என் மலர்
கிறித்தவம்
மனமாற்றம் என்பது தன்னிலிருந்தும், அடுத்தவர்களிடம் இருந்தும், இறைவனிடம் இருந்தும் அந்நியப்பட்ட நிலையிலிருந்தும் திரும்பி, உண்மையாக தன்னை அறிந்து, அடுத்தவருக்காக இறைவனில் மனம்விரும்பி வாழ்வதாகும்.
தவக்காலம் என்றால் ஆளுக்கொரு வேஷம், நாளுக்கொரு நடிப்பிற்குரியதல்ல. எல்லாக் காலமும் இறைவன் காலம்தான். எல்லாச் செயல்களும் இறைவனுக்காகத்தான். ஆனால் எந்தக் காலத்தையும்விட தவக்காலத்தைத் திருச்சபை ஏன் முன்னிலைப்படுத்த வேண்டும்? மற்ற காலங்களில் இறைவனின் புகழ்ச்சிக்கும் மகிழ்ச்சிக்குரிய வசந்தகாலம். அதாவது இறைவனை அறிந்து ஆராதிக்கும் காலம்.
தவக்காலம் மட்டும்தான் ஒவ்வொருவரும் தன்னை அறிகின்ற காலம். தன் நிறை குறைகளை ஆய்ந்தறிந்து விடுபடுகின்ற காலம். பாவ வாழ்க்கையை தணிக்கை செய்து இறைவனிடம் நற்சான்று பெறுகின்ற காலம். எதிர்காலத்தில் குற்ற கிருமிகள் தொற்றி தொடராமல் இருக்க உறுதி எடுக்கும் காலம். எனவே தனது பாவங்களை பட்டியலிட்டு அதில் எதையாவது ஒன்றை நிரந்தரமாக (40 நாள்களுக்கு மட்டுமல்ல) எவன் விட்டுவிடுகின்றானோ அவன்தான் மனிதன். (மாற். 1:15)
நம்மை மீட்க வேண்டுமென்ற லட்சிய வெறியில் ஒரு எள் முனையளவு கூட பின்வாங்கியதில்லை ஏசு. நம்முடைய அக்கிரமங்கள், அகந்தை, ஆணவங்களைத் தாம் புதையுண்ட குழிக்குள் உரமாகப் போட்டு அதில் முளைத்தெழுந்த ஞான விருட்சகம் ஏசு. அவருடன் நாமும் உயிர்க்க வேண்டுமானால் நாம் “பருவகால “ பக்தர்களாக வாழ்ந்து பயனில்லை. எல்லாக் காலத்தையும் அவருக்கு ஏற்புடையதாக்க முயலவேண்டும். அதற்கு இறைவனை எண்ணித் தன்னை வருத்திக் கொள்வதைவிட தன்னை எண்ணிப் பார்த்து தவறுகளை திருத்திக் கொள்வது ஒன்றே உண்மையான தவமாகும். (மத். 3:2)
கடவுள் எல்லாக் காலத்தையும் தமது இணையற்ற அன்பால் ஆசீர்வதிக்கக்கூடியவர். எனவே இத்தகைய எல்லையற்ற ஆசீர்வாதத்தால் ஆட்கொள்ளப்பட வேண்டுமென்றால் நிலையான மனமாற்றம் தேவை. மனமாற்றம் என்பது தன்னிலிருந்தும், அடுத்தவர்களிடம் இருந்தும், இறைவனிடம் இருந்தும் அந்நியப்பட்ட நிலையிலிருந்தும் திரும்பி, உண்மையாக தன்னை அறிந்து, அடுத்தவருக்காக இறைவனில் மனம்விரும்பி வாழ்வதாகும். (எசாயா 55:7) உண்மையான மனமாற்றம் என்பது ஒருவரின் சிந்தனை, உணர்வு, செயல்பாடு, உறவுமுறை ஆகியவற்றில் அடங்கி உள்ளது.
எனவே மனித வாழ்வின் எதிர்காலம் என்பது நிகழ்காலத்தில் நாம்செலுத்தும் வாழ்க்கையின் போக்கினால் அமைகின்றது என்பதால் ஒவ்வொரு நிகழ் காலத்தையும் நாம் பொறுப்பாகப்பயன்படுத்தி நல்லுறவை வளர்த்து விடுதலை உணர்வுடன் மகிழ்ச்சியில் திளைத்து (லூக்.19:1-10) இறையமைதியை அன்றாடம் சற்று நேரம் சுவைத்துப் பார்ப்போம். நம்மில் நிகழும் மனமாற்றம் அன்றாட வாழ்வு நிகழ்வுகளில் குன்றின்மீது விளக்காக வெளிப்படட்டும்.
- யூஜின் அமலா, இதயா மகளிர் கல்லூரி, கும்பகோணம்.
தவக்காலம் மட்டும்தான் ஒவ்வொருவரும் தன்னை அறிகின்ற காலம். தன் நிறை குறைகளை ஆய்ந்தறிந்து விடுபடுகின்ற காலம். பாவ வாழ்க்கையை தணிக்கை செய்து இறைவனிடம் நற்சான்று பெறுகின்ற காலம். எதிர்காலத்தில் குற்ற கிருமிகள் தொற்றி தொடராமல் இருக்க உறுதி எடுக்கும் காலம். எனவே தனது பாவங்களை பட்டியலிட்டு அதில் எதையாவது ஒன்றை நிரந்தரமாக (40 நாள்களுக்கு மட்டுமல்ல) எவன் விட்டுவிடுகின்றானோ அவன்தான் மனிதன். (மாற். 1:15)
நம்மை மீட்க வேண்டுமென்ற லட்சிய வெறியில் ஒரு எள் முனையளவு கூட பின்வாங்கியதில்லை ஏசு. நம்முடைய அக்கிரமங்கள், அகந்தை, ஆணவங்களைத் தாம் புதையுண்ட குழிக்குள் உரமாகப் போட்டு அதில் முளைத்தெழுந்த ஞான விருட்சகம் ஏசு. அவருடன் நாமும் உயிர்க்க வேண்டுமானால் நாம் “பருவகால “ பக்தர்களாக வாழ்ந்து பயனில்லை. எல்லாக் காலத்தையும் அவருக்கு ஏற்புடையதாக்க முயலவேண்டும். அதற்கு இறைவனை எண்ணித் தன்னை வருத்திக் கொள்வதைவிட தன்னை எண்ணிப் பார்த்து தவறுகளை திருத்திக் கொள்வது ஒன்றே உண்மையான தவமாகும். (மத். 3:2)
கடவுள் எல்லாக் காலத்தையும் தமது இணையற்ற அன்பால் ஆசீர்வதிக்கக்கூடியவர். எனவே இத்தகைய எல்லையற்ற ஆசீர்வாதத்தால் ஆட்கொள்ளப்பட வேண்டுமென்றால் நிலையான மனமாற்றம் தேவை. மனமாற்றம் என்பது தன்னிலிருந்தும், அடுத்தவர்களிடம் இருந்தும், இறைவனிடம் இருந்தும் அந்நியப்பட்ட நிலையிலிருந்தும் திரும்பி, உண்மையாக தன்னை அறிந்து, அடுத்தவருக்காக இறைவனில் மனம்விரும்பி வாழ்வதாகும். (எசாயா 55:7) உண்மையான மனமாற்றம் என்பது ஒருவரின் சிந்தனை, உணர்வு, செயல்பாடு, உறவுமுறை ஆகியவற்றில் அடங்கி உள்ளது.
எனவே மனித வாழ்வின் எதிர்காலம் என்பது நிகழ்காலத்தில் நாம்செலுத்தும் வாழ்க்கையின் போக்கினால் அமைகின்றது என்பதால் ஒவ்வொரு நிகழ் காலத்தையும் நாம் பொறுப்பாகப்பயன்படுத்தி நல்லுறவை வளர்த்து விடுதலை உணர்வுடன் மகிழ்ச்சியில் திளைத்து (லூக்.19:1-10) இறையமைதியை அன்றாடம் சற்று நேரம் சுவைத்துப் பார்ப்போம். நம்மில் நிகழும் மனமாற்றம் அன்றாட வாழ்வு நிகழ்வுகளில் குன்றின்மீது விளக்காக வெளிப்படட்டும்.
- யூஜின் அமலா, இதயா மகளிர் கல்லூரி, கும்பகோணம்.
மன்னிப்பதற்கு ஏசுபிரான் ஒரு வரையரையைக் குறிப்பிடவில்லை, கணக்கில் வைக்காமல் மன்னியுங்கள் என்றார். தேவைப்பட்டால் நீங்கள் கொடுத்து உதவிய பொருளையும் சேர்த்து மன்னியுங்கள் என்றார்.
அந்த தாயின் ஒரே செல்ல மகளை எதிர்வீட்டுக் கயவன் கற்பழித்துக் கொன்றுவிட்டு தலைமறைவானான். காவல்துறை அவனை கண்டுபிடித்து பல ஆண்டுகாலம் சிறையில் அடைத்தது. அந்த தாயோ விவிலியத்தை புரட்டிப்படித்த வண்ணமிருந்தாள்.
அவளுடைய உள்ளத்தை கிளறின விவிலிய வார்த்தைகளுள் ஒன்று அது ‘மன்னித்து விடு’ என்பதாகவும். அவ்வார்த்தையை அசைபோட்ட அவள் ஒரு நாள் அந்தக் கொளையாளியை மனப்பூர்வமாக மன்னித்து விட்டதாக கடிதம் ஒன்று எழுதினாள். அந்த கடிதத்தை படித்த அவனும் ‘அம்மா நீங்கள் என்னை மன்னித்தாலும், கடவுளும் என்னை மன்னிக்கிறார்.
இனி நான் எந்த தவறும் செய்யாமல் பல உயிர்களை காக்கும் போராளியாக உருவெடுப்பேன். உங்களுக்கு நன்றி. தொடர்ந்து எனக்காக ஜெபியுங்கள்’ என்று பதிலளித்தான். விடுதலையான அவன் திருமணம் செய்துகொள்ளாமல் சமூக சேவகராக வாழ்ந்து சமூகத்தின் நன்மதிப்பை பெற்றான். ஏசுபிரான் மன்னித்தார், மன்னிக்க சொன்னார், தன்னை இகழ்ந்தவர்களையும், சிலுவையில் ஏற்றி கொன்றவர்களையும் மனதார மன்னித்தார்.
மன்னிப்பு மனமாற்றத்தை பெற்றெடுக்கிறது. மனமாற்றம் மகிழ்ச்சியை பெற்றெடுக்கிறது. நாம் பிறரை மன்னிக்கின்ற போதுதான் கடவுளின் பிள்ளைகள் என்ற உரிமையை பெறுகின்றோம். மன்னிப்பதற்கு ஏசுபிரான் ஒரு வரையரையைக் குறிப்பிடவில்லை, கணக்கில் வைக்காமல் மன்னியுங்கள் என்றார். தேவைப்பட்டால் நீங்கள் கொடுத்து உதவிய பொருளையும் சேர்த்து மன்னியுங்கள் என்றார். மன்னிப்போமா? இறைவனின் குழந்தைகள் என்ற முத்திரையைப் பெறுவோமா?
- குழந்தை, காணியிருப்பு.
அவளுடைய உள்ளத்தை கிளறின விவிலிய வார்த்தைகளுள் ஒன்று அது ‘மன்னித்து விடு’ என்பதாகவும். அவ்வார்த்தையை அசைபோட்ட அவள் ஒரு நாள் அந்தக் கொளையாளியை மனப்பூர்வமாக மன்னித்து விட்டதாக கடிதம் ஒன்று எழுதினாள். அந்த கடிதத்தை படித்த அவனும் ‘அம்மா நீங்கள் என்னை மன்னித்தாலும், கடவுளும் என்னை மன்னிக்கிறார்.
இனி நான் எந்த தவறும் செய்யாமல் பல உயிர்களை காக்கும் போராளியாக உருவெடுப்பேன். உங்களுக்கு நன்றி. தொடர்ந்து எனக்காக ஜெபியுங்கள்’ என்று பதிலளித்தான். விடுதலையான அவன் திருமணம் செய்துகொள்ளாமல் சமூக சேவகராக வாழ்ந்து சமூகத்தின் நன்மதிப்பை பெற்றான். ஏசுபிரான் மன்னித்தார், மன்னிக்க சொன்னார், தன்னை இகழ்ந்தவர்களையும், சிலுவையில் ஏற்றி கொன்றவர்களையும் மனதார மன்னித்தார்.
மன்னிப்பு மனமாற்றத்தை பெற்றெடுக்கிறது. மனமாற்றம் மகிழ்ச்சியை பெற்றெடுக்கிறது. நாம் பிறரை மன்னிக்கின்ற போதுதான் கடவுளின் பிள்ளைகள் என்ற உரிமையை பெறுகின்றோம். மன்னிப்பதற்கு ஏசுபிரான் ஒரு வரையரையைக் குறிப்பிடவில்லை, கணக்கில் வைக்காமல் மன்னியுங்கள் என்றார். தேவைப்பட்டால் நீங்கள் கொடுத்து உதவிய பொருளையும் சேர்த்து மன்னியுங்கள் என்றார். மன்னிப்போமா? இறைவனின் குழந்தைகள் என்ற முத்திரையைப் பெறுவோமா?
- குழந்தை, காணியிருப்பு.
தெரிந்தே முழுமன சுதந்திரத்துடன் பாவம் செய்து கடவுளை தொலைத்து விடுகின்றனர். இருப்பினும் செய்த குற்றத்திற்காக மனம் வருந்தி மீண்டும் கடவுளை நோக்கி வந்து விடுகிறார்கள்.
புல்டன் ஷீன் என்ற அமெரிக்க நாட்டு பேராயர் 4 விதமாக நாம் கடவுளை விட்டு பிரிந்து அவரை தொலைத்து விடுகிறோம் என்று கூறுகிறார். முதலாவதாக காணாமல் போன நாணயத்திற்கு ஒப்பானவர்கள். தங்களது இயலாமையால் பாவம் செய்து விடுகிறார்கள். சிறுபிள்ளைகளாக ஒன்றும் விவரம் தெரியாத சூழ்நிலைகளில், பெற்றோர் களின் தவறான வழிகாட்டு தலால், பாவம் செய்து கடவுளை தொலைத்து விடுகிறார்கள்.
இரண்டாவதாக காணாமல் போன ஆட்டிற்கு ஒப்பானவர்கள். தங்களது அறியாமையால் பாவம் செய்துவிடுகிறார்கள். ஒரு செயல் பாவம் என்பதை உணராது பிறரின் தூண்டுதலால் கடவுளின் கட்டளைகளை மீறி அறியாமையால் பாவம் செய்து, கடவுளை தொலைத்துவிடுகிறார்கள். மூன்றாவதாக தனது தந்தையிட மிருந்து ஆஸ்தியின் பங்கை பிரித்து வாங்கி சென்று ஊதாரித்தனமாக செலவு செய்து எல்லாவற்றையும் அழித்துவிட்டு பின்பு மீண்டும் தந்தையிடம் வந்து தன்னை மன்னித்து ஏற்றுக் கொள்ளும்படி முறையிட்ட காணாமல் போன ஊதாரி இளைய மைந்தனை போன்றவர்கள்.
தெரிந்தே முழுமன சுதந்திரத்துடன் பாவம் செய்து கடவுளை தொலைத்து விடுகின்றனர். இருப்பினும் செய்த குற்றத்திற்காக மனம் வருந்தி மீண்டும் கடவுளை நோக்கி வந்து விடுகிறார்கள். மேற்சொல்லப்பட்ட இந்த மூன்று வகை மனிதர்களும் காணாமல் போனாலும் மீண்டும் கடவுளை தேடி வந்து மீட்பு பெற வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நான்காவதாக தந்தையுடனேயே இருந்து அவரின் சொற்படி செய்து ஆனால் மன்னித்து தன்னுடைய இளைய சகோதரனை ஏற்றுக்கொள்ள முடியாத மூத்த மகனை போன்றவர்கள்.
பரிசேயர்கள், சதுர்சேயர்கள் போல வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளாக இறுதிவரை தங்கள் குற்றங்களை ஏற்றுக்கொள்ளாமல், தங்களை உத்தமர்கள் என்று நியாயப்படுத்தி மற்றவர்களை தீர்ப்பிடும் நீதிபதிகளாய் கடவுளின் அருளை இழந்து மீட்பை பெற முடியாது வீழ்ந்து மடிவார்கள். ஆக மனமாற்றத்தின் காலமாம் தவக்காலத்தில் நம்மை நாமே கேட்க வேண்டிய கேள்வி, நான் காணாமல் போன இளைய மகனா அல்லது ஏற்றுக்கொள்ள மனமில்லாத மூத்தமகனா? என்று நாம் சிந்தனை செய்யவேண்டும்.
- சுந்தர், கப்புச்சின் சபை, சிவபுரம்.
இரண்டாவதாக காணாமல் போன ஆட்டிற்கு ஒப்பானவர்கள். தங்களது அறியாமையால் பாவம் செய்துவிடுகிறார்கள். ஒரு செயல் பாவம் என்பதை உணராது பிறரின் தூண்டுதலால் கடவுளின் கட்டளைகளை மீறி அறியாமையால் பாவம் செய்து, கடவுளை தொலைத்துவிடுகிறார்கள். மூன்றாவதாக தனது தந்தையிட மிருந்து ஆஸ்தியின் பங்கை பிரித்து வாங்கி சென்று ஊதாரித்தனமாக செலவு செய்து எல்லாவற்றையும் அழித்துவிட்டு பின்பு மீண்டும் தந்தையிடம் வந்து தன்னை மன்னித்து ஏற்றுக் கொள்ளும்படி முறையிட்ட காணாமல் போன ஊதாரி இளைய மைந்தனை போன்றவர்கள்.
தெரிந்தே முழுமன சுதந்திரத்துடன் பாவம் செய்து கடவுளை தொலைத்து விடுகின்றனர். இருப்பினும் செய்த குற்றத்திற்காக மனம் வருந்தி மீண்டும் கடவுளை நோக்கி வந்து விடுகிறார்கள். மேற்சொல்லப்பட்ட இந்த மூன்று வகை மனிதர்களும் காணாமல் போனாலும் மீண்டும் கடவுளை தேடி வந்து மீட்பு பெற வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நான்காவதாக தந்தையுடனேயே இருந்து அவரின் சொற்படி செய்து ஆனால் மன்னித்து தன்னுடைய இளைய சகோதரனை ஏற்றுக்கொள்ள முடியாத மூத்த மகனை போன்றவர்கள்.
பரிசேயர்கள், சதுர்சேயர்கள் போல வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளாக இறுதிவரை தங்கள் குற்றங்களை ஏற்றுக்கொள்ளாமல், தங்களை உத்தமர்கள் என்று நியாயப்படுத்தி மற்றவர்களை தீர்ப்பிடும் நீதிபதிகளாய் கடவுளின் அருளை இழந்து மீட்பை பெற முடியாது வீழ்ந்து மடிவார்கள். ஆக மனமாற்றத்தின் காலமாம் தவக்காலத்தில் நம்மை நாமே கேட்க வேண்டிய கேள்வி, நான் காணாமல் போன இளைய மகனா அல்லது ஏற்றுக்கொள்ள மனமில்லாத மூத்தமகனா? என்று நாம் சிந்தனை செய்யவேண்டும்.
- சுந்தர், கப்புச்சின் சபை, சிவபுரம்.
தவக்காலத்தில், எந்த நல்ல குணங்களை நாம் கொண்டிருக்க வேண்டும் என்பதை விட, எத்தகைய தீய குணங்களை களைந்திட வேண்டும் என்பதே முக்கியம்.
தவக்காலத்தில், எந்த நல்ல குணங்களை நாம் கொண்டிருக்க வேண்டும் என்பதை விட, எத்தகைய தீய குணங்களை களைந்திட வேண்டும் என்பதே முக்கியம். அந்த வகையில் நம்மிடம் இருக்கும் தீய குணங்களில் முதன்மையானது பொறாமை. ஏனென்றால் பொறாமை தான் ஒரு மனிதனின் அழிவுக்கு வழிசெய்கிறது (உதாரணம்: காயின் - ஆபேல்). காயின், ஆபேலின் ரத்தத்தை சிந்தியதற்கு அடிப்படை காரணம் பொறாமை தான்.
பொறாமையிலிருந்து புறப்படுகின்ற சினம் பாவத்தில் வேரூன்றி பழிவாங்குதலில் முடிகிறது. பொறாமை தன்னையும் அழிக்கும். தன்னை சார்ந்தவர்களையும் அழிக்கும். அடுத்தவர் கொஞ்சம் நன்றாக இருந்தால், நாலு காசு சேமித்தால், கொஞ்சம் சொத்து சேர்த்தால், அடுத்தவர் பொறாமை படுவர். எனவே தான் திருச்சபை, பொறாமையுடன் கூடிய எரிச்சலை பாவங்களின் பட்டியலில் சேர்த்திருக்கிறது.
விவிலியத்திலும் பொறாமையின் விஷவேர் பரவிகிடப்பதைப் பார்க்க முடியும். சாத்தானின் பொறாமையால் சாவு இவ்வுலகில் நுழைந்தது. காயினின் பொறாமை, கொலையில் முடிந்தது. யாக்கோப்பின் மகன் யோசேப்பின் மீதுள்ள அவன் சகோதரர்களின் பொறாமை, அவனை பாழடைந்த கிணற்றில் தள்ளியது. கோலியாத்தை கொன்றதால் தாவீதை கண்டு சவுல் பொறாமை கொண்டார். அரசப்பதவியை இழந்தார். இவைகள் விவிலியத்தில் உள்ள ஒரு சில உதாரணங்களே! இப்படி சமுதாயத்தில் பொறாமையால் அலைகின்ற மக்கள் ஆயிரம் ஆயிரம்.
இத்தகைய பொறாமையை களைந்திட என்ன செய்ய வேண்டும்? முதலாவதாக, நம்மிடம் பொறாமை உள்ளதை ஒப்புக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக, நம்மிடம் உள்ள திறமைகளை இனம் கண்டுகொள்ள வேண்டும். மூன்றாவதாக, நம்மை யாரோடும் ஒப்பிடக்கூடாது.
- ரெக்ஸ் அலெக்ஸ் சில்வஸ்டர்,
தூய இருதய இளங்குரு மடம்,
கும்பகோணம்.
பொறாமையிலிருந்து புறப்படுகின்ற சினம் பாவத்தில் வேரூன்றி பழிவாங்குதலில் முடிகிறது. பொறாமை தன்னையும் அழிக்கும். தன்னை சார்ந்தவர்களையும் அழிக்கும். அடுத்தவர் கொஞ்சம் நன்றாக இருந்தால், நாலு காசு சேமித்தால், கொஞ்சம் சொத்து சேர்த்தால், அடுத்தவர் பொறாமை படுவர். எனவே தான் திருச்சபை, பொறாமையுடன் கூடிய எரிச்சலை பாவங்களின் பட்டியலில் சேர்த்திருக்கிறது.
விவிலியத்திலும் பொறாமையின் விஷவேர் பரவிகிடப்பதைப் பார்க்க முடியும். சாத்தானின் பொறாமையால் சாவு இவ்வுலகில் நுழைந்தது. காயினின் பொறாமை, கொலையில் முடிந்தது. யாக்கோப்பின் மகன் யோசேப்பின் மீதுள்ள அவன் சகோதரர்களின் பொறாமை, அவனை பாழடைந்த கிணற்றில் தள்ளியது. கோலியாத்தை கொன்றதால் தாவீதை கண்டு சவுல் பொறாமை கொண்டார். அரசப்பதவியை இழந்தார். இவைகள் விவிலியத்தில் உள்ள ஒரு சில உதாரணங்களே! இப்படி சமுதாயத்தில் பொறாமையால் அலைகின்ற மக்கள் ஆயிரம் ஆயிரம்.
இத்தகைய பொறாமையை களைந்திட என்ன செய்ய வேண்டும்? முதலாவதாக, நம்மிடம் பொறாமை உள்ளதை ஒப்புக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக, நம்மிடம் உள்ள திறமைகளை இனம் கண்டுகொள்ள வேண்டும். மூன்றாவதாக, நம்மை யாரோடும் ஒப்பிடக்கூடாது.
- ரெக்ஸ் அலெக்ஸ் சில்வஸ்டர்,
தூய இருதய இளங்குரு மடம்,
கும்பகோணம்.
ஜெருசலேம் நகரில் 2 ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரிய பெருமைமிக்க தேவாலயம் உள்ளது. இது புனித செபுல்செரி என அழைக்கப்படுகிறது.
இஸ்ரேலின் தலைநகர் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்பால் அறிவிக்கப்பட்டு, பிரச்சினைக்கு உள்ளாகி இருக்கிற ஜெருசலேம் நகரில் 2 ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரிய பெருமைமிக்க தேவாலயம் உள்ளது. இது புனித செபுல்செரி என அழைக்கப்படுகிறது.
இந்த தேவாலயம், ஏசுநாதர் சிலுவையில் அறைந்து உயிர்துறந்து, அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த இடத்தில் கட்டப்பட்டு உள்ளது என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை ஆகும். இதனால் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உலகம் முழுவதும் இருந்து இந்த தேவாலயத்துக்கு வருகிறார்கள்.
இந்த தேவாலயம், கிரேக்க ஆர்தோடக்ஸ், ஆர்மேனியன், ரோமன் கத்தோலிக்கர்களின் பொறுப்பில் உள்ளது.

இந்த தேவாலய சொத்தை வணிகப்பகுதியாக கருதி வரி விதிக்க ஜெருசலேமில் உள்ள இஸ்ரேல் அதிகாரிகள் முடிவு செய்தனர். வழிபாடு நடத்துகிற, மதக்கல்வி போதிக்கிற இடங்களுக்கு மட்டுமே வரியில் இருந்து விலக்கு அளிக்க முடியும் என அவர்கள் கூறினர். இந்த வரி விதிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பழமை வாய்ந்த தேவாலயத்தை மூடி, நிர்வாகிகள் போராட்டத்தில் குதித்தனர்.
இதன் காரணமாக அங்கு வருகிற ஆன்மிகப் பயணிகள், சுற்றுலாப் பயணிகள் ஆலயத்துக்குள் செல்ல முடியாமல் தவித்தனர். இந்த விவகாரம், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ கவனத்துக்கு சென்றது. அவர் இதில் தீர்வு காண்பதற்கு ஒரு குழு அமைக்கப்படும் என அறிவித்தார். மேலும், வரி விதிப்பு திட்டத்தை நிறுத்தி வைப்பதாக ஜெருசலேம் நகர மேயர் நிர் பர்க்கட் அறிவித்தார்.
உடனே அந்த தேவாலயத்தை திறக்க நிர்வாகிகள் முடிவு செய்தனர். 3 நாட்களுக்கு பிறகு நேற்று உள்ளூர் நேரப்படி காலை 4 மணிக்கு அந்த தேவாலயத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து ஆன்மிகப் பயணிகளும், சுற்றுலாப் பயணிகளும் அங்கு வழக்கம் போல செல்லத் தொடங்கினர்.
இந்த தேவாலயம், ஏசுநாதர் சிலுவையில் அறைந்து உயிர்துறந்து, அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த இடத்தில் கட்டப்பட்டு உள்ளது என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை ஆகும். இதனால் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உலகம் முழுவதும் இருந்து இந்த தேவாலயத்துக்கு வருகிறார்கள்.
இந்த தேவாலயம், கிரேக்க ஆர்தோடக்ஸ், ஆர்மேனியன், ரோமன் கத்தோலிக்கர்களின் பொறுப்பில் உள்ளது.

இந்த தேவாலய சொத்தை வணிகப்பகுதியாக கருதி வரி விதிக்க ஜெருசலேமில் உள்ள இஸ்ரேல் அதிகாரிகள் முடிவு செய்தனர். வழிபாடு நடத்துகிற, மதக்கல்வி போதிக்கிற இடங்களுக்கு மட்டுமே வரியில் இருந்து விலக்கு அளிக்க முடியும் என அவர்கள் கூறினர். இந்த வரி விதிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பழமை வாய்ந்த தேவாலயத்தை மூடி, நிர்வாகிகள் போராட்டத்தில் குதித்தனர்.
இதன் காரணமாக அங்கு வருகிற ஆன்மிகப் பயணிகள், சுற்றுலாப் பயணிகள் ஆலயத்துக்குள் செல்ல முடியாமல் தவித்தனர். இந்த விவகாரம், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ கவனத்துக்கு சென்றது. அவர் இதில் தீர்வு காண்பதற்கு ஒரு குழு அமைக்கப்படும் என அறிவித்தார். மேலும், வரி விதிப்பு திட்டத்தை நிறுத்தி வைப்பதாக ஜெருசலேம் நகர மேயர் நிர் பர்க்கட் அறிவித்தார்.
உடனே அந்த தேவாலயத்தை திறக்க நிர்வாகிகள் முடிவு செய்தனர். 3 நாட்களுக்கு பிறகு நேற்று உள்ளூர் நேரப்படி காலை 4 மணிக்கு அந்த தேவாலயத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து ஆன்மிகப் பயணிகளும், சுற்றுலாப் பயணிகளும் அங்கு வழக்கம் போல செல்லத் தொடங்கினர்.
தவக்காலத்தில் நாமும் உண்மையான மகிழ்ச்சியை பணத்தில், பதவியில் தேடாமல் தொண்டாற்றுவதில், உதவி புரிவதில் நம்பிக்கையோடு ஏசு கிறிஸ்துவுக்காக ஏற்பதில் காண்போம்.
ஒரு ஊரில் செல்வந்தன் ஒருவன் இருந்தான். அவன் தொழில் நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவனுடையது தான். அந்த வீட்டை 2 மடங்கு விலை கொடுத்து வாங்க பலரும் தயாராக இருந்தனர். ஆனால் அவன் விற்கவில்லை.
இப்போது அந்த வீடு அவன் கண்முன்னே எரிந்து கொண்டிருந்தது. நிறைய பேர் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அந்த செல்வந்தன் என்ன செய்வது என்று தெரியாமல் கண் கலங்கிய படி நின்று கொண்டு இருந்தான். அப்போது அவனுடைய மூத்த மகன் வந்து அப்பா, நேற்றே இந்த வீட்டை 3 மடங்கு லாபத்திற்கு விற்று விட்டேன்.
இதனால் நமக்கு நஷ்டம் இல்லை என்றான். இதனை கேட்டவுடன் செல்வந்தன் மகிழ்ச்சி அடைந்தான். இந்தநிலையில் அவனின் 2-வது மகன் வந்து தந்தையே நாங்கள் விற்ற வீட்டிற்கு முன்பணம் மட்டுமே வாங்கி உள்ளோம் என்றான். இப்போது வீட்டை வாங்கியவர் மீதி பணத்தை தருவாரா என்பது சந்தேகமே என்றான். இதை கேட்ட செல்வந்தன் அதிர்ச்சி அடைந்தான். மீண்டும் புலம்ப ஆரம்பித்தான். சிறிது நேரம் கழித்து 3-வது மகன் ஓடி வந்தான். அவன், தந்தையே கவலை வேண்டாம்.
இந்த வீட்டை வாங்கிய மனிதர் மிகவும் நல்லவர். வீட்டை வாங்கியவர், இந்த வீடு தீப்பிடிக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆகையால் நான் பேசிய படியே முழு தொகையை கொடுப்பது தான் நியாயம் என்று கூறினார் என்றான். இதைக்கேட்டவுடன் செல்வந்தன் மகிழ்ச்சி அடைந்தான். கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடி, பாடினான். கண்ணீரும், சோகமும் அவனிடம் காணாமல் போய்விட்டது. மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான். இங்கு எதுவுமே மாறிவிடவில்லை, அதே வீடு! அதே நெருப்பு! அதே இழப்பு! ஆனால் அவன் மனநிலையில் மட்டும் மாற்றம்.
உண்மையான மகிழ்ச்சி தொண்டு ஏற்பதில் அல்ல. தொண்டாற்றுவதில் தான். அதற்கு மிகச்சிறந்த எடுத்துகாட்டு நான் என்கிறார் ஏசு.
தவக்காலத்தில் நாமும் உண்மையான மகிழ்ச்சியை பணத்தில், பதவியில் தேடாமல் தொண்டாற்றுவதில், உதவி புரிவதில் நம்பிக்கையோடு ஏசு கிறிஸ்துவுக்காக ஏற்பதில் காண்போம்.
- ஆல்பர்ட் புஷ்பராஜ், பங்குத்தந்தை, புனித அன்னாள் ஆலயம், கீழ நெடுவாய்.
இப்போது அந்த வீடு அவன் கண்முன்னே எரிந்து கொண்டிருந்தது. நிறைய பேர் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அந்த செல்வந்தன் என்ன செய்வது என்று தெரியாமல் கண் கலங்கிய படி நின்று கொண்டு இருந்தான். அப்போது அவனுடைய மூத்த மகன் வந்து அப்பா, நேற்றே இந்த வீட்டை 3 மடங்கு லாபத்திற்கு விற்று விட்டேன்.
இதனால் நமக்கு நஷ்டம் இல்லை என்றான். இதனை கேட்டவுடன் செல்வந்தன் மகிழ்ச்சி அடைந்தான். இந்தநிலையில் அவனின் 2-வது மகன் வந்து தந்தையே நாங்கள் விற்ற வீட்டிற்கு முன்பணம் மட்டுமே வாங்கி உள்ளோம் என்றான். இப்போது வீட்டை வாங்கியவர் மீதி பணத்தை தருவாரா என்பது சந்தேகமே என்றான். இதை கேட்ட செல்வந்தன் அதிர்ச்சி அடைந்தான். மீண்டும் புலம்ப ஆரம்பித்தான். சிறிது நேரம் கழித்து 3-வது மகன் ஓடி வந்தான். அவன், தந்தையே கவலை வேண்டாம்.
இந்த வீட்டை வாங்கிய மனிதர் மிகவும் நல்லவர். வீட்டை வாங்கியவர், இந்த வீடு தீப்பிடிக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆகையால் நான் பேசிய படியே முழு தொகையை கொடுப்பது தான் நியாயம் என்று கூறினார் என்றான். இதைக்கேட்டவுடன் செல்வந்தன் மகிழ்ச்சி அடைந்தான். கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடி, பாடினான். கண்ணீரும், சோகமும் அவனிடம் காணாமல் போய்விட்டது. மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான். இங்கு எதுவுமே மாறிவிடவில்லை, அதே வீடு! அதே நெருப்பு! அதே இழப்பு! ஆனால் அவன் மனநிலையில் மட்டும் மாற்றம்.
உண்மையான மகிழ்ச்சி தொண்டு ஏற்பதில் அல்ல. தொண்டாற்றுவதில் தான். அதற்கு மிகச்சிறந்த எடுத்துகாட்டு நான் என்கிறார் ஏசு.
தவக்காலத்தில் நாமும் உண்மையான மகிழ்ச்சியை பணத்தில், பதவியில் தேடாமல் தொண்டாற்றுவதில், உதவி புரிவதில் நம்பிக்கையோடு ஏசு கிறிஸ்துவுக்காக ஏற்பதில் காண்போம்.
- ஆல்பர்ட் புஷ்பராஜ், பங்குத்தந்தை, புனித அன்னாள் ஆலயம், கீழ நெடுவாய்.
எவ்வகை பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாக இருங்கள். மிகுதியான உடைகளை கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது (லூக்கா 12:15).
மனிதர்களாகிய நாம் ஒரு இலக்கை அடைய ஆசைப்பட வேண்டும். செல்வம் சேர்க்க ஆசைப்பட வேண்டும். எவ்வகை முன்னேற்றத்திற்கும் முதல் படி ஆசைதான். ஆசை எது தொடர்புடையதாக இருந்தாலும் அதற்கும் அளவுண்டு. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. அதுவும் பணம், பதவி, புகழ் இவைகளை பொறுத்தமட்டில் ஆசை வேண்டும். இந்த ஆசை பேராசையாக மாறக்கூடாது.
அது பேராசையாக உருவெடுக்கும் நேரத்தில் அது தன்னுடைய உயிருக்கோ அல்லது பிறரின் உயிருக்கோ உலைவைக்கும் ஒரு பொடியாக மாறிவிடும். பேராசையின் தீய விளைவுகளை பற்றி ஏசுபிரான் கதை ஒன்று சொன்னார். செல்வன் ஒருவன் இருந்தான். அவனுக்கு வயல்கள் ஏராளம். அந்த ஆண்டு நல்ல மழை. எனவே விளைச்சல் அமோகம்.
தன்னுடைய களஞ்சியங்களை இடித்துப் பெரிதாக கட்டினான். அவைகளில் விளைந்த தானியங்களை கொட்டி மகிழ்ச்சியாக இருந்தான். தனக்குள் சொல்லிக் கொண்டான். நெஞ்சே நீ இளைப்பாறு. உண்டு, குடித்து, ஆனந்தப்படு என்று பெருமிதம் கொண்டான். தன் அருகே இருந்த வறியவர்களை பற்றி அவன் கவலைப்படவில்லை.
அவர்களுக்கும் கொஞ்சம் கொடுத்து அவர்களின் பசியைப் போக்கினால் நல்லது தானே என்ற சிந்தனை அவனுக்கு சிறிதும் இல்லை. அவன் அளவுக்கு அதிகமாக உண்டு, குடித்து, ஆடி பாடியதால் இதயம் தாக்குப்பிடிக்காமல் வெடித்துப் போனது. பாவம், சேர்த்து வைத்த செல்வம் எங்கு போனதோ?
பேராசை அவனுடைய உயிருக்கே ஆபத்தாகிவிட்டது. எனவே பேராசையை தவிர்ப்போம். பிறர் அன்பு பேணுவோம்.
- குழந்தை,காணியிருப்பு.
அது பேராசையாக உருவெடுக்கும் நேரத்தில் அது தன்னுடைய உயிருக்கோ அல்லது பிறரின் உயிருக்கோ உலைவைக்கும் ஒரு பொடியாக மாறிவிடும். பேராசையின் தீய விளைவுகளை பற்றி ஏசுபிரான் கதை ஒன்று சொன்னார். செல்வன் ஒருவன் இருந்தான். அவனுக்கு வயல்கள் ஏராளம். அந்த ஆண்டு நல்ல மழை. எனவே விளைச்சல் அமோகம்.
தன்னுடைய களஞ்சியங்களை இடித்துப் பெரிதாக கட்டினான். அவைகளில் விளைந்த தானியங்களை கொட்டி மகிழ்ச்சியாக இருந்தான். தனக்குள் சொல்லிக் கொண்டான். நெஞ்சே நீ இளைப்பாறு. உண்டு, குடித்து, ஆனந்தப்படு என்று பெருமிதம் கொண்டான். தன் அருகே இருந்த வறியவர்களை பற்றி அவன் கவலைப்படவில்லை.
அவர்களுக்கும் கொஞ்சம் கொடுத்து அவர்களின் பசியைப் போக்கினால் நல்லது தானே என்ற சிந்தனை அவனுக்கு சிறிதும் இல்லை. அவன் அளவுக்கு அதிகமாக உண்டு, குடித்து, ஆடி பாடியதால் இதயம் தாக்குப்பிடிக்காமல் வெடித்துப் போனது. பாவம், சேர்த்து வைத்த செல்வம் எங்கு போனதோ?
பேராசை அவனுடைய உயிருக்கே ஆபத்தாகிவிட்டது. எனவே பேராசையை தவிர்ப்போம். பிறர் அன்பு பேணுவோம்.
- குழந்தை,காணியிருப்பு.
இயேசு கிறிஸ்துவின் செயல்களை நேரில் பார்த்தவர்கள், அவர்களிடம் இருந்து கேட்டவர்கள் தந்த சான்றின் அடிப்படையில் நற்செய்தி நூல்கள் எழுதப்பட்டுள்ளன.
ஆண்டவர் இயேசு, குருடர்களுக்கு பார்வை அளித்ததாகவும், செவிடர்களைக் கேட்கச் செய்ததாகவும், நோயாளிகளையும், ஊனமுற்றோரையும் நலமாக்கியதாகவும், இறந்தோரை உயிரோடு எழுப்பியதாகவும் பைபிள் கூறுகிறது.
இயேசு கிறிஸ்துவின் செயல்களை நேரில் பார்த்தவர்கள், அவர்களிடம் இருந்து கேட்டவர்கள் தந்த சான்றின் அடிப்படையில் நற்செய்தி நூல்கள் எழுதப்பட்டுள்ளன.
இறைமகன் இயேசுவின் வல்லமையே இந்த அற்புதங் களுக்கு காரணம் என்று பைபிள் சான்று பகர்கிறது. ஆனால் இயேசுவோ, ‘உன் நம்பிக்கை உன்னை நலமாக்கிற்று’ என்று வேறொரு காரணத்தைக் கூறுகிறார்.
அதாவது, ‘இங்கு சென்றால் நலம் கிடைக்கும், இப்படி செய்தால் வெற்றி கிடைக்கும், இவரிடம் போனால் நல்லது நடக்கும் என்று நாம் கொள்ளும் நம்பிக்கையே நன்மையானவை நிகழ காரணமாக அமைகிறது’ என்று இயேசு எடுத்துரைக்கிறார்.
ஒருமுறை இயேசுவைத் தேடி, கானானியப் பெண் ஒருவர் வந்தார். அவர் இயேசுவிடம், ‘ஐயா, பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிற என் மகளை குணப்படுத்தும்’ என வேண்டினார்.
இயேசுவோ மறுமொழியாக, ‘பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல’ என்று கூறி அவரை சோதித்தார்.
அப்பெண்ணோ, ‘ஆம் ஐயா, ஆனாலும் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே’ என பதிலளித்தார்.
உடனே இயேசு, ‘அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே நிகழட்டும்’ என்றார். அந்நேரமே அவர் மகளின் பிணி நீங்கியது.
மற்றொரு தடவை, பன்னிரு ஆண்டுகளாய் ரத்தப்போக்கினால் வருந்திய ஒரு பெண் இயேசுவுக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார். ஏனெனில் அப்பெண், ‘நான் இயேசுவின் ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்’ எனத் தமக்குள் சொல்லிக் கொண்டார். இயேசு அவரைத் திரும்பிப் பார்த்து, ‘மகளே, துணிவோடிரு, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று’ என்றார். உடனே அப்பெண் நலம் அடைந்தார்.
ஒருவருடைய நம்பிக்கை அவரை குணப்படுத்தும் என்பதை மேற்கூறிய நிகழ்வுகள் வழியாக இயேசு நமக்கு கற்றுத் தரு கிறார். ஆகவே, நாம் எதை நம்புகிறோமோ அதுவே நடக்கும்.
நன்மை நிகழும் என்று நினைத்தால் நல்லதும், தீமை நேரும் என்று எண்ணினால் கெட்டதும் நடக்கும் என்பதே இயேசு தரும் போதனை. நமது நம்பிக்கை நமக்கு மட்டுமன்று, மற்றவர்களுக்கும் நலம் கிடைக்க உதவும் என்பதையும் இயேசு நமக்கு சொல்லித் தருகிறார்.
ஒரு நாள் இயேசு ஒரு வீட்டில் அமர்ந்து போதித்துக் கொண்டிருந்தார். அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து கொண்டு வந்தனர். மக்கள் திரண்டிருந்த காரணத்தால், வீட்டின் மேற்கூரையைப் பிரித்து, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு இயேசுவுக்கு முன்பாக இறக்கினர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், ‘மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன. நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ’ என்றார். அவரும் நலமடைந்து, தமது படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார்.
ஆகவே, நமது நம்பிக்கைக்கு நலம் தரும் ஆற்றல் இருக்கிறது என்பதை இயேசுவிடம் இருந்து நாம் கற்றுக் கொள்கிறோம். இயேசு கிறிஸ்துவின் ஒவ்வொரு போதனையும், அவரது இறைத்தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தன. எவற்றின் மீது நம்பிக்கை வைத்தாலும், நாம் நலம்பெற முடியும்.
ஆனால், நாம் நம்பிக்கை வைப்பவை அனைத்தும் குணம் தரக்கூடியவை அல்ல. எல்லாம் வல்ல ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தால், அது ஒருபோதும் வீண்போகாது. தம்மிடம் நம்பிக்கை வைக்காதவர்களின் வாழ்வில் அற்புதம் செய்ய அவர் விரும்புவதில்லை.
ஒருவர் இயேசுவை அணுகி அவர்முன் முழந்தாள் படியிட்டு, ‘ஐயா, என் மகனுக்கு இரங்கும். அவன் வலிப்பு நோயால் பெரிதும் துன்புறுகிறான். அடிக்கடி தீயிலும் தண்ணீரிலும் விழு கிறான். உம் சீடர்களிடம் அவனைக் கொண்டு வந்தேன். அவனைக் குணமாக்க அவர்களால் முடியவில்லை’ என்றார்.
அதற்கு இயேசு, ‘நம்பிக்கையற்ற தலைமுறையினரே, நான் உங்களைப் பொறுத்துக் கொள்ள இயலும்? அவனை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள்’ என்று கூறினார். இயேசு அப்பேயைக் கடிந்துகொள்ளவே, அது அவனை விட்டு வெளியேறியது. அந்நேரமே சிறுவன் குணமடைந்தான்.
இயேசு பேயைக் கடிந்து கொண்டார் என்பது ஒரு மனோதத்துவ ஆற்றுப்படுத்தும் முறையாக உள்ளது. சிறுவனது தந்தையின் நம்பிக்கையால், அவன் வலிப்பு நோயில் இருந்து குணம் பெற்றான். இயேசு கிறிஸ்து செய்த அற்புதத்தை அவரது சீடர் களால் செய்ய முடியவில்லை. ஏனெனில், அப்பொழுது சீடர் களிடம் போதிய அளவு நம்பிக்கை இல்லாமல் இருந்தது.
நம்பிக்கை இல்லாதவர்கள் எதையும் சாதிக்க முடியாது என்ற மற்றொரு பாடத்தை இயேசு நமக்கு சொல்லித் தரு கிறார்.
‘நீங்கள் ஐயம் எதுவுமின்றி நம்பிக்கையுடன் இருந்தால் நான் செய்ததை நீங்களும் செய்வீர்கள்’ என்று இயேசு சீடர்களுக்கு கற்பித்தார்.
இயேசுவின் உயிர்ப்பு வழியாக சீடர்கள் பெற்ற நம்பிக்கையே, பின்னர் அவர்கள் பல்வேறு அற்புதங்களைச் செய்யக் காரணமாக அமைந்தது. ‘நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது நம்பிக்கையுடன் கேட்பதை எல்லாம் பெற்றுக் கொள்வீர்கள்’ என இயேசு நமக்கும் கற்றுத் தருகிறார். சிறப்பாக, ஆண்டவர் இயேசுவில் முழு நம்பிக்கை கொண்டால், நம் வாழ்வில் அற்புதங்களைக் காண்பது உறுதி.
- டே. ஆக்னல் ஜோஸ், சென்னை.
இயேசு கிறிஸ்துவின் செயல்களை நேரில் பார்த்தவர்கள், அவர்களிடம் இருந்து கேட்டவர்கள் தந்த சான்றின் அடிப்படையில் நற்செய்தி நூல்கள் எழுதப்பட்டுள்ளன.
இறைமகன் இயேசுவின் வல்லமையே இந்த அற்புதங் களுக்கு காரணம் என்று பைபிள் சான்று பகர்கிறது. ஆனால் இயேசுவோ, ‘உன் நம்பிக்கை உன்னை நலமாக்கிற்று’ என்று வேறொரு காரணத்தைக் கூறுகிறார்.
அதாவது, ‘இங்கு சென்றால் நலம் கிடைக்கும், இப்படி செய்தால் வெற்றி கிடைக்கும், இவரிடம் போனால் நல்லது நடக்கும் என்று நாம் கொள்ளும் நம்பிக்கையே நன்மையானவை நிகழ காரணமாக அமைகிறது’ என்று இயேசு எடுத்துரைக்கிறார்.
ஒருமுறை இயேசுவைத் தேடி, கானானியப் பெண் ஒருவர் வந்தார். அவர் இயேசுவிடம், ‘ஐயா, பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிற என் மகளை குணப்படுத்தும்’ என வேண்டினார்.
இயேசுவோ மறுமொழியாக, ‘பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல’ என்று கூறி அவரை சோதித்தார்.
அப்பெண்ணோ, ‘ஆம் ஐயா, ஆனாலும் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே’ என பதிலளித்தார்.
உடனே இயேசு, ‘அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே நிகழட்டும்’ என்றார். அந்நேரமே அவர் மகளின் பிணி நீங்கியது.
மற்றொரு தடவை, பன்னிரு ஆண்டுகளாய் ரத்தப்போக்கினால் வருந்திய ஒரு பெண் இயேசுவுக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார். ஏனெனில் அப்பெண், ‘நான் இயேசுவின் ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்’ எனத் தமக்குள் சொல்லிக் கொண்டார். இயேசு அவரைத் திரும்பிப் பார்த்து, ‘மகளே, துணிவோடிரு, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று’ என்றார். உடனே அப்பெண் நலம் அடைந்தார்.
ஒருவருடைய நம்பிக்கை அவரை குணப்படுத்தும் என்பதை மேற்கூறிய நிகழ்வுகள் வழியாக இயேசு நமக்கு கற்றுத் தரு கிறார். ஆகவே, நாம் எதை நம்புகிறோமோ அதுவே நடக்கும்.
நன்மை நிகழும் என்று நினைத்தால் நல்லதும், தீமை நேரும் என்று எண்ணினால் கெட்டதும் நடக்கும் என்பதே இயேசு தரும் போதனை. நமது நம்பிக்கை நமக்கு மட்டுமன்று, மற்றவர்களுக்கும் நலம் கிடைக்க உதவும் என்பதையும் இயேசு நமக்கு சொல்லித் தருகிறார்.
ஒரு நாள் இயேசு ஒரு வீட்டில் அமர்ந்து போதித்துக் கொண்டிருந்தார். அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து கொண்டு வந்தனர். மக்கள் திரண்டிருந்த காரணத்தால், வீட்டின் மேற்கூரையைப் பிரித்து, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு இயேசுவுக்கு முன்பாக இறக்கினர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், ‘மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன. நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ’ என்றார். அவரும் நலமடைந்து, தமது படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார்.
ஆகவே, நமது நம்பிக்கைக்கு நலம் தரும் ஆற்றல் இருக்கிறது என்பதை இயேசுவிடம் இருந்து நாம் கற்றுக் கொள்கிறோம். இயேசு கிறிஸ்துவின் ஒவ்வொரு போதனையும், அவரது இறைத்தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தன. எவற்றின் மீது நம்பிக்கை வைத்தாலும், நாம் நலம்பெற முடியும்.
ஆனால், நாம் நம்பிக்கை வைப்பவை அனைத்தும் குணம் தரக்கூடியவை அல்ல. எல்லாம் வல்ல ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தால், அது ஒருபோதும் வீண்போகாது. தம்மிடம் நம்பிக்கை வைக்காதவர்களின் வாழ்வில் அற்புதம் செய்ய அவர் விரும்புவதில்லை.
ஒருவர் இயேசுவை அணுகி அவர்முன் முழந்தாள் படியிட்டு, ‘ஐயா, என் மகனுக்கு இரங்கும். அவன் வலிப்பு நோயால் பெரிதும் துன்புறுகிறான். அடிக்கடி தீயிலும் தண்ணீரிலும் விழு கிறான். உம் சீடர்களிடம் அவனைக் கொண்டு வந்தேன். அவனைக் குணமாக்க அவர்களால் முடியவில்லை’ என்றார்.
அதற்கு இயேசு, ‘நம்பிக்கையற்ற தலைமுறையினரே, நான் உங்களைப் பொறுத்துக் கொள்ள இயலும்? அவனை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள்’ என்று கூறினார். இயேசு அப்பேயைக் கடிந்துகொள்ளவே, அது அவனை விட்டு வெளியேறியது. அந்நேரமே சிறுவன் குணமடைந்தான்.
இயேசு பேயைக் கடிந்து கொண்டார் என்பது ஒரு மனோதத்துவ ஆற்றுப்படுத்தும் முறையாக உள்ளது. சிறுவனது தந்தையின் நம்பிக்கையால், அவன் வலிப்பு நோயில் இருந்து குணம் பெற்றான். இயேசு கிறிஸ்து செய்த அற்புதத்தை அவரது சீடர் களால் செய்ய முடியவில்லை. ஏனெனில், அப்பொழுது சீடர் களிடம் போதிய அளவு நம்பிக்கை இல்லாமல் இருந்தது.
நம்பிக்கை இல்லாதவர்கள் எதையும் சாதிக்க முடியாது என்ற மற்றொரு பாடத்தை இயேசு நமக்கு சொல்லித் தரு கிறார்.
‘நீங்கள் ஐயம் எதுவுமின்றி நம்பிக்கையுடன் இருந்தால் நான் செய்ததை நீங்களும் செய்வீர்கள்’ என்று இயேசு சீடர்களுக்கு கற்பித்தார்.
இயேசுவின் உயிர்ப்பு வழியாக சீடர்கள் பெற்ற நம்பிக்கையே, பின்னர் அவர்கள் பல்வேறு அற்புதங்களைச் செய்யக் காரணமாக அமைந்தது. ‘நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது நம்பிக்கையுடன் கேட்பதை எல்லாம் பெற்றுக் கொள்வீர்கள்’ என இயேசு நமக்கும் கற்றுத் தருகிறார். சிறப்பாக, ஆண்டவர் இயேசுவில் முழு நம்பிக்கை கொண்டால், நம் வாழ்வில் அற்புதங்களைக் காண்பது உறுதி.
- டே. ஆக்னல் ஜோஸ், சென்னை.
கச்சத்தீவு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழகத்தில் இருந்து நீதிபதி உள்பட 1920 பேர் பங்கேற்றனர்.
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் திருவிழா 2 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் இருநாட்டு பக்தர்களும் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டு திருவிழா நேற்று தொடங்கியது. விழாவில் கலந்து கொள்வதற்காக, ராமேசுவரத்தில் 62 படகுகள் மற்றும் 2,103 பேர் பெயர் பதிவு செய்திருந்தனர்.
நேற்று காலை 6 மணி முதல் சுங்க இலாகாவினர், வருவாய்த்துறையினர், புலனாய்வு துறையினர், மற்றும் காவல் துறையினர் அனைத்து படகுகளையும் சோதனையிட்டனர். அதன்பின்னர் பங்குத்தந்தை அந்தோணிச்சாமி தலைமையில் 60 படகுகளில் 1,532 ஆண்கள், 336 பெண்கள், 52 குழந்தைகள் என மொத்தம் 1,920 பேர் புறப்பட்டு சென்றனர். தமிழக பக்தர்கள் சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான சுமார் 40 அடி நீளம் கொண்ட தேக்கு மரத்தால் ஆன கொடிமரம், 4 அடி உயரமுள்ள அந்தோணியார் சொரூபம், நற்கருணை ஆசீர் சிலுவை ஆகியவற்றை படகில் எடுத்துச்சென்றனர்.
மாவட்ட கலெக்டர் நடராஜன் வழியனுப்பி வைத்தார். நேற்று மதியம் 12 மணிக்குள் அனைத்து படகுகளும் சோதனைக்கு பின்னர் புறப்பட்டு சென்றன. கச்சத்தீவு திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழியும் புறப்பட்டு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற பக்தர்கள் பிற்பகல் 3 மணி அளவில் கச்சத்தீவை அடைந்தனர்.

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு ராமேசுவரத்தில் இருந்து நேற்று பக்தர்கள் புறப்பட்ட காட்சி.
அங்கு இலங்கை கடற்படையினர் இவர்களை சோதனை செய்தனர். தொடர்ந்து இங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட கொடிமரம் நடப்பட்டு மாலை 4.30 மணி அளவில் இருநாட்டு பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் இலங்கை பங்குத்தந்தை எமரிபால் தலைமையில் பங்குத்தந்தையர்கள் திருப்பலி நிறைவேற்றினர்.
அதனை தொடர்ந்து சிலுவை பாதை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இருநாட்டு பக்தர்களும் சிலுவையை தோளில் சுமந்து சென்று புனித அந்தோணியார் ஆலயத்தை வலம் வந்தனர். பின்னர் இரவு 7 மணி அளவில் புனித அந்தோணியார் தேர்பவனி நடைபெற்றது.
இந்த திருவிழாவில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, கதிர்காமம், மன்னார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 4000-க்கும் மேற்பட்ட பக்தர்களும் கலந்து கொண்டனர்.
திருவிழாவின் 2-வது நாளான இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. தொடர்ந்து கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடைகிறது.
திருவிழாவையொட்டி இலங்கை கடற்படையினர், கடலோர காவல்படையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கப்பல்களில் கச்சத்தீவு பகுதியில் முகாமிட்டு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவிழாவையொட்டி ராமேசுவரம், பாம்பன் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு திருவிழா நேற்று தொடங்கியது. விழாவில் கலந்து கொள்வதற்காக, ராமேசுவரத்தில் 62 படகுகள் மற்றும் 2,103 பேர் பெயர் பதிவு செய்திருந்தனர்.
நேற்று காலை 6 மணி முதல் சுங்க இலாகாவினர், வருவாய்த்துறையினர், புலனாய்வு துறையினர், மற்றும் காவல் துறையினர் அனைத்து படகுகளையும் சோதனையிட்டனர். அதன்பின்னர் பங்குத்தந்தை அந்தோணிச்சாமி தலைமையில் 60 படகுகளில் 1,532 ஆண்கள், 336 பெண்கள், 52 குழந்தைகள் என மொத்தம் 1,920 பேர் புறப்பட்டு சென்றனர். தமிழக பக்தர்கள் சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான சுமார் 40 அடி நீளம் கொண்ட தேக்கு மரத்தால் ஆன கொடிமரம், 4 அடி உயரமுள்ள அந்தோணியார் சொரூபம், நற்கருணை ஆசீர் சிலுவை ஆகியவற்றை படகில் எடுத்துச்சென்றனர்.
மாவட்ட கலெக்டர் நடராஜன் வழியனுப்பி வைத்தார். நேற்று மதியம் 12 மணிக்குள் அனைத்து படகுகளும் சோதனைக்கு பின்னர் புறப்பட்டு சென்றன. கச்சத்தீவு திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழியும் புறப்பட்டு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற பக்தர்கள் பிற்பகல் 3 மணி அளவில் கச்சத்தீவை அடைந்தனர்.

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு ராமேசுவரத்தில் இருந்து நேற்று பக்தர்கள் புறப்பட்ட காட்சி.
அங்கு இலங்கை கடற்படையினர் இவர்களை சோதனை செய்தனர். தொடர்ந்து இங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட கொடிமரம் நடப்பட்டு மாலை 4.30 மணி அளவில் இருநாட்டு பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் இலங்கை பங்குத்தந்தை எமரிபால் தலைமையில் பங்குத்தந்தையர்கள் திருப்பலி நிறைவேற்றினர்.
அதனை தொடர்ந்து சிலுவை பாதை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இருநாட்டு பக்தர்களும் சிலுவையை தோளில் சுமந்து சென்று புனித அந்தோணியார் ஆலயத்தை வலம் வந்தனர். பின்னர் இரவு 7 மணி அளவில் புனித அந்தோணியார் தேர்பவனி நடைபெற்றது.
இந்த திருவிழாவில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, கதிர்காமம், மன்னார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 4000-க்கும் மேற்பட்ட பக்தர்களும் கலந்து கொண்டனர்.
திருவிழாவின் 2-வது நாளான இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. தொடர்ந்து கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடைகிறது.
திருவிழாவையொட்டி இலங்கை கடற்படையினர், கடலோர காவல்படையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கப்பல்களில் கச்சத்தீவு பகுதியில் முகாமிட்டு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவிழாவையொட்டி ராமேசுவரம், பாம்பன் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவு அந்தோணியார்ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில் பங்கேற்க ராமேசுவரத்தில் இருந்து 2,103 பேர் படகுகளில் பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்தியாவிற்கும்-இலங்கைக்கும் இடையே நடுக் கடலில் அமைந்துள்ளது கச்சத்தீவு. இங்குள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் 2 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதில் இந்திய, இலங்கை இருநாட்டு மக்கள் கலந்துகொள்வார்கள். இந்த ஆண்டு திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.
திருவிழாவின் முதல் நாளான இன்று மாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கி சிலுவை பாதை திருப்பலி மற்றும் தேர் பவனி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து திருவிழாவின் 2-வது நாளான நாளை(சனிக்கிழமை) காலை 7 மணிக்கு 2-ம் நாள் திருவிழா திருப்பலி நடை பெற்று காலை 9 மணிக்கு திருவிழா நிறைவடையும்.
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க இந்தியாவை சேர்ந்த 2,103 பேர் ராமேசுவரத்தில் இருந்து இன்று காலை 8 மணிக்கு படகுகளில் புறப்பட்டு பயணம் மேற்கொள்கின்றனர். காலைமுதல் ஒவ்வொரு படகாக புறப்பட்டு பகல் 12 மணிக்குள் 62 விசைப்படகுகள் கச்சத்தீவு செல்கின்றன.

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு கொண்டுசெல்ல கொடிமரம் படகில் எடுத்துச்செல்லப்பட்ட காட்சி.
இந்த ஆண்டு கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவிற்காக தமிழக பக்தர்கள் சார்பில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள சுமார் 40 அடி நீளம் கொண்ட தேக்கு மரத்தால் ஆன கொடி மரமும், 4 அடி உயரம் கொண்ட அந்தோணியார் சொரூபம் ஒன்றும், நற் கருணைஆசீர் சிலுவையும் வழங்கப்பட உள்ளது. அதற்காக நேற்று கொடிமரம் படகில் ஏற்றி தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு முதல்முறையாக தமிழக பக்தர்கள் சார்பில் வழங்கப்படும் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்குகிறது. கச்சத்தீவு திருவிழாவையொட்டி பாக்ஜலசந்தி கடலான மண்டபம் முதல் தனுஷ்கோடி வரை உள்ள இந்திய கடல் பகுதியில் சென்னையில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான பெரிய ரோந்து கப்பல் ஒன்றும் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான 3 ஹோவர் கிராப்ட் கப்பலும், கடலோர போலீசாருக்கு சொந்தமான 2 பைபர் படகில் கடலோர போலீசாரும் நேற்று முதல் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவிழாவையொட்டி ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதால் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
திருவிழாவின் முதல் நாளான இன்று மாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கி சிலுவை பாதை திருப்பலி மற்றும் தேர் பவனி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து திருவிழாவின் 2-வது நாளான நாளை(சனிக்கிழமை) காலை 7 மணிக்கு 2-ம் நாள் திருவிழா திருப்பலி நடை பெற்று காலை 9 மணிக்கு திருவிழா நிறைவடையும்.
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க இந்தியாவை சேர்ந்த 2,103 பேர் ராமேசுவரத்தில் இருந்து இன்று காலை 8 மணிக்கு படகுகளில் புறப்பட்டு பயணம் மேற்கொள்கின்றனர். காலைமுதல் ஒவ்வொரு படகாக புறப்பட்டு பகல் 12 மணிக்குள் 62 விசைப்படகுகள் கச்சத்தீவு செல்கின்றன.

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு கொண்டுசெல்ல கொடிமரம் படகில் எடுத்துச்செல்லப்பட்ட காட்சி.
இந்த ஆண்டு கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவிற்காக தமிழக பக்தர்கள் சார்பில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள சுமார் 40 அடி நீளம் கொண்ட தேக்கு மரத்தால் ஆன கொடி மரமும், 4 அடி உயரம் கொண்ட அந்தோணியார் சொரூபம் ஒன்றும், நற் கருணைஆசீர் சிலுவையும் வழங்கப்பட உள்ளது. அதற்காக நேற்று கொடிமரம் படகில் ஏற்றி தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு முதல்முறையாக தமிழக பக்தர்கள் சார்பில் வழங்கப்படும் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்குகிறது. கச்சத்தீவு திருவிழாவையொட்டி பாக்ஜலசந்தி கடலான மண்டபம் முதல் தனுஷ்கோடி வரை உள்ள இந்திய கடல் பகுதியில் சென்னையில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான பெரிய ரோந்து கப்பல் ஒன்றும் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான 3 ஹோவர் கிராப்ட் கப்பலும், கடலோர போலீசாருக்கு சொந்தமான 2 பைபர் படகில் கடலோர போலீசாரும் நேற்று முதல் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவிழாவையொட்டி ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதால் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
அவர் (ஏசு) அவர்களை நோக்கி, நீங்கள் மனிதர் முன்பாக உங்களை நீதிமான்களாக காட்டுகிறீர்கள். தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்.
அவர் (ஏசு) அவர்களை நோக்கி, நீங்கள் மனிதர் முன்பாக உங்களை நீதிமான்களாக காட்டுகிறீர்கள். தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார். மனிதருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது. - லூக்கா 16:15
ஆதரவற்றவர்களுக்கு வாழ்வு அளிப்பது தொடர்பான சமூக இயக்கத்துக்கு நிர்வாகியாக செயல்பட்ட ஒரு மனிதர் பல ஆதரவற்றோர் இல்லங்களை அமைத்து அவைகளை நிர்வகித்து வந்தார். பல வெளிநாட்டு ஸ்தாபனங்களை அனுகி ஆதரவற்றோர் ஆசிரமங்களுக்கு உதவி பெறுவதில் அவர் முனைப்புடன் செயல்பட்டார். அவரது மனித நேய பணிகளுக்காக அரசாங்கத்திலும், சேவை இயக்கத்தாலும், பல பட்டங்களையும் பாராட்டுக் களையும் அவர் பெற்றார். ஆனால், அவருடைய பின்னணியில் இன்னொரு முக்கிய செய்தி உண்டு. வயது முதிர்ந்த தன்னுடைய பெற்றோருக்கு செய்யவேண்டிய கடமையை அவர் செய்யவில்லை. வறுமையில் வாடும் தன் சகோதரர்களின் நலனை விசாரிக்க கூட அவரிடம் மனம் இல்லை.
நாம், எந்தெந்த விதங்களில் நற்செயல்கள் செய்கின்றோம் என்பதை விட அவைகளுக்கேற்ற மனோபாவங்கள் நமக்கு உண்டா என்பது மிகமுக்கியம். நற்பண்புகளை பின்னணியாக கொண்டிராத எந்தஒரு நற்செயலும் சுய நலம் சார்ந்ததாகவும், மறைவான ஆதாயங்களை நோக்கமாக கொண்டதாகவும் இருக்கும். அந்த நற்செயல்கள் மனிதர்களின் பாராட்டை பெற்று தந்தாலும், கடவுள் அவைகளை அருவருப்பாகவே பார்க்கிறார்.
ஆம்! இன்று அன்பு சார்ந்த நற்பணிகளை செய்கின்ற பலரின் தனிப்பட்ட வாழ்க்கை வட்டத்தில் அன்பின் வாசனை சற்றும் இல்லை. ஜனங்களின் பிரச்சினைகளுக்காக இரங்கி சமூக நல ஸ்தாபனங்களை நடத்துகிற பலரிடம் இரக்க உணர்வு இதயத்தில் இல்லை. பரிசுத்தத்தை குறித்தும் ஆத்ம ஆதாயத்தை குறித்தும் பிரமாதமாக பேசுகிற பலரால் பெரிய ஊழிய ஸ்தாபனங்களை உருவாக்க முடிகிறது. ஜனங்களுக்கு நடுவில் பெரிய ஊழியர்களாக பிரபலமடைய முடிகிறது. ஆனால், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைகளே பரிசுத்தத்தை அறியாதவைகளாகவும், பொருள் ஆதாயங்களை நோக்கமாக கொண்டவைகளாகவும் இருக்கின்றன.
மனிதர்கள் நாம் பேசுவதை கேட்பார்கள் . கடவுளோ, நமது உள்ளத்தில் உள்ளது என்ன என்பதை பார்ப்பார். மனிதர்கள் நம்முடைய செயல்களை பார்த்து மெச்சுவார்கள். கடவுளோ, அவைகளுக்கு அடிப்படையாக இருக்கவேண்டிய உண்மையான பண்பு நிலைகள் இல்லாததை கண்டு விஷனப்படுவார். நம்முடைய நற்செயல்கள் பலருடைய பாராட்டுகளை பெறும் அதே வேளையில் நற்குணங்கள் இல்லாத இதய நிலைகளை கடவுள் பார்த்து தமது கோபத்தையே நம்மேல் பொழிவார். நற்செயல்களுக்கு முன்பு நற்பண்புகளை நம்மிடம் காண கவனமாகஇருப்போமாக .
“தீயவைகள் உன்னிடம் தானாய் தோன்றும் ஆனால்
நல்லவைகளை நீ தான் தோற்றுவிக்க வேண்டும்“
-சாம்சன் பால்
ஆதரவற்றவர்களுக்கு வாழ்வு அளிப்பது தொடர்பான சமூக இயக்கத்துக்கு நிர்வாகியாக செயல்பட்ட ஒரு மனிதர் பல ஆதரவற்றோர் இல்லங்களை அமைத்து அவைகளை நிர்வகித்து வந்தார். பல வெளிநாட்டு ஸ்தாபனங்களை அனுகி ஆதரவற்றோர் ஆசிரமங்களுக்கு உதவி பெறுவதில் அவர் முனைப்புடன் செயல்பட்டார். அவரது மனித நேய பணிகளுக்காக அரசாங்கத்திலும், சேவை இயக்கத்தாலும், பல பட்டங்களையும் பாராட்டுக் களையும் அவர் பெற்றார். ஆனால், அவருடைய பின்னணியில் இன்னொரு முக்கிய செய்தி உண்டு. வயது முதிர்ந்த தன்னுடைய பெற்றோருக்கு செய்யவேண்டிய கடமையை அவர் செய்யவில்லை. வறுமையில் வாடும் தன் சகோதரர்களின் நலனை விசாரிக்க கூட அவரிடம் மனம் இல்லை.
நாம், எந்தெந்த விதங்களில் நற்செயல்கள் செய்கின்றோம் என்பதை விட அவைகளுக்கேற்ற மனோபாவங்கள் நமக்கு உண்டா என்பது மிகமுக்கியம். நற்பண்புகளை பின்னணியாக கொண்டிராத எந்தஒரு நற்செயலும் சுய நலம் சார்ந்ததாகவும், மறைவான ஆதாயங்களை நோக்கமாக கொண்டதாகவும் இருக்கும். அந்த நற்செயல்கள் மனிதர்களின் பாராட்டை பெற்று தந்தாலும், கடவுள் அவைகளை அருவருப்பாகவே பார்க்கிறார்.
ஆம்! இன்று அன்பு சார்ந்த நற்பணிகளை செய்கின்ற பலரின் தனிப்பட்ட வாழ்க்கை வட்டத்தில் அன்பின் வாசனை சற்றும் இல்லை. ஜனங்களின் பிரச்சினைகளுக்காக இரங்கி சமூக நல ஸ்தாபனங்களை நடத்துகிற பலரிடம் இரக்க உணர்வு இதயத்தில் இல்லை. பரிசுத்தத்தை குறித்தும் ஆத்ம ஆதாயத்தை குறித்தும் பிரமாதமாக பேசுகிற பலரால் பெரிய ஊழிய ஸ்தாபனங்களை உருவாக்க முடிகிறது. ஜனங்களுக்கு நடுவில் பெரிய ஊழியர்களாக பிரபலமடைய முடிகிறது. ஆனால், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைகளே பரிசுத்தத்தை அறியாதவைகளாகவும், பொருள் ஆதாயங்களை நோக்கமாக கொண்டவைகளாகவும் இருக்கின்றன.
மனிதர்கள் நாம் பேசுவதை கேட்பார்கள் . கடவுளோ, நமது உள்ளத்தில் உள்ளது என்ன என்பதை பார்ப்பார். மனிதர்கள் நம்முடைய செயல்களை பார்த்து மெச்சுவார்கள். கடவுளோ, அவைகளுக்கு அடிப்படையாக இருக்கவேண்டிய உண்மையான பண்பு நிலைகள் இல்லாததை கண்டு விஷனப்படுவார். நம்முடைய நற்செயல்கள் பலருடைய பாராட்டுகளை பெறும் அதே வேளையில் நற்குணங்கள் இல்லாத இதய நிலைகளை கடவுள் பார்த்து தமது கோபத்தையே நம்மேல் பொழிவார். நற்செயல்களுக்கு முன்பு நற்பண்புகளை நம்மிடம் காண கவனமாகஇருப்போமாக .
“தீயவைகள் உன்னிடம் தானாய் தோன்றும் ஆனால்
நல்லவைகளை நீ தான் தோற்றுவிக்க வேண்டும்“
-சாம்சன் பால்
இறைவன் எங்கு இருக்கிறார் என கேள்வி கேட்டு அலையாது, நம்மோடு, நம் சகோதர சகோதரிகளோடு, அண்டை வீட்டு மனிதர்களோடு உடன் இருக்கின்றார் என்பதனை கண்டு கொள்வோம்.
ஒரு இளைஞனுக்கு இந்த உலகமே மாபெரும் துன்பகர அனுபவமாக தென்பட்டது. எப்படியாவது இன்பத்தையும், மகிழ்வையும் கண்டுபிடித்து விடவேண்டும் என ஆசைப்பட்டான். என்ன செய்வது, யாரிடம் ஆலோசனை கேட்பது என்பதெல்லாம் அவனுக்கு தெரியவில்லை. காட்டில் வாழும் முனிவர்களிடம் சென்று ஆலோசனை கேட்கலாம் என முடிவெடுத்து காட்டை நோக்கி பயணமானான். முனிவரை சந்தித்து ஆலோசனை கேட்டான். அவர் பின்வரும் நிகழ்வைப் பகிர்ந்து கொண்டார்.
காலணிகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் அரசன் ஒருவன் வேட்டையாட காட்டுக்கு சென்றான். அரசனுக்கு காலில் முள் தைத்து விட்டது. உடனே அமைச்சரை அழைத்து பாதை மோசமாக இருப்பதால், நாடு முழுவதும் மாட்டுத்தோலில் கம்பளம் விரிக்கும்படி ஆணையிட்டான். அதைப்பார்த்த துறவி, மன்னரை அணுகி ஏன் வீண் செலவு? உன் கால்களைக் காக்க இரண்டு மாட்டுத்தோல் போதுமே என்றார். அரசன் உத்தரவால் மிதியடி உருவானது.
நிகழ்வினை கேட்டுக்கொண்டிருந்த இளைஞன், இந்நிகழ்வுக்கும் என் கேள்விக்கும் என்ன தொடர்பு என்றான்? அதற்கு முனிவர் உலகம் மகிழ்வானதாக மாற வேண்டுமெனில், உன் உள்ளம் மகிழ்வாக மாற வேண்டும், என்றார்.
இறைமகன் இயேசுவின் சீடர்கள், அவரின் துன்பங்களையும், பாடுகளையும் முழுமையாக அறிந்து கொண்டதால் தான், அர்த்தமிக்க சீடத்துவ வாழ்வு வாழ்ந்தனர். தம்மையே முழுமையாய் இறைவனுக்கு கையளித்தனர். பலரின் வாழ்வுத்தரம் உயர மாபெரும் தூண்டுகோலால் திகழ்ந்தனர். ஆதலால் நாமும், நமது வாழ்வை இறைவனுக்கு உகந்ததாய் மாற்ற, முழுதாய் அர்ப்பணிக்க முயற்சி செய்வோம். எவையெவை என் வாழ்வின் மகிழ்ச்சிக்கு தடையாய் இருக்கின்றது என்பதை கண்டுபிடிப்போம்.
இறைவனோடு இணைந்திருப்பதில் முழுமையான ஆனந்தம் மறைந்திருக்கிறது. இறைவன் எங்கு இருக்கிறார் என கேள்வி கேட்டு அலையாது, நம்மோடு, நம் சகோதர சகோதரிகளோடு, அண்டை வீட்டு மனிதர்களோடு உடன் இருக்கின்றார் என்பதனை கண்டு கொள்வோம். தவக்காலத்தின் சிறப்பே உடல் ஒறுத்தல் செய்வதில் தான் முழுமை பெறுகின்றது.
எவையெவை எனக்கு ஆடம்பரங்களை உருவாக்கிக் கொடுக்கின்றது? எவையெவை என் வாழ்வின் லட்சிய பயணத்துக்கு தடையை உருவாக்குகின்றது? என்பதையெல்லாம் கண்டுபிடிப்போம். தன்னை அர்ப்பணித்து வாழ்வதற்கு இறைமகன் இயேசு கிறிஸ்து தெருவோர வாழ்வுச்சூழலை தெரிவு செய்து கொண்டார். தனக்கென சொந்தமும், சுற்றமும் இல்லாது சிலுவையில் உயிர் விட்டார். இத்தகைய உயரிய வாழ்வுச்சூழலை நினைத்து இறைவழியில் நடக்க, நாம் முயற்சி எடுக்க வேண்டும்.
உறவின்றி மனித வாழ்வுக்கு அர்த்தமில்லை. முழுமையுமில்லை என்பதனை அறிந்த நாம், நம்மால் முடிந்த அளவுக்கு கைவிடப்பட்டவர்களைத்தேடிச் செல்வோம். வீதியோரங்களிலும், சாலை ஓரங்களிலும் உறங்குகின்ற மனிதர்களுக்கு காவலாய் இருப்போம். அவர்களுக்கு முகவரியமைத்து கொடுக்க தகுந்த வழியினை கண்டுபிடிப்போம். பொன்னையும், பொருளையும் கொடுப்பதை விட உயர்ந்தது நமது நேரங்களையும், ஆற்றல்களையும் செலவழிப்பதாகும். அதிலேதான் உண்மையான அர்ப்பணம் மறைந்து இருக்கின்றது என்ற பேருண்மையை கற்றுக்கொள்வோம். நல்வார்த்தைகளை, நற்சிந்தனைகளை நாளுக்கு நாள் விதைத்துக் கொண்டு தொடர்ந்து வளர்வோம்
-அருட்பணி. குருசு கார்மல்,
இணை பங்குத்தந்தை, தூய சவேரியார்
பேராலயம், கோட்டார், நாகர்கோவில்.
காலணிகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் அரசன் ஒருவன் வேட்டையாட காட்டுக்கு சென்றான். அரசனுக்கு காலில் முள் தைத்து விட்டது. உடனே அமைச்சரை அழைத்து பாதை மோசமாக இருப்பதால், நாடு முழுவதும் மாட்டுத்தோலில் கம்பளம் விரிக்கும்படி ஆணையிட்டான். அதைப்பார்த்த துறவி, மன்னரை அணுகி ஏன் வீண் செலவு? உன் கால்களைக் காக்க இரண்டு மாட்டுத்தோல் போதுமே என்றார். அரசன் உத்தரவால் மிதியடி உருவானது.
நிகழ்வினை கேட்டுக்கொண்டிருந்த இளைஞன், இந்நிகழ்வுக்கும் என் கேள்விக்கும் என்ன தொடர்பு என்றான்? அதற்கு முனிவர் உலகம் மகிழ்வானதாக மாற வேண்டுமெனில், உன் உள்ளம் மகிழ்வாக மாற வேண்டும், என்றார்.
இறைமகன் இயேசுவின் சீடர்கள், அவரின் துன்பங்களையும், பாடுகளையும் முழுமையாக அறிந்து கொண்டதால் தான், அர்த்தமிக்க சீடத்துவ வாழ்வு வாழ்ந்தனர். தம்மையே முழுமையாய் இறைவனுக்கு கையளித்தனர். பலரின் வாழ்வுத்தரம் உயர மாபெரும் தூண்டுகோலால் திகழ்ந்தனர். ஆதலால் நாமும், நமது வாழ்வை இறைவனுக்கு உகந்ததாய் மாற்ற, முழுதாய் அர்ப்பணிக்க முயற்சி செய்வோம். எவையெவை என் வாழ்வின் மகிழ்ச்சிக்கு தடையாய் இருக்கின்றது என்பதை கண்டுபிடிப்போம்.
இறைவனோடு இணைந்திருப்பதில் முழுமையான ஆனந்தம் மறைந்திருக்கிறது. இறைவன் எங்கு இருக்கிறார் என கேள்வி கேட்டு அலையாது, நம்மோடு, நம் சகோதர சகோதரிகளோடு, அண்டை வீட்டு மனிதர்களோடு உடன் இருக்கின்றார் என்பதனை கண்டு கொள்வோம். தவக்காலத்தின் சிறப்பே உடல் ஒறுத்தல் செய்வதில் தான் முழுமை பெறுகின்றது.
எவையெவை எனக்கு ஆடம்பரங்களை உருவாக்கிக் கொடுக்கின்றது? எவையெவை என் வாழ்வின் லட்சிய பயணத்துக்கு தடையை உருவாக்குகின்றது? என்பதையெல்லாம் கண்டுபிடிப்போம். தன்னை அர்ப்பணித்து வாழ்வதற்கு இறைமகன் இயேசு கிறிஸ்து தெருவோர வாழ்வுச்சூழலை தெரிவு செய்து கொண்டார். தனக்கென சொந்தமும், சுற்றமும் இல்லாது சிலுவையில் உயிர் விட்டார். இத்தகைய உயரிய வாழ்வுச்சூழலை நினைத்து இறைவழியில் நடக்க, நாம் முயற்சி எடுக்க வேண்டும்.
உறவின்றி மனித வாழ்வுக்கு அர்த்தமில்லை. முழுமையுமில்லை என்பதனை அறிந்த நாம், நம்மால் முடிந்த அளவுக்கு கைவிடப்பட்டவர்களைத்தேடிச் செல்வோம். வீதியோரங்களிலும், சாலை ஓரங்களிலும் உறங்குகின்ற மனிதர்களுக்கு காவலாய் இருப்போம். அவர்களுக்கு முகவரியமைத்து கொடுக்க தகுந்த வழியினை கண்டுபிடிப்போம். பொன்னையும், பொருளையும் கொடுப்பதை விட உயர்ந்தது நமது நேரங்களையும், ஆற்றல்களையும் செலவழிப்பதாகும். அதிலேதான் உண்மையான அர்ப்பணம் மறைந்து இருக்கின்றது என்ற பேருண்மையை கற்றுக்கொள்வோம். நல்வார்த்தைகளை, நற்சிந்தனைகளை நாளுக்கு நாள் விதைத்துக் கொண்டு தொடர்ந்து வளர்வோம்
-அருட்பணி. குருசு கார்மல்,
இணை பங்குத்தந்தை, தூய சவேரியார்
பேராலயம், கோட்டார், நாகர்கோவில்.






