்பீர் முழக்கத்துடன் கொடி ஏற்றப்படும்.
விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக ஜூலை 26-ந் தேதி மாலை சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு ஜூலை 27-ந்தேதி அதிகாலை தர்காவிற்கு சந்தனக்கூடு வந்தடைந்தயும். பின்னர் பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும்.
ஆகஸ்டு 2-ந்தேதி கொடியிறக்கத்துடன், பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தர்கா பொது மகாசபை ஹக் தார்கள் செய்து வருகின்றனர்.
ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்காவில் ஆண்டு தோறும் சந்தனக்கூடு திருவிழா மதநல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவாக ஏர்வாடி தர்கா பொது மகாசபை உறுப்பினர்கள் (ஹக்தார்) நடத்தி வருகின்றனர்.
இந்த விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்து கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று மவுலீது டன் (புகழ்மாலை) தொடங்கியது. ஏராளமான தர்கா ஹக்தார்கள் மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த தர்கா மண்டபத்தில் அமர்ந்து மவுலீது ஓதினர்.
மாவட்ட அரசு காஜி சலாஹூதீன் ஆலிம் உலக மக்களின் அமைதிக்காகவும், ஒற்றுமைக்காகவும், மழை வேண்டியும் சிறப்பு துஆ (பிராத்தனை) செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து நேர்ச்சி வழங் கப்பட்டது. ஜூலை,14-ந்தேதி மாலை ஏர்வாடி குடியிருப்பில் உள்ள முஜாபிர் நல்ல இபுரா கிம் லெப்வை மாகா லில் இருந்து மாலை 3 மணிக்கு கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிக ளின் வழியாக தர்கா வந்தடைந்து மாலை 6.30 மணியளவில் பக்தர்களின் நாரே தக்பீர் முழக்கத்துடன் கொடி ஏற்றப்படும்.
விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக ஜூலை 26-ந் தேதி மாலை சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு ஜூலை 27-ந்தேதி அதிகாலை தர்காவிற்கு சந்தனக்கூடு வந்தடைந்தயும். பின்னர் பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும்.
ஆகஸ்டு 2-ந்தேதி கொடியிறக்கத்துடன், பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தர்கா பொது மகாசபை ஹக் தார்கள் செய்து வருகின்றனர்.






