என் மலர்
ஆன்மிகம்

தென்காசி புனிதமிக்கேல் அதிதூதர் திருத்தலத்தில் கொடியேற்றம்
தென்காசியில் புனிதமிக்கேல் அதிதூதர் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் திருத்தல பெருவிழா நடக்கும். இந்த ஆண்டு திருவிழா நேற்று ஆலய வளாகத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினசரி சிறப்பு திருப்பலிகள் ஆராதானைகள் நடைபெறும். 27-ந் தேதி 8-ம் நாள் நற்கருணை பவனியும் 28-ந் தேதி 9-ம் நாள் அதிதூதர் தேர்பவனி விழாவும், 29-ந் தேதி 10ம் நாள் திருத்தல பெருவிழா நடைபெறுகிறது.
அன்று காலை 7 மணி திருப்பலியில் பாளை மறை மாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ், புனலூர் மறை மாவட்டம் முதன்மை குரு வின்சென்டிக் ரூஸ் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள். 30-ந் தேதி 11 ம் திருநாள் கொடியிறக்கத்துடன் நிறைவுபெறும்.
திருவிழாவில் தமிழ்நாடு மற்றும் கேராளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கிறார்கள். அவர்களுக்காக சிறப்பு பிராத்தனைகளும் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை திருத்தல மற்றும் வட்டார அதிபர் சகாய சின்னப்பன் இஉதவி பங்குதந்தை சுரேஷ் அமலநிலை அருட் சகோதரிகள் பங்கு மேய்ப்பு பணிபேரவையினர் உட்பட சபையினர் செய்து வருகிறார்கள்.






