என் மலர்
கிறித்தவம்
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் புனித வெள்ளியையொட்டி சிலுவை பாதை வழிபாடு நடந்தது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறந்த தினம் புனித வெள்ளியாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு புனித வெள்ளி தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள், சிலுவை பாதை வழிபாடு போன்றவை நடந்தன.
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் புனித வெள்ளியையொட்டி நேற்று காலை முதலே சிறப்பு ஆராதனைகள் நடந்தது.
பின்னர் இயேசுவின் பாடுகளை தியானிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி சிலுவைக்கு முத்தமிட்டு வழிபாட்டை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஏராளமானோர் சிலுவையை முத்தமிட்டு காணிக்கை செலுத்தினர்.
இதையடுத்து இரவு 8 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிலுவை பாதை நடந்தது. இயேசு கிறிஸ்து போல் வேடம் அணிந்த ஒருவர் சிலுவையை சுமந்து சென்றார். அவரை பின்தொடர்ந்து, பங்கு மக்கள் பாடல்கள் பாடியபடி சென்று ஆலயத்தை சுற்றி வந்தனர்.
நிகழ்ச்சியில், மறைமாவட்ட அருட்பணியாளர் மைக்கேல் ஏஞ்சல், பங்கு தந்தை கிரேஷ் குணப்பால் ஆராச்சி, இணை பங்குத்தந்தை ஆன்றனி பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மார்த்தாண்டம் சேகர சி.எஸ்.ஐ. ஆலயத்தில் தலைமை போதகர் யோவாஸ் தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. மார்த்தாண்டம் கிறிஸ்து ராஜா ஆலயத்தில் பங்கு தந்தை ஜோஸ் பிரைட் தலைமையில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது. இதுபோல் மலங்கரை கத்தோலிக்க ஆலயங்களிலும், சீரோமலபார் ஆலயங்களிலும் சிலுவை பாதை மற்றும் வழிபாடுகள் நடந்தது.
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் புனித வெள்ளியையொட்டி நேற்று காலை முதலே சிறப்பு ஆராதனைகள் நடந்தது.
பின்னர் இயேசுவின் பாடுகளை தியானிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி சிலுவைக்கு முத்தமிட்டு வழிபாட்டை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஏராளமானோர் சிலுவையை முத்தமிட்டு காணிக்கை செலுத்தினர்.
இதையடுத்து இரவு 8 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிலுவை பாதை நடந்தது. இயேசு கிறிஸ்து போல் வேடம் அணிந்த ஒருவர் சிலுவையை சுமந்து சென்றார். அவரை பின்தொடர்ந்து, பங்கு மக்கள் பாடல்கள் பாடியபடி சென்று ஆலயத்தை சுற்றி வந்தனர்.
நிகழ்ச்சியில், மறைமாவட்ட அருட்பணியாளர் மைக்கேல் ஏஞ்சல், பங்கு தந்தை கிரேஷ் குணப்பால் ஆராச்சி, இணை பங்குத்தந்தை ஆன்றனி பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மார்த்தாண்டம் சேகர சி.எஸ்.ஐ. ஆலயத்தில் தலைமை போதகர் யோவாஸ் தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. மார்த்தாண்டம் கிறிஸ்து ராஜா ஆலயத்தில் பங்கு தந்தை ஜோஸ் பிரைட் தலைமையில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது. இதுபோல் மலங்கரை கத்தோலிக்க ஆலயங்களிலும், சீரோமலபார் ஆலயங்களிலும் சிலுவை பாதை மற்றும் வழிபாடுகள் நடந்தது.
உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் இன்றைய தினத்தை (ஏப்ரல் 19-ந் தேதி) புனித வெள்ளியாகக் கடைப்பிடிக்கின்றனர்.
உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் இன்றைய தினத்தை (ஏப்ரல் 19-ந் தேதி) புனித வெள்ளியாகக் கடைப்பிடிக்கின்றனர்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இறைமகன் இயேசு சிலுவையில் ரத்தம் சிந்தி உயிர் துறந்ததால் இந்நாள் புனிதமானதாக மாறியது. மாபெரும் மனித உரிமை மீறலாக அரங்கேறிய இயேசுவின் படுகொலை, புனிதமாக மதிக்கப்படுவதற்கு காரணம் இருக்கிறது.
“அவர் நம் குற்றங்களுக்காக காயமடைந்தார், நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார். நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார். அவரது காயங்களால் நாம் குணமடைகின்றோம்” (எசாயா 53:5) என்ற நம்பிக்கையே அது.
விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில், மக்களின் பாவங்களைப் போக்குவதற்காக பல விலங்குகள் கடவுளுக்குப் பலியாக கொடுக்கப்பட்டன. ஆனால் புதிய ஏற்பாட்டில், மனிதராகத் தோன்றிய ‘இறைமகன்’ தம்மையே பலியாக செலுத்தினார் என்பது கிறிஸ்தவ நம்பிக்கை.
“திருச்சட்டத்தின்படி, ரத்தம் சிந்துதல் இன்றி பாவமன்னிப்பு இல்லை. யூத தலைமைக்குரு, பலியிடப்பட்ட விலங்குகளின் ரத்தத்துடன் ஆண்டுதோறும் தூயகத்திற்குள் செல்வார். கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரேமுறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார்” என்று எபிரேயருக்கு எழுதியத் திருமுகத்தில் (9:22-28) வாசிக்கிறோம்.
கடவுளின் வார்த்தையே மனித உடலெடுத்து, இயேசு கிறிஸ்து என்ற நபராக உலகில் வாழ்ந்தார். மனிதரான இறைவாக்கையே நாம் ‘கடவுளின் ஒரே மகன்’ என்று அழைக்கிறோம். மனிதர்கள் கடவுளுக்கு உகந்தவர்களாக வாழ்வது எப்படி என்பதை இஸ்ரயேலரிடையே தோன்றிய பல இறைவாக்கினர்கள் கற்பித்தனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாகிய இஸ்ரயேலர், அவர்களது வார்த்தை களைப் புறக்கணித்து, பாவத்தால் அடிமைத் தனத்துக்கு ஆளாயினர். இஸ்ரயேலரின் புறக்கணிப்பால் வேதனை அடைந்த கடவுள், அவர் களிடையே இறையாட்சியை நிறுவத் தம் ஒரே மகன் இயேசு கிறிஸ்துவை அனுப்பினார்.
“பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர்கள் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்” (எபிரேயர் 1:1&2) என்று எழுதப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.
இயேசு செய்த அற்புதங்களும், அவரது போதனைகளும் பாமர மக்களை வெகுவாகக் கவர்ந்ததால், யூத சமயத் தலைவர்கள் அவரை எதிரியாகப் பார்த்தனர். சட்டங்களைக் காரணம் காட்டி ஏழை எளியோரைக் கசக்கிப் பிழிந்த சமயத் தலைவர்களை இயேசு கடுமையாகச் சாடினார்.
இதனால் வெகுண்டெழுந்த அவர்கள், இயேசுவை ஒழித்துக்கட்ட திட்டம் தீட்டினர்.
உலக மக்களைப் பாவத்தின் அடிமைத்தளையில் இருந்து விடுவிப்பதற்காக, தமது உயிரை பலியாகக் கொடுக்கவே இயேசு உலகிற்கு வந்தார்.
ஆகவேதான், “மானிடமகன் (இயேசு) தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” (மாற்கு 10:45) என்று தமது வருகையின் நோக்கத்தை தெளிவாக எடுத்துரைத்தார்.
யூத சமயத் தலைவர்கள் தம்மை ரோமானியரிடம் கையளித்து, சிலுவையில் அறைந்து கொல்வார்கள் என்பதையும் இயேசு தமது சீடர்களுக்கு பலமுறை முன்னறிவித்தார் என்பதும் நமக்குத் தெரியும்.
யூதர்களின் பாஸ்கா விழாவுக்கு முன்பாக இயேசுவைக் கொலை செய்துவிட வேண்டும் என்று சமயத் தலைவர்கள் உறுதியேற்றனர். அவரை இரவோடு இரவாக ரகசியமாகக் கைது செய்து, ஆளுநர் பிலாத்து முன்னிலையில் அரசியல் குற்றவாளியாக நிறுத்தினர்.
இயேசுவிடம் குற்றம் காணாத பிலாத்து, அவரை விடுவிக்க வழிதேடினான். “இயேசுவை விடுவித்தால், நீர் சீசருக்கு நண்பராக இருக்க முடியாது” என்று யூத சமயத் தலைவர்கள் மிரட்டல் விடுத்தனர். அவர்கள் தந்திரம் நன்றாகவே வேலை செய்தது. இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்ல கையளித்துவிட்டு, தனது கைகளைக் கழுவினான் பிலாத்து.
இயேசுவின் தோளில் சிலுவை மரத்தை சுமத்தி, அவரை ‘கொல்கொதா’ என்ற இடத்துக்கு இழுத்துச் சென்றார்கள் படைவீரர்கள். அங்கே இரண்டு கள்வர்கள் நடுவில் அவர் சிலுவையில் அறையப்பட்டார்.
“உன்னை ‘இறைமகன்’ என்று கூறிக்கொண்டாயே, இப்பொழுது சிலுவையில் இருந்து இறங்கி வா, பார்ப்போம்” என சமயத் தலைவர்கள் கேலி செய்தார்கள். நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணி வரை எங்கும் இருள் சூழ்ந்தது. மூன்று மணிக்கு இயேசு, “தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்” என்று கூறி உயிர் நீத்தார். அது பாஸ்கா விழாவுக்கான ஆட்டுக்குட்டியைப் பலியிடும் நேரம்.
அப்போது எருசலேம் கோவிலின் திரை நடுவில் இரண்டாகக் கிழிந்து, மக்களின் பாவப்பரிகாரம் நிறைவேறிவிட்டது, கடவுளுக்கும் மனிதருக்கும் இடையேஇருந்த தடை விலகி விட்டது என்பதைத் தெளிவாக உணர்த்தியது.
“இறுதியாகத் தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டு, அவரை அவர்களிடம் அனுப்பினார். அம்மகனைக் கண்டபோது அவர்கள், ‘இவன்தான் சொத்துக்கு உரியவன்’ வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம்’ என்று அவரைப் பிடித்து, வெளியே தள்ளிக் கொன்று போட்டார்கள்” (மத்தேயு 21:37-39) என்று இயேசு உவமையாகக் கூறியது அவரில் நிறைவேறியது.
“தந்தையாம் கடவுள் யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. தமக்கு எல்லாரும் மதிப்புக் கொடுப்பதுபோல மகனுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டுமெனத் தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் முழுவதையும் அவர் மகனுக்கு அளித்துள்ளார்” (யோவான் 5:22) என்று இயேசு கூறினார். கடவுளின் வார்த்தையாகிய இயேசுவே நமது செயல்களுக்குத் தீர்ப்பளிக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளார். அவர் தம்மையே பலியாகக் கையளித்ததால், நமக்கு தண்டனை வழங்கும் கடவுளின் சட்டங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்தன. நாம் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டால், அவர் நமக்கு நிலைவாழ்வுக்கான மீட்பை வழங்குவார்.
சிலுவையில் அரங்கேறிய இயேசுவின் பலி, நமது பாவக்கடன்களைத் தள்ளுபடி செய்துவிட்டது. ஆயினும் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளாமல், அவர் வழியாகக் கிடைத்த நிலைவாழ்வை நாம் உரிமையாக்கி கொள்ள முடியாது.
“என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவும் அதிகாரம் உண்டு” (யோவான் 10:18) என்று அவர் கூறினார்.
தாம் சொன்னபடியே இறந்த மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததால், இயேசு கிறிஸ்துவை ‘இறை மகன்’ என்று நம்பி அறிக்கையிடுகிறோம்.
டே. ஆக்னல் ஜோஸ், சென்னை.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இறைமகன் இயேசு சிலுவையில் ரத்தம் சிந்தி உயிர் துறந்ததால் இந்நாள் புனிதமானதாக மாறியது. மாபெரும் மனித உரிமை மீறலாக அரங்கேறிய இயேசுவின் படுகொலை, புனிதமாக மதிக்கப்படுவதற்கு காரணம் இருக்கிறது.
“அவர் நம் குற்றங்களுக்காக காயமடைந்தார், நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார். நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார். அவரது காயங்களால் நாம் குணமடைகின்றோம்” (எசாயா 53:5) என்ற நம்பிக்கையே அது.
விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில், மக்களின் பாவங்களைப் போக்குவதற்காக பல விலங்குகள் கடவுளுக்குப் பலியாக கொடுக்கப்பட்டன. ஆனால் புதிய ஏற்பாட்டில், மனிதராகத் தோன்றிய ‘இறைமகன்’ தம்மையே பலியாக செலுத்தினார் என்பது கிறிஸ்தவ நம்பிக்கை.
“திருச்சட்டத்தின்படி, ரத்தம் சிந்துதல் இன்றி பாவமன்னிப்பு இல்லை. யூத தலைமைக்குரு, பலியிடப்பட்ட விலங்குகளின் ரத்தத்துடன் ஆண்டுதோறும் தூயகத்திற்குள் செல்வார். கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரேமுறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார்” என்று எபிரேயருக்கு எழுதியத் திருமுகத்தில் (9:22-28) வாசிக்கிறோம்.
கடவுளின் வார்த்தையே மனித உடலெடுத்து, இயேசு கிறிஸ்து என்ற நபராக உலகில் வாழ்ந்தார். மனிதரான இறைவாக்கையே நாம் ‘கடவுளின் ஒரே மகன்’ என்று அழைக்கிறோம். மனிதர்கள் கடவுளுக்கு உகந்தவர்களாக வாழ்வது எப்படி என்பதை இஸ்ரயேலரிடையே தோன்றிய பல இறைவாக்கினர்கள் கற்பித்தனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாகிய இஸ்ரயேலர், அவர்களது வார்த்தை களைப் புறக்கணித்து, பாவத்தால் அடிமைத் தனத்துக்கு ஆளாயினர். இஸ்ரயேலரின் புறக்கணிப்பால் வேதனை அடைந்த கடவுள், அவர் களிடையே இறையாட்சியை நிறுவத் தம் ஒரே மகன் இயேசு கிறிஸ்துவை அனுப்பினார்.
“பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர்கள் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்” (எபிரேயர் 1:1&2) என்று எழுதப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.
இயேசு செய்த அற்புதங்களும், அவரது போதனைகளும் பாமர மக்களை வெகுவாகக் கவர்ந்ததால், யூத சமயத் தலைவர்கள் அவரை எதிரியாகப் பார்த்தனர். சட்டங்களைக் காரணம் காட்டி ஏழை எளியோரைக் கசக்கிப் பிழிந்த சமயத் தலைவர்களை இயேசு கடுமையாகச் சாடினார்.
இதனால் வெகுண்டெழுந்த அவர்கள், இயேசுவை ஒழித்துக்கட்ட திட்டம் தீட்டினர்.
உலக மக்களைப் பாவத்தின் அடிமைத்தளையில் இருந்து விடுவிப்பதற்காக, தமது உயிரை பலியாகக் கொடுக்கவே இயேசு உலகிற்கு வந்தார்.
ஆகவேதான், “மானிடமகன் (இயேசு) தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” (மாற்கு 10:45) என்று தமது வருகையின் நோக்கத்தை தெளிவாக எடுத்துரைத்தார்.
யூத சமயத் தலைவர்கள் தம்மை ரோமானியரிடம் கையளித்து, சிலுவையில் அறைந்து கொல்வார்கள் என்பதையும் இயேசு தமது சீடர்களுக்கு பலமுறை முன்னறிவித்தார் என்பதும் நமக்குத் தெரியும்.
யூதர்களின் பாஸ்கா விழாவுக்கு முன்பாக இயேசுவைக் கொலை செய்துவிட வேண்டும் என்று சமயத் தலைவர்கள் உறுதியேற்றனர். அவரை இரவோடு இரவாக ரகசியமாகக் கைது செய்து, ஆளுநர் பிலாத்து முன்னிலையில் அரசியல் குற்றவாளியாக நிறுத்தினர்.
இயேசுவிடம் குற்றம் காணாத பிலாத்து, அவரை விடுவிக்க வழிதேடினான். “இயேசுவை விடுவித்தால், நீர் சீசருக்கு நண்பராக இருக்க முடியாது” என்று யூத சமயத் தலைவர்கள் மிரட்டல் விடுத்தனர். அவர்கள் தந்திரம் நன்றாகவே வேலை செய்தது. இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்ல கையளித்துவிட்டு, தனது கைகளைக் கழுவினான் பிலாத்து.
இயேசுவின் தோளில் சிலுவை மரத்தை சுமத்தி, அவரை ‘கொல்கொதா’ என்ற இடத்துக்கு இழுத்துச் சென்றார்கள் படைவீரர்கள். அங்கே இரண்டு கள்வர்கள் நடுவில் அவர் சிலுவையில் அறையப்பட்டார்.
“உன்னை ‘இறைமகன்’ என்று கூறிக்கொண்டாயே, இப்பொழுது சிலுவையில் இருந்து இறங்கி வா, பார்ப்போம்” என சமயத் தலைவர்கள் கேலி செய்தார்கள். நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணி வரை எங்கும் இருள் சூழ்ந்தது. மூன்று மணிக்கு இயேசு, “தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்” என்று கூறி உயிர் நீத்தார். அது பாஸ்கா விழாவுக்கான ஆட்டுக்குட்டியைப் பலியிடும் நேரம்.
அப்போது எருசலேம் கோவிலின் திரை நடுவில் இரண்டாகக் கிழிந்து, மக்களின் பாவப்பரிகாரம் நிறைவேறிவிட்டது, கடவுளுக்கும் மனிதருக்கும் இடையேஇருந்த தடை விலகி விட்டது என்பதைத் தெளிவாக உணர்த்தியது.
“இறுதியாகத் தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டு, அவரை அவர்களிடம் அனுப்பினார். அம்மகனைக் கண்டபோது அவர்கள், ‘இவன்தான் சொத்துக்கு உரியவன்’ வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம்’ என்று அவரைப் பிடித்து, வெளியே தள்ளிக் கொன்று போட்டார்கள்” (மத்தேயு 21:37-39) என்று இயேசு உவமையாகக் கூறியது அவரில் நிறைவேறியது.
“தந்தையாம் கடவுள் யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. தமக்கு எல்லாரும் மதிப்புக் கொடுப்பதுபோல மகனுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டுமெனத் தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் முழுவதையும் அவர் மகனுக்கு அளித்துள்ளார்” (யோவான் 5:22) என்று இயேசு கூறினார். கடவுளின் வார்த்தையாகிய இயேசுவே நமது செயல்களுக்குத் தீர்ப்பளிக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளார். அவர் தம்மையே பலியாகக் கையளித்ததால், நமக்கு தண்டனை வழங்கும் கடவுளின் சட்டங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்தன. நாம் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டால், அவர் நமக்கு நிலைவாழ்வுக்கான மீட்பை வழங்குவார்.
சிலுவையில் அரங்கேறிய இயேசுவின் பலி, நமது பாவக்கடன்களைத் தள்ளுபடி செய்துவிட்டது. ஆயினும் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளாமல், அவர் வழியாகக் கிடைத்த நிலைவாழ்வை நாம் உரிமையாக்கி கொள்ள முடியாது.
“என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவும் அதிகாரம் உண்டு” (யோவான் 10:18) என்று அவர் கூறினார்.
தாம் சொன்னபடியே இறந்த மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததால், இயேசு கிறிஸ்துவை ‘இறை மகன்’ என்று நம்பி அறிக்கையிடுகிறோம்.
டே. ஆக்னல் ஜோஸ், சென்னை.
இந்த தவகாலங்களில் நாம் எடுத்த தீர்மானத்தின் படி ஒரு புது மனிதனாக, புதிய வாழ்க்கையோடு மரித்த இயேசு உயர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாட தேவன்தாமே கிருபை செய்வாராக ஆமென்.
இந்த உலகில் வாழும் எல்லா மனிதர்களுமே இன்றைக்கு எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் சூழ்நிலை நிலவுகிறது.
ஆம், தேவ பிள்ளைகளே நாம் இந்த உலகத்தில் எதை பெற்றுக்கொண்டாலும் நம்முடைய வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கி றோம். யோவான்: 14-6-ல் இயேசுவே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறார் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே எந்த ஒரு மனிதனும் இந்த மாயமான உலக காரியங்களை விட்டு கடவுளை தேடும் போது, அவனுக்கு புது வாழ்க்கையை பரலோகத்தில் இயேசுவோடு நித்திய, நித்தியமான வாழ்க்கையை பெற முடியும். எரிகோ பட்டணத்தில் சகேயு என்ற மனிதன் வரி வசூல் செய்பவனும், மிகவும் செல்வந்தனாகவும் இருந்தான்.
அப்போது இயேசு எரிகோ பட்டணத்திற்கு சென்ற போது அவரை எப்படியாவது பார்க்க நினைத்தான். அப்போது சகேயு மிகவும் குள்ளமாக இருந்தபடியால் அங்கிருந்த காட்டத்தி மரத்தின் மீது ஏறி இயேசு வருவதை தேடிக் கொண்டிருந்தான். அப்போது அவன் அருகில் வந்த இயேசுவோ, மரத்தின் மேல் இருந்த சகேயுவை பார்த்து, கீழே இறங்கி வா, இன்றைக்கு உன் வீட்டிலே தங்க வேண்டும் என்று கூறினார். ஆனால் அங்கிருந்தவர்கள் இவன் எவ்வளவு பாவம் செய்தவன், இவனுடைய வீட்டில் இயேசு தங்க வேண்டும் என்று கூறுகிறாரே என்று முனுமுனுத் தார்கள்.
அப்போது சகேயு இயேசுவிடம் என் ஆஸ்தியில் பாதியை ஏழைகளுக்கு கொடுத்து விடுகிறேன். மேலும் நான் யாரிடமாவது அறியாமல் வாங்கினது உண்டானால் அதையும் 4-ந்தவணையாக திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று தன் பாவத்தை உணர்ந்தவனாய், இயேசுவிக்கு தன் மனதிலேயும், வீட்டிலேயும் இடம் கொடுத்தான். என்ன ஒரு மனமாற்றம் பாருங்கள். உடனே இயேசுவும் சகேயுவை பார்த்து, இந்த வீட்டிற்கு ரட்சிப்பு வந்தது என்று சொல்கிறார். இதைப்பார்த்த சகேயுவுக்கு மனதிலே சந்தோஷம் தாங்க முடியவில்லை அன்றிலிருந்து தன் பழைய பாவ வாழ்க்கையை விட்டு விட்டு புது வாழ்க்கை வாழ ஆரம்பித்தான்.இந்த நாட்களில் சகேயுவை போல இயேசுவை காண நாமும் தேடுகிறோமா? அல்லது இந்த பாவ உலகில் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறோமா? என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
இயேசு இந்த உலகத்தில் பல்வேறு பாடுகளை பட்டு கல்வாரி சிலுவையிலே மரித்தார். இதை நினைவு கூறும் தினமாக இன்று புனித வெள்ளியாக அனுசரிக்கிறோம். இயேசு சிலுவையில் சொன்ன 7 வார்த்தைகளை பற்றி ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் தியானிக்க இருக்கிறோம். இப்படி இந்த நாளில் மட்டும் தியானித்து விட்டு அதை அப்படியே விட்டு விடாமல் நம்முடைய வாழ்க்கையில் அதை கடைபிடித்து இயேசுவுக்கு கீழ்படிந்த பிள்ளைகளாக நம்முடைய வாழ்க்கையை மாற்றுவோம்.
எனக்காக அவர் மரித்து விட்டார். நான் இனி தேவனுடைய பிள்ளை என்று இன்றே தீர்மானம் எடுப்போம். இயேசுவை நாம் காண வேண்டும் என்று முழு மனதோடு அவரை தேடி இன்றுமுதல் நம்முடைய புது வாழ்க்கையை தொடங்குவோம். அப்போது நம்முடைய வாழ்விலும் இயேசு வருவார். நம்முடைய வீட்டிலும் தங்குவார். எனவே தேவ பிள்ளைகளே இந்த தவகாலங்களில் நாம் எடுத்த தீர்மானத்தின் படி ஒரு புது மனிதனாக, புதிய வாழ்க்கையோடு மரித்த இயேசு உயர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாட தேவன்தாமே கிருபை செய்வாராக ஆமென்.
சகோ.ஜாஸ்பர் பிலிப், திருப்பூர்.
ஆம், தேவ பிள்ளைகளே நாம் இந்த உலகத்தில் எதை பெற்றுக்கொண்டாலும் நம்முடைய வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கி றோம். யோவான்: 14-6-ல் இயேசுவே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறார் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே எந்த ஒரு மனிதனும் இந்த மாயமான உலக காரியங்களை விட்டு கடவுளை தேடும் போது, அவனுக்கு புது வாழ்க்கையை பரலோகத்தில் இயேசுவோடு நித்திய, நித்தியமான வாழ்க்கையை பெற முடியும். எரிகோ பட்டணத்தில் சகேயு என்ற மனிதன் வரி வசூல் செய்பவனும், மிகவும் செல்வந்தனாகவும் இருந்தான்.
அப்போது இயேசு எரிகோ பட்டணத்திற்கு சென்ற போது அவரை எப்படியாவது பார்க்க நினைத்தான். அப்போது சகேயு மிகவும் குள்ளமாக இருந்தபடியால் அங்கிருந்த காட்டத்தி மரத்தின் மீது ஏறி இயேசு வருவதை தேடிக் கொண்டிருந்தான். அப்போது அவன் அருகில் வந்த இயேசுவோ, மரத்தின் மேல் இருந்த சகேயுவை பார்த்து, கீழே இறங்கி வா, இன்றைக்கு உன் வீட்டிலே தங்க வேண்டும் என்று கூறினார். ஆனால் அங்கிருந்தவர்கள் இவன் எவ்வளவு பாவம் செய்தவன், இவனுடைய வீட்டில் இயேசு தங்க வேண்டும் என்று கூறுகிறாரே என்று முனுமுனுத் தார்கள்.
அப்போது சகேயு இயேசுவிடம் என் ஆஸ்தியில் பாதியை ஏழைகளுக்கு கொடுத்து விடுகிறேன். மேலும் நான் யாரிடமாவது அறியாமல் வாங்கினது உண்டானால் அதையும் 4-ந்தவணையாக திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று தன் பாவத்தை உணர்ந்தவனாய், இயேசுவிக்கு தன் மனதிலேயும், வீட்டிலேயும் இடம் கொடுத்தான். என்ன ஒரு மனமாற்றம் பாருங்கள். உடனே இயேசுவும் சகேயுவை பார்த்து, இந்த வீட்டிற்கு ரட்சிப்பு வந்தது என்று சொல்கிறார். இதைப்பார்த்த சகேயுவுக்கு மனதிலே சந்தோஷம் தாங்க முடியவில்லை அன்றிலிருந்து தன் பழைய பாவ வாழ்க்கையை விட்டு விட்டு புது வாழ்க்கை வாழ ஆரம்பித்தான்.இந்த நாட்களில் சகேயுவை போல இயேசுவை காண நாமும் தேடுகிறோமா? அல்லது இந்த பாவ உலகில் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறோமா? என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
இயேசு இந்த உலகத்தில் பல்வேறு பாடுகளை பட்டு கல்வாரி சிலுவையிலே மரித்தார். இதை நினைவு கூறும் தினமாக இன்று புனித வெள்ளியாக அனுசரிக்கிறோம். இயேசு சிலுவையில் சொன்ன 7 வார்த்தைகளை பற்றி ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் தியானிக்க இருக்கிறோம். இப்படி இந்த நாளில் மட்டும் தியானித்து விட்டு அதை அப்படியே விட்டு விடாமல் நம்முடைய வாழ்க்கையில் அதை கடைபிடித்து இயேசுவுக்கு கீழ்படிந்த பிள்ளைகளாக நம்முடைய வாழ்க்கையை மாற்றுவோம்.
எனக்காக அவர் மரித்து விட்டார். நான் இனி தேவனுடைய பிள்ளை என்று இன்றே தீர்மானம் எடுப்போம். இயேசுவை நாம் காண வேண்டும் என்று முழு மனதோடு அவரை தேடி இன்றுமுதல் நம்முடைய புது வாழ்க்கையை தொடங்குவோம். அப்போது நம்முடைய வாழ்விலும் இயேசு வருவார். நம்முடைய வீட்டிலும் தங்குவார். எனவே தேவ பிள்ளைகளே இந்த தவகாலங்களில் நாம் எடுத்த தீர்மானத்தின் படி ஒரு புது மனிதனாக, புதிய வாழ்க்கையோடு மரித்த இயேசு உயர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாட தேவன்தாமே கிருபை செய்வாராக ஆமென்.
சகோ.ஜாஸ்பர் பிலிப், திருப்பூர்.
பெரிய வியாழனை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் பக்தர்களின் பாதம் கழுவும் நிகழ்ச்சி இன்று மாலை நடக்கிறது.
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பெருவிழா வருகிற 21-ந் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த 14-ந் தேதி குருத்தோலை திருநாள் கொண்டாடப்பட்டது. அன்று முதல் ஈஸ்டர் பெருவிழா வரை புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த புனித வாரத்தில் பெரிய வியாழன் முக்கிய நாளாக அனுசரிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முந்தைய நாள் தன்னுடைய 12 சீடர்களுடன் பாஸ்கா விருந்து (கடைசி இரவு உணவு) உண்டார். அப்போது அவர் ஒரு துண்டை எடுத்து தனது இடுப்பில் கட்டிக்கொண்டு 12 சீடர்களின் பாதங்களை தண்ணீரால் கழுவினார்.
பின்னர் அவர் “நான் செய்தது போல் நீங்களும் செய்யுமாறு உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்” என்று தனது சீடர்களிடம் கூறினார். அதன் நினைவாக இன்று கிறிஸ்தவ ஆலயங்களில் 12 பக்தர்களின் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடக்கிறது. இன்று மாலை நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் ஆயர்கள், பங்கு அருட்பணியாளர்கள் இயேசுவின் 12 சீடர்களை குறிக்கும் வகையில் 12 பேரின் பாதங்களை கழுவுகிறார்கள்.
மேலும் பாஸ்கா விருந்து அன்று இயேசு கிறிஸ்து அப்பத்தை எடுத்து இறைபுகழ் கூறி “இது என் உடல். இதை வாங்கி உண்ணுங்கள்” என்றும், திராட்சை ரசம் நிறைந்த கிண்ணத்தை எடுத்து “இது என் ரத்தம். இதை வாங்கி குடியுங்கள்” என்றும் கூறி சீடர்களிடம் கொடுத்தார்.
இதனால் இயேசு கிறிஸ்து நற்கருணையை ஏற்படுத்திய புனித நாளாக பெரிய வியாழன் கருதப்படுகிறது. எனவே இன்று பாதம் கழுவும் சடங்கு முடிந்த பின்பு ஆலயங்களில் நள்ளிரவு வரை நற்கருணை ஆராதனை நடைபெறும். பெரிய வியாழனான இன்று மாலை நடைபெறும் திருப்பலியில் ‘உன்னதங்களிலே’ என்ற பாடல் பாடப்படும் போது ஆலய மணிகள் ஒலிக்கப்படும். அதன் பிறகு ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி வரை ஆலய மணிகளோ அல்லது இசைக்கருவிகளோ ஒலிக்காது. மீண்டும் இயேசுவின் உயிர்ப்பின் போதுதான் அவை ஒலிக்கும்.
இந்த புனித வாரத்தில் பெரிய வியாழன் முக்கிய நாளாக அனுசரிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முந்தைய நாள் தன்னுடைய 12 சீடர்களுடன் பாஸ்கா விருந்து (கடைசி இரவு உணவு) உண்டார். அப்போது அவர் ஒரு துண்டை எடுத்து தனது இடுப்பில் கட்டிக்கொண்டு 12 சீடர்களின் பாதங்களை தண்ணீரால் கழுவினார்.
பின்னர் அவர் “நான் செய்தது போல் நீங்களும் செய்யுமாறு உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்” என்று தனது சீடர்களிடம் கூறினார். அதன் நினைவாக இன்று கிறிஸ்தவ ஆலயங்களில் 12 பக்தர்களின் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடக்கிறது. இன்று மாலை நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் ஆயர்கள், பங்கு அருட்பணியாளர்கள் இயேசுவின் 12 சீடர்களை குறிக்கும் வகையில் 12 பேரின் பாதங்களை கழுவுகிறார்கள்.
மேலும் பாஸ்கா விருந்து அன்று இயேசு கிறிஸ்து அப்பத்தை எடுத்து இறைபுகழ் கூறி “இது என் உடல். இதை வாங்கி உண்ணுங்கள்” என்றும், திராட்சை ரசம் நிறைந்த கிண்ணத்தை எடுத்து “இது என் ரத்தம். இதை வாங்கி குடியுங்கள்” என்றும் கூறி சீடர்களிடம் கொடுத்தார்.
இதனால் இயேசு கிறிஸ்து நற்கருணையை ஏற்படுத்திய புனித நாளாக பெரிய வியாழன் கருதப்படுகிறது. எனவே இன்று பாதம் கழுவும் சடங்கு முடிந்த பின்பு ஆலயங்களில் நள்ளிரவு வரை நற்கருணை ஆராதனை நடைபெறும். பெரிய வியாழனான இன்று மாலை நடைபெறும் திருப்பலியில் ‘உன்னதங்களிலே’ என்ற பாடல் பாடப்படும் போது ஆலய மணிகள் ஒலிக்கப்படும். அதன் பிறகு ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி வரை ஆலய மணிகளோ அல்லது இசைக்கருவிகளோ ஒலிக்காது. மீண்டும் இயேசுவின் உயிர்ப்பின் போதுதான் அவை ஒலிக்கும்.
பெரிய வியாழனை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் பக்தர்களின் பாதம் கழுவும் நிகழ்ச்சி வருகிற 18-ந்தேதி நடக்கிறது.
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பெருவிழா வருகிற 21-ந் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த 14-ந் தேதி குருத்தோலை திருநாள் கொண்டாடப்பட்டது. அன்று முதல் ஈஸ்டர் பெருவிழா வரை புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த புனித வாரத்தில் பெரிய வியாழன் முக்கிய நாளாக அனுசரிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முந்தைய நாள் தன்னுடைய 12 சீடர்களுடன் பாஸ்கா விருந்து (கடைசி இரவு உணவு) உண்டார். அப்போது அவர் ஒரு துண்டை எடுத்து தனது இடுப்பில் கட்டிக்கொண்டு 12 சீடர்களின் பாதங்களை தண்ணீரால் கழுவினார்.
பின்னர் அவர் “நான் செய்தது போல் நீங்களும் செய்யுமாறு உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்” என்று தனது சீடர்களிடம் கூறினார். அதன் நினைவாக வருகிற 18-ந் தேதி பெரிய வியாழன் அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் 12 பக்தர்களின் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் ஆயர்கள், பங்கு அருட்பணியாளர்கள் இயேசுவின் 12 சீடர்களை குறிக்கும் வகையில் 12 பேரின் பாதங்களை கழுவுகிறார்கள்.
மேலும் பாஸ்கா விருந்து அன்று இயேசு கிறிஸ்து அப்பத்தை எடுத்து இறைபுகழ் கூறி “இது என் உடல். இதை வாங்கி உண்ணுங்கள்” என்றும், திராட்சை ரசம் நிறைந்த கிண்ணத்தை எடுத்து “இது என் ரத்தம். இதை வாங்கி குடியுங்கள்” என்றும் கூறி சீடர்களிடம் கொடுத்தார்.
இதனால் இயேசு கிறிஸ்து நற்கருணையை ஏற்படுத்திய புனித நாளாக பெரிய வியாழன் கருதப்படுகிறது. எனவே அன்று பாதம் கழுவும் சடங்கு முடிந்த பின்பு ஆலயங்களில் நள்ளிரவு வரை நற்கருணை ஆராதனை நடைபெறும். பெரிய வியாழன் அன்று மாலை நடைபெறும் திருப்பலியில் ‘உன்னதங்களிலே’ என்ற பாடல் பாடப்படும் போது ஆலய மணிகள் ஒலிக்கப்படும். அதன் பிறகு ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி வரை ஆலய மணிகளோ அல்லது இசைக்கருவிகளோ ஒலிக்காது. மீண்டும் இயேசுவின் உயிர்ப்பின் போதுதான் அவை ஒலிக்கும்.
இந்த புனித வாரத்தில் பெரிய வியாழன் முக்கிய நாளாக அனுசரிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முந்தைய நாள் தன்னுடைய 12 சீடர்களுடன் பாஸ்கா விருந்து (கடைசி இரவு உணவு) உண்டார். அப்போது அவர் ஒரு துண்டை எடுத்து தனது இடுப்பில் கட்டிக்கொண்டு 12 சீடர்களின் பாதங்களை தண்ணீரால் கழுவினார்.
பின்னர் அவர் “நான் செய்தது போல் நீங்களும் செய்யுமாறு உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்” என்று தனது சீடர்களிடம் கூறினார். அதன் நினைவாக வருகிற 18-ந் தேதி பெரிய வியாழன் அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் 12 பக்தர்களின் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் ஆயர்கள், பங்கு அருட்பணியாளர்கள் இயேசுவின் 12 சீடர்களை குறிக்கும் வகையில் 12 பேரின் பாதங்களை கழுவுகிறார்கள்.
மேலும் பாஸ்கா விருந்து அன்று இயேசு கிறிஸ்து அப்பத்தை எடுத்து இறைபுகழ் கூறி “இது என் உடல். இதை வாங்கி உண்ணுங்கள்” என்றும், திராட்சை ரசம் நிறைந்த கிண்ணத்தை எடுத்து “இது என் ரத்தம். இதை வாங்கி குடியுங்கள்” என்றும் கூறி சீடர்களிடம் கொடுத்தார்.
இதனால் இயேசு கிறிஸ்து நற்கருணையை ஏற்படுத்திய புனித நாளாக பெரிய வியாழன் கருதப்படுகிறது. எனவே அன்று பாதம் கழுவும் சடங்கு முடிந்த பின்பு ஆலயங்களில் நள்ளிரவு வரை நற்கருணை ஆராதனை நடைபெறும். பெரிய வியாழன் அன்று மாலை நடைபெறும் திருப்பலியில் ‘உன்னதங்களிலே’ என்ற பாடல் பாடப்படும் போது ஆலய மணிகள் ஒலிக்கப்படும். அதன் பிறகு ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி வரை ஆலய மணிகளோ அல்லது இசைக்கருவிகளோ ஒலிக்காது. மீண்டும் இயேசுவின் உயிர்ப்பின் போதுதான் அவை ஒலிக்கும்.
வரலாற்று நூல்களை ஏன் படிக்க வேண்டும்? பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்து மறைந்த கதைகளால் இப்போது என்ன பயன் என நினைக்கலாம்.
இஸ்ரயேல் மக்கள் இஸ்ரேல் நாட்டிலிருந்தும், யூதா நாட்டிலிருந்தும் நாடு கடத்தப்படுகின்றனர். இஸ்ரேல் நாடு அசீரியர்களிடமும், யூதா பாபிலோனியர்களிடமும் சிக்கிக் கொள்கிறது.
வாக்களிக்கப்பட்ட நாட்டிலிருந்து பாபிலோனுக்கு கொண்டு செல்லப்பட்ட மக்கள் மீண்டும் யூதாவுக்குத் திரும்பும் நிகழ்ச்சியே எஸ்ரா, நெகேமியா நூல்களின் அடிப்படை சிந்தனை.
வரலாற்று நூல்களை ஏன் படிக்க வேண்டும்? பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்து மறைந்த கதைகளால் இப்போது என்ன பயன் என நினைக்கலாம்.
வரலாறுகள் கடந்த காலத்தின் சுவடுகள். அவற்றிலிருந்து வெறும் தகவல்களை அல்ல, வாழ்வியல் நெறிகளையும் கற்றுக்கொள்ள முடியும். இறைவனின் மாறாக் கருணையையும் புரிந்து கொள்ள முடியும்.
நெகேமியா நூலும் எஸ்ராவைப் போலவே எபிரேயம் மற்றும் அராமிக் மொழிகளில் எழுதப்பட்ட நூல். அன்றைய காலத்தில் அராமிக் மொழி மிகவும் பரவலாய்ப் பேசப்பட்ட மொழி. இயேசுவும் அந்த மொழியைத் தான் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்ரா நூலைப் போலவே நெகேமியா நூலையும் நான்காகப் பிரிக்கலாம். நாடு திரும்புதல், கட்டி எழுப்புதல், புதுப்பித்தல், சீர்திருத்துதல் என அதை வகைப்படுத்தலாம். நெகேமியா நூல் 13 அதிகாரங்களையும், 406 வசனங்களையும், 10483 வார்த்தைகளையும் கொண்டிருக்கிறது.
எருசலேமில் வாழ்ந்த காலத்தில் 14 ஆண்டு காலம் ஆளுநராக இருந்தவர் நெகேமியா. இப்போது பாபிலோனில் நிர்ப்பந்த வாழ்க்கை வாழும் அவர் பாபிலோனிய மன்னனுக்கு பானம் பரிமாறும் வேலை செய்து வந்தார். அதாவது மன்னர் அருந்தும் பானத்தை முதலில் அருந்திப் பார்த்து, விஷம் ஏதும் இல்லை என ஊர்ஜிதப்படுத்தும் வேலை.
அப்போது தான் அந்த செய்தி வருகிறது. எருசலேமின் மதில்கள் தகர்க்கப்படுகின்றன, வாயில்கதவுகள் தீக்கிரையாகின்றன என்று. செய்தியைக் கேட்ட நெகேமியா கலங்கிப் புலம்புகிறார். இறைவனை வேண்டுகிறார். பாபிலோனிய மன்னன் நெகேமியாவை ஊருக்கு அனுப்புகிறான், உதவிகளையும் செய்கிறான்.
நெகேமியா உடனே வேலையை ஆரம்பிக்கவில்லை. முதலில் ரகசியமாய் நாட்டுக்கு வந்து எருசலேம் மதில்களின் பாதிப்பு என்ன, எப்படி கட்டியெழுப்பலாம், என்னென்ன தேவைப்படும் என்பதையெல்லாம் ஆய்ந்து அறிகிறார். ஒரு வேலையைத் தொடங்கும் முன் கவனமாக திட்டமிடுகிறார்.
அதன்படி மக்கள் அவரவர் வீட்டுக்கு எதிரே இருக்கும் மதில் பகுதியை செப்பனிடவும், கட்டியெழுப்பவும் செய்யவேண்டுமென சொல்கிறார். கடவுளின் அருள் அவர் மீதும் அவரது திட்டத்தின் மீதும் இருந்தது. வெறும் 52 நாட்களில் மதில்சுவர் முழுமையாகக் கட்டியெழுப்பப்பட்டது. கதவுகள் பொருத்தப்பட்டன. நாடு பாதுகாப்பானது.
இரண்டு சவால்களை நெகேமியா எதிர்கொள்கிறார். ஒன்று எருசலேமுக்கு வெளியே இருந்து வருகிறது. சமாரியர்கள் வேலையைக் கெடுக்க முயல்கிறார்கள். அவர்களுடைய மன உறுதியைக் குலைக்கப் பார்க்கின்றனர். நெகேமியாவை எப்படியாவது பின்வாங்க வைக்க முயல்கின்றனர்.
இரண்டாவது சவால், உள்ளேயிருந்து எழுகிறது. நாட்டில் ஏழை பணக்காரர் பாகுபாடு அதிகரிக்கிறது. செல்வந்தர்கள் மேலும் மேலும் செல்வம் குவிக்க, ஏழைகள் ஏழைகளாகிக் கொண்டே இருக்கின்றனர் இரண்டு சவால்களையுமே நெகேமியா மிகத்திறமையாக எதிர்கொண்டார்.
பிற இனத்தினரோடு கலந்து திருமணம் செய்வதை எதிர்த்தார். மக்கள் இறைவனின் கட்டளைப்படி நடக்க வேண்டுமென வற்புறுத்தினார். பணத்தை சரியாகக் கையாளாத மக்களை கண்டித்தார். பண விஷயத்தில் மிகச்சரியாய் இருக்க வேண்டுமென விரும்பினார். ஓய்வு நாளை சரியாகக் கடைபிடிக்க வேண்டும் என மக்களை நெறிப்படுத்தினார். ஆலயத்தில் குருக்கள் தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தினார்.
நெகேமியாவின் வாழ்க்கையிலிருந்து பல பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். அவர் செபத்தை உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்த ஒரு மனிதர். எந்த செயலைச் செய்யும் முன் செபிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். அவர் ஒரு எதார்த்தமான மனிதர். வானத்தில் பறப்பவருமல்ல, பூமியில் புதைபவருமல்ல, சக மனிதனோடு இணைந்து பயணிப்பவர்.
நெகேமியா உணர்வுப்பூர்வமான மனிதர். மக்களுடைய மகிழ்ச்சியோடும் சோகத்தோடும் கலந்து வாழ்ந்தவர். அவர்கள் கடவுளில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என ஊக்கப்படுத்தியவர். அதே நேரத்தில் அவர்களைக் கண்டித்து திருத்தவும் தயங்கியதில்லை.
இந்த நூல் முழுவதும் கடவுள் வித்தியாசமான முறையில் செயலாற்றுகிறார். அற்புதங்கள் இல்லை, அதிசயங்கள் இல்லை, ஆனால் திட்டங்களெல்லாம் வெற்றிகரமாய் நிகழ்ந்தேறுகின்றன. இருந்தாலும் மக்கள் மீண்டும் பாவ வாழ்க்கையை நாடுபவர்களாக இருந்தார்கள் என்பதையும் இந்த நூல் வேதனையுடன் பதிவு செய்கிறது. எனவே நெகேமியாவின் வேலை மனிதர்களைக் கட்டியெழுப்புவதும் எனும் சிந்தனைக்குள்ளும் செல்கிறது.
எஸ்ரே, நெகேமியா காலகட்டத்துக்குப் பின் சுமார் 400 ஆண்டுகள் இறைவன் அமைதிகாத்தார். இறைவாக்கினர்கள் யாரும் தரப்படவில்லை. அதற்குப் பிறகு வந்தது தான் இறைமகன் இயேசுவின் காலம்.
பழைய ஏற்பாட்டுக்கும், புதிய ஏற்பாட்டுக்கும் இடையே பாலம் போடும் காலம் இது. வரலாற்று சுவாரசியங்களும், நெகேமியா எனும் மனிதரின் குணாதிசயங்களும், இறைவன் மறைந்திருந்து ஆற்றும் செயல்களும் இந்த நூலை அர்த்தமுள்ளதாக்குகின்றன.
சேவியர்
வாக்களிக்கப்பட்ட நாட்டிலிருந்து பாபிலோனுக்கு கொண்டு செல்லப்பட்ட மக்கள் மீண்டும் யூதாவுக்குத் திரும்பும் நிகழ்ச்சியே எஸ்ரா, நெகேமியா நூல்களின் அடிப்படை சிந்தனை.
வரலாற்று நூல்களை ஏன் படிக்க வேண்டும்? பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்து மறைந்த கதைகளால் இப்போது என்ன பயன் என நினைக்கலாம்.
வரலாறுகள் கடந்த காலத்தின் சுவடுகள். அவற்றிலிருந்து வெறும் தகவல்களை அல்ல, வாழ்வியல் நெறிகளையும் கற்றுக்கொள்ள முடியும். இறைவனின் மாறாக் கருணையையும் புரிந்து கொள்ள முடியும்.
நெகேமியா நூலும் எஸ்ராவைப் போலவே எபிரேயம் மற்றும் அராமிக் மொழிகளில் எழுதப்பட்ட நூல். அன்றைய காலத்தில் அராமிக் மொழி மிகவும் பரவலாய்ப் பேசப்பட்ட மொழி. இயேசுவும் அந்த மொழியைத் தான் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்ரா நூலைப் போலவே நெகேமியா நூலையும் நான்காகப் பிரிக்கலாம். நாடு திரும்புதல், கட்டி எழுப்புதல், புதுப்பித்தல், சீர்திருத்துதல் என அதை வகைப்படுத்தலாம். நெகேமியா நூல் 13 அதிகாரங்களையும், 406 வசனங்களையும், 10483 வார்த்தைகளையும் கொண்டிருக்கிறது.
எருசலேமில் வாழ்ந்த காலத்தில் 14 ஆண்டு காலம் ஆளுநராக இருந்தவர் நெகேமியா. இப்போது பாபிலோனில் நிர்ப்பந்த வாழ்க்கை வாழும் அவர் பாபிலோனிய மன்னனுக்கு பானம் பரிமாறும் வேலை செய்து வந்தார். அதாவது மன்னர் அருந்தும் பானத்தை முதலில் அருந்திப் பார்த்து, விஷம் ஏதும் இல்லை என ஊர்ஜிதப்படுத்தும் வேலை.
அப்போது தான் அந்த செய்தி வருகிறது. எருசலேமின் மதில்கள் தகர்க்கப்படுகின்றன, வாயில்கதவுகள் தீக்கிரையாகின்றன என்று. செய்தியைக் கேட்ட நெகேமியா கலங்கிப் புலம்புகிறார். இறைவனை வேண்டுகிறார். பாபிலோனிய மன்னன் நெகேமியாவை ஊருக்கு அனுப்புகிறான், உதவிகளையும் செய்கிறான்.
நெகேமியா உடனே வேலையை ஆரம்பிக்கவில்லை. முதலில் ரகசியமாய் நாட்டுக்கு வந்து எருசலேம் மதில்களின் பாதிப்பு என்ன, எப்படி கட்டியெழுப்பலாம், என்னென்ன தேவைப்படும் என்பதையெல்லாம் ஆய்ந்து அறிகிறார். ஒரு வேலையைத் தொடங்கும் முன் கவனமாக திட்டமிடுகிறார்.
அதன்படி மக்கள் அவரவர் வீட்டுக்கு எதிரே இருக்கும் மதில் பகுதியை செப்பனிடவும், கட்டியெழுப்பவும் செய்யவேண்டுமென சொல்கிறார். கடவுளின் அருள் அவர் மீதும் அவரது திட்டத்தின் மீதும் இருந்தது. வெறும் 52 நாட்களில் மதில்சுவர் முழுமையாகக் கட்டியெழுப்பப்பட்டது. கதவுகள் பொருத்தப்பட்டன. நாடு பாதுகாப்பானது.
இரண்டு சவால்களை நெகேமியா எதிர்கொள்கிறார். ஒன்று எருசலேமுக்கு வெளியே இருந்து வருகிறது. சமாரியர்கள் வேலையைக் கெடுக்க முயல்கிறார்கள். அவர்களுடைய மன உறுதியைக் குலைக்கப் பார்க்கின்றனர். நெகேமியாவை எப்படியாவது பின்வாங்க வைக்க முயல்கின்றனர்.
இரண்டாவது சவால், உள்ளேயிருந்து எழுகிறது. நாட்டில் ஏழை பணக்காரர் பாகுபாடு அதிகரிக்கிறது. செல்வந்தர்கள் மேலும் மேலும் செல்வம் குவிக்க, ஏழைகள் ஏழைகளாகிக் கொண்டே இருக்கின்றனர் இரண்டு சவால்களையுமே நெகேமியா மிகத்திறமையாக எதிர்கொண்டார்.
பிற இனத்தினரோடு கலந்து திருமணம் செய்வதை எதிர்த்தார். மக்கள் இறைவனின் கட்டளைப்படி நடக்க வேண்டுமென வற்புறுத்தினார். பணத்தை சரியாகக் கையாளாத மக்களை கண்டித்தார். பண விஷயத்தில் மிகச்சரியாய் இருக்க வேண்டுமென விரும்பினார். ஓய்வு நாளை சரியாகக் கடைபிடிக்க வேண்டும் என மக்களை நெறிப்படுத்தினார். ஆலயத்தில் குருக்கள் தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தினார்.
நெகேமியாவின் வாழ்க்கையிலிருந்து பல பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். அவர் செபத்தை உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்த ஒரு மனிதர். எந்த செயலைச் செய்யும் முன் செபிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். அவர் ஒரு எதார்த்தமான மனிதர். வானத்தில் பறப்பவருமல்ல, பூமியில் புதைபவருமல்ல, சக மனிதனோடு இணைந்து பயணிப்பவர்.
நெகேமியா உணர்வுப்பூர்வமான மனிதர். மக்களுடைய மகிழ்ச்சியோடும் சோகத்தோடும் கலந்து வாழ்ந்தவர். அவர்கள் கடவுளில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என ஊக்கப்படுத்தியவர். அதே நேரத்தில் அவர்களைக் கண்டித்து திருத்தவும் தயங்கியதில்லை.
இந்த நூல் முழுவதும் கடவுள் வித்தியாசமான முறையில் செயலாற்றுகிறார். அற்புதங்கள் இல்லை, அதிசயங்கள் இல்லை, ஆனால் திட்டங்களெல்லாம் வெற்றிகரமாய் நிகழ்ந்தேறுகின்றன. இருந்தாலும் மக்கள் மீண்டும் பாவ வாழ்க்கையை நாடுபவர்களாக இருந்தார்கள் என்பதையும் இந்த நூல் வேதனையுடன் பதிவு செய்கிறது. எனவே நெகேமியாவின் வேலை மனிதர்களைக் கட்டியெழுப்புவதும் எனும் சிந்தனைக்குள்ளும் செல்கிறது.
எஸ்ரே, நெகேமியா காலகட்டத்துக்குப் பின் சுமார் 400 ஆண்டுகள் இறைவன் அமைதிகாத்தார். இறைவாக்கினர்கள் யாரும் தரப்படவில்லை. அதற்குப் பிறகு வந்தது தான் இறைமகன் இயேசுவின் காலம்.
பழைய ஏற்பாட்டுக்கும், புதிய ஏற்பாட்டுக்கும் இடையே பாலம் போடும் காலம் இது. வரலாற்று சுவாரசியங்களும், நெகேமியா எனும் மனிதரின் குணாதிசயங்களும், இறைவன் மறைந்திருந்து ஆற்றும் செயல்களும் இந்த நூலை அர்த்தமுள்ளதாக்குகின்றன.
சேவியர்
கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாட்களை லெந்து நாட்களாக கிறிஸ்த வர்கள் அனுசரிக்கிறார்கள். இதில் சாம்பல் புதன், குருத்தோலை ஞாயிறு, புனித வெள்ளி, ஈஸ்டர் ஆகிய 4 நாட்கள் முக்கிய தினங்களாக அனுசரிக்கப்பட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனை நடைபெறும்.
இந்நிலையில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப் படுவதற்கு முன்னதாக எருசலேமில் அவருக்கு கொடுத்த வரவேற்பை நினைவு கூறும் வகையில் குருத்தோலை ஞாயிறு நேற்று நாடு முழுவதும் அனுசரிக் கப்பட்டது. இதையொட்டி திருப்பூர் பங்களா ஸ்டாப்பில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
தொடர்ந்து கிறிஸ்தவர்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியபடி சென்றனர். ஆலயத்தில் இருந்து தொடங்கி அவினாசி ரோடு சிக்னல் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தனர். இந்த குருத்தோலை பவனியில் சிறப்பு செய்தியாளர் ஜோஸ்வா கரம் சந்தர், ஆயர் வில்சன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதுபோல் குமரன் ரோட்டில் உள்ள புனித கேத்தரீன் ஆலயம், முத்தணம் பாளையம் நற்கருணை நாதர் ஆலயம், ஆஷர்நகர் சி.எஸ்.ஐ. தூய லூக் ஆலயம், சபாபதிபுரம் டி.இ.எல்.சி. அருள்நாதர் ஆலயம் உள்பட திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு நேற்று அனுசரிக்கப்பட்டது. கிறிஸ்தவர்களும் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியபடி சென்றனர். இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப் படுவதற்கு முன்னதாக எருசலேமில் அவருக்கு கொடுத்த வரவேற்பை நினைவு கூறும் வகையில் குருத்தோலை ஞாயிறு நேற்று நாடு முழுவதும் அனுசரிக் கப்பட்டது. இதையொட்டி திருப்பூர் பங்களா ஸ்டாப்பில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
தொடர்ந்து கிறிஸ்தவர்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியபடி சென்றனர். ஆலயத்தில் இருந்து தொடங்கி அவினாசி ரோடு சிக்னல் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தனர். இந்த குருத்தோலை பவனியில் சிறப்பு செய்தியாளர் ஜோஸ்வா கரம் சந்தர், ஆயர் வில்சன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதுபோல் குமரன் ரோட்டில் உள்ள புனித கேத்தரீன் ஆலயம், முத்தணம் பாளையம் நற்கருணை நாதர் ஆலயம், ஆஷர்நகர் சி.எஸ்.ஐ. தூய லூக் ஆலயம், சபாபதிபுரம் டி.இ.எல்.சி. அருள்நாதர் ஆலயம் உள்பட திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு நேற்று அனுசரிக்கப்பட்டது. கிறிஸ்தவர்களும் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியபடி சென்றனர். இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
தவக்கால நாட்களில் பாவங்களை அறிக்கையிட்டு இயேசுவிடம் நம்மை ஒப்படைப்போம் அவர் நமக்கு ரட்சிப்பின் வாழ்வை தர வல்லவராய் இருக்கிறார். ஆமென்.
இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பு இயேசு சிலுவையில் மரித்த சம்பவத்தைதான் ‘புனித வெள்ளி’ என்று கூறுகின்ற னர். இந்த சம்பவத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் உலகமெங்கும் அனுசரித்து வருகின்றனர். இயேசு சிலுவையில் அறையப்பட்டு தொங்கிய போது ஏழு வார்த்தைகளை அவர் கூறுகிறார். அந்த வார்த்தைகள் குறித்து தியானிக்கலாம். பொதுவாக நம்முடைய குழந்தைகள் தவறு செய்தால், ஏதோ தெரியாமல் குழந்தை செய்து விட்டது மன்னித்து விடு என்று கூறுவோம். அதே போல தான் சிலுவையில் அறைந்தவர்களை இயேசுவும் மன்னித்தார். ஆனாலும் சிறு குழந்தை செய்தால் தெரியாமல் செய்து விட்டது என்று கூறலாம். ஆனால் ரோம நாட்டின் அதிகாரிகளும், யூத மக்களும் தானே இயேசுவை கொலை செய்ய சிலுவையில் அறைந்தார்கள். இவர்களை என்ன விவரம் தெரியாதா? என்று நம் ஒவ்வொருவருடைய மனதிலும் கேள்வி எழும்பலாம்.
உண்மை என்னவென்றால், இருளின் சக்திகள் இந்த மனிதர்களுடைய கண்களை குருடாக்கி, தங்களுடைய இருதயத்தை கடினப்படுத்தி, சுயபுத்தியின் படி செய்யவில்லை. இந்த சம்பவம் கடவுளுடைய சித்தத்தின்படி நடந்தது என்று வேதம் கூறுகிறது. எனவே தான் இயேசு சிலுவையில் தொங்கியபடி முதலாம் வார்த்தையாக, ‘பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே’ (லூக்கா:23-34). என்று கூறுகிறார்.
இயேசு சிலுவையில் தொங்கிய போது அவருக்கு வலதுபுறம் ஒரு திருடனையும், இடதுபுறம் ஒரு திருடனையும் அறைந்திருந் தனர். அப்போது ஒரு திருடன் வாழ்நாள் முழுவதும் குற்றம் செய்தவன். ஆனால் அவன் கடைசி நேரத்திலும் கூட இயேசுவை பார்த்து நீர் கிறிஸ்துவானால் இந்த மரணத்திலிருந்து உன்னையும், எங்களையும் இரட்சிக்க முடியுமோ? என்று கூறி இயேசுவை இகழ்ந்து பேசுகிறான். இப்படித்தான் நாமும் இந்த உலகத்தில் கடைசி நேரத்திலும் கூட கடவுளை பார்த்து கேள்வி கேட்கிறவர்களாகவும், நம்பிக்கை இல்லாதவர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் மற்றொரு திருடனோ இயேசு நல்லவர், இவருக்கு ஏன் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது , இயேசு குற்றவாளியாக மரிக்கவில்லை. இந்த மனுக்குலத்தின் பாவத்தை போக்கவே மரிக்கிறார் என்பதை புரிந்து கொண்டு, இயேசுவை இகழ்ந்து பேசிய திருடனை பார்த்து நீ வாழ்நாள் முழுவதும் குற்றம் செய்து விட்டு இந்த கடைசி நேரத்திலும் கூட தேவனுக்கு பயப்படுகிறது இல்லையா? என்று கேட்கிறான். மேலும் இயேசுவை பார்த்து ஆண்டவரே நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்று கூறுகிறான். இவன் இப்படி கடைசி நேரத்தில் தன் பாவங்களை உணர்ந்து இயேசுவிடம் மன்னிப்பை பெற்றுக்கொண்டான்.
எனவே தான் இயேசு சிலுவையிலே இரண்டாம் வார்த்தையாக ‘இன்றைக்கு நீ என்னுடனே கூட பர லோகத்தில் இருப்பாய்’ (லுக்கா: 23-43) என்று கூறுகிறார். ஆம் தேவ பிள்ளைகளே நாம் இந்த உலகத்தில் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மனந்திரும்பாமல் இயேசுவை இகழ்ந்து பேசும் திருடனைப்போலவா? அல்லது கடைசி நேரத்தில் தன் பாவங்களை ஒப்புக்கொண்டு மனந்திரும்பி பாவமன்னிப்பு பெற்றவனை போலவா? என்று சிந்தித்து பார்க்க கடமைப்பட்ட வர்களாய் இருக்கிறோம். எனவே இந்த நாட்களில் பாவங்களை அறிக்கையிட்டு இயேசுவிடம் நம்மை ஒப்படைப்போம் அவர் நமக்கு ரட்சிப்பின் வாழ்வை தர வல்லவராய் இருக்கிறார். ஆமென்.
சகோதரி: சா.சுமங்கலா பீட்டர், காங்கேயம்
உண்மை என்னவென்றால், இருளின் சக்திகள் இந்த மனிதர்களுடைய கண்களை குருடாக்கி, தங்களுடைய இருதயத்தை கடினப்படுத்தி, சுயபுத்தியின் படி செய்யவில்லை. இந்த சம்பவம் கடவுளுடைய சித்தத்தின்படி நடந்தது என்று வேதம் கூறுகிறது. எனவே தான் இயேசு சிலுவையில் தொங்கியபடி முதலாம் வார்த்தையாக, ‘பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே’ (லூக்கா:23-34). என்று கூறுகிறார்.
இயேசு சிலுவையில் தொங்கிய போது அவருக்கு வலதுபுறம் ஒரு திருடனையும், இடதுபுறம் ஒரு திருடனையும் அறைந்திருந் தனர். அப்போது ஒரு திருடன் வாழ்நாள் முழுவதும் குற்றம் செய்தவன். ஆனால் அவன் கடைசி நேரத்திலும் கூட இயேசுவை பார்த்து நீர் கிறிஸ்துவானால் இந்த மரணத்திலிருந்து உன்னையும், எங்களையும் இரட்சிக்க முடியுமோ? என்று கூறி இயேசுவை இகழ்ந்து பேசுகிறான். இப்படித்தான் நாமும் இந்த உலகத்தில் கடைசி நேரத்திலும் கூட கடவுளை பார்த்து கேள்வி கேட்கிறவர்களாகவும், நம்பிக்கை இல்லாதவர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் மற்றொரு திருடனோ இயேசு நல்லவர், இவருக்கு ஏன் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது , இயேசு குற்றவாளியாக மரிக்கவில்லை. இந்த மனுக்குலத்தின் பாவத்தை போக்கவே மரிக்கிறார் என்பதை புரிந்து கொண்டு, இயேசுவை இகழ்ந்து பேசிய திருடனை பார்த்து நீ வாழ்நாள் முழுவதும் குற்றம் செய்து விட்டு இந்த கடைசி நேரத்திலும் கூட தேவனுக்கு பயப்படுகிறது இல்லையா? என்று கேட்கிறான். மேலும் இயேசுவை பார்த்து ஆண்டவரே நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்று கூறுகிறான். இவன் இப்படி கடைசி நேரத்தில் தன் பாவங்களை உணர்ந்து இயேசுவிடம் மன்னிப்பை பெற்றுக்கொண்டான்.
எனவே தான் இயேசு சிலுவையிலே இரண்டாம் வார்த்தையாக ‘இன்றைக்கு நீ என்னுடனே கூட பர லோகத்தில் இருப்பாய்’ (லுக்கா: 23-43) என்று கூறுகிறார். ஆம் தேவ பிள்ளைகளே நாம் இந்த உலகத்தில் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மனந்திரும்பாமல் இயேசுவை இகழ்ந்து பேசும் திருடனைப்போலவா? அல்லது கடைசி நேரத்தில் தன் பாவங்களை ஒப்புக்கொண்டு மனந்திரும்பி பாவமன்னிப்பு பெற்றவனை போலவா? என்று சிந்தித்து பார்க்க கடமைப்பட்ட வர்களாய் இருக்கிறோம். எனவே இந்த நாட்களில் பாவங்களை அறிக்கையிட்டு இயேசுவிடம் நம்மை ஒப்படைப்போம் அவர் நமக்கு ரட்சிப்பின் வாழ்வை தர வல்லவராய் இருக்கிறார். ஆமென்.
சகோதரி: சா.சுமங்கலா பீட்டர், காங்கேயம்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே இன்னும் சில நாட்களில் கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை கொண்டாட உள்ள நிலையில் அதற்கு முன்னதாக நாமும் இயேசுவுக்காக பஸ்கா விழாவினை கொண்டாட ஆயத்தமாவோம் ஆமென்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு யூதர்கள் எகிப்து தேசத்தில் அடிமைகளாக வாழ்ந்து, கடவுளின் கருணையால் அதில் இருந்து மீண்டு வந்ததை பாரம்பரியமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர். இதைத்தான் பாஸ்கா விழா என்று சொல்லப்படுகிறது.
இந்த பாஸ்கா விழாவை கொண்டாடுவதற்காக தனது சீடர்களுடன் எருசலேம் நகருக்கு செல்ல இயேசு திட்டமிடுகிறார். இதை கேள்விப்பட்ட மக்கள், மாபெரும் போதகராக, மெசியாவாக, அற்புதங்கள் நிகழ்த்தும் கடவுளின் மகனாக வருகிறார் என்றும், இனி அவர்தான் தங்களுக்கு உண்மையான ராஜாவாகப் போகிறவர் என்றும் முடிவு செய்தனர்.
இந்த பாஸ்கா விழாவுக்கு ஒருவார காலத்திற்கு முன்னர்தான், இறந்து அடக்கம் செய்யப்பட்டு 3 நாட்கள் கடந்து விட்ட தனது நண்பர் லாசர் என்பவரை இயேசு உயிருடன் மீண்டு வர செய்தார். இதற்கு சாட்சியாக லாசர் தங்கள் கண் முன்னாள் நிற்பதையும் கண்டு யூத தலைமை சங்கத்தினர் கோபமடைந் திருந்தனர்.
இந்த வேளையில் தான் யூதமத அதிகார வர்க்கமாக இருந்த பரிசேயர்களும், சதுசேயர்களும், இவர்களால் நிரம்பி வழிந்த யூத தலைமை சங்கமும் கொதித்து எழுந்தது. எப்படியாவது இயேசுவை யூதர்களுக்கு எதிரானவராக சித்தரித்து அவரை கொலை செய்துவிட வேண்டும் என்று திட்டம் தீட்டினார்கள்.
இயேசு தம் சீடரோடு எருசலேமை நெருங்கி சென்று கொண்டிருக்கையில் ஒலிவமலை அருகில் இருந்த பெத்பகு என்னும் ஊருக்கு வந்த போது இரு சீடர்களை அழைத்து, ‘நீங்கள் உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் செல்லுங்கள். சென்ற உடனே அங்கே கட்டி வைக்கப்பட்டிருக்கிற ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம் எதேனும் சொன்னால், இவை ஆண்டவருக்கு தேவை எனச் சொல்லுங்கள். உடனே அவர் அவற்றை அனுப்பி விடுவார்’ என்றார். சீடர்கள் போய் தங்களுக்கு இயேசு சொன்னபடியே செய்தார்கள். பின்னர் கழுதையின் மேல் தங்களின் மேலாடைகளை போட்டு இயேசுவை அதில் அமரச் செய்தார்கள்.
பின்னர் இயேசு எருசலேம் நகருக்குள் நுழைந்த போது பெருந்திரளான மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து தங்களிடம் உள்ள ஆடைகளை வழிநெடுகிலும் விரித்து அவருக்கு வரவேற்பு கொடுத்தனர். இப்படியாக இயேசுவுக்கு மக்கள் கொடுத்த வரவேற்பு வரலாறாக மாறியது என்று மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய 4 முக்கிய நற்செய்தியாளர்களும் வேதாகமத்தில் இயேசுவை பற்றி விரிவாக எழுதியுள்ளனர்.
எனவே கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே இன்னும் சில நாட்களில் கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை கொண்டாட உள்ள நிலையில் அதற்கு முன்னதாக நாமும் இயேசுவுக்காக பஸ்கா விழாவினை கொண்டாட ஆயத்தமாவோம் ஆமென்.
பாஸ்டர்.ரபிபிரபு, காங்கேயம்,
இந்த பாஸ்கா விழாவை கொண்டாடுவதற்காக தனது சீடர்களுடன் எருசலேம் நகருக்கு செல்ல இயேசு திட்டமிடுகிறார். இதை கேள்விப்பட்ட மக்கள், மாபெரும் போதகராக, மெசியாவாக, அற்புதங்கள் நிகழ்த்தும் கடவுளின் மகனாக வருகிறார் என்றும், இனி அவர்தான் தங்களுக்கு உண்மையான ராஜாவாகப் போகிறவர் என்றும் முடிவு செய்தனர்.
இந்த பாஸ்கா விழாவுக்கு ஒருவார காலத்திற்கு முன்னர்தான், இறந்து அடக்கம் செய்யப்பட்டு 3 நாட்கள் கடந்து விட்ட தனது நண்பர் லாசர் என்பவரை இயேசு உயிருடன் மீண்டு வர செய்தார். இதற்கு சாட்சியாக லாசர் தங்கள் கண் முன்னாள் நிற்பதையும் கண்டு யூத தலைமை சங்கத்தினர் கோபமடைந் திருந்தனர்.
இந்த வேளையில் தான் யூதமத அதிகார வர்க்கமாக இருந்த பரிசேயர்களும், சதுசேயர்களும், இவர்களால் நிரம்பி வழிந்த யூத தலைமை சங்கமும் கொதித்து எழுந்தது. எப்படியாவது இயேசுவை யூதர்களுக்கு எதிரானவராக சித்தரித்து அவரை கொலை செய்துவிட வேண்டும் என்று திட்டம் தீட்டினார்கள்.
இயேசு தம் சீடரோடு எருசலேமை நெருங்கி சென்று கொண்டிருக்கையில் ஒலிவமலை அருகில் இருந்த பெத்பகு என்னும் ஊருக்கு வந்த போது இரு சீடர்களை அழைத்து, ‘நீங்கள் உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் செல்லுங்கள். சென்ற உடனே அங்கே கட்டி வைக்கப்பட்டிருக்கிற ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம் எதேனும் சொன்னால், இவை ஆண்டவருக்கு தேவை எனச் சொல்லுங்கள். உடனே அவர் அவற்றை அனுப்பி விடுவார்’ என்றார். சீடர்கள் போய் தங்களுக்கு இயேசு சொன்னபடியே செய்தார்கள். பின்னர் கழுதையின் மேல் தங்களின் மேலாடைகளை போட்டு இயேசுவை அதில் அமரச் செய்தார்கள்.
பின்னர் இயேசு எருசலேம் நகருக்குள் நுழைந்த போது பெருந்திரளான மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து தங்களிடம் உள்ள ஆடைகளை வழிநெடுகிலும் விரித்து அவருக்கு வரவேற்பு கொடுத்தனர். இப்படியாக இயேசுவுக்கு மக்கள் கொடுத்த வரவேற்பு வரலாறாக மாறியது என்று மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய 4 முக்கிய நற்செய்தியாளர்களும் வேதாகமத்தில் இயேசுவை பற்றி விரிவாக எழுதியுள்ளனர்.
எனவே கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே இன்னும் சில நாட்களில் கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை கொண்டாட உள்ள நிலையில் அதற்கு முன்னதாக நாமும் இயேசுவுக்காக பஸ்கா விழாவினை கொண்டாட ஆயத்தமாவோம் ஆமென்.
பாஸ்டர்.ரபிபிரபு, காங்கேயம்,
தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் இருந்து பூண்டி மாதா பேராலயத்துக்கு சிலுவையுடன் கிறிஸ்தவர்கள் தவக்கால நடைபயணத்தை தொடங்கினர். நடை பயணத்தை பிஷப் அந்தோணிசாமி தொடங்கி வைத்தார்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டியில் பிரசித்தி பெற்ற பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்துக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதில் இருந்து பூண்டிமாதா பேராலயத்தில் தவக்கால சிறப்பு திருப்பலிகள் தினமும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தவக்காலத்தில் முதல் வெள்ளியன்று ஏசுநாதரின் பாடுகளை விளக்கும் சிலுவைப்பாதை நடைபெற்றது. நேற்று மாலை பூண்டி மாதாபேராலயத்தில் ஏசுநாதர் சுமந்த சிலுவையி்ன் ஒரு பகுதி உள்ள சிலுவை மைக்கேல்பட்டி புனித மைக்கேல் ஆலய வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து மைக்கேல்பட்டியில் இருந்து சிலுவையுடன் தவக்கால நடைபயணம் தொடங்கியது. கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி சிலுவையை புனிதம்செய்து நடைபயணத்தை தொடங்கி வைத்தார். மறைவட்ட முதன்மை குரு அந்தோணிஜோசப், பூண்டி மாதா பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மைக்கேல்பட்டியில் தொடங்கிய தவக்கால நடைபயணம் ஒன்பத்துவேலி, திருக்காட்டுப்பள்ளி, புதுச்சத்திரம் வழியாக பூண்டி மாதா பேராலயத்தை அடைந்தது. நடைபயணத்தின் போது எடுத்து வரப்பட்ட சிலுவையுடன் சிறப்புதிருப்பலி பேராலயத்தில் குடந்தை பிஷப் அந்தோணிசாமி தலைமையில் நிறைவேற்றப்பட்டது. நடைபயணம் மற்றும் திருப்பலியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்..
கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதில் இருந்து பூண்டிமாதா பேராலயத்தில் தவக்கால சிறப்பு திருப்பலிகள் தினமும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தவக்காலத்தில் முதல் வெள்ளியன்று ஏசுநாதரின் பாடுகளை விளக்கும் சிலுவைப்பாதை நடைபெற்றது. நேற்று மாலை பூண்டி மாதாபேராலயத்தில் ஏசுநாதர் சுமந்த சிலுவையி்ன் ஒரு பகுதி உள்ள சிலுவை மைக்கேல்பட்டி புனித மைக்கேல் ஆலய வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து மைக்கேல்பட்டியில் இருந்து சிலுவையுடன் தவக்கால நடைபயணம் தொடங்கியது. கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி சிலுவையை புனிதம்செய்து நடைபயணத்தை தொடங்கி வைத்தார். மறைவட்ட முதன்மை குரு அந்தோணிஜோசப், பூண்டி மாதா பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மைக்கேல்பட்டியில் தொடங்கிய தவக்கால நடைபயணம் ஒன்பத்துவேலி, திருக்காட்டுப்பள்ளி, புதுச்சத்திரம் வழியாக பூண்டி மாதா பேராலயத்தை அடைந்தது. நடைபயணத்தின் போது எடுத்து வரப்பட்ட சிலுவையுடன் சிறப்புதிருப்பலி பேராலயத்தில் குடந்தை பிஷப் அந்தோணிசாமி தலைமையில் நிறைவேற்றப்பட்டது. நடைபயணம் மற்றும் திருப்பலியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்..
ஒரு காலத்தில் ஆண்டவரையே நம்பி விசுவாச வாழ்க்கை நடத்தி விட்டு தற்பொழுது பணத்திற்கும், புகழுக்கும், உலகத்திற்கும் அடிமையாய் இருந்தால் அதுவும் ஒரு தீமை என எபேசியர் 5:5 ல் பவுல் கூறுகிறார்.
தேவனுடைய கிருபையினாலே ஒவ்வொரு நாளும் ஆசீர்வாதமாய் கர்த்தர் உங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். இம்மட்டும் உங்களை ஆசீர்வதித்த தேவன் தொடர்ந்து வழிநடத்த வல்லவராக இருக்கிறார்.
தீமைக்கு தீமை செய்யாதிருங்கள் என்ற வார்த்தையை தேவன் எனக்கு உணர்த்தி இந்த தலைப்பில் உங்களுக்காக எழுத கிருபை பாராட்டினார். ஜெபத்தோடே வாசித்து ஆவிக்குரிய நல்ல சுபாவங்களிலே முன்னேறுங்கள். தேவனுடைய ஆசீர்வாதங்கள் உங்களை சூழ்ந்து கொள்ளும்.
இவ்வுலகம் பொல்லாங்கன் (சாத்தான்) கையில் இருக்கிறபடியால் எப்பக்கம் திரும்பினாலும் சத்துருவினுடைய அடிமைத்தனத்தில் சிக்கி பலவிதமான தீமையான எண்ணங்களால் நிரம்பியிருக்கிற மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கொலைக்கு கொலை, பழிவாங்குதல், கசப்பு வைராக்கியம், தவறான எண்ணங்கள் இவைகள் அனைத்தும் தீமையில் மறைந்திருக்கிற பிசாசின் ஆயுதங்கள்.
தேவபிள்ளையே, பிறர் உங்களுக்கு தீமை செய்தால் நாமும் அவர்களைப் போலவே தீமைக்கு தீமை செய்தால் தேவனுடைய அன்பு நமக்குள் இல்லை.
‘பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மை செய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான், தீமை செய்கிறவன் தேவனைக் காணவில்லை’. III யோவான் 11
ஆகவே இக்கடைசி நாட்களில் நாம் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்து நம் ஆண்டவரின் ஆசீர்வாதங்களை அனுபவிக்க உங்களை அர்ப்பணியுங்கள்.
தீமை செய்தோரை ஆசீர்வதியுங்கள்
‘நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள், தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்’. ஆதி.50:20
தேவனுடைய சுபாவம் பிறரை மன்னிப்பது மாத்திரமல்ல, மற்றவர்கள் செய்த தீமையை மீண்டும் அவர்களுக்கு விரோதமாய் செய்யாமலிருப்பது. சத்துருவின் போராட்டம் நிறைந்த உலகில் அவனுடைய கையிலிருக்கிற சகல ஆசீர்வாதங்களையும் நாம் சுதந்தரித்து அவற்றை அனுபவிப்பது தான் தேவ சித்தம். ஆனால், இது எப்போது நம் வாழ்வில் நிறைவேறுகிறது என்பது தான் முக்கியம்.
பழைய ஏற்பாட்டில் யோசேப்பு, உடன்பிறந்த சகோதரர்களால் பலவிதமான பாடுகளையும் வேதனைகளையும் அனுபவித்தான். தம் சகோதரர்கள் தன்னை பகைத்தாலும் யோசேப்பு அவர்களை பகைக்கவில்லை, அன்பு கூர்ந்தான் என்பதற்கு மேலே நான் குறிப்பிட்டிருக்கிற வசனம் ஆதாரமாயிருக்கிறது. இதே சுபாவம் நமக்குள்ளும் வரும்போது நாமும் யோசேப்பைப் போல ‘எனக்கு தீமை செய்ய நினைத்தார்கள், கர்த்தரோ அதை நன்மையாக முடியப்பண்ணினார்’ என்று கூறுவோம்.
உங்கள் குடும்பத்தில் உறவினர்களால், உடன் வேலையாட்களால், நண்பர்களால் அல்லது உடன் ஊழியர்களால் தீமைகளை நீங்கள் அனுபவித்தால் அவர்களைக் குறித்த கசப்பை உங்கள் இருதயத்திலிருந்து அகற்றுங்கள்.
‘தீமைக்குத் தீமையையும், உதாசீனத்துக்கு உதாசீனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்’. 1 பேதுரு 3:9
மேற்கண்ட வசனம் நம்மை ஆசீர்வாதத்தை சுதந்தரிப்பதற்கு நேராய் வழிநடத்துகிறது. எத்தனை ஆழமான ஆன்மிக அனுபவத்தை பேதுரு நமக்கு உணர்த்துகிறார்.
பிரியமானவர்களே, இப்படிப்பட்ட உன்னதமான சுபாவம் நமக்குள் வர மாம்சத்தின் கிரியைகளை, எண்ணங்களை அழிக்க நம்மை அர்ப்பணிக்க வேண்டும். பிறரை (நமக்குத் தீமை செய்தோரை) ஆசீர்வதித்து ஜெபிக்க ஆரம்பியுங்கள். மனதார வாழ்த்துங்கள், நீங்கள் வாழ்த்தப்படுவீர்கள். பிறரை போற்றுங்கள், நீங்களும் போற்றப்படுவீர்கள்.
தீமையை விலக்குங்கள்
‘இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்’. உபா. 17:7
அன்பானவர்களே, பொதுவாக ஒன்றை விலக்கினால்தான் வேறொன்றைப் பெற முடியும். இருளை வைத்துக் கொண்டிருந்தால் ஒளியைப் பெற முடியாது. அவிசுவாசத்தை உள்ளடக்கி வைத்துக் கொண்டிருக்கும்போது விசுவாசத்தை பெற முடியாது. அவநம்பிக்கையை அழித்தால் அற்புதங்களை அடையலாம்.
தீமை செய்தோரை ஆசீர்வதிப்பது ஓர் உன்னத அனுபவம். அதேபோல் நமக்குள் இருக்கும் தீமையை விலக்குவது ஓர் ஒப்பற்ற அனுபவம். இதைத் தான் உபா.17:7 ம் அதிகாரத்தில் நாம் காண்கிறோம்.
ஒரு காலத்தில் ஆண்டவரையே நம்பி விசுவாச வாழ்க்கை நடத்தி விட்டு தற்பொழுது பணத்திற்கும், புகழுக்கும், உலகத்திற்கும் அடிமையாய் இருந்தால் அதுவும் ஒரு தீமை என எபேசியர் 5:5 ல் பவுல் கூறுகிறார்.
எனக்கன்பான தேவனுடைய பிள்ளையே, நாம் விலக்க வேண்டிய காரியங்களை நாம் தான் விலக்க வேண்டும்.
‘இப்படிப்பட்ட தீமையை உங்களிடத்திலிருந்து விலக்குவீர்களாக’. உபா.13:5
மேற்கண்ட தேவனுடைய வார்த்தைகளை வாசித்த சகோதரனே! சகோதரியே! நீங்கள் அவரை அறிய வேண்டிய பிரகாரம் அறிந்த பிறகும் ஆண்டவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல், மேலே நாம் குறிப்பிட்ட தீமைகளில் ஏதாவது ஒன்றில் நீங்கள் சிக்கிக் கொண்டிருந்தால் உங்கள் நடுவிலிருந்து அவைகளை விலக்குங்கள். உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதங்கள் உங்கள் மேல் அளவில்லாமல் ஊற்றப்படும். அல்லேலூயா!
சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.
தீமைக்கு தீமை செய்யாதிருங்கள் என்ற வார்த்தையை தேவன் எனக்கு உணர்த்தி இந்த தலைப்பில் உங்களுக்காக எழுத கிருபை பாராட்டினார். ஜெபத்தோடே வாசித்து ஆவிக்குரிய நல்ல சுபாவங்களிலே முன்னேறுங்கள். தேவனுடைய ஆசீர்வாதங்கள் உங்களை சூழ்ந்து கொள்ளும்.
இவ்வுலகம் பொல்லாங்கன் (சாத்தான்) கையில் இருக்கிறபடியால் எப்பக்கம் திரும்பினாலும் சத்துருவினுடைய அடிமைத்தனத்தில் சிக்கி பலவிதமான தீமையான எண்ணங்களால் நிரம்பியிருக்கிற மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கொலைக்கு கொலை, பழிவாங்குதல், கசப்பு வைராக்கியம், தவறான எண்ணங்கள் இவைகள் அனைத்தும் தீமையில் மறைந்திருக்கிற பிசாசின் ஆயுதங்கள்.
தேவபிள்ளையே, பிறர் உங்களுக்கு தீமை செய்தால் நாமும் அவர்களைப் போலவே தீமைக்கு தீமை செய்தால் தேவனுடைய அன்பு நமக்குள் இல்லை.
‘பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மை செய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான், தீமை செய்கிறவன் தேவனைக் காணவில்லை’. III யோவான் 11
ஆகவே இக்கடைசி நாட்களில் நாம் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்து நம் ஆண்டவரின் ஆசீர்வாதங்களை அனுபவிக்க உங்களை அர்ப்பணியுங்கள்.
தீமை செய்தோரை ஆசீர்வதியுங்கள்
‘நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள், தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்’. ஆதி.50:20
தேவனுடைய சுபாவம் பிறரை மன்னிப்பது மாத்திரமல்ல, மற்றவர்கள் செய்த தீமையை மீண்டும் அவர்களுக்கு விரோதமாய் செய்யாமலிருப்பது. சத்துருவின் போராட்டம் நிறைந்த உலகில் அவனுடைய கையிலிருக்கிற சகல ஆசீர்வாதங்களையும் நாம் சுதந்தரித்து அவற்றை அனுபவிப்பது தான் தேவ சித்தம். ஆனால், இது எப்போது நம் வாழ்வில் நிறைவேறுகிறது என்பது தான் முக்கியம்.
பழைய ஏற்பாட்டில் யோசேப்பு, உடன்பிறந்த சகோதரர்களால் பலவிதமான பாடுகளையும் வேதனைகளையும் அனுபவித்தான். தம் சகோதரர்கள் தன்னை பகைத்தாலும் யோசேப்பு அவர்களை பகைக்கவில்லை, அன்பு கூர்ந்தான் என்பதற்கு மேலே நான் குறிப்பிட்டிருக்கிற வசனம் ஆதாரமாயிருக்கிறது. இதே சுபாவம் நமக்குள்ளும் வரும்போது நாமும் யோசேப்பைப் போல ‘எனக்கு தீமை செய்ய நினைத்தார்கள், கர்த்தரோ அதை நன்மையாக முடியப்பண்ணினார்’ என்று கூறுவோம்.
உங்கள் குடும்பத்தில் உறவினர்களால், உடன் வேலையாட்களால், நண்பர்களால் அல்லது உடன் ஊழியர்களால் தீமைகளை நீங்கள் அனுபவித்தால் அவர்களைக் குறித்த கசப்பை உங்கள் இருதயத்திலிருந்து அகற்றுங்கள்.
‘தீமைக்குத் தீமையையும், உதாசீனத்துக்கு உதாசீனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்’. 1 பேதுரு 3:9
மேற்கண்ட வசனம் நம்மை ஆசீர்வாதத்தை சுதந்தரிப்பதற்கு நேராய் வழிநடத்துகிறது. எத்தனை ஆழமான ஆன்மிக அனுபவத்தை பேதுரு நமக்கு உணர்த்துகிறார்.
பிரியமானவர்களே, இப்படிப்பட்ட உன்னதமான சுபாவம் நமக்குள் வர மாம்சத்தின் கிரியைகளை, எண்ணங்களை அழிக்க நம்மை அர்ப்பணிக்க வேண்டும். பிறரை (நமக்குத் தீமை செய்தோரை) ஆசீர்வதித்து ஜெபிக்க ஆரம்பியுங்கள். மனதார வாழ்த்துங்கள், நீங்கள் வாழ்த்தப்படுவீர்கள். பிறரை போற்றுங்கள், நீங்களும் போற்றப்படுவீர்கள்.
தீமையை விலக்குங்கள்
‘இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்’. உபா. 17:7
அன்பானவர்களே, பொதுவாக ஒன்றை விலக்கினால்தான் வேறொன்றைப் பெற முடியும். இருளை வைத்துக் கொண்டிருந்தால் ஒளியைப் பெற முடியாது. அவிசுவாசத்தை உள்ளடக்கி வைத்துக் கொண்டிருக்கும்போது விசுவாசத்தை பெற முடியாது. அவநம்பிக்கையை அழித்தால் அற்புதங்களை அடையலாம்.
தீமை செய்தோரை ஆசீர்வதிப்பது ஓர் உன்னத அனுபவம். அதேபோல் நமக்குள் இருக்கும் தீமையை விலக்குவது ஓர் ஒப்பற்ற அனுபவம். இதைத் தான் உபா.17:7 ம் அதிகாரத்தில் நாம் காண்கிறோம்.
ஒரு காலத்தில் ஆண்டவரையே நம்பி விசுவாச வாழ்க்கை நடத்தி விட்டு தற்பொழுது பணத்திற்கும், புகழுக்கும், உலகத்திற்கும் அடிமையாய் இருந்தால் அதுவும் ஒரு தீமை என எபேசியர் 5:5 ல் பவுல் கூறுகிறார்.
எனக்கன்பான தேவனுடைய பிள்ளையே, நாம் விலக்க வேண்டிய காரியங்களை நாம் தான் விலக்க வேண்டும்.
‘இப்படிப்பட்ட தீமையை உங்களிடத்திலிருந்து விலக்குவீர்களாக’. உபா.13:5
மேற்கண்ட தேவனுடைய வார்த்தைகளை வாசித்த சகோதரனே! சகோதரியே! நீங்கள் அவரை அறிய வேண்டிய பிரகாரம் அறிந்த பிறகும் ஆண்டவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல், மேலே நாம் குறிப்பிட்ட தீமைகளில் ஏதாவது ஒன்றில் நீங்கள் சிக்கிக் கொண்டிருந்தால் உங்கள் நடுவிலிருந்து அவைகளை விலக்குங்கள். உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதங்கள் உங்கள் மேல் அளவில்லாமல் ஊற்றப்படும். அல்லேலூயா!
சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.
நம் ஒவ்வொருவரையும் கருவிலே அறிந்திருக்கிற தேவனிடத்தில், தேவனே நீர் என்னில் தங்கும் ஆலயமாக என் சரீரத்தையும், உள்ளத்தையும் மாற்றும் என்று ஜெபிப்போம்.
நம்மை படைத்த தேவன் நம் உள்ளத்தை ஆராய்ந்திருக் கிறார். கடந்த காலத்தை குறித்து நமக்கு ஓரளவு தெரிந்திருக்கலாம். நிகழ்காலத்தை குறித்து அறிந்திருக்கலாம். ஆனால் ஏன் நடந்தது, என்ன நடந்து கொண்டிருக்கிறது? எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் நம்முடைய தேவன் நமது முக்காலத்தையும் அறிந்தவராய் இருக்கிறார் என்று வேதம் சொல்கிறது.
நாம் நோய்வாய்பட்டால் பல்வேறு மருத்துவ மனைக்கு சென்று மருத்துவர்களை பார்த்து வியாதியில் இருந்து விடுதலை பெற்றுக்கொள்கிறோம். இப்படி வாழ்க்கையில் கஷ்டங்கள் இல்லாமல் நிம்மதியாக வாழ நம்மை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டுமானால் முதலில் தேவனிடம் நம்மை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்.
அப்படி செய்யும் போது தேவன் நமக்கு நிறைவான வெற்றியுள்ள வாழ்வை கொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை. நம்முடைய தேவன் நம்மை முற்றிலும் அறிந்தவர். தேவனே என்னை முற்றிலும் அறிந்து கொள்ளும் என்பதே தேவபக்தனின் வேண்டுதலாக உள்ளது. எனவே தூய்மையான வாழ்வு வாழ, நம்முடைய சிந்தனைகள் நல்ல சிந்தனையாக மாற தேவனிடத்தில் நம்மை ஒப்புக்கொடுப்போம்.
கெட்ட சிந்தனை இருதயத்தில் பாவம் செய்ய தூண்டுகிறது. இருதயம் கேடுள்ளதுமாயிருக்கிறது என்று வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் நம்முடைய இருதயத்தை தேவனுடைய ஆலயமாக பரிசுத்தமாக வைத்திருந்தால் இருதயத்தில் நல்ல சிந்தனை உருவாகும்.
இப்படி இருதயத்தில் நல்ல சிந்தனையுடனும், நம்முடைய வாழ்க்கை தேவனுக்கு பிரியமானதாக உள்ளதா? சரியான பாதையில் தான் செல்கிறோமா? என்று தேவ சமூகத்தில் அனுதினமும் நம்மை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
வேதாகமத்தில் சங்கீதம் 139-ம் அதிகாரம் 23, 24 வசனங்களில் தேவனே, என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்து கொள்ளும். என்னை சோதித்து என் சிந்தனைகளை அறிந்து கொள்ளும் என்று எழுதப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் தேவ சமூகத்தில் நம்மை ஆராய்ந்து பார்க்கும் போது வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ இயலும். நம் ஒவ்வொருவரையும் கருவிலே அறிந்திருக்கிற தேவனிடத்தில், தேவனே நீர் என்னில் தங்கும் ஆலயமாக என் சரீரத்தையும், உள்ளத்தையும் மாற்றும் என்று ஜெபிப்போம். அப்போது தேவன் நம்முடைய இருதயத்தில் நல்ல சிந்தனை களை சிந்திக்க உதவி செய்வாராக ஆமென்.
சகோ.ஜோசப், பல்லடம்.
நாம் நோய்வாய்பட்டால் பல்வேறு மருத்துவ மனைக்கு சென்று மருத்துவர்களை பார்த்து வியாதியில் இருந்து விடுதலை பெற்றுக்கொள்கிறோம். இப்படி வாழ்க்கையில் கஷ்டங்கள் இல்லாமல் நிம்மதியாக வாழ நம்மை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டுமானால் முதலில் தேவனிடம் நம்மை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்.
அப்படி செய்யும் போது தேவன் நமக்கு நிறைவான வெற்றியுள்ள வாழ்வை கொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை. நம்முடைய தேவன் நம்மை முற்றிலும் அறிந்தவர். தேவனே என்னை முற்றிலும் அறிந்து கொள்ளும் என்பதே தேவபக்தனின் வேண்டுதலாக உள்ளது. எனவே தூய்மையான வாழ்வு வாழ, நம்முடைய சிந்தனைகள் நல்ல சிந்தனையாக மாற தேவனிடத்தில் நம்மை ஒப்புக்கொடுப்போம்.
கெட்ட சிந்தனை இருதயத்தில் பாவம் செய்ய தூண்டுகிறது. இருதயம் கேடுள்ளதுமாயிருக்கிறது என்று வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் நம்முடைய இருதயத்தை தேவனுடைய ஆலயமாக பரிசுத்தமாக வைத்திருந்தால் இருதயத்தில் நல்ல சிந்தனை உருவாகும்.
இப்படி இருதயத்தில் நல்ல சிந்தனையுடனும், நம்முடைய வாழ்க்கை தேவனுக்கு பிரியமானதாக உள்ளதா? சரியான பாதையில் தான் செல்கிறோமா? என்று தேவ சமூகத்தில் அனுதினமும் நம்மை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
வேதாகமத்தில் சங்கீதம் 139-ம் அதிகாரம் 23, 24 வசனங்களில் தேவனே, என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்து கொள்ளும். என்னை சோதித்து என் சிந்தனைகளை அறிந்து கொள்ளும் என்று எழுதப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் தேவ சமூகத்தில் நம்மை ஆராய்ந்து பார்க்கும் போது வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ இயலும். நம் ஒவ்வொருவரையும் கருவிலே அறிந்திருக்கிற தேவனிடத்தில், தேவனே நீர் என்னில் தங்கும் ஆலயமாக என் சரீரத்தையும், உள்ளத்தையும் மாற்றும் என்று ஜெபிப்போம். அப்போது தேவன் நம்முடைய இருதயத்தில் நல்ல சிந்தனை களை சிந்திக்க உதவி செய்வாராக ஆமென்.
சகோ.ஜோசப், பல்லடம்.






