என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக அலங்கரிக்கப்பட்ட ஆரோக்கிய மாதா திருத்தேரில் காட்சியளித்தார்.
    அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக அலங்கரிக்கப்பட்ட ஆரோக்கிய மாதா திருத்தேரில் காட்சியளித்தார்.

    தேர் திருவிழாவிற்கு அரியாங்குப்பம் பங்குத்தந்தை அந்தோணிரோச் தலைமை தாங்கினார். முன்னதாக புதுச்சேரி பல்நோக்கு சமூக அமைப்பு நிறுவனர் அருமைசெல்வம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஆயரின் கியூரியா செயலாளர் ஆரோக்கியதாஸ் கலந்துகொண்டார்.

    சிறப்பு அழைப்பாளராக அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி ஆரோக்கிய மாதாவை வணங்கினார். நோய் தொற்று காரணமாக தேர் வீதி உலா ரத்து செய்யப்பட்டது. அதனை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர தேர் ஆலயத்தின் முகப்பில் நிறுத்தி வைக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் நடைபெற்றது.
    திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தில் ஜெபமாலை, சிறப்புத்திருப்பலிகள் அனைத்தும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் இன்றி நடந்தது.
    தூத்துக்குடி எஸ்.எஸ்.மாணிக்கபுரத்தில் அனைத்து மக்களும் வழிபடும் வகையில் அன்னை வேளாங்கண்ணி மாதாவின் தங்கத்தேர் கெபி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தங்கத்தேர் கெபியின் திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் பங்கு மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்தவாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தில் ஜெபமாலை, சிறப்புத்திருப்பலிகள் அனைத்தும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் இன்றி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக அன்னை வேளாங்கண்ணி மாதாவின் தேர்ப்பவனி நேற்று முன்தினம் இரவு நடந்தது. மாதாவின் தேர்ப்பவனியானது பங்குமக்கள், பக்தர்கள் யாரும் இன்றி மிகவும் எளிமையாக நடந்தது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை தூய அன்னை வேளாங்கண்ணி மாதா அன்பிய மக்கள், தூய பூண்டிமாதா அன்பிய மக்கள், தங்கத்தேர் கெபித்திருவிழா கமிட்டியினர், பங்குமக்கள், எஸ்.எஸ்.மாணிக்கபுரம் பொதுமக்கள் மற்றும் இளைஞர் குழுவினர் செய்து இருந்தனர்.
    திருச்சி மாவட்ட வேளாங் கண்ணி என்று அழைக்கப் படும் வடுகர் பேட்டை ஆரோக்கிய மாதாகோயில் திருவிழா நடைபெற்றது. குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமிகலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினார்.
    திருச்சி மாவட்ட வேளாங் கண்ணி என்று அழைக்கப் படும் வடுகர் பேட்டை ஆரோக்கிய மாதாகோயில் திருவிழா நடைபெற்றது. குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமிகலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினார்.

    திருப்பலியில் வடுகர் பேட்டை புனித ஆரோக்கிய அன்னை திருத்தலபேராலய தங்கசாமி உதவி பங்கு தந்தை அருளப்பன் மற்றும் புள்ளம்பாடி மறைவட்ட முதன்மை குரு சூசை மாணி க்கம் விரகாலூர் பங்குத் தந்தை ஹென்றி புஷ்பராஜ் மற்றும் அருட்தந்தையர்கள் சந்தியாகு, இன்னாசி, தெரசா நாதன், செல்வராஜ் உள்பட பல்வேறு அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சப்பர பவனி நடைபெற்றது.

    தூய ஆரோக்கிய அன்னை ஆலய தேரோட்டத்தை கோவில் வளாகத்துக்குள் வைத்து பக்தர்கள் ஜெப வழிபாடு மற்றும் உப்பு, மிளகு மாலை அணிவித்து வழிபட்டு சென்றனர்.
    கயத்தாறில் தூய ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை மாலையில் சிறப்பு சொற்பொழிவு, ஆராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சொற்பொழிவு, நற்கருணை ஆராதனை ஆகியன நடைபெற்றது. நேற்று அதிகாலை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பங்குத்தந்தை சார்லஸ் அடிகளார், கயத்தாறு பங்குத்தந்தை வின்சென்ட் அடிகளார், விண்ணரசி தொழிற்பயிற்சி பள்ளி இயக்குனர் ஜெயபாலன் ஆகியோர் சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.

    தூய ஆரோக்கிய அன்னை ஆலய தேரோட்டத்தை கோவில் வளாகத்துக்குள் வைத்து பக்தர்கள் ஜெப வழிபாடு மற்றும் உப்பு, மிளகு மாலை அணிவித்து வழிபட்டு சென்றனர். பின்னர் ஆலய வளாகத்துக்குள் தேர் பவனி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியார் செய்திருந்தனர்.
    பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை மரியாள் பிறப்பு பெருவிழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் குறைந்த அளவிலான பக்தர்களே கலந்து கொண்டனர்.
    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் அன்னை மரியாள் பிறப்பு பெருவிழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

    அதன்படி பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை மரியாள் பிறப்பு பெருவிழா பக்தர்கள் இன்றி தொடங்கியது. அன்னை மரியாளின் பிறப்பு நாளாக கருதப்படும் நேற்று மாலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் குறைந்த அளவிலான பக்தர்களே கலந்து கொண்டனர்.

    கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி, பூண்டி மாதா பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குனர் சாம்சன், உதவி பங்கு தந்தையர்கள் இனிகோ, ஜான்சன், ஆன்மிக தந்தை அருளானந்தம் ஆகியோர் கலந்துகொண்டு திருப்பலி நிறைவேற்றினர்.

    திருப்பலிக்கு பிறகு வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் மாதாவின் உருவம் வைக்கப்பட்டு பேராலய வளாகத்தில் வலம் வந்தது. தேர்பவனியை கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி புனிதம் செய்து ெதாடங்கி வைத்தார். இன்று(வியாழக்கிழமை) பூண்டி மாதா பேராலயத்தில் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடைகிறது.
    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா நிறைவடைந்ததையடுத்து அன்னையின் கொடி இறக்கப்பட்டது. இதில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. உலக பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் 29-ந் தேதி பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் வருவதை தடுக்க வேளாங்கண்ணி பகுதியை சுற்றி உள்ள 19 வழிகளும் அடைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்று முன்தினம் பக்தர்கள் இன்றி நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    காலையில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இரவு 7 மணிக்கு பங்கு தந்தை அற்புதராஜ் தலைமையில் நன்றி அறிவிப்பு ஜெபம் செய்து அன்னையின் கொடி இறக்கப்பட்டது. இதில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

    பின்னர் பேராலயத்தில் மாதா மன்றாட்டு திவ்ய நற்கருணை ஆசீர், நன்றி அறிவிப்பும், தமிழில் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது. விழாவில் பேராலய அதிபர் பிரபாகர், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா அறிவிப்பு விழாவையொட்டி மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் திருப்பலி நடந்தது.
    முளகுமூடு தூய மரியன்னை ஆலயத்தை போப் ஆண்டவர் பிரான்சிஸ் பசிலிக்காவாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். இதையொட்டி பசிலிக்கா அறிவிப்பு விழா முளகுமூட்டில் தமிழக அரசின் வழிகாட்டுதல்படி நேற்று முன்தினம் எளிமையாக நடந்தது. மதுரை பேராயரும், குழித்துறை மறைமாவட்ட பொறுப்பாளருமான அந்தோணி பாப்புசாமி தலைமை தாங்கினார்.

    பசிலிக்கா கொடியை முளகுமூட்டின் முதல் பங்குதந்தை விக்டர் பணியாற்றிய குளச்சல் காணிக்கை மாதா ஆலயத்தில் இருந்து அருட்பணியாளர்களால் கொண்டு வரப்பட்டது.

    தொடர்ந்து குழித்துறை மறைமாவட்ட முதல் ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் பசிலிக்கா கொடியை ஏற்றி வைத்தார். பசிலிக்காவின் அறிவிப்பு ஆணை மற்றும் பசிலிக்காவின் அடையாள சின்னமான ஆம்பூரியம் ஆகியவற்றை மறைமாவட்ட நிர்வாகிகள், வட்டார முதல்வர் மற்றும் பங்குத்தந்தை இணைந்து பீடத்திற்கு கொண்டு வந்தனர்.

    லத்தீன் மொழியில் பசிலிக்கா அறிவிப்பாணையை கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் படித்தார். அறிவிப்பாணையின் தமிழ் மொழிப்பெயர்ப்பை மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் படித்தார்.

    பசிலிக்காவின் அடையாள சின்னமான ஆம்பூரியத்தை கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை அர்ச்சித்து வைத்தார்கள்.

    தொடர்ந்து மதுரை பேராயரும், குழித்துறை மறைமாவட்ட பொறுப்பாளருமான அந்தோணி பாப்புசாமி தலைமையில் திருப்பலி நடந்தது. இதில் ஆயர்கள், அருட்பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பலி நிறைவில் முல்லை தொடர்பு இதழை குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் அருட்பணியாளர் யேசுரெத்தினம் வெளியிட்டார். முளகுமூடு அன்னையின் புகழ் பாடும் நிறைமதியே என்ற இசை சி.டி.யை பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் ஜூடு பால் ராஜ் வெளியிட்டார்.

    முளகுமூட்டின் முதல் பங்கு தந்தை விக்டர் குறித்த புத்தகத்தை தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் வெளியிட்டார். விழாவில் குழித்துறை மறைமாவட்ட செயலாளர் அருட்பணியாளர் ரசல் ராஜ், பொருளாளர் அருட்பணியாளர் அகஸ்டின், முளகுமூடு வட்டார முதல்வர் ராஜேந்திரன், முன்னாள் பங்குத்தந்தை வில்லியம் மற்றும் பல அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை பசிலிக்கா பங்குத்தந்தை டோமினிக் கடாட்ச தாஸ், இணை பங்குத்தந்தை தாமஸ், அருட்பணியாளர் ஜெரால்டு ஜஸ்டின், பங்குப்பேரவை துணை தலைவர் வின்சென்ட் ராஜ், செயலாளர் விஜிமோன் மணி, துணை செயலாளர் ஹெலன் மேரி, பொருளாளர் விஜிகலா, பங்குப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் பசிலிக்கா உருவாக்கல் குழு உறுப்பினர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    விழாவில் நேற்று காலை முதல் திருவிருந்து திருப்பலி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அவர்கள் தலைமையில் நடந்தது. மாலை திருப்பலி குழித்துறை மறைமாவட்ட முதல் ஆயர் ஜெரோம் தாஸ் வறுவேல் தலைமையில் நடந்தது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக தேர்ப்பவனி நடைபெறவில்லை. ஆனால் இரண்டு தேர்களும் அலங்கரிக்கப்பட்டு ஆலய வளாகத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
    முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள பார்பரம்மாள்புரம் புனித பார்பராள் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேவமாதா மற்றும் புனித பார்பராள் தேர்பவனி நடைபெற்றது.
    முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள பார்பரம்மாள்புரம் புனித பார்பராள் ஆலய திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் பங்குதந்தை விக்டர் தலைமையில் திருவிழா மாலை சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

    இரவு தேவமாதா மற்றும் புனித பார்பராள் தேர்பவனி நடைபெற்றது. விழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். திருவிழா நிகழ்ச்சிகளை அரசு வழிகாட்டுதல்படி பங்குதந்தை டக்ளஸ் செய்து இருந்தார்.
    வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் வருவதை தடுக்கும் வகையில் பக்தர்கள் வரும் 8 வழிகளும் அடைக்கப்பட்டு இந்த இடங்களில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
    வேளாங்கண்ணி

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் இந்தப் பேராலயம் திகழ்கிறது.

    உலக பிரசித்தி பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டுப்பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி வரையில் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    இந்த விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான பெருவிழா கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி பக்தர்கள் இன்றி கடந்த மாதம்(ஆகஸ்டு) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் வருவதை தடுக்கும் வகையில் பக்தர்கள் வரும் 8 வழிகளும் அடைக்கப்பட்டு இந்த இடங்களில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள போலீசார், பக்தர்கள் யாரேனும் கோவிலுக்கு வருகிறார்களா? என்பதை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    விழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி நேற்று நடந்தது. வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பேராலயம் முன்பு புனித மிக்கேல் சம்மனசு தேரும், அதனைத்தொடர்ந்து செபஸ்தியார், அந்தோணியார், சூசையப்பர் தேரும் கடைசியாக ஆரோக்கிய மாதா சொரூபம் அடங்கிய பெரிய தேரும் சென்றது. தேர்பவனி ஆலய வளாகத்தை சுற்றி வந்து தேர்கொட்டகையை அடைந்தது.

    முன்னதாக தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து தேர் பவனியை தொடங்கி வைத்தார். இதில் பேராலய அதிபர் பிரபாகர், பங்குதந்தை அற்புதராஜ், பொருளாளர் யாகப்பா ராஜரெத்தினம், நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் அருட்சகோதரர்கள், சகோதரிகள் கலந்து கொண்டனர். இந்த தேர் பவனியில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

    இன்று(புதன்கிழமை) அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. காலையில் தஞ்சை மறைமாவட்ட பேராயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

    இரவு 7 மணிக்கு அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு பேராலயத்தில் மாதா மன்றாட்டு திவ்ய நற்கருணை ஆசீர், நன்றி அறிவிப்பு நடக்கிறது. தொடர்ந்து தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

    இந்த திருவிழா நாட்களில் பொது மக்களும், பக்தர்களும் பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளுக்கு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
    பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய தேர் திருவிழாவில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் வருடாந்திர திருவிழா கடந்த 29-ந் தேதி தொடங்கியது. 8-ந் தேதி வரை விழா நடைபெற உள்ளதால் கீழ்கண்ட சில முக்கிய வழிகாட்டுதல்களை கடைபிடிக்க கோரப்படுகிறது.

    இன்று (7-ந்தேதி) தேரோட்டம் நடைபெறுவதன் காரணமாக இந்த ஆண்டு பொது மக்களுக்கும், பக்தர்களுக்கும் அனுமதி இல்லை. தேரோட்டம் நிகழ்ச்சிக்கு பொது மக்கள் வருவதை தவிர்க்க கோரப்படுகிறது. பொது மக்களும், பக்தர்களும் தேரோட்ட நிகழ்ச்சியை தொலைக்காட்சி மற்றும் நேரடி சமூக வலைதளங்கள் மூலம் காண அறிவுறுத்தப்படுகிறது.

    பொதுமக்கள் பெசன்ட் நகர் கடற்கரை பகுதிக்கு வாகனத்துடன் வர வேண்டாம் எனவும் போலீசுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் கோரப்படுகிறது.

    பெசன்ட் நகரை சுற்றியுள்ள வர்த்தக வளாகங்கள், கடைகள் செயல்பட 8-ந் தேதி வரை அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த திருவிழா நாட்களில் பொது மக்களும், பக்தர்களும் பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளுக்கு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய "பசிலிக்கா" என்ற அந்தஸ்து பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் கட்டிட அழகு காண்போரை பிரமிக்க செய்வதாகும்.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் இந்த பேராலயம் திகழ்கிறது.

    கீழை நாடுகளின்" லூர்து நகர்" என்ற பெருமையுடன் வேளாங்கண்ணி அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய "பசிலிக்கா" என்ற அந்தஸ்து பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் கட்டிட அழகு காண்போரை பிரமிக்க செய்வதாகும்.

    வங்க கடலோரத்தில் இந்த பேராலயம் அமைந்திருப்பது இதன் சிறப்பாகும். இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ஆலயத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து மாதாவை தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இந்த பேராலய ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.

    ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு பெருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. அதன்படி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம் கடந்த 29-ந் தேதி பக்தர்கள் இன்றி நடந்தது.

    ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு ஆலய வளாகத்திற்குள்ளேயே நடக்கிறது. முன்னதாக காலையில் தமிழ், மராத்தி, கொங்கணி, மலையாளம், ஆங்கிலம், இந்தி மொழிகளில் திருப்பலி நடைபெறுகிறது. மாலை கன்னடத்தில் திருப்பலி நடைபெறுகிறது.

    அதனைதொடர்ந்து மறையுரை, நற்கருணை ஆசீருடன் பெரிய தேர் பவனியானது ஆலய வளாகத்திள்குள்ளேயே பக்தர்கள் இன்றி நடக்கிறது.

    நாளை(8-ந்தேதி) அன்னையின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. காலை தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. இரவு 7 மணிக்கு அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு பேராலயத்தில் மாதா மன்றாட்டு திவ்ய நற்கருணை ஆசீர், நன்றி அறிவிப்பு நடைபெறுகிறது. அதனைதொடர்ந்து தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. இதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    முளகுமூடு தூய மரியன்னை ஆலயம் பசிலிக்காவாக அறிவிப்பு விழா இன்று நடக்கிறது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
    முளகுமூடு தூய மரியன்னை ஆலயத்தை, போப் ஆண்டவர் பிரான்சிஸ் கடந்த 9-6-2020 அன்று தமிழகத்தின் 7-வது பசிலிக்காவாக உயர்த்தினார். இதற்கான அறிவிப்பு விழா கடந்த 20-4-2021 அன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக விழா ஒத்தி வைக்கப்பட்டது.

    தற்பொழுது பசிலிக்கா அறிவிப்பு விழா அரசின் வழிகாட்டுதல்படி மிக எளிமையாக இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது.

    நிகழ்ச்சிக்கு மதுரை பேராயரும், குழித்துறை மறைமாவட்ட பொறுப்பாளருமான அந்தோணி பாப்புசாமி தலைமை தாங்குகிறார்.

    குளச்சல் தூய காணிக்கை அன்னை ஆலய பங்குதந்தை செல்வன் மற்றும் பங்குமக்கள் சார்பில் பசிலிக்கா கொடி சமர்ப்பிக்கப்படும். தொடர்ந்து கொடியேற்றம் நடைபெறும். கொடியை குழித்துறை மறைமாவட்ட முதல் ஆயர் ஜெரோம் தாஸ் ஏற்றி வைக்கிறார்.

    தொடர்ந்து கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை லத்தீன் மொழியில் பசிலிக்கா அறிவிப்பை வெளியிடுகிறார். அந்த அறிவிப்பை மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தமிழில் அறிவிக்கிறார்.

    பசிலிக்கா லோகோவை மறைமாவட்ட பொருளாளர் அகஸ்டின் மற்றும் முளகுமூடு வட்டாரம் முதல்வர் மரிய ராஜேந்திரன் ஆகியோர் வெளியிடுகிறார்கள். லோகோவை பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் அர்ச்சிக்கிறார்.

    முளகுமூடு முதல் பங்குத்தந்தை விக்டர் குறித்த புத்தகத்தை தக்கலை மறைமாவட்ட ஆயர் ராஜேந்திரன் வெளியிடுகிறார். குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் ஏசு ரத்தினம் மாதா பாடல் சி.டி.யை வெளியிடுகிறார். பசிலிக்கா சிறப்பிதழை அருட்பணியாளர் ரசல்ராஜ் வெளியிடுகிறார்.

    தொடர்ந்து 9-ந் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. எனவே பொதுமக்கள் யூ-டியூப் சேனலில் பார்த்து கொள்ளலாம்.

    விழா ஏற்பாடுகளை பசிலிக்கா அதிபர் டோமினிக் கடாட்சதாஸ், இணை பங்குதந்தை தாமஸ், பங்கு பேரவை துணைத் தலைவர் வின்சென்ட் ராஜ், செயலாளர் விஜி மோன்மணி, துணைச் செயலாளர் ஹெலன் மேரி, பொருளாளர் விஜி கலா மற்றும் அருட்பணி பேரவையினர் செய்துள்ளனர்.
    ×