search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூய மரியன்னை"

    • அர்ச்சிப்பு விழா இன்று பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது.
    • அர்ச்சிப்பு விழாவை தொடர்ந்து 5 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

    களியக்காவிளை அருகே உள்ள அன்னை நகர் பல்லுக்குழியில் புதிதாக புனித மரியன்னை மலங்கரை கத்தோலிக்க ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. மார்த்தாண்டம் மலங்கரை கத்தோலிக்க மறை மாவட்டத்தின் களியக்காவிளை மறை மாவட்டத்திற்கு உட்பட்ட இந்த புதிய ஆலயத்தின் அர்ச்சிப்பு விழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது.

    விழாவில் மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் கலந்து கொண்டு ஆலயத்தை அர்ச்சித்து திறந்து வைத்து நன்றி திருப்பலி நிறைவேற்றுகிறார். அர்ச்சிப்பு விழாவை தொடர்ந்து 5 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

    விழா நாட்களில் முதல் திருவிருந்து வழங்குதல், நற்செய்தி கூட்டம், மறைக்கல்வி மற்றும் பக்த இயக்கங்களின் ஆண்டுவிழா போன்றவை நடைபெறும். 29-ந் தேதி ஆடம்பர ஜெபமாலை பவனி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை அருள்தாஸ், இணை பங்குதந்தை வில்பின் விஜி மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்கள், இறைமக்கள் செய்துள்ளனர்.

    • தூய மரியன்னை ஆலயத்தில் ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது.
    • நற்கருணை ஆராதனை, கொடி இறக்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மேல் கூடலூரில் தூய மரியன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தேர்த்திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடி பவனி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் ஆலய வளாகத்தில் கொடியேற்றப்பட்டது. மேலும் திருப்பலி, நற்கருணை ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து 8 நாட்கள் திருவிழா நடைபெற்றது.

    ஒவ்வொரு நாளும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, சிறப்பு பிரார்த்தனைகள் நடந்து வந்தது. 8-வது நாளான நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு ஊட்டி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது. பின்னர் மதியம் 1 மணிக்கு அன்பின் விருந்து நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடைபெற்றது.

    இரவு 8 மணிக்கு தூய மரியன்னை ஆலயத்தில் ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. ஆலயத்தில் இருந்து புறப்பட்டு நடு கூடலூர், ராஜகோபாலபுரம், பழைய மற்றும் புதிய பஸ் நிலையத்தை அடைந்தது. இதேபோல் தேருக்கு முன்பாக ஏராளமான கிறிஸ்தவர்கள் பாடல்களை பாடியவாறு பவனியாக சென்றனர். அலங்கரிக்கப்பட்ட தேரில் மரியன்னை சொரூபம் வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் முக்கிய சாலைகள் வழியாக தேர்பவனி வந்து இரவு 11 மணிக்கு ஆலயத்தை அடைந்தது.

    இதைத்தொடர்ந்து நற்கருணை ஆராதனை, கொடி இறக்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பங்கு தந்தைகள் வின்சென்ட், சார்லஸ் பாபு, ஹென்றி ராபர்ட் உள்பட மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர். விழாவையொட்டி ஆலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை பங்கு பேரவை செய்திருந்தது.

    • விழா நாட்களில் தினமும் திருப்பலி நடைபெறுகிறது.
    • இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.

    முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தக்கலை மறை மாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்தார்.

    நிகழ்ச்சியில் குழித்துறை மறை மாவட்ட பொருளாளர் அகஸ்டின், முளகுமூடு வட்டார முதல்வர் மரிய ராஜேந்திரன், மாத்திரவிளை வட்டார முதல்வர் மரிய வின்சென்ட், நாஞ்சில் பால் இயக்குனர் ஜெரால்டு ஜெஸ்டின், பசலிக்கா அதிபர் டோமினிக் எம்.கடாட்சதாஸ், அருட்பணியாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது.

    திருப்பலியில் தமிழ் மைய இயக்குனர் ஜெகத் கஸ்பர்ராஜ் மறையுரையாற்றினார். நிகழ்ச்சியில் முளகுமூடு பஞ்சாயத்து தலைவி ஜெனுஷா ஆர்.ஜோன் மற்றும் அருள் சகோதரிகள், அருட்பணியாளர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • திருவிழா இன்று முதல் 11-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • 11-ந்தேதி அன்னையின் அலங்காரத் தேர் பவனி நடைபெறுகிறது.

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா ஆலயமும் ஒன்றாகும். இந்த ஆலயத்தின் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 11-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    இன்று மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது இதற்கு தக்கலை மறை மாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமை தாங்கி, கொடியை ஏற்றி வைக்கிறார். பசிலிக்கா அதிபர் டோமினிக் எம்.கடாட்சதாஸ் முன்னிலை வகிக்கிறார். அதைத்தொடர்ந்து ஆயர் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. தமிழ் மைய இயக்குனர் ஜெகத் கஸ்பார் ராஜ் மறையுரையாற்றுகிறார்.

    4-ந்தேதி காலை திருப்பலியும் அதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு அன்பு விருந்து நடைபெறுகிறது. 7-ந்தேதி இரவு 7 மணிக்கு சகாய மாதா நவநாள் தேர்பவனி நடக்கிறது. 8-ந்தேதி மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு குழித்துறை மறை மாவட்ட தொடர்பாளர் இயேசுரத்தினம் தலைமை தாங்குகிறார்.

    9-ந்தேதி காலை திருமுழுக்கு திருப்பலி நடைபெறுகிறது. இதில் அருட்பணியாளர் ஜோஸ்ராபின்சன் மறையுரையாற்றுகிறார். 10-ந்தேதி முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு குழித்துறை மறை மாவட்ட பொறுப்பு ஆயர் ஆன்றனி பாப்புசாமி தலைமை தாங்குகிறார். மாலை 6 மணி திருப்பலிக்கு மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமை தாங்குகிறார். மனித உரிமை வக்கீல் அருட்பணியாளர் .எம்.சி. ராஜன் மறையுரையாற்றுகிறார்.

    அதைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு அன்னையின் அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது 11-ந்தேதி காலை 9 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலிக்கு குழித்துறை மறை மாவட்ட பொருளாளர் அகஸ்டின் தலைமை தாங்குகிறார். நாஞ்சில் பால் இயக்குனர் அருட்பணியாளர் ஜெரால்டு ஜஸ்டின் மறையுரையாற்றுகிறார் 11 மணிக்கு மற்றும் இரவு 8 மணிக்கு அன்னையின் அலங்காரத் தேர் பவனி நடைபெறுகிறது.

    திருவிழா ஏற்பாடுகளை பசிலிக்கா அதிபர் டோமினிக் எம் கடாட்சதாஸ், இணை அதிபர் ஜெயக்குமார், பங்கு பேரவை துணைத் தலைவர் ஆண்டனி வால்ஜின்,

    செயலாளர் புஷ்பலதா, துணை செயலாளர் பெலிக்ஸ் ஆண்டனி ஜார்ஜ், பொருளாளர் ஏசுதாஸ் மற்றும் பங்கு மக்கள், இல்ல அருட் பணியாளர்கள் பக்த சபைகள் அருட் சகோதரிகள் இணைந்து செய்து வருகிறார்கள்.

    ×