search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ரோகித், ஜெய்ஸ்வால் அரைசதம்: முதல் நாள் முடிவில் இந்தியா 135/1
    X

    ரோகித், ஜெய்ஸ்வால் அரைசதம்: முதல் நாள் முடிவில் இந்தியா 135/1

    • டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து 218 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 135 ரன்களை எடுத்துள்ளது.

    தர்மசாலா:

    இந்தியா, இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலி 79 ரன்களும், பேர்ஸ்டோ 29 ரன்களும் எடுத்தனர்.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், அஸ்வின் 4 விக்கெட்டும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வாலும், கேப்டன் ரோகித் சர்மாவும் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடியதால் இந்திய அணியின் ஸ்கோர் உயர்ந்தது. சிறப்பாக விளையாடி அரை சதமடித்த ஜெய்ஸ்வால் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரோகித் சர்மாவும் அரைசதம் அடித்தார்.

    இறுதியில், முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 135 ரன்களை எடுத்துள்ளது. ரோகித் சர்மா 52 ரன்களுடனும், கில் 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தற்போது இங்கிலாந்து அணியை விட 83 ரன்கள் இந்திய அணி பின்தங்கி உள்ளது.

    Next Story
    ×