என் மலர்
கிறித்தவம்
இயேசு கிறிஸ்து உலகத்தில் இருந்த நாட்களில் அவரைப்பற்றி கேள்விப்பட்ட பலர் அவரிடத்திலே வந்து அநேக அற்புதங்களையும், நன்மைகளையும் பெற்றுச்சென்றனர்.
இயேசு கிறிஸ்து உலகத்தில் இருந்த நாட்களில் அவரைப்பற்றி கேள்விப்பட்ட பலர் அவரிடத்திலே வந்து அநேக அற்புதங்களையும், நன்மைகளையும் பெற்றுச்சென்றனர். ஆனால் அவர் அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்து தன்னை மேசியாவாக வெளிப்படுத்துவதற்கு முன்னரே அவரை பற்றிய சரியான வெளிப்படுத்தலோடு அவரை அடையாளம் கண்டுகொண்டவர் யோவான் ஸ்நானகனே. இயேசுவுக்கு வழியை ஆயத்தம் பண்ண வந்தவரே இந்த யோவான் ஸ்நானகன்.
இயேசுவை ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தும்போது நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்றும், தூற்றுக்கூடை அவரது கையில் இருக்கும் என்றும், கோடரியானது மரத்தின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது என்றும், மேசியாவாகிய இயேசு மனுக்குலத்தை நியாயம் விசாரிக்க வரப்போகிறார் என்றும் எச்சரிப்பின் செய்தியை அறிவித்து வந்த யோவான் அவரைக் கண்டபோது நியாயம் தீர்க்க அல்ல, நியாயத்தீர்ப்பிலிருந்து விடுவிக்க பலியாக வந்த தேவ ஆட்டுக்குட்டி என்று காண்கிறார்.
யோவான் ஸ்நானகன் அந்த தெளிவான வெளிப்படுத்துதலை பெற்றவராக அவரைக் குறித்து சாட்சி கொடுக்கும்போது அவர் தன்னிடத்தில் வந்தபோது “இதோ, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி“ (யோவான்:1:29).யோவான் ஸ்நானகன் இயேசுவை உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்க்கிறவராகவும், தேவ ஆட்டுக்குட்டியாகவுமே கண்டு அதையே உலகத்தில் சாட்சியாகவும் அறிவித்தார். பழைய ஏற்பாட்டின் பலி முறைகளின்படி பாவம் செய்த மனிதன் தன்னுடைய பாவங்களுக்காக பாவநிவாரண பலியாக பழுதற்ற ஆட்டுக்குட்டியை தெரிந்துகொண்டு அதை தேவ சமூகத்தில் பலியிட்டு அந்த பலியின்மூலம் பாவத்திலிருந்து விடுதலை பெற்றவனாகிறான். அது போல மனிதனின் பாவங்களையெல்லாம் சுமந்து தீர்க்கும்படியாக தேவ ஆட்டுக்குட்டியாக வெளிப்பட்டவர் இயேசு கிறிஸ்து.
இயேசு என்னும் பரிசுத்த தேவ குமாரன் பாவம் செய்த மனித குலத்தை அழிக்க வராமல் பாவங்களை சுமந்து தீர்த்து மனிதகுலத்திற்கான விடுதலையைக் கொடுக்கவே வந்தார். யோவான் ஸ்நானகன் கொடுத்த இந்த சாட்சியானது பரிசுத்த வேதாகமத்தின் மையப்பொருளாகவும், அவரைக் குறித்த நற்சாட்சியின் எல்லையாகவும் இருக்கிறது. இயேசு உலக மக்களின் பாவங்களை சுமந்து தீர்க்கிறவர். வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றவர் எல்லோருக்கும் இளைப்பாறுதலைத் தரும்படியாக எல்லோருடைய பாவங்களையும் சுமந்து தீர்க்கவே வந்தார்.
பாவம் செய்த யாவருக்கும் விடுதலை கொடுக்க பலிகடாவாக தன்னையே ஒப்புக்கொடுத்தவர் இயேசு. இயேசு எனக்காகவும் பலியாகி என் பாவங்களையும் சுமந்து தீர்த்தார் என்று விசுவாசத்தோடு அவரை நோக்கிப்பார்க்கும் யாவருக்கும் விடுதலையைக் கொடுக்க அவர் போதுமானவர். இயேசுவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் இந்நாட்களில் அவரை நோக்கிப்பார்ப்போம். தேவன் தாமே நமக்கு இளைப்பாறுதலையும், விடுதலையையும் கட்டளையிடுவாராக. ஆமென்.
போதகர்.டேவிட், சிட்டி ஏ.ஜி. சபை, திருப்பூர்.
இயேசுவை ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தும்போது நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்றும், தூற்றுக்கூடை அவரது கையில் இருக்கும் என்றும், கோடரியானது மரத்தின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது என்றும், மேசியாவாகிய இயேசு மனுக்குலத்தை நியாயம் விசாரிக்க வரப்போகிறார் என்றும் எச்சரிப்பின் செய்தியை அறிவித்து வந்த யோவான் அவரைக் கண்டபோது நியாயம் தீர்க்க அல்ல, நியாயத்தீர்ப்பிலிருந்து விடுவிக்க பலியாக வந்த தேவ ஆட்டுக்குட்டி என்று காண்கிறார்.
யோவான் ஸ்நானகன் அந்த தெளிவான வெளிப்படுத்துதலை பெற்றவராக அவரைக் குறித்து சாட்சி கொடுக்கும்போது அவர் தன்னிடத்தில் வந்தபோது “இதோ, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி“ (யோவான்:1:29).யோவான் ஸ்நானகன் இயேசுவை உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்க்கிறவராகவும், தேவ ஆட்டுக்குட்டியாகவுமே கண்டு அதையே உலகத்தில் சாட்சியாகவும் அறிவித்தார். பழைய ஏற்பாட்டின் பலி முறைகளின்படி பாவம் செய்த மனிதன் தன்னுடைய பாவங்களுக்காக பாவநிவாரண பலியாக பழுதற்ற ஆட்டுக்குட்டியை தெரிந்துகொண்டு அதை தேவ சமூகத்தில் பலியிட்டு அந்த பலியின்மூலம் பாவத்திலிருந்து விடுதலை பெற்றவனாகிறான். அது போல மனிதனின் பாவங்களையெல்லாம் சுமந்து தீர்க்கும்படியாக தேவ ஆட்டுக்குட்டியாக வெளிப்பட்டவர் இயேசு கிறிஸ்து.
இயேசு என்னும் பரிசுத்த தேவ குமாரன் பாவம் செய்த மனித குலத்தை அழிக்க வராமல் பாவங்களை சுமந்து தீர்த்து மனிதகுலத்திற்கான விடுதலையைக் கொடுக்கவே வந்தார். யோவான் ஸ்நானகன் கொடுத்த இந்த சாட்சியானது பரிசுத்த வேதாகமத்தின் மையப்பொருளாகவும், அவரைக் குறித்த நற்சாட்சியின் எல்லையாகவும் இருக்கிறது. இயேசு உலக மக்களின் பாவங்களை சுமந்து தீர்க்கிறவர். வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றவர் எல்லோருக்கும் இளைப்பாறுதலைத் தரும்படியாக எல்லோருடைய பாவங்களையும் சுமந்து தீர்க்கவே வந்தார்.
பாவம் செய்த யாவருக்கும் விடுதலை கொடுக்க பலிகடாவாக தன்னையே ஒப்புக்கொடுத்தவர் இயேசு. இயேசு எனக்காகவும் பலியாகி என் பாவங்களையும் சுமந்து தீர்த்தார் என்று விசுவாசத்தோடு அவரை நோக்கிப்பார்க்கும் யாவருக்கும் விடுதலையைக் கொடுக்க அவர் போதுமானவர். இயேசுவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் இந்நாட்களில் அவரை நோக்கிப்பார்ப்போம். தேவன் தாமே நமக்கு இளைப்பாறுதலையும், விடுதலையையும் கட்டளையிடுவாராக. ஆமென்.
போதகர்.டேவிட், சிட்டி ஏ.ஜி. சபை, திருப்பூர்.
சிலுவையில் அவர் நமக்காக பெற்றுத் தந்த இந்த பாவமன்னிப்பு என்கிற இந்த விலையேறப் பெற்ற விடுதலையை நாம் எண்ணி பார்ப்போம்.
கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை தியானித்து வரும் இந்த லெந்து நாட்களில் அவருடைய சிலுவை மரணத்தின் மூலம் மனுக்குலத்துக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம் மன்னிப்பு.
தேவன் படைத்த உலகத்தில் தோற்றுவிக்கப்பட்ட மனிதகுலமான ஆதாமும், ஏவாளும் பாவம் செய்ததின் விளைவாக இந்த பூமி பாவப்பட்ட பூமியாக மாறிப்போனது. ஜனங்கள் பாவத்திலிருந்து விடுதலை பெற முடியாமல் புறாக்களையும், ஆடு, மாடுகளையும் பலி கொடுத்தார்கள். மோசேயின் நியாயப்பிரமான கட்டளைப்படி பாவம் செய்கிறவன் கொலை செய்யப்பட வேண்டும் என்று கட்டளையாயிருந்தது. அதனால் பாவத்தில் இருந்து விடுபட முடியாமல் மக்கள் மரித்துப்போய் கொண்டிருந்தனர்.
அதை கண்ணோக்கிப் பார்த்த தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை இந்த பூமிக்கு அனுப்பினார். அவர் வாழ்வதற்காக அல்ல. நம் எல்லாருடைய பாவங்களையும் ஏற்றுக்கொள்ளும்படியாக அவர் சிலுவை மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கையில் “போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய (இயேசுவின்) விலாவில் குத்தினான். உடனே ரத்தமும், தண்ணீரும் புறப்பட்டது. (யோவான் 19:34). ரத்தம் என்பது பாவமன்னிப்பை குறிக்கிறது. தண்ணீர் என்பது தேவ அன்பை குறிக்கிறது. இயேசுவின் ரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. (எபேசியர் 1:7). இது தேவன் நம்மீது வைத்த அன்பை விளங்கச் செய்கிறது.
லூக்கா 7-ம் அதிகாரத்தில் பாவியான ஒரு பெண்ணை கல்லெறிந்து கொலை செய்ய வேண்டுமென ஒரு மிகப் பெரிய கூட்டமே காத்திருந்தது. ஆனால் இயேசுவோ அவள் பாவத்தை பாராதபடி அவள் பாவத்தில் இருந்து மனம் திரும்புகிறாள் என்பதை அறிந்து, உங்களில் பாவமில்லாதவன் முதலாவது கல்லெறியுங்கள் என்று சொன்ன போது அங்கு ஒருவருமில்லை. அவர்கள் பாவத்திலிருந்து மனந்திரும்பாமல் போனார்கள். ஆனால் இந்த பெண்ணோ பாவத்திலிருந்து விடுதலை பெற்றாள். (லூக்கா27:42,43)-ல் இயேசுவோடு கூட சிலுவையில் அறையும்படி 2 குற்றவாளிகளில் ஒருவன் கடைசி மணி வேளையில் தன்னுடைய பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்ட வேளையில் இயேசு கிறிஸ்து அவனைப் பார்த்து இன்றைக்கு என்னோடு கூட பரதீசிலிருப்பாய் என்று சொல்லுகிறேன் என்று சொல்லி பரதீசுக்கு அழைத்து சென்றவர் நம் இயேசு கிறிஸ்து.
சிலுவையில் அவர் நமக்காக பெற்றுத் தந்த இந்த பாவமன்னிப்பு என்கிற இந்த விலையேறப் பெற்ற விடுதலையை நாம் எண்ணி பார்ப்போம். இந்த தியான நாளிலே அவர் பாடு மரணங்களை நினைவு கூர்ந்து அவருக்கு சாட்சியாய் வாழ்வோம். இந்த பாவமன்னிப்பு என்கிற பூவாகிய நாம் தேவ தோட்டத்திலே என்றென்றும் மலர்ந்திருப்போம்.
பாஸ்டர். ரவிக்குமார்.
ஏ.ஜி. சபை, செட்டிபாளையம், திருப்பூர்.
தேவன் படைத்த உலகத்தில் தோற்றுவிக்கப்பட்ட மனிதகுலமான ஆதாமும், ஏவாளும் பாவம் செய்ததின் விளைவாக இந்த பூமி பாவப்பட்ட பூமியாக மாறிப்போனது. ஜனங்கள் பாவத்திலிருந்து விடுதலை பெற முடியாமல் புறாக்களையும், ஆடு, மாடுகளையும் பலி கொடுத்தார்கள். மோசேயின் நியாயப்பிரமான கட்டளைப்படி பாவம் செய்கிறவன் கொலை செய்யப்பட வேண்டும் என்று கட்டளையாயிருந்தது. அதனால் பாவத்தில் இருந்து விடுபட முடியாமல் மக்கள் மரித்துப்போய் கொண்டிருந்தனர்.
அதை கண்ணோக்கிப் பார்த்த தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை இந்த பூமிக்கு அனுப்பினார். அவர் வாழ்வதற்காக அல்ல. நம் எல்லாருடைய பாவங்களையும் ஏற்றுக்கொள்ளும்படியாக அவர் சிலுவை மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கையில் “போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய (இயேசுவின்) விலாவில் குத்தினான். உடனே ரத்தமும், தண்ணீரும் புறப்பட்டது. (யோவான் 19:34). ரத்தம் என்பது பாவமன்னிப்பை குறிக்கிறது. தண்ணீர் என்பது தேவ அன்பை குறிக்கிறது. இயேசுவின் ரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. (எபேசியர் 1:7). இது தேவன் நம்மீது வைத்த அன்பை விளங்கச் செய்கிறது.
லூக்கா 7-ம் அதிகாரத்தில் பாவியான ஒரு பெண்ணை கல்லெறிந்து கொலை செய்ய வேண்டுமென ஒரு மிகப் பெரிய கூட்டமே காத்திருந்தது. ஆனால் இயேசுவோ அவள் பாவத்தை பாராதபடி அவள் பாவத்தில் இருந்து மனம் திரும்புகிறாள் என்பதை அறிந்து, உங்களில் பாவமில்லாதவன் முதலாவது கல்லெறியுங்கள் என்று சொன்ன போது அங்கு ஒருவருமில்லை. அவர்கள் பாவத்திலிருந்து மனந்திரும்பாமல் போனார்கள். ஆனால் இந்த பெண்ணோ பாவத்திலிருந்து விடுதலை பெற்றாள். (லூக்கா27:42,43)-ல் இயேசுவோடு கூட சிலுவையில் அறையும்படி 2 குற்றவாளிகளில் ஒருவன் கடைசி மணி வேளையில் தன்னுடைய பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்ட வேளையில் இயேசு கிறிஸ்து அவனைப் பார்த்து இன்றைக்கு என்னோடு கூட பரதீசிலிருப்பாய் என்று சொல்லுகிறேன் என்று சொல்லி பரதீசுக்கு அழைத்து சென்றவர் நம் இயேசு கிறிஸ்து.
சிலுவையில் அவர் நமக்காக பெற்றுத் தந்த இந்த பாவமன்னிப்பு என்கிற இந்த விலையேறப் பெற்ற விடுதலையை நாம் எண்ணி பார்ப்போம். இந்த தியான நாளிலே அவர் பாடு மரணங்களை நினைவு கூர்ந்து அவருக்கு சாட்சியாய் வாழ்வோம். இந்த பாவமன்னிப்பு என்கிற பூவாகிய நாம் தேவ தோட்டத்திலே என்றென்றும் மலர்ந்திருப்போம்.
பாஸ்டர். ரவிக்குமார்.
ஏ.ஜி. சபை, செட்டிபாளையம், திருப்பூர்.
இயேசு கிறிஸ்து என்று சொன்னவுடன் நம் நினைவுக்கு வருவது முதலாவது அவர் மனுக்குலத்தின் மேல் வைத்த தேவ அன்பு. இரண்டாவது அவர் சுமந்த சிலுவை.
இயேசு கிறிஸ்து என்று சொன்னவுடன் நம் நினைவுக்கு வருவது முதலாவது அவர் மனுக்குலத்தின் மேல் வைத்த தேவ அன்பு. இரண்டாவது அவர் சுமந்த சிலுவை. கொடுமையான கொலை கருவியாக இருந்த சிலுவையை இயேசு, மனிதனின் பாவங்களுக்காக சுமந்து அதில் அறையப்பட்ட உடன், சிலுவை புனிதச் சின்னமாக மனுக்குலத்தால் போற்றப்படுகிறது.
நிறைவானது வரும் போது குறைவானது ஒழிந்து போகும். (1 கொரி 13:10) என்ற வேத வாக்குக்கு உதாரணமாக, மனித குலத்தின் பாவங்களை நீக்கி அவர்களை மரணத்தின் கோரத்தில் இருந்து விடுதலையாக்க பாவ நிவாரணப் பலியாக தன்னையே சிலுவையில் ஒப்புக்கொடுத்து மரித்து, உயிர்த்து இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். நாம் பாவங்களுக்கு செத்து நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின் மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள் (1பேதுரு 2:24) எனக்கூறிய பேதுருவின் வார்த்தை எவ்வளவு உண்மை என்பதை மனுக்குலம் உணர்ந்து கொண்டது. தொடர்ந்து பாவம் செய்து மனிதன் மரணிப்பதை விரும்பாத இயேசு பாவத்தின் விளைவுகளை அவனுக்கு உணர்த்தி பாவமில்லாத வாழ்வு மனிதனை இறைவனோடு இணைக்கும், பரலோகம் சேர்க்கும் என்பதை தெரிவிக்க பூமியில் மனிதனாக பிறப்பெடுத்து பாவமே செய்யாத பரிசுத்த தெய்வமாக வாழ்ந்து, அற்புதங்களாலும், அடையாளங்களாலும் மனுக்குலத்திற்கு நன்மை செய்து தேவ அன்பை விளங்கப்பண்ணினார்.
பயம், கவலை, துன்பம், வேதனை, வருத்தம், மனபாரம், நோய் போன்ற துன்பங்கள் மனிதனை வாட்டி வதைப்பதற்கு பாவமே காரணம் என்பதை உணர செய்து பாவ இருளை அகற்றும்படி தன்னையே சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்து மரணத்தை ஜெயித்தார். நானே வழியும், சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் (யோவான் 14:6) என்ற மறைபொருளை மனிதனுக்கு வெளிப்படுத்தி ஜீவனுக்கு அழிவில்லை என்பதை அறிவித்து இளைப்பாறுதலின் ரகசியத்தை வெளிப்படுத்தினார்.
மனுக்குலத்தின் பாவத்தின் கொடூரத்தை முழுவதையும் தனது சிலுவை மரணத்தால் வெற்றி கொண்டு தான் படைத்த மனிதன்சமாதானத்தோடு வாழ வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றி பரலோகப் பாதையை திறந்து கொடுத்த நம் ஆண்டவரின் அன்பை நினைவுகூறுவோம். நாம் பெற்ற அவருடைய அந்த தேவ அன்பை, சக மனிதர்களோடு பகிர்ந்து கொள்வோம், பரிமாறுவோம். நமக்காக தனது ஜீவனை பலியிட்ட கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நினைவுகூறுவோம். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
போதகர் மனோவா எம்.முத்துக்குமார்,
திருப்பூர்.
நிறைவானது வரும் போது குறைவானது ஒழிந்து போகும். (1 கொரி 13:10) என்ற வேத வாக்குக்கு உதாரணமாக, மனித குலத்தின் பாவங்களை நீக்கி அவர்களை மரணத்தின் கோரத்தில் இருந்து விடுதலையாக்க பாவ நிவாரணப் பலியாக தன்னையே சிலுவையில் ஒப்புக்கொடுத்து மரித்து, உயிர்த்து இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். நாம் பாவங்களுக்கு செத்து நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின் மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள் (1பேதுரு 2:24) எனக்கூறிய பேதுருவின் வார்த்தை எவ்வளவு உண்மை என்பதை மனுக்குலம் உணர்ந்து கொண்டது. தொடர்ந்து பாவம் செய்து மனிதன் மரணிப்பதை விரும்பாத இயேசு பாவத்தின் விளைவுகளை அவனுக்கு உணர்த்தி பாவமில்லாத வாழ்வு மனிதனை இறைவனோடு இணைக்கும், பரலோகம் சேர்க்கும் என்பதை தெரிவிக்க பூமியில் மனிதனாக பிறப்பெடுத்து பாவமே செய்யாத பரிசுத்த தெய்வமாக வாழ்ந்து, அற்புதங்களாலும், அடையாளங்களாலும் மனுக்குலத்திற்கு நன்மை செய்து தேவ அன்பை விளங்கப்பண்ணினார்.
பயம், கவலை, துன்பம், வேதனை, வருத்தம், மனபாரம், நோய் போன்ற துன்பங்கள் மனிதனை வாட்டி வதைப்பதற்கு பாவமே காரணம் என்பதை உணர செய்து பாவ இருளை அகற்றும்படி தன்னையே சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்து மரணத்தை ஜெயித்தார். நானே வழியும், சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் (யோவான் 14:6) என்ற மறைபொருளை மனிதனுக்கு வெளிப்படுத்தி ஜீவனுக்கு அழிவில்லை என்பதை அறிவித்து இளைப்பாறுதலின் ரகசியத்தை வெளிப்படுத்தினார்.
மனுக்குலத்தின் பாவத்தின் கொடூரத்தை முழுவதையும் தனது சிலுவை மரணத்தால் வெற்றி கொண்டு தான் படைத்த மனிதன்சமாதானத்தோடு வாழ வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றி பரலோகப் பாதையை திறந்து கொடுத்த நம் ஆண்டவரின் அன்பை நினைவுகூறுவோம். நாம் பெற்ற அவருடைய அந்த தேவ அன்பை, சக மனிதர்களோடு பகிர்ந்து கொள்வோம், பரிமாறுவோம். நமக்காக தனது ஜீவனை பலியிட்ட கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நினைவுகூறுவோம். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
போதகர் மனோவா எம்.முத்துக்குமார்,
திருப்பூர்.
மனுவர்க்கத்தின் பாவத்திற்கு இயேசுவை சிலுவையில் பலியாக்க கடவுள் சித்தம் கொண்டிருந்தார்.ஆகவே தான் இந்த சம்பவம் நடந்தது. நாமும் இயேசுவை போல மன்னிக்கும் குணம் உடையவர்களாய் காணப்படுவோம். ஆமென்.
200 ஆண்டுகளுக்கு முன்பு இயேசு சிலுவையில் மரித்த சம்பவத்தை புனிதவெள்ளி என்று கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். புனித வெள்ளியன்று கிறிஸ்தவ ஆலயங்களில் இயேசு சிலுவையில் தொங்கிய போது சொன்ன 7 வாசகங்கள் குறித்து பிரசங்கம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.
அதில் முதலாவது வார்த்தை (லூக்கா-23:34) பிதாவே இவர்களை மன்னியும் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்.
ஒரு சிறு குழந்தை தவறு செய்யும் போது அறியாமல் செய்துவிட்டது என்று சொல்லி, சுலபமாக மன்னிப்பதுபோல இயேசு தம்மை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார். அவர்கள் செய்கிறது இன்னதென்று அறியாமல் செய்துவிட்டார்கள் என்கிறார். அவரது கொலைக்கு காரணமாக இருந்த ரோம அதிகாரிகளும், யூத மக்களும் அவரை சிலுவையில் அறைந்த போர் சேவகர்களும் எப்படி அறியாமல் செய்திருக்க கூடும். அதுவும் அந்த நாட்டின் மிக கொடூரமான குற்றவாளியான பரபாஸ் என்பவனை விடுதலையாக்கி நன்மைகளை மாத்திரம் செய்து வந்த இவரை கொலை செய்தவர்கள் எப்படி அறியாமல் செய்து விட்டார்கள் என்று சொல்ல முடியும்?
உண்மை என்னவென்றால் அன்றைக்கு நடந்தது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு காரியம். இருளின் சக்திகள் இந்த மனிதனுடைய மனக்கண்களை குருடாக்கி இவர்களது இருதயத்தை கடினப்படுத்தி இப்படி ஒரு கொடூரச்செயலை செய்ய ஏவின. தங்களுடைய சுயபுத்தியின்படி செயல்படுகிற எவரும் இப்படி ஒரு நல்ல மனிதரை கொடூரமாக சிலுவையில் அறையமாட்டார்கள். ஆகவேதான் இயேசு இவர்கள் செய்வது என்னவென்று தெரியாமல் செய்து விட்டார்கள் என்று சொல்லி மன்னிக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் இந்த சம்பவம் கடவுளுடைய சித்தத்தின்படி நடந்தது என்று வேதம் கூறுகிறது. இவரை சிலுவையில் அறைந்த கைகள் மட்டும்தான் அக்கிரமக்காரரின் கைகள் என்றும், இதற்கான திட்டமும், தீர்மானமும் கடவுளுடையது என்றும் வேதம் கூறுகிறது. மனுவர்க்கத்தின் பாவத்திற்கு இயேசுவை சிலுவையில் பலியாக்க கடவுள் சித்தம் கொண்டிருந்தார்.ஆகவே தான் இந்த சம்பவம் நடந்தது. நாமும் இயேசுவை போல மன்னிக்கும் குணம் உடையவர்களாய் காணப்படுவோம். ஆமென்.
போதகர் எஸ்.விஜயகுமார்
பரிபூரண ஜீவன் ஏ.ஜி.சர்ச், பல்லடம்.
அதில் முதலாவது வார்த்தை (லூக்கா-23:34) பிதாவே இவர்களை மன்னியும் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்.
ஒரு சிறு குழந்தை தவறு செய்யும் போது அறியாமல் செய்துவிட்டது என்று சொல்லி, சுலபமாக மன்னிப்பதுபோல இயேசு தம்மை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார். அவர்கள் செய்கிறது இன்னதென்று அறியாமல் செய்துவிட்டார்கள் என்கிறார். அவரது கொலைக்கு காரணமாக இருந்த ரோம அதிகாரிகளும், யூத மக்களும் அவரை சிலுவையில் அறைந்த போர் சேவகர்களும் எப்படி அறியாமல் செய்திருக்க கூடும். அதுவும் அந்த நாட்டின் மிக கொடூரமான குற்றவாளியான பரபாஸ் என்பவனை விடுதலையாக்கி நன்மைகளை மாத்திரம் செய்து வந்த இவரை கொலை செய்தவர்கள் எப்படி அறியாமல் செய்து விட்டார்கள் என்று சொல்ல முடியும்?
உண்மை என்னவென்றால் அன்றைக்கு நடந்தது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு காரியம். இருளின் சக்திகள் இந்த மனிதனுடைய மனக்கண்களை குருடாக்கி இவர்களது இருதயத்தை கடினப்படுத்தி இப்படி ஒரு கொடூரச்செயலை செய்ய ஏவின. தங்களுடைய சுயபுத்தியின்படி செயல்படுகிற எவரும் இப்படி ஒரு நல்ல மனிதரை கொடூரமாக சிலுவையில் அறையமாட்டார்கள். ஆகவேதான் இயேசு இவர்கள் செய்வது என்னவென்று தெரியாமல் செய்து விட்டார்கள் என்று சொல்லி மன்னிக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் இந்த சம்பவம் கடவுளுடைய சித்தத்தின்படி நடந்தது என்று வேதம் கூறுகிறது. இவரை சிலுவையில் அறைந்த கைகள் மட்டும்தான் அக்கிரமக்காரரின் கைகள் என்றும், இதற்கான திட்டமும், தீர்மானமும் கடவுளுடையது என்றும் வேதம் கூறுகிறது. மனுவர்க்கத்தின் பாவத்திற்கு இயேசுவை சிலுவையில் பலியாக்க கடவுள் சித்தம் கொண்டிருந்தார்.ஆகவே தான் இந்த சம்பவம் நடந்தது. நாமும் இயேசுவை போல மன்னிக்கும் குணம் உடையவர்களாய் காணப்படுவோம். ஆமென்.
போதகர் எஸ்.விஜயகுமார்
பரிபூரண ஜீவன் ஏ.ஜி.சர்ச், பல்லடம்.
இயேசுக்கு பிடிக்காத காரியங்களை அதே சிலுவையில் இன்று அறைவோம். அருவருப்பான எல்லா பாவங்களையும் இன்று சிலுவையில் அறைவோம். மீட்பைபெறுவோம். சிலுவை சாபம் அல்ல! அது பாவத்தை போக்கும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
பிரியமானவர்களே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துகள். இந்த லெந்து நாட்களில் கிறிஸ்துவின் பாதத்தை அதிகமாய் பற்றிப்பிடிப்போம்.
மாற்கு 15:13-ல் இயேசுவை சிலுவையில் அறையும் என்று திரள் கூட்ட மக்கள் சத்தமாய் சொன்னார்கள் என்று பார்க்கிறோம். ஏன்? இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட வேண்டும். சற்று சிந்திப்போம்.
அன்புக்குரியவர்களே! ஒருவர் சட்டத்தை மீறினால் அல்லது குற்றம் செய்தால்தான் அவர் மீது நடவடிக்கையும், தண்டனையும் தர முடியும். ஆனால் இயேசு கிறிஸ்து அப்படி என்ன தவறு செய்தார் என்று சற்று வேதாகமத்தை நாம் தியானித்தால்... நமக்கு ஆச்சரியமே தோன்றும். இயேசுவை குறித்து நான்கு பேர் சாட்சி தருவதை படித்துப்பார்த்தாலே தெரிந்துவிடும். இன்றைய சட்ட விதியில் ஒன்று அல்லது இரண்டு சாட்சிகள் இருந்து அவர்கள் தெரிவிப்பதை வைத்துத்தான் தீர்ப்பு சொல்லப்படுகிறது. முதலாவது மத் 27:4-ல் யூதாஸ்காரியோத் இயேசுவைப் பற்றி குற்றமில்லா ரத்தம் என்று வர்ணிக்கிறார். இரண்டாவது மத் 27:19-ல் பிலாத்துவின் மனைவி இயேசுவை பற்றி நீதிமான் என்று சொல்லுகிறார். மூன்றாவது லூக்கா 23:15-ல் பிலாத்து இயேசுவை பற்றி ஒருகுற்றமும் இல்லாதவர் என்று சொல்லுகிறார். நான்காவதாக லூக்கா 23:47-ல் நூற்றுக்கு அதிபதி இயேசுவை பற்றி நீதிபரன் என்று சொல்லுகிறார். இந்த நான்கு பேரும் இயேசுவைப்பற்றி சொன்ன வார்த்தைகளை கவனித்தீர்களா! ஆம்! பிரியமானவர்களே ! பாவமறியாத அந்த மெய்தெய்வத்தைதான் அநியாயமாய் குற்றம் சாட்டி சிலுவையில் அறையும் என்று கத்தினார்கள்.
தன்மீது வீண்பழி சுமத்தப்பட்டது அறிந்தும் தன் விவாதங்களை நீதிக்கு முன் சமர்ப்பிக்காமல் தன்னைதானே ஒப்புக்கொடுத்து சிலுவையை ஏற்றுக்கொண்டார். ஏன் தெரியுமா? உங்களுக்காகத்தான்! ஆம்! நம் அனைவருக்காகவும்தான்! சிலுவை என்பது குற்றவாளிகளின் சின்னம், அதை புனித சின்னமாக மாற்றிய இயேசு அதே சிலுவையில் பலியானார். இந்த தியான நாட்களிலே, நாம் நம் குடும்பத்திலும், நம் தனிப்பட்ட வாழ்க்கையிலும், இருக்கிற பாவங்களை, இயேசுக்கு பிடிக்காத காரியங்களை அதே சிலுவையில் இன்று அறைவோம். அருவருப்பான எல்லா பாவங்களையும் இன்று சிலுவையில் அறைவோம். மீட்பைபெறுவோம். சிலுவை சாபம் அல்ல! அது பாவத்தை போக்கும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
போதகர் பரமானந்தம்
சிட்டி ஏஜி சபை, திருப்பூர்.
மாற்கு 15:13-ல் இயேசுவை சிலுவையில் அறையும் என்று திரள் கூட்ட மக்கள் சத்தமாய் சொன்னார்கள் என்று பார்க்கிறோம். ஏன்? இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட வேண்டும். சற்று சிந்திப்போம்.
அன்புக்குரியவர்களே! ஒருவர் சட்டத்தை மீறினால் அல்லது குற்றம் செய்தால்தான் அவர் மீது நடவடிக்கையும், தண்டனையும் தர முடியும். ஆனால் இயேசு கிறிஸ்து அப்படி என்ன தவறு செய்தார் என்று சற்று வேதாகமத்தை நாம் தியானித்தால்... நமக்கு ஆச்சரியமே தோன்றும். இயேசுவை குறித்து நான்கு பேர் சாட்சி தருவதை படித்துப்பார்த்தாலே தெரிந்துவிடும். இன்றைய சட்ட விதியில் ஒன்று அல்லது இரண்டு சாட்சிகள் இருந்து அவர்கள் தெரிவிப்பதை வைத்துத்தான் தீர்ப்பு சொல்லப்படுகிறது. முதலாவது மத் 27:4-ல் யூதாஸ்காரியோத் இயேசுவைப் பற்றி குற்றமில்லா ரத்தம் என்று வர்ணிக்கிறார். இரண்டாவது மத் 27:19-ல் பிலாத்துவின் மனைவி இயேசுவை பற்றி நீதிமான் என்று சொல்லுகிறார். மூன்றாவது லூக்கா 23:15-ல் பிலாத்து இயேசுவை பற்றி ஒருகுற்றமும் இல்லாதவர் என்று சொல்லுகிறார். நான்காவதாக லூக்கா 23:47-ல் நூற்றுக்கு அதிபதி இயேசுவை பற்றி நீதிபரன் என்று சொல்லுகிறார். இந்த நான்கு பேரும் இயேசுவைப்பற்றி சொன்ன வார்த்தைகளை கவனித்தீர்களா! ஆம்! பிரியமானவர்களே ! பாவமறியாத அந்த மெய்தெய்வத்தைதான் அநியாயமாய் குற்றம் சாட்டி சிலுவையில் அறையும் என்று கத்தினார்கள்.
தன்மீது வீண்பழி சுமத்தப்பட்டது அறிந்தும் தன் விவாதங்களை நீதிக்கு முன் சமர்ப்பிக்காமல் தன்னைதானே ஒப்புக்கொடுத்து சிலுவையை ஏற்றுக்கொண்டார். ஏன் தெரியுமா? உங்களுக்காகத்தான்! ஆம்! நம் அனைவருக்காகவும்தான்! சிலுவை என்பது குற்றவாளிகளின் சின்னம், அதை புனித சின்னமாக மாற்றிய இயேசு அதே சிலுவையில் பலியானார். இந்த தியான நாட்களிலே, நாம் நம் குடும்பத்திலும், நம் தனிப்பட்ட வாழ்க்கையிலும், இருக்கிற பாவங்களை, இயேசுக்கு பிடிக்காத காரியங்களை அதே சிலுவையில் இன்று அறைவோம். அருவருப்பான எல்லா பாவங்களையும் இன்று சிலுவையில் அறைவோம். மீட்பைபெறுவோம். சிலுவை சாபம் அல்ல! அது பாவத்தை போக்கும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
போதகர் பரமானந்தம்
சிட்டி ஏஜி சபை, திருப்பூர்.
இயேசுநாதரின் சிலுவை மரணம், பாடுகள், வேதனைகள் நிறைந்ததாயிருந்தாலும் நமக்கு மகிழ்ச்சியே. ஏனென்றால் குழந்தையின் குடும்பங்கள் ஒன்றாக்கப்படுவது போல், இயேசு கிறிஸ்துவின் நிமித்தம் மனிதர்களாகிய நாம் கடவுளுடன் சேர்க்கப்படுகிறோம்.
நம் உடலை விட்டு உயிர் கடவுளிடம் செல்வதை மரணம் என்கிறோம். நம் உடலுக்குள் உயிர் கடவுளிடமிருந்து பூமிக்கு வருவதை பிறப்பு என்கிறோம். ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்தால் இரு குடும்பங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகிறது. அவர்களை சார்ந்த உறவுகளுக்கு சந்தோஷம் உண்டாகிறது. அந்த குழந்தையின் நிமித்தம் இரு குடும்பங்கள், பகைமை பொறுப்புகளை களைந்துவிட்டு ஒன்றாகிறார்கள். ஆனால் மரணத்தாலோ, பிரிவின் நிமித்தம் ஏமாற்றம், கவலை, துக்கம், அழுகை, புலம்பல் உண்டாகிறது.
இங்கு இயேசுநாதரின் சிலுவை மரணம், பாடுகள், வேதனைகள் நிறைந்ததாயிருந்தாலும் நமக்கு மகிழ்ச்சியே. ஏனென்றால் குழந்தையின் குடும்பங்கள் ஒன்றாக்கப்படுவது போல், இயேசு கிறிஸ்துவின் நிமித்தம் மனிதர்களாகிய நாம் கடவுளுடன் சேர்க்கப்படுகிறோம். (எபே: 2: 13-17) கடவுளின் வார்த்தைக்கு கீழ்படியாத ஆதாம், ஏவாளின் மூலம் பாவம் உருவாகி, அவர்களுடைய சந்ததியாகிய நமக்குள்ளும் பாவம் தொடர்ந்து வருகின்றது. இந்த பாவத்தின் விளைவினால் நமக்கும், தேவனுக்கும் ஒரு மிகப்பெரிய இடைவெளி உண்டாயிற்று. பாவத்தின் முடிவு மரணம் என்று பைபிள் கூறுகின்றது. அதுமட்டுமல்ல நம் உடலில் குடி, போதை, கொலை, கொள்ளை, ஏமாற்றுதல், ஒழுங்கற்ற பாலியல் உறவுகள் போன்ற பாவத்தின் நிமித்தம் மனிதர்களுக்கு மரணம் ஏற்படுகிறது.
முடிவில்லாத வேதனையும், தண்டனையும் உண்டு என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. ஒரு கல்லூரியிலோ அல்லது வெளியில் தவறும் செய்யும் தன் மகனுக்காக, தகப்பனே முன் வந்து மன்னிப்பு கேட்பதும் அதற்கான அபராத தொகையை தானே செலுத்தி மகனை விடுவிப்பது போல, நம்முடைய அன்பின் ஆண்டவர் பரம தகப்பனாகிய இயேசு கிறிஸ்து பிள்ளையாகிய நமக்காக சிலுவையில் ரத்தம் சிந்தி பாவத்தின் தண்டனையிலிருந்து நம்மை விடுவித்திருக்கிறார். ஆகவே அவர் தாமே நம்முடைய பலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களை சுமந்தார். (மத்: 8: 17) (நம்முடைய மீறுதல்கள் நிமித்தம் அவர் காயப்பட்டு நம்முடைய அக்கிரமங்கள் நிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் (ஏசா: 53: 5)
ரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை என்ற பைபிள் வார்த்தையின்படி (எபி: 9: 22) இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரித்து, 3-ம் நாள் உயிர்த்தெழுந்ததினால் நமக்கு சமாதானம், சந்தோஷம், பாவத்தில் இருந்து விடுதலை, தெய்வீக பாதுகாப்பு, பரிபூரண ஆசீர்வாதம், நிறைவான, பரலோக வாழ்வு கிடைத்திருக்கிறது. ஆகவே அருள்நாதர் இயேசு கிறிஸ்துவின் மரணம் நமக்கு மகிழ்ச்சியே!
கர்த்தகர் உங்களை ஆசிர்வதிப்பாராக...
பாஸ்டர் எஸ்.வேதமுத்து,
சர்வ வல்லவர் சர்வதேச சபை
பெரியார் காலனி, திருப்பூர்.
இங்கு இயேசுநாதரின் சிலுவை மரணம், பாடுகள், வேதனைகள் நிறைந்ததாயிருந்தாலும் நமக்கு மகிழ்ச்சியே. ஏனென்றால் குழந்தையின் குடும்பங்கள் ஒன்றாக்கப்படுவது போல், இயேசு கிறிஸ்துவின் நிமித்தம் மனிதர்களாகிய நாம் கடவுளுடன் சேர்க்கப்படுகிறோம். (எபே: 2: 13-17) கடவுளின் வார்த்தைக்கு கீழ்படியாத ஆதாம், ஏவாளின் மூலம் பாவம் உருவாகி, அவர்களுடைய சந்ததியாகிய நமக்குள்ளும் பாவம் தொடர்ந்து வருகின்றது. இந்த பாவத்தின் விளைவினால் நமக்கும், தேவனுக்கும் ஒரு மிகப்பெரிய இடைவெளி உண்டாயிற்று. பாவத்தின் முடிவு மரணம் என்று பைபிள் கூறுகின்றது. அதுமட்டுமல்ல நம் உடலில் குடி, போதை, கொலை, கொள்ளை, ஏமாற்றுதல், ஒழுங்கற்ற பாலியல் உறவுகள் போன்ற பாவத்தின் நிமித்தம் மனிதர்களுக்கு மரணம் ஏற்படுகிறது.
முடிவில்லாத வேதனையும், தண்டனையும் உண்டு என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. ஒரு கல்லூரியிலோ அல்லது வெளியில் தவறும் செய்யும் தன் மகனுக்காக, தகப்பனே முன் வந்து மன்னிப்பு கேட்பதும் அதற்கான அபராத தொகையை தானே செலுத்தி மகனை விடுவிப்பது போல, நம்முடைய அன்பின் ஆண்டவர் பரம தகப்பனாகிய இயேசு கிறிஸ்து பிள்ளையாகிய நமக்காக சிலுவையில் ரத்தம் சிந்தி பாவத்தின் தண்டனையிலிருந்து நம்மை விடுவித்திருக்கிறார். ஆகவே அவர் தாமே நம்முடைய பலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களை சுமந்தார். (மத்: 8: 17) (நம்முடைய மீறுதல்கள் நிமித்தம் அவர் காயப்பட்டு நம்முடைய அக்கிரமங்கள் நிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் (ஏசா: 53: 5)
ரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை என்ற பைபிள் வார்த்தையின்படி (எபி: 9: 22) இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரித்து, 3-ம் நாள் உயிர்த்தெழுந்ததினால் நமக்கு சமாதானம், சந்தோஷம், பாவத்தில் இருந்து விடுதலை, தெய்வீக பாதுகாப்பு, பரிபூரண ஆசீர்வாதம், நிறைவான, பரலோக வாழ்வு கிடைத்திருக்கிறது. ஆகவே அருள்நாதர் இயேசு கிறிஸ்துவின் மரணம் நமக்கு மகிழ்ச்சியே!
கர்த்தகர் உங்களை ஆசிர்வதிப்பாராக...
பாஸ்டர் எஸ்.வேதமுத்து,
சர்வ வல்லவர் சர்வதேச சபை
பெரியார் காலனி, திருப்பூர்.
இந்த லெந்து நாட்களில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயேசு கிறிஸ்து நமக்காக பாடுபட்டதையும், கல்வாரி சிலுவையிலே தம்முடைய ரத்தத்தை சிந்தினதையும் நாம் தியானித்து வருகிறோம்.
இந்த லெந்து நாட்களில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயேசு கிறிஸ்து நமக்காக பாடுபட்டதையும், கல்வாரி சிலுவையிலே தம்முடைய ரத்தத்தை சிந்தினதையும் நாம் தியானித்து வருகிறோம். சிலுவையில் தொங்கிய இயேசுவின் கைகளும், கால்களும் ஆணிகளால் அடிக்கப்பட்டது. தலையிலே முள் கிரீடத்தை வைத்து அழுத்தினார்கள். அவரது சரீரத்தில் எல்லா இடங்களிலும் ரத்தம் வழிந்தோடியது.ஆனால் இயேசு சிலுவையில் மாத்திரம் வேதனையை அனுபவிக்கவில்லை. சிலுவைக்கு முன் கெத்செமனே தோட்டத்தில் வைத்தும் மரண வேதனையை அனுபவித்தார் என்று வேதாகமத்தில் மாற்கு சுவிசேஷத்தில் தெளிவாக விவரிக்கப்பட்டு உள்ளது.
பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார். அப்பொழுது அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொன்னார் (மாற்:13:33,34).மிகுந்த வியாகுலம் மட்டுமல்ல.ஆத்துமாவிலே மரணத்துக்கேதுவான துக்கம் அடைந்திருந்தார் என்று பார்க்கிறோம்.
சிலுவையை சந்திக்கும் முன்னரே கெத்செமனே தோட்டத்தில் சிலுவை மரணத்திற்கு நிகரான மரண வேதனையை சந்தித்தார் என்று பார்க்கிறோம்.இவ்வளவு ஆத்தும வேதனை மற்றும் மரண அவஸ்தைகளை அவர் அனுபவித்ததன் காரணம் என்னவென்றால் அந்த மரணத்தின் மூலம் இந்த உலகத்தில் கொண்டுவர நினைத்த ஆசீர்வாதமே. மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காக சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். ஆதாம் மூலம் மனுக்குலத்திற்குள் வந்த சாபம், நியாயப்பிரமாணத்தினால் மனுக்குலத்திற்கு வந்த ஆக்கினை என எல்லா சாபங்களிலும் இருந்து நம்மை விடுவிக்கும்படியாக நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்(2கொரி:5:21).
நாம் பாவங்களுக்கு செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்(1பேது:2:24). சிலுவையை மாத்திரம் இயேசு சுமக்கவில்லை. ஆத்தும வியாகுலத்தை மாத்திரம் சுமக்கவில்லை. இயேசு முழு உலகத்தின் பாவத்தையும் சிலுவையில் சுமந்தார். நாம் நீதிக்கு பிழைத்திருக்கும்படிக்கு அவர் நம் பாவங்களை சுமந்தார் என்று வேதம் கூறும் சத்தியத்தை தியானித்து பாவம் நிறைந்த உலகத்திலே நீதியுள்ள வாழ்கை வாழ தேவன் நமக்கு கிருபை தருவாராக.
சகோதரி. அ.அற்புத மேரி
பெத்தேல் ஏ.ஜி.சபை, பாரப்பாளையம், திருப்பூர்
பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார். அப்பொழுது அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொன்னார் (மாற்:13:33,34).மிகுந்த வியாகுலம் மட்டுமல்ல.ஆத்துமாவிலே மரணத்துக்கேதுவான துக்கம் அடைந்திருந்தார் என்று பார்க்கிறோம்.
சிலுவையை சந்திக்கும் முன்னரே கெத்செமனே தோட்டத்தில் சிலுவை மரணத்திற்கு நிகரான மரண வேதனையை சந்தித்தார் என்று பார்க்கிறோம்.இவ்வளவு ஆத்தும வேதனை மற்றும் மரண அவஸ்தைகளை அவர் அனுபவித்ததன் காரணம் என்னவென்றால் அந்த மரணத்தின் மூலம் இந்த உலகத்தில் கொண்டுவர நினைத்த ஆசீர்வாதமே. மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காக சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். ஆதாம் மூலம் மனுக்குலத்திற்குள் வந்த சாபம், நியாயப்பிரமாணத்தினால் மனுக்குலத்திற்கு வந்த ஆக்கினை என எல்லா சாபங்களிலும் இருந்து நம்மை விடுவிக்கும்படியாக நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்(2கொரி:5:21).
நாம் பாவங்களுக்கு செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்(1பேது:2:24). சிலுவையை மாத்திரம் இயேசு சுமக்கவில்லை. ஆத்தும வியாகுலத்தை மாத்திரம் சுமக்கவில்லை. இயேசு முழு உலகத்தின் பாவத்தையும் சிலுவையில் சுமந்தார். நாம் நீதிக்கு பிழைத்திருக்கும்படிக்கு அவர் நம் பாவங்களை சுமந்தார் என்று வேதம் கூறும் சத்தியத்தை தியானித்து பாவம் நிறைந்த உலகத்திலே நீதியுள்ள வாழ்கை வாழ தேவன் நமக்கு கிருபை தருவாராக.
சகோதரி. அ.அற்புத மேரி
பெத்தேல் ஏ.ஜி.சபை, பாரப்பாளையம், திருப்பூர்
வாழ்க்கையில் பெற்றிப்பெற்ற பெரும்பான்மையான மனிதர்கள் கண்ட கனவே அவர்களை செயலாற்றால் மிக்க மனிதர்களாக மாற்றியது என கூறியுள்ளனர்.
நமது உள்ளத்தில் உள்ள உயர்ந்த எண்ணங்களே நமது இலக்கினை தெளிவு பெற வைக்கும். எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கை ஒளியினை உருவாக்கும். இலக்கை அடைவதற்கு முன்பே அதனை அடைந்ததாக கனவு காண வேண்டும். கனவினை நனவாக்க முயற்சிக்கும் போது அதனுடன் தொடர்புடைய செயல்களை நாம் சிந்திக்கிறோம். வாழ்க்கையில் பெற்றிப்பெற்ற பெரும்பான்மையான மனிதர்கள் கண்ட கனவே அவர்களை செயலாற்றால் மிக்க மனிதர்களாக மாற்றியது என கூறியுள்ளனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி விக்ரம் சாராபாய், தனது வெற்றியை இவ்வாறு பதிவு செய்கிறார். சாதனைகளை தொடங்கி செயல்படுத்த பல ஆண்டுகள் கடுமையாக முயற்சி மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதனை சாதித்து முடிக்கலாம் என்ற கனவே என்னை இயக்கியது. இந்தியா தனது அறிவியல் அறிவினையும், திறமையான இளைஞர்களையும் பயன்படுத்தி தனது நாட்டுக்கு தேவையான பெரிய ராக்கெட்டுகளை தானே நிறுவி சொந்தமாக செயற்றை கோள்களை விண்ணில் செலுத்த வேண்டும்.
வானிலை ஆராய்ச்சி, தொலைத்தூர தொடர்பு, தகவல் தொடர்பு போன்ற எல்லா துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று நான் கண்ட கனவே இன்று செயல்வடிவம் பெற்றது என்றார். இதனை போன்று ஒவ்வொரு இளைஞனும் உயரிய எண்ணங்களை தனக்குள் விதைக்க வேண்டும். இறையருளின் காலமாகிய இந்த தவக்காலத்தில் ஒவ்வொரு மனிதனும் உயரிய எண்ணமொன்றினை தன்னுள் விரைத்திட வேண்டும். கனவுகள் மனவுறுதியுடன் நிறைவேற்றப்பட்டால் நிச்சயம் நனவாகி எதிர்கால வாழ்விற்று உதவும். இன்றைய சமுதாயத்தினை சீரழிக்கின்ற ஏராளமான முரண்பாட்டு சிந்தனைகள், இந்த சமுதாயத்தில் மிக அதிகம் காணப்படுகின்றன.
இவற்றை குறிப்பிட்டு இனம் கண்டு, தேவையற்றவைகளை முழுவதுமாய் விட்டு விடுவதும், தேவையானவற்றை இன்னும் ஆதரிப்பதும், கொண்டாடுவதும் மிக அவசியம். இயற்றை பராமரிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரங்கள் வளர்ப்பு போன்றவையெல்லாம் இன்றைய காலத்தின் மிக முக்கியமான பயன்பாடுகளாகும். இவற்றினை பற்றிய தேடுதல்களை இன்னும் அதிகமாய் விரைவுபடுத்தி கொண்டு அதற்கேற்ப பல திட்டங்களை வடிவமைத்து ஒவ்வொரு நாளும் செயல்படுவதற்கு அதிக அக்கறை எடுக்க வேண்டும். நமது எண்ணங்கள் உயர்ந்து வளர்ந்தால் சமுதாயத்தில் நல்ல பலன்களை அறுவடை செய்ய முடியும்.
அருட்பணியாளர் குருசு கார்மல்,
கோட்டார் மறை மாவட்டம்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி விக்ரம் சாராபாய், தனது வெற்றியை இவ்வாறு பதிவு செய்கிறார். சாதனைகளை தொடங்கி செயல்படுத்த பல ஆண்டுகள் கடுமையாக முயற்சி மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதனை சாதித்து முடிக்கலாம் என்ற கனவே என்னை இயக்கியது. இந்தியா தனது அறிவியல் அறிவினையும், திறமையான இளைஞர்களையும் பயன்படுத்தி தனது நாட்டுக்கு தேவையான பெரிய ராக்கெட்டுகளை தானே நிறுவி சொந்தமாக செயற்றை கோள்களை விண்ணில் செலுத்த வேண்டும்.
வானிலை ஆராய்ச்சி, தொலைத்தூர தொடர்பு, தகவல் தொடர்பு போன்ற எல்லா துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று நான் கண்ட கனவே இன்று செயல்வடிவம் பெற்றது என்றார். இதனை போன்று ஒவ்வொரு இளைஞனும் உயரிய எண்ணங்களை தனக்குள் விதைக்க வேண்டும். இறையருளின் காலமாகிய இந்த தவக்காலத்தில் ஒவ்வொரு மனிதனும் உயரிய எண்ணமொன்றினை தன்னுள் விரைத்திட வேண்டும். கனவுகள் மனவுறுதியுடன் நிறைவேற்றப்பட்டால் நிச்சயம் நனவாகி எதிர்கால வாழ்விற்று உதவும். இன்றைய சமுதாயத்தினை சீரழிக்கின்ற ஏராளமான முரண்பாட்டு சிந்தனைகள், இந்த சமுதாயத்தில் மிக அதிகம் காணப்படுகின்றன.
இவற்றை குறிப்பிட்டு இனம் கண்டு, தேவையற்றவைகளை முழுவதுமாய் விட்டு விடுவதும், தேவையானவற்றை இன்னும் ஆதரிப்பதும், கொண்டாடுவதும் மிக அவசியம். இயற்றை பராமரிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரங்கள் வளர்ப்பு போன்றவையெல்லாம் இன்றைய காலத்தின் மிக முக்கியமான பயன்பாடுகளாகும். இவற்றினை பற்றிய தேடுதல்களை இன்னும் அதிகமாய் விரைவுபடுத்தி கொண்டு அதற்கேற்ப பல திட்டங்களை வடிவமைத்து ஒவ்வொரு நாளும் செயல்படுவதற்கு அதிக அக்கறை எடுக்க வேண்டும். நமது எண்ணங்கள் உயர்ந்து வளர்ந்தால் சமுதாயத்தில் நல்ல பலன்களை அறுவடை செய்ய முடியும்.
அருட்பணியாளர் குருசு கார்மல்,
கோட்டார் மறை மாவட்டம்.
கர்த்தர் நமக்கு தந்த வேதாகம சத்தியங்களின் வழியாகவே, அனுதின வாழ்க்கையில் நமக்கு தம்முடைய வழிநடத்துதல்களையும், தம்மை குறித்த வெளிப்பாடுகளையும் தருகிறார் என்பதை நாம் அறிய வேண்டும்.
“கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்”
(சங்கீதம் 1:2)
ஓவியக்கண்காட்சி நடக்கும் போது பலர் அதனை பார்க்க வருவார்கள். அவர்களில் சிலர் நடந்து கொண்டே மேலோட்டமாக ஓவியங்களை பார்த்து விட்டு கடந்து போய் விடுவார்கள். ஆனால் சிலர் அப்படியல்ல. ஒவ்வொரு ஓவியத்தையும் நன்கு கவனித்து பார்ப்பார்கள். அந்த ஓவியத்தை வரைந்தவனுடைய கலைத்திறன், கற்பனை வளம், சொல்ல வந்த கருத்து, நிறங்களை கையாண்டிருக்கிற விதம் ஆகியவற்றை ரசித்து பார்ப்பார்கள். அங்கே அவர்கள் ஓவியங்களில் தங்கள் மனதை ஈடுபடுத்தி மகிழ்வார்கள்.
அதுபோலவே வேத புத்தகம் வாசிப்பிலும் நாம் பொறுமையாக மனதை ஈடுபடுத்தி, தியானித்தால் தான் அதிலிருந்து நாம் நிறைவான மகிழ்ச்சியையும், ஆவிக்குரிய புத்துணர்வையும் பெற முடியும். நாம் எத்தனை அத்தியாயங்கள் தினமும் படிக்கிறோம் என்பது முக்கியம் அல்ல. எத்தனை முறை முழு வேதாகமத்தையும் படித்து முடித்துவிட்டோம் என்பதும் அல்ல. எந்த அளவிற்கு நாம் வேதாகமத்தின் செய்திகளில் நம்மை ஈடுபடுத்தி, அதிலிருந்து வெளிப்படும் உண்மைகளை அறிந்து கொள்கிறோம் என்பதே முக்கியமாகும்.
ஏதோ ஒரு பக்திக்காகவோ, கடமைக்காகவோ வேதத்தை படிப்பதில் பலன் ஒன்றும் இல்லை. சில அத்தியாயங்களை படித்து விட்டால், ஒருவேளை நாம் மனசாட்சியில் ஒரு திருப்தியை பெற்றுவிட முடியும். ஆனால் அது போதாது. நாம் எவைகளை அதன் மூலம் அறிகின்றோம்? அதனால் நாம் வாழ்க்கையில் காணும் பிரதிபலிப்புகள் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு திருப்தியான விடை வேண்டும். அந்த தாகம் பெருகினால்தான் வேதம் நமக்கு விளங்க தொடங்கும்.
கர்த்தர் நமக்கு தந்த வேதாகம சத்தியங்களின் வழியாகவே, அனுதின வாழ்க்கையில் நமக்கு தம்முடைய வழிநடத்துதல்களையும், தம்மை குறித்த வெளிப்பாடுகளையும் தருகிறார் என்பதை நாம் அறிய வேண்டும். மற்றபடி மந்திரம் படிப்பது போல படிப்பதால் எந்த பயனும் இல்லை.
“வேதாகமத்தை வாசிக்கின்றவன் பக்திமானாகலாம், வேதத்தை நேசிக்கிறவன் தான் பரிசுத்தவானாகிறான்”.
- சாம்சன் பால்.
(சங்கீதம் 1:2)
ஓவியக்கண்காட்சி நடக்கும் போது பலர் அதனை பார்க்க வருவார்கள். அவர்களில் சிலர் நடந்து கொண்டே மேலோட்டமாக ஓவியங்களை பார்த்து விட்டு கடந்து போய் விடுவார்கள். ஆனால் சிலர் அப்படியல்ல. ஒவ்வொரு ஓவியத்தையும் நன்கு கவனித்து பார்ப்பார்கள். அந்த ஓவியத்தை வரைந்தவனுடைய கலைத்திறன், கற்பனை வளம், சொல்ல வந்த கருத்து, நிறங்களை கையாண்டிருக்கிற விதம் ஆகியவற்றை ரசித்து பார்ப்பார்கள். அங்கே அவர்கள் ஓவியங்களில் தங்கள் மனதை ஈடுபடுத்தி மகிழ்வார்கள்.
அதுபோலவே வேத புத்தகம் வாசிப்பிலும் நாம் பொறுமையாக மனதை ஈடுபடுத்தி, தியானித்தால் தான் அதிலிருந்து நாம் நிறைவான மகிழ்ச்சியையும், ஆவிக்குரிய புத்துணர்வையும் பெற முடியும். நாம் எத்தனை அத்தியாயங்கள் தினமும் படிக்கிறோம் என்பது முக்கியம் அல்ல. எத்தனை முறை முழு வேதாகமத்தையும் படித்து முடித்துவிட்டோம் என்பதும் அல்ல. எந்த அளவிற்கு நாம் வேதாகமத்தின் செய்திகளில் நம்மை ஈடுபடுத்தி, அதிலிருந்து வெளிப்படும் உண்மைகளை அறிந்து கொள்கிறோம் என்பதே முக்கியமாகும்.
ஏதோ ஒரு பக்திக்காகவோ, கடமைக்காகவோ வேதத்தை படிப்பதில் பலன் ஒன்றும் இல்லை. சில அத்தியாயங்களை படித்து விட்டால், ஒருவேளை நாம் மனசாட்சியில் ஒரு திருப்தியை பெற்றுவிட முடியும். ஆனால் அது போதாது. நாம் எவைகளை அதன் மூலம் அறிகின்றோம்? அதனால் நாம் வாழ்க்கையில் காணும் பிரதிபலிப்புகள் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு திருப்தியான விடை வேண்டும். அந்த தாகம் பெருகினால்தான் வேதம் நமக்கு விளங்க தொடங்கும்.
கர்த்தர் நமக்கு தந்த வேதாகம சத்தியங்களின் வழியாகவே, அனுதின வாழ்க்கையில் நமக்கு தம்முடைய வழிநடத்துதல்களையும், தம்மை குறித்த வெளிப்பாடுகளையும் தருகிறார் என்பதை நாம் அறிய வேண்டும். மற்றபடி மந்திரம் படிப்பது போல படிப்பதால் எந்த பயனும் இல்லை.
“வேதாகமத்தை வாசிக்கின்றவன் பக்திமானாகலாம், வேதத்தை நேசிக்கிறவன் தான் பரிசுத்தவானாகிறான்”.
- சாம்சன் பால்.
கொரோனா தொற்று நோய் பரவல் தடுப்பு முன்னிட்டும்,அரசின் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாலும் இந்த ஆண்டு பூண்டிமாதாபேராலய ஆண்டு திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள புகழ் பெற்ற பேராலயம் பூண்டி மாதாபேராலயம். இந்த பேராலயத்தின் ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மே 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும். நவநாட்களில் சிறு தேர்பவனி நடைபெறும்.
மே 14-ந்தேதி பூண்டி அன்னையின் தேர்பவனி நடைபெறும். 15-ந் தேதி காலை நடைபெறும் திருவிழா திருப்பலியுடன் நிறைவு பெறும். இந்த ஆண்டு மார்ச் 24-ந்தேதிமுதல் கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் பூண்டி மாதா பேராலயத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஈஸ்டர் தினத்தில் பேராலய பங்குத்தந்தையர்கள்மட்டும் பங்கு கொண்ட திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் மேலும் தற்போது மே 17-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பூண்டி மாதா பேராலய திருவிழா நடைபெறுமா? என்று பக்தர்கள் மத்தியில்கேள்வி எழுந்தது.
இதுகுறித்து பேராலய நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்று நோய் பரவல் தடுப்பு முன்னிட்டும்,அரசின் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாலும் இந்த ஆண்டு பூண்டிமாதாபேராலய ஆண்டு திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து விரைவில் நாம் மீண்டு வருவோம் என்று பேராலய அதிபர் மற்றும் அருட்தந்தையர்கள் தெரிவித்தனர்.
மே 14-ந்தேதி பூண்டி அன்னையின் தேர்பவனி நடைபெறும். 15-ந் தேதி காலை நடைபெறும் திருவிழா திருப்பலியுடன் நிறைவு பெறும். இந்த ஆண்டு மார்ச் 24-ந்தேதிமுதல் கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் பூண்டி மாதா பேராலயத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஈஸ்டர் தினத்தில் பேராலய பங்குத்தந்தையர்கள்மட்டும் பங்கு கொண்ட திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் மேலும் தற்போது மே 17-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பூண்டி மாதா பேராலய திருவிழா நடைபெறுமா? என்று பக்தர்கள் மத்தியில்கேள்வி எழுந்தது.
இதுகுறித்து பேராலய நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்று நோய் பரவல் தடுப்பு முன்னிட்டும்,அரசின் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாலும் இந்த ஆண்டு பூண்டிமாதாபேராலய ஆண்டு திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து விரைவில் நாம் மீண்டு வருவோம் என்று பேராலய அதிபர் மற்றும் அருட்தந்தையர்கள் தெரிவித்தனர்.
பூவுலகில் அவதரித்த மண்ணின் மைந்தன் இயேசு கிறிஸ்து பிதாவின் அற்புத தேவ திட்டத்தின்படி மனுக்குலத்திற்காக தன்னைத்தானே பலியாக ஒப்புக்கொடுத்தார் என்பதை வேதாகமத்தில் காண்கிறோம்.
பிரியமானவர்களே ! அன்பின் நல்வாழ்த்துகள்
பூவுலகில் அவதரித்த மண்ணின் மைந்தன் இயேசு கிறிஸ்து பிதாவின் அற்புத தேவ திட்டத்தின்படி மனுக்குலத்திற்காக தன்னைத்தானே பலியாக ஒப்புக்கொடுத்தார் என்பதை வேதாகமத்தில் காண்கிறோம். யோவான் 15: 10-ல் பிதாவின் கற்பனைகளை அப்படியே கடைபிடித்தார் என்று பார்க்கிறோம். சுயமாக எதையும் செய்யாமல் ஒவ்வொரு அசைவும் பிதாவின் சித்தத்தின்படியே செய்தார். தன் விருப்பம் , ஏக்கம் எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்தார். என் மூலமாக என் பிதா சந்தோஷப்படவேண்டும் என்று பார்த்து பார்த்து பிதாவை முன்னிறுத்தி செய்து முடித்தார். ஒரு நாள் வந்தது மரணத்துக்கேதுவான துக்கம் அது சிலுவை மரணம். மகாகொடிதான, வலி நிறைந்த பாதை பிதாவிற்காக அந்த பாதையிலே நடக்க விட்டுக்கொடுத்தார்.
சிலுவையில் தன் உலக மக்களுக்காக தன் ஜீவனை விட்டார். (மத் 27:50) எதிரிகளும், அவரை விரோதித்தவர்களும் இயேசுவின் கதை முடிந்தது எனறு நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். ஆனந்தமடைந்தார்கள் . ஆனால் பிதாவோ தனக்காகவே தியாகமாய் வாழ்ந்த இயேசுவை கைவிடவில்லை 3-ம் நாளிலேயே இயேசுவை உயிரோடு எழுப்பி, எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தி, மேலான நாமத்தை இயேசுவுக்கு தந்தருளி, அவருடைய பாதத்திற்கு கீழ்படுத்தினார். அல்லேலுயா (பிலி 2:9-11) எதிராளிகளின் எல்லா தந்திரங்களையும் பிதா முறியடித்தார். ஆம் பிரியமானவர்களே, நம் வாழ்க்கையிலும் கூடு நம்மேல் தேவன் வைத்திருந்த தேவ திட்டத்தை அறிந்து நாம் நம்மை இயேசுவுக்கு அர்ப்பணிப்போம். மற்றவர்கள் நம்மை உதாசீனப்படுத்தினாலும், கீழ்தரமாக நினைத்தாலும் பரவாயில்லை. இயேசுவின் சித்தத்தை செய்ய நாம் தீவிரமாய் இருக்க வேண்டும், சில காலங்கள் பொறுமையாய் காத்திருங்கள், உங்களுக்கென்று ஒரு நேரம்- ஏற்றநேரம் நியமிக்கப்பட்டிருக்கிறது.
பிதா தன் மகனை மறக்காமல் உயர்த்தினது போல, சர்வத்துக்கும் அதிகாரியாகிய இயேசு நம்மையும் ஒரு நாள் ஏளனமாய் பார்த்த எல்லா ஜனங்களுக்கும் மேலாக உயர்த்தி ஆசீர்வதிப்பார். நம் தேவன் நம்மை கன்மலையில் உயர்த்தும் தெய்வம். ஜீவனுள்ள ஒரே மெய்யான தெய்வம், நம்மை கைவிடமாட்டார். ஏனெனில் அவர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து, அவரை நம்பி நம் வாழ்க்கையை ஒப்புகொடுத்து இந்த தேசத்தில் ஆசிர்வாதமாயிருப்போம் கர்த்தருக்கே மகிழமை தேவ கிருபை உங்களுடனிருப்பதாக!ஆமென்.
போதகர். சாம் அகஸ்டின்.
சிட்டி ஏ.ஜி.சபை, திருப்பூர்.
பூவுலகில் அவதரித்த மண்ணின் மைந்தன் இயேசு கிறிஸ்து பிதாவின் அற்புத தேவ திட்டத்தின்படி மனுக்குலத்திற்காக தன்னைத்தானே பலியாக ஒப்புக்கொடுத்தார் என்பதை வேதாகமத்தில் காண்கிறோம். யோவான் 15: 10-ல் பிதாவின் கற்பனைகளை அப்படியே கடைபிடித்தார் என்று பார்க்கிறோம். சுயமாக எதையும் செய்யாமல் ஒவ்வொரு அசைவும் பிதாவின் சித்தத்தின்படியே செய்தார். தன் விருப்பம் , ஏக்கம் எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்தார். என் மூலமாக என் பிதா சந்தோஷப்படவேண்டும் என்று பார்த்து பார்த்து பிதாவை முன்னிறுத்தி செய்து முடித்தார். ஒரு நாள் வந்தது மரணத்துக்கேதுவான துக்கம் அது சிலுவை மரணம். மகாகொடிதான, வலி நிறைந்த பாதை பிதாவிற்காக அந்த பாதையிலே நடக்க விட்டுக்கொடுத்தார்.
சிலுவையில் தன் உலக மக்களுக்காக தன் ஜீவனை விட்டார். (மத் 27:50) எதிரிகளும், அவரை விரோதித்தவர்களும் இயேசுவின் கதை முடிந்தது எனறு நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். ஆனந்தமடைந்தார்கள் . ஆனால் பிதாவோ தனக்காகவே தியாகமாய் வாழ்ந்த இயேசுவை கைவிடவில்லை 3-ம் நாளிலேயே இயேசுவை உயிரோடு எழுப்பி, எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தி, மேலான நாமத்தை இயேசுவுக்கு தந்தருளி, அவருடைய பாதத்திற்கு கீழ்படுத்தினார். அல்லேலுயா (பிலி 2:9-11) எதிராளிகளின் எல்லா தந்திரங்களையும் பிதா முறியடித்தார். ஆம் பிரியமானவர்களே, நம் வாழ்க்கையிலும் கூடு நம்மேல் தேவன் வைத்திருந்த தேவ திட்டத்தை அறிந்து நாம் நம்மை இயேசுவுக்கு அர்ப்பணிப்போம். மற்றவர்கள் நம்மை உதாசீனப்படுத்தினாலும், கீழ்தரமாக நினைத்தாலும் பரவாயில்லை. இயேசுவின் சித்தத்தை செய்ய நாம் தீவிரமாய் இருக்க வேண்டும், சில காலங்கள் பொறுமையாய் காத்திருங்கள், உங்களுக்கென்று ஒரு நேரம்- ஏற்றநேரம் நியமிக்கப்பட்டிருக்கிறது.
பிதா தன் மகனை மறக்காமல் உயர்த்தினது போல, சர்வத்துக்கும் அதிகாரியாகிய இயேசு நம்மையும் ஒரு நாள் ஏளனமாய் பார்த்த எல்லா ஜனங்களுக்கும் மேலாக உயர்த்தி ஆசீர்வதிப்பார். நம் தேவன் நம்மை கன்மலையில் உயர்த்தும் தெய்வம். ஜீவனுள்ள ஒரே மெய்யான தெய்வம், நம்மை கைவிடமாட்டார். ஏனெனில் அவர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து, அவரை நம்பி நம் வாழ்க்கையை ஒப்புகொடுத்து இந்த தேசத்தில் ஆசிர்வாதமாயிருப்போம் கர்த்தருக்கே மகிழமை தேவ கிருபை உங்களுடனிருப்பதாக!ஆமென்.
போதகர். சாம் அகஸ்டின்.
சிட்டி ஏ.ஜி.சபை, திருப்பூர்.
உள்ளத்தில் தைரியம் இருந்தால், அசாத்தியமான செயல்பாடுகளுக்கு நாம் உரிமை உடையவர்களாய் மாறுவோம். வாழ்க்கை பொழுதுகளை அர்த்தமாக்கி கொள்ள இந்த நாளை பயன்படுத்திடுவோம்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் பேராசிரியராக பணிபுரிந்தவர் ஸ்டீபன் ஹாக்கிங். இவர் ஒருமுறை நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் கஷ்டப்பட்டார். இவரால் இனி இயல்பாக ஆராய்ச்சி செய்ய முடியுமா? என ஏரளாமான கேள்விகள் முன் வைக்கப்பட்டன. அவருடைய நண்பர்பள் கொடுத்த தொடர் ஆதரவு, நவீன மருத்துவ சிகிச்சை காரணமாக வெகு விரைவிலே நல்ல இயல்வான நிலைக்கு திரும்பினார். ஸ்ட்ரிங் தியரி எனும் புதிய உண்மையை கண்டுபிடித்தார். இது இயற்பியல் துறையின் மாபெரும் கண்டுபிடிப்பாகும். உடலில் எவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும் மனதில் தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதித்திட இயலும்.
எந்தவொரு சூழலிலும் நம்பிக்கையையும், தைரியத்தையும் இழந்து விடாதீர்கள். நாம் முடிக்க வேண்டும் என்ற செயலை எவ்வளவு கஷ்டப்பட்டாலும் முடித்து விட வேண்டும் என்ற இயல்போடு செயல்படுங்கள். நம்மில் பலர் தங்களுக்குள்ளாகவே ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி கொண்டு வாழ்ந்து வருகின்றனர். தோல்வி மனப்பான்மையை நம்பில் இருந்து அகற்றுவதற்கான உறுதிபாட்டினை முன்னெடுத்து பயணம் செய்திடுங்கள். சரியான முயற்சியே சரியான குறிக்கோளை அடைவதற்கு உதவி செய்யும். சுயநலமற்ற ஈடுபாட்டு உணர்வோடு முன்னோக்கி பயணம் செய்திட வேண்டும்.
இறையருளின் காலமாகிய இத்தவக்காலத்தில் நமது ஈடுபாடும், அக்கறையும் எதன் மீது கட்டமைக்கப்படுகிறது என்பதை அடையாளம் கண்டிடுவோம். நமது செயல்பாடு நேர்மையாக இருப்பதற்கான வழிமுறைகளை உருவாக்கி கொண்டு பயணம் செய்வோம். ஒவ்வொரு நாளுமே ஏராளமான சவால்களும், சறுக்கல்களும், சேறுகளும் நம்மீது தூக்கி வீசப்படும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. இதை கண்டு அஞ்சி நடுக்கி விட்டோம் என்றால் வீழ்ச்சி என்பது உள்ளத்தில் இருந்தே ஆரம்பமாகும். ஒவ்வொரு நாளும் இயலும் என்பதையை நமது உதடுகள் அதிகமாய் உச்சரிக்க வேண்டும். அப்போது ஏராளமான வண்ணமயமான செயல்பாடுகள் நமக்குரியதாய் கிடைக்கும். உள்ளத்தில் தைரியம் இருந்தால், அசாத்தியமான செயல்பாடுகளுக்கு நாம் உரிமை உடையவர்களாய் மாறுவோம். வாழ்க்கை பொழுதுகளை அர்த்தமாக்கி கொள்ள இந்த நாளை பயன்படுத்திடுவோம்.
அருட்பணியாளர் குருசு கார்மல்
கோட்டார் மறை மாவட்டம்.
எந்தவொரு சூழலிலும் நம்பிக்கையையும், தைரியத்தையும் இழந்து விடாதீர்கள். நாம் முடிக்க வேண்டும் என்ற செயலை எவ்வளவு கஷ்டப்பட்டாலும் முடித்து விட வேண்டும் என்ற இயல்போடு செயல்படுங்கள். நம்மில் பலர் தங்களுக்குள்ளாகவே ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி கொண்டு வாழ்ந்து வருகின்றனர். தோல்வி மனப்பான்மையை நம்பில் இருந்து அகற்றுவதற்கான உறுதிபாட்டினை முன்னெடுத்து பயணம் செய்திடுங்கள். சரியான முயற்சியே சரியான குறிக்கோளை அடைவதற்கு உதவி செய்யும். சுயநலமற்ற ஈடுபாட்டு உணர்வோடு முன்னோக்கி பயணம் செய்திட வேண்டும்.
இறையருளின் காலமாகிய இத்தவக்காலத்தில் நமது ஈடுபாடும், அக்கறையும் எதன் மீது கட்டமைக்கப்படுகிறது என்பதை அடையாளம் கண்டிடுவோம். நமது செயல்பாடு நேர்மையாக இருப்பதற்கான வழிமுறைகளை உருவாக்கி கொண்டு பயணம் செய்வோம். ஒவ்வொரு நாளுமே ஏராளமான சவால்களும், சறுக்கல்களும், சேறுகளும் நம்மீது தூக்கி வீசப்படும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. இதை கண்டு அஞ்சி நடுக்கி விட்டோம் என்றால் வீழ்ச்சி என்பது உள்ளத்தில் இருந்தே ஆரம்பமாகும். ஒவ்வொரு நாளும் இயலும் என்பதையை நமது உதடுகள் அதிகமாய் உச்சரிக்க வேண்டும். அப்போது ஏராளமான வண்ணமயமான செயல்பாடுகள் நமக்குரியதாய் கிடைக்கும். உள்ளத்தில் தைரியம் இருந்தால், அசாத்தியமான செயல்பாடுகளுக்கு நாம் உரிமை உடையவர்களாய் மாறுவோம். வாழ்க்கை பொழுதுகளை அர்த்தமாக்கி கொள்ள இந்த நாளை பயன்படுத்திடுவோம்.
அருட்பணியாளர் குருசு கார்மல்
கோட்டார் மறை மாவட்டம்.






