என் மலர்
கிறித்தவம்
தென்காசியில் புனிதமிக்கேல் அதிதூதர் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் திருத்தல பெருவிழா நடக்கும். இந்த ஆண்டு திருவிழா நேற்று ஆலய வளாகத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினசரி சிறப்பு திருப்பலிகள் ஆராதானைகள் நடைபெறும். 27-ந் தேதி 8-ம் நாள் நற்கருணை பவனியும் 28-ந் தேதி 9-ம் நாள் அதிதூதர் தேர்பவனி விழாவும், 29-ந் தேதி 10ம் நாள் திருத்தல பெருவிழா நடைபெறுகிறது.
அன்று காலை 7 மணி திருப்பலியில் பாளை மறை மாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ், புனலூர் மறை மாவட்டம் முதன்மை குரு வின்சென்டிக் ரூஸ் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள். 30-ந் தேதி 11 ம் திருநாள் கொடியிறக்கத்துடன் நிறைவுபெறும்.
திருவிழாவில் தமிழ்நாடு மற்றும் கேராளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கிறார்கள். அவர்களுக்காக சிறப்பு பிராத்தனைகளும் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை திருத்தல மற்றும் வட்டார அதிபர் சகாய சின்னப்பன் இஉதவி பங்குதந்தை சுரேஷ் அமலநிலை அருட் சகோதரிகள் பங்கு மேய்ப்பு பணிபேரவையினர் உட்பட சபையினர் செய்து வருகிறார்கள்.
திருவிவிலியத்தின் புதிய ஏற்பாடு நூலில் ""உம்மோடு பேசவும் இந்த நற்செய்தியை உமக்கு அறிவிக்கவும் அனுப்பப்பட்டேன்(லூக் 1:19)'' என்று வானதூதர் அன்னை மரியாளிடம் கூறுகின்றார். அதன் பிறகு பத்து மாதங்கள் கடந்த பின்பு இடையர்களுக்கு ""எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன் (லூக்கா 2:10)'' என்றும் கூறுகின்றார். மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளிலும் "நற்செய்தி' என்ற "சொல்' கையாளப்பட்டுள்ளது. அச்சொல் "இயேசு' என்ற இறைமகனைப் பற்றியதே ஆகும்.
நற்செய்தி இயேசுவைப் பற்றியதாகவே இருந்தாலும் ஏன் அறிவிக்கப்பட வேண்டும்? நாம் அனைவரும் பாவத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே. நாம் அனைவரும் பாவிகளா? அதற்கு... ""பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கின்றோம் (1 யோவான் 1:8)'' என்று திருத்தூதர் யோவான் விடையளிக்கின்றார்.
மனிதர்களாகிய நாம் நன்மைகளைச் செய்து கடவுளின் மக்களாக வாழ வேண்டியவர்கள். மாறாக நாம் பல வேளைகளில் தீமைக்கு பதில் தீமை செய்து அவருக்கு எதிராளியாகின்றோம். இறைமகன் இயேசு ""உங்கள் உள்ளங்கள் குடிவெறியாலும், களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்வுக்குரிய கவலைகளினாலும் மந்தம் அடையாதவாறு காத்துக் கொள்ளுங்கள்( லூக் 21:34)'' என்று நம்மை எச்சரிக்கிறார். அவ்வாறு சீரழியாமல் இருக்கவே மண்ணுலக வாழ்வின் சாட்சியாக இறைவனின் பிள்ளையாக ஒரு மனிதனாகி "பாவம் செய்யாது' இயேசு வாழ்ந்து காட்டினார்.
ஏனெனில், ""தீயோரை எச்சரிக்காவிட்டால் அவர்கள் தம் குற்றப் பழியோடு சாவர் (எசே 3:18)'' என்று இறை வாக்கினர் எசேக்கியர் அழுத்தமாக பதிவு செய்கின்றார். அந்த எச்சரிக்கையின் உருவம்தான் இயேசு கிறிஸ்து என்ற நற்செய்தி. அவர் நம் பாவங்களை களைய அவற்றிலிருந்து மீட்க தந்தையினால் அனுப்பப்பட்டவர்.
"கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள் வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார். இந்த மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்பு பெறுகிறோம் (எபே 1:7)''. ஆம்! ""உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருந்தாலும் அதை நான் உறைபனிபோல் வெண்மையாக்குவேன்(எசா1:18)'' என்று இறைவாக்கினர் எசாயா மூலமாகவும் உறுதி அளித்திருந்தார்.
எபேசியருக்கு எழுதிய தூய பவுலடியாரும், எசாயாவும் நமது பாவம் இரத்தப் பழியாக (சிவப்பாக) இருந்தாலும் அவற்றை மன்னிப்பின் மூலம் உறைபனிபோல் வெண்மையாக்குபவர் நமது மீட்பின் கடவுள் என்று வாக்குறுதி அளிக்கின்றார்கள். மேலும் ""அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார் (திரு.பா. 103:3)'' அதற்கு ""நான் உன் மீது சினம் கொள்ள மாட்டேன்; உன் குற்றத்தை நீ ஏற்றுக்கொண்டாலே போதும்(எரே 3:12)'' ஏனெனில் ""மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணகத்தில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் (லூக் 15:7)'' என்று நமக்காக தந்தையாம் கடவுளிடம் பரிந்து பேசுகின்ற இயேசு உறுதியாகக் கூறுகின்றார்.
மேலும்,""கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் குடிகொள்வதாக (கொலோ 3:16)''என்று கூறும் திருத்தூதர் பவுலடியாரின் இறைவாக்கிற்கு செவிமடுப்போம். இறைவனின் மன்னிப்பைப் பெறுவோம்.
‘ரபீ... தாங்கள் என்னுடைய இல்லத்துக்கு வர வேண்டும்’ சொன்னவனுடைய கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
‘என்ன ஆயிற்று?’ - இயேசு அவனைத் தேற்றினார்.
‘என்னுடைய ஒரே மகள் சாகும் தருவாயில் இருக்கிறாள். பன்னிரண்டு வயது சிறுமி அவள். அவளை கொடிய நோய் பிடித்துவிட்டது’, அவர் மீண்டும் அழுதார்.
‘அழவேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை வைத்தால் அதிசயங்களைக் காண்பது எளிது’ என்ற இயேசு தனது சீடர்களுடன் அவருடைய வீட்டுக்கு விரைந்தார்.
கூட்டத்தினர் என்ன நடக்கப் போகிறது என்பதைக் காணும் ஆவலில் அவரை நெருக்கியடித்துக் கொண்டு அவருக்குப் பின்னாலும் முன்னாலும் செல்லத் தொடங்கினார்கள்.
அந்தக் கூட்டத்தில் பன்னிரண்டு ஆண்டுகளாய் ரத்தப்போக்கினால் வருந்திக் கொண்டிருந்த ஒரு பெண்ணும் இருந்தாள். அவள் தன்னுடைய சொத்தை எல்லாம் செலவழித்து மருத்துவம் பார்த்தும் ஒரு பயனும் இல்லாத கவலையில் இயேசுவைக் காண வந்திருந்தவள்.
‘இயேசுவின் ஆடையின் விளிம்பைத் தொட்டால் கூட போதும் நலமடைவேன்’ என்று அவளுடைய மனம் சொல்லிக் கொண்டே இருந்தது. ஆனால் கூட்டத்தினர் இயேசுவை நெருக்கியடித்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள்.
அவளும் கூட்டத்தினரிடையே புகுந்து, புகுந்து இயேசுவின் அருகே சென்றாள். இயேசுவின் பின்னாலிருந்து அவருடைய ஆடையின் விளிம்பைத் தொட்டாள்.
ஆச்சரியம்! அவளுடைய ரத்தப் போக்கு சட்டென்று நின்றது.
இயேசு நின்றார்.
‘என்னைத் தொட்டது யார்?’ என்று கேட்டார்.
இயேசுவின் கேள்வி மக்களையும், சீடர்களையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. ‘இயேசுவே! இதோ எல்லா மக்களும் உம்மைத் தொட்டுக் கொண்டு தான் வருகிறார்கள். பலர் நெருக்கியடிக்கிறார்கள். என்னைத் தொட்டவர் யார் என்று கேட்கிறீரே?’ - சீடர்கள் கேட்டார்கள்.
‘இல்லை. என்னை யாரோ தொட்டார்கள். என்னிடமிருந்து வல்லமை வெளியேறியதை நான் உணர்ந்தேன்’ - இயேசு சொன்னார்.
அந்தப் பெண் இயேசுவுக்கு முன்னால் வந்து விழுந்தாள்.
‘ஆண்டவரே... என்னை மன்னியும். உம் ஆடையின் விளிம்பைத் தொட்டது நான் தான்’.
‘ஏன் என்னைத் தொட்டாய்?’
‘ஆண்டவரே... பன்னிரண்டு ஆண்டுகளாய் ரத்தப் போக்கு நோயினால் வருந்திக் கொண்டிருந்தேன். அதனால் தான் உம்முடைய ஆடையைத் தொட்டு சுகமடைந்தேன்’ - அவள் சொல்லச் சொல்ல கூட்டத்தினர் வியந்தார்கள்.
‘உன் நம்பிக்கை உன்னை நலமாக்கியது. அமைதியுடன் போ’ - இயேசு சொன்னார்.
‘இயேசுவே இது எப்படி? எல்லோரும் தான் உம்மைத் தொடுகிறார்கள். ஒருவர் மட்டும் நலமடைகிறாரே?’ - என்று சீடர்கள் கேட்டனர்.
‘முழுமையான நம்பிக்கை வைத்தால் எதுவும் சாத்தியமாகும். நம்பிக்கை இல்லாதவருக்கு அதிசயங்கள் நிகழாது’ - இயேசு சொன்னார்.
இயேசு பேசிக்கொண்டே பயணத்தைத் தொடர்ந்தார். அப்போது தொழுகைக் கூடத் தலைவர் யாயிரின் வீட்டிலிருந்து ஒருவர் ஓடி வந்தார்.
‘ஐயா...’ அவன் யாயிரை அழைத்தான்.
யாயிர் பதற்றத்துடன் அவனைப் பார்த்தார்.
‘துக்கமான செய்தி. உமது மகள் இறந்து விட்டாள். இனிமேல் போதகரை தொந்தரவு செய்யவேண்டாம். வாரும், இறுதிச் சடங்குகள் தொடங்கிவிட்டன’ என்றார்.
யாயிர் உடைந்துபோனார். ‘மகளே...’ என்று அலறினார்.
இயேசு அவரிடம், ‘அஞ்சாதீர். நம்பிக்கையோடு இரும். உம் மகள் பிழைப்பாள்’ என்றார்.
வீட்டுக்கு வந்ததும் எங்கும் அழுகுரல்கள். சிறுமியின் மரணத்துக்காக உறவினர்கள் அனைவரும் கண்ணீர் விட்டுக் கதறி அழுது துடித்துக் கொண்டிருந்தார்கள்.
இயேசு அவர்களிடம், ‘அழாதீர்கள். சிறுமி சாகவில்லை. தூங்குகிறாள்’ என்றார்.
‘சிறுமி சாகவில்லையா? தூங்குகிறாளா? எங்களுக்கென்ன பைத்தியமா? தூங்கும் சிறுமியை செத்துவிட்டாள் என்று சொல்லி ஒப்பாரி வைக்க?. இவருக்கு புத்தி பேதலித்து விட்டதோ’- மக்கள் இயேசுவை ஏளனமாய்ப் பார்த்தார்கள்.
இயேசு எதையும் காதில் வாங்கவில்லை. நேராக சிறுமியின் உடல் கிடத்தப்பட்டிருந்த இடத்துக்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து ‘சிறுமியே எழுந்திரு’ என்றார்.
சிறுமி உயிருடன் எழுந்தாள்.
‘இவளுக்கு உணவு கொடுங்கள்’ - இயேசு சொன்னார். சிறுமியின் பெற்றோர் ஆனந்தத்தில் மலைத்துப் போய் நின்றிருந்தார்கள்.
‘இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்’ என்று அவர்களிடம் சொன்னார் இயேசு. மக்கள் கூட்டம் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தது.
அசைக்க முடியாத விசுவாசம் இயேசுவின் மீது வைத்தால், நம் வாழ்வில் அதிசயங்கள் நிச்சயம் நிகழும் என்பதை இந்த நிகழ்ச்சிகள் எடுத்துக்கூறுகின்றன.
இந்த ஆண்டு மலை மாதா திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை 11.30 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருவிழா தொடக்க நாளான நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த திரளான மக்கள் மாதாவின் ஆசியை பெற்று சென்றனர்.
தொடர்ந்து திருவிழா வரும் 18-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது. இதில், இன்று(திங்கட்கிழமை) நோயுற்றோர் மற்றும் வயதானவர்களுக்கான சிறப்பு திருப்பலி காலை 10.45 மணிக்கு நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) கொங்கனிலும், 14-ந்தேதி மராத்தியிலும், 15-ந்தேதி தமிழிலும், 16-ந்தேதி மலையாளத்திலும், 17-ந்தேதி குஜராத்தியிலும் திருப்பலி காலை 11.30 மணிக்கு நடக்கிறது. 18-ந்தேதி காலை 11.30 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெறுகிறது.
திருவிழா நடைபெறும் அனைத்து நாட்களிலும் பாந்திரா ரெயில்நிலையம் மேற்கு பகுதியில் இருந்து மலை மாதா கோவிலுக்கு காலை, மாலை நேரங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.






