என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பாவத்திலிருந்தும் அதன் தண்டனையிலிருந்தும் தப்புவதற்கு ஏதாவது வழி உண்டா?
    X

    பாவத்திலிருந்தும் அதன் தண்டனையிலிருந்தும் தப்புவதற்கு ஏதாவது வழி உண்டா?

    பாவத்திலிருந்தும் அதன் தண்டனையிலிருந்தும் தப்புவதற்கு வழிகளைக் கண்டு பிடிக்க மக்கள் முயற்சி செய்து வந்திருக்கின்றனர்.
    இதற்கு நாமே கண்டு பிடிக்கக்கூடிய வழி எதுவும் இல்லை. காலங்காலமாக தப்பும் வழிகளைக் கண்டு பிடிக்க மக்கள் முயற்சி செய்து வந்திருக்கின்றனர்.

    1. சிலர் தங்கள் தேவர்களை உண்மையுடன் வழிபட்டு வந்திருக்கின்றனர்.

    2. சிலர் பாவம் செய்வதை விட்டுவிட்டு நல்லவர்கள் ஆக முயற்சி செய்திருக்கின்றனர்.

    3. எல்லா மனிதரும் பாவிகளாய் இருக்கிறபடியினால் பாவம் மிகக் கேடானதாய் இருக்க முடியாது என்று சிலர் வாதாடுகின்றனர்.

    4. மனிதனின் கற்பனையேயன்றி பாவம் என்பது இல்லை என்று கூட சிலர் சொல்லியிருக்கின்றனர்.

    5. இவ்வழிகள் எல்லாம் தோல்வியுற்றன. எல்லாரும் இன்னும் பாவமுள்ளவர்களாகவும் கடவுளின் கோபத்திற்குக் கீழ்ப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர்.

    ஆ) புத்திசாலித்தனமாக வாழ்வது பற்றிய மிகச் சிறந்த உபதேசங்களில் சில கிறிஸ்தவரல்லாதோரிடமிருந்து கிடைக்கின்றன. உதாரணமாக... மகாத்மா காந்தியின் அஹிம்ஸா முறை. ஆனால், இது பாவங்களை ஒழித்து விடுவதில்லை.

    இ) எல்லா மனிதர்களும் பாவிகளானால் பாவம் கவலை தருவதாய் இருக்க முடியாது என்று வாதிப்பது எல்லா மனிதருக்கும் சாவு வருகிறபடியினால் சாவு கவலை தருவதாக இல்லை என்று வாதிப்பது போலவே செல்லாது.

    ஈ) பாவம் ஒருவனுடைய கற்பனையைப் பொறுத்ததுதான் என்னும் கருத்து, இம்மையில் கூட அதனால் உண்டாகும் கடுமையான விளைவுகளைக் கவனியாமற் போகிறது.

    உ) கடவுளுக்கு செவிகொடுத்தால் நம்மை இரட்சித்துக் கொள்ளுவதற்கு நாம் திறமையற்றவர்கள் என்று அறிந்து கொள்ளுவோம்.

    1. அப்போஸ்தலர்: 17:22,23 - அத்தேனே பட்டணத்தார் மிகுந்த சமயப் பற்றுடையவர்கள் என்று பவுல் கூறுகிறார்.

    2. லூக்கா: 18:9-14 - பரிசேயன் நற்செயல்கள் எல்லாம் செய்த போதிலும் நீதிமானாகத் தீர்க்கப்படவில்லை. 

    3. எண்ணாகமம்: 14 - ல் இஸ்ரவேலர் பாவம் செய்தனர். அவர்கள் தண்டணையைக் குறித்து தேவன் அவர்களுக்கு கூறினார். அவர்கள் கடவுளின் தண்டனையைப் புறக்கணித்து, தவறு எதுவும் நிகழ்ந்து விடவில்லை என்பதுபோல தொடர விரும்பினர்.

    4. எபேசியர்: 2:3 - சுபாவத்தினாலே மனுக்குலத்திலுள்ள மற்றவர்களைப் போலவே நாம் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.

    Next Story
    ×