search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஏர்வாடி தர்கா
    X
    ஏர்வாடி தர்கா

    ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா தொடங்கியது

    ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா தொடங்கியது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக ஜூலை 26-ந் தேதி மாலை சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு ஜூலை 27-ந்தேதி அதிகாலை தர்காவிற்கு சந்தனக்கூடு வந்தடைந்தயும்.
    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ‌ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவில் 845-ம் ஆண்டு உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா நேற்று மவுலீது (புகழ்மாலை) ஓதப்பட்டு தொடங்கியது

    ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ‌ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்காவில் ஆண்டு தோறும் சந்தனக்கூடு திருவிழா மதநல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவாக ஏர்வாடி தர்கா பொது மகாசபை உறுப்பினர்கள் (ஹக்தார்) நடத்தி வருகின்றனர்.

    இந்த விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்து கலந்து கொள்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று மவுலீது டன் (புகழ்மாலை) தொடங்கியது. ஏராளமான தர்கா ஹக்தார்கள் மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த தர்கா மண்டபத்தில் அமர்ந்து மவுலீது ஓதினர்.

    மாவட்ட அரசு காஜி சலாஹூதீன் ஆலிம் உலக மக்களின் அமைதிக்காகவும், ஒற்றுமைக்காகவும், மழை வேண்டியும் சிறப்பு துஆ (பிராத்தனை) செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து நேர்ச்சி வழங் கப்பட்டது. ஜூலை,14-ந்தேதி மாலை ஏர்வாடி குடியிருப்பில் உள்ள முஜாபிர் நல்ல இபுரா கிம் லெப்வை மாகா லில் இருந்து மாலை 3 மணிக்கு கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிக ளின் வழியாக தர்கா வந்தடைந்து மாலை 6.30 மணியளவில் பக்தர்களின் நாரே தக்பீர் முழக்கத்துடன் கொடி ஏற்றப்படும்.

    விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக ஜூலை 26-ந் தேதி மாலை சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு ஜூலை 27-ந்தேதி அதிகாலை தர்காவிற்கு சந்தனக்கூடு வந்தடைந்தயும். பின்னர் பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும்.

    ஆகஸ்டு 2-ந்தேதி கொடியிறக்கத்துடன், பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தர்கா பொது மகாசபை ஹக் தார்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×